அவதாரிகை –
கீழே
சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் –
இங்கு
ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம்
இன்னது என்று பக்தியை விதிக்கிறார் –
—————————-
பக்தி யோகத்தை அனுஷ்டிக்கும் அவர்களுக்கு
ஹேய தயா ஜ்ஞயமானவற்றைச் சொல்லுகிறது –
பிரகிருதி ஹேய தயா ஜ்ஞேயம்
ஆத்மா உபாதேய தயா ஜ்ஞேயன்
ஈஸ்வரன் உபாதேய தமனாய்க் கொண்டு ஜ்ஞேயன்-
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-
பதவுரை
ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நி ஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற் குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)
வியாக்யானம் –
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –
இத்தால்
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது
இது தான் கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் உப லஷணம்-
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் –
இத்தால்
மகா பூதங்கள் ஐந்தையும் இவற்றை ஆஸ்ரயித்து இருக்கும்
சப்தாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது –
அவியாத ஞானமும்
தைல தாராவத்
அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபையான பக்தியை நினைக்கிறது
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -என்னக் கடவது இறே-
வேள்வியும் –
பக்தி விவ்ருத்யர்த்தமாகவும்
பாப ஷயத்துக்காகவும்
அனுஷ்டிக்கிற கர்மம் ஆகிறது
பல சங்க நிவ்ருத்தி பூர்வகமாகப் பண்ணும் யாகாதி கர்மங்கள்
அக்னி ஹோத்ராதி து தத்கார்யைவ தத் தர்சநாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-16-
அக்னி ஹோத்த்ரம் முதலிய கர்மங்கள் பக்தியும்
உத்பத்தி ஆகிற கார்யத்தின் பொருட்டே செய்யப்பட வேண்டும் –
அப்படியே வேதத்தில் காணப் படுவதால்
ஆ ப்ரயாணாத் தத் ராபி ஹி த்ருஷ்டும் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-12-
வித்தையானது சாகும் வரையில் அனுஷ்டிக்கப் பட வேண்டியதே
அந்த எல்லாக் காலங்களிலும் உபாசன விதி காணப் படுகிறதன்றோ –
தமேதம் வேதா அநு வாச நேத ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யாஞ்ஞென
தாநேன அநாசகேன -ப்ருஹதாரண்யம் -6-4-22-
ப்ரஹ்ம ஞானிகள் இந்த பரமாத்மாவை
வேத அத்யனைனாலும்
யஞ்ஞத்தினாலும்
தானத்தினாலும்
பலத்தில் ஆசை அற்ற தவத்தினாலும்
அறிய விரும்புகிறார்கள் -என்று சொல்லுகிறபடியே –
நல்லறமும் –
விவேகாதி ஆன்ரு சம்சயம் தாநாதிகள்-
இவை எல்லாம் நினைக்கிறது –
என்பரே-
வேத சாஸ்த்ரங்களில் பிரசித்தி –
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு-
சர்வ ஸூலபனாய் -ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு
இவற்றை சாதனமாகாச் சொல்லா நிற்பர்கள்-
இது சாதனம் ஆன போதும் எம்பெருமானே வேணும் என்று தோற்றுகைக்காக
ஏனமாய் நின்றார் -என்கிறார் –
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே–கீதை -12-6-
து மத்பரா:-ஆனால் என்னையே கதியாகக் கொண்ட,
யே ஸர்வாணி கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும்,
மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம் சமர்ப்பணம் செய்து,
மாம் ஏவ – என்னையே,
அநந்யேந யோகேந-பிறழாத யோகத்தால்,
த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,
எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு,
பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம்–கீதை -12-7-
பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய,
தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே,
அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான் மரண வடிவான சம்சாரக் கடலிலிருந்து,
ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.
என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் சம்சாரக் கடலிலிருந்தும் விரைவில் தூக்கிவிடுவேன்
அனந்யே நைவ யோகே நமாம் த்யாயந்த உபாசதே —கீதை -12-6-
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகரான் —கீதை -12-7–என்கிறபடியே –
அங்கன் அன்றிக்கே
தமக்கு தேக யாத்ரைக்கு உடலான பக்தியைச் சொல்லுகிறார் ஆகவுமாம் –
சம்சாரிகளுக்கு உபாயமாய் இருக்கிற பக்தியை ஷேபித்து
பிரபத்தியை அருளிச் செய்கிறார் -என்றுமாம் –
அறிவானாம் -என்னுமா போலே
செவி -இத்யாதி –
சர்வேஸ்வரனை ஒழிய இதர விஷயங்களிலே போகக் கடவதான ஜ்ஞானத்துக்குப்
பிரசரண த்வாரமான இந்த்ரியங்களையும்
இவை தனக்கும் அடியான மகா பூதங்களையும்
அவை அஞ்சாலும் – ஆரப்த சரீரத்தையும் நினைத்து
இத்தையும்
விஷயாதிகளைப் பற்றி விடக் கடவது அன்றிக்கே இருக்கிற ஜ்ஞானத்தையும்
யாகாதிகளையும்
தானத்தையும்
இவை எல்லா வற்றையும் சொல்லி
இவையோ தானே வந்து சந்நிஹிதனாமவனைப் பெறுகைக்கு சாதனம் -என்று ஷேபிக்கிறார் –
ஞானப் பிரானை யல்லால் இல்லை –திரு விருத்தம் -99-என்கிறார்
பிரளய ஆபத்தில் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்டினார் ஆர் –
———————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply