திருச்சந்த விருத்தம் -51-60-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

பாட்டு -51-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

வியாக்யானம்

பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல் –
தன் அபிநிவேசம் எல்லாம் கொண்டு -எங்கும் ஒக்கப் பரந்து மாறாதே வந்து பொன்களை
கோயிலிலே தள்ளி அலை எறியா நின்றுள்ள காவேரி

வார் புனல் –
ப்ரவாஹ ரூபமான ஜலம்

அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே —
உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை
பரிஹரிகைக்கு –
ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும்
நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் என்றும்
அஜன் -என்றும் -தன்னை சர்வாதிகனாக அபிமானித்து இருக்கிறவன் பக்ன அபிமாநனாய்
வந்து ஆஸ்ரயிக்கும் கோயிலை –ஸ்ரீ ரெங்கம் -என்னா நின்றார்கள் புராண வித்துக்கள் –

ரதிங்கத இதி –ரங்கம் -என்றும் –
ஷீராப்தேர் மண்டலாத்பாநேரர் யோகிநாம் ஹர்த்தா தபி
ரதிங்கதோ ஹரிர்யத்ர ரங்க மித்யபி தீயதே -என்னக் கடவது இறே

————————————————————————————-

52 பாட்டு –அவதாரிகை –

ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே
இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு உதவும்படி சொல்லுகிறது –

அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் –
சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கேஅநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு
அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் –

வியாக்யானம் –
பொற்றை யுற்ற முற்றல் யானை –
கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை
மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே
மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –

பொற்றை -கற்பாறையும் -கரிக்காடும்

போர் எதிர்ந்து வந்ததைப் –
ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை

பற்றி உற்று –
மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து

மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –
அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –

பாகன் -என்று அதற்க்கு ரஷகனாவன் –
அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த
படியாலே சொல்லுகிறது

இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ
விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர்
என்கை –

ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும்
ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய்
இறே  குவலயாபீடம் நின்றது –
சக்ய பஸ்யதே -வஸூ தேவோ  பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் –
சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த –
சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும்
வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் –
ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால்
எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே
இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –

ஒன்றினார் –
பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்

தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்

அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று
பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –

த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்

சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்
என்னுதல் –

சுற்றல்-எண்ணல்

அம் தண் நீர் அரங்கமே –
தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

——————————————————————————–

53 பாட்டு –அவதாரிகை –

அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை
போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய போக விரோதியைப் போக்குகைக்கு
அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் –என்கிறார் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே –53-

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

 

வியாக்யானம் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி –
சாத்விகர்க்கு தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி அவர்களால் அபரிக்ராஹ்யை யான
சாபத்தை ப்ராபித்த காளியோடே -தமஸ் சுரை -யாகையாலும் துராசாரை யாகையாலும்
சாத்விகரால் உபேஷணீயையாய் இறே -இவள் இருப்பது –

சாபம் எய்திஇலச்சையாய -முக்கண்ணான் –
கபாலீத்வம் பவிஷ்யசி -என்று ப்ரஹ்மா சபிக்கையாலே லஜ்ஜா விஷ்டனான லலாட
நேத்ரன் -என்றுமாம் –
ஆகம முகத்தாலே தன்னை சர்வேச்வரனாக உபதேசித்து -லலாட நேத்ரத்வ
கங்கா தரத்வாதிகளோடு தன்னுடைய சக்திகளையும் ஆவிஷ்கரித்து
லோகத்தை அடங்கலும் கும்பிடு கொள்ளுகிற -இவனுக்கு ப்ரஹ்ம சாபத்தாலே
ஷேத்ரஞ்ஞத்வமும் -சாஸ்திர வஸ்யதையும் -பிரகாசித்தால் லஜ்ஜா விஷ்டனாகச்
சொல்ல வேணுமோ

கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து -ஓட-
மக்களோடே திரண்ட சேனையும் கொண்டு அரை குலையத் தலை குலைய யுத்தத்திலே
ஓடி -நம்பி மூத்த பிரானும் க்ருஷ்ணனும் விசயத்திலே மண்டினவாறே
ருத்ரனும் பரிகரமும் ஒடுகையிலே மண்டின படி

வாணன் ஆயிரம் கரம் கழித்த –
பாணனுடைய ஆயிரம் தோள்களையும் கழித்த-பாணனுடைய ரஷணத்தில் பிரதிக்ஜை பண்ணின ருத்ரனுடைய அபிமானத்தை
கழித்தான்

வாதிமால் –
ஜகத் காரணனான சர்வேஸ்வரன்
கர்ஷண ஏவகி லோகாநாம் உத்பத்தி ரபி சாப்யய -என்னக் கடவது இறே

பீடு கோயில்-
பெரிய கோயில் –பீடு -பெருமை

கூடு நீர் அரங்கம் என்றபேரதே —
சஹ்யத்தின் நின்றும் வந்ததும் -இப்பாலும் உண்டான வர்ஷத்தாலும் கூடிய நீரை உடைத்தான
திருவரங்கம் என்னும் திருநாமத்தை உடைத்து

சாபம் எய்தி -இலைச்சையாய -முக்கண்ணான் -மோடியோடு -மக்களோடு –
கூடு சேனை கொண்டு -வெஞ்சமத்து -மண்டி ஓட -வாணனன் ஆயிரம் கழித்த
வாதிமால் -கூடு நீர் -அரங்கம் என்ற பேரதான -பீடு கோயில் -என்று அந்வயம் –

ஆக இரண்டு பாட்டாலும் செய்தது ஆய்த்து –
ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –
எதிர்தலை திர்யக் ஆகவுமாம்
சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே
கொன்று அருளினான் -க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க  கடவோம் என்று
வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –

பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு  வந்த பாணனுடைய
தோள்களைக் கழித்தான் –

ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –

———————————————————————————-

54 பாட்டு –அவதாரிகை –
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

பதவுரை

இலை தலை

இலைபோன்ற நுனியையுடைய
சரம்

அம்புகளை
துரந்து

பிரயோகித்து
இலங்கை

எல்லையினுடைய
கட்டு

அரண்களை
அழித்தவன்

அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை

(ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து

பிறந்து
இழிந்து

அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து

நெடுக ஓடிவந்து
சந்தனம்

சந்தன மரங்களை
நுந்து

(போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து

(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து

அலசி
இறுத்து

முறிக்க
எறிந்த

(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு

குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி

அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம்

கோயிலிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
அண்ணன்

ஸ்வாமியாவர்.

 

வியாக்யானம் –
சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்
ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும்
உரியவன் -என்கை-

அடுத்த 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –
சந்தனம் குங்குமப் பூ இழிந்து வரும் காவேரி அன்றோ-

——————————————————————————————

55-பாட்டு –அவதாரிகை –

இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி –
லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து எனக்கு மறக்க ஒண்ணாதபடி

என்னை-அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் –

இவ்வாறு  7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

பதவுரை

மா மலர் மன்னு கிழத்தி

சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை

ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய்

(விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும்

மேலும்
ஆயர் பின்னை

(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள்

தோளோடே
மணம் புணர்ந்து

ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும்

அதுக்கு மேலும்
உன்ன பாதம்

உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை

என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து

பொருந்தவைத்து
கல்கினாய்

அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய

(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே

தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.

வியாக்யானம்-

மன்னு மா மலர்க்கிழத்தி –
மென்மை குளிர்த்தி நாற்றம் -என்கிற இவற்றால் ச்லாக்யமான தாமரைப் பூவிலே
பிறப்பை உடையளான பெரிய பிராட்டியார் ஆகிற மஹிஷி
க்ர்தாபிஷேகா மஹிஷீ -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும் உரியவள் என்கை
கிழத்தி -உரியவள்

வைய மங்கை மைந்தனாய்ப் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபிமதனாய் –
யுவதிச்ச குமாரிணி -என்கிற இவள் பருவத்தோடே சேர -யுவா குமார -என்கிற
பருவத்தை உடைய காந்தனாய் –

மைந்தன் -இளையோன் –

பின்னும்
அதுக்கு மேலே
சர்வாதிகத்துவத்துக்கும் போக பௌஷ்கல்யத்துக்கும் இவர்கள் இருவருமே அமைந்து
இருக்க -அதுக்கு மேலே –

அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்றும் -ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ -என்றும்
தேவிமாராவார் திருமகள் பூமி

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது –
அபிஜாதையான நப்பின்னை பிராட்டியாரோடு கலந்து போரும் போக பௌஷ்கல்யத்தை
உடையனாய்

அன்றியும் –
உனக்கு அபிமத விஷயங்கள் குறைவற்று இருக்கச் செய்தே -அதுக்கு மேலேயும் –

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் –
அமரர் சென்னிப் பூ -என்கிறபடியே ஸூரி போக்யமான உன் திருவடிகளை
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னுடைய ஹ்ருதயத்திலே ஷண காலம் விச்லேஷம்
இல்லாதபடி வைத்து என் பக்கலில் பஷ பதித்தாய்
வாத்சல்யம் -தம் தாமுடைய வைலஷண்யத்தையும் -எதிர்தலையில் தண்மையையும்
பார்க்க ஒட்டாது இறே

பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே —
ஸ்ரமஹரமான காவேரியாலே சூழப் பட்ட கோயிலிலே நித்ய வாஸம் பண்ணின

புண்டரீக அவயவன் அல்லையோ –
புண்டரீக அவயவ ப்ரசுர்யத்தாலே புண்டரீகவ்யபதேசம்

ஆனந்தோ ப்ரஹ்மோ -விஞ்ஞாநம் ப்ரஹ்ம -இதிவத்

திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –

—————————————————————————————-

56 -பாட்டு –அவதாரிகை –
இனி மேல் ஆறு பாட்டாலே -திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை
அனுபவிக்கிறார்
இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன்
பின்புள்ளாரான –அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி விரோதிகளைப் போக்கி
அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற
படியை அனுபவிக்கிறார் –

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை மன்னன்

இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து

பத்தாகிய
பை தலை

வலிய தலைகள்
நீலத்து உலக

பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க

(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று

இலங்கையிற் புகுந்து
கொன்று

(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட

விஜயம் பெற்ற
வீரனே

மஹாவீரனே!
விலக்கு நூலர்

உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர்

வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார்

(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள

வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே

ஸர்வேச்வரனும் நீயன்றோ

 

வியாக்யானம் –

இலங்கை மன்னன் –
குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான
ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய
நிழலாய் இருக்குமவன் இறே

ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-
அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி
பைந்தலை -வலிய தலை

ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு
பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –

கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி –
இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே
ஜனஸ்தான வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று
விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

விலங்கு நூலர் –
சர்வ காலமும் வைதிக கர்ம அனுஷ்டாதாக்கள் என்று தோற்றும்படியான
யஞ்ஞோ பவீதத்தை சரீரத்துக்கு நிரூபகமாக உடையராய் –

விலங்கு -உடம்பு

வேத நாவர் –
சர்வ காலமும் வேத பாராயணம் பண்ணுகையாலே வேத உச்சாரணத்தை நிரூபகமாக
உடையராய்

நீதியான கேள்வியார் –
சர்வ கர்ம சமாராத்யன் சர்வேஸ்வரன் என்று சதாசார்யர் உபதேசம் உடைய ப்ராஹ்மணர்

வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே —
அவர்கள் உடைய அநுகூல வ்ர்த்தியை ச்வீகரிக்கைகாகத் திருக் குடந்தையிலே கண்
வளர்ந்து அருளுகிற சர்வாதிகன் அல்லையோ –

வலம் -அநு கூலம்

சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தை ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே
அநுபவித்த படி சொல்லிற்றாய்  விட்டது –

—————————————————————————————–

57 -பாட்டு –அவதாரிகை –

ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே
நித்ய அநபாயிநி யான பிராட்டி யோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான
ராவணனை அழியச் செய்தாப் போலே –

பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ
விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

வியாக்யானம் –

சங்கு தங்கு முன்கை –
வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –
அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும்
அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –

நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –

கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –
திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை
நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –

தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது

வன்று –
உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும்
இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்

சென்று –
அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று

அடர்த்து எறிந்த  வாழியான் –
அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

எறிதல் -அறுத்தல்

கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் –
பரிமளம் மாறாத நீண்ட குழலை உடைய ஸ்திரீகள்

குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் –
அவஹாகித்த நீரானது இவர்களுடைய நெருக்கத்தாலே ப்ரவர்த்தமாய் -அத்தாலே
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே

இத்தால் –
ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்க செல்லுமவர்களை –

சதம் மாலா ஹஸ்தா -என்கிறபடியே எதிரேற்றுக் கொள்ளுமவர்களையும்

அங்குதைக்கு பரிசாரிகைகளாயும்-நிற்குமவர்கள் -என்கை

கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –

ஆக –
இரண்டு பாட்டால் சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தையும்
அழகையும் அனுபவித்து
மேல் இரண்டு பாட்டாலே
க்ருஷ்ணனுடைய வீர சரிதத்தையும் அழகையும் ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே அனுபவிக்கிறார்

————————————————————————————–

58 -பாட்டு- அவதாரிகை –
ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்
போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ -என்கிறார்

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே –58-

பதவுரை

மரம் கெட கடந்து

யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று.
மத்த யானை அடர்ந்து

(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து
மத்தகத்து

(அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து

(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர்

(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம்

குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து

வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)
மண் அளந்த பாத!

உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.)
வேதியர் வசம் கொள

வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு

குடந்தையுள் கிடந்தமால் அல்லையே.

வியாக்யானம் –

மரம் கெட நடந்து –
மருதுகள் முறிய நடை கற்று
நடக்கையாவது -தவழுகையும் -தளர் நடை இடுகையும் –

அடர்த்து மத்த யானை –
மதிக்கப் பண்ணி கொண்டு வந்த குவலயாபீடத்தை செருக்கு போம்படி நெருக்கி

மத்தகத்துஉரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து –
ஆனை விழ குத்தும் இடத்தில் அத்வதீயமான கொம்பை முறித்து
அதினுடைய மிடுக்கு அழியும்படி மஸ்தகத்திலே புடைத்து –
மதத்தாலே வந்த செருக்கை அதினுடைய நாலு காலுக்குள்ளேயும் புக்கு நின்று
உழைப்பித்துக் கொடுத்து -அதினுடைய ஹிம்சா பரிகரமான கொம்பை கொன்று
அருளினான் என்றது ஆய்த்து

உகந்த உத்தமா-
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றது என்று உகந்த புருஷோத்தமனே –
இங்கு புருஷோத்தமன் -என்கிறது ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத் தளவு அன்றியே
ஆஸ்ரித பஷ பாதத்தால் வந்த உத்கர்ஷத்தை நினைத்து –

குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு உத்கர்ஷ ஹேது

துரங்கம் வாய் பிளந்து –
சந்த்யா காலத்திலே திருவாய்ப்பாடியை அழிக்க வந்த கேசியுடைய வாயைக் கிழித்து

மண் அளந்த பாத –
ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை உடையவனே
த்ரிவிக்ரம அபதாநம் -கேசி வத சமநந்தரத்திலே கிருஷ்ணனுடைய சேஷ்டிதமாக பேசலாம்படி
இறே இரண்டு அவதாரத்துக்கும் உண்டான சௌப்ராத்ரம் -அதாகிறது
எல்லாரையும் வரையாது தீண்டுகையும்
எதிரிகளை அழகாலே அழிக்கையும்

வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே-
வேதார்த்த தாத்பர்யம் கைப்பட்டவர்கள் தம் தாம் அபேஷிதங்களை உன் பக்கலிலே
அபேஷிக்கலாம்படி திருக் குடைந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன்-அல்லையோ
-வஞ்சகராய் வந்த யமளார்ஜூநங்களை தன் மௌக்யத்தாலே அழித்து
எதிரிகளாக கண் முகப்பே தோற்ற வந்த குவலயாபீடத்தையும் கேசியையும் அநாயேசேந-அழியச் செய்து
தான் வஞ்சகனாய் எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறை உணர்த்தின-புருஷோத்தமன் –

தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை என்றது ஆய்த்து –

———————————————————————————-

59 -பாட்டு -அவதாரிகை –

பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து
அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

வியாக்யானம் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
செந்நெலை சுற்றும் உடைத்தாய் -ஸ்ரமஹரமான வயலையும் -அதுக்குள்ளாக பெரிய
அகழையும் -அதுக்குள்ளாக பூத்த பொழிலையும் -உடைத்தாய் –

இத்தால்
ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுரூபமான சர்வ பிரகார-போக்யதையை உடைய தேசம் -என்கை

கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா –
தர்சநீயமாய் -ஒக்கத்தை உடைய மாடங்களை உடைத்தாய் -ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே
நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனே –

இத்தால்-
ஆராமுத ஆழ்வார் உடைய ரசிகத்வதுக்கு ஏகாந்தமான போக ஸ்தானம் என்கை

கோவலா -என்கிறது
கிருக்ஷ்ணனுடைய அழகும் சௌலப்யமும் சீலமும் ஆராமுத ஆழ்வார் பக்கலிலே
காணலாம்படி இருக்கையாலே -அவதார அந்தரங்கள் என்ன ஒண்ணாது -சர்வதாஸாத்ர்ச்யத்தாலே

குடந்தையன் கோவலன் குடி குடியார் -என்று ஒரு தேச விசேஷத்திலும் பிரசித்தம் இறே

காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-
காலநேமி தந்த வக்ரன் க்ரூரரான முரன் -இவர்களுடைய தலையை அறுத்து
கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –

இது கிருஷ்ணன் பராக்ரமம் சொல்ல வந்ததால் இங்கு கரன் என்பதை குரூரமான முரன் என்கிறார் –

காலனோடு கூட வில் குனித்த –
இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய்
இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –

வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –

——————————————————————————-

60 -பாட்டு -அவதாரிகை –
உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்
போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே
நிலையார நின்றான் -என்று
நிலை யழகிலே துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளிற்று
போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-60-

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

வியாக்யானம்-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட –
பருத்து தாரைகளாய் விழுகிற மூடு பனி சொரிய

செழுமை -பெருமை

கொழுப்பு -கொழுமை
இடைவிடாதே தாரைகளாய் விழுகை

செழுமை -வண்மை

பெரும்பனி -மூடு பனி

இப்படி பனியை வர்ணிக்கிறது -ஏதேனுமாக திருமலையில் சம்பந்தித்தவை தமக்கு
மநோஹரமாய் இருக்கையாலே-

வுயர்ந்த வேய் விழுந்து –
ஓங்கின மூங்கில்கள் பனியால் வந்த கனத்தாலே தரை யளவும் சாய்ந்து
செழும் கொழும் -உயர்ந்த வேய் -பெரும் பனி பொழிந்திட -விழுந்து -என்னவுமாம்

அப்போது -பெருத்து -ச்ரத்தையை உடைத்தாய் -உயர்ந்த மூங்கில்கள் என்றாகக் கடவது –
திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷமே விளைநீராக வளருகிறவை -என்கை –

உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று –
ஆதித்ய கிரணங்களாலே பனி உலருகையாலே –
பனி உலர்ந்தவாறே தலை எடுத்து ஆகாசத்தின் எல்லையில் -முட்டும்
திருமலையிலே நின்று அருளி –

இத்தால்-திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷத்தாலே
தலை எடுக்கையும் -வ்யதிரேகத்தில் தரைப்படுகையும் -அத்  தைசிகமான பதார்த்தங்களுக்கு
ஸ்வபாவம் என்னும் இடத்துக்கு த்யோதகம் என்கை –

எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக்கும்
வண்டுகள் கிளர்ந்து பரவா திரியும்படி வர்த்திக்குமதாய்
தழைத்து ச்ரத்தையை உடைத்தாய்
பரப்பு மாறப் பூத்த பொழிலை உடைய தேசம் –

இத்தால் -வண்டுகள் பொழிலின் மது வெள்ளத்தால் அவஹாக்கிக மாட்டாதே
அலமாக்கும் என்கை

செழும் தடம் குடந்தையுள் –
விடமாட்டாதே -அப் பொழிலுக்குள்வாயில் அழகிய தடாகத்தை உடைத்தான திருக் குடந்தையிலே

இத்தால் -அத்தேசத்தில் திர்யக்குகளும் போக்யத்தால் வந்து களித்து வர்திக்கும்படியாயும் –
தாபத் த்ரயாதுரர்க்கு கண்ட போதே ஸ்ரமஹரமாய் இருக்கும் தேசம் -என்கிறது –

கிடந்த மாலும் அல்லையே
கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார் ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading