திருச்சந்த விருத்தம் -61-70-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

61 -பாட்டு –

அவதாரிகை –
இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத  ஆழ்வார் திருவடிகளில் தாம்
அனுபவிக்க இழிந்த இடத்தில் –
வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே
ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்
பண்ணுகையாலே -திருமேனி நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக
தம்முடைய பரிவாலே அதிசங்கித்து
என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

பதவுரை

விலங்கு

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை

பெருப்பெருத்த மலைகளையும்
கரம்

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி

திருக்காவேரி நதியினுடைய
கூரை

கூரைமீது
குடந்தையும்

திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம்

பூமிப்பிராட்டியானவள்
நடுங்க

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய்

மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய்

திருமேனி
குலுங்கவோ?

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே

கோவனே!
எழுந்திருந்து போ

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி

இக்கிடையழகு என்றும் வாழ்க.

வியாக்யானம் –

நடந்த கால்கள் நொந்தவோ
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்கிறபடியே
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு திரு உலகு அளந்த இது பொறாமே நொந்து
கண் வளர்ந்து அருளுகிறதோ –

சக்கரவத்தி திருமகனாய்  காட்டிலும் மலையிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
திரிந்த வது பொறாமே நொந்து கண் வளர்ந்து அருளுகிறதோ –

எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ -என்று -சௌகுமார்யத்தை அறியுமவர்கள்
கூப்பிடும்படியாய் இ றே இருப்பது –
நடந்து பொறாமே கண் வளர்ந்து அருளுகிற தாகில் -நான் திருவடிகளைப் பிடிக்க –

நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ –
அன்றிக்கே –
பூமிக்கு அபிமானியான பிராட்டி -பாதாளகதையாய் தன்னுடைய உத்தரணத்துக்கு ஒரு
வழி காணாதே நின்று நடுங்குகிற தசையிலே -பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணையான பூமியை
மஹா வராஹமாய் -அண்ட புத்தியிலே புக்கு –அதுவாகில் நான் திரு மேனியைப் பிடிக்க –

விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரி கரை-
நீர் வர ஒண்ணாதபடி இரு விலங்கான பெரிய மலைகளையும் சுரங்களையும் கடந்த
நீரோடு கால் பரந்து வருகிற காவிரிக் கரையிலே

சுரம் -காடும் அரு நெறியும்

இத்தால் -ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுகூலமாக சிசுரோபசாரம்
பண்ணுகைக்கு -காவிரி மலை என்ன -அரு நெறி என்ன -இவற்றைக் கடந்து தன் அபிநிவேசம்
தோற்றப் பரந்து வந்த படியைச் சொல்லுகிறது

குடந்தையுள் கிடந்தவாறு –
காவிரி அடிமை செய்ய திருக் குடந்தையிலே ச்ரமம் தோற்ற கண் வளர்ந்து அருளுகிற படியை
காவிரி சிசுரோபசாரம் பண்ணக் காண்கையாலும்

திரு வெக்கா கிடையில் -சாயாவாஸ த்வம் அநுகச்சேத் -என்கிறபடியே தொடர்ந்து போரக்
காண்கையாலும்

கோயிலிலும் -உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -என்று
தன்  அபிமதம் பெறுகையாலும்

திருக் குடந்தையிலே முகம் தாராதே கண் வளர்ந்து அருளுகைக்கு ஹேது ச்ரமம் என்று
இருக்கிறார் –

ஆராவமுத ஆழ்வாரும்- இவருடைய பரிவின் எல்லையை அனுபவிக்கைக்காவும் –
படுக்கை வாய்ப்பாலும் -கண் வளர்ந்து அருளுகிறார்

எழுந்து இருந்து பேசு-
இதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –

எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –
அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்

வாழி –
அப்படி அருளிச் செய்யாமையாலே -ஆயுஷ்மான் -என்னுமா போலே -ஒரு தீங்கு
இன்றிக்கே கண் வளர்ந்து அருளுகிற இவ்வழகு நித்யமாய் செல்ல வேணும் என்று மங்களா
சாசனம் பண்ணுகிறார் –

கேசனே —
கேசவ சப்தமாய்  கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்

இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

——————————————————————————————–

62 -பாட்டு –

அவதாரிகை –
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்
ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே –
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து –
நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய்
என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62-

பதவுரை

கரண்டம் ஆடு பொய்கையுள்

நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம்

கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ

விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை

மீன்கள்
பாய்

துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி

திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய்

மஹாதுபாவனே!
திரண்ட தோள்

திரண்டதோள்களையுடையவனான
இரணியன்

ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை

மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து

இருபிளவாகப் பிளந்து
உகந்த

மகிழ்ந்த
சிங்கம் என்பது

நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே

உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)

வியாக்யானம் –

கரண்ட மித்யாதி –
நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்
அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி
வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –
அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற
இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே

கரண்டம் -நீர்க் காக்கை

ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்

தகை -இயல்வு

போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது
அத்தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு
ஸூசகமாய் இருக்கிறது

திரண்ட தோள் இரணியன்
திரட்சி பெற்ற தோளை உடைய ஹிரண்யன்
அவன் வலியை கோட் சொல்லித் தருகிற தோள் -என்கை

அதவா
தேவர்கள் உடைய வலி யடங்க திரண்ட தோள் என்னுமாம் –

இந்த்ரத்வ மகரோத் தைத்ய -இத்யாதி –

சினம் கொள் ஆகம் –
நெஞ்சில் க்ரோதம் வடிவிலே தோற்றி இருக்கிற படி -சினம் மிக்க வடிவு
ஒன்றையும் இரண்டு கூறு செய்து –
இஸ் ஸூகுமாரமான வடிவைக் கொண்டு அத்வதீயனான ஹிரண்யன் சரீரத்தை இரண்டு கூறாக பிளந்து

உகந்த சிங்கம் என்பது உன்னையே –
சிறுக்கன் உடைய விரோதி போகப் பெற்றோம் என்று உகந்த நர சிம்ஹமாக பிரமாணங்கள்
சொல்லுவது அத்யந்த ஸூகுமாரமான உன்னையே

உக்ரம் வீரம் — ம்ர்த்த்யும்ர்த்த்யும் -என்று சொல்லுவது உன்னையே

க்வ் யவன உந்முகீ பூத ஸூ குமார தநுர் ஹரி –
க்வ வஜ்ர கடிநா போக சரீரோயம் மஹா ஸூர -என்கிறபடியே
உன் சௌகுமார்யாம் கண்டபடிக்கு அவ்வபதாநம் அநுபபன்னம் என்று கருத்து –

சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே
திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து

அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது 

கரண்ட மாடு பொய்கையுள்–லீலா விபூதியில்
கரும் பனைப் பெரும் பழம் -அநாதி ஸித்தமான பரத்வ தத்வம்
புரண்டு வீழ–அவதரித்து -பெருக்காறு -அதில் தேங்கிய மடு
வாளை பாய் -அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
குறுங்குடி நெடும் தகாய்-நின்ற நம்பி வாமனன் -ஐந்து நம்பிகளும் பரத்வாதி ஐந்துக்கும்

இங்கு திருமங்கை ஆழ்வார் தான் அத்யயன உத்சவத்தில் திருவடி தொழுகிறார்
வாமனன் சீலன் -ராமானுஜருக்கு -வாமனனுக்கும் -திருக்குறுங்குடி நம்பிக்கும் சம்பந்தம்

——————————————————————————————

63-பாட்டு –

அவதாரிகை –
தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்
ஹிரண்யனை அழியச் செய்யலாம் –
விமுகரான சம்சாரிகளுடைய ஆபிமுக்யத்தை அபேஷித்து
உன் மேன்மையைப் பாராதே –
கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது
என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

பதவுரை

நன்று இருந்து

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

திருவூரகத்திலும்
வெஃகனை

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

என்ன ஸௌஹார்த்தமோ!

வியாக்யானம் –

நன்று இருந்து –
சேலாஜி ந குசோத்தரம் ஸ்திர மாஸநம் சு சௌ தேச ப்ரதிஷ்டாப்ய -என்கிறபடியே
சுத்தமான தேசத்திலே குசாஜிந சேலோத்தமான ஆசநத்தை இட்டு -அதிலே ஏகாக்ர சித்தனாய்
இருந்து -ஆஸிநஸ் சம்பவாத் -இத்யாதி –

யோக நீதி நண்ணுவார்கள் –
யோகமாகிற உபாயத்தாலே உன்னை லபிக்க இருக்கிறவர்கள்

நீதி -வழி

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான உன் மேன்மை பாராதே
அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று சுபாஸ்ரயமாகக் கொண்டு
அநாதிகாலம் விஷயாந்தர ப்ரவணமாயப் போந்த ஹ்ர்தயம் என்று குத்ஸியாதே
ஆசன பலத்தாலே ஜெயிப்பாரைப்  போலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து –

ஆந்தரமாயும் பாஹ்யமாயும் இருந்துள்ள அனுபவ விரோதிகளான துக்கங்களைப் போக்கும்
ஸ்வபாவத்தை உடையவனே அவர்கள் ஹ்ர்தயத்தில் செல்லுகைக்கும் –

நெடுநாள் விஷயாந்தர ப்ரவணமான ஹ்ர்த்யம் என்று குத்ஸியாதே அதிலே
நல் தரிக்க இருக்கையும் –

ஸ்வ ப்ராப்தி விரோதிகளான -அவித்யா கர்ம வாசநாதிகளை போக்கையும்

தேவரீருக்கே பரம் இறே -யோகோ யோக விதான் நேதா -என்னக் கடவது இறே –

ஸாதநாந்தர நிஷ்டர் என்று பாராதே -அநந்ய பிரயோஜனர் என்கிற
இவ்வளவே பார்த்து -அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று -உன்னைப் பெறுகைக்கு
க்ர்ஷி பண்ணின -இவ் ஔதார்யம் பொறாமே -உன் பக்கல் த்வேஷம் பண்ணி இருக்கிற
சம்சாரிகள் திறத்திலே பண்ணின இவை என்ன நீர்மை என்கிறார் -மேல் –

குன்றிருந்த -இத்யாதி –
மலைகள் சேர்ந்து இருந்தால் போல் ஓங்கின மாடங்களை உடைய திருப் பாடகத்திலும்
அப்படியே இருந்துள்ள திரு ஊரகத்திலும் –
முகம் காட்டுவார் உண்டோ -என்று திரு ஊரகத்தில் –நின்று அருளியும் 

ஒருத்தரையும் கண்டிலோம் -என்று சோம்பாதே திருப் பாடகத்திலே இருந்து அருளியும்-

அவ்விடத்திலும் ஆதரிப்பார் இல்லாமையாலே -ருசி பிறந்த வன்று கிடை அழகைக் கண்டு
ஆதரிக்கிறார்கள் என்று திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளினே இது என்ன நீர்மை -என்கிறார்

உன்னைப் பிரிய மாட்டாதே -நித்ய ஸூரிகளுக்கும் நித்ய அனுபவ விஷயமாகலாம்
உன் வாசி அறிந்தார்
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு
வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்

————————————————————————————-

64 -பாட்டு –அவதாரிகை –

கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக
திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே
கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –
நின்றது எந்தை ஊரகத்து –
த்ரைவிக்ரமம் பண்ணின தூளி தாநம் தோற்ற திரு ஊரகத்திலே  நின்று அருளிற்று –
எனக்கு ஸ்வாமி என்று நான் இசைகைக்காக –
நிலை அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து
த்ரிவிக்ரம அபதாநத்தை பிரகாசிப்பித்தது -முறையை உணர்த்துகைக்காக –என்கை

அதவா –
எனக்கு இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் -வந்து நின்று அருளுகிறது –
உடையவன் உடைமையை இழக்க மாட்டாமையாலே நின்று அருளுகின்றான் என்றுமாம் –

இருந்தது எந்தை பாடகத்து –
அந்த நிலை அழகிலும் எனக்கு ஆபிமுக்யம் காணப் பெறாமையாலே –
இருப்பழகைக் காட்டி -குணைர் தாஸ்யம் உபாகதா -என்கிறபடியே –
நீ எனக்கு ஸ்வாமி -நான் அடியேன் -என்னும் முறை உணருகைகாக -திருப்பாடகத்திலே
எழுந்து அருளினான் –

அன்று வெக்கணைக் கிடந்தது –
கீழ்ச் சொன்ன இரண்டு திருப்பதிகளிலும் எனக்கு ருசி பிறவாத அன்றாக
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளிற்றும் –
அத்திருப்பதிகளை ஆஸ்ரயித்த காலத்துக்கு அவதி என் என்னில் –

என்னிலாத முன்னெலாம் –
நான் இல்லாத முற்காலம் எல்லாம் –
நான் அபிமுகீபவிப்பதற்குமுன்பு எல்லாம் -என்னாகி -நானாகி -என்னக் கடவது இறே

உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம்
ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –

என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில்
கடாஷம் தனக்கு தேட்டமாவதே –

அக்காலத்தில் நீர் செய்தது என் என்னில் –
அன்று நான் பிறந்திலேன் –
நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –

நான் பிறந்திலேன் –
ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்

அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் -அஸநநேவஸ பவதி -என்னக் கடவது இறே

கரீயான் ப்ரஹ்மத பிதா –

பிறந்த பின்பு மறந்திலேன் –
அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –

மத்தஸ் ஸ்ம்ர்திர் ஜ்ஞாந மபோஹநஞ்ச –
அவனடியாக பிறந்த ஜ்ஞானம் –மதி நலம் -என்கிறபடியே -பக்தி ரூபா பன்ன ஞானம்
ஆகையாலே -விஸ்ம்ர்தி பிரசங்கம் இல்லை இறே

ஆக -தன்னுடைய சத்பாவ அசத் பாவங்கள் ஆகிறன-பகவத் விஷயத்தில் ருசி பிறக்கையும்
அது அன்றிக்கே ஒழிகையும்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –

எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின
செயல்கள் எல்லாவற்றையும்  -திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய
ஹ்ர்தயத்தில் பண்ணி  அருளா நின்றான்-

முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள
என்னையும் உளனாம்படி பண்ணி -தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து –
அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த -என்றார் கீழ்-

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -என்று அனுபவத்தைச் சொன்னார் இங்கு –

இவை இரண்டாலும் –
சாதநாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தம்முடைய அதிகாரத்துக்கு உண்டான ஏற்றத்தை
அருளிச் செய்து விட்டார் ஆய்த்து –

———————————————————————————

65- பாட்டு –அவதாரிகை –
தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே
பின்னும் அதிலே கால் தாழ்ந்து -திருமலையில் நிலையும் -பரம பதத்தில் இருப்பும் –
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி
பிறவாத காலம் இறே -என்கிறார்

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்த பின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –

நிற்பதும் ஓர் வெற்பகத்து –
அத்வதீயமான திருமலையிலே நிற்பதுவும்-
திருமலைக்கு அத்வதீயம் -கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தார்க்கு
முகம் கொடுக்கும் நீர்மைக்கு எல்லை நிலமாய் இருக்கை –

ஸ்தாவரங்களுக்கும் திரியக்குகளுக்கும் தத் ப்ராப்யரான வேடர்க்கும் திருவடிகளிலே
ருசியைப் பிறப்பிக்கைக்கு நிற்கிற நிலை -இறே

இருப்பும்  விண் –
ருசி பிறந்தாரை அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளோபாதி முகம் கொடுத்து
அனுபவிகைக்காக எழுந்து அருளி இருக்கிற பரம பதத்தில் இருப்பும் –

கிடப்பதும் நற்  பெரும் திரைக் கடலுள் –
தெளிந்து குளிர்ந்து இருக்கிற திரைகளை உடைத்தாய் –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே விஸ்த்ர்தமாக
கண் வளர்ந்து அருளுகைக்கு வேண்டும் பரப்பை உடைத்தாய்
திரையாகிற கை களாலே திருவடிகளை வருட ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுவதும் –

நான் இலாத முன்னெலாம்-
தன்னோடு உண்டான முறையை அறியாதே நான் அசத் சமனாய் இருந்த காலம் எல்லாம்
இப்படி என் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகிறவன் சர்வ ப்ரகார பரி பூரணன்
கிடீர் என்கிறது மேல் –

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்-
ஆச்சர்யமான ஜ்ஞான சக்தியாதி குண பரி பூர்ணனாய்
அநந்த சாயி யாகையாலே சர்வேஸ்வரனாய்
ஜகத் காரண பூதனாய்
உபய விபூதி நாதத்வத்துக்கும் அவ்வருகான ஸ்ரீ ய பதித்வத்தையும்
உடையவன் கிடீர் -என்னுதல்

என்னைப் பெற்ற பின்பு அவனுக்கு இவை எல்லாம் நிறம் பெற்றது -என்னுதல்

நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் –
என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில்
நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –

நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி
என் நெஞ்சில் நின்று அருளினான் –

தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –

தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின
படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில்
கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –

இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது
இல்லை -என்கிறார் –

————————————————————————————

66-பாட்டு –

அவதாரிகை –

பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-
சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய்
இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –
சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்
ஆகிறார்

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பதவுரை

பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ
நின்று சாதல்

சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி

இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும்

மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து

இந்நிலத்திலே
ஒன்றி நின்று

சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும்

வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர்

அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று

முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று

பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல்

நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?

வியாக்யானம் –

இன்று சாதல் –
யோஷித் புருஷ சம்யோக சமநந்தரம் முடிதல்

கர்பாஷ்டமேஷூ -என்கிறபடியே கர்ப்பாதந சமயம் -உத்பத்தி காலமாய்  -கர்ப்ப வச காலம்
ஆயுஸ் ஸூக்கு உடலாக கடவது

நின்று சாதல் –
சதாயுஸ் சம்பூர்ணனாய் முடிதல் –
கல்பாதியிலே தோற்றி கல்பாந்தரத்திலே முடியும் தேவர்களைப் போல் ஆதல்
நாயம் பூத்வா பவிதாவாந பூய -என்னக் கடவது இறே
அன்றி –
இந்த அஸ் தைர்யத்திலும் உள்மானம் புறமானம் ஒழிய நித்யராய் இருப்பார் ஒருவரும் இல்லை –
கர்ப்பே விலீயதே பூயோ ஜாய மா நோஸ் தமே திச
ஜாதமாத்ரே சம் ரிய தே பால பாவே ச யௌ வ நே -இத்யாதி –

யாரும்-
எத்தனை யேனும் அதிசயித ஜ்ஞாநராய் சதுர் தச புவநத்திலும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளும்

வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் –
சதுர் தச புவநத்திலும் ஒருபடிப்பட்டு நின்று ஜீவிக்கும் அது இல்லாமையை கண்டு வைத்தும் –

வையகம் -என்று சதுர் தச புவநத்துக்கும் உப லஷணம்

வாழ்தல் -என்று ஷேபிக்கிறார் -ஆதல்
சம்சாரிகள் கருத்தாலே  யாதல்

நீசர் –
தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்
ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா
நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –

நீசர் –என்று அறிவிலோரும் -பறையரும்

அன்று –
பூமி மஹாபலியாலே அபஹ்ர்தமாய் -அத்தாலே தன்னுடைய
சேஷித்வமும் சேதனருடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –

பாரளந்த பாத போதை –
குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமி முதலான சகல லோகங்களிலும் உண்டான
சகல சேதனர் தலையிலும் வைத்து முறையை உணர்த்தின சர்வ ஸூலபமான
திருவடித் தாமரைகளை –

பார் –என்று -ஊர்த்தவ லோகங்களுக்கும் உப லஷணம்

தாமரை -என்றது -துர்லபமானாலும் விட ஒண்ணாத போக்யதையாலே –

யொன்றி –
ஆஸ்ரயணம் அநாயாசம் -என்கிறது
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே

ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று

அதவா
சென்று சென்று –
தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
தேவராய் இருக்கிலாத வண்ணமே –என் கொலோ –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாய் இராதே ஒழிகிற ஹேது என்னோ –
நித்ய ஸூரிகளாய் இருக்கை யாவது -சர்வ தாஸ த்ர்சராய் இருக்கை
அதாகிறது
அசங்கோசத்தாலும் -ரூபத்தாலும் -பேதத்தாலும் -அவர்களோடு சமராய் இருக்கை

என் கொலோ
1-ப்ரத்யஷ சித்தமான சம்சார தோஷத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
2-சாஸ்திர சித்தமான பகவத் ப்ராப்தியில் நன்மைக்கு கண் அழிவு உண்டாயோ –
3-ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய சௌலப்யத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
4-ஆஸ்ரயணீ யத்தில் ஆயாசம் உண்டாயோ –
5-வழிப் போக்கில் அருமை உண்டாயோ –

 ப்ரகர்தி ப்ராக்ர்தங்களில் ப்ராவண்ய ஹேதுவான பாபமும்
பகவத் வைமுக்ய ஹேதுவான பாபமும்
ஒழிய இப் புருஷார்த்தத்தை இழைக்கைக்கு ஒரு ஹேதுவும் கண்டிலோம் -என்கை

————————————————————————————

67 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் –
இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து –
இவர்கள் துர்கதியைக் கண்டு –பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே –

இதில் முதல் பாடு
அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து
உங்கள் விரோதியைப் போக்கி
உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –67-

பதவுரை

சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று

ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று

பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத

பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம்

ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு

விருப்பமுடையவர்களே!
எய்துவீர்

(முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன்

தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி

பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி

உங்களுடைய காதுகளிலே
மடுத்து

தேக்கி
உண்டு

அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின்

உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.

வியாக்யானம் –

சண்ட மண்டலத்தினூடு சென்று –
கடிதான ஆதித்ய மண்டலத்தின் நடுவே போய்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின்னனடுவுள் -என்கிறபடியே –

முமுஷூக்கள் அல்லாதவருக்கு துஷ் ப்ராப்யமான ஆதித்ய மண்டலத்தின் மத்யத்திலே –
ராஜ புத்ரர்கள்ராஜ குலத்தாலே அப்ரதிஹத கதிகளாய் போமாப் போலே போய் –

வீடு பெற்று —
பரம பதத்தை லபித்தது

மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் –
மேல் -வீடிலாத காதல் இன்பம் -கண்டு நாளும் எய்துவீர் –
ப்ராப்ய பலமாய் -யாவதாத்மபாவி விச்சேத சங்கை யன்றியே -ஸ்வரூப அநுபந்தியாய்-
பகவத் அனுபவ ஜனித பக்தி காரித கைங்கர்ய சுகத்தை சாஷாத் கரித்து -யாவதாத்மபாவி லபிக்க வேண்டி இருப்பீர் –

புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி –
செவ்வித் தாமரை போலே நிரதிசயமான போக்யமான திருவடிகளில் பாவநத்வ
ப்ராபகத்வ ப்ரதையிலே-

பாவநஸ் சர்வ லோகாநாம் -என்றும் -பவித்ராணாம் ஹி கோவிந்த -என்றும் –
லோகாநாம் த்வம் பரோதர்ம -என்றும் -க்ர்ஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும் -ப்ரசித்தம் இறே

நுஞ் செவி மடுத்தி –
பகவத் விஷயத்தை கனாக் காணாதே போந்த உங்கள் செவியை –
ஆச்சார்ய உபதேசத்துக்கு பாத்ரமாக்கி-
ஆப்த வாக்ய ஸ்ரவணமே பகவத் விஷயீகாரத்துக்கு வேண்டுவது -என்கை

உண்டு –
ஸ்மர்த்தவ்ய தசையே தொடங்கி -இனிதாகையாலும் –
நிரபேஷ உபாயம் ஆகையாலும்
பகவத் குணங்களையே அனுபவித்து

நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –
நீங்கள் சூழ்த்துக் கொண்டதாய் அவஸ்யம் அநு போக்தவயம் -என்கிற பாப பலமான-
துக்கத்தின் உள்ளே வர்த்திக்கிற  நீங்கள் -இதில் நின்றும் நீங்கி
முன் சொன்ன கைங்கர்ய சுகத்தை லபித்து-தொழுது எழு-என்கிறபடியே உஜ்ஜீவியுங்கோள்

—————————————————————————————-

68 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச
தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர்ஆனவர்கள் சர்வாதிகனை
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

பதவுரை

மூத்திறந்து

மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில்

(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும்

விருப்பமுடையரான
நீசர்கள்

நீசரான மனிசர்கள்
அதில் இட்டு

அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து
இறந்து

அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து
போந்து

(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து
மத்தர் ஆய்

“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய்
மயங்குகின்றது

மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு)
உய்வது ஓர் உபாயம்

உஜ்ஜீவ்நோபாயம்
எத்திறத்தும் இல்லை

எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை)
உய்குறில்

(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில்
கொத்து இறுத்த

கொத்துக்கொத்தாகச் செறிந்த
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான
நம் மாலை

பரமபுருஷனை
வாழ்த்தி

துகித்து
வாழ்வின்

உஜ்ஜீவித்துப் போங்கோள்.

வியாக்யானம் –

முத்திறத்து வாணியத்து
சாத்விக ராஜஸ தாமஸ தேவதைகளை தம் தாமுடைய குண அநுகூலமாக பற்றி
ஆராதிக்கப் பெறும் மூன்று வகைப்பட்ட பலங்களிலும்

திறம் -ப்ரகாரம்

பலங்களை –வாணியம் என்கிறது
வ்யாபாரம் அல்பமாய் -பலம் விஞ்சிதாய் இருக்கை

அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக் -என்றும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே
வேதங்களும் குணத்ரய வச்யரான சேதனருக்கு குண அநுகூலமாக ஆராத்ய தேவதைகளையும்
தத் ஆராதன பிரகாரங்களையும் -ஆராதன பலன்களையும் சொல்லி -வைத்தது

இரண்டில் ஒன்றும் நீசர்கள் –

ஸ்வ குணங்களுக்கு அநுகூலமாய் இருக்கையாலும் -சாஸ்திர அனுமதியாலும்
நித்ய சத்வத்தையும் -தத் ஆராத்யனான ஈஸ்வரனையும் -தத் ஆராதன பலமான
மோஷத்தையும் ஒழிந்து -ராஜஸ தாமஸ பலங்களில் ருசியைப் பண்ணும் நீசர் –

நீசர் ஆகிறார் -சம்சாரத்தை வர்த்திப்பித்து கொள்ளும் ஹேயர்

மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து –
இட்டதில் –
கர்ம அவசாநத்திலே அந்த பலத்தை இட்டு

இறந்து –
அவ் வவ தேசங்களில் போக சரீரங்களை முடித்து

போந்து –
அந்த போக பூமியில் நின்றும் ஆகாச மேக அவச்யாதிகளிலே கிடந்தது
கர்ப்ப வாஸ அர்த்தமாக போந்து-
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே பூமியிலே பிறந்து –

மத்தராய் –
தேக ஆத்ம அபிமானத்தாலே ப்ராக்ர்த பதார்த்த லாபத்தாலே களித்து
மயங்குகின்றது –
ஆத்மாவை ஆதல் –
ஈஸ்வரனை ஆதல் –
உள்ளபடி அறியாமையாலே மோஹாங்கதரைப் போலே இருக்கிறது இறே

ஸ்வர்க்காதி பல அனுபவங்களை புண்யம் ஷயித்த அளவிலே மத்யே விட்டு
அந்த போக சரீரங்களையும் முடித்து -கர்ப்ப வாஸ அர்த்தமாக அதி கிலேசத்தோடே
போந்தபடியை அனுசந்தியாமையால் இறே சேதனர் ப்ரக்ர்த போகங்களில்
களித்து வர்த்திக்கிறது என்கை-

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை –
ஆகையால் ஸ்வ பௌருஷத்தாலும் இதர தேவதைகளை ஆஸ்ரயணீயராக பற்றினாலும்
ஈஸ்வரன் தன்னையே ஐஸ்வர்ய அர்த்தமாகப் பற்றினாலும்
உஜ்ஜீவிக்கைக்கு வழி இல்லை

யுய்குறில் –
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தி கோள் ஆகில் –
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ —

சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்

நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து
யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்

ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே

—————————————————————————————

69 -பாட்டு –அவதாரிகை

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

பதவுரை

காணிலும்

கண்டாலும்
உரு போலார்

விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார்

காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும்

(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர

(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத

சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை

தேவதைகளை
ஆணம் என்று

சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும்

அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள்

குருடர்களே!
என் ஆதிபால்

ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி

வழிபாடுகளைச் செய்து
நும்

உங்களுடைய
பிறப்பு எனும்

ஸம்ஸாரமாகிற
பிணக்கு

பெரும்புதரை
அறுக்க கிற்றிரே

அறுத்தொழிக்க வல்லீர்களே?

வியாக்யானம்-

காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –

ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இறே –

ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே

இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்

திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது

செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்

கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –

ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இறே

பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை

காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –

ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –

வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே

நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது

ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து

ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-

வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்

ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை

எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்

நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே

பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க

ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –

—————————————————————————————

70–பாட்டு

அவதாரிகை –

வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்
சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –

ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்
பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

வியாக்யானம் –

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் –
குந்தம் முதலான ஆயுதங்களைக் கொண்டு ருத்ரனுக்கு பந்துக்களாக உதவி செய்ய வந்த தேவதைகள்

குந்தம் -சவளம்

தோமரம் -எறி ஈட்டி
இவ் வாயுத வர்க்கத்தைக் கொண்டு வந்து -அவை தானே காற் கட்டாய் பொகட்டு போன
தேவர்கள் என்றுமாம்
அப்போது பந்தம் -என்றது பந்தகம் என்றபடி –

விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்கிறபடியே -க்ர்ஷ்ணனை தங்களுக்கு விரோதிகளான
அ சூர ராஷசர்களை அழியச் செய்து குடி இருப்பு தர வந்தவன் என்று பாராதே
அந்த துர்வர்க்கத்தோ பாதி எதிரம்பு கொத்து வருகையாலே
க்ர்தக்நருமாய் -துர்மாநிகளுமாயும் இருக்குமவர்கள் -என்கை

ஸாயூதரை வந்த தேவர்கள் என்று சுருங்க சொல்லாதே பரக்க ஆயுதங்களைப் பேசிற்று
உபகாரனானவன் பக்கலில் இத்தனை அபகாரத்தை  பண்ணுவதே என்ற நெஞ்செரிவாலே
யருளிச் -செய்கிறார்

பரந்து வானகமுற
க்ர்ஷ்ணன் சன்னதியிலே நேர் நிற்க மாட்டாதே
ஒருவர் போன வழி ஒருவர் போகாதே சிதறி தங்கள் குடி இருப்பிலே புக

வந்த வாணன் –
தேவதைகள் ஆயுதங்களைப் பொகட்டு போன இடத்திலும்
தனக்கு நியாமகனான ருத்ரன் ச்ஜ்ர்ம்பிதனான இடத்திலும்
தன்  தோள் வலியை விஸ்வசித்து வந்த பாணனுடைய

ஈரைஞ்சு நூறு தோள்களைத் துணித்த நாள்-
ஆயிரம் தோள்களையும் துணித்த வன்று –
தோள் வலியை கொண்டு வந்தவனுடைய தோள் வலியைக் கழித்தான் –
ஆயுதங்களைப் பலமாகக் கொண்டு வந்த தேவர்களை ஆயுதங்களைப் பொகட்டு
பிற்காலித்து போம்படி பண்ணினான்

சர்வாத்யஷனாய் வந்த ருத்னனை நிச் சேஷ்டனாம் படி பண்ணினான்
அந்தவந்தவாகுலம்
ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவச்யமும்
போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவச்யமும்

பாரவச்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரிசம் பரமாத்மாந ம நா தி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே

அமரரே யறிவரே
ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி
நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading