அந்ய பரையாக வைத்து மறப்பிக்க மாட்டீர்களோ என்ன அதுக்கு பதில் இந்த பாசுரம்
ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-
பேதையன் பேதை –சபலமான என் பெண்ணும் சபலை
பிள்ளைமை பெரிது-லௌகிக விஷயம் அறியாமை பெரிது
————————————————–
வியாக்யானம் –
ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் –
முதல் தன்னில் வார்த்தை சொல்லாதே இருக்கும் போதே –
பெரியது சொன்னாலோ
ஐயர் ஆய்ச்சி என்னத்தை தவிர்ந்தாள்-
உருகும் நின் திரு வுரு நினைந்து –
நாமத் த்வாரா தர்மியை அனுசந்தியா
நீர்ப் பண்டம் போலே மங்கி இருக்கும் –
காதன்மை பெரிது –
வடிவு அழகின் அளவல்ல
ஆயிற்று ஆசையின் பெருமை –
கையற வுடையள் –
ஆசையின் அளவல்ல
ஆயிற்று இழவின் கனம் –
இழவுக்கு அவதி என் என்னில்-
கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்-
கயல் போல் முக்தமாய்
பரப்பு உடைத்தாய் இருக்கிற கண் –
பெரிய ஊர்கள் குடி வாங்கினால் போலே
கண்ணின் பரப்பு அடங்கலும் நித்ரா தத்வம் குடி வாங்கிற்று –
பேதையன் பேதை –
அறிவு கேடியான என் பெண் பிள்ளை –
விளைவு அறியாதே
இவளைப் பெற நோன்பு நோற்கும்படியான அறிவு கேட்டை உடைய –
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் -திரு விருத்தம் -என்கிறபடியே –
பிள்ளைமை பெரிது –
பருவத்தில் அளவு அல்ல வாயிற்று மௌக்யத்தின் பெருமை –
லோக யாத்ரையில் வந்தால் தன் பருவத்தில் உள்ளார்க்கு உள்ள அறிவு போராது-
தெள்ளியள்-
உம் அளவில் வந்தால்
சுருதி உபநிஷத்கள் அளவிலும் அல்லள்-
வள்ளி நுண் மருங்குல் –
இவள் ஸ்வபாவத்தை அனுசந்தித்து
கை விட ஒண்ணாத படி யாயிற்று வடிவில் பசை –
பிள்ளைத் தனமும்-தெள்ளியமும்–அப்ரயோஜகம் –
வடிவு போருமாயிற்று -கை விட ஒண்ணாமைக்கு-
ஏதலர் முன்னா –
ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே
என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –
வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
த்வத் அக்ரே சரணாகதானாம் பராபவ ந தே அநுரூப-ஸ்தோத்ர ரத்னம்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப்
பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –
இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-
———————————————————————– .
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply