அவதாரிகை –
யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி
ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது –
அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு
அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய
இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் –
—————————–
ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–
ஆறிய அன்பு இல்–நிரம்பின பக்தி யில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையரா யிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்–பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்து வந்து (கால க்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?
————————-
வியாக்யானம் –
ஆறிய வன்பில் அடியார் –
எறிமறிந்த பக்தி இல்லாத சேஷ பூதரானர்கள்
ஆறிய அன்பாகிறது –
தன்னைப் பேணாதே அத் தலைக்கு பரிகை –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அவனுக்குப் பரிகையாலே
தனக்கு என்று பரிகையும் பிராதி கூல்யம் இறே-
தம் ஆர்வத்தால் கூறிய –
தம் தாமுடைய ஸ்நேஹத்தாலே சொன்னவற்றைக் குற்றமாகக் கொண்டு அருளாதே ஒழிய வேணும் –
அதாகிறது –
சொல்லி அல்லது நிற்க மாட்டாத படியான பிரேம பாரவஸ்யத்தாலே சொன்னவை இறே –
தமக்கு இவ்வளவான தசை விளைந்த இத்தையும்
அவளுடைய பக்திக்கு போராது என்று இருக்கிறார் ஆயத்து –
குற்றமாகக் கொள்ளல் நீ –
குறையாகக் கொள்ளாதே ஒழிய வேணும்
இவன் தன் ஆற்றாமைகளாலே சிலவற்றைச் சொன்னான் ஆகில்
இவன் அறிந்து சொன்னானோ என்று நினைத்து இருக்க வேணும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் -திருச்சந்த விருத்தம் -111-
நீ கொள்ளேல் -என்கைக்கு
எனக்குக் குற்றம் இல்லை என்கிறேன் அல்லேன் –
தேவர் அத்தைக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும்
இவன் பொறுக்க அடைய நன்றாம் -என்கிறார்
குற்றத்தைச் செய்து வைத்துக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்றால்
எங்கனே செய்யும் படி என்ன-
தேறி-இத்யாதி
ராவணன் பண்ணின மிகைச் செயலானது கால க்ரமத்தாலே போந்து
தெளிந்து சிஸூபாலனாய்க் கொண்டு
சர்வாதிகனான உன் திருவடிகளைப் பெறுகைக்கு
உபாயமாய்த்து இல்லையோ –
தேறி –
பிரசன்னனாய் –
செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்னுதல்
அன்றிக்கே
சிஸூபாலன் கையும் திரு வாழியும் இருந்த படி என் -என்று நினைத்துக் கிடந்த
அந்திம ப்ரத்யயம் ஆகவுமாம்-
நெடியோய் –
ஆநு கூல்ய லேசம் உடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு
எல்லை காணப் போமோ -என்றபடி –
அடி யடைதற் கன்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் —
ஈரைந்து முடியான் படைத்த முரண் -நெடியோய் –அடி யடைதற் கன்றே-
அவன் தேவரைப் பெற்றது தன் ஆநு கூல்யத்தால் அன்றே –
அவன் பேற்றுக்கு அடியான கிருபையை
என் பக்கலிலே பண்ணத் தட்டு என்-
அவனுடைய பிராதி கூல்யத்திலும் வலிதோ என் பக்கல் குற்றம்
ப்ராதி கூல்யம் ஆநு கூல்யமாகப் பலித்தால்
ஆநு கூல்ய ஆபாசம் ஆநு கூல்யமாகத் தட்டுண்டோ –
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply