ஸ்ரீ பெரிய திருமொழி-4-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்ரீ கஜேந்திர வரதனே இங்கு சேவை
தொடங்கும் பொழுது மணி மாடக்கோயில் பார்த்தோம்
இங்கும் மணிக்கூடம்
மணியான எம்பெருமானே சேவை
பெரிய திருவடிக்கு சேவை இங்கு
கஜேந்திர மோக்ஷம்
கோப பிரசாதங்கள்
மணி -திரு -கோயில் அமைப்பும் மணி போல்
தேவர்களுக்காக -அமிர்தம் கொடுக்க வேஷம் -சந்திரன் சூர்யன் காட்டிக் கொடுக்க
ராகு கேது -சாயா க்ரஹம் -கற்பனை
நேர் எதிராக சுத்தும்
கீழ் திருத் தெற்றி அம்பலத்தில் சூர்யன்
இங்கே சந்திரன் ஒளிந்து
நான்கு திருக்கைகள்
சந்த்ர புஷ்கரணி
கனக விமானம் –

தூம்புடை பிரவேசம்

சர்வ நிர்வாஹகனாய்-( 7-8-9-பாசுரங்கள் )
சர்வ அபேக்ஷித ப்ரதனாய் ( 6 பாசுரம்-சர்வ ரக்ஷகத்வத்தால் வந்த சர்வ அபேக்ஷித ப்ரதன்)
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-
விரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ( 2-3-4-5-பாசுரங்கள் )
திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று
க்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு
வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்

சர்வ நிர்வாகத்வமும் சர்வ ரக்ஷகமும் தமக்காக என்று நினைக்கும்
பரந்த திரு உள்ளம் -அரங்கம் ஆளி என் ஆளி போல்

———————————————————-

தூம்புடைப் பனைக்கை  வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ்  நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1-

கடு மழை-கல் மாரி -கல் எடுத்து கல் மாரி காத்தான் அன்றோ –
முற்றும் புகுந்து-முற்றம் புகுந்து-பாட பேதம் –

தூம்புடைப் பனைக்கை  வேழம் துயர் கெடுத்தருளி
துளையை உடைத்தாய்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -திருவாய் மொழி -4-1-4-என்னுமா போலே
பனை போலே இருந்துள்ள கையை உடைய ஆனையின்  உடைய
துயர் கெடுத்தருள்

பணைக் கை என்ற பாடமாகில்
(பருமனனான )அகப்பட்டாரை இடையற (இடையற –நடு ஓடிய) வீசும் கையை உடைய ஆனை-
பணைக்கை– தழைக் கை  -அத்தால் பருமனை சொல்லுகிறது

இத்தால் என்றும் மதித்துப் போந்த இத்தனை
பரிபவப் பட்டு அறியாத ஆனை என்று கருத்து

மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை -காம்பு -மூங்கில்
பூமியிலே வேர் பாய்ந்த
மூங்கிலை உடைத்தான மலையை ஏந்தி
பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த
என் ஸ்வாமி

பூம் புனல் பொன்னி –
பூத்த புனலை உடைத்தான பொன்னி யானது
அழகிய என்றுமாம்

முற்றும்  புகுந்து –
ஒரு காலால் (வாய்க்காலால் )புகுருகை அன்றிக்கே
அடையப் பரந்து புகுந்து

முற்றம் என்ற பாடமாகில்
வெளி உள்ள இடம் எல்லாம் புகுந்து

பொன் வரண்ட வெங்கும் –
கிடந்த பொன்னை எல்லாம் உருட்டிக் கொண்டு தள்ள

தேம் பொழில் கமழ்  நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
நீர் மாறாதே பாய்கையாலே
பொழில் ஆனது பரிமளம் கமழா நின்ற திரு நாங்கூர்

———————————————————-

தனக்கும் –பூதநா நிரஸனம்
தனது தேவியான சீதாபிராட்டி இருவருக்கும் உதவினவன்

கவ்வை வாள் எயிறு வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-2-

கவ்வை-ஆர்ப்பு அரவம் -பேர் ஒலி
இடும்பை-துர் வர்க்கம் இடைவிடாமல் மன்னிய துக்கம் –தாரித்யம் என்றுமாம்
தெய்வ நீர்-விலக்ஷணம் அப்ராக்ருதம் விரஜா போல் இதுவும் –

கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து –
கவ்வை -பேரொலியை உடையளாய்
யசோதைப் பிராட்டி விக்ருதையாய்
வாயாலே ஏத்தும் என்று கொண்டு
அவளை அனுகரித்து ஆர்ப்பரவத்தை உடையளாய்
வாள் போலே இருந்த எயிற்றை உடைய
திண்ணிய பேய்ச்சி உடைய
விஷத்தாலே விம்மிப் புகரை உடைய முலையைச் சுவைத்து

இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
இலங்கைக்கு நித்யமாய் இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு
புற்று பாம்பு அறாதாய்  இருக்குமா போலே
துர்வர்க்கமான ராஷச ஜாதி மாறாதே  இருக்கை ஆகிற தாரித்ர்யம் தீர

ஓர் ஊருக்கு நன்மை யாவது -வஸ்து பூதர் வர்த்திக்கை
கீழ்மை யாவது -அவஸ்துக்கள் வர்த்திக்கை

கூர-என்ற பாடம் ஆய்த்தாகில் –
இடும்பை மிக-
அத்தை அம்பாலே போக்கின எந்தை

கடுங்கணை துரந்த வெந்தை –
பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்வாமி

வவ்விய இடும்பை தீர -என்ற பாடம் ஆய்த்தாகில்
இலங்கையைப் பற்றின துக்கமானது போம் படியாக
ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக

கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
கோவைப் பழம் போலே இருக்கிற வாயை உடையரான
ஸ்திரீகள் உடைய
கொங்கையில் குங்குமத்தை–குங்குமப் பூவை – கழுவிக் கொண்டு போந்து

தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அப்ராக்ருதமான நீரானது-காவேரீ விரஜா சேயம்-என்று இருக்கையாலே அப்ராக்ருதமான நீர்
பரிமளத்தைப் புறப்பட விடா நின்றுள்ள
திரு நாங்கூர்

————————————————————-

இதில் நப்பின்னை பிராட்டிக்கு செய்த -எருதுகளை அடக்கி
மருத -கேசி-நிரசித்த-
திரியக் ஸ்தாவரங்களை நிரசித்த

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண் கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-3

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்த வன் தாள்
கேசியினுடைய வியாபாரம் அடங்கும்படி நிரசித்து
நடை கற்கிற போதே
மருதுகள் இற்றுப் போம்படி நடை கற்று

வன் தாள்
வலிய தாளை உடைத்தாய் இருக்கிற

சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
சேக்கள் உடைய வியாபாரத்தை
மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து
நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு
புணர்ந்த என் ஸ்வாமி-

நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண் கைத்
நாவுக்குத் தொழிலான மறை வல்லார்கள்
ஆதரித்துக் கொண்டு தர்மத்தை உத்பாதித்த
உதாரமான கையைக் கொண்டு

தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
தீத் தொழில் பயிலா நிற்பார்கள் ஆய்த்து
வ்ருத்தவானாய்ப் போந்தவன் வ்ருத்த ஹீனன் ஆனான் -என்னுமா போலே
தீத் தொழில் என்ற த்வனி என்ற விசேஷத்தைப் பற்றி சொன்ன வார்த்தை -என்று அருளிச் செய்தார்
தீயினுடைய தொழில் என்ற படி
(எதுகை மோனைக்காக த்வனி -தீம் தொனி என்னாமல் -தீ தொனி
தீ தொழில் எரித்தலைச் சொல்லாமல் -அத்யயனம் பண்ணி ஹோமாதிகள் )

அத்யயனத்தைப் பண்ணி
அத்யயனத்தால் விதேயமாய் இருக்கிற கர்மங்களையும்
அனுஷ்டியா நிற்பார்கள் ஆய்த்து

அத்யயனத்தைப் பண்ணி ஆன்ருசம்சய பிரதாணர் ஆகையாலே
ஆர்த்த விஷயங்களிலே இரக்கத்தை உடையராய்
தர்மங்களை உத்பாதிக்கிற உதாரமான கையைக் கொண்டு
அக்னி த்ரயங்களையும் அனுஷ்டியா நிற்பார்கள்
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -அக்னி ஹோத்ராதிகள் –
செய்த வேள்வியர் -செய்வதற்கு காரணம் லோகம் இவர்களைப் பார்த்து பின்பற்ற –
லோக ஸங்க்ரஹம் அர்த்தமாக என்றபடி )

அவ் ஊரில் உள்ளாருக்கு  அத்யயனமும் அனுஷ்டானமும்
யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி

———————————————————

இதில் வடமதுரை பெண்களுக்கு உதவின வ்ருத்தாந்தம்

தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப்  புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-4

தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு வாங்கிப்
ஒருவரால் தாங்க அரிதான
சினத்தை உடைத்தாய்
வலிய தாளை உடைத்தாய்
பெரிய கையையும் உடைத்தாய்
இருக்கிற குவலயா பீடத்தின் உடைய
பெரிய கொம்புகளை அநாயாசேன
குப்பைக் கீரை போலே வாங்கி
(தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு நான்கு அடை மொழிகள்
இவருக்கு பயம் மிக்கு இருப்பதைக் காட்ட )

பூங்குருந்து ஒசித்துப்  புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
அடியே பிடித்து தலை அளவும் செல்லப் பூத்து
தர்ச நீயமாம்படி  நின்ற குருந்தை முறித்து
பகாசுரன் உடைய வாயைக் கிழித்து
எருதுகள் ஏழையும் அடர்த்த என் ஸ்வாமி

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மாம்பழத்தை புஜித்த மந்தியானது
இனி ரசாந்தரத்திலே போது போக்க வேணும் என்று பார்த்து
மது பானத்துக்காக படுத்த வண்டுகள் ஆனவை
சிதறிப் போம்படியாக
வாழையினுடைய இனிய கனியை புஜியா நின்றுள்ள

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது
போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது
போது போக்க மாட்டாதே  இருக்கும் படியும்

———————————————

கீழ் மூன்றும் இதுவும் விரோதி நிரசனம் –
சூர்ப்பணகை -அங்க பங்கம் இதில் –

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5-

பெருமகள் -ஸ்ரீ தேவி
பேதை-ஆஸ்ரித தோஷம் அறியாத பூமி பிராட்டி
தனிக்கோயில் நாச்சியார் இல்லை -பிரிவே இல்லாத
கஜேந்திர மோக்ஷம்
கோப பிரசாதங்கள்
மணி -திரு -கோயில் அமைப்பும் மணி போல்
தேவர்களுக்காக -அமிர்தம் கொடுக்க வேஷம் -சந்திரன் சூர்யன் காட்டிக் கொடுக்க
ராகு கேது -சாயா க்ரஹம் -கற்பனை
நேர் எதிராக சுத்தும்
கீழ் திருத் தெற்றி அம்பலத்தில் சூர்யன்
இங்கே சந்திரன் ஒளிந்து
நான்கு திருக்கைகள்
சந்த்ர புஷ்கரணி
கனக விமானம்

அநந்யா -பாஸ்கரன் -பிரபை போல் சீதாபிராட்டி மேல் வந்தாலும் தன் மேல் தானே
தடித்த வெந்தை=ராமஸ்ய தஷினோ பாஹு

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து
தண்ணிய ஸ்திரீ
ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே
இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து

தன் மேல் வருமவள் -அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி

செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி

இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக
வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து    –
அவளுடைய செவியையும் மூக்கையும்
வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
(இரண்டாம் பாட்டில் கடும் கணை விட்டதுக்கு இவள் தானே காரணம்
இத்தால் அநன்யாரை அநாதரித்து -தன்னை ஆசைப்பட்டாருக்கு முகம் கொடாதவன் என்றது காட்டிற்று
இந்த அர்த்தத்தை எனக்கு அறிவித்தார் -பாகவத அபசாரம் குரூரம் என்றவாறு )

பெருமகள் பேதை மங்கை
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் -பெருமகள்
பிறர் குற்றம் அறிகைக்கு அறிவு இல்லாதபடி இருக்கிறவள் -பேதை -மங்கை
ஸ்ரீ பூமிப் பிராட்டியை சொன்னபடி (வஞ்சப்புகழ்ச்சி )

தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே
ஒருகாலும் பிரியக் கடவள் அன்றிக்கே இருக்கிற
பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் பெரிய பிராட்டியாரும்
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள
திரு நாங்கூர்

——————————————-

அவதாரிகை
தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து
ரஷகன் ஆனவன்
தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே
வந்து சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்
(கீழே சொன்ன ராம அவதாரங்கள் பரத்வம் என்னலாம் படி உள்ள மீனாதி அவதாரங்கள் அனுபவம் )

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே  –4-5-6-

ஆய வெந்தை-பிரகாரி பிரகார பாவம் -சர்வ நிர்வாகத்தவம் சொல்லிற்று இத்தால்
அதனாலே சர்வ அநிஷ்ட நிவர்த்தகம் கீழ் சொல்லி
இஷ்ட பிரதன் மேல்
வடவரசு–பாண்டிய தேசத்துக்கு வடக்கான சோழ அரசு

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
மத்ஸ்யமும்
ஸ்ரீ வாமனனும்
அன்னமும்
ஸ்ரீ வராஹமும்
ஸ்ரீ நரசிம்ஹமும்
ஸ்ரீ ஹயக்ரீவரும்

அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
விபூதியும்
அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்
யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும்
எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி  உடைத்தாய்
நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

ஒண் திறல் தென்னனோடே
ஒள்ளிய திறலை  உடைய பாண்டியன் ஒடும்படியாக

வடவரசு ஓட்டம் கண்ட
வடவரசான ராஜாவை ஓட்டம் கண்ட
(ப்ராஹ்மணர் பலம் க்ஷத்ரியர் பலத்தை விட பெரியது தானே )

திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
திண்ணிய மிடுக்கையும் உடைய பிராமணர் வர்த்திக்கிற

அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து
அவ் ஊரில் உள்ளார் இருப்பது
(ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால்
இவர்களே செய்ய வல்லவர்கள் )

———————————————

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான
சர்வேஸ்வரன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான்
என்கிறார்

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-7-

அல்லா நிலைகளுமாய–27 நக்ஷத்திரங்கள் -வாழ்க்கை நிலையை அறிவிப்பதே இவைகள் தானே
மாடமும் மணம்-பெண்கள் பத்ம கந்தினிகள் -இயற்கையிலே மணம் உள்ளவர்கள் –

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடுநின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
சேதனருக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்களைப்
பண்ணிக் கொடுக்கக் கடவதான மலைகளும்
அவர்களுக்கு அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்
போக்யங்களைத் தரக் கடவ தான பூமியும்
சைத்யத்தைப் பண்ணக் கடவதான  ஜலமும்
சந்திரனும்
அவனால் வந்த வவ்வலை ஆற்றும் ஆதித்யனும்
சேதனர் உடைய ஜீவனத்துக்கு உறுப்பான நன்மை தீமைகளை
தெரிவியா நின்றுள்ள நஷத்ரங்களுமாய் நின்ற

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மன்றிலே தானே சோலை உண்டாய் இருக்குமே
வயலிலே பொய்கைகளும்  உண்டாய் இருக்குமே
சோலையிலும் மாடங்களிலும் ஸ்திரீகள் இருப்பர்களே
அவ்வோ இடங்களில் உண்டான பரிமளத்தைக் கொண்டு வந்து எங்கும்
தென்றல் உலவா நின்றுள்ள -என்னுதல்
எங்கும் உண்டான பரிமளத்தைக் கொண்டு வந்து
உலவா நின்றுள்ள -என்னுதல்

————————————————————–

சர்வ நிர்வாகத்தவம் விளக்கமே கீழ்ப் பாட்டும் இதுவும் மேல் பாட்டும்

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள
பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான்
என்கிறார்

(பொய்யும் மெய்யும் சொல்லித் திரிவாராய்
ஜீவிப்பாரும் முடிவாராயுமாய்
நாடு கிடப்பது எதனால்
சேதனர் கர்மாதீனமாக அவன் நிர்வகிக்கிறார் என்றபடி )

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-

வாளை-பெரிய மீன்
கயல் -சிறிய மீன் –

சங்கையும் –
சம்சயாத்மா விநச்யதி -ஸ்ரீ கீதை 2 அத்யாயம் -41–என்கிறபடியே
விநாசத்தைப் பண்ணக் கடவதான சம்சயமும்
(அவனுக்கு இங்கும் அங்கும் ஸூ கம் இல்லை )

துணிவும்-
வ்யவசாயாத் மிகாபுத்திரேகா—2-41-என்கிற துணிவும்
(ஒருபடிப்பட்டு முன்னேறுவான் -)

பொய்யும் –
பிரயோஜன நிரபேஷமாகச் சொல்லும் அஹிதமான பொய்யும்
(அஹிதமான பொய் கூடாதே )

மெய்யும் –
ஹித ரூபமான மெய்யும்

இத் தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் –
பிரயோஜன நிரபேஷமாக பூமியை ரஷிக்கக் கடவதாய்
விஸ்ருதமாய் இருக்கிற மேகங்களும்

அல்லாப் பொருள்களுமாய வெந்தை
மற்றும் இடி மின் தொடக்கமானவை எல்லா வற்றுக்கும் நியந்தாவான சர்வேஸ்வரன்

பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
தாமரைப் பூவானது நிறைந்து
உகுத்த தேனைப் பருகின வாளையானது
களிப்பாலே பாய

செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
சிவந்த கயலானது அஞ்சி
ஸ்வ ஸ்தானத்தில் நின்றும்
பேரா நின்றுள்ள  திரு நாங்கூர்

வாளை -பெரிய  மீன்
கயல் -சிறிய மீன்

——————————————–

அவதாரிகை
நிஷித்த அனுஷ்டானம்
விஹித அனுஷ்டானம்
மோஷம்
மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்
இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9-

பாவமும் அறமும் –
நிஹித அனுஷ்டானமும் விஹித அனுஷ்டானமும்

வீடும் இன்பமும் –
மோஷமும் சுகமும்

துன்பமும் தானும் –
இது தான் நிலை இல்லாமையாலே வரக் கடவதான துக்கமும்

கோவமும் –
அறிவுடையாருக்கு த்யாஜ்யமான கோவமும்

அருளும் –
பிரசாதமும்

அல்லாக் குணங்களும் ஆய வெந்தை –
மற்றும் சத்வாதி குணங்களும்  எல்லாம்
தான் என்று சொல்லலாம் படி இருக்கிற என் ஸ்வாமி
(வெல்லும் வ்ருத்த ஸ்வபாவன் திரு விண்ணகர் அப்பன் )

மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என –
ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாக நின்றும்
ஸ்வேன ரூபேண நின்றும்
ரஷித்துப் போருகையாலே ஜகத்துக்கு பிரதானராயத் தோற்றுகிற மூவரில்
சத்வ பிரசுரரான எங்களுக்கு ஆஸ்ரயனியன் இவன் என்று

முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
சனகாதிகளோடே தேவர்கள் வந்து
ஆஸ்ரயிக்கும் படி  நிற்கிற திரு நாங்கூர்

(சேதனர் -கர்மாதீனமாக -இருக்க நிர்வாகம் இவனே -பிரதம பிரயத்தன அபேக்ஷிதனாயக்
கொண்டு அவற்றுக்கும் அவனே நிர்வாகனன் )

————————————————

சர்வ அபேக்ஷித ப்ரதன் என்கிறார்
சர்வ நிர்வாகன் -சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
அவனைப் போல் இந்த பத்தும் செய்து அருளும் என்கிறார்

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
சந்திர பதத்தளவும் செல்ல ஓங்கின
மாடங்களை உடைத்தான
திரு நாங்கூரிலே திரு மணிக் கூடத்திலே
வந்து சந்நிஹிதன் ஆனவனை

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானர்
வண்மையை உடைத்தான தாரை உடையரான
ஆழ்வார் அருளிச் செய்த இத்தை  வல்லவர்கள்

பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு
ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து

வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே    –
அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய்
பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று
உஜ்ஜ்வலராவர்

சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்
விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-

——-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-

தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading