ஸ்ரீ பெரிய திருமொழி-5-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்ரீ கோயில் அடி அப்பக்குடத்தான் -கோயிலுக்கு கிழக்கே
சயன திருக்கோலம்
அப்பால ரங்கர்
வியாக்ரபாதர் பிள்ளை உபமன்யு துர்வாசர் சாபம்
இங்கு வந்து லக்ஷம் பேருக்கு ததீயாராதானம்
பெருமாளே எழுந்து அருளி தானே அமுது செய்து அப்பம் கேட்டு –
உண்ட மயக்கம் -வலது திருக்கையால் அப்பக்குடம் அணைத்துக் கொண்டே சயனம்
கமல வல்லித் தாயார்
இந்திரா தீர்த்தம்
இந்திரா விமானம்
நம்மாழ்வார் இறுதி பதிகம் இதற்கு
போம் மானை எய்து பொரும் ஆனை கொம்பு ஓசித்து -அம்மானை -திரு மாலை சிந்தித்து
எழுந்து இருப்பார்க்கு உண்டோ இடர் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

பஞ்ச ரெங்க
ஆதி ஸ்ரீ ரெங்க பட்டணம்
மத்திய ரெங்கம்
ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -ஆச்சார்ய ஹ்ருதயம் -186-

பெரு நகர ரவணை மேல் கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-
கமல வல்லித் தாயார்
நான்கு ஆழ்வார் மங்களா சாசனம்
நம்மாழ்வார் திரு மங்கை ஆழ்வார் இருவரும் பதிகம் அருளி உள்ளார்கள்

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் பிரபத்தி பண்ணினார் -கீழ் திருமொழிகளில்
இப் பிரபத்திக்கு பல அவ்வியபச்சாரம் உண்டாய் இருக்கும் இறே –
ஆழ்வாருக்கு கைங்கர்யம் ஒன்றே குறிக்கோள்
அதிகாரி பூர்த்தி இருந்தாலும் -சர்வேஸ்வரனுக்கு ஸ்வாதந்தர்யம் என்று ஓன்று உண்டே
கோவிந்த ஸ்வாமி பகவத் ப்ராவண்யம் இருந்தாலும் ஷூத்ர விஷயங்களை அனுபவித்து பின்னே
நம் இடம் வாரும் என்று அவர் கருத்தை அறிந்து கிருபை செய்தான்

அப்படியே உகந்து அருளின நிலங்களில் இவருக்கு வாசனை
உம்முடைய அபிநிவேச அனுரூபமாக திவ்ய தேசங்கள் எங்கும் புக்கு அனுபவித்து வாரும் என்று விட –
அநந்தரம் திருப்பேர் நகர் புக்கு அனுபவித்து பிரியர் ஆகிறார்
கோவிந்த ஸ்வாமிக்கு ஸூத்ர விஷய ப்ராவண்யம் போல் போரும் ஆய்த்து
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே ப்ராவண்யம்-

அபி நிவேசம் இருக்க மடை மாற்றினால் போதுமே
அவனை நோக்கி ருசியை பெருக்க
கீழ் பாட்டில் ஐந்தாம் ஆறாம் -என்னுடைய கருத்து அறிந்து
உன் பேறாகச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து இருக்க
சர்வ சக்தன் -அங்கனம் செய்யாமல்
ஆர்த்த ப்ர பின்னராக இருந்தாலும்
நம் பேறாக உம் கருத்தின் படி
அடி தொடங்கி உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் கொண்டு
நமக்கு முகம் கொடுத்து
இங்கேயே இருப்பது நமக்கும் பேறு என்று காட்டி அருள
பேறு பெற்றவர்கள் நாம் தானே
இதுவே சங்கதி
தன் பேறாக வைக்கை ஆகிற ஸ்வாதந்திரம் மேலே ஆஸ்ரித நினைவின் படி செய்யும்
ஆஸ்ரித பாரதந்தர்யமும் உண்டே அவனுக்கு
இதுவும் ஹேது

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-

கையிலங்கு ஆழி சங்கன் -திருக் கையில் விளங்கும் திரு ஆழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடையவனாய்
கருமுகில் திரு நிறத்தன்- இருண்ட மேகம் போல் அழகிய வர்ணம் உடையவனாய் –
கரு முகில் போல்வதோர் மேனி கையான ஆழி சங்கன் -திருச் சித்ர கூட பாசுரம் –
பொய்யிலன்-சாஸ்திரம் ப்ரதிபாதிக்கும் ஸ்வ வைலக்ஷண்யம்-அவை சொல்லும் விஷயங்களில் பொய் இல்லாமல் –
சுவர்க்கத்தில் பசு மாடு தலை கீழாக நடக்கும் வேதம் சொல்வது அர்த்த வாதம்
மெய்யன் -அவற்றை மறைக்காமல் ஆஸ்ரிதற்கு கடாக்ஷித்து அருளும்
தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்–தன் திருவடி சேர்வார்களை -ஆஸ்ரியத்தவர்களை -சேஷ பூதராக்கி
கைங்கர்யம் கொடுத்து அருளும்
ஏல் -துர்லபம்
அரக்கர் அசுரர் உள்ளீரேல் -நம்மாழ்வார்
வாழாட் பட்டு உள்ளீரேல் -பெரியாழ்வார் –
செய்யலர் கமலம் ஓங்கு -கழனியில் விகசியா நிற்கும் தாமரை மலர்கள் ஊக்கம்
செறி பொழில் தென் திருப் பேர்-நெருங்கிய சோலைகள் -அழகிய திருப் பேர்
பையரவணையான் -பரந்த படங்கள் உடைய திரு அநந்தாழ்வானை படுக்கையாகக் கொண்டு
நித்ய வாஸம் செய்து அருளுபவனுடைய
நாமம் பரவி நான் உய்ந்தவாறே –திரு நாமங்களைப் பேசி உஜ்ஜீவித்த பிரகாரம் –
வாறே–என்ன ஆச்சர்யம்
பரவுதல் -பேசுதல்

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
சங்கம் -பாட வேதம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக்கையிலே
விளங்கா நின்றுள்ள திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையவன்
அழகான வர்ணம் உடையவனாய்
ஆழி போல் மின்னி-திருப்பாவை – என்கிற படி திரு மேனியில்
கருத்த மேகத்தில் மின்னல் போல் சேர்த்தி அழகு
திவ்யாயுதங்கள் உடன் சேர்ந்த திவ்ய மங்கள விக்ரஹம்
நீல தோய்த மத்யஸ்தா வித்யுத் லேகா பாஸ்வரா

பொய்யிலன் –
இதர வி சஜாதீயமான விக்ரஹங்கல் தொடக்கமான வை லக்ஷண்யம் -அப்ராக்ருதம் –
அர்த்த வாத சங்கை இல்லாமல் –
புகழ்வதற்க்காக சொல்வது இல்லை -ஸ்வ இதர சகல-வைலக்ஷண்யம்

மெய்யன்
இவை அடைய பக்தாநாம் ஜிதந்தே -என்னும் படி ஆஸ்ரித அர்த்தமாக்கி அடிமையாக்கும்
என்னும் இது உண்மையாய் இருக்கும்

தன் தாள் அடைவரேல்
தேஹி மே தாதாமி தே யஜுர் வேதம் கடாக ப்ரஸ்னம் -கொடு -செய்கிறேன்
பிரயோஜனந்தர் போல் -கொண்டு அகல்வார் போல் இல்லாமல்
திருவடிகளுக்கே அசாதாரணமமாக வந்து கிட்டினார்கள் ஆகில்
ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுத்து அகல விடாதே நித்ய கைங்கர்யம் கொடுப்பவன்
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
நம்மாழ்வார் அங்கி பாசுரம் அது அங்க பாசுரம் இது

செய்யலர் கமலம் ஓங்கு
செய்கள் நிலங்கள்- நெல்லை விதைக்க தாமரை ஆயிற்று விளைவது -அலரா நின்று –
அவற்றின் ஓக்கத்தையும்

செறி பொழில்
செறிந்த சோலைகள்

தென் திருப் பேர்-
அழகிய நிரந்தர நித்ய வாஸம் செய்து அருளும்

பையரவணையான்
நிரந்தர பகவத் அனுபவத்தால் உண்டான ஹர்ஷத்தாலே விகசிதமான பணங்களை உடைய
திரு அனந்தாழ்வானை படுக்கையாக உடைய ஸர்வேஸ்வரன்

நாமம் பரவி நான் உய்ந்தவாறே
திரு நாமங்களை சொல்லி உஜ்ஜீவனம் அடைந்தேன்
ஒரு தேச விசேஷத்திலே போனால்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதா அஹம் அந்நாதா அஹம் அந்நாதா
ஸோஸ் நு தே சேரவான் காமான் ஸஹ ப்ராஹ்மணா வி பச்சுதா-களித்து சொல்லும் பாசுரங்களை
இங்கேயே சொல்லி ஒருவன் வாழும் படி கிட்டிற்றே
வாழ்ந்து போகும் படியே என்று வித்தாராகிறார்

அன்னம் -போக்ய வஸ்து
போக்த்ருத்வம் -கூடி பாலே போல் சீர் அனுபவம்
இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள்
தானே அங்கு உள்ளவற்றை இங்கே திருப்பேர் நகரிலே வாழ்ந்து போனமை இவருக்கே ஆச்சர்யம் –

————————————————

தாள் அடையாதார் -பிரளய காலத்தில்
உதவி -திரு வயிற்றில் ரஷித்தது இதில் –

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2-

வங்கமார் கடல்கள் ஏழும் -மரக் கலங்களால் நிறைந்த ஸப்த சமுத்ரங்களும்
மலையும் -ஸப்த குல பர்வதங்களும்
வானகமும் -ஆகாசமும்
மற்றும்-அதுக்கும் மேலே
அங்கண் மா ஞாலம் எல்லாம் -அழகிய இடம் உடைத்தான பரந்த பூமி இவை எல்லாவற்றையும்
அமுது செய்து -பிரளய காலத்தில் விழுங்கி
உமிழ்ந்த -ஸ்ருஷ்ட்டி காலத்தில் வெளிப்படுத்திய
வெந்தை–எங்களது ஸ்வாமியாய்
திங்கள் மா முகிலணவு -சந்த்ர மண்டலம் – பெரிய மேக மண்டலம் -அளாவி இருக்கும்
செறி பொழில் தென் திருப்பேர்-செறிந்த பொழில்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
எங்கள் மால் இறைவன் நாமம் -ஆஸ்ரிதரான எங்கள் விஷயத்தில் வ்யாமோஹம் உடைய சர்வேஸ்வரன் விஷயத்தில்
ஏத்தி நான் உய்ந்தவாறே -ஸ்துதித்து உஜ்ஜீவனம் அடைந்தேன் –
(எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்த தோர் கிடக்கை போல் இங்கும் )

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண் மா ஞாலம் எல்லாம்
மரக் கலங்களை கடல்களுக்கு ஏற்றமாக சொல்வது உண்டே –
மிக்கு இருக்கும் கடல்கள் எழும்
பூமிக்கு ஆணி அடித்தால் போல் குல பர்வதங்கள்
அவற்றுக்கு அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும்
இவற்றை வேலியாக கொண்ட பூமிப் பரப்பு முழுவதையும்

அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
பிரளய காலத்தில் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து
உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று நிதியை விழுங்கி உமிழ்ந்து பார்ப்பாரைப் போலே
உமிழ்ந்து வெளி நாட காண என்னுடைய ஸ்வாமி

திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
சந்த்ர பதம் மேக பதம் அளவும் செல்ல ஓங்கி இருப்பதாய் செறிந்த பொழில்கள் சூழ்ந்த திவ்ய தேசம்

எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே
நம் போல் ஆஸ்ரிதர் பக்கல் வியாமோஹம் கொண்டு -வ்யாமுக்தனாய் –

இறைவன்
வியாமோஹம் இல்லை என்றாலும் விட ஒண்ணாத பிராப்தி உடையவன்
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே –

நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே
திரு நாமங்களைச் சொல்லி உஜ்ஜீவனம் அடைந்தேனே –
அசந்நேவ -தைத்ரியம் என்னும் படி இருந்த அஸத் கல்பனாய் போந்த அடியேன்
உஜ்ஜீவிக்கும் படி -ஆனேனே

கீழ் நான் -தாள் அடைந்தார்
அவ்விபூதியில் உள்ளார் போல்
இங்கு ஞாலம் பாதத்தை கடாக்ஷித்து -லீலா விபூதியில் உள்ளார் உடன் ஒரு கோவையாக
இருப்பதாக அருளிச் செய்கிறார்

————————————————

ஞாலத்துக்கு எல்லாம் உதவினமை கீழே
அதிலும் ஏற்றமாக
ஈஸ்வரோஹம் என்பாருக்கும் உபகரித்தமைக்கு இங்கு
இது அன்றோ அதிக ஆச்சர்யம் –
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -ஆச்சார்ய ஹ்ருதயம் -186-
பஞ்ச ரெங்க
ஆதி ஸ்ரீ ரெங்க பட்டணம்
மத்திய ரெங்கம்
ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கரு வரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-

ஒருவனை -அத்விதீயனான பிரமனை
யுந்திப் பூ மேல் ஓங்குவித் -திரு நாபிக் கமலத்தில் உண்டாக்கியும்
ஆகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி -திரு மார்பில் உள்ள ஸ்வேத பிந்துவினால்
கை ஓட்டில் தெளித்து -சாபம் போக்கி
உம்பராள் என்று விட்டான்-தேவர்களை ஆளக் கடவாய் என்று விட்டு அருளி
பெரு வரை மதிள்கள் -மலை போன்ற மதிள்கள்
கரு வரை வண்ணன் -நீல மலை பர்வதம் போன்ற வண்ணன்
தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே-புக்கு சென்று போய் அனுபவிக்க ஆசைப் பட்ட அளவிலேயே
உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்ன ஆச்சர்யம்

ஒருவனை
தன்னை எண்ணினால் பிறகு ஒருவரை எண்ண ஒண்ணாதபடி -சதுர் தச புவனங்களுக்கும்
நிர்வாஹனாய் இருக்கும் பிரம்மாவை

உந்திப் பூ மேல் ஓங்குவித்து
திரு நாபிக் கமலத்தில் உண்டாக்கி

ஆகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
திரு மார்பில் ஸ்வேத ஜலத்தால் ருத்ரனுக்கு சாபம் போக்கி அருளி
தேவ ஜாதிக்கு நியாந்தாவான மேன்மையில் ஒன்றும் குறை இல்லாமல் நடத்துவீர் என்று -விட்டான் ஆயிற்று
உபரிதன லோகங்களை ஆள விட்டு அருளி

பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகரில் –
பெரு வரை என்னலாம் படி மதிள்களால் சூழப்பட்டு கலங்கா பெரு நகர் உடன்
ஒக்கச் சொல்லலாம் படி உள்ள திருப்பேர் என்னும் பெரு நகரில்

அரவணை மேல் கருவரை வண்ணன்
திரு அனந்தாழ்வான் மேல் அஞ்சன மலை போல் சாய்ந்து அருளி

தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே
அழகிய

தன் பேர் -பாட பேதம்

தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே
புக்கு அனுபவிக்க மநோ ரதித்த அடியேன் உஜ்ஜீவித்த படியே
வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமம் சொல்லி உஜ்ஜீவிக்கப் பெறுவதே
எப்படிப்பட்ட வாழ்வு என்று வித்தர் ஆகிறார் –

—————————————————–

ஆகம் தன்னால் ஒருவனை சாபம் தீர்த்தத்தை விவரித்து அருளுகிறார்

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-

ஊனமர் தலை யொன்று -மாம்சம் நிறைந்த கபாலம் -அத்விதீய கபாலம் –
ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்-கையில் தரித்துக் கொண்டு ஸமஸ்த லோகங்களிலும்
பிஷார்த்தமாக சஞ்சரியா நின்ற
ஈனமர் சாபம் நீக்காய் என்ன -தண்மை உடைய சாபம் போக்க வேண்ட பிரார்த்திக்க
ஒண் புனலை யீந்தான்-திரு மார்பில் அழகிய – சாபத்தைப் போக்க வல்ல – ஸ்வேத ஜலத்தைக்
கபாலத்தில் தெளித்து அருளி
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்-வண்டுகள் நிறைந்த சோலைகள் -நெருங்கிய கழனிகள் சூழ்ந்த
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவன் –
திரு நாமம் சொல்லி ஸ்துதித்து நான் உஜ்ஜீவித்தேன் –

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
மாம்ச பிரசுரமாய் இருக்கும் தலை ஓட்டைத் தரித்து
கூறு செய்த ஊரில் கையும் கைத் தலையுமாக திரிவாரைப் போலே –
மதிப்போடே திரிந்த பூமி எல்லாம் தட்டித் திரிய

ஈனமர் சாபம் நீக்காய் என
அவத்யாவஹமாய் -தண்மையை விளைக்கக் கடவதாய் இருக்கும் சாபத்தை போக்க
திருவடிகளில் சரணம் புக

ஒண் புனலை யீந்தான்
திரு மார்பில் ஸ்வேத ஜலம் தெளித்து அருளி
கீழே சாபம் போக்கி அருளியதை விளக்கி இங்கு அருளிச் செய்கிறார்

தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
தேன் -வண்டுகள் மிக்கு இருக்கும் பொழில்களால் சூழப்பட்டு -செறிந்த வயல்களாலும் சூழப்பட்டு-
உள்ள அழகிய திவ்ய தேசம்

வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே
பாலைக் குடித்து நோயைப் போக்குவரைப் போல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி திரு நாமத்தை சொல்லி ஒருவன் வாழ்ந்து போவதே
விநாசத்தை சலிப்பிக்கிலும் -கொடுத்தாலும் – விட ஒண்ணாத இனிமை அன்றோ இவை

—————————————————-

சக்கரைச் செல்வன் -அப்பக்குடத்தான்
புக்க வரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை-திருவாய் -7-6-11-

கீழே பிரதான இருவருக்கும்
இதில் தேவர்களுக்கும்
சிறுக்கனுக்கும் உதவினமை

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே —5-9-5-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று -தண்டவக்கரன்-வாயை முன் காலத்தில் கிழித்துப் புகட்ட
ஆச்சர்ய பூதனே என்று
வானோர்-புக்கு அரண் தந்து அருளாய் என்ன–தேவதைகள் திரண்டு வந்து -ரக்ஷிக்க பிரார்த்திக்க –
ஹிரண்ய கசிபு இடம் இருந்து ரக்ஷித்து அருள
பொன்னாகத் தானை-ஹிரண்யனை
நக்கரி யுருவமாகி -நரசிம்ஹ உருவம் கொண்டு நன்றாக சிரித்து விருத்தி அடைந்து -நகு நகுதல்
நகம் கிளர்ந்து இடந்து உகந்த-நகங்களால் கிழித்துப் பொகட்டு ஆஸ்ரித ப்ரஹ்லாத சிறுவனை ரஷித்தோம் என்று உகந்து
சக்கரச் செல்வன் -ஸ்ரீ ஸூதர்சனம் தரித்த ஸ்ரீ மான் -செல்வம் -அலங்காரமாகவே இருப்பதால்
தென் பேர்த் தலைவன் -அழகிய திவ்ய தேசத்தில் எழுந்து அருளி உள்ள நம் ஸ்வாமி-
ஸ்வாமித்வம் தானே இங்கே காட்டி அருளிய கல்யாண குணம்
தாள் அடைந்து உய்ந்தேனே-திருவடிகளில் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போனேனே –

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
தேவர்களை எல்லாரையும் நெருக்கி நலிந்து திரிந்தான் ஆயிற்று இந்த தந்தவக்கரை அசுரன்
அவன் வாயை அநாயாசேந கிழித்துப் பொகட்டி அருளிய சக்தி உக்தனே
வேறே ஒரு அசுரன் -கிருஷ்ணாவதாரத்தில் உள்ளவன் என்றுமாம்

புக்கு அரண் தந்து அருளாய் என்னப் –
தேவர்கள் எல்லாரும் திரண்டு

பொன்னாகத் தானை-
ஹிரண்யனை

நக்கரி யுருவமாகி –
நரசிம்ம வேஷம் கொண்டு சிரித்து

நகம் கிளர்ந்து இடந்து உகந்த-
பெரிய கிளர்த்தி உடன் திரு உகிராலே பிரஹலாதன் விரோதி போகப் பெற்றோமே என்று உகந்து

சக்கரச் செல்வன் –
ஹிரண்யன் உடல் திரு உகிருக்கு போந்தது இல்லை –
திரு ஆழி அழகுக்கு பத்திரம் கட்டுவரைப் போல் –ஆபரணமாகவே ஆயிற்று இங்கு

தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
தென் திருப்பேர் திவ்ய தேசத்தில் நித்யவாஸம் பண்ணி அருளும் சர்வாதிகனான ஸர்வேஸ்வரனைக்
கிட்டி உஜ்ஜீவனம் அடைந்தேன் –

——————————————————-
சீதாப்பிராட்டிக்கு உதவியது
கீழே சிறுவனுக்கு
ஒரு பெண் பிள்ளைக்காக அகடி தங்களைச் செய்தவன்

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-

இறைவன்-அபிமானித்து இருக்கிற ராவணன் நினைவின் படி
நலங்கொள்-ஸதாசாரம் உள்ள பிராமணர் -வேதங்களுக்கும் விசேஷணம்
மலங்கு -மத்ஸ்யங்கள்

விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே
கடலை அடைத்து
விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று
ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே   –

இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று
அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற
தோள்களைத் துணித்தான் ஆய்த்து –

நலங் கொள் நான்மறை வல்லார்கள் –
நிர்த் தோஷமாய்
நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களையும் அதிகரித்து இருக்கிற
பிராமணர் -என்னுதல்

ஆசாரத்தால் மிக்கு
நாலு வகைப் பட்டு இருக்கிற வேதங்களும்
கை வந்து இருக்கிற பிராமணர் -என்னுதல் –

ஓத்தொலி யேத்தக் கேட்டு –
அவர்கள் உச்சமாக உச்சரிக்கிற த்வநியைக் கேட்டு

மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே –
நம்மைக் குறித்து உண்டான ஆரவாரம் என்று
மலங்குகள் பாயா நின்றுள்ள
வயலை உடைத்தான திருப் பேரை
மருவி நான் வாழ்ந்தவாறே –

——————————————————-

நாரீணாம் உத்தமைக்கு அகடி தங்களை செய்தமை கீழே
இடைப்பெண்களுக்கு கட்டவும் அடிக்கவும் ஆனபடி இதில்

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே —5-9-7-

வெட்டென்று-சம்மதித்து –

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்-
கவ்யம் பாழ் போக ஒண்ணாது
இத்தை உபஜீவிக்கைக்கு ஒரு பிள்ளை வேணும்
என்று ஆய்த்து இவள் நோன்பு நோற்று பிள்ளை பெற்றது –
ஆனாலும் அது சாத்மியாதபடி
அமுது செய்யப் புக்கால் சம்வதியார்களே –
அவர்கள் மறைக்க மறைக்க
இவனுக்கு அதிலே ஆதரம் மிகுமே –
தன் தாரகம் இழக்க மாட்டானே –
அவர்கள் உடம்பு நோவக் கடைந்து
உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்ய –

வெகுண்டு -சீறி
யசோதை பிராட்டியானவள் மத்தைக் கொண்டு அடிக்கக் கோலி-

கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட –
பல பிணைகளை உடைத்தாய்
குறளாய் இருந்துள்ள தாம்பாலே கட்ட –
தாம்பை நெடுகப் பண்ண ஒண்ணாதே
திருமேனியிலே இடம் காணும் இத்தனை இறே –
அப்படிக் கட்ட –

வெட்டென்று இருந்தான் —
சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
(சோழியன்-சாமான்யன் -திருமாலிருஞ்சோலை தீர்த்தம் வாங்கும் பொழுது அடித்த ஐதிகம் )
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே
இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –

திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் –
அரணாகப் போரும்படியான மதிள்களாலே
சூழ்ந்த தென் திருப் பேருள்  –

வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவரானவர்  உடைய
அவ்வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லி
ஒருவன் உஜ்ஜீவிக்கும் படியே –

————————————————————

இடைப்பெண்களுக்கு உபகாரம் கீழ்
நப்பின்னை பிராட்டியை லபிக்கச் செய்தமை இதில்

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே
ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
திரு வாய்ப்பாடியிலே
வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக
ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்  –
(கோவை வாயாள் பொருட்டு ஏறு ஏழும் இறுத்தாய் )
தர்ச நீயமான மதிள்களாலே சூழப் பட்ட
திருப் பேரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
எனக்கு உபகாரகர் ஆனவர் உடைய
திரு நாமத்தை ஏத்தி நான் உய்ந்தவாறே –

———————————————————

அப்பால ரங்கர்
வியாக்ரபாதர் பிள்ளை உபமன்யு துர்வாசர் சாபம்
இங்கு வந்து லக்ஷம் பேருக்கு ததீயாராதானம்
பெருமாளே எழுந்து அருளி தானே அமுது செய்து அப்பம் கேட்டு –
உண்ட மயக்கம் -வலது திருக்கையால் அப்பக்குடம் அணைத்துக் கொண்டே சயனம்
கமல வல்லித் தாயார்
இந்திரா தீர்த்தம்
இந்திரா விமானம்
நம்மாழ்வார் இறுதி பதிகம் இதற்கு
போம் மானை எய்து பொரும் ஆனை கொம்பு ஓசித்து -அம்மானை -திரு மாலை சிந்தித்து
எழுந்து இருப்பார்க்கு உண்டோ இடர் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

சகல வித்யா உபாஸகர்க்கு விஷயம்
நம் சிந்தையில் தானே வந்து இருந்த ஆச்சர்யம் இதில்

நால்  வகை வேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை யாளி யென் சிந்தையானே—5-9-9-

நெஞ்சு நிறைய புகுந்தான் -நம்மாழ்வார்

நாலு வகைப் பட்ட வேதம்
பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள்   ஆறும்
இவற்றில் வந்தால்
ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள்
சிருஷ்டி காலம் தொடங்கி
சர்வேஸ்வரன் உடன்  ஒக்கக் குடி ஏறி
ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய்
மிக்க தபஸ்சை உடையராய்
இருக்கிற பிராமணர்  ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன்
என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான்   –

————————————————–

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே
வரிகளை உடையனான திரு வநந்த ஆழ்வானைப்
படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற
சர்வேஸ்வரனை கவி பாடிற்று –

கொடியோடு கூடின மதிள்களையும்
மாடங்களையும் உடைத்தான
திரு மங்கைக்கு நிர்வாஹகராய்
திண்ணிய திறலை உடைத்தான
தோளை உடையரான ஆழ்வார்

அதி கிருதாதிகாரமான வேதார்த்தத்தை
சர்வ அதிகாரமான சொல்லாலே
அருளிச் செய்தார் ஆய்த்து –

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக
இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப்
பெறுவார்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading