ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -13 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்னும் படியாய் இருந்தது உம்மது
அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது அவதானம் வேணும்
எங்கனே கூடுமோ என்னில்

ப்ரக்ருத்யா ஆஸ்ரயித்து  இருக்கிறவர்கள் நித்ய ஸூரிகள்
அல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாகத்
தானே பிரதம பாவியாம் – என்கிறது –

————————————

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் —13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை
அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளே யாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்த வேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன
நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

வியாக்யானம் –

இயல்வாக-
அவனுக்கு சத்ருசமாகப் பரிமாற வல்லார்
நித்யர்கள் அன்றோ என்கிறார் –

இயல்வாக –
சத்ருசமாக -என்னுதல்
ஸ்வ பாவம் ஆக்கி இதுவே யாத்ரையாக -என்னுதல்

கர்மம் அடியாக ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி
சில நாள் வேறே சில விஷயங்களிலே பிரவணனாய்ப்
பின்பு ஒரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் விஷயத்திலே கை வைத்தவர்கள் அன்றிக்கே
இவ் விஷயத்தில் பரிமாற்றம் சத்தா பிரயுக்தம் -என்றபடி –

யீன் துழாயான் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் இருக்கை-

ஆக –
முதலியாய்த் தோள் மாலை இட்டு  இருக்கிறவனுக்கு –

அடிக்கே செல்ல –
திருவடிகளிலே கிட்ட

பாவஜ்ஞ்ஞே -என்னும்படி
அவன் திரு உள்ளத்திலே படும் படி –

முயல்வார் இயல் அமரர் முன்னம் –
முந்துற முன்னம் அவன் திரு வடிகளுக்கு ஈடாகப் பரிமாறுவார்
இயற்றியை உடைய நித்ய ஸூரிகள்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25-பண்ணுகை-

விஷய ப்ரவணராய்  அவனை அறியாதவர்களும்
இயல்வாக –
ஆகில் அவர்களே ஆஸ்ரயித்துப் போம் இத்தனையோ வென்னில்
நமக்கு எல்லாம் ஆஸ்ரயித்தோம் ஆகலாம் படி அவன் தானே பண்ணித் தரும் -என்கிறார் –

இயல்வாக -நீதியால் ஓதி-
சத்ருசமாக –
அழகிதாக –
சாஸ்த்ரோக்தமான படியே திரு நாமங்களைச் சொல்லி
வ்ரத நியமாதி கர்மங்களோடே அத்ய யனத்தைப் பண்ணி –

நியமங்களால் பரவ –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற ஸ்ரவணாதி களாலே
பரவசராய்ப் போரும்படிக்கு ஈடாக

ஆதியாய் நின்றார் அவர் –
முற்பாடனுமாய்-
ருசி ஜனகனுமாய் –
உபகரணங்களையும் கொடுத்து பிரவ்ருத்தனுமாய் –
போக்தாவுமாய் –
பல பிரதனுமாய்  –
பிராப்யனுமாய்
நின்ற பின்பு நமக்கு எல்லாம் ஒரு குறை இல்லை -என்கிறார்

அஹம் ஹி சர்வாய ஜ்ஞா நாம் போக்தா ச பிரபு ரேவா ச -கீதை -9-24-

அஹம் ஹி ஸர்வாய ஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–கீதை -9-24-

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;ஆதலால் நழுவி வீழ்வார்.

அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்ததே -கீதை -10-8-

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:–கீதை -10-8-

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம்,
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது,
இதி மத்வா-என்று புரிந்து கொண்டு,
பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்,
மாம் பஜந்தே-என்னை தொழுவார்.

நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும்.
இங்ஙன முணர்ந்த புலவர்
என்னை அன்புடன் தொழுவார்.

ஸூரிகளோடு இவர்களோடு வாசி இல்லை
குடல் துடக்கு –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading