ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -16 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நான் இவ் விஷயத்தை நெடுங்காலம்
உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும்
பிரவணனாய் இழந்தேன் கிடீர்
என்று சோகிக்கிறார்-

————–

பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடை தட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவை யுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க் கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ் விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

——————————-

வியாக்யானம் –

பழுதே –
பழுதானது சிறிதும் பழுது அல்லாதது சிறிதுமாய்
போகப் பெற்றது இல்லை கிடீர் –
என்கிறார் –

அது உண்டாவது பகவத் விஷயம் ஒரு போதும்
மற்றொரு போது இதர விஷயங்களுமாய்ச் செல்லில் இறே –

பல பகலும் –
இழந்த காலம் அநாதி இறே

போயினவென்று –
போன நீருக்கு அணை கோலவோ-

அஞ்சி அழுதேன் –
போன காலம் அநாதி
வரும் காலம் அநந்தம்
அடிக் கழஞ்சு பெறுகிற  இத்தோடு ஒத்த காலம் கிடீர்
வ்யர்த்தமே போயிற்று என்று அழுகிறார் –

இழவுக்கு அழுதீரேல் அச்சம் என் என்னில்
மேல் வரக் கடவதொரு ஹேதுவைக் குறித்து இறே அச்சம் உள்ளது

அதாவது
சர்வேஸ்வரனோட்டை சம்பந்தம் நித்யமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
முன்பு இது நெடும் காலம் இழந்தது நானாகை அன்றோ –
இன்னமும் நான் இருந்திலேனோ மேல் உள்ள காலத்துக்கும் -என்று அஞ்சுகிறார்

அங்கன் அன்றிக்கே
அஞ்சி அழுதேன் –
என்றாக்கி மேல்; வரக்கடவ காலமும் இப்படியே யாகில் செய்வது என் -என்று
அதுக்கு ஒரு கால் அழுகிறார் ஆய்த்து-
யஸ்ய ராமம் ந பச்யேத்து-அயோத் -17-14-என்று
ஒரு ஷணம் காணப் பெறாதார் படும் பாடு அன்றோ இது-

அரவணை மேல் கண்டு தொழுதேன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
திரு வநந்த வாழ்வான்  மேலே கண்ட காட்சிக்கு
அனந்தரமான வ்ருத்தியிலேயும் அன்வயித்தேன்

அரவணை மேல்
பர்யங்க வித்தையில் படியே
கண்டு
ஜ்ஞான சாஷாத் காரம்
கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை –
பெருமாளும் பிராட்டியும் கடலுக்கு அக்கரையிலும் இக்கரையிலுமாய் இருந்தாப் போலே –

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணரடி-
கடலில் ஓதமானது திருவடிகளிலே வந்து ஸ்பர்சிக்கும் படிக்கு ஈடாகக்
கண் வளர்ந்து அருளுவானுமாய்
ஐஸ்வர்ய ப்ரகாசகமான திருக் கண்களை யுடையனுமாய்
ஒரு கடல் ஒரு கடலை அபிபவித்துக் கிடந்தாப் போலே
சௌந்தர்ய தரங்கங்கள் மிகைத்து
இருந்துள்ள வடிவை யுடையனுமான அவனுடைய திருவடிகளை –

கால் அலைப்ப –
சிறு திவலை தொடை குத்த

செங்கண் –
வாத்சல்யம் தோற்றுகை-

அடல் ஓத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் -என்று அந்வயம் –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading