துறப்பேன் -பிரவேசம் –
வண்டுண் நறு மலரிலே-6-1- -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -என்று
தாம் பல காலும் விண்ணப்பம் செய்த வார்த்தை
ச ஹ்ருத்யம் என்று
அப்பன் திரு உள்ளத்தில் படும்படியாக
பொறுத்தேனில் -6-2–அம் மனை வாழ்க்கையிலே அந்வயித்து
அவற்றால்
தாம் மாறுபடுருவ கிலேசப்பட்ட படிகளையும்
தத் ஹேதுக்களையும் விண்ணப்பம் செய்து –
இவ் வநிஷ்டமான வாழ்க்கையை தவிர்த்து
எனக்கு இஷ்டமான உன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை
நான் பெறும்படி பண்ணித் தந்து அருள வேணும்
என்று திருவடிகளிலே சரணம் புகுகிறேன் -என்றார் –
சர்வேஸ்வரனுக்கு ஒரு ஸ்வ பாவம் உண்டு
அநாதி காலம் சம்சரித்துப் போந்தான் ஒருவன்
சம்சாரத்தில் விரக்தி பிறந்து
இத்தை வேண்டேன் என்று இதில் தோஷங்களை சொல்லிக் காட்டுவது
இத்தைத் தவிர்த்து தர வேணும் என்று சரணம் புகுவதானாலும்
திரியவும்
பூர்வ வாசனையாலே அவற்றில் சில பாசம் கிடக்க அடுக்கும் என்று
அவற்றில் தன்னால் ஆராயும் அளவிலே ஆராய்ந்து
தனக்கேயாக
அவற்றில் கடையறப் பாசங்கள் விட்டார்க்கு அன்றி கார்யம் செய்யான் –
ஆகையாலே -பொறுத்தேன் -என்று கீழ் இவர் சொன்ன வார்த்தைகளை
தனித் தனியே ஆராய்ந்து
இவற்றில் அற விடாதே
எத்தை இன்னும் அனுசந்திக்கப் பார்த்தீர் -என்றாப் போலே கேட்க
அவற்றில்
தமக்கு அவிருத்தமாய் விடாதே ஒழிய நினைத்தவற்றையும்-
விருத்தமாய் விட நினைத்தவற்றையும் –
விண்ணப்பம் செய்து
குல வானவர் தம் கோதா -6-2-9-என்று கீழ் சொன்ன தேச விசேஷ பிராப்தியில்
தமக்கு உள்ள த்வரையும் அறிவித்துத் தலைக் கட்டுகிறார்-
பொறுத்தேன் பதிகத்தில் முதல் பாட்டில்
பொருள் இன்பம் -இவற்றில் பிரதானமான இன்பத்தில்
நீர் நின்ற நிலை என் என்ன -சொல்லுகிறார் –
சரணம் புகுந்தால் கார்யம் செய்யாமல் இருப்பது என் -என்ன
கீழே கோவிந்த ஸ்வாமியின் கருத்து அறிந்து போகம் எய்தி வரச் சொன்னவோ பாதி
இவருக்கும் திவ்ய தேச ப்ராவண்யம் இருக்குமே
தனக்கே ஏற -ச வாசனமாக போக்கியத்துக்கு அடையாளங்கள் இருக்க வேண்டுமே
இவ்விபூதியில் அனுபவிக்கக் கொடுத்தாலும் விஷம் மிஸ்ர போகம் போல் விடும் படியான பாகம் பக்குவம்
உள்ளதா என்று தன் திரு உள்ளத்தில் படும் படி
மருள் ஒழி நீ மட நெஞ்சே -வாட்டாற்றான்
திருவாறன் விளை -இருக்கவே =மேவி வலம் வரவே -ஆசை
இத்தை தொலைத்தால் தானே கூட்டிப் போவான்
திவ்ய தேச ப்ராவண்யம் இன்னும் இருக்கு என்று அவன் திரு உள்ளத்தில் பட்டால் கூட்டிப் போக மாட்டானே
இந்த உயர்ந்த ஆசையும் விட்டால் தான் கூட்டிப் போவான்
ஆழ்வார் நிஷ்டை புரிந்தே இதை உணர முடியும் –
தனக்கு ஏற -இதனாலே எந்த பக்குவம் அடைந்த பின்பு
ஆழ்வாராதிகளையும் ஆச்சாரிகளையும் கூட்டிப் போனான் என்று வியாக்யானங்களில் இருக்காதே
யாரும் அறியாத -அவன் மட்டுமே அறிந்த விஷயம்
அற விடாத -மிகவும் விடாதே
திருப்பேர் நகர் நந்தி புர விண்ணகரத்தில் மண்டி இருந்தவர்
இன்னும் உகந்து அருளினை நிலங்களில் பிறாவண்யம் இன்னும் பின்னாட்டுமே
உன்னை மறக்காது இருக்கும் இன்பமே -இந்த காமமே வேண்டும் என்கிறார்
இங்கு அநித்யம் என்பதால் ஸ்ரீ வைகுண்டம் பிரார்த்திக்கிறேன் என்கிறார் என்றபடி
————————————————
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-
மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-மறவாமையாலே பிறக்க எண்ண மாட்டேன் –
திரு விண்ணகரானே-நேராக விளித்து அருளிச் செய்கிறார் –
துறப்பேன் அல்லேன் இன்பம் –
விஷயானுபவ ஸூகத்தை துறக்கும் இத்தனை ஒழிய
நின் திறத்தேன்-யாகும் இருக்கிற பிரதான ஸூகத்தை விடுவேன் அல்லேன் –
சப்தாதி விஷயங்களை விட்டீரே யானால் இன்பத்தை
இங்குத் துறவாது ஒழியும்
விரகு என் என்ன –
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன்-
ஸூகத்தை துறவாமை யாவது
உன்னுடைய வடிவை மறவாது இருக்கை –
மறந்தேன் உன்னை முன்னம் -என்று கீழ் உள்ள காலம் எல்லாம் மறந்தேனே யாகிலும்
இனி மேல் உள்ள காலம் மறவாதே ஒழியப் பார்த்தேன் –
இத்தால் பலித்தது என் என்ன
மறந்தேன் உன்னை முன்னம்
அது ஹேதுவாக பிறந்தே எய்த்து ஒழிந்தேன் -என்றேன்
இனி உன்னை மறவாதே நினைக்கப் பார்த்தால்
பிறவாமை அன்றோ இதுக்குப் பலம்
என்றும் மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-
அம் மறவாமையால் பெற்றது
சம்சாரத்தில் பிறப்பேன் என்னும் மநோ ரதமும் தவிர்ந்தேன் –
(இப்படி முப்பது பாசுர சுருக்கம் அழகாக தொகுத்து ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
அழகிய வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள் )
அழகிது
(என்றும் மறவாது வார்த்தையைக் கேட்டதும் )
தைல தாராவ விச்சின்ன ஸ்ம்ருதி உமக்கு உண்டாகையாலே
நமக்கு இனி ஜன்மம் வாராது என்று நினைத்து இருக்கிறீர் அன்றோ என்ன
பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆ தன்மையால் –
அந்த பிறவாமையை நான் லபித்தது
உன் அபிமானத்துக்கு உள்ளே அடங்கி
நீயே நிர்வாஹகன் என்று இருக்கையாலே
இத்தனை அல்லது நான் அனுஷ்டித்தது ஒன்றால் அல்ல-
திரு விண்ணகரானே-
உன் திறத்தேனாக பெற்றது தானும்
நீ இங்கே சந்நிஹிதனாகை –
துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன்
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை
என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை
பிறவாமை நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-திரு விண்ணகரானே –
உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை –
(பொருள் இன்பம் இவற்றால் கிலேசம் என்றார் கீழ்
துறப்பேன் என்ன கூடுமோ
பகவத் அநு பூதியில் -பகவத் இன்பமும் உலக இன்பமும் சேர்ந்தே தானே இருக்கும்
மறந்தேன் உன்னை கீழ் உள்ள காலம் –
இனி மறவாமல் இருப்பதால் பெரும் பலன் பிறவாமை
என்றும் மறக்காமல் இருந்தேன் -சொல்லவே உபாசனம் -த்ருவ ஸ்ம்ருதி -சாதனமோ –
உன் அபிமானத்தில் ஒதுங்கி
பால் குடிக்க நோய் போகுமா போல் இத்தைப் பெற்றேன்
பால் உபாயமா – நான் பால் குடித்ததா உபாயம் -இது விஷயத்தின் ஸ்வ பாவம்-அதிகாரி ஸ்வரூபம் வேறே உபாயம் வேறே
நோய் உள்ள நான் உபாயம் இல்லையே
மறவாமை உபாயம் இல்லை
நின் திறத்தேன் -என்றதும் உம்மால் தானே
திரு விண்ணகர் வந்து என்னைப் பிடித்து ஆள் கொள்ளவே
மறவாமை -அதிகாரி ஸ்வரூபம் –
கீழ் பாட்டுக்கள் நெஞ்சில் நன்றாக பட மீண்டும் ஸங்க்ரஹித்து அருளி உள்ளார் )
——————————————————-
கீழ் விஷயாந்தர இன்பம் ஒழிந்தது
ப்ராப்த விஷய இன்பம் ஒழியாமல் இருக்கப் பெற்றேன் என்றார் கீழ்
இது இன்பம் ஆக விஷயாந்தர பற்று போக வேண்டுமே
ஆர்வ செற்றம் போனதோ என்ன
ராக த்வேஷம் போனமை
ஆர்வம் -சுற்றத்தாலே வருமே -அத்தை விட்டமையை இதில்
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் –
உனக்கு புறம்பே சில பற்று உண்டு -என்று தேவர்க்குப் பழி இட ஒண்ணாத படி யானேன் –
பரி த்யக்தா மயா லங்கா -என்னுமா போலே
அநாதி கால வாசனையாலே
விஷயங்களிலே ஸ்ம்ருதி பிறந்து
அது அடியாக ஸ்நேஹம் பிறந்து
பின்பு அவ்விஷயத்தை பெறில் ஜீவித்தல்
இல்லை யாகில் முடியும் அளவாய்
அது கிடையாது ஒழிந்தவாறே
இவன் இறே இதுக்கு நிரோதகன் – என்று கண்டார் மேல் எல்லாம் குரோதம் பிறந்து
(ஸ்ரீ கீதையில் -ஸ்ம்ருதி ஸ்நேஹம் சங்கம் -காமம் -க்ரோதம் )
யுக்த அயுக்த நிரூபண ஷமன் அன்றிக்கே
தோற்றின படி நடந்து திரியக் கடவனாய்
இவை தான் இத்தனைக்கும் அடி –புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே
அது தவிர்ந்தேன் –
பண்ணின சங்கம் தவிரவே
அது அடியாக த்வேஷம் போம் இறே
இவை இரண்டும் போம் இறே–
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்குமது தவிரவே –
துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக்கே யடிமை –
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே -இழவு வருகைக்கு அடி –
அது தவிர்ந்தால் இப்போதாக உறவு சம்பாதிக்க வேண்டியது இல்லை இறே
இவன் பக்கல் சம்பந்தம் ஸ்வா பாவிகம் இறே
பாஹ்ய விஷயங்களை விட்
ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம்
ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்-
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –
நாம் சர்வஞ்ஞராய் இருந்தோம்
நீர் அநாதி காலம் புறம்பே சிலரை உறவு முறை என்று இருந்தவராய் இருந்தீர்
இப்படி இருக்க இப்போது சிறந்த படி எங்கனே என்னில் –
திருமாலே –
ஸ்ரீயபதி யாகையினாலே
இவன் தான் அகல நின்று பண்ணின குற்றத்தைக் கணக்கிட்டு கை விடும் அத்தனையோ
உம்மோடு உண்டான குடல் துடக்கை பார்த்துக் (கைக்) கொள்ளும் இத்தனை அன்றோ -என்று
ஆற விடுவார் அருகே உண்டாகையாலே
இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்
ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே –
ந கச்சின் ந அபராத்யதி -என்பார் அருகே உண்டானால் கிட்டுகைக்கு ஒரு குறை உண்டோ –
பிராட்டியோட்டை சம்பந்தமும் ஒரு தலை குலுக்கு மாத்ரமுமாய்
அவன் தான் பிரஜைகள் பக்கலில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும் ஏற்றம் உண்டு இறே அவனுக்கு
பொறுக்கைக்கு ஒரு சாமக்ரி மாத்ரமாய்-
பொறுப்பிப்பார் வேறு சிலராய்-
பொறை தாமேயாய் இருக்கை –
இத்தால்
இதர தர்ம வ்யாவருத்தி சொல்கிறது –
கேவல தர்மம் ஆகிறது தான் அசேதனமுமாய்
செய்த போதே நசித்து விடும் இறே
ஆகையால் இவன் செய்தது அறியாதே
பலம் பெறுகைக்கு வேறு ஒருவனை கால் கட்ட வேண்டும்படியாய் இருக்கும் இறே
அவன் தன்னையே பற்றிப் பெறும் இடத்தே இவற்றை விட்டே பெற வேண்டும் இருக்கும் இறே
ஆகையால் இறே சாதன நைரபேஷ்யம் சொல்லுகிறது
கூறு செய்வான் ஓன்று கொடுக்கும் போது ராஜாவின் ஆஞ்ஞை வேணுமே
ராஜா ஓன்று கொடுக்கும் போது கூறு செய்வான் வேண்டாம் இறே –
அறந்தானாய்த் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்றும்
அக்ஷரம் ப்ரஹ்மம் சத்யம் — லோகா நாம் த்வம் -பரோ தர்ம -என்றும்
ராமோ விக்ரஹவான் -என்றும்
சத்யா தர்ம பராயணா சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த -என்றும் -சொல்லுகிறபடியே
திருமாலே அறந்தானாய்த் திரிவாய் –
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் -இரண்டாம் திருவந்தாதி -52-என்னுமா போலே –
ஆரது அறிவார் –
அவன் படி இதுவாய் இருக்க
உடம்பை ஒறுத்துக் கார்யம் பாரா நிற்பார்கள்
திரிவாய்
பலம் கொடுக்கைக்கு அவசரம் பார்த்து திரியும் தர்மம் ஆயத்து –
யுன்னை என் மனத் தகத்தே திறம்பாமல் கொண்டேன் –
உன்னுடைய தடுமாற்றத்தைத் தவிர்த்தேன் –
ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்த உன்னை –
பிராட்டி புருஷகாரமாகவும்
என்னுடைய அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு
என்னுடைய ஹிருதயத்திலே இனி நீ கால் வாங்கில்
காதகரோ பாதி யாம்படியாக வைத்துக் கொண்டேன் –
நீயே வந்து புகுகிற இடத்தில்
நான் விலக்கிற்றிலேன்-என்ற படி
அநந்ய கதியை விடில் நிர்க் க்ருணன் ஆம்
பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்
ஆக
ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம் –
நீர் ( ஏற்றுக் )கொள்ள வல்லீர் ஆன படி என் என்ன –
திரு விண்ணகரானே-
நீ ஸூலபன் ஆகையாலே –
நீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆன படியாலே –
———————————————————
ராக த்வேஷ ஹேதுவான சுற்றம் துறந்தாலும்
வித்வான்களை ஈர்க்கும் கண் அழகுக்கு தப்பினால் அன்றோ என்ன
அதுக்கு உத்தரம் இதில் –
தப்ப ஒண்ணாததைத் தப்பி
திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன்
என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார் –
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே —6-3-3-
கண் வாளி-அம்பு அன்ன கண்ணாள்
மானேய் நோக்கு நல்லார்-
மானோடு ஒத்த நோக்கை உடையாராய்
மற்ற வடிவழகுக்கு உறுப்பான நன்மைகளை உடைய ஸ்திரீகள் உடைய –
மதி போல் முகத்து உலவும் –
தர்ச நீயமாய்
தங்கள் பக்கல் சேர்த்துக் கொள்ளுகைக்கு பரிகரமான முகத்திலே சஞ்சரியா நின்றுள்ள –
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன் –
மாம்ச பிரசுரமான கண் ஆகிற
அம்புக்கு ஈடுபட்டு
ஓடி வந்து -உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
கண்களாலே கார்யப்பாடு இல்லாதாரைப் போலே நோக்கி
இவனைப் தப்பாமல் அகப்படுத்தி
இவன் ஆழங்கால் பட்ட அநந்தரம்-
தங்களைக் கொண்டு பேர நின்று இவனை நோவு படுத்தா நிற்பர்கள் இறே-
அத்தைத் தப்பி திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-
கோனே –
அத்தைத் தப்பி திருவடிகளிலே ஒதுங்கின இடம்
தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே
ப்ராப்த விஷயமாய் இருந்தது –
குறுங்குடியுள் குழகா-
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
இவரோடு கலந்து
சேர்த்துக் கொள்ளுகைக்காக
திருக் குருங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனவன்-
(இவர் திருவரசு இங்கேயே தானே )
திரு நறையூர்த் தேனே –
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
தமக்காக திரு நறையூரிலே நிற்கிற நிலையை அனுசந்தத்த வாறே இனிதாக நின்றது
பட்டர் -திரு நறையூர் பெருக்குக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று அருளிச் செய்வர் –
வரு புனல் சூழ் திரு விண்ணகரானே-
காட்சியிலே சகல தாபங்களும் ஆறும் படியான ஜல சம்ருத்தியை உடைய திரு விண்ணகரிலே
நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே
அந் நோக்குக்குத் தப்பி
திருவடிகளிலே வந்து கிட்டப் பெற்றேன் –
—————————————————-
கண் வலைக்குத் தப்பி ஓடி வந்தேன் என்று சொன்னீர்
சுக பிராந்தி ஜனகமாய்
ஓடி வர மூல ஸூஹ்ருதம் ஒன்று இருக்க வேண்டுமே என்ன
அதுக்கு உத்தரம் இதில்
போந்தேன் -நிர்ஹேதுகமாக உன்னிடம் போகப் பெற்றேன்
உன்னை எய்தினேன்
சந்நிதி கண்டு அடைந்து
கைங்கர்யம் செய்து
மோக்ஷம்
அடைந்தேன் –
சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-
சாந்தேந்து-
தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே-
குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும் -என்று –
மென் முலையார் –
விரஹம் பொறாத முலையை உடைய ஸ்திரீகள் உடைய –
தடந்தோள் புணரின்ப வெள்ளத்து –
முலைகள் ஆகிற மலைகளோடு
தோள் ஆகிற பாசங்களாலே நெருக்கிக் கட்டி
கடலிலே புகத் தள்ளுவாரைப் போலே
அவர்களோடு தோள்கள் உடன் அணைகையில் உண்டான
ஆனந்த சாகரத்திலே தரை காண ஒண்ணாத படி
அவஹாகித்தேன்
உன்னுடைய கிருபைக்கும் அவிஷயம் ஆனேன் –
ஆனந்த மய -என்கிற விஷயத்தை உள்ளபடி கண்ட இவர்
இப்போது இங்கே இன்ப வெள்ளம் என்கிறது
இவ்வளவும் வரக் கால் கட்டின படியைக் கொண்டு
அநந்த கிலேச பாஜனமான இத்தை
இன்ப வெள்ளம் என்கிறது நெடு நாள் துவக்கின படியைக் கண்டு இறே –
இத்தால் பலித்த தோர் பலம் உண்டு –
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்-
காலம் எல்லாம் இடை விடாதே அவனுடைய கல்யாண குணங்களை
அனுபவிக்க இட்டுப் பிறந்த நான்
காலம் எல்லாம் நித்ய சம்சாரியாய் போகையாகிற
பிரயோஜனத்தைப் பெற்றேன்
விஷய ப்ராவண்யம் சம்சார பீஜம் -என்று இருக்கிறார் –
போந்தேன் –
ஒரு கர்மத்தை அனுஷ்டித்து அத்தாலே
ஷீண பாபனாய்
அநந்தரம் ஜ்ஞானம் பிறந்து
அத்தாலே இது தீது இது நன்று என்கிற இனிமையாலே கிட்டுகை அன்றிக்கே
நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள்
ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே
திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் –
இந்நாள் வரைப் போந்த விடத்து ஒரு ஸுஹ்ருதமும் பண்ணிற்று இலீராகில்
இப்போது நம்மை வந்து கிட்டினபடி எங்கனே என்னில்-
புண்ணியனே –
உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே
என்கிறார்
உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் –
சர்வாதிகனான உன்னைக் கிட்டி
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான
பாபங்களை அடியைப் போக்கினேன் –
நம்மைக் கிட்டிய விரகு தான் என் என்னில் –
நின்னடைந்தேன் திருவிண்ணகரானே
ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக
கடல் கரை வெளியிலே எடுத்து விட்டு நின்றால் போலே
சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு
நோவு படுகிற எனக்கு புகலாக
திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன் –
—————————————————
விஷயாந்தர சம்பந்தம் விட்டதை கீழே
தேவதாந்த்ர சம்பந்தம் இல்லை என்கிறார் இதில்
இதிலும் எனக்கு வைராக்யம் அடையப் பெற்றேன்
பிறவாமை பெற்றேன் இங்கு தேவதாந்த்ர சம்பந்தம் யோக்யதை விட்டமை –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-
பெற்றேன்-அலாப்ய லாபம் அடைந்தேன்
மற்றோர் தெய்வம் எண்ணேன்-
மநோ ரத சமயத்திலும் வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டாக நினையேன்
உன்னை என் மனத்து வைத்துப் –
சர்வாதினகாய் இருக்கிற் உன்னை
விலக்காமை மாத்ரத்தாலே
என்னுடைய ஹிருதயத்திலே வைத்து
ஓர் அலாப்ய லாபம் பெற்றேன் –
அப்பேறு தான் என் என்னில்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான் –
இதர தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கு யோக்யமான
ஜன்மமும் கூடக் கழியப் பெற்றேன்
அதுக்கு யோக்யதையே தொடங்கி இன்றிக்கே இருந்த படி –
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச் செற்றாய் –
ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை முறித்து புக்கு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அல்லேனோ-என்று
அபிமானித்து இருக்கிற ராவணனை
கிழங்கு எடுத்தவனே
அரியன செய்யும் இடத்தில் வருத்தம் அற செய்ய வல்லவன் அன்றோ நீ –
கொற்றவனே-
பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த
வருத்தம் உண்டோ
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –
நான் இலங்கையை அழியச் செய்தது கடல் கரை வெளியிலே எடுத்து விட்டு நின்று
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கிற்று எங்கே வந்து நின்று என்ன –
திருவிண்ணகரானே –
எனக்காக வந்து நிற்கிற இடம்
திருவிண்ணகர் -என்கிறார் –
————————————————–
தேவதாந்த்ரங்களை எண்ணா மைக்கு காரணம்
உமக்கு சரீரமாக இருந்தாலும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பதால் வைராக்யம் பெற்றேன் இவர்கள் மேல் –
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே—6-3-6-
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும் செய்ய சுடர் இரண்டும் –
சர்வேஸ்வரன் உடைய திரு மேனிக்குப் போலியாய்
அஞ்சனம் போலே தர்ச நீயமாய் இருந்துள்ள சமுத்ரமும்
அது வேலியாக உள்ளே கிடக்கிற பூமியும்
அந்த பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களும்
இப்படிப் பட்ட இதுக்கு இரண்டு விளக்கு ஏற்றினால் போலே இருக்கிற் சந்திர ஸூர்யர்களும் –
இவையாய-நின்னை-
இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –
நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால்-
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –
இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி
உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –
இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன் –
தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத
படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –
திருவிண்ணகரானே –
இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய
பரதத்வமும் அறியேன் –
(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )
——————————————————-
தேவதாந்த்ரம் அறியாதவராயும்
விஷயாந்தரங்களில் பற்றும் இல்லாமலும்
பந்துக்களை விட்டவராயும்
திரு விண்ணகரில் நித்ய வாசம் செய்வதை அறிந்தவராயும் இருக்க
அனுபவித்துக் கொண்டு சுகமாய் இருக்கலாமே என்ன
அவை எல்லாம் இருந்தும்
இன்றும் ஓன்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்கிறார்
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியாது அடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே —6-3-7-
வேறே கூறுவது உண்டு –
இது ஓர் ஓலக்க வார்த்தை யாக அன்றிக்கே
பலத்தோடு வ்யாப்தமாக வேண்டும்படி
திரு உள்ளத்தில் பட விண்ணப்பம் செய்கிறேன் –
விசேஷேணது ஸூக்ரீவோ ஹநூமத்யர்த்தம் உக்தவான் -என்னுமா போலே
முதலிகள் எல்லாரையும் எல்லாத் திக்கிலும் விடா நிற்கச் செய்தே
மகா ராஜர் திருவடியைப் பார்த்து
அடையாளமும் சொல்லி
திரு வாழி மோதிரமும் கொடுத்து
விசேஷித்து விட்டால் போலே –
அடியேன் -கூறுவது உண்டு –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்ய கண்டு இருக்கை இறே முறை
அப்படி ஆறி இருக்க ஒண்ணாதே
என்னுடைய ஆற்றாமையாலே ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறேன் –
விரித்து உரைக்குமாறே நீ பணியா தடை நின் திரு மனத்து -பணியாது அடை –
என்னுடைய வார்த்தை அர்ஜுனன் உடைய பிரஸ்னம் போலே ஆக ஒண்ணாது
பகவான் உவாச என்று தலைக் கட்ட வேணும்
கர்மன்யே வாசதி காரஸ்தே -என்று சிலவற்றை பரக்க சொல்ல ஒண்ணாது
ஸ்திதி தோஸ்மி -நஷ்டோ மோஹா – ஸ்ம்ருதி லப்த -என்னும் இடம் பலிக்கச் சொல்ல வேணும்
நான் பரக்க சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்யும் பிரகாரம்
அருளிச் செய்யாத படி திரு உள்ளம் பற்ற வேணும் –
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் –
நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்
இதர தேவதைகளை வாயாலே பேசேன் –
அவ்வளவே அன்றிக்கே
நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த்
தோற்றிற்று ஆகிலும் அத்தை விஸ்வசியேன் –
உன்னை அல்லால் திருவிண்ணகரானே –
சர்வாதிகனாய் இருக்கிற நீ
திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்
நீயே ஆஸ்ரயணீயன் என்று அறிவித்த பின்பு
இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல்
பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –
———————————
தேவதாந்த்ரம் -பற்றி நீர் அறிந்தது என்ன என்றும்
கூறுவது என் என்றும் கேட்க
அதுக்கு உத்தரம் -ஸ்பஷ்டமாக இதில் அருளிச் செய்கிறார் –
முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
முளிந்தீய்ந்த வெம் கடத்து-
நிலத்துக்கு அடைத்த வாகை வெண்டு என்கிறாப் போலே
சொல்லுகிற சிறு மரங்கள் ஆனவை
நில வெம்மையாலே உலர்ந்து
தீய்ந்து போகிற பாலை நிலத்திலே –
மூரிப் பெரும் களிற்றால் விளிந் தீய்ந்த மா மரம் போல்-
அதன் நிலத்தில் உள்ளது ஒன்றாகையாலே வளர்ந்து
அப்ரதி ஹதமாக சஞ்சரியா நின்றுள்ள ஆனையாலே
தள்ளுண்டு விழுந்த பெரு மரம் போலே –
வீழ்ந்தாரை நினையாதே –
சில பதார்த்தங்கள் தோற்றி முடியும்
சிலர் நெடு நாள் இருந்து கர்ம ஷயத்தால் முடிவார்கள்
ஷூத்ர பதார்த்தங்களுக்கு உத்பத்தியோடே விநாசமாய் இருக்கும்
இந்திர ப்ரஹ்மாதிகள் நெடு நாள் ஜீவித்து பின்னை முடிவார்கள்
இது ஆய்த்து சம்சார ஸ்வபாவம்
ஆக இங்கே இருந்து
இன்னார் இன்னதனை நாள் ஜீவித்து முடிந்தார்கள்
இன்னவை தோற்றா நசித்தன -என்று
இத்தை மநோ ரதியாதே –
(தேவர்கள் ஆயுஸ்ஸு நீண்டு உள்ளது
நாமும் முயன்று அங்கு போகலாம் என்று எண்ண மாட்டேன் )
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
உன் பக்கலிலே தெளிவை உடையேனாய்
ஸ்நேஹத்தை உடையேனாய்
அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான
மநோ ரதத்தை உடைய அநந்ய கதியான எனக்கு
அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-
திரு விண்ணகரானே –
அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு
தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே –
வெட்டிதான நிலத்திலே
வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே
சம்சாரத்திலே இருந்து
ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே
தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து
அவதானத்தைப் பண்ணி
அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு
புநரா வ்ருத்தி இல்லாத மோஷத்தை
தரப் பார்த்தது என்று
அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ
——————————————————
உகந்து அருளினை நிலங்களில் பேர் ஆசையால்
துறப்பேன் அல்லேன் இன்பம் என்றும்
வான் உலகம் போவது என்றோ என்றும் சொல்ல
இரண்டிலும் ஆசை என்றால் எத்தைச் செய்வோம்
இந்த கலக்கம் கொண்டாடத் தக்கது தானே என்று
அவனும் பெரிய பிராட்டியாரும் ஸ்மிதம் பண்ண
இத்தை அறியாதே
கை விட திரு உள்ளமோ என்று கலங்கி –
அருளிச் செய்கிறார்
உகந்து அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு ஸ்ரீ கீதை அருளினால் போலே இங்கும் ஸ்மிதம்
எனக்கு அவதி சொல்லி அருள வேணும் என்கிறார்
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே-6-3-9-
நல்லிசையாய்-லோகத்தில் நடையாடாத வை லக்ஷண்யம் –
ஸ்ரீ வைகுண்டத்தில் நடையாடாத ஸுவ் லப்யாதிகள்
இதற்கு அன்றோ வைகுந்தது அமரர்கள் இங்கே வந்து அனுபவிக்கிறார்கள்
மல்லார் குடமாடி -பாட பேதம் –
சொல்லாய் –
தேவர் இதுக்கு ஒரு போக்கடி சொல்ல வேணும்
திரு மார்பா –
ஸ்ரீ லஷ்மி பதியாய் இருக்கிற நீ
எனக்கு ஓன்று சொல்லாது ஒழிய ஒண்ணாது
இவன் தான் பண்ணின பாப பலம் தான் அனுபவிக்கிறான் -என்று
நீ ஆறி இருக்கைக்கு நான் ஒரு பிரஹ்மசாரி எம்பெருமானையோ பற்றிற்று-
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-
ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான
வைலஷண்யத்தை உடைய என்னை
எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள்
என்னை நெருக்காத படி
நீ அங்கீ கரித்து அருள வேணும்-
நம்பீ-
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ
தேவரீர் உடைய பூர்த்தி –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ –
மல்லார் குடமாடி –
மிடுக்கால் மிக்கு
மன்றிலே குடக் கூத்தாடி
உன் வடிவு அழகை சர்வ ஸ்தானம் பண்ணிணவனே
ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நின்றால் ஒருவரால் திரிய விடுகை அரியதாய் இருக்கை –
அன்றிக்கே
மல்லா குடமாடி -என்ற பாடமாகில்
செருக்கனே -செருக்குக்கு போக்கு வீட்டுக் குடக் கூத்தாடி கொண்டு இருப்பவனே -என்கிறது –
மதுசூதனே –
அசூர வர்க்கத்தை
பக்க வேரோடு வாங்கினவனே –
(மது கைடபர் சூதனன் -உப லக்ஷணம் )
யுலகில் செல்லா நல்லிசையாய் –
லோகத்தில் பரிமாறாத புகழை உடையவனே –
இசை -யசஸ்
திரு விண்ணகரானே –
பராவஸ்தையில் குணம் பரிச்சின்னம் போலே –
சம்சாரிகளை விட்டு
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவன் ஆகையாலே
அங்கு குணம் பரிச்சின்னம் ஆய்த்து இருப்பது
திரு விண்ணகரிலே வந்து
சம்சாரிகளுக்கு முகம் கொடுத்த பின்பு ஆய்த்து
குணம் அபரிச்சின்னம் ஆய்த்து –
——————————————————–
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
தார் -என்கிறது இதழை
இதழ் மிக்க பூவை உடைத்தான
தாமரைகளை உடைய தடாகங்களாலே சூழப் பட்ட
அன்றிக்கே
தார் -என்று ஒளியாய்
ஒளியை உடைத்தான பூவை -என்னுதல்
ஊரில் பர்யந்தம் அடங்கலும்
தாமரை தடாகங்களாலே அலங்க்ருதமாய் யாய்த்து இருப்பது –
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்-
ஐஸ்வர்ய பிரகாசமாய்
நெடிதான வீதிகளை உடைய
திரு விண்ணகரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற வனைக் கவி பாடிற்று –
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
கார் காலத்திலே கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின மேகம் போலே
கொடுத்து வளர்ந்த கையை உடைய ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த
தமிழ் தொடையை வல்லார் –
அஹம் வக்தா பவான் ஸ்ரோதா வாச்யோ யோகோ விமுக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே
(யோகோ விமுக்தித–மோக்ஷ தர்மம் சொல்லும் )
இது கற்பார்க்கும் இன் நன்மைகள் வேணுமோ என்னில் –
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –
ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்
இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
(ஆசை உடையார்க்கு எல்லாம் )
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்
போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-
—————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply