ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ப்ரஹ்ம கிரி கோதாவரி பிறக்கும் இடம் -நாசிக் பஞ்சவடி அருகில்
பெருமாள் -நரஸிம்ஹன் -ஹரசாப விமோசனம் -மூன்றையும் சேர்த்து அருளுகிறார் –
முடை அடர்த்த சிரம் ஏந்தி —இடர் கெடுத்த திருவாளன்-மேலே இவரே இத்தை அருளுகிறார்-

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-

தவம் புரிந்து உயர்ந்த மா முனி–விசுவாமித்திரர் -க்ஷத்ரியாராக பிறந்து ரிஷி ராஜ ரிஷி-
ப்ரஹ்ம ரிஷியாக உயர்ந்தார் அன்றோ
சுமதி அரசன் இப்படி ராஜ குமாரர்கள் தாமரை அன்ன பொன்னார் அடிகளை நடந்தே
கூட்டி வந்த சாஹாச செயல் என்றானாம்

வியாக்யானம் –
மான் முனிந்து-இத்யாதி –
பெருமாளை -இம்மானைப் பிடித்து தர வேணும் -என்று பிராட்டி அருளிச் செய்ய –
அவரும் அதன் பின்னே துடர்ந்து போன இடத்து மாயா மிருகம் ஆகையாலே அது பிடி தராதே ஒழிய
அத்தைச் சீறி அதன் மேலே தர்சநீயமான வில்லை வளைத்த செருக்கன்-

பொன்னிறத்து உரவோன்–இத்யாதி –
பொன் போலே இருந்துள்ள நிறத்தையும் மிடுக்கையும் உடையவனான ஹிரண்யன் -என்றபடி-
அவனுடைய துர் மானத்தாலே வளர்ந்த மாம்சத்தை சீறி அதுக்கு ஆஸ்ரயமான உடலானது இரு பிளவாம்படி
திரு உகிரினுடைய நுனியை -மாட்டி

அயன் இத்யாதி –
பிராட்டி திறத்தில் செய்யுமத்தை ஒரு சிருக்கன் விஷயத்தில் செய்தான் –
அவன் விஷயத்தில் செய்ததை துர் மாநியான ருத்ரன் விஷயத்தில் செய்தான் ஆயிற்று
முற்பட இவன் செருக்கித் திரிகிறது பொறுக்க மாட்டாமை செய்திடுவானுக்கு –
அன்று என் தலையை அறு -என்று அனுமதி பண்ணி பின்னையும் 
தானே இவன் இப்படி செய்தான் என்று
கபாலீத்வம் பவிஷ்யசி -என்று பழி இட்டான் ஆயிற்று –
பெற்ற தமப்பனே பகையாக -அவனில் அண்ணிய உறவாய் உதவுமவனும் ஆயிற்று-
(பிரகலாதன் ருத்ரன் இருவருக்கும் இவ்வாறு ரஷித்து அருளினான்)

தவம் -இத்யாதி
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை-
அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –
அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே
அத்தை சொல்லிற்று ஆகவுமாம்

தபஸை செய்து உயர்ந்த என்ற –
இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி
அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன
அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-

அன்றிக்கே
(உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)
பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading