ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -82 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது
அவனைக் கண்டு சொல்ல வேணுமே
அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே
என்றவர்க்குக் குறை தீரும்படி
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

—————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களை யுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

—————————

வியாக்யானம் –

படையாரும் வாள் கண்ணார்-
வேல் போலேயாய்
ஒளியை உடைத்தான கண்களை உடைய பெண்கள் ஆனவர்கள் –
படை என்று வாளையும் சொல்லக் கடவது –
தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்குமவர்கள் -என்கை –

பாரசி நாள் –
த்வாதசி நாளிலே –

பைம் பூம் தொடையலோ டேந்திய தூபம் –
பருவத்தால் வந்த இளமை கொண்டு புறம்பு
அந்ய பரத்தை பண்ணலாய் இருக்கச் செய்தே
அது தவிர்ந்து –
பகவத் பஜனமே யாம்படி பண்ணிக் கொள்ள வற்றாய்த்து
அத் தேச ஸ்வ பாவம் தான் –

இவர்களிலே தாம் தாம் கைகளிலே தரித்துக் கொண்டு நிற்க
அழகியதாய்த் தொடுத்த மாலைகளும் தூபங்களும் –

இடையிடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே –
நடு நடுவே ஒரோ நஷத்ரங்களை யுடைத்தான ஆகாசத்தை இவை சென்று
மாசூணப் பண்ணா நின்றது
மரியா நின்றது

இவர்கள் புகைத்த தூபமானது ஆகாசத்தை மறைக்கும்
இவர்கள் கைகளில் செறிந்த மாலைகளானவை நஷத்ரங்களை மறைக்கும் –

மேலோரு நாள் மானமாய வெய்தான் வரை –
அப்படி பஜிக்கிற ஸ்திரீகளுக்கும் பிராட்டி திறத்தில் போலவே
பரதந்த்ரனாய்க் கார்யம் செய்யுமாய்த்து

அவள் சொல்லப் பண்டு ஒரு நாள் மாயா மிருகத்தின் பின்னே போய் அத்தை வதித்தான் இறே
அப்படிப் பட்ட ஆஸ்ரித பரதந்த்ரன் வர்த்திக்கிற தேசம் வேங்கடமே –

இப் பாட்டால்
1-சர்வ சமாஸ்ரயணீயத்வமும்
2-சௌலப்யமும்
3-ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
4-போக்யதையும்
5-விரோதி நிரசனமும்
குறை வற்று வர்த்திக்கிற தேசம்
என்கிறது –

—————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading