அவதாரிகை –
சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம்
பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை
என்றொரு பேர் உண்டோ –
அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –
ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் –
———————————————
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-
பதவுரை
ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையா யிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.
———————————————
வியாக்யானம் –
ஆளமர் வென்றி யடு களத்துள் –
ஆளாலே அமர் பட்டு இருப்பதாய்
ஆளோடு ஆள் மிடைந்து இருப்பதாய்
வென்றியை உடைத்தான –
ஆடு களத்து –
முடிக்கிற களத்து –
அஞ்ஞான்று –
அசுரர் தேவர்களை முறித்து வாயிலிட்டுச் செல்லுகிற
அற்றை நாளிலே –
வாளமர் வேண்டி –
ஒளியை யுடைத்தாய் இருப்பது ஒரு யுத்தம் வேணும் என்று பார்த்து
அதாகிறது
தேவர்களும் அசூரர்களும் ஆகப் பொரா நிற்க
அசூரர்களுக்கு பலம் மிகுத்து
தேவர்களுக்கு பலம் குறைந்து பட்டுக் கிடக்கப் புக்க வாறே
அனுகூலரான நம்முடையார்க்கு மதிப்பு உடைத்தாய் இருப்பதொரு பூசல் வேணும் என்று பார்த்தான் –
வரை நட்டு நீளவரைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே –
அதற்க்குக் கைம் முதல் வேணுமே
ஆழ்ந்த நீரிலே ஆளக் கடவ மந்த்ரத்தை
பிடுங்கிக் கொண்டு வந்து நட்டு
மிருதுவான வாசுகியைச் சுற்றி
மகத் தத்வமான கடலைக் கலக்கினான் யாய்த்து –
அது விறே
தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை –
கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய
திரு நாமமே அன்றோ
பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும்
எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –
பற்றிக் கடத்தும் படை –
அள்ளி எடுத்துக் கொண்டு போய்
பரம பதத்திலே வைக்கும் பரிகரம்-
எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள்
கரையிலே முதலிகளை வைத்தால் போலே பரம பதத்திலே வைத்து
தாஸ்யாம்ருத தத்தைக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
த்வா மேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண -ஜிதந்தே -4-என்னக் கடவது இறே –
சம்சார சாகரத்தைக் கடத்தும் படை-நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே =என்று அந்வயம் –
——————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply