விண்ணவர் தங்கள் -பிரவேசம் –
இப்பிராட்டி தன் இழவைச் சொல்லி பரவசையாய் விழுந்து கிடந்தாள்-
தளர்த்தியாலே உடம்பு கிருசமாய்
குழலும் பேணாதே
பூவும் மறுத்துக் கிடக்கும் இறே-
இத்தை அறியாதே –
பழைய வாசனையைக் கொண்டு
மது பானம் பண்ணுவதாக சில தும்பிகள் வந்து பறந்தன –
அத்தைப் பார்த்து –
வாஹி வாத யத காந்தா தாம் ஸாம் ப்ருஷ்டவா மாமபிஸ் ப்ருச -ஸாம் ( யுத்த -5-)-என்னுமா போலே
(பிராட்டியை ஸ்பர்சித்து காற்று வீச பெருமாள் பிரார்தித்தது )
மதுவுக்கு கிருஷியைப் பண்ணி
மது பானம் பண்ணப் பாராய் -என்கிறாள் —
(கிருஷி பண்ண வேண்டியதே தும்பி -முதல் முயற்சி ஆச்சார்ய க்ருத்யம் தானே
நாயகன் மாலையில் உள்ள பரிமளம் கொண்டு வீசி -விரஹ தாபம் தீர்க்க த்ருஷ்டாந்தம்
அங்குள்ள வண்ணம் கொண்டு வர முடியாதே -பரிமளம் கொண்டு வந்து –
சீரான கல்யாண குணங்களை உபதேசித்து -ஆச்சார்ய க்ருத்யம் )
————————————————————–
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன் –
நித்ய ஸூரிகளும் பிராட்டிமாரும் அனுபவிக்கிற
விஷயம் இது வன்றோ –
நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –
சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி கொண்டு-(திரு விருத்தம் ) நித்ய ஸூரிகள் அடிமை செய்ய
பிராட்டியும் தானுமாய் இருக்கும் ஆயிற்று –
(உன்னைப் பிரிந்து அன்றோ அவனும் என்ன
அக் குறை இல்லை என்று நித்ய ஸூரிகளும் பிராட்டிமாரும் அனுபவிக்கும் விஷயம் அன்றோ
விண்ணவர் பெருமான் என்று இல்லாமல் விண்ணவர் தங்கள் பெருமான் -பகல் ஓலக்கம் இருக்கும் பெருமான்
நிரதிசய போக்ய அனுபவத்தால் வந்த -அனுபவித்தாள் தங்கள் தாங்களாக இருக்கிறார்கள் அன்றோ அங்கு )
மண்ணவ ரெல்லாம் வணங்கும் –
நித்ய விபூதில் உள்ளார் எல்லாரும் அதிகாரிகளாய் இருக்குமா போலே யாயிற்று
இங்கு உள்ளார் எல்லாரும் அதிகாரிகளாம் படியாகத் தான் வந்து நிற்கிற நிலை –
அங்கு அநாதாரிகள் ஒருவரும் இல்லாதாப் போலே
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாரும் அதிகாரிகளாம் படியாக வாய்த்து வந்து நிற்கிறது –
மலி புகழ் சேர் -கண்ண புரத் தெம்பெருமான் –
சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –
அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக்
கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –
(இங்கு தானே இவன் குணவான் என்பது ப்ரத்யக்ஷம்
அங்கும் இருக்கும் என்று அனுமானித்து தானே அறியலாம்
வேதம் சப்தம் மூலமும் அறியலாம்
ஆகவே இங்கே தானே ஸ்பஷ்டம் )
கதிர் முடி மேல் –
இப்படி உபய விபூதிக்கும் கவித்த தாகையாலே
ஒளியை உடைத்தாய் இருக்கிற
திரு வபிஷேகத்தின் மேலே –
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் –
செவ்வி மாறாதே பரிமளத்தை உடைத்தாய் இருக்கிற
திருத் துழாயிலே படிந்து
அங்குத்தை பரிமளத்தை கொடு வந்து இங்கே ஊது –
கோற்றும்பீ –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வ ரஸ -என்கிற வஸ்துவைப் போய்
அனுபவி என்று அன்றோ சொல்கிறது –
ஸ்வாபதேசம்
சப்தாதி விஷய நிஸ் சாரதையும் -( மலர் சருகாய் இருக்கும் இங்கு -அல்பம் அஸ்திரம் )
பகவத் அனுபவ நிரதிசய சாரவத்தையும்
சிஷ்யருக்கு அறிவிக்கிறார் (தும்பி -சம்சாரிகள் -ஆழ்வார் ஆச்சார்யர் )
———————————————
மண்ணவர் எல்லாம் வணங்கும் என்னா நின்றாய்
மண்ணவர் தேவதாந்த்ர பஜநம் பண்ணுகிறார்கள்
மானிடர் அல்லர் -அசத்துக்கள்
வைதிகர் எல்லாரும் இவனையே தொழுகிறார்கள்
வேத வேத்யன் இவனே என்கிறார் –
வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-2-
காதன்மை-காதல் -ஸ்நேஹம்
தாழ்ந்து -அவகாஹித்து -உள் புகுந்து
வேத முதல்வன் –
புருஷர்கள் தங்கள் ஆஸ்ரயங்கள் தோற்றச் சொன்ன வஸ்துவைப் ( தேவதாந்த்ரங்களைப் )பற்றிச் சொல்லுகிறேனோ –
ஆகமாதிகளில் சொல்லப் படுகிற வஸ்துவைப் பற்றிச் சொல்லுகிறது அன்று –
அபௌருஷேயம் ஆகையாலே நிர் தோஷமான வேதைக சமதி கம்யன் ஆகையாலே
வந்த பிரதாந்யத்தை உடையவன் –
(அவர்கள் எல்லாம் பேச நின்ற பெருமையை மட்டுமே உடையவர்கள் அன்றோ )
விளங்கு புரி நூலன் –
ஹிரண்மய புருஷ -என்கிறபடியே
அழகிய விக்ரஹத்தையும்
அதிலே விளங்கா நின்றுள்ள திரு யஞ்ஞோபவீதத்தையும் உடையவன் –
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான் –
திருவடிகளை அக்ரமமாக ஏத்தி
அதிலே விழுந்து
எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய– (இடையூறு இடைவெளி இல்லாமல் )-என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ
நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது
(ஸ்வரூப ரூப மஹாத்ம்யம் சொல்லி
திருவடிகள் -அவனையே சொல்லும்
தாத பாதர்–தந்தையின் கால் அல்ல தந்தை என்றே அர்த்தம்
பாதம் பரவி–என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -அவனுக்கு )
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற
திருத் துழாயிலே தாழ்ந்து
இங்கே வந்து ஊத வேணும் –
——————————————–
வேத வேத்யன் என்று இவனைச் சொன்னாய
தேவதாந்தரங்களும் சில பலன்களைக் கொடுப்பதும் வேதம் சொல்லுமே
ஸர்வ தேவ நமஸ்காரங்கள் கேசவனையே சொல்லும்
அவை ஷூத்ர பலன்கள்
அவற்றை விலக்கி பரம புருஷார்த்தம் இதில் –
(ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-10-7-)
விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-3-
விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி-
திறந்து கிடந்த வாசலில் எல்லாம் நுழைந்து திரிவாரைப் போலே
(நாயைப் போல் விஷயாந்தரங்களில் ஈடு பட்டுத் திரியும் சம்சாரிகள் )
இருந்ததீ உன்னுடைய யாத்ரை –
இதழ் அலரும் அளவும் அவசரம் பார்த்து நின்றால்
மற்று உள்ளவற்றில் அடங்கலும் மது ஒழுகிப் போமே-
இது தன்னிலும் உள்ளது அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும்
அது தான் முதலிலே கிடையாதே
கிடைத்ததோ அத்யல்பம்
அல்ப பலத்துக்கு யத்னம் பண்ணுவார் உண்டோ –
அண்ட முதல்வன் –
அண்டத்துக்கு நிர்வாஹகன் –
அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் –
தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து
இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும்
அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி
திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –
(மனிதற்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவன் இவன் ஒருவனே அன்றோ
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4- )
வந்தூதாய் கோற்றும்பீ –
சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு –
————————————————————
தேன் வரவும் நீயே க்ருஷி பண்ணி பின்பு அனுபவிக்க வேணும் –
ஆச்சார்யர் பரகத ஸ்வீ காரம்-அவரே பலனையும் அனுபவிக்கும் படி –
அமரர்கள் அனைவரும் கண்டு வணங்கும்படி இவனுக்கு ஏற்றம் என்ன என்று கேட்க
தன்னை அழிய மாறியும் வேதங்களை கொடுத்த ஏற்றம் உண்டே
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-
ஓர்-அத்விதீயம்
சீர் -வீர ஸ்ரீ
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்-நீல மேகப் பெருமாள் தானே இவன்
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே
(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –
அலைகடல் நீர் குழம்ப -(11-4-)-என்னக் கடவது இறே –
கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே
ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –
(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )
நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக் –
வீர ஸ்ரீ யால் குறைவற்ற நரசிம்ஹமாய் –
உகவாதவனுக்காக கொண்ட வடிவையோ நான் பற்றச் சொல்லுகிறது –
(ஹிரண்யன் வரம் படி அன்றோ அந்த திவ்ய மங்கள விக்ரஹம்
பிராட்டியே கிட்ட முடியாத குரூரம் அன்றோ )
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான் –
எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான
வடிவை உடையனுமாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே நிற்கிற
சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –
தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயிலே —
(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –
சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –
அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )
———————————————
கீழ்ப்பாட்டில் சொன்ன அர்த்தங்கள் பின்னாட்ட
தேவர்கள் வணங்கும் சர்வேஸ்வரன் -இப்பாசுரம் –
ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5-
ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி –
ஒன்றிலே உன் அபேஷை குறைவறக் கிடக்கிறது அன்றே –
நிறம் கொண்டு பிரமிக்கிற இத்தனை இறே உள்ளது –
எங்கும் புக்கும் ஆத்ம ரஷணம் பண்ணினாய்
என்னும் வார்த்தை கேட்கப் பெற்றிலையே –
(திறந்து கிடைக்கும் வாசல்கள் எல்லாம் நுழைந்து என் பெற்றாய்
அநந்யார்ஹன் ஆக வேண்டாவோ
தேக ரக்ஷணம் தானே மது பருகுவது
கடக க்ருத்யம் பண்ண வேண்டாவோ -ஸ்வரூபம் நிலை பெற )
பாரார் உலகம் பரவப் –
மணம் மிக்கு இருந்துள்ள லோகம் எல்லாம் பரவ –
பெரும் கடலுள் -காராமையான கண்ண புரத் தெம்பெருமான் –
கீழ்ச் சொன்னது தான் பின்னாட்டுகிற படி
காராமை -பெரிய ஆமை –
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாயிலே
தாழ்ந்தூதாய் –
—————————————————–
திருக்கண்ண புரம் -சொல்லாமல் இப்பாசுரம்
ஆமைக்கு அநந்தரம் வராஹ அவதாரம்
அத்தைச் சொல்லிக் கொண்டு சேர்ப்பாரும் உண்டு என்று தாத்பர்யம் சங்கதி –
1-நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு
2-அவன் தான் விரோதி நிரசன சீலன்
3-என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
4-உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆன பின்பு அவன் பக்கலிலே சென்று
இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ–8-4-6-
கதிர் முடி-பார் அளந்த பேர் அரசு விசும்பு அரசு என்னை வஞ்சித்த ஓர் அரசு –
கிரீட மகுட சூடாவதம்ச -மூன்று அரசுக்கு உரிய திரு அபிஷேகம்
திருவடி திருமஞ்சனம் தான் -64 சதுர் யுக பெருமாள் அன்றோ
மார்வில் திருவன் –
திரு மார்விலே பிராட்டி எழுந்து அருளி இருந்து
அவன் தன் ஸ்வா தந்த்ர்யத்தாலே
இத் தலையில் குற்றம் கண்டு
அழன்று கை விடும் அன்று
தன் முழு நீர்மையாலே அவனை ஆற்றி
பொருந்து விடுமாயிற்று –
(புருஷகார க்ருத்யத்துக்கு அழகான விளக்கம்
அழன்று கை விடும் அன்று-கோபித்து ஷிபாமி -ந க்ஷமாமி என்பானே )
வலனேந்து சக்கரத்தன்-
அவள் சொல்ல அன்று இறே
கையிலே திரு ஆழியை ஏந்திற்று
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே – (பெரிய திருவந்தாதி)
பாரைப் பிளந்த பரமன்-
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து
உரு மாய்ந்த பூமியைக் கை விடாதே
அதுக்கு ஈடாய் இருப்பதோர் வடிவைக் கொண்டு புக்கு
இடந்து எடுத்துக் கொண்டு ஏறி
ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை
ஒருவரை எண்ண ஒண்ணாத படி இருக்கிறவன் –
(ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
பரமன் -பரஞ்சோதி -ப்ராப்யன்
அஸ்மாத் சரீராத் சமுதாயா -பரஞ்சோதி உப சம்பத்தயே ஸ்வேன ரூபேண)
பரஞ்சோதி –
எல்லாருக்கும் ஒக்க பிராப்யனாய் இருக்குமவன் –
காரில் திகழ் காயா வண்ணன் –
பிராப்யன் அன்றாகிலும்
விட ஒண்ணாத வடிவு அழகு
கறுப்பு இத்தனையுமே அதுக்கு ஏற்றமாக சொல்லலாவது
பரிமளம் இத்தனையும் அவனுக்கு ஏற்றமாய் இருக்கும் ஆயிற்று –
கதிர் முடி மேல் தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
ஆதி ராஜ்ய பிரகாசமான
திரு அபிஷேகத்தின் மேலே உண்டான
செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து
இங்கே வந்தூதப் பாராய் –
(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )
———————————————–
ஏனமாய் தனது உடமையை எடுத்தபடி கீழே
வாமனனாய் உடைமையை இரந்து அழிய மாறி கொண்டது இதில்
அநேக அவதாரங்கள் -கதம்பம் போல்
கல்கி அவதாரத்துக்கு தீஷித்து இருக்குமவன்
மது -அரசன் -மது கைடவர் நிரசித்தவன்
காமன் தன் தாதை-ஸாஷாத் மன்மத -அவனுக்கும் உத்பாதகன்
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன் தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-
வாமனன் –
தன்னுடைய உடைமையை பெருகைக்கு
தானே அர்த்தியாய் வருமவன் –
(மீட்கை நன்றே பிச்சை புகினும் மீட்கை நன்றே
நமக்குத் தானே பிச்சை புகினும் கற்கை நன்றே )
கற்கி-
பிரதி பஷத்தை துகைக்க கடவனாக
தீஷித்து இருக்கிறவன் –
மதுசூதனன்-
முன்பே முதல்களைப் பிடுங்கித் தந்தவன் –
(முதல்கள் -வேதங்கள் )
மாதவன் –
இக்குணங்களுக்கு அடியாக
ஸ்ரீ யபதியாய் உள்ளவன் –
தார் மன்னு தாசரதியாய தட மார்வன் –
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே
வளைத்து கார்யம் கொள்ளலாம் படி
இருக்குமவன் –
(விரதம் -தீஷிதம் -விரத சம்பன்னன் இவன் தானே
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -தடுத்தும் வளைத்தும் பிரார்த்திக்கலாம் )
காமன் தன் தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற
காமனுக்கும் கூட உத்பாதகன் –
(அங்க தேசம் –அநங்கனாக ஆக்கப் பட்டான் -அங்க ஹீனன் ஆனான் -இங்கே )
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
மாலையாய்
பரிமளிதமான
திருத் துழாயிலே தாழ்ந்து
இங்கே வந்தூதாய் –
——————————————-
தாசாரதி -வீரப்பாட்டை அருளிச் செய்கிறார் –
வாளரக்கர் காலன்-இவனே ராமன் -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரமாக இருந்தாலும் நடந்து காட்ட மேலை வீடு தானே
விபீஷணனுக்கு தனி சந்நிதி -ஸ்ரீ ரெங்கத்திலும் உண்டே -கீழ வீட்டிலும் உண்டு
அமாவாசை தோறும் -உத்சவ பத்து நாள்களிலும் கைத்தல சேவை
வில்லை சாதித்திக் கொண்டே நடை அழகு காட்டி சேவை
மன்னு புகழ் -குலசேகரப்பெருமாள் அனுபவமும் உண்டே
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-8-
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் -சால மலரெல்லாம் –
மிக்க நீரை உடைத்தாய்
வயலிலே உண்டான நீலப் பூக்கள் –
அந்த வயலின் உடைய பர்யந்தத்திலே
உண்டான பூக்கள் எல்லாவற்றையும் –
ஊதாதே –
அல்ப பிரயோஜனதுக்காகவும் யத்நியாதே –
பூவாகில் மது இன்றிக்கே இருக்குமோ என்று
ப்ரம-ஜனகமாம் அதுவே யாயிற்று உள்ளது –
(ப்ரயோஜனாந்தரங்கள் -ஸுகம் அல்பமாகவும் அஸ்திரமாகவும் இருந்தாலும் மயக்கும் )
வாளரக்கர் காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் –
சா யுதரான விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் –
திருக் கண்ண புரத்திலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
தர்ச நீயமான
திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –
————————————————-
இதிலும் திருக்கண்ண புரம் பத பிரயோகம் இல்லை -ஆறாம் பாசுரம் போல் –
கீழே தாசாரதி வீர ஸ்ரீ விளக்கி
காமன் தன் தாதை -கிருஷ்ண அவதாரம் அனுபவம் இதில் –
7-8-9- மூன்றும் இப்படி ஒரு பேடிகை
நந்தன் மதலை நில மங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-9-
நில மங்கை–ஸ்ரீ பூமா தேவி —
ஸ்ரீ பூவராஹ ஸ்வாமி -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ யான பூமி தேவி என்றும் ஸ்ரீ யும் பூமா தேவியும் என்றும்
அந்த முதல்வன்-அந்தமும் முதல்வனும் -ஸம்ஹார -ஸ்ருஷ்ட்டி –
அழிப்பதில் முதல்வன் -பர தேவதை -சம்ஹார நிர்வாககன் -என்றுமாம்
நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில்
போகச் சொல்லுகிறேனோ –
நந்தன் மதலை-
ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய் வந்து
அவதரித்து ஸூலபன் ஆனவன் –
(மா மதலைப்பெருமாள் திருச்சேறையில் சேவை உண்டே )
நிலமங்கை நற்துணைவன்-
பிறந்தது பூமி பாரத்தை
போக்குகைக்காக வாயிற்று –
(வராஹ கோபாலர் -வம்ச பூமிகளை உத்தரிக்க அவதாரங்கள்
பூமியே பாரம் இல்லாமல் கோட்டிடை கொண்டவனும் பூ பாரம் போக்கியவனும் )
அந்த முதல்வன் –
சர்வ சம்ஹர்த்தா வுமாய்
சர்வ ஸ்ரஷ்டாவுமானவன் –
(உப சேஸனம் -ஊறு காய்-தொட்டு உண்டு -மிருத்யு தேவதையும் ஸம்ஹரிப்பவன் இவனே
மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் )
அமரர்கள் தம் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் –
பரிமளம் கந்தியா நின்றுள்ள
காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை உடையவன் –
காயாவோடு ஒப்புச் சொல்ல லாவது நிறம் மாத்ரமே –
சர்வ கந்த சர்வ ரஸ -( சாந்தோக்யம் )-என்கிற ஏற்றமே உண்டு –
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
கொத்தாய் பரிமிளதமாய் இருந்துள்ள –
————————————————
நாம் பாட தும்பி நீ நினைக்க வேண்டுமே –
ஆச்சார்யர் சங்கல்பிக்கவே – கை புகவே அனைத்துமே கிட்டும் –
காமன் சோமன் குயில் காலிலும் விழுந்து கூடிடு கூடல் என்பார்கள் அன்றோ –
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10-
ஒலி -இவரது என்றும்
வயலாலி நன்னாடன் கண்ட சீர்–உலகோர் கண்டு புகழ்ந்து பாடும் ஒலியும்
நிகமத்தில் –
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் –
வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள
சோலையையும்
வயலையும் உடைத்தான
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார் –
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை –
பிரமாணங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படியான
நிரவதிக சம்பத்தை உடையருமாய்
பிரதி பஷத்தை வென்று இருப்பாருமான
ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி சொன்ன
இத் தொடையைக் கொண்டு –
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் –
ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான
சர்வேஸ்வரனை –
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ –
சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக
நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து
எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி
எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
(வாஸா தர்மம் அவாப்னோதி -ஸீதா பிராட்டி திருவடியிடம் பிரார்த்தித்தால் போல்)
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும்
ஆஸ்வஸ்தர் காணும் –
(ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம் தான் உண்டு அனைவருக்கும் பசி போனதே
துர்வாசர் -திரௌபதி -கண்ணன் உண்டதும் அனைவருக்கும் பசி போனதே )
(திருத்துழாய் தேன் இவற்றால் -ஆழ்வாரை மருள் ஏற்ற
அத்தாலே தாமாக பேசும் பொழுது பிராட்டி
தும்பிகளைப் பார்த்து இப் பதிகம் பாடுவதே பலம் என்னும் இடம் தோன்ற வியாக்யானம்
தொண்டரும் -நம்மையும் கூட்டிக் கொண்டு தனது பேறு நமக்கு எல்லாருக்கும் கிட்டும் என்கிறார் )
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–
அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –
—————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply