ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –16-மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

கீழில் பாட்டிலே -திருமஞ்சனம் பண்ணி
இப் பாட்டிலே-திரு மாலை சாத்துகிறார் –

(கீழ் திரு மஞ்சனம் ராமாவதாரத்தில் -இதில் முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.)

—————————————————————–

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பதவுரை

மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆஸ்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய் மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்

———————————————————————

மாய மான்
பொலா ராவணன் -என்றதுக்கு அடியான
ஜந்து விசேஷம் இறே –

மாயச் செற்று –
முன்பு போலே தொற்றம்பாக விடாதே
பிணத்தையும் மாய்த்து –
பிணமும் காணாதபடி -நசிப்பித்து –

மருது இற நடந்து-
அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –
தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –

(மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–பெரிய திருமொழி -4-5-3-)

(ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–பெரியாழ்வார் -1-7-11-)

வையம் தாய –
முன்புத்தை அது வளர்ந்த பின்பு பண்ணின வியாபாரம் –
நடுவு தவழுகிற போது வியாபாரம்
இது பிறந்த அன்றே பண்ணின வியாபாரம் -இறே –
பூமியை அநாயாசேன அளந்து கொண்டு –

(வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –6-9-6- என்றதும் காண்க.)

மா பரவை பொங்கத் –
அப் பெரிய கடல்
தயிர்த் தாழி பட்டது பட –

தட வரை திரித்து –
கடலை கண் செறி இட்டாப் போலே
யானை மலையை -பிள்ளைகள் சிறு துரும்பை
திரிக்குமா போலே திரித்து –

வானோர்க்கு ஈயுமால் –
உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுத்தது –
பிரயோஜநாந்த பரருக்கு-
பிச்சேறினவர்கள் எண்ணி அன்று இறே செய்வது –

எம்பிரானார்க்கு –
எனக்கு உபகாரகர் ஆனவருக்கு –

(மூன்று அம்ருதம் -உப்புச்சாறு-தேவர்களுக்கு – பிராட்டி-பெண்ணமுதம் கொண்டு மகிழ்ந்தான் – நால் தோள் அமுதும் பிராட்டியும் சேர்ந்த மிதுனம் ஆழ்வாருக்கு–மால் -பித்தன் மூவருக்கும் )

என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு –
தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
தூய-பிரயோஜன நிரபேஷமான
மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு

சூட்டுவன் தொண்டனேனே –
இத்தால் அல்லது செல்லாத சபலன் –
அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே

(அடியவன் -கீழ் நீராட்டி
தொண்டன் -இங்கு சூட்டி –இரண்டும் பிரதான பாசுரங்கள் –நித்ய அனுசந்தானம் )

(இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11-
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading