நீலன் கலியனாக காரணம்
திரு வெள்ளக் குளத்தில் குமுதவல்லி நாச்சியாரைக் கண்டு
வைத்தியர் வளர்க்க –
பஞ்ச ஸம்ஸ்காரமும் ததீய கைங்கர்யமும் -நாள் தோறும் 1000 பேருக்கு ஒரு சம்வத்சரம்
வயலாலி மணவாளன் -கலியன் பெயர்
மந்த்ர வாதமோ கேட்க –
அரச மரம் அடியில் தெய்வங்களுக்கு அரசன் ஆலி நாட்டு அரசனான இவருக்கு
மந்த்ர அரசான திரு மந்த்ர உபதேசம் பெற்று
திருமங்கை ஆழ்வார் ஆனார்
ஆத்மாவை வெய்யில் வைத்தவர் நிழலில் வைத்து தேகத்தை வெய்யிலில் வைத்து வாடா
இன்றும் குமுத வல்லி நாச்சியார் உடனே சேவை
இங்கும் சரணாகதி -நான்காவது திவ்ய தேசம்
ஒன்றின் இரண்டு பகுதியாக வியாக்யானம்
கீழே அவனே ரக்ஷகன்
இதில் இடரைக் களைய பிரார்த்தனை –
அண்ணன் பெருமாள் மூலவர் கிழக்கு நோக்கி
அலர்மேல் மங்கை
ஸ்ரீ நிவாசன் உத்சவர்
பத்மாவதி தாயார் உத்சவர் பூவார் திரு மா மகள்
ஐப்பசி சுக்ல தசமி கார்த்திகை சுக்ல பாஷா ஏகாதசி தவம் சுவேதன் இருந்தான்
இருவரும் விடாய் தீர்ந்த இடம் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கண்ணார் கடல் பிரவேசம்
காவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்
சம்சாரத்திலே
சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே
தம்மை இருக்கக் கண்டார்
ப்ரியஞ்சனம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராஷசீ கணம்
ஸ்வ கணேன ம்ருகீம் ஹீநாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -ஸூந்தர காண்டம் -என்னும்படியே
இழக்கிறது நித்ய ஸூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்
பெறுகிறது -சப்தாதி விஷயங்களையும்
அவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது
நீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று
நீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன
உனக்கு அபிமதம் ஏது என்ன –
த்வத் பிராப்தி விரோதியான
பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும்
என்கிறார்-
(மாம் ஏகம் சரணம் வ்ரஜ கீழ்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அவன் கிருத்யம் உணர்த்துகிறார்
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி தானே செய்வானே
இவர் பிரார்த்திக்க வேண்டியது என்ன
வ்ருத்த கதனம் -வரத்திஷ்யமான கதனம் -இரண்டையும் சொல்லி
வாடினேன் வாடினேன் தொடங்கி திருமந்திரம் கற்ற ஹர்ஷத்தால்
தத் அர்த்த அனுசந்தான பூர்வகமாக திருப்பதிகள் தோறும் மண்டி
ப்ராப்யதயா -ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் ப்ராப்யம் என்று திரு உள்ளத்துக்கும் சம்சாரிகளும் அறியும்படி உபதேசித்து வந்தவர்
திருக் காவளம் படி ஒரு கால் போல் ஒன்பதில் கால் சரணம் புக்கு அவன் அருளிச் செய்தவற்றை திரு உள்ளத்தில் படுத்த
அவனும் சர்வஞ்ஞன் ஆகிலும் இவர் பாசுரம் கேட்டு உகக்குமவன் ஆகையால்
இத்தனை நாளும் திவ்ய தேசங்களில் மண்டி இருந்த உமக்கு வேறே அபேக்ஷிதம் என்ன என்று கேட்டு -ப்ரஸ்ன ரூபத்தால்
பதிலாக அவன் அருளிச் செய்த சரம ஸ்லோக அர்த்தத்தை இவரை இட்டு வெளியிடப் பண்ணி அருளுகிறார் –
கத்யத்தில் இதே போல் ஸ்ரீ உடையவரும் பிரார்த்தித்து அருளுகிறார் -)
———————————–
கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-
நாங்கூர் ஏழாவது திவ்ய தேசம் இது
நாங்கை -மூன்றும் பார்த்தோம் அடுத்த பார்த்தன் பள்ளி நாலாவது
சரீரத்தில் இடர் இல்லை சரீரமே இடர் என்றவாறு –
கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ
வைத்த கண் வாங்கப் போகாத படியான
கடல் போலே இருக்கிற திருமேனியை உடையவனே
அன்றிக்கே
இடம் உடைத்தான கடல் போலே இருந்துள்ள திருமேனியை உடையவனே -என்றுமாம்
ஒரு கால் அழகிலே
ஒரு கால் கம்பீர ஸ்வ பாவத்திலே
(சமுத்திர இவ காம்பீர்யம் ராமன் -சிசுபாலனுக்கும் பேறு தசரதனுக்கு இழவு –
காம்பீர்யம் -ஆழம் காண மாட்டாமை
களை கண் நீயே சொன்னாலும் உன் திரு உள்ளம் அறிய முடியாதே -)
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
சத்ருக்கள் உடைய யுத்தத்தில் முதுகு காட்டாதே
வென்றி கொண்டு அல்லது மீளாதவர்கள்
மன்னுகிற திரு நாங்கூர்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து வண்ணா
பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற
நிருபாதிக பந்துவே
அடியேன் இடரைக் களையாயே –
புறம்பு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது
அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
———————————————
கீழே திருமேனி அழகு
இதில் ஒப்பனை அழகு
அண்ணா -இடரைக் களையாய் என்றாலும் இவர் இன்னும் சொல்லும் வார்த்தை கேட்க ஆசை
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு தனி மாலை இட்டு
ஆஸ்ரித ரக்ஷணம் செய்பவர் உள்ள திவ்ய தேசத்தில் நித்ய வாஸம் செய்து அருளி
ஆஸ்ரிதர்களில் ஒருவனான அடியேனை ரஷிக்க வேண்டாவோ என்கிறார் –
கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-
கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே
திருக் குழலில் ஸ்பர்ச்த்தாலே கொந்தாரா நின்றுள்ள
துளவ மலரை அணிந்தவனே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
விச்சேதியாதே
சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய திரு நாங்கூர்
அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ -என்கை
(நந்தா விளக்கே -3-8-கீழே பார்த்தோம் )
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள் எந்தாய் அடியேன் இடரைக் களையாயே
திருமேனிக்கும் அவயவ சோபைக்கும்
ஒப்பாய் இரா நின்றது
ஊரில் பொய்கையில் நீரும் தாமரையும்
(கடல் போல் திருமேனி
முடியில் திருத்துழாய் போல்
நீரில் செந்தாமரை )
—————————————————
ரக்ஷணத்துக்கு தனி மாலை இட்டது என்றது
கோவர்த்தன வ்ருத்தாந்தத்தால் சொன்னபடி –
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-
நெடியாய் –நினைவால் நெடியவன் -அபரிச்சின்ன ஸ்வரூபம் ரூபம் குணங்கள்
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
இன்னத்தால் இன்னத்தை காப்பது என்னும் நியதி இல்லை –
மலையைக் குடையாகக் கொண்டு
மழையை காத்து
இவற்றுக்கு உறுப்பாகப் பெற்றோமே என்று உகந்தவனே
மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும்
என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
(சம்சார சாகரம் -அவர்களுக்கு மழை
விலகி உள்ள அடியேன் பக்தி இல்லாமல் திரிந்த
ஏழு நாள்கள் அவர்களுக்கு அநேக சம்சார ஜென்மங்கள் எனக்கு )
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சர்வேஸ்வரனுக்கு ஹேய பிரத்ய நீகமாய்
கல்யாணை கதாநமான புகழாய் இருக்கும்
அப்படியே அவ் ஊரில் பிராமணர் புகழும்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா ப்ரதி பேதிரே-
துரியோதனன் பாண்டவர்கள் பக்கல் பஷபாதத்தாலே
கிருஷ்ணன் வாரா நின்றான் என்று
தானும் தன்னுடைய பரிகரமுமாக ஒப்பித்துக் கொண்டு இருந்து
ஒருத்தன் எழுந்து இருத்தல் வணங்குதல் செய்யக் கடவது அன்று என்று
வ்யவஸ்த்தை பண்ணிக் கொண்டு இருக்க
அவசா-
தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சருகு எல்லாம் கூடி -காற்று அடித்தால் பறக்கக் கடவோம் அல்லோம்
என்று பண்ணும் வ்யவஸ்தை போலே இறே
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற
திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
நெடியாய் –
ஸ்வரூப ரூப குணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
(அனோர் அணீயான் மஹதோ மஹான்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
தோள்கள் ஆயிரத்தாய்
சமஸ்த கல்யாண குண சாகரம் )
அடியேன் இடர் நீக்கே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ
ஆறி இருப்பது
————————————————
இடையர் இடர் தீர்க்க மலையை எடுத்த அளவோ
ஆனையை நிரசித்த சக்திமான் அன்றோ
கிருபையை பொழிய வேணும்
ரக்ஷணத்துக்கு மாலை இட்டத்துக்கு இதுவும் ஸூ சகம்
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே
நாநா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே—4-7-4-
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே
பொற்றை உற்ற முற்றல் யானை -திருச்சந்த -என்னும்படியே
புகும் வயஸ் எல்லாம் காட்டிலே புக்கு
மனிசரோடே முகம் பழகாதே இருக்கிற
ஆனையினுடைய கொம்பை முறித்த களிறே
ஒரு மத்த கஜம் ஒரு யானையின் கொம்பை முறித்தது
நாநா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
ஜன்மத்தால்
வ்ருத்தத்தால்
ஞானத்தால்
ஆண் பிள்ளைத் தனத்தால்
எல்லா வற்றாலும் கரை புரண்டு வருகிற
நன்மையை உடையவர்கள் மன்னுகிற திரு நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆனாய்
வண்டுகள் ஆர்ந்த பொழில் சூழ்ந்து இருந்துள்ள
திரு வெள்ளக் குளத்தானாய்
செல்ல நின்றதுவும்
வர நின்றதுவும்
ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் –
ஆனாய் -என்கிறார்-
(கீழே களிறு
இங்கு மீளவும் ஆனாய்
கமன ஆகமன -செல்வதும் வருவதும் ஆகர்ஷகமாய் ஈர்க்கும்
மத்த கஜம் -இன்னது என்று நிர்தேசிக்க முடியாமல் திரும்பவும் யானையே என்கிறார் )
அடியேனுக்கு அருள் புரியாயே
——————————————————————-
கண்ணார் கடல் சூழ் -அண்ணா அடியேன் இடரைக் களையாய் –1-10-1-
இங்கு திருவேங்கடம் மேய விளக்கே –
நான் விபவ அவதாரத்தில் செய்ததைக் கொண்டு நீர் வளைப்பது என் என்ன
திரு வெள்ளக்குளத்தில் ஜென்ம வ்ருத்தாதிகளில் குறை உள்ளாருக்கு முகம் காட்டி இருப்பவர் அன்றோ
நாடார் -புகழ் -தர்மங்களைச் செய்து விரோதியைப் போக்கிக் கொள்ளும் என்ன
கானகமும் வானரம் வேடுவர்களுக்கும் முகம் காட்டுபவன் அன்றோ
அடியேன் தர்மம் செய்து கிட்டுவது முடியாதே –
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே —4-7-5-
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
பரிவுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் குறைவற்று
திருமலையில் நின்றும்
பூமியிலே இழயில் குடிப் பழியாய் இருக்கும்
திரு வேடுவராலே நிறையப் பெற்ற
திருமலையிலே மேவின விளக்கே
தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
குளப்படியிலே கடலை மடுத்தால் போலே
அவ் ஊரில் பிராமணர் உடைய
புகழுக்கு பூமியில் இடம் போராது என்கை-
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
சேடு -திரட்சியும் தளிரும்
பாடா வருவேன் வினையாயின பாற்றே
உன்னுடைய குணங்கள் பாடி வருகிற என்னுடைய வினைகளை
பாற்றே –
அவயவியாய் காணப் போகாத படி சிதறப் பண்ணு
அன்றிக்கே
பாடா வருவேன் –
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்
இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –
———————————————-
வேடுவர் அங்கு பாப விநாசம் போன்ற புண்ய தீர்த்தங்களில் நீராடி நிரஸ்த பாபங்கள் போக்க பெற்றனர்
நீர் அவ்வாறு செய்தவர் அல்லீரே என்ன –
கல்லை நீரில் மிதக்கப் பண்ணின உனக்கு எனது பாபங்களைப் போக்க அரிதோ
ஸமஸ்த பிரதிபந்தகங்களை போக்கி அருள வேணும் என்கிறார் –
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே —4-7-6-
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நீரில் ஆழும் கல்லாலே கடலிலே அணை கட்டி
சம்சாரிகளுக்கு உறுப்பாக செய்யப் பெற்றோம்
என்று உகந்தாய் –
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
பர சம்ருத்த ஏக பிரயோஜனராய்
ஆன்ரு சம்சய பிரதானரான
பிராமணர் மன்னுகிற திரு நாங்கூர்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே
அவித்யா கர்மா வாசனா ருசி
பகவத் அபசாராதிகள்
பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே
(சர்வ பாபேப்யோ என்பதையே எல்லா இடரையும் )
—————————————————
திரு அணை அணித்தாய் இருக்க அங்கு சென்று பாப நிரஸ்தம் செய்து கொள்ள மாட்டீரோ
என்னையே நிர்பந்தம் செய்வது என்
நான் எளியனோ என்ன எம் கோவலர் கோவே-
நாட்டார் போல் சிலவற்றைக் போக்கி சிலவற்றை போக்கிக் கொள்ளவது போல்
இடையர் சொன்னதைச் செய்தவன் அன்றோ
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென் வல் வினை தீர்த்து அருளாயே —4-7-7-
மாலே -பெரியவரே –
கோவலர் கோவே-திரு நாமம் சாத்துகிறார்
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
சிருஷ்டி சம்ஹாரங்களை சங்கல்ப்பத்தாலே செய்யும் நீ
அந்த ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே
கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான
வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே
என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
நாலு வகைப் பட்ட வேதத்தை கரை கண்டு இருக்கிற பிராமணர்
மன்னுகிற திரு நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள் மாலே –
நீர் மாறாமையாலே சேல்கள் ஆர்ந்து இருந்துள்ள
வயல் சூழ்ந்த
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே
யென் வல் வினை தீர்த்து அருளாயே –
என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை
போக்கி அருளாய்
————————————————————
இடையரும் இங்கு உள்ள அந்தணரும் இந்த விபூதியில் இருந்தவாறே
நீரும் நம்மை அனுபவித்துக் கொண்டு இருக்கலாகாதோ என்ன
சம்சார பிரளயத்தில் அகப்பட்டுள்ளேன்
நீர் வத்சலன் அல்லையோ
இடையர் உனது குணம் சேஷ்டிதங்களால் மண்டி தரித்து இருக்க
அந்தணர் வேதங்களால் உன்னை மன்னி இருந்தார்
எனக்கு அப்படியான திடல் கிடைக்க வில்லையே –
வராக மதாகி யிம் மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-
வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
பூமியை பிரளயம் கொள்ள
பிறப்பே பூமியை யிடக்க வல்ல -ஒட்டு விடுவிக்க வல்ல-வராஹமாய்
பூமியை இடந்தாய்-
நாராயணனே –
பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே-
நல்ல வேதியர் நாங்கூர்ச்
ஆசார பிரதானரான பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே
ஊரில் ஐஸ்வர்யத்தை கோள் சொல்லா நின்ற பொழில் சூழ்ந்த
திரு வெள்ளக் குளத்திலே அபூர்வ வத் போக்யன் ஆனவனே-
(அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் )
யடியேற்கு அருளாயே –
ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது
(உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ )
இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க
பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க
நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க
அருளாய் -என்கிறார்
———————————————
சம்சாரம் பிரளயம் தீர்க்க
ஸ்ரீ மான் –பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு -சரணம் புகுகிறார் –
அண்ணன் பெருமாள் மூலவர் கிழக்கு நோக்கி
அலர்மேல் மங்கை
ஸ்ரீ நிவாசன் உத்சவர்
பத்மாவதி தாயார் உத்சவர் பூவார் திரு மா மகள்
ஐப்பசி சுக்ல தசமி கார்த்திகை சுக்ல பாஷா ஏகாதசி தவம் சுவேதன் இருந்தான்
இருவரும் விடாய் தீர்ந்த இடம் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-
தேவா -ஸுசீல்யம் கீழே வாத்சல்யம்
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
பூவிலே பிறந்தவள்
பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி
மார்வு படைத்தவனே
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
கண்ட போது புகழ்ந்து
காணாத போது -என் செய்தோம் -என்று வெறாதே
இவர்கள் குணங்களை புகழப் பெற்று
நாப் படைத்த பிரயோஜனம் பெற்றோம்
என்னும்படியான பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கூர் –
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
பரம பதத்தில் நின்றும் வந்து
சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே
தீப்யமாநனாய் இருக்கிறவனே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான்
ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே
————————————-
நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-
அன்பு -பக்தி
நல் அன்பு -பரம பக்தி
நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூரச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
பரம பக்தி உக்தரான பிராமணர் வர்த்திக்கிற
திரு நாங்கூர்ச் செல்வன்
திரு வெள்ளக் குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
தோள் வலி போலே கவி பாட வல்ல வலியும்
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே
தங்களுக்கு போய்த்தில்லை யாகிலும் -விசதமாக வாராதே போனாலும் –
பிறர் போம் என்னும்படியாக
வல்லவர்கள்
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-
கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply