த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன் –
கீழே இரண்டு திரு மொழிகளிலும் பெரிய பெருமாளால் ஸமாஹிதராய் -ஹ்ருஷ்டராய்
அடியேனுக்கு அணியனாய் -துக்கம் போக்கவே -வந்து -என் சிந்தையுள் -வெந்துயர் அறுக்கும் மாயன்
அனுசந்தித்து இருக்கச் செய்தேயும்
அனந்த கிலேச பாஜனம் சம்சாரத்தில் -இன்னும் இருக்கக் கண்டார்
1-விரோதி தேக சம்பந்தம் போகாமல் ஆர்த்தி மிகுந்து
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் புகுகிறார்
2-ஆர்த்தி மிக இவருக்கு வந்த ஞானம் பிறந்ததும் மூலம் எது என்பதை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
3-பரத்வாதிகள் இருக்க அர்ச்சாவதாரத்தில் சரணாகதி –
4-கீழேயும் மேலும் பல இடங்களில் சரணாகதி செய்வதில் இதில் வாசி
5-பிரயோஜனாந்தர பரர்களைப் போல் த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்வதற்கும் ஹேதுக்களை அருளிச் செய்கிறார்
சங்கா பஞ்சகங்கள் பரிகாரம் –
ஏழை ஏதலன் -பிரவேசம் –
இவ்வாழ்வார் ஆகிறார்
1-சாஸ்திர வாசனை யாலே யாதல்
2-தபஸாலே யாதல்
அன்றிக்கே
3-பகவத் பிரசாதத்தாலே
தத்வ த்ரயத்தையும் யதா தர்சனம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆய்த்து –
பர ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகையாவது ஏது என்றால் –
ஸ்ரீயபதியாய் –
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
(உபய லிங்கத்வம் இவை இரண்டும் )
அந்த குணங்களுக்கும் பிரகாசகமாய் –
சௌந்தர்ய சௌகுமார்யாத்யாகரமாய் இருந்துள்ள -திவ்ய விக்ரஹத்தை உடையனாய் –
உபய விபூதி நாதனாய் –
நிரதிசய போக்யனாய் –
இருக்கும் என்று அறிகை –
(இந்த மூன்றை விட ஆச்சார்ய உபதேச ஜன்ய ஞானம் நமக்கு -அதுக்காகவே –
ராமானுஜர் தந்த அருள் -அற்புதன் செம்மை -அப்பொழுது ஒரு சிந்தை செய்து -)
ஸ்வ ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது –
அனந்யார்ஹமாய்-
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இன்றிக்கே
பர தந்த்ரமாய் இருக்கும் என்று அறிகை –
அசித் ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை
யதா தர்சனம் பண்ண ஒண்ணாத படி
இடைச் சுவராய்க் கொண்டு விரோதித்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று அறிகை –
இவ் விரோதியைக் கழித்து
இச் சேதனன் விலஷண வஸ்துவை லபிக்கும் போது
அதுக்கு அநு ரூபமாய் இருப்பதொரு
உபாய பரிக்ரஹம் பண்ணிக் கொள்ள வேணும் இறே
இம் மூன்றின் உடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
அவனையே பற்ற வேணும்
1-விரோதி பிரபலம் ஆகையாலே அவனைக் கொண்டே கழித்துக் கொள்ள வேணும் –
2-ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத படி
பர தந்த்ரம் ஆகையாலே அவனையே பற்ற வேணும்
3-அவ் வஸ்து தான் அநந்ய சாத்யம் ஆகையாலும் அவ் வஸ்துவையே பற்ற வேணும் –
இப்படி அவனே உபாயமாகப் பரிக்ரஹிக்கும் இடத்தில்
பரத்வம் -தேச விப்ரக்ருஷ்டமாய் கழிந்தது
வியூஹம் -தத் ப்ராப்யமாய் சம்சாரிகள் உடைய சிறுமையாலும்
பகவத் வைபவத்தாலும் கழிந்தது
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆதல்
சனகாதிகளுக்கு காதாசித்கமாக ஆஸ்ரயணீயம் ஆதல் அத்தனை இறே
விபவமும் -கால விப்ரகர்ஷத்தாலே மண்டல வர்ஷம் போலேயாய்க் கழிந்தது
அக்குறைகள் தீர
ஸ்வ சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளும்
ஆஸ்ரித அதீனமாம்படி பண்ணிக் கொடு நிற்கிற நிலை இறே
அர்ச்சாவதாரம்
அதாவது
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய விசேஷத்தையே திரு மேனியாய்க் கொண்டு நிற்கையும்
தன் கிருஹத்தில் ஒரு பிரதேசத்தில் திருப் பள்ளி யறை யாக்கி
இங்கே எழுந்து அருளி இருக்க வேணும்
அமுது செய்து அருள வேணும் -என்றால்
அப்போதே அமுது செய்து அருளுகையும்
அவற்றை இவன் அநாதாரிக்கும் போது தானும் அநாதாரிக்கையும்
அவதாரங்களில் போலே அஜஹத் ஸ்வ பாவனாய்
( ஜஹத்-விட்டு /அஜஹத்-ஒன்றும் விடாமல் )
ஆஸ்ரிதர்க்கு அபிமத பல பிரதானம் பண்ணுகைக்கும்
ஆஸ்ரயணீயன் ஆகைக்கும் உண்டான ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் உடன்
ஆஸ்ரித பராதீனன் ஆகையுமாய் இறே இருப்பது –
ஆகையாலே அர்ச்சாவதாரத்தை யாய்த்து
இவர் ஆஸ்ரயணீய ஸ்தலமாக நினைத்து இருப்பது –
முதல் தன்னிலே
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி -என்றும் இறே இவர் இழிந்தது –
ஆகையாலே
தம்முடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு
சரண்யரான பெரிய பெருமாள்
திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
இவர் தாயே தந்தையே தொடங்கி
பல இடங்களிலும் சரணம் புக்குப் போந்தார்
பகவல் லாபத்துக்கு சக்ருத் க்ருதம் அமைந்து இருக்கச் செய்தே
பல காலும் சரணம் புகுகிறது
த்வரா திசயத்தாலே இறே
இப் பிரபந்தத்துக்கு ஏற்றம்
நீர்மையை உடைய பெரிய பெருமாள் சரண்யர் ஆகையும் –
ஆழ்வார் அனுஷ்டாதாவாகையும்-
சர்வாதிகாரமான திராவிட பாஷையாலே அருளிச் செய்கையும்-
திருப்த பிரபன்னரான நமக்கு இவ்வார்த்தி இல்லை யாகிலும்
இவர் பாசுரத்தைச் சொல்லவே
இவர் அளவிலே இவருக்கு இரங்கினால் போலே
பெரிய பெருமாள் இரங்குவர் -என்கிறதும் –
பிரயோஜனாந்தரத்துக்காகவும்
துக்க நிவ்ருத்திகாகவும்
சரணம் புகுகிறவர்கள் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
அதுக்கடி என் என்னில்
அவ்வோ பிரயோஜனங்களில் அவர்களுக்கு உள்ள ஆதரம்
இவ் விஷயத்தே தமக்கு உண்டாகையாலும்
அவர்களுக்கு அகப்பட இரங்குமவர் தமக்கு இரங்காமை இல்லை
என்று நினைத்து இருக்கையாலும் –
திரு மாலையில் -பிராப்ய பிராபகங்கள் சொல்லிற்று-
அமலனாதி பிரானில் -பிராப்யம் சொல்லிற்று-
இத் திரு மொழியில் பிராபகம் சொல்லுகிறது –
———————————————————————-
பரிஷ்வங்கம் -வேண்டியே சரணாகதி –
ஸ்ரீ ராமாயணம் படி குக ஸஹ்யம் ஆன பின்பே திருவடிக்கு ஆலிங்கனம் –
திருவடியை விஷயீ கரிக்கும் முன்பு குகப் பெருமாள் விஷயீ கரித்தது முன்பே அன்றோ –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து
ஏழை –
அஞ்ஞன்
ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம் பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
(மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
இத்தால் ஜ்ஞான கொத்தையைச் சொல்லிற்று –
(விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)
ஏதலன் –
சத்ரு
தாயைச் சோறு வேண்டும் போது
வாளை விதிர்த்த வேண்டும்படியான சாத்ரவத்தை சொல்லுகிறது –
ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
(யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு எதிர் தட்டாம்படி
மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
(ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )
கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –
இம் மூன்றாலுமாக
பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
உபாசகரான ருஷிகளுக்கும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
சாதன சித்த்யர்த்தமாகவும்
போக சித்யர்த்தமாகவும்
இரங்கும் இரக்கத்தை இறே
இவர் அளவில் இரங்கிற்று –
(சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
இவர் இரக்கமே உபாயம் )
அதவா
என்னாது இரங்கி –
இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
அமர்யாதா-
(நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
ராவணே நாம -இத்யாதிகளில்
சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு
கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –
ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
இவர் சொல்லுவான் என் என்னில்
அவருடைய கருத்தாலே-
மற்று அவர்க்கு –
அவனுக்கு அதுக்கு மேலே –
இன்னருள் சுரந்து –
இவ் விஷயீ காரத்துக்கு மேலே
இனிய அருளைச் சுரந்து
இன்னருள் –
தன் பேறான அருள்
சுரந்து –
வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –
இத்தை உபபாதிக்கிறது மேல் –
மாழை மான் மட நோக்கி-
நிகர்ஷம் சொன்னால்
பிரதமத்தில் முன்னிடக் கடவ
அர்த்தத்தைச் சொல்லுகிறது –
முக்த்தமான மானின் உடைய மிருதுவான நோக்குப் போலே
உள்ள நோக்கை உடையவள் –
இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
(உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –
என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
இவள் வழியே போவான் ஒருவன் இறே –
யுன் தோழி –
உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
தோழி என்கிறார் -நீர்மையாலே
சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
மித்ர பாவேன-
(சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
மித்ர மௌபயிகம்-
தேன மைத்ரீ பவதுதே –
(காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )
இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
(உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
குண சாம்யத்தையும்
போக சாம்யத்தையும்
தேக சாம்யத்தையும்
போக்ய சாம்யத்தையும்
கொடுத்து இறே வைப்பது –
உம்பி யெம்பி –
உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
இங்கனே சொல்லுவான் என் என்னில்
பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
அவரோபாதியாக நினைத்து இருக்கும்
இளைய பெருமாள் கருத்தாலே
பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
சொல்லுகிறபடியே
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
என்னா நின்றது இறே
அவர்களிலே பிறி கதிர் பட்டு போந்தவர் இறே இளைய பெருமாள்
இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
சொல்லக் கடவது இறே –
(பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )
என்று ஒழிந்திலை-
அவ்வளவிலே விட்டிலை
பிராட்டியை தோழி என்றும்
இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –
உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
(உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )
தோழன் நீ எனக்கு –
ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
புருஷகாரத்தை முன்னிட்டு
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம்
உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
அத்தைச் சொல்லுகிறது –
(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )
இங்கு ஒழி –
பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
வழி யடி கெடாத படி இங்கே இரும்-
ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
(சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )
என்ற சொற்கள் –
அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது
வந்து –
ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
கர்ண பரம்பரையாக வந்து
இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
இப் பாசுரம் தன்னை
குஹே ந சஹிதோ ராமோ லஷ்மணனேன ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
( வேதம் தமிழ் செய்த பரகாலன் )
அடியேன் மனத்து இருந்திட-
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா போலே
இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –
(சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )
ஆழி வண்ண –
ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான குணங்களால் நிரம்பின கடல் –
அபார காருண்யா -இத்யாதி
யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
ததா குணாஹ்ய நந்தச்ய
அஸங்யேய மகாத்மான
உத்பத்தியும் அங்கேயுமாய்
வாசமும் அங்கேயுமாய்
புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி
அதவா
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
வடிவைக் கண்ட போதே
சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –
நின்னடி இணை –
அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
(பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)
அடைந்தேன்
பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு
அணி பொழில் திருவரங்கத் தம்மானே
ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது
அணி -என்று
பொழிலுக்கு விசேஷணமுமாய்
கோயிலுக்கும் விசேஷணுமுமாய் இருக்கிறது
அதாகிறது
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று
அம்மானே -உடையவன் ஆகையாலே
உடைமை தேட்டமாய் அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
——————————————
(பரிஷ்வ்ங்கம் -ஆலிங்கனம் யாம் பெரும் பரிசு
கீழ் பகவத் விஷயீ காரம்
ஆனபின்பு நிரதிசய கைங்கர்யம் பிரார்த்திக்கக் கூடுமோ
இவர் இடம் கைம்முதல் வேண்டும் அன்றோ
நேராக பிரார்த்திக்கிறார்
திருவடியும் கைம்முதலாக கூடப் பிரார்த்திக்க வில்லையே என்பதற்கு வியாக்யானம் )
ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள்
பக்கல் பண்ணின
விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில்
மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று
இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட
தத் கத நிகர்ஷம் பாராதே
விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே
அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே
என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் –
இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம்
கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி
சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும்
இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே –
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-
அர்த்த க்ரமம் படி சப்த க்ரமம் மாற்றி -மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-
காதலாதரம்-பற்று -அப்புறம் பெரு விருப்பு –
உடனே-கூடி இருந்து தழுவிக் கொண்டே
உண்பன் -அனுபவிப்பேன் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் விழுங்கினான் -அனுபவம் தானே
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி –
மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-
மற்றோர் சாதி-
விஷயீ காரத்துக்கு நிகர்ஷத்தை முன்னிடுகிறவோ பாதி
கைங்கர்யத்துக்கும் நிகர்ஷத்தை முன்னிட வேணும் இறே –
விசஜாதியர் நிகர்ஷம் சொல்லும் போதும் -மற்றோர் சாதி -என்ன அமையும் இறே
(குகப் பெருமாளுக்கு -நிகர்ஷம் த்ருஷ்டாந்தம் -தம்மை விஷயீ கரிக்க
கைங்கர்யம் பிரார்த்திக்க நிகர்ஷம் முன்னிட்டு
ஏழை ஏதலன் கீழ் மகன் உத்தர உத்தர நிகர்ஷ ஆதிக்யம் வேண்டுமோ என்னில்
அதே போல் இங்கும்
வாத மா மகன் அகங்கார ஹேது எனவே இறுதியில் )
விலங்கு-
அது தன்னிலே வருகிற நிகர்ஷம் சொல்லுகைக்காக -விலங்கு -என்கிறது -திர்யக்கு
ஜ்ஞானத்திலே விலங்குதலை இட்டுச் சொல்லுகிறது –
யஸ்து திர்யக் ப்ரவ்ருத்தி ஸ் ஸ்யாத் திர்யக்கோ நிஸ்ஸ உச்யதே –
என்னக் கடவது இறே -(இரு கால் மாடு – பசு ப்ராப்யர் )
ஜ்ஞானத்துக்கு விலங்குதல் வருவது
ஆஹார நியதி இல்லாமையாலும்
ஜன்ய ஜனக பாவத்தில் முறையிலே பரிமாறாமை யாலும் இறே
மற்கடம் –
அதிலும் தண்ணியது ஓன்று சொல்லுகிறது
தானே இரங்கிக் கொடுக்கும் அத்தையும்
ஸ்வ சமார்த்யத்தாலே அபஹரித்துக் கொண்டதாய் இறே இருப்பது
வானரேன மயா சஹ -என்னுமா போலே
வாத மா மகன் –
வாயுவினுடைய ஸ்லாக்கிய புத்திரன்
நிகர்ஷம் சொல்லுகிற பிரகரணத்தில்
உத்க்ருஷ்ட ஜன்மத்தைச் சொல்லுகிறது எதுக்கு உறுப்பாக என்னில்
ஜாதியைப் பற்ற அன்றிக்கே ஸ்வ பாவத்தைப் பற்ற இறே
கீழ் உக்த நிகர்ஷம் போல் அன்றே -வாயு புத்திரன்-என்கிற
அஹங்காரத்தால் வந்த நிகர்ஷம்
அர்த்த காமங்களுக்கு அடி – அஹங்காரம் இறே
ஸ்வரூப நாசத்தைப் பலிப்பிக்கும் இறே
(நீர் நுமது என்னும் இவை வேர் முதல் மாய்த்து அன்றோ பற்ற வேண்டும் )
இந்த அஹங்காரத்துக்கு அடி -அந்த உத்க்ருஷ்ட ஜன்மம் –
புண்ய பாப விதூய -என்னுமா போலே
த்யாஜ்யத்தில் முற்பட வேண்டுவது இது இறே
ஆகை இறே தர்மான் பரித்யஜ்ய -என்கிறது –
(பொன் விலங்கு -புண்யம் முதலில் சொன்னதே -அதனால் வரும் அஹங்காரம் ஹேது என்பதால்
பிதரம் மாதரம் இத்யாதிகளில் சர்வ தர்மான் ஸந்த்யஜ்ய -இதிலே பாபங்களையே சொல்ல வில்லையே )
என்று ஒழிந்திலை –
இவை ஓர் ஒன்றே போரும் இறே கை விடுகைக்கு
இவை பார்த்து கை விட்டில்லை
இரக்கம் உடையவனுக்கு இவை பார்த்து
கை விட ஒண்ணாது இறே –
கை விடாத அளவே அன்று –
உகந்து-
அதாவது சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும்
அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கையும்
பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும்
உகப்பை உபபாதிக்கிறது மேல் –
காதலாதரம் –
இது புனர் உக்தம் அன்றோ என்னில் –
அவ்யாப்தி அதிவ்யாப்தி ரஹீதமான லஷண வாக்யத்தில்
புனருக்தி தோஷமாவது
ஆற்றாமையும் ஆதரமும் சொல்லுவிக்கச் சொல்லுகிறது ஆகையாலே தட்டில்லை –
கிஞ்ச அபிசந்தி பேதத்தாலே புனர் உக்தமும் அன்று –
செந் தாமரைத் தடங்கண்; செங் கனி வாய் செங் கமலம்;
செந் தாமரை அடிகள்; செம் பொன் திரு உடம்பே–ஸ்ரீ திருவாய் மொழி–2-5-1-
செந்தாமரை தடங்கண்-என்கிறது தன்னையே பல காலும் சொல்லுகிறதுக்கு
தாத்பர்யம் இது இறே
காதலின் உடைய கார்யம் இறே ஆதரம் ஆகிறது
சங்காத் சஞ்ஜாயதே காம -என்கிறபடியே
கர்ம நிபந்தனமாக சிலவர்க்கு வருமத்தை இறே
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சொல்லுகிறது
பிராட்டிக்கு பெருமாளைக் கண்ட போதே
வில்லை முறித்துக் கைப் பிடிக்க வல்லவரே -என்று சங்கம் பிறந்தது
பின்பு அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத தசை -காமம்
அவருக்கு பித்ரு க்ருத தாரம் -என்று பிறந்தது சங்கம்
குணேண ரூபேண விலாஸ சேஷ்டிதை-என்கிறபடியே
குண ரூப சேஷ்டிதங்களை பற்றப் பிறந்தது காமம் –
கடலினும் பெருக
கடல் குளப்படியுமாம் படி பெருகுகிற சமயத்திலே
இரண்டு ஆஸ்ரயமும் கடல் போலே காணும்
பெருகுகை யாவது –
மர்யாதா பங்கம் பிறக்கை இறே
அதாவது தத் தஸ்ய -என்கிற நிலை குலைந்து
வேண் யுத் க்ரத நத்திலே ஒருப்படுகையும் –
அவாக்ய அநாதர-என்னும் நிலை கழிந்து
அவகாஹ்ய அர்ணவம் ஸ்வப்ஸ்யே-என்னும்படி யாகையும்-
செய் தகவினுக்கு –
தகவாகிறது -தர்மம் -அதாகிறது
ஒரு பிரயோஜனத்தை கணிசியாது செய்யுமது இறே
தர்மத பரி ரஷிதா -என்கிறபடியே
பிரயோஜன நிரபேஷமாக எங்களை எல்லாரையும் ரஷித்தவன் அல்லையோ –
இல்லை கைம்மாறு என்று –
சேஷ பூதன் சேஷியைப் பார்த்து சொல்லுகிற பாசுரத்தை
சேஷி சொல்லுகிறான் நீர்மையினாலே
(செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -நம்மாழ்வார்
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -மதுரகவி ஆழ்வார் )
என் கையிலே திரு வாழி மோதிரத்தை தந்து
எல்லாரும் தேடிக் கொடு திரியா நிற்க
யதா ரூபம் யதா வர்ணம் சேய மாசாதி தாமயா-என்று நான் இப் பேறு பெறும்படி பண்ணுவதே
என்று நான் சொல்லக் கடவ பாசுரத்தை இவர் சொல்லுவதே
என்று இறே இவருடைய அபிப்ராயம் –
(ராகவஸ்ய வாக்கால் கேட்டபடி கண்டேன் -சேவித்தது எனக்கு அன்றோ பாக்யம் -திருவடி )
கோதில் வாய்மையினொடும்
வாய்மை -வாக் இந்த்ரிய வியாபாரம் அதாகிறது வசனம்
அதுக்கு கோது இல்லாமை யாவது
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்று
பிராட்டி உடைய திரு உள்ளத்தை மெய் என்று பட்டு
அவள் தரிக்கும்படி சொல்லுகையும்
த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும்படி சொல்லுகையும் –
( கண்டேன் சீதையை -கம்பரும்-தரிக்க சொன்னவாறு )
உடனே உண்பன் நான் என்று –
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )
ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்
எனக்கும் ஆதல் வேண்டும் என்று –
இப் பெரிய பேற்றை ஆசைப் படுவது யாகை என் -என்று
கை வாங்கார்கள் இறே
க்ருபணராய் ( கை முதல் இல்லாதவர் ) இருப்பார் –
அடி இணை அடைந்தேன் –
சரணாகதிக்கு பலி யாதாது ஒன்றும் இல்லை -என்று இருக்கிறார் –
அத் தலையாலே வரும் அன்று எல்லாம் கை புகுரும் இறே
அடி இணை அடைந்தேன் –
உன்னுடைமை கண்டேன் என்று வந்தவனில் வ்யாவ்ருத்தி –
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –
ஆபி முக்கியம் பிறந்தால்
கைங்கர்யத்தில் அன்வயிப்பைக்காக அன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
——————————————————-
(விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் சொல்ல வேண்டாவோ என்னில்
இங்கு அருளிச் செய்கிறார் )
விஷயீகாரத்தையும்
விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்
சொல்லிற்று கீழ்
கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே
என்னுடைய விரோதியைப் போக்கி
என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் –
விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே
சொன்னார் கீழ்
விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே
விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே
அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை
அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது
அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது
அவை ஆகிறன
இந்த்ரிய வஸ்யதையும்
யம வஸ்யதையும் இறே
மேலில் பாட்டில் யம வஸ்யததை
இங்கு இந்த்ரிய வஸ்யதை சொல்லுகிறது
எங்கனே என்னில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே
எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார்
இவ் வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது
விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய்
கைங்கர்ய ஸ்பர்சியான அஹங்காரம் மமகாரம்
முடிவாய் இறே இருப்பது –
(மற்றை நம் காமங்கள் மாற்று -களை அறுப்பது கடைசி விரோதி )
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-
ஓர் முதலை -அத்விதீயம் -பாகவதர் காலைப் பற்றிய முதலை –
ஜித க்ரோதா -கோப வசம் -ஏறிட்டுக் கொண்ட கோபம் –
கடி கொள் பூம் பொழில்
பூம் பொழில் காமரு பொய்கை
காமரு பொய்கை வைகு தாமரை–
வைகு தாமரை வாங்கிய வேழம்–இப்படி முழுவதும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு
பொழிலையும் பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்
அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு
ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே
தட்டித் திரியா நிற்க
இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை
அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே
கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-
கடி கொள் பூம் பொழில் –
பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில்
அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே
பரிமளம் வந்து பிராண விஷயமாய்
அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று –
காமரு பொய்கை –
ஆகர்ஷகமான பொய்கை
ஆகர்ஷகமாக இருக்கை யாவது
அகாதமாய்
துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே
மேல் விழும்படியாய் இருக்கை –
வைகு தாமரை –
அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
இவ்வாதரத்தோடே புக்கு
தாமரைப் பூவை பறித்த அளவிலே
ஓர் ஆனைக் கால் காண வல்லோமே -என்று பார்த்துக் கொடு கிடக்கிற
முதலை ஆனைக் கால் பற்றிற்று
வேழம் முடியும் வண்ணம் –
ஆனையை முடிக்க வேணும்
என்று அன்று இறே அது பற்றிற்று
தன்னுடைய சாப விமோசனத்துக்காக இறே
இவர் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிற பாசுரம் இறே இது –
ஓர் முதலை –
அத்விதீயமான முதலை
இதுக்கு முன்பு ஸ்வ உஜ்ஜீவனத்துக்காக
அநு கூலனை வந்து பற்றிற்று ஒரு முதலை அல்லை இல்லை இறே –
முழு வலி –
தன்னிலம் இல்லாமையாலே ஆனைக்கு மிடுக்கு குறைந்தது
தன்னிலம் ஆகையாலே முதலைக்கு மிடுக்கு மிக்கு இருக்கை –
பற்ற –
சரனௌ காடம் நிபீட்ய-என்னுமா போலே
தன்னுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்காக
அதின் காலை உறைக்கப் பற்றுகை
கரண அந்தரம் இல்லை யாகையாலே உள்ளத்தைக் கொண்டு பற்றும் இத்தனை இறே உள்ளது –
மற்றது –
பின்னை அந்த ஆனை யானது
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்கிறபடியே
அநேக காலம் முதலை நீருக்கு இழுக்க
ஆனை கரைக்கு இழுக்க
நோவு பட்டு மிடுக்கு அற்றது
அஹங்காரம் இறே பல ஹானிக்கு அடி –
அத்தைப் பொகட்டு ஈஸ்வரனைப் பற்றினவாறே பலவானாம் இறே –
(பலம் அற்றுப் போய் திருவடி பற்றுகிறோம் என்று தவறாக நினைக்கிறோம்
வில்லை கீழே போட்டதும் ராவணன் வீரன் -வெறும் கை வீரன்
அஞ்சலி பரமாம் முத்ரா )
நின் சரண் நினைப்ப –
இப்படி நோவு படா நிற்க இவன் நினையாது ஒழிந்தது
ஒரு நீர்ப் புழுவுக்காக சர்வேஸ்வரனை அழைக்கவோ
நாமே வெல்லுவோம் -என்று இருந்தான்
இவன் இப்படி நெடு நாள் நோவு படுகிறபடி அறியாது இருக்கிறான் அன்றே
இவனுடைய அஹங்கார ஸ்பர்சம் அற்றால்
முகம் காட்டுகிறோம் -என்று இருந்தான் அத்தனை இறே-
(கை முதல் எதிர்பார்க்காத நின் சரண்
சது நாராயண ஸ்ரீ மான் -பற்றிய செல்வம் )
சரண் நினைப்ப –
இவன் மிடுக்கு அற்று
மனஸா சிந்தயத்தரிம் -என்கிறபடியே திருவடிகளை நினைக்க
தான் -நெடு நாள் நோவு படா நிற்க முகம் காட்டாது ஒழிவதே
என்று கிலாய்க்கப் பிராப்தம் இறே-அது செய்தது இல்லை –
பரமாபதமாபன்ன -ஆபத்துக்கு உத்கர்ஷமாவது
சர்வேஸ்வரன் வந்து உதவும்படியாய் இருக்கை-
அடிக் கழஞ்சு பெற்று இருக்கை –
நாராயண பராயணா-
ப்ரஹ்மாதிகள் போலே பிரயோஜனாந்தரத்துக்காக சரணம் புகுகை அன்றிக்கே
இவன் தன்னையே பிரயோஜனமாக பற்றுகை
நெடு நாள் வ்யாபரித்த சரீரமானது மிடுக்கு அற்றது –
நாராயணா ஒ மணி வண்ணா –
என்கிற வாக் இந்த்ரிய வியாபாரமும் ஓவி
வாங்மனஸி சம்பத்யதே -என்கிறபடியே
நெஞ்சாலே நினைக்கும் படி யாய்த்து –
(பிரளய காலத்தில் லயிக்கும் முறை போல் வாக்கு மனசிலே லயிக்கும் தசை
நினைக்க தான் முடிந்தது )
கொடிய வாய் விலங்கு-
முதலை ஆனையின் காலை அன்றோ பற்றிற்று
புண் படுகிறது திரு உள்ளம் இறே
ஒரு வைஷ்ணவனுக்கு வந்த ஆபத்து தனக்கு வந்ததாக நினையாத அன்று
வைஷ்ணத்வம் இல்லை என்று இருக்க அடுக்கும் –
புத்ராதிகளுக்கு வந்த விரோதம் தனக்கு வந்ததாக நினையாத போது
தேஹாபிமானத்துக்கு கொத்தையாமா போலே –
உயிர் மலங்க –
தேஹமாதல் இந்த்ரியமாதல் அன்றிக்கே
பிராண ஸ்தானம் அகப்பட மலங்க
கொண்ட சீற்றம் –
சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே
க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே
கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம்
தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால்
சரீரி பேசாது இரானே
வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே
இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே
அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும் –
ஓன்று உண்டு
தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌலப்யாதிகள்
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம் –
உன் அடியேனும் வந்து அடி இணை அடைந்தேன்
ஸ்வரூப ஞானம் பிறந்தவாறே
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தைப் பரிக்ரஹிக்கும் இத்தனை இறே –
அணி பொழில் இத்யாதி –
த்வராயை நம-என்கிறபடியே
மடுவின் கரை தேடி வர வேண்டாதே
நான் அகப்பட்ட மடுவிலே அன்றோ வந்து சாய்ந்து அருளுகிறது
(காமரு பூம் பொழில் அங்கு இங்கு அணி பொழில் )
அங்கு முதலை ஓன்று
இங்கு ஐந்து
திவ்யம் வர்ஷ சஹஸ்ரகம் -என்கிறபடியே
காலம் அளவு பட்டு இருக்கும் அங்கு-1000 தேவ வர்ஷம் –
இங்கு காலம் அநாதி
அங்கு பொய்கை அளவுபட்டு இருக்கும்
இங்கு சம்சாரார்ணவம் –
———————————————-
விஷயீ கார பலமான கைங்கர்யம் தான் இரண்டு வகை உண்டே -இங்கும் அங்கும் –
அதில் இவ்விபூதி பிரதிபந்தகம் இந்திரிய வஸ்தை தவிர்க்க கீழ்
இதில் அவ்விபூதி பிரதிபந்தகம் தேக சம்பந்தம் போக்கி அருள பிரார்திக்கிறார்
விஷயீகாரம் சொல்லி-
விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி-
அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்
என்கிறதாய் -இரண்டு பாட்டாலே –
அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே
அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப்
பரிகரித்துத் தர வேணும் என்று -கீழ் மூன்றால் அருளிச் செய்து –
இதில் சரீர சம்பந்தம் அற்றால்
சர்வ பாப பலமாய்
அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையைத்
தவிர்க்க வேணும் -என்கிறார் –
ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே
எனக்கு எம வஸ்யதையால் வந்த பயத்தை அறுத்து
அவனை இட்டே பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார்
சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது –
அந்நிகர்ஷம் தான்
ஆகிஞ்சந்ய ரூபமாயும்
அபராத ரூபமாயும் இறே இருப்பது
அதாகிறது
அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே
ந தர்ம நிஷ்டோஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -22-
ந நிந்திதம் கர்ம-ஸ்தோத்ர ரத்னம் -23-
ஜ்ஞான கிரியாச பஜநாம் அலப்ய அந்ய-ஸ்ரீ கூரத்தாழ்வான் -ஸ்ரீ வரதாஜஸ்தவம் -69-
இத்யாதிகளும்
ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்
இதில் அபராதத்தை முன்னிடுகிறது –
(இப்படி பல கோணங்களில் பிரவேசம் )
(குளித்து மூன்று அனலை தொடங்கி ஐந்து பாசுரங்கள் நன்மை இல்லை என்றும்
தீமைகள் எல்லாம் உண்டு என்றும்-ஆகிஞ்சந்ய ரூபமாயும்
அபராத ரூபமாயும் இருப்பதை அனுசந்தித்தார் இறே)
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நஞ்சு அரவம் என்ன அமைந்து இருக்க
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் -என்கிறது என் என்றால் –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்றும்
சா ஜிஹ்வா -என்றும்
பிறர் உடைய நாசத்துக்கு பரிகரமான
நஞ்சை உமிழ்ந்து கொண்டு ஆய்த்து வருகிறது –
இவ் வாக்கைக் கொண்டு கிடீர் -சரணம் -என்றது என்கைக்காக –
இதில் பலித்தது என் என்னில்
சரணாகதிக்கு அர்ஹர் அல்லாதார் இல்லை என்கைகாக –
வெஞ் சினம் –
அத்விதீயமான சினம்
ஹிருதயத்திலே கிடந்த போது பாதகம் ஆகாது இறே
சினம் உண்டானால் இறே உமிழ்வது-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்பதுக்கு எதிர் தட்டு –
அரவம் –
கீழ் சொன்னவை பூஷணம் ஆம்படியான ஜன்மம்-
சர்ப ஜாதி ரியம் க்ரூரா
வெருவி வந்து –
சத்ரு பய பீதனாய் கிடீர் வந்தது
நின் சரண் என –
நீ எனக்கு புகலாக வேணும் என்ன
அது தான் உக்தி மாதரம்-
(சரணம் இதி வாசோபி அதுவும் உனது இன்னருளால் -ஸ்ரீ கூரத்தாழ்வான் )
சரணாய் –
பெரிய திருவடிக்கு பஷ்யமாக பிராப்தமாய் இருக்க
அத்தையும் தவிர்த்தான்
பண்ணிய சரணா கதி தான் ஏது என்று நெகிழாதே
மித்ர பாவமே அமையாதோ -என்று ரஷகனாய் –
நெஞ்சில் கொண்டு –
இத்தனை தண்ணியனாய் இருக்கிறவனுக்கு
நாம் அல்லது வேறு புகல் இடம் இல்லை
என்று நெஞ்சில் கொண்டு –
அதிகார பூர்த்தியும்
சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது
சரண்யன் உடைய நினைவே இறே
இங்கன் அல்லாத அன்று -ஸ்ரீ பரத ஆழ்வான் பிரபத்தியும் பலிக்க வேணுமே –
(உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்கிறபடி பேற்றுக்கு அவன் நினைவே –
அது என்றும் உண்டே -அது கார்யகரம் ஆவது நமது விலக்காமை அன்றோ
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –23 பாசுரம் -அத்தை சிற்றம் சிறு காலைக்கு வைத்தார்கள் அன்றோ
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -உனக்கே நாம் ஆள் செய்வோம்
பரத்தாழ்வான் போல் அசத்தள் அல்லவே )
நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –
பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
அவனை இட்டு ரஷிப்பித்தாய்-
ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது
ந ஷமாமி
நத்யஜேயம்
என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு
நத்யஜேயம்-சரணாகதரைக் கை விட ஒண்ணாது
ந ஷமாமி-ஆஸ்ரித விஷயத்தில் அபராதம் பொறுக்க ஒண்ணாது
தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடுவதும் செய்யாதே
வேறு ஓர் இடத்தில் போவதும் செய்யாதே
தன்னைச் சரணம் புக்க ஸூமுகன் பண்ணிற்று
ஏதேனும் அபராதம் உண்டோ
ந ஷமாமி யாவது என் என்னில்
ஈஸ்வர ஹிருதயம் என்று ஓன்று உண்டு என்று ஆராய்ந்து பார்த்தால்
ஜகத்தை அடைய ஆஸ்ரிதார்த்தம் என்று ஆய்த்து இருப்பது
அப்படி இருக்க
பெரிய திருவடிக்கு தான் நியதாஹாரனாய் இருக்கச் செய்தே
அது தலைக் கட்டாதே போருவதே -என்று திரு உள்ளம் சிவிக் என்று இருக்கும் இறே
வாலி -நீர் என்னைக் கொன்றது என் என்ன –
பிராத்ரு பார்யாபஹாரம் பண்ணினாய் என்று அவனுக்கு குற்றமாய்ச் சொன்னவர் தாமே
அக் குற்றம் மகா ராஜர் பக்கலிலே உண்டாய் இருக்க
அது சொன்னார் உண்டாகில் கண்டவிடம் எங்கும் கழுமலை யாக்குவேன் -என்றார் இறே
(கழு மலை -வெட்டி போட்டால் கழுகு மலையாக வந்து உண்டு போகும் )
ந ஷமாமி –நத்யஜேயம் -என்றும் இரண்டும் சேருகிறபடி என் என்னில்
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று
இருக்கை அன்றிக்கே
(நான் க்ஷமிக்க மாட்டேன் என்று)பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
அவனை இட்டு இறே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது
இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம் இறே உள்ளது-
பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே-
முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும்
பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –
நின் அஞ்சிறைப் பறவை
தன் கையிலே காட்டிக் கொடுத்தால்
ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே-
சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-
ராம மேவாநு பஸ்யந்தோ நாப்ய ஹிம்சன் பரஸ்பரம் -என்னக் கடவது இறே –
(நாட்டு மக்கள் ஆனந்தமாக தர்ம சிந்தனை உடன் பெருமாளையே பார்த்து இருந்தார்கள் -ராம ராஜ்யத்தில் )
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –
உணர்ந்து நோக்கும்படி பண்ணி
அருள் –
அவன் செய்யும் சேமம் -என்கிறபடியே
ஒரு நாளும் பிரியாத படி யாய்த்து செய்து கொடுத்தது –
(பாகவதருக்கு ஆள் படுத்துவதே அவன் செய்யும் சேமம் -நம்மாழ்வார் )
அவன் சத்ரு பீதனாய் வந்து சரணம் புக அவனை நோக்கினோம்
நீர் ஆர்க்கு பயப்பட்டு நம்மை சரணம் புகுகிறீர்-என்ன –
வெஞ்சொல் ஆளர்கள் –
அவர்கள் செய்யும் செயல்கள் பொறுக்கலாம்
அவர்கள் பாசுரம் கிடீர் பொறுக்க அரிது –
நமன் தமர் –
நாலு மூன்று சாசனம் மறுக்கும்படி
அவனுக்கு அந்தரங்கர் ஆனவர்கள் –
கடியர் –
வேஷம் பொறுக்கப் போகாது –
கொடிய செய்வன யுளவதற்கு –
ஆஸ்ரய அனுரூபமாக அன்றிக்கே
பாப அனுரூபமாக நலியா நிற்பர்கள் –
உள-
பாபத்துக்கு அவதி உண்டாகில் இறே
இவர்கள் செயலுக்கு அவதி யுண்டாவது –
அதற்கு –
யம படர் உடைய கொடும் தொழில்களுக்கு –
அடியேன் அஞ்சி வந்து-
சேஷ பூதன் ஆகைக்கும்
யமாதிகளுக்கு அஞ்சுகைக்கும்
என்ன சேர்த்தி உண்டு
பயம் பயாநாம் இத்யாதி –
(ப்ரஹ்லாதன் வார்த்தை -பெருமாள் உள்ளே இருக்க எதைப் பற்றி பயப்பட வேண்டும் )
நின் அடி இணை அடைந்தேன் –
யமன் தான் அஞ்சி
மதுசூதன பரிகாரம் -என்னும்படி யான
உன் திருவடிகளை ஆஸ்ரயித்தேன்-
அணி பொழில் திரு வரங்கத் தம்மானே
அனுபவ விரோதிகளைப் போக்கி
ஆஸ்ரிதரை அனுபவிப்பைக்காக அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
———————————————————–
விஷயீ காரத்தைச் சொல்லி
கைங்கர்யத்தைச் சொல்லி
கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் –
என்றார் கீழ்-நான்கு பாசுரங்களால் –
இதில் கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே
என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –
கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது
இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான
தேக சம்பந்தத்தை அறுத்து
தர வேணும் என்கை
மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம் சித்திக்குமாகில்
அபேஷிககிறது என் என்னில்-
க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே –
(மரணமாக்கி இருந்து இருந்தால் அபேக்ஷிக்க மாட்டேன் )
கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன்
இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே
கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும்
சாஷாத்கர்த்து காமனாய்
முன்பு காண வாராய் -திருவாய் -8-5-2–என்று எண்ணி இருப்பார்க்கு
பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ
(மற்ற இரண்டுக்கும் வர வேண்டாமே )
நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை
ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று
சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண
இவன் நினைவின் படியே கிருஷ்ண அவதாரத்தின் படிகளை
அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து
உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள
கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன
நீ தபஸ் பண்ணுகிற போது
விஷய விதுரனாய்
அன்ன பாநாதிகளையும் கழித்து
உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய்
இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் களித்து வா
என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –
இவ் வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க
இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது
பிரகரண பலத்தாலும்
அர்த்த க்ரமத்தாலும்
நாசமான பாசம் -என்றும்
போந்தேன்-பெரிய திருமொழி -6-3-4- -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே-
(த்ருஷ்டாந்த பலம் திருஷ்ட அபேக்ஷை
த்ருஷ்ட போகங்களில் மூட்டி இருக்க
தேக சம்பந்தம் போக்க அருளிச் செய்வது என்பது எப்படி பொருந்தும் -என்ன
விரோதி போக்கும் பிரகரண பலத்தாலும்
அர்த்த க்ரமத்தாலும்-இந்திரிய எம வஸ்யத்தைக்கும் பின்பு அருளிச் செய்வதால்
தேக சம்பந்த நிவ்ருத்தியே ஆக வேண்டும் )
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5-
அத்த -கூப்பிட்டு விளி சொல்
பெருமாள் -கோவிந்த ஸ்வாமியைப் பார்த்து சொன்னதாகவும்
18 நாடார் பெரும் கூட்டம் -மா மறையாளன் -வார்த்தையால் –
மாகம் இத்யாதி –
உபய விபூதியில் உள்ளாரும் வந்து ஆஸ்ரயிக்கும் படியான திருவடிகளைக் கண்ட
இவ் வாஸ்ரயணம் தர்மி பிரயிக்தம் அல்ல -கிருஷ்ணாவதார பிரயுக்தம்
பரம பத நிலயரான ஸூரிகள் ஆஸ்ரயிக்கும் படி என் என்றால் –
ஆச்சாத்யா நுயயௌ சேஷ பணைரா நக நுந்துபிம் -என்றும் ( சேஷன் குடை பிடிக்க )
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -என்றும்
சொல்லா நின்றது இறே
திவ்ய ஆயுதங்களும் கூட கர்ப்ப வாசம் பண்ணி இறே பிறந்தது –
(கர்ப்பத்தில் கைங்கர்யம் திவ்ய ஆயுதங்கள் )
மா நிலம் –
இடையரோடு
அவர்கள் தான் வசிஷ்டாதிகள் என்னும்படி யான பசுக்களோடு
கன்றுகளோடு
பீஷ்மாதிகளோடு
வாசி அற ஆஸ்ரயித்தது இறே
முழுதும் –
உபரிதன லோகங்களில் உள்ளாரும்
மத்ய ராத்ரத்திலே பால் அமுது செய்து சாய்ந்து அருளப் புகுகிற அளவிலே
இந்த்ரன் திரு வாசலிலே வந்து நின்று புறப்பட்ட தாசிகளுக்கு
நான் வந்தேன் என்று விண்ணப்பம் செய்ய வேணும் -என்று உள்ளே புகுந்த இந்த்ரன்
நரகன் என்னுடைய சதுர்த் தந்தியையும் தர வேணும் என்று நெருக்கா நின்றான் -என்ன
(சதுர்த் தந்தியையும்–ஐரா வதம் தாயார் குடை அனைத்தையும் )
கையைத் தா -என்று எழுந்து இருந்து
சத்ய பாமைப் பிராட்டியோடும் கூட
பெரிய திருவடி தோளிலே ஏறி
எழுந்து அருளி நரக வதம் பண்ணினான் என்னா நின்றது இறே
பாதேன கமலா பேன-இத்யாதிகளால்
ப்ரஹ்ம ருத்ர ஆர்சனம் சொல்லா நின்றது இறே
ப்ரஹ்மானாம் ஈசம் கமலாச நஸ்த்தம் -என்று
திரு மேனியில் காட்டுவதும் செய்தான் இறே –
மலரடி
நிரதிசயமான போக்யமான திருவடிகள்
பசுக்களின் பின்னே போவது
தேர்த் தட்டிலே நிற்பது
தூது நடப்பது ஆகிற அளவிலே கிடீர் சர்வ சமாஸ்ரயணீயன் ஆய்த்து
கண்ட –
எல்லாரும் ஒக்க இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க
வேண்டும்படியான
திருவடிகளை யாய்த்து
தானே வர இவன் கண்டது –
மா மறையாளன் –
சாஸ்த்ரத்தாலே யாதல்
உபதேசத்தால் யாதல்
அன்றிக்கே
கண்ணால் காணப் பெற்ற வைதிக அக்ரேசரன் –
தோகை இத்யாதி –
கண்ட அளவிலே கூடப் போரும் இத்தனை -என்ன
அது பின்னை செய்கிறாய் என்ன
அதுக்கடி என் என்ன
இழந்த போகங்களை புஜிக்க வேணும் காண் என்ன –
அது தான் வேண்டுகிறது என் என்ன
நீ தபஸ் பண்ணுகிற போது
இதர விஷயங்களில் சங்கம் கிடக்கச் செய்தே
அவற்றைச் செறுத்து புஜியாதே போந்தாய் காண் -என்றான்
மோஷ பிரதனான சர்வேஸ்வரனை ஒழியச் செல்லாமை உடையராய்
கூடப் போவோம் என்பார் அளவில்
போதரே என்னும் இத்தனை போக்கி
விட்டுப் போவான் ஒருவன் அல்லன்
அவன் பக்கல் அதி பிரவணனாய் இருக்குமவன்
அவனை ஒழிய விஷய பிரவணமாக்கும் சம்சாரத்தில் இருப்பை இசையான்
ஆனால் இவனை இரு என்கைக்கும்
இவன் இருப்பை இசைகைக்கும் ஒரு கருத்து உண்டாக வேணும்
அதாவது என் என்னில்-ஈஸ்வரன் நினைத்தால்
விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய்
விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –
சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான்
இறே எதிரம்பு கோத்தான்
(வாமனன் -அளக்க -திருவடிகளை பிடித்து தடுக்க -பிரகிருதி படுத்திய பாடு )
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே
மாலா காரர் கிரஹத்திலே புக்கு பூ தொடுக்கிறவனை
அய்யே நீ எங்களுக்கு பூ இட வல்லையே -என்ன
அவனும் இவ்வடிவு கண்ட போதே
கம்சன் வெட்டி வைத்தான் ஆகில் வெட்டி வைக்கிறான்
இம் மாலைகளை இங்கேயே சாத்துவோம் -என்று சாத்த
ப்ரீதனாய்
இவனை சூட்டு நன் மாலைப் படியே
ஒரு தேச விசேஷத்தே கொடு போய் பூ இடுவித்துக் கொள்வோமோ
இங்கே வைப்போமோ என்று விமர்சித்து
கம்சனை மதியாதே நம்மை ஆதரித்த இவனை
ஐஹிக போகங்களை புஜிப்பித்து
பின்னை அவ்வருகே கொடு போகிறோம் -என்று வைத்தான் இறே –
(இத்தால் கருத்து அறிந்து செய்பவன் -உள்ளத்தே இருந்து அறியும் மால் அன்றோ )
புக்த்வாச விபுலான் போகான்
கம்சன் இட்ட சோற்று அளவன்று காண் நான் தருவது
த்வமந்தே –
இவன் கொடுக்கிற போகங்கள் தான் அளவு பட்டு அல்லாமையாலும்
போக்தா வானவன் ஓர் அளவிலே மீளுமவன் அல்லாமையாலும்
இதுக்கு ஒரு முடிவு இல்லை இறே
ந ஜாதுகாம காமா நாமுப போகேன சாம்யதி
ஹவிஷா கிருஷ்ண வர்தமேவ பூய ஏவாபி வர்த்ததே -என்றும்
யத் ப்ருதிவ்யாம் வ்ரீஹி யவம் ஹிரண்யம் பசவஸ் ஸ்த்ரிய
ஏகஸ்யாபி நபர்யாப்த மிதிமத்வா சமம் வ்ரஜேத் -பாரத ஸ்லோகம் -என்கிறபடியே
இவற்றின் உடைய ஸ்வ பாவத்தை அனுசந்தித்தால்
பிரியலாம் படி யன்றிக்கே யாய்த்து இருப்பது –
இங்கனே இருக்கச் செய்தேயும் பகவத் ப்ரவணனாய் இருக்குமவனுக்கு
நினைத்த போதே கால் வாங்கலாய் இருக்கும்
சௌபரி மத்ஸ்ய தர்சனத்திலே ஐம்பது வடிவு கொண்டு புஜித்து
தானே ஓர் அளவிலே அருவருத்து மீண்டான் இறே
கர்மமும் ஜ்ஞானமும் இரண்டும் கூட நடக்கிறது இறே
கர்ம வாசனை விஷயங்களிலே மூட்டும்
ஜ்ஞானம் அருவருத்து மீளப் பண்ணும்
ஔபாதிக கர்மத்தை ஸ்வாபாவிக ஜ்ஞானம் மேலிடும் இறே –
(ஞானம் இயற்க்கை கர்மம் வந்தேறி தானே -ஞான ஸ்வரூபம் ஜீவாத்மா அன்றோ )
மத் ப்ரசாதத மம அநு ஸ்மரணம் ப்ராப்ய
உபாசகனுக்கு நம் பிரசாதத்தாலே அந்திம ஸ்ம்ருதி உண்டாமா போலே
நீயும் நம்முடைய அந்திம ஸ்ம்ருதியைப் பெற்று -என்னுதல்
நீ நினைக்க மாட்டாத குறை தீர நாமே நினைக்கக் கடவோம்
ஸ்வீ கார அத்யவாச்யம் இறே அத்தலைக்கு வேண்டுவது-
தோகை மா மயில் அன்னவர் இன்பம் –
தோகையை உடைத்தான சுந்தரமான மயில் போலே இருக்கிற ஸ்திரீகள்
இத்தால்
தூரஸ்தரையும் ஆகர்ஷிக்கும் படியான மயிர் முடியையும் நடையையும் சொல்லுகிறது –
இப்படி அனுபவித்தால் அது தன்னில் ஒன்றும் காண ஒண்ணாதே
ஸ்நான உப கரணங்களைக் கொண்டு மீளும்படி இறே இருப்பது –
அன்னவர் இன்பம் –
ஆராய்ந்தால் அனுபாவ்யம் ஒன்றும் இல்லை
தோகை மா மயில் அன்னவர் இன்பம் -என்று ஒன்றாக ஆஷேபித்துச் சொல்லுகிறார்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -என்றவர் வார்த்தை இறே –
முரிக்கு கிழக்கு என்னிலும் இவர் நா வீறு தான்
இங்கன் அல்லாது இராமையாலே யாதல் –
( முரிக்கு கிழக்கு-கரைக்கு கிழக்கு வழக்கு வார்த்தை )
துற்றிலாமையால் –
கலவி ரசத்தை அனுபவியாமையால் –
அத்த –
தான் நியமித்த படி அவன் செய்கைக்காக அப்பனே என்று அநு நயித்துச் சொல்லுகிறார்
இங்கு ஒழிந்து –
இந் நிலத்திலே சில நாள் இருந்து
போகம் நீ எய்தி –
இழந்த போகங்களை அடைய புஜித்து
நீ எய்தி-
நினைத்த போது கால் வாங்க வல்ல அளவுடைய நீ அல்லையோ
இதில் அதிகரிக்கிறாய்
நீ தபஸ் பண்ணுகிற நாளில் விட்ட விஷயங்கள் இப்போது
உனக்கு பிரதிபந்தகங்கள் ஆக வற்றோ-
பின்னை நம்மிடைக்கே போதுவாய்-
நினைத்த போது மீட்க வல்ல
தன் வை லஷண்யம் தோற்ற சொல்லுகிறார்
நேரே வகுத்த விஷயமான நம் பக்கலில் வரக் கடவை –
என்ற பொன்னருள் –
ஸ்ப்ருஹணீயமான அருள்
எனக்குமாக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் –
அவன் கருத்து அறிந்து கார்யம் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் –
அணி பொழில் இத்யாதி –
ஆஸ்ரிதர் அனுரூபமாக அபேஷிதங்கள் ஆராய்ந்து செய்கைக்காக அன்றோ
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
ஐஸ்வர்யம் வேணும் என்பார்க்கு அத்தை கொடுக்கவும்
தேகத்தை பூண் கட்டிக் கொடுப்பார்க்கு அத்தைச் செய்யவும்
தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்பார்க்கு அத்தைச் செய்யவும் அன்றோ
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
———————————————–
த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன்
அடியேன் கருத்துப்படி
சேஷத்வ பாரதந்தர்யத்துக்கு கொத்தை ஆக்க கூடாதே
நீயே இத்தை விரும்பி திரு உள்ளம் கொண்டு அருள வேண்டும்
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே வேண்டுமே
அருள் தருவான் அமைகின்றன அது நமது விதி வகையே -எனது பிரார்தனைப்படியா
மாற்றி -வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
போல் இங்கும் கீழ்ப் பாட்டும் இதுவும்
ப்ராப்தன் இடம் எதுவும் கேட்டுப் பெறலாமே –
தேக சம்பந்தம் அறுத்து தருவதும் தனக்காக இல்லாமல்
தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டுமே
எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்
எனக்காக கொடுக்காதே
எனக்கும் பிறருக்காம கூடாது
எனக்கும் உனக்குமாக கூடாதே
உனக்காகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமே
இப்படி சங்கதி –
கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே
என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் –
மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக
அவனுக்கு மிருத்யுவை நிரசித்து
அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே
ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை
அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே
என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து
உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து
அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய்
காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது
என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது
நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார் –
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
இன்றும் அநேக கர்ப்ப க்ருஹங்களில் மார்க்கண்டேயர் பிருகு மஹ ரிஷிகள்
இவன் திரு உள்ளப் படியே பிரியாமல் சேவை சாதிக்கிறார்கள்
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
முனி பெற்ற -என்ன அமையும்
மன்னு நான்மறை என்றதுக்கு கருத்து என் என்னில்
இப்படிப் பட்ட ஆபிஜாத்யத்தை மதியாதே கிடீர்
வந்து கிட்டிற்று -என்கை-
நித்தியமாய்
நாலு வகைப் பட்ட வேத அத்யயன பரனாய்
அதில் சொல்லுகிறபடியே பகவத் உபாசன பரனாய் போருகிறவன்-
(சாஸ்திரங்களில் சொல்லாத படி )அவைதிகமாக உக்த் உபபக்திகளாலே உபாசிப்பாரும் உண்டு இறே
(பலனை சமர்ப்பித்து -வெட்கப்பட்டு நீசன் என்ற நினைவுடன் -டாம்பீகமாக இல்லாமல்
தானாதிகளைச் செய்ய வேண்டுமே )
அங்கன் இன்றிக்கே
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -என்கிற வஸ்து உபாஸ்யம் என்று அறிந்து
உபாசன பரனாய் போருகிறவன் –
மஹத்தை யாவது –
பிரயோஜனாந்தர விதுரமாக
வாசுதேவஸ் சர்வம் என்கிறபடியே
எல்லாம் அவனே -என்று உபாசிக்கை –
நான்மறையில் மன்னிப் போருகிறவன் –
உபாசகனுக்கு அத்யயனம்
ஸ்வாத்யாய ஜ்ஞான யஜ்ஞ்ஞாச -ஸ்ரீ கீதை -4-28–என்கிறபடியே
உருவ அனுவர்த்திக்கும் இறே –
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாம நேத்
ஸ்வாத்யாய யோக சம்பத்த்யா பரமாத்மா பிரகாசதே -என்கிறபடியே
வேத விஹிதமான படியே யோகாரூடனாக கடவனாய்
யோகத்திலே சாஷாத் கரிக்கிற வஸ்து கர்ம அனுரூபமாக
அந்யதவாகத் தோற்றுகிறதோ அன்றிக்கே யதாவாகவோ என்று அறிகைக்காகப்
பின்னையும் அத்யயன பரனாகை –
ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து -யதோவா இமானி பூதானி -இத்யாதிகளை உபதேசித்து
(பிருகு வல்லி -தைத்ரியம் -பிருகு பிள்ளை வருணனுக்கு உபதேசம் )
இதில் சொல்லுகிறபடியே உபாஸ்ய வஸ்து பிரகாசிக்கும் தனையும் போய் தபஸ் பண்ணு -என்
அவனும் தபஸ் பண்ண
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜா நாத் -என்கிறபடியே
அன்னமோ ப்ரஹ்மம்-என்ன
அதுவும் போதாது -இன்னமும் தபஸ் பண்ணு என்ன
ஆனந்த மய அளவும் தபஸ் பண்ணின வாறே
அது காண் ப்ரஹ்மம் என்று விட்டான் இறே –
(அன்னம் -பிராணன் -மனோ -விஞ்ஞான மயம் -ஆனந்த மயம் பஞ்ச கோசம் )
முனி பெற்ற –
ஜ்ஞான விபாக தசையிலே பிறந்தவன் –
மதியாத –
பகவத் சம்பந்தம் உடையராய் இருக்குமவர்கள்
பங்க்தியிலும் அகப்பட
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் என்ன வேண்டி இருக்க
ஸ்ரீ வைஷ்ணவ் சம்பந்தம் உடையார் பக்கலில் கிட்ட ஒண்ணாது இறே
அப்படி இருக்க மதியாதே வந்து கிட்டினான் –
ந அஸ்யாஸ் அவர புருஷா ஷீயந்தே –
பாகவதனுக்கு வித்யையாலும் ஜன்மத்தாலும் சந்தான த்வயம் உண்டாய்ப் போரக் கடவது இறே
இரண்டு திறத்தாருக்கும் ஷயம் இல்லை என்கிறது
அணுவாய் நித்தியமான ஆத்மாவுக்கு ஷயம் ஆகிறது ஜ்ஞான சங்கோசம் –
அது வாராது
இதன் உடைய உப ப்ரும்ஹணம் இறே
குலம் தாரயதே-(பாரதம் பீஷ்மர் வார்த்தை -குளம் வெட்டி நல்ல கார்யம் செய்தால்
குலத்தையே ரஷிக்கும் என்றார் அன்றோ சப்த சப்தச சப்தச )
இத்தை அனுவர்த்திக்குமவர்களும் எமர் ஏழு ஏழு பிறப்பும் என்னா நின்றார்கள் இறே –
வெங்கூற்றம்
இவனுடைய உத்கர்ஷம் பாராதே
தங்களையே பார்த்து -க்ரௌர்யத்தை முன்னிட்டுக் கொண்டு யாய்த்து வந்தது –
வெங்கூற்றம் தன்னை யஞ்சி நின் சரண் எனச் –
மிருத்யு பய பீதனாய் கொண்டு
நீயே எனக்குப் புகலாக வேணும் -என்று –
நின் சரண் என –
மமாஸ்தி சக்ர பிரதிஹத வீர்ய பலஸ்ய -என்று
எமாதிகள் அஞ்சும்படியான பரிகரத்தை உடைய நீ புகலாக வேணும் –
வசதி மனஸி பஸ்ய சோவ்ய யாத்மா –
இவை வைமுக்யம் பண்ணிப் போரும் அன்றும் விட மாட்டாதே
நித்ய அந்தராத்மாவாய்க் கொண்டு போருமவன்
புருஷ வரஸ்ய -அவனே உபாயம் என்று இருக்கை
ந தஸ்ய த்ருஷ்டி பாதே தவ கதி -அப்படி இருக்குமவனுடைய கண் வட்டத்திலும் நீ சஞ்சரியாதே கொள்
வ்ரஜ பரிஹ்ருத்ய யதாக்னி மாஜ்ய சிக்தம் -என்னும்படியே
அழல் உடையராய் இறே இருப்பது –
அதவா
மமாஸ்தி சக்ர பிரதிஹத வீர்ய பலஸ்ய
அவனுடைய பெருமையை பார்த்தால் எனக்கும் கிட்ட ஒண்ணாத படியாய் அன்றோ இருப்பது
அதுக்கடி
அவ்யஹதானி க்ருஷ்ணஸ்ய சக்ராதீன் யாயுதானி தம்
ரஷந்தி சகலாபத்ப்யோ யேன விஷ்ணு ருபாசித -என்கிறபடியே
திவ்ய ஆயுதங்களுக்கு அஞ்சின படி
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்ர பாணீ சார்ங்க வில் சேவகனே –
கிட்டினான் ஆகில் திரு ஆழியாலே தலையை அறுத்தல்
தூரத்திலே யாகில் நெட்டம்பாலே உருட்டுதல் செய்யுமவன்
சரீரி அன்றோ என்ன
அவன் இத் தேசத்தில் நடையாடுவார் ஒருத்தன் அல்லன் காண்
நேமிப் பிரான் தமர் போந்தார் -என்னக் கடவது இறே –
சரணாய் –
சரண்யர் அல்லாதாரைப் பற்றினேனோ
மன்னி இத்யாதி –
ஆபி ஜாத்யத்தால் வந்த உத்கர்ஷத்தைச் சொல்லி
அவன் சரணம் புக்கான் என்றது இங்கு –
ஏழை எதலன் என்றும்
வாத மா மகன் என்றும்
நஞ்சு சோர்வதோர் -என்றும்
நிகர்ஷத்தை சொல்லிற்று கீழ்
இரண்டுக்கும் சேர்த்தி என் என்னில்
உத்கர்ஷ அபகர்ஷங்கள் இரண்டும் சரணா கதிக்கு அப்ரயோஜனம் -என்கை
வேல் வெட்டி நம்பியார்க்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
(ராமன் அஞ்சலி பிராங் முகம்- விபீஷணன் முழுக்கு போடாமல் -இரண்டும் உண்டே –
ஆச்சார்யம் பிரதானம் இஷ்வாகு குலம் -கிருபை ஒன்றே காரணம் -நம்பிள்ளை வார்த்தை )
தகவில் காலனை –
இரங்க வேண்டும் தசையிலும் இரக்கம் அற்று இருக்கை –
இவனுடைய பாபத்தையும்
தன்னுடைய நியாமகத்வத்தையுமே
யாய்த்து பார்ப்பது –
யுக முனிந்து –
(உக்கிப் போகும் படி முனிந்து )
அவன் தான் இவன் அளவிலே நினைத்ததை
அவன் தன்னோடே போக்கினான்
நாளையும் ஸ்ரீ வைஷ்ணவ பரிகரமாய் இருப்பாரை நலிய ஒண்ணாது என்று
உரு மாய்த்து விட்டான் –
ஒழியா –
இவனை நலிந்த மிருத்யுவை அழியச் செய்து
இவனை பரிஹரித்தோம் ஆகில் அமையாதோ
என்று விடாதே –
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் –
சம்சார சம்பந்தத்தை அறுத்து
திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படியான
பேற்றைப் பண்ணிக் கொடுத்தாய் –
நின் திருவடிப் பிரியா வண்ணம் –
சம்சார சம்பந்தம் அறுகை கேவலனுக்கும் ஒக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
திருவடிகளை கிட்டும்படியான பேற்றை யாய்த்து பண்ணிக் கொடுத்தது –
எண்ணிய பேரருள் –
கிருபையை அன்றிக்கே ஔதார்யத்தைப் பற்றச் சொல்லுகிறது
இவன் பிரயோஜனாந்தரத்துக்கு வந்து கிட்டினாலும்
சகல பல பரதன் ஆகையாலே
விலக்காத சமயம் பெற்றால் விடான் இறே
ஆஸ்ரயிக்குமவனுக்கும் ஔதார்ய குணம் அனுசந்தேயம்
அபார காருண்யா -இத்யாதி –( கத்யம் )
எனக்கும் –
அவனைப் போலே ஜன்ம நிபந்தனமான
ஏற்றம் அன்றிக்கே இருக்கும் எனக்கும்
அதாகிறது
பாவமே செய்து பாவியானேன்
எப் பாவம் பலவும் இவையே செய்து
என்று சொல்லுமவர் இறே –
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் –
அவன் நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே
நாம் கொடுத்தால் இவன் விலக்கான்-என்னும் இதுவே பற்றாசாக
உன்னைப் பிரியாத பேற்றைப் பண்ணி அவனுக்கு கொடுத்தால் போலே
உன் விருப்பத்தாலே நானும்
அப் பேறு பெற வேணும் என்று சரணம் புகுந்தேன் –
அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
பிரயோஜனாந்தரங்களுக்கு வந்து ஆஸ்ரயித்த வர்களுக்கும்
விலக்காமை உண்டாகில்
ஸ்வரூப அனுரூபமான பிரயோஜனத்தை கொடுக்கைக்காக வன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
(மார்க்கண்டேயர் -சிவ பக்தன் –
இவரே சென்று பெருமாள் இடம் சேர்த்து –
புருஷகாரமாக சிவபிரான்
புக்கு அடிமை -திருவாய் மொழி பாசுரம் படி )
———————————–
ஆர்ஜூனி சம்பவம் பரிக்ஷித்துக்கு உதவி -இந்த வரிசையில் -வானர முதலி களுக்கு –
சாந்தீபன் பிள்ளை -வைதிக புத்திரர்கள் மீட்டுக் கொடுத்த அழகரே திரு அரங்கம் சென்று
உடையவர் திருவடிக்கீழ் அமர்த்த பிரார்த்தனை -ஸ்ரீ கூரத்தாழ்வான்
1-விஷயீ காரத்தை சொல்லி
2-கைங்கர்யத்தை சொல்லி
3-அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
4-அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
5-அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
6-கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் –
இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே
மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை
ஆனால் மேல் செய்கிறது என் என்னில்
ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால்
சேஷி செய்தபடி கண்டு
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது
இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன
தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ-
உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ-
அவனுடைய போக்யதை போலே
சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே-
சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த
அகடி தகடநா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே-
சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவு படுகிற என்னையும்
மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது-
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே
அத்தை செய்து அருள வேணும் -என்கிறார் –
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-
ஒது வாய்மையும்-
வாய்மை –
வாக் இந்த்ரிய வியாபாரம் -அதாகிறது -வசனம்
ஒரு வசனத்தில் அர்த்தத்தை நினைத்து பாசுரம் இடுகிறார் மர்யாதா ஸ்தாபன அர்த்தமாக-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் திரு உள்ளத்திலே அனுவர்த்தியா நிற்கச் செய்தேயும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் சுடர் மிகு சுருதியுள் -என்றார் இறே
சப்த உச்சாரணம் பண்ணுவது இல்லை
அர்த்தத்தில் ஒன்றும் விடுவது இல்லை
ஒது வாய்மை -என்கிறது –
பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறத்தை
புஸ்தக நிரீஷணம் பண்ணுதல்
செவி ஏறாக வருகை யாதல் அன்றிக்கே
ஆசார்ய உச்சாரண அனந்தரமாக அனுச்சாரணம் பண்ணிப் போருகை
சப்த ராசி க்ரஹணத்துக்கு உச்சாரண அனுச்சாரண அபேஷை என் என்னில்
அப்படி அல்லது அர்த்தப் பிரகாசம் இல்லாமையால் –
அர்த்தம் தம் தம் அனர்த்த ரூபம் -இத்யாதிப் படியே
அக்னி சாஷிகமாக கைப் பிடித்த ஸ்திரீ யானவள் தன்னுடைய பர்த்தாவுக்கு
தன்னை ஆமூல சூடமாக காட்டுமா போலே
சதாசார்யா உபதேச ஜ்ஞான பூர்வகமாக கைப் பிடித்தவனுக்கு யாய்த்து
வித்யை தன்னை உள்ளபடி காட்டுவது –
உவனியப் பிறப்பும் –
பிராமணனுக்கு ஜன்மம் இரண்டு இறே
பஷிக்கும் உண்டு இறே த்விஜத்வம் –
பஷியினுடைய பூர்வ அவஸ்தை போலே இவன் உடைய யோனி ஜன்மம்
(அண்டஜம் முட்டைக்குள்ளே போல் )
இரண்டாம் ஜன்மத்திலே இறே நீட்டி முடக்க வல்லது
கம்ச வத அநந்தரமாக இறே த்விஜத்வம்
பின்பு செய்ததும் யாதவர்களோடு சஜாத்யம் உண்டாகைக்காக இறே
உக்ர சேனனை அபிஷேகம் பண்ணி
சர்வ தர்மாரூடனாக்கி
ராஜ்யமும் அடி பட்ட பின்
அவந்தி புரத்திலே ( உஜ்ஜைன் ) சந்தீபினி பக்கலிலே போய்
உபநய நாதி சம்ஸ்க்ருதர் ஆவோம் என்று அவனைச் சென்று கிட்டி
முன்பே கர்க்கன் வந்து ஜாத கர்ம நாம கரணாதிகளை அடையப் பண்ணினான்
உத்தர தந்த்ரம் அனுஷ்டிப்பிக்க வேணும் -என்ன
மேல் உள்ளது எல்லாம் செய்தான் இறே –
உனக்கு –
யோவை வேதாம்ச ப்ரஹினொதி தஸ்மை என்கிறபடியே
பிரம்மாவை சிருஷ்டித்து
அவனுக்கு வேதத்தைக் கொடுத்த உனக்கு அன்றோ தந்தது –
அனேன ஜீவே நாத்ம நானு ப்ரவஸ்ய -சாந்தோக்யம் -என்கிற வாக்யத்தில் படியே
ஜீவ த்வாரா அசித்திலே அனு பிரவேசித்து
நாம ரூப விபாகம் பண்ணினான் தானே இறே
நாம ரூபஞ்ச பூதா நாம் -இத்யாதி
த்வாபராந்தத்திலே இறே இது
இவர் இப்போது பெரிய பெருமாளைப் பார்த்து சொல்லுகையாலே
அவரும் இவரும் ஒருவர் என்றபடி –
(கற்றினம் மேய்த்த எந்தை -கொண்டல் வண்ணன் கோவலனாய் அன்றோ இவன் )
முன் தந்த அந்தணன் –
அத்யயனம் பண்ணுகைக்கு அதிகாரி-
ஒருவன் –
அத்விதீயன்
வித்யா ஸ்தலங்களுக்கு அடைய தானே யாம்படி சமைந்தவன்
அத்யயனத்திலே அந்தர்பூதம் அல்லாத வித்யா ஸ்தலங்களும்
சீஷாயாம் -( ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )-இத்யாதி
தநுர் வேதமும் ஆயுர் வேதமும் அகப்பட அங்கே இறே அதிகரித்தது
(64-ஆய கலைகள் –64 -நாள்களில் கற்றானே )
முற்பட த்வ்யத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
நம் பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -என்பது —
(கார்த்திகையில் கார்த்திகை -ஆவணி ரோகிணி -பெரியவாச்சான் பிள்ளை -இவர் அதனாலே ஒருவன் )
இப்படி அப்யசித்த அளவிலே
க்ரஹண வேளையிலே ஜ்ஞானத்தையும்
அதிகரிக்கிற சக்தி யோகத்தையும் கண்டு
தஷிணையாக இவனை எத்தை வேண்டிக் கொள்வோம் -என்று
என் புத்திரன் கடலிலே புக்கான்
அவன் எங்கே போனான் என்று அறிகிறிலேன்
ஆராய்ந்து அவனை உரு அழியாதபடி கொடு வந்து தர வேணும் -என்ன
கையில் வில்லை வாங்கி கடல் கரையிலே சென்ற போதே அஞ்சி
வருணன் முகம் காட்ட
ஆச்சார்ய புத்திரன் இங்கே புக்கான் காட்டித் தா -என்ன
அவனும் போக்கற்ற வாறே
பஞ்ச ஜனன் பஜித்தான் -என்ன
முன நாள் உண்ட சோற்றை வாங்க ஒண்ணாது இறே
கடலிலே நீர் நீங்கிக் கொடுக்க
சங்க ரூபியான இவனை யகற்றின அளவிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் வந்து ஆவேசிக்க
(கடலில் பிறந்து பாஞ்ச ஜன்யன் உடலிலே வளர்ந்து –கை ஏறினவன் –இத்யாதி )
திருப் பவளத்தே வைத்து முழக்கிக் கொடு எம புரத்தே எழுந்து அருள
அவனும் அர்க்யாதிகளைக் கொடுத்து
எழுந்து அருளிற்று என் என்ன
ஆச்சார்ய புத்திரன் இங்கே வந்தான் அவனைக் காட்டித் தா -என்ன
அவனும் நரக விசேஷத்தில் நின்றும் அவனைக் கொடு வந்து காட்ட
என் புத்திரன் என்று அவன் பிரத்யபிஞ்ஞை பண்ணும்படி
அவனைக் கொடு வந்து காட்டிக் கொடுத்தான் இறே –
காதல் என் மகன்-
காதல் தான் வடிவு கொண்டது என்னும் படியான புத்திரன்
புகலிடம் காணேன் –
நரகத்திலேயோ -கர்ப்பஸ்தனோ-எங்கே புக்கான் -என்று அறிகிறிலேன் –
கண்டு நீ தருவாய் -எனக்கு என்று –
சர்வ சக்தியான நீ ஆராய்ந்து தர வேணும்
வித்யா க்ரஹண தாரணத்திலே கண்டான் இறே சக்தி மத்தையை-
கோதில் வாய்மையினான் –
காதல் என் மகன் என்ற இவனை இறே-கோதில் வாய்மையினான் -என்கிறது
அதுக்கு கருத்து என் என்னில் -குரு வசன மலங்க நீயம்
என்கிற கிருஷ்ண அபிப்ராயத்தாலே –
இருவரும் பிரிந்து இருக்கிற அளவில் -த்ருஷ்டா சீதா -என்கிற திருவடி அளவில்
சொல்லும் வார்த்தையை இறே இவன் அளவில் சொல்லுகிறது –
(பிரயோஜனந்த பரராயும் அத்தையே கண்ணன் இடம் கேட்டதால் கோதில் வாய்மையினான் என்றுமாம் )
உனை வேண்டிய –
சிஷ்யன் என்று இறே அவனுக்கு பிராப்தி-பிரதிபத்தி –
மோஷ ப்ரதன் என்று அன்று இறே
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் வருமது அன்றே மோஷ ருசி –
நைர்தோஷம் அடியாக பகவத் பிரசாதத்தாலே வர வேணுமே
அது உண்டாகில் இறே இத்தை அபேஷிபபது –
(விஷயாந்தர ப்ராவண்யம் ஆகிற தோஷம் உண்டே இவனுக்கு )
குறை முடித்து-
என் பிள்ளையைக் கொடு வந்து காட்டித் தர வேணும் -என்ன
அப்படியே செய்கிறோம் -என்ற போதே
அற்றது இறே அவன் குறை –
அவன் சிறுவனைக் கொடுத்தாய் –
மோந்து பார்த்தாலும் குடல் துடக்கு தோன்றும்படி இறே கொடுத்தது
மாதவத்தோன்-புத்திரன் போய் மரி கடல் வாய்-இத்யாதி -பெரியாழ்வார் –
உருவுருவே கொடுத்தான் –
இப்போது கொடுக்கிற வடிவு தான் பழைய வடிவு தான் என்னும்படி யாய்த்துக் கொடுத்தது
தக்கணையா –
சிஷ்யத்வ சித்திக்காக
உருவுருவே –
அசந்நேவ-என்னும்படியான-வஸ்துவுக்கு சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து
உருவுண்டாக்கி
சேஷத்வ அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை கொடுக்கை –
(இதுவே ஸ்வா ப தேசம் இந்தப் பாசுரத்துக்கு )
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
சரீர அவஸா நத்திலே பேறு தப்பாது இறே
நீர் சர்வ சக்தியான பின்பு அவ்வளவு தான் ஆறி இருக்கிறது என்
என்னும் த்வரையாலே சரணம் புகுந்தேன் –
அணி பொழில் இத்யாதி –
கடல் கொண்ட வஸ்துவை மீட்டு
உருவுருவே கொடுத்தால் போலே
சம்சார ஆர்ணவம் கொண்ட என்னை மீட்டு
வ்ருத்தி பர்யந்தம் ஆக்கி
தருகைக்கு அன்றோ தேவரீர்
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
——————————————–
கங்கா ஸாம்யம் புரா ப்ரோக்தம் – காவேரிக்கு முன் தேவ தேவ ப்ரஸாதத்தால் – –
ஸ்ரீ அரங்கன் வந்த பின்பு திருவடிகளை வருடிக் கொண்டே இருந்து ஆதிக்யம் அவாப்த்தி
தெண்ணீர் பொன்னி அடி வருட -பள்ளி கொண்டு அருளி இருக்கும்
நுரை காட்டி சிரிக்கும் படி -ஹஸந்தி -பரிஹாஸ சிரிப்பு
லோக முத்ரா -தலைக்காவேரி -பொன்னி -சூழ் அரங்கம் மேய -ஹேமா பகா –
காவேரி மஹாத்ம்யம்
ஆதி ரெங்கம் -மத்யம ரெங்கம் அப்பால ரெங்கம் -பரிமள ரெங்கம்
பெரிய பிராட்டியார் தாயார் காவேரி -பாற் கடல் தகப்பன் -தெண்ணீர் பொன்னி
வரும் பொழுதும் போகும் பொழுதும் தெளிவிலா கலங்கல் -காவேரி –
அம்மா மண்டபம் -தவராசன் படித்துறை –
பாலம் மீது கடந்து போகாமல் இறங்கியே தாண்டுவார்
வட திருக் காவேரி தென் திருக்காவேரி -நான்கு கரைகளும் நான்கு புருஷார்த்தங்கள்
தாமரை கர்ணிகை போல் சந்த்ர புஷ்கரணி —
திவ்ய தேச பெருமாள் இங்கேயே சயனம்
ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது -அடியார்கள் வாழ –மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
மதிள் திரு அரங்கம் என்னாது காலம் கழிக்கிறீர்களே
கோயில் -காட்டினான் திரு அரங்கம் -நல்லதோர் அருள் -நாட்டினான் தெய்வம் எங்கும் இது அருள்
போக மண்டபம்
பெரிய அனைத்தும்
ஸ்ரீரெங்கே ஸூகமாக வாழ கத்யத்தில் ஆணை
வேர் பற்று புவி ரெங்க தனம் –
பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும் ராமானுஜன்
திரு அரங்கம் நம்மூர்
அவன்தூர் அரங்கம் என்னாது –
ரெங்க யாத்ரா தினே தினே -ராஜாநாம் குலசேகரம்
சேஷ பீடம் முன்னே
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
ந்ருத்த ஸ்தானம்
உல்லாச –மங்கள தீப ரேகம்
ஜகந்நாதன் -நாராயணன் -முன்பு
பிராணாவாகார விமானம் –
நான்கு பெரிய ப்ரஹ்ம உத்சவங்கள்
சப்த பிரகார மத்யே -காவேரி மத்திய தேசே -தர்ம வர்மா திருச் சுற்று முதலில்
1323–1371- 48 வருஷம் வெளியே சென்று கடாக்ஷித்து
செஞ்சி கோட்டை விருப்பண்ண உடையார் –
வைதிக புத்ர இதிகாசத்தை
முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
இப் பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை-
ஆனால் வாசி என் என்னில்
தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே
கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது –
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8-
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன் –
அந்தணன் ஒருவன் என்னாதே
கீழ்ச் சொன்ன விசேஷணத்துக்கு தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரனுக்கு தீரக் கழிய இவன் கார்யம் செய்ய வேண்டும்படியான
இவன் வஸ்துதை சொல்லுகிறது –
(ஸ்வரூபம் உள்ளபடி அறிகை ஆகிற சத்தை )
வேதத்தை விஷயீ கரித்த வாக் இந்த்ரிய வியாபாரத்தை உடையவன்
வேத பாராயண பரன்
இத்தால் இஸ் ஸ்வரூப-( ஆத்ம ஸ்வரூபம் ) ஜ்ஞானம் உடையவன் -என்கை
வேத தாத்பர்யத்தை நிர்ணயித்து
அதுக்கு வாசகமான பாராயணத்தை பண்ணுமவன் –
(பிரணவ யுக்த ஞானம் -அநந்யார்ஹ சேஷ பூதன் உணர்ந்து )
அந்தணன் ஒருவன் –
அறவனை ஆழிப் படை அந்தணனை-திருவாய் -1-7-1- -என்னுமா போலே சுத்தி யோகத்தைச் சொல்லுகிறது
ஆத்மாவுக்கு சுத்தி யாவது
நஹி ஜ்ஞாநேன சத்ருசம் பவித்ரமிஹ வித்யதே -ஸ்ரீ கீதை -என்னுமா போலே
பிரணவோக்த ஜ்ஞான சுத்தி இறே
தபஸ் தீர்த்த யாத்ரா சேவனம் அன்றே
(திருமந்த்ரார்த்தம் அடுத்து ஒன்பதாம் பாசுரம்
அதுக்கு பொசிந்து காட்டும் பிரணவ அர்த்தம் இதில் )
கீழ் அந்தணன் -என்றது -சாந்தசன் என்றபடி
இங்கு வைதிகன் என்றபடி
சாந்தசராவார் -பிரயோஜநார்த்தமாக ஓதுவது ஒத்துச் சொல்லுவது ஆமவர்கள்
(ஏழாம் பாட்டில் தாமச குணம் உடைய அந்தணன் -ப்ரயோஜனாந்தர பரர் )
வைதிகராவார் -வைதிகக என்றபடி
வேத தாத்பர்யம் அறியுமவர்கள்
சுத்திக்கு அத்விதீயன்
ஸ்வரூப ஜ்ஞானத்தை விசதீ கரிக்கிறது -இரண்டு பதத்தாலும் –
எந்தை
எனக்கு உத்பாதகன்
மாதா பிதாக்களைப் போலே தோற்றி மாய்ந்து போகை அன்றிக்கே
அவ்யய பிதா -என்கிறபடியே அழியாத பிதா -என்றபடி –
அடியிலே இத்தை உண்டாக்கி
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பித்த உபகாரகன் என்று ஆய்த்து
அனுசந்திப்பது இவன் –
நின் சரண் –
நீயே எனக்கு உபாயமாக வேணும் –
அநந்ய சாதனனாய்
அநந்ய பிரயோஜனனாய்
இருப்பான் ஒருவன் –
(இரண்டு தூய்மை திருப்பாவையில் உண்டே )
நாமே ஆஸ்ரயணீயர் என்றும்
நாமே உபாயம் என்றும்
அத்யவசித்தாய் யாகில்
உனக்கு இனி குறை என் என்ன –
எனக்கு ஒரு குறை இல்லை
என்னுடைய மனைவி –
என்னுடைய கிருஹிணி
என்னோடு சஹ தர்ம சாரிணி யானவள்
பிதரம் மாதரம் தாரான் -என்று த்யாஜ்யை யானவள் அல்லள்
அவள் கண்ணில் கண்ண நீரைக் கண்டால் ஆன்ரு சம்சயத்தாலே
கார்யம் செய்ய வேண்டும்படி இருக்கிறவள் –
(மம ஸூ தா போலே-என்னுடைய மனைவி )
காதல் மக்களை –
பிள்ளைகள் பக்கலில் ஸ்நிக்த்தையாய் போரும்
பயத்தாலும் காணாள் –
செய்வது எல்லாம் செய்து
பத்து மாசம் வயிற்றிலே தரித்துப் பெற்ற அளவிலே
காணப் பெறுகிறிலள்
(மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெற்றால் ஆசைப்படலாமே )
அதுக்கடி என் என்னில் –
கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் –
இப்படி இருப்பதொரு தேவதையை
இதுக்கு முன்பு நான் கண்டு அறியேன்
யமனும் உடல் கிடக்க இறே கொண்டு போவது
(இங்கு சரீரத்தோடு -பஸ்யதோ ஹரத்வம் )
பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்னே
பார்த்துக் கொண்டு நின்று கொண்டு போவாரைப் போலே
வடிவோடே கொண்டு போய் ஒளியா நின்றது
கிருஷ்ணன் உடைய வடிவு அழகைக் காண வேணும் என்று நாச்சிமார் செய்தது இறே –
(சூட்டு நன் மாலைகள் -இத்யாதிப்படி –திரு அவதரிக்க -காண ஆசைப்பட்ட பிராட்டிமார் கார்யம் அன்றோ -)
அழைப்ப –
இப்படி விண்ணப்பம் செய்ய
அதாவது
கிருஷ்ணன் ஒரு யாக விசேஷத்திலே தீஷித்து உறுப்புத் தோலும்
போர்த்துக் கொடு நிற்கிற நிலையிலே இவன் சென்று
என் பார்யை யானவள் மூன்று பிரஜைகளைப் பெற்றாள்
பெற்ற போதே முகத்திலும் விழியாத படி தைவம் கொண்டு போகா நின்றது
அவள் இப்போது ஆசன்ன ப்ரசவை
இப் பிரஜையை நோக்கித் தர வேணும் -என்ன
அப்படியே செய்கிறோம் -என்று எழுந்து அருளப் புக்க அளவிலே
தீஷிதரான தேவரீர் எழுந்து அருள வேணுமோ
நான் போய் பரிஹரித்துப் போகிறேன் -என்று அர்ஜுனன் சொல்ல
அப்படியே செய்யலாகாதோ -என்று ஸ்மிதம் பண்ணி அருளிச் செய்ய
அவனும் கர்ப்ப க்ருஹத்தைச் சுற்றும் சரக் கூட்டமாக கட்ட
அதுக்கு மேலே
பிரஜையினுடைய அழுகைக் குரல் கேட்டவாறே -பிராமணன்
கிருஷ்ணன் வந்து நோக்குப் புக நீ ஒரு ஷத்ரிய அதமன்
அடை கொடு பாழ் போக்கினாய் -என்று
அர்ஜுனன் முன் மடியைக் கொத்துப் பிடித்து
கிருஷ்ணன் பாடே இழுத்துக் கொண்டு வர
பின்னையும்
வைதிகனையும் அர்ஜுனனையும் தேரிலே ஏற்றிக் கொடு போய்
(திருவாய் -3-10-5-ஒரு பொழுதில் எல்லா உலகும் கழிய –பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர்
கடவி சுடர் ஒளியாய் உடலோடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே )
காரணத் தளவும் நிறுத்தி பரம பதத்திலே சென்று
பிள்ளைகளை நால்வரையும் மீட்டு
பூசின சாந்தும் மஞ்சளும் காதில் தோடுமான வடிவோடே கொடு வந்து காட்டிக் கொடுத்தான்
(ரிஷி புத்ரன் ஆகையால் பிறந்த போதே தோடு இருந்ததே -ஈடு )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
அவ் வடிவோடே கொடு வந்து காட்டிக் கொடுத்தான் ஆய்த்து –
(காமம் தொலைத்து -ருசி உடன் – போக வில்லையே -ஆகவே மீளலாமே
பிராட்டி உடைய ஸ்வா தந்தர்யம் அடியாக பிள்ளைகள் போனார்கள் -ஆகவே மீளலாம் -)
ஏதலார் முன்னே –
பிரஜைகள் தான் போய் நெடும் காலம் உண்டாம்
இன்னவிடத்திலே புக்கார்கள் என்று தெரியாதாம்
இப்படி இருக்க கிருஷ்ணனைக் கொண்டு மீட்டுக் கொள்ளப் புகுகிறானாம்
என்று சொல்லுமவர்கள் முன்னே கிடீர் மீட்டுக் கொடுத்தது
ஏதலர் –
ஆழ்வார் வார்த்தை இருக்கிற படி -ப்ரத்யா சன்ன சத்ருக்கள்
அதாவது
சாஸ்திர பலம் பிரயோக்தரி அன்றோ
தன் கையில் ஒரு முதல் இல்லையாம்
வேறு ஒருவரால் பெற இருக்கிறானாம்
என்று இறே தங்களுக்கு என்ன முதல் உடையார்கள் சொல்லுவது –
(உபாசன -உபாயாந்தர பரர்கள் -ஏதலர் )
இன்னருள் இத்யாதி –
தன் பேறாயாய்த்து இறே செய்தது
இரங்கி என்றபடி –
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –
உன் மக்கள் இவர்களே -என்று தேறும்படியாக
அவயவப்படியே கொடு வந்து கொடுத்தாய் –
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
இப்படிப் பட்ட உன் அதிசய சக்தியை அனுசந்தித்து சரணம் புகுந்தேன்
அங்கு உள்ளாரை இங்கே மீட்டுக் கொடு வந்து கொடுத்தமை உண்டு
உமக்கு அங்கன் இருப்பது ஓன்று உண்டோ -என்ன
அதிலும் அரியது ஓன்று அன்றோ
இங்கு உள்ளாரை அங்கு ஏறக் கொடு போகை
அது செய்யலாம் -தன் நினைவாலே செய்யுமது ஆகையாலே
இத் தலையை இசைவித்து அத் தலை ஏறக் கொடு போகை அன்றோ அரிது –
அணி பொழில் இத்யாதி –
இங்கு உள்ளாரை அக் கரைப் படுத்துக்கைகாக அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
தேகாத்ம அபிமானியாய்
விஷய ப்ரவணனாய்
அநந்த கிலேச பாஜனம்–ஜிதந்த -என்கிற சம்சாரத்திலே அழுந்துகிற என்னை
ஸ்வரூப ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
உன் பக்கலிலே ப்ராவண்யத்தை உண்டாக்கி
அந்தமில் பேரின்பத் தடியரோடே வைக்காக அன்றோ
தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
————————————————————————
கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய
சக்தி யோகத்தைச் சொல்லி
உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது –
இப் பாட்டுக்கு உதயம் என் என்னில்
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நம்முடைய அதிசய சக்தித்வத்தையும் அனுசந்தித்து
த்வரிக்கை யாகிற் இது ஔபாதிகம் காணும்
நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன
உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும்
என்று சரணம் புகுகிறார் –
(பாகவத பர்யந்தமான சேஷத்வமே ஸ்வரூப ஞானம்
கொடு என்று மேல் வீட்டில் பிரார்த்தது
கீழ வீட்டில் -இது அறிந்தால் அவனைப் பெற த்வரிக்க வேண்டாமே -)
கீழே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று
திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று
ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் –
அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில்
தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது
ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-( நாரத கல்ப ஸ்லோகங்கள் )
கிந்தத்ர-என்றும்
நராஜ்ஜா தாநி–(பாரதம் அனுசாசன பர்வம் )என்றும்
திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க
க்வாஹ மத்யந்த துர்ப்புத்தி எது ஹிதம் ஆஜ்ஜை மாதவ -( ஜிதந்தே )-என்றான் இறே
சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது –
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-
துளங்கு –
மழுங்குதல் இன்றிக்கே
பளபளத்து இருக்கை
இத்தால் -தேஜஸ்சை சொல்லுகிறது அன்று –
அந்யோந்யம் விரோதம் வாராத படி
நாட்டை யாண்ட தேஜஸ்சை சொல்லுகிறது
நீண் முடி –
ஒக்கம் அல்ல
ராஜ்யத்தில் பரப்பை இட்டுச் சொல்லுகிறது
யரசர் தம் குரிசில் —
ராஜா
மனுஷ்யர்களுக்கு ராஜா என்னுமா போலே
ராஜாக்களுக்கு ராஜா
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம்
நாட்டில் பரப்பாலே -இத் தேசத்துக்கு அபிஷிக்தன் -என்று தெரியாது இறே
அதுக்காக –
தொண்டை மன்னவன் –
தொண்டை மண்டலத்திலே அபிஷேகம் பண்ணி இருந்த காலத்து
நாடு எங்கும் ஒக்க தனதாக்கிக் கொண்டது –
அதுக்கடி சொல்லுகிறது
திண் திறல் ஒருவற்கு-
வீர போகய வஸூந்தரா -என்னுமா போலே
தன் மிடுக்காலே எங்கும் ஒக்க எறிந்து கொண்டு
மிடுக்குக்கு அத்விதீயனாய் இருக்கிறவனுக்கு
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்று
இவர் மதித்த மிடுக்கு இறே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறக்க வேணும் -என்று
சரணம் புகுகிறதுக்கு நிதர்சனமாக சொல்லுகிறது ஆகில் –
துர்மானத்துக்கு ஹேதுக்கள் ஆனவற்றை சொல்லுகிறது என் என்னில்
ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால் இவ் விசேஷணங்கள்
அனுகூல ரஷணத்துக்கும்
பிரதிகூல நிரசனத்துக்கும்
ஏகாந்தமாய் இருக்கையாலே ஸ்வரூபாவயாம் இறே என்று –
உளம் கொள் அன்பினோடு –
ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே
திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே
இன் னருள் –
தன் பேறான அருள்
உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும் இருக்கச் செய்தே
ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே
சுரந்து –
முலைக் கடுப்பு தீர
தரையிலே பீச்சுவாரோ பாதி
அங்கோடு நாழிகை ஏழு
ராஜ்ய தூரோடு கூட
வ்யர்த்தமே கழிக்கிற காலத்தில்
ஏழு உடன் இருப்ப –
ஏழு அர்த்தத்தைப் பற்ற ஏழு காலம் என்கிறது இறே –
1-தேகாத்ம அபிமான நிவ்ருத்தியும்
2-ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியும்
3-அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
4-ஸ்வ யத்ன நிவ்ருத்தியும்
5-அபந்துஷூ பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தியும்
6-விஷய நிவ்ருத்தியும் –
7-நமஸ் ஆர்த்தமான ததீய சேஷத்வம்
(அஷ்ட ஸ்லோஹி
ஏழும் சொல்லுமே
இங்கு ஆறு
தேகமே ஆத்மா -மகாரம் -ஞானம் -உள்ளது -அறிந்து தேக ஆத்ம அபிமான நிவ்ருத்தி
ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தி -பிரதமம் அகாரம் ஆய –
இதர சேஷத்வம்-நிவ்ருத்தி உகாரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நம -எனக்கு நான் அல்லேன்
பாந்தவ ஆபாசம் -நிவ்ருத்தி -நாராயண -அவனே சகல விந்து
ஆபத்துக்கள் இடம் பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி
விஷய சபல நிவ்ருத்தி -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி
ஆறும்
நம -ஆழ்ந்த பாகவத சேஷத்வம் ஏழாவது – )
வளம் கொள் மந்திரம்-
அழகாதல் –
சஞ்சாரித்வமாதல் –
வளம் ஆகிறது
சகல பல பிரதனான ஈஸ்வரனைப் போலே எல்லார் பக்கலிலும் சஞ்சரிக்கை
கர்மாதிகளுக்கு உபகாரகமாய்
பிரபன்னனுக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அக்கரைப் படுத்தும் இறே
மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு –
அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து
ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி
குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது
(பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )
பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை
திரளிலே வெளியிடுவாரைப் போலே
தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை
இங்கன் வெளியிடுவதே
திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –
(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )
அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி
(நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )
உலகம் அளந்த –
விமுகர் தலையிலும் அகப்பட இருந்த திருவடிகள்
பொன்னடியே –
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயம்
அதாகிறது
ஸ்வர்ண ஸ்வ பாவத்தாலே பொன் கிண்டியில்
தண்ணீர் வசிஷ்ட சண்டாளர் விபாகம் அற விநியோகம் கொள்ளலாம் இறே –
அடைந்து உய்ந்தேன் –
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பிக்க வேணும் -என்று
சரணம் புக்கு உஜ்ஜீவித்தேன்
அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
திரு வேங்கடமுடையான் அளவிலே பிறந்த அர்த்தத்தைச் சொல்லி
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார்
திருமலையில் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும் இறே
பின்பு போய்ந்து சாய்ந்த இடம் அது இறே
மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று
தலைக் கட்டுகையாலே
ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே
சரணாகதியாய் இருக்கிறது -( த்வயார்த்தப்படியே சரணாகதி )
—————————————————
இவருடைய பாவ வ்ருத்தி இல்லையாகிலும்
இவருடைய பாசுரத்தைச் சொல்லவே
ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம்
என்கிறது –
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் –
நமக்கு இந்த நன்மை எல்லாம்
இவ் ஊரில் பிறப்பாலே வந்தது என்கிறார்
இத்தால் பிறந்தகத்தில் ஏற்றம் சொன்னபடி –
ஆப்தன் சொன்னான் என்ன வேணும் இறே லோக பரிக்ரஹத்துக்கு
வால்மீகிர் பகவான் ருஷி
சஹோவாச வியாச பராசர்யா
குருகூர்ச் சடகோபன்
என்னுமா போலே –
ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன்-
எதிரிகள் திருமங்கை ஆழ்வார் அழகு செண்டு ஏறப் புறப்பட்ட வாறே
முழுக் காயாக தன்னிலே அவியும் இத்தனை
இவருக்கு சத்ருக்கள் ஆகிறார்
பிரமாண தூஷகரான பாஹ்யரும்
பிரமேய தூஷகரான குத்ருஷ்டிகளும் இறே
இவர்களை வெல்லுகை யாவது
ஜித பாஹ்ய -இத்யாதி படியே
பாஹ்யர் உடைய பிரதிமையை இட்டு திரு மதிள் உள்ளிட்டவை செய்தும் –
ஆகமிகர் பர தேவதையாக சொல்லுகிற ருத்ரன் உடைய பரத்வத்தை அறுத்து
அது தன்னையும் எடுத்து பொகட்டார் இறே –
கலி கன்றி –
பாப பிரதிபடர்
பகவத் பிரபாவங்களை மதித்துச் சொன்ன பாசுரங்கள் இறே –
கவி பாட்டுண்ட விஷயம் இருக்கிற படி சொல்லுகிறார் மேல்
அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை -என்று
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் -என்றவாறே
அணி பொழில் சூழ் திருவரங்கம்
எங்கே புக்கு ஒளித்தது -என்று அருளிச் செய்தார் பட்டர் –
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை –
நீடு –புகழ்
அனுகூல ரஷணத்தில் வந்தால் திரு உள்ளத்தையும் முன்னோடி நடத்துகை
அற முயலாளி -என்னக் கடவது இறே
தொல் புகழ்
இது தான் ஆகந்துகம் அல்ல
1-ஆழி வல்லானை
திரு ஆழியை ஸ்வ வசமாக்கிக் கார்யம் கொள்ள வல்லவன்
என்னும் இது போலே காணும் ஏற்றம் –
2-எந்தையை –
பரிகரம் உண்டானாலும் பிறர் கார்யம் செய்ய வேண்டுவது இல்லை இறே
ப்ராப்தி இல்லை யாகில் –
கார்யம் செய்கைக்கு ஈடான ப்ராப்தி சொல்லுகிறது
3-நெடுமாலை
ப்ராப்தன் ஆனாலும் பிரயோஜனம் இல்லை இறே வ்யாமுக்தன் அன்றாகில்
அதுக்காக நெடுமாலை -என்கிறது
இத்தால் ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான-மூன்று – ஸ்வ பாவங்கள் சொல்லுகிறது –
நினைந்த பாடல் –
தந் நிஷ்டர் ஆனவர் பாசுரம்
அனுபவம் வழிந்து புறப்பட்ட பாசுரமான சொற்கள் –
பத்திவை –
முகம் அறிவார் முத்தைச் சேரக் கோத்து
கையிலே இட்டுக் காணுமா போலே –
(அர்த்த புஷ்ட்டி உள்ள -நவ ரத்ன மாலை யன்றோ இதுவும் )
பாடுமின் தொண்டீர்
பகவத் விஷயத்தில் சபலராய் இருப்பார் –
பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –
பால் குடிக்க நோய் தீருமா போலே
இவருடைய பாசுரத்தைச் சொல்ல
ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது –
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-
சரணாகதிக்கு அபேக்ஷிதமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply