ஸ்ரீ பெரிய திருமொழி-8-3—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

திருக்கண்ண புரம் -பத்து பதிகங்கள் -முதல் ஐந்துமே பெண்ணான மணி வல்லிப் பேச்சு –
முதல் இரண்டும் திருத்தாயார் பாசுரங்கள் -அடுத்த மூன்றும் தலைமகள் பாசுரம்
அடுத்த ஐந்தும் தானான பாசுரம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் இவனே –
தானே வைகுந்தம் கொடுக்கும் -பிரான் -உபகாரகன் –

மாலுக்கு -இழந்தது சங்கே கற்பே மாண்பே இத்யாதி -திருத்தாயார் திருவாய் மொழி –
தானே சொல்ல முடியாத தசை போல் கீழ் இரண்டும்

அதில் பலவற்றை இழந்ததை சொல்ல
இங்கு தானே இழந்ததை சொல்லிக் கொள்கிறாள்
இங்கு வளையல்களை மட்டும் இழந்தவற்றை பத்தும் பத்துமாக அருளிச் செய்கிறார்
இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
இழந்தது என் கன வளையே —8-3-2-
என் செறி வளையே —8-3-3-
இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

கரையெடுத்த பிரவேசம் –

ஏதைர் நிமித்தைர் அபரைச்ஸ் ஸூ ப்ரரூ சம்போதிதா ப்ராகபி சாது சித்தை
வாத ஆதப க்லாந்த மிவ   பிரணஷ்டம் வர்ஷேண பீஜம்  பிரதி சஞ்ச  ஹர்ஷ –
கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொன்னவாறே-

(த்ருஷ்டாந்தம் -ராமாயணம் ஸூந்தர காண்டம்
ஸூப நிமித்தங்களைக் கண்டு உணர்ந்தால் போல்
மணி நிறம் கொண்டான் -கை வளை கொண்டான் -இரண்டையும் சொன்னாலும்
வளை இழந்தது கை மேலே காணலாய் இருப்பதால்
இத்தையே பேசி -திரு உள்ளத்தில் ஸங்க்ரஹேன
தெள்ளியீர் -கை வளை கொண்டது –
தேவர்க்கும் தேவராய இருந்து -கை வளை கொண்டது-
ஒவ் ஒரு பதத்துக்கும் பல முறை கேட்டதே நிமித்தங்கள் இவளுக்கு )

(தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே-
2-தேவர்க்கும் தேவர் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் -சஷுஸ் அனைவருக்கும் –
இவள் கை வளை கொள்வது தக்கதே
3-திருத் தக்கீர்–பெரிய பிராட்டியாருக்குத் தக்க -திருவுக்கும் திருவாகிய செல்வர் -இவள் கை வளை கொள்வது தக்கதே
4-வெள்ளியீர் -ஸூத்த ஸ்வபாவம் -இவள் கை வளை கொள்வது தக்கதே
5-வெய்ய விழு நிதி வண்ணரோ-சுட்டு உரைத்த நன் பொன் இவர் ஒளி ஒவ்வாது -இவள் கை வளை கொள்வது தக்கதே
ஐந்து பதங்களும் தக்கதே என்ற பத்துடன் சேர்த்து அன்வயித்து கொள்ள வேண்டும்)

இத்தைக் கேட்டு உணர்ந்த பெண் பிள்ளை
தன் கையைப் பார்த்து இழந்தேன் வரி வளை -என்கிறாள் –

கீழ்த் திரு மொழியிலே -கை வளை கொள்வது தக்கதே -என்று திருத் தாயார் சொன்னாள்
அவள் பல காலும் சொல்லக் கேட்கையாலும்
இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும்
(அது தன்னை பரிஹரிக்கைக்கு வேங்கடம் -நீர் மலை -திரு மெய்யம் -வாய் வெருவி-சொன்னதே பலம் கொடுக்குமே )
கீழ் பிறந்த  மோஹமானது போய்

அல்பம் அறிவு பிறந்து (மயக்க நிலை மாறி )
அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகை தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக
அத்தாலே இரவல் வாயாலே
தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –

——————————————-

கரையெடுத்த -எடுத்த -எடுவித்த என்றபடி
சங்கு -ஸூத்த ஸ்வ பாவனராயும் -பவள -ராக -பக்தி -ப்ரதானாராயும் –
நீர்மை இடும்படியான தேசம் இருந்தவனான மாத்ரம் அன்றிக்கே
அரியன செய்து நோக்குமவனுக்கு இழந்தேன் வளையை என்கிறாள் –

கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரை யெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

விரை-பரிமளம்
விறல்–மிடுக்கு
வரையெடுத்த-கோவர்த்தன மலை எடுத்த
வரி வளை–தர்ச நீயமான வளை

கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
கரை -என்று கோஷத்துக்கு பெயர்
சங்கானது திரை மேல் திரையாக போந்து ஏறுகிற போது
கரையிலே பார்த்து நின்றார்கள் –
ஒரு சங்கினுடைய அளவு  இருக்கிறபடி என் -என்று சொல்லுகிற கோஷம் ஆதல் –
அன்றிக்கே
சங்கு தனக்கே ஸ்வத உண்டாய் இருப்பதொரு கோஷம் உண்டு இறே
அத்தைச் சொல்லிற்று ஆதல் –

கன பவளத்து எழு கொடியும்-
செறிந்த பவளத்தின் உடைய வளர்ந்த கொடியும் –

திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
திரைகள் ஆனவை எடுத்துக் கொண்டு வாரா நின்ற
ஜல சம்ருத்தியை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

விரையெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரிக்கைக்காக
கோவர்த்தன கிரியை தோள் அசையும்படி எடுத்துக் கொண்டு நின்றான் ஆயிற்று –
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய்
பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான
சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –

(அரியன செய்தவன் என்னை அறியாமல் இருக்கிறானே )

————————————————————–

வரை எடுத்த பெருமானுக்கு என்று கீழே
திருவாய்ப்பாடியில் உள்ளோர் வளைகள் இழக்கவில்லையே
மதுரா சென்றவன் திரும்ப மாட்டானே என்றார்கள் அன்றோ
அங்கு அத்தோடு வியசனம் தீர்ந்தது
மதுரைக்கும் தொடர்ந்து போனேன் என்கிறாள்

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே —8-3-2-

அரி விரவு-கறுப்பானது எங்கும் ஒக்க பரந்து இருக்கிற
தெரிவு அரிய-பேத ஞானம் இல்லாதபடி முகிலும் அகில் புகையும்
மழை மதத்த சிறு தரு கண் கரி -மத ஜலம் கொட்டும் -சிறிய கண்களுடைய -குவலயா பீடம்

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்-
கறுப்பானது எங்கும் ஒக்க பரந்து இருக்கிற  காள மேக சமூஹங்களாலும்
அவ் ஊரில் உள்ளார் உண்டாக்குகிற அகில் புகையாலும் உண்டான இருட்சியாலே

தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும் –
மலைக்கும் மாடத்துக்கும் வாசி தெரிந்து பிரதிபத்தி பண்ண ஒண்ணாத  படியாய்
ரத்ன மயமான  மாடங்களை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
நாநா வான வரிகளை உடைத்தாய்
நாற்றம் மென்மை குளிர்சிகளை உடைத்தாய் இருக்கிற
திரு வநந்த   ஆழ்வான்  ஆகிய படுக்கையிலே கண் வளர்ந்து அருளி
வர்ஷ தாரைகள் போலே இருக்கிற மத ஜலத்தை உடைத்தாய்
வடிவிலே பெருமைக்கு ஈடாக பெருத்து இருக்கை அன்றிக்கே
ஜாதி உசிதமாம் படி சிறுத்து
க்ரௌர்யம் எல்லாம் தோற்றும்படியாய் பார்க்கிற கண்களை உடைத்தாய் இருந்துள்ள

கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே –
குவலயா பீடமானது  வெருவும்படியாக
அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –

மாடங்கள் அழகிலும் -படுக்கை வாய்ப்பாலும் -களிறு தரு புணர்ச்சி -உலக இயல்பு -வளை இழவாமை-
இங்கு தன்னையே நமக்கு ரஷித்து அளித்த செயல்

————————————————–

நீ தொடர்ந்து மதுரையில் இழந்ததை சொல்லா நின்றாய்
நகர ஸ்த்ரீ கலாலாபம் -பசப்பு மொழிகள் -மது ஸ்தோத்ரேண-பேச்சில் பிச்சேறுபவன்
உன் மேல் மால் ஏறுவானோ -என்ன
பின்னை கொல் -என்கிறபடியே -அவனே மால் ஏறும்படி இருந்தவள் அன்றோ -என்னும் கருத்தால்
விடைகள் ருஷபங்கள் கொண்ட வ்ருத்தாந்தம் இதில்

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

துங்கம் -ஸ்ரேஷ்டம்
கோள்-வியாதியால் ஏற்பட்ட சிறை -க்ஷய ரோகம்
செங்கண் மால் யம்மானுக்கு -வ்யாமோகமுடைய ஸர்வேஸ்வரன்
செறி -கழற்ற ஒண்ணாத

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் –
ஒக்கத்தை உடைத்தாய்
பெரு விலையனான ரத்னங்களை உடைத்தாய் உள்ள
மாடங்களில் உண்டான சூலமானது –

திங்கள் மா முகில் துணிக்கும் —
சந்திரனையும்
பெரிய வடிவையும் உடைய மேகங்களின் உடைய
கீழ் வயிற்றை பேதிக்கிற  –

திருக் கண்ண புரத் துறையும் –
பைங்கண் மால் விடை அடர்த்துப்
பசுமையை உடைத்தான கண்களை யுடையுமாய்
பெருய வடிவையும் உடைய ருஷபங்களை அழியச் செய்து

பனி மதி கோள் விடுத்து-
குளிர்ச்சியைப் பண்ணக் கடவனான சந்த்ரனுக்கு வந்த
ஷயத்தை போக்கி-

உகந்த செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே –
அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு
ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
சங்கு தங்கு முன் கை நங்கையாய் இருக்க வேண்டியவள் அன்றோ இழந்தேன் –

———————————————————————

நப்பின்னை இடம் போல் மால் ஏறி இருந்தவன் என்னா நின்றாய்
ஆஸ்ரித கர ஸ்பர்சத்தில் அதி வ்யாமோஹம் -கட்டுப்பட்டு இருப்பானே என்ன –
கட்டுப்பட்ட காலத்திலும் ரஷிப்பவன் வருவதுக்கு தடை உண்டோ

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும்
புணர் மருதம் இற   நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

மறுகில்-திரு வீதிகள்
திணம்–திண்ணம் -திடமாக
அகவும்-மயில் அகவும் சப்தம் -இருந்தாலும் இங்கே ஆடா நிற்கும் என்னும் பொருளில் வந்தது

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திரள் மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆனவை தம்முடைய ப்ரீதியாலே
ச சம்பிரம நிருத்தம் பண்ணா நிற்பதுமாய் –
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தாய்
பெரிய திரு வீதிகளை உடைத்தாய் –

திணம் மருவும் கன மதிள் சூழ் – –
திண்மை மிக்கு இருக்கையாலே
அரணாக போரும்படியான மதிளை உடைத்தாய் இருந்துள்ள –
திருக் கண்ண புரத் துறையும்-
(ஸப்த பிரகாரம் போல் ஏழு மதிள்கள் இருந்தவாற்றை நம்மாழ்வார் )

மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும் –
பிள்ளை பக்கல் பரிவாலே எப்போதும் ஒக்க கந்த த்ரவ்யங்களாலே
அலங்கரிக்கப் பட்ட தோள்களை உடைய யசோதை பிராட்டி போல்வார்
பந்தித்த வற்றை அறுத்து கொடு போகை  அன்றிக்கே
கட்டின உரலையும் இழுத்துக் கொண்டு போய் –

பகதத் தாதிகள் விட்ட அஸ்த்ரங்கள் ஆகில் இறே நேரே மார்வைக் காட்டி நிற்பது
பரிவுடையாளாய் கட்டினதுக்கு பண்ணலாவது பிரதி கிரியை இல்லையே
ஆகையால் அத்தையும் இழுத்துக்   கொடு போய் –

புணர் மருதம் இற   நடந்தார்க்கு இழந்தேன் என் பொன் வளையே –
இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர் விவரமாய் இருக்கிற மருதுகள்
முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

————————————————————————-

ஒருத்தி கையிலே கட்டுண்டும் -விரோதிகளைப் போக்கியும் -புணர் மருதம் இவள் விரோதி தானே –
தன்னை அவளுக்கு கொடுத்தவன்
எனது விரஹ தாப விரோதியைப் போக்கி தன்னைத் தாரானோ

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் –
உச்ச ஸ்வரமாக பிரயோக்கிகிற மந்த்ரங்களாலே
பிராமணர்
தங்களுக்கு கர்த்தவ்யமான படியாலே

தீ எடுத்து மறை வளர்க்கும் –
அக்னியை ஜ்வலிப்பித்து வைதிக மரியாதையை நோக்கிக் கொண்டு போருகிற –

திருக் கண்ண புரத் துறையும் –

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட –
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமையாலே
வெண்ணெயும் பாலையும் களவிலே அமுது செய்ய
(ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் தானே உண்பான் )
அவை ஈட்டப் பட்ட வருத்தத்தாலே யசோதை பிராட்டி கையில் கோலைக் கொள்ள

அவள் தாய் இறே
அச்சம் உறுத்துகைக்கு செய்த செயல் இறே
என்று  அறிய மாட்டாதே ஈடுபட்டு ஓடி

அமுது செய்த தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –

வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே
முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற
இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

———————————————————

சிறு கோலுக்கு -பயந்து இருக்கும் பருவம் அவனது
நீயும் பேதைப்பருவம்
வளை இழக்கும்படி வந்தது என்ன
சிறுவனுக்காக –
வாசி அறிந்து -விரோதியை அழித்தவன்
நானும் விரஹ தாபத்தால் இழந்தேன் -என்று சங்கதி –

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

அணி யுகிரால்-அழகியான் தானே அரி உருவம் தானே –

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம் –
மடலினுடைய ஒக்கத்தை உடைத்தான
நெடிதான தாழைகளை உடைத்தான பரிசரம் எல்லாம்
வளர் பவளமானது –

திடல் எடுத்து சுடர் இமைக்கும் –
திடல்களிலே மூடப் படர்ந்து
பிரகாசத்தைப் பண்ணா நின்றுள்ள –

திருக் கண்ண புரத் துறையும் –

அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்  –
யுத்தத்திலே நெருக்கி
அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக
பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
உகிராலே-
(ஜ்வாலா நரஸிம்ஹன் இன்றும் சேவிக்கலாம் இந்த கோலம் )

உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –
அவன் உடைய சரீரத்தை பேதித்து
தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ
என்று இருந்தாயிற்று வளை இழந்தது  –

(ஈஸ்வரனாக தன்னை நினைத்தவனை நஸ்வரன் என்று காட்டிய அவதாரம் அன்றோ )

——————————————————

ஒருத்தனுக்கு ரஷித்தவன்
ஊருக்காகா-ஸமஸ்த உலகத்தாருக்காக -பிரளய ஆபத் சஹன் -என்று
கிடாய் நான் வளை இழந்தேன்

வண்டமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

எழு சுடரும் எழு கடலும் -பாட பேதங்கள் –

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம் –
வண்டு படிந்த பூக்களை உடைத்தான
புன்னையினுடைய வரி நீழலிலே
ஓர் இடம் வெளியாய் ஓர் இடம் நிழலாய் இருக்கும் ஆயிற்று –

தெண் திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும் –
அதில் வெளியான பிரதேசங்களிலே
தெளிந்த நீர்கள் ஆனவை
முத்துக்களைக் கொண்டு வந்து திரட்டா நிற்கும் ஆயிற்று –

எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும் –
எட்டுத் திக்குகளையும்
எழு வகைப் பட்ட கடல்களையும்
எழு சுடரும் -என்ற பாடமான போது எழா நிற்கிற ஆதித்யாதிகளையும் நினைத்தது ஆகிறது –
பரப்பை உடைத்தான பூமியையும்
இவற்றுக்கு எல்லாம் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசத்தையும் –

உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –
பிரளய காலத்தில் எடுத்து வைத்து
பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த
சர்வேஸ்வரனுக்கு
இழந்தேன் என் வரி வளையே –
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

———————————————————————–

அநந்த பத்ம நாபன் -அனுபவம்
பிரளயத்தில் ரக்ஷித்தான் -உனக்கு என்ன பிரளயம் வளையலை இழக்க
விரஹ தாபம் -மஹா பிரளயம்
எனக்கு விரஹம் உண்டாக்கின அவனே ஸமஸ்த வற்றையும் உண்டாக்கிய திரு நாபி கமலத்தை பாடுகிறாள்

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

கயங்கள்-பொய்கைகள்
குவளை கண் -தாமரை முகம் ஒப்பு என்றால் –கால மருட்சி வருமே -என்றால் -ஒரு சேர மலராதே –
யுகபத் ஏக காலம் கூடாதே
செங்கமலம் போன்ற பெண்களுடைய கமல முகம் அலர்த்துகிறது -விகசிப்பியா நின்றது

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள் –
பரிமள பிரசுரமாய்
கறுத்த நிறத்தை உடைத்தாய் இருந்துள்ள
குவளைப் பூக்களை
கண்ணாகக் கொண்டு தெளிந்த பொய்கைகள் ஆனவை –
(கரும் குவளை சிவந்த குவளை வெண்மை குவளை மூன்றுமே உண்டே )

செங்கமல முகமலர்த்தும் – –
சிவந்த தாமரைப் பூக்கள்  ஆகிற முகத்தை
அலரா நின்றுள்ள –

திருக் கண்ண புரத் துறையும்-
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற –
மரக் கலங்களால் மிக்கு இருப்பதாய்
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தாய் இருக்கிற கடலிலே –
தர்ச நீயமான வடிவை உடையனான திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிற –

செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு
உத்பாதகனை விஸ்வசித்து
முடிந்தேன் -என்கிறாள் –

—————————————–

சகல ஜகத் உத்பாதகன் தானே உண்டாக்கிய விரக தாபம் அனுபவித்தே தீர்க்க வேணும் என்றும்
அவனே வரும் அளவும் ஆறி இருக்க வேணும் காண் என்றும் சொல்ல
தன்னைப் பிரிய மாட்டாதவரை தான் பிரிய மாட்டாரே
பாஞ்ச ஜன்ய அம்சம் பரதாழ்வான் -சேஷ அம்சம் இளைய பெருமாள்
தீர்த்தமாடாமல் இருந்தாலும் படுக்கையை பிரிய முடியாதே
நான் பிரிய மாட்டாதவள் தானே -பிரியலாமா -என்கிறாள்

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன்-
வாராலே தாங்கப் பட்டு இருப்பதாய்
இளைமையை உடைத்தாய் இருக்கிற
கொங்கைகளை   உடையவளாய்
நெடிய பணை போலே இருக்க்கிற தோள்களை உடையவளாய்
ஆத்ம குணங்கள் -அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு -நிறைந்த
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவளாயிருக்கிற பெரிய பிராட்டியார்
வர்த்திக்கையாலே உண்டான சம்பத்தை உடைத்தாய்
வரை போலே திண்ணிய தான மார்வை உடையவன் –

திருக் கண்ண  புரத் துறையும் பேராளன் –
திருக் கண்ண புரத்திலே வந்து ஸூலபன் ஆகையால் வந்த
ஏற்றத்தை உடையவன் -( கண்டு பற்றுகைக்கு ஸூ வ்லப்யம் )

ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல் பேராளர் பெருமானுக்கு –
தூங்கு மெத்தை போலே அசையா நின்றுள்ள
திரு வநந்த ஆழ்வான் மடியிலே  ஏறட்டுக் கொண்டு
ஆயிரம் வாயாலும் அனுபவத்துக்கு பாசுரமான
ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் வந்த பெருமையை உடையவனுக்கு

யசோதை பிராட்டி தன் மடியிலே வைத்துக் கொண்டு
ஆடுமா போலே ஆயிற்று –
(அது எளிமையால் மேன்மை இது மேன்மையால் மேன்மை )

இழந்தேன் என் பெய் வளையே-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு
தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து
வளை இழந்தேன் -என்கிறாள்  –

—————————————————————-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே —8-3-10-

கண்டுரைத்த-கிருபையால் உரைத்த –

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும் –
தேன் மிக்கு இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்ட
பர்யந்தத்தை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன் –
வாமனை யாயிற்று கவி பாடிற்று
தன்னுடைய பேற்றுக்குத் தான்  அர்த்தியாய் வருமவன் ஆயிற்று –
(திருக் கல்யாண திருக்கோலம் -தானம் வாங்கும் ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார் )

சப்தியாது நின்றுள்ள கடலாலே சூழப் பட்டு இருப்பதாய்
பரந்த வயலை உடைத்தான
ஆலி நாட்டை உடையராய் –

காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை –
எல்லாருக்கும் ஸ்பருஹை  பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான  ஆழ்வார்
அருளிச் செய்த இந்த தமிழ் தொடையை –

நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே –
நாவிலே பொருந்தும் படி பாட
ச ஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –

உக்தி மாத்ரத்தைச் சொல்ல
புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-

கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்-

——————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading