திருச்சந்த விருத்தம் -31-40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

31 பாட்டு –அவதாரிகை –

கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் -இதில்
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-

பதவுரை

காலநேமி காலனே!

காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய்

எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு

முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு

ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு

மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய

ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!

ஆச்சர்யபூதனே
வேலைவேவ

கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த

வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!

எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம்

உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும்

(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!

ஸ்வாமியே!

வியாக்யானம் –

கால நேமி காலனே
கால நேமி யாகிற அசுரனுக்கும் ம்ர்த்யு யானவனே –

காலநேமி ராவணனின் மாதூலன்
இத்தால் முமுஷுக்களாய் தேவரீரை ஆஸ்ரயிக்கையிலே உத்யுக்தர் ஆனவர்களுடைய

ஆஸ்ரயண விரோதி பாபங்களை -கால நேமியை நசிப்பித்தால்  போலே நசிப்பிக்குமவன் என்கை –
பிராட்டி பொறுப்பிக்க ஈஸ்வரன் பொறுக்குமாய் இருக்கச் செய்தேயும் -தம் அதுக்கு அஞ்சின படியாலே
கால நேமியை த்ருஷ்டாந்தீ கரிக்கிறார் இறே

கணக்கிலாத கீர்த்தியாய் –
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமாய் -எண்ணிறந்த சௌலப்யாதி கல்யாண குணங்களை உடையை என்னும்
குணவத்தா ப்ரதையை உடையவனே

குடந்தையன் -கோவலன் -என்று இந்த சௌலப்யாதிகள் பரத்வத்திலும் பிரசித்தம் இறே
அபார காருண்யம் -தொடங்கி சௌந்தர்யம ஹோததே -என்னக் கடவது இ றே

ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
ஆஸ்ரயித்தால் பண்ணும் உபகாரத்தை சொல்லுகிறது –
சப்த த்வீபவதியான பூமியை உண்டு -பூர்வ கல்ப அவஸாநத்திலே அத்வதீய பாலனான
ஆச்சர்ய சக்தியை நிரூபகமாக உடையவனே

பண்பு -இயல்வு
த்ரை லோகத்துக்கும் உப லஷணம்

இத்தால் ஸ்வா தந்த்ரமே நிரூபகமாய் போந்த சம்சாரியை சேஷத்வமே நிரூபகம் என்னும் படி
பண்ண வல்ல சக்தியை உடையவன் -என்கை -அதாகிறது –
த்விதா பஜ்யே யமப்யேயம் ந நமேயம் -என்று இருக்குமவனை –

முஹூர்த்தம் அபிஜீவாவ-என்றும் –

நின்னலால் இலேன் காண்  -என்றும் சொல்லும்படி பண்ணுகை

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –

பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –

இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை

இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் –
வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்

நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே
உன் திறத்தில் அநந்ய ப்ரயோஜனராய் -சாயாவா சத்வ மநு கச்சேத் -என்கிறபடியே
உன் பார்ச்வத்தை விடமாட்டாத பக்தர்கள் உடைய மனச்சு உன்னை ஒழிய வேறு
ப்ராப்ய ப்ராபகங்கள் உண்டு என்னும் நசை யறுக்க வல்ல மஹா பிரபாவத்தை
உடையவனே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்

ஆஸ்ரித விஷயத்தில் கீழ் உக்தமான தன் படிகளை அனுசந்தித்தால் அது தன்னை
ஒழிய வேறு ஒன்றை அறியாதபடி பண்ணுமவன் என்கை –

————————————————————————————–

32 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்
பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –
ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

பதவுரை

குரங்கு இனம் படைகொடு

வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய்

கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு

அவ்விலங்கையிலுள்ள
அரக்கர்

ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க

அழியும்படி
வெம் சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி

வீரர்களில் தலைவன்
நீ

(எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க

நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு

உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க

குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே

ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து

(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட

(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே

தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.

வியாக்யானம் –

குரக்கினப் படை கொடு –
வானர சமூஹமான சேனையைக் கொண்டு –

குரை கடலின் மீது போய் –
கடலின் கிளர்த்தியையும் கோஷத்தையும் கண்டு -இக்கடலை எங்கனே கடக்கக் கடவோம் –
என்று அந்த சேனை பயப்படும்படி கோஷத்தை உடைத்தான கடலை தூர்த்து அதன் மேல
போய் -இத்தால் பிரபல பதார்த்தங்களை ஷூத்ர பதார்த்தங்களைக் கொண்டு அழிக்க
வல்லவன் என்கை –

அரக்கர் அரங்க –
அவ் அவபதாநத்தைக் கண்டு -வர பல புஜ பலங்களால் நமக்கு எதிரி இல்லை என்று
இருக்கும் ராஷசர் -போக்கடி தேடி அஞ்சும்படியாக

வெஞ்சரம் துரந்த வாதி நீ -அரக்கல் -கரத்தல் -அரங்க என்று மெல் ஒற்றாய்க் கிடக்கிறது

வெஞ்சரம் துரந்த –
பாவக சங்காசை -என்கிறபடியே அக்நி ஸ்த்ர்சங்களான திருச்சரங்களை நடத்தின

ஆதி நீ –
இலங்கைக்கு அரணான சமுத்ரத்தை தூர்த்து -அரணை  அழித்து -ராஷசர்கள் உடைய
ஹ்ருதயத்தை அழித்து -திருச்சரங்களாலே உடல்களைத் துணித்துச் செய்த ஆனைத்
தொழில்களாலே வீரர்களில் பிரதானனான வீரன் நீ -என்கிறார்

ஆதி -சப்தம் பிரதானத்தைச் சொல்லுகிறது

இரக்க மண் கொடுத்தவருக்கு –
நீ அர்த்தியாகச் செல்ல பிரத்யாக்யாநம் பண்ணுதல் -சுக்ரனுடைய உபதேசம் கேட்டல்
செய்யாதே பூமியைத் தந்த மகாபலிக்கு
இரக்கம் ஒன்றும் இன்றியே –
பூமியிலே அவனுக்கு ஒரு பத ந்யாஸமும் சேஷியாதபடி

பரக்க வைத்து அளந்து கொண்ட –
சிறு காலைக் காட்டி -மூன்றடி இரந்து -இரண்டடியாலே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்ட

பற்ப நாபன் அல்லையே –
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு -காடும் ஓடையும் அளந்து கொண்டவன் அல்லையோ –
1-திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –
2-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
3-அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை –

இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம் –

——————————————————————————————-

33 பாட்டு –

அவதாரிகை –
ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்
ஜாதி நியதி இல்லை என்கிறார் –

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

பதவுரை

மின் நிறத்து எயிறு அரக்கன்

மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன்
வீழ

மாளும்படி
வெம் சரம்

கொடிய அம்புகளை
துரந்து

அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி)
பின்னவற்கு

அவனது தம்பியான விபீடணனுக்கு
அருள் புரிந்து

க்ருபை செய்தருளி
அரசு அளித்த

பட்டாபிஷேகம் செய்து வைத்த
பெற்றியோய்!

பெருமானே!
நல் சிறத்து

நல்ல நிறத்தையுடையவளாய்
ஓர் இன் சொல்

ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய்
ஏழை

உன்பக்கல் சாபல்யமுடையவளான
பின்னை

நப்பின்னைப் பிராட்டிக்கு
கேள்வி

நாயகனானவனே!
மன்னு சீர்

நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய்
பொன் நிறந்த வண்ணன் ஆய

பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான
புண்டரீகன் அல்லையே

புண்டரீகாக்ஷனென்பவன்  நீயே காண்

வியாக்யானம் –

மின் நிறத்து எயிறு அரக்கன் –
மின் போலே ஒளியை உடைத்தான எயிற்றோடு கூடின -ராஷசனான ராவணன் –

மின் நிறத்து எயிறு -என்றது புஜ பலத்தால் வந்த செருக்கு ஸூசகமாய் இருக்கிறது

அரக்கன் -என்கையாலே அத் தோள் வலி பர ஹிம்சைக்கே யாகை ஜாதி ஸ்வபாவமாய்
இருக்கை -சத் பிரகிருதிகள் உடைய தோள் வலி இறே சாத்விகருக்கு ஒதுங்க நிழலாய்
இருப்பது —

வீழ வெஞ்சரம் துரந்து
அவன் முடியும்படியாக -பாவக ஸங்காசங்களான சரங்களை ஏவி –

பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய் –
அவன் தம்பிக்கு பிரசாதத்தைப் பண்ணி ராஜ்யத்தை கொடுத்த சீலத்தையை உடையவனே –
ராகவம் சரணம் கத -என்று அத்தையே கொண்டு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அவன் தம்பி
என்று பாராதே –வத்யதாம் வத்யதாம் -என்று மஹா ராஜ ப்ரப்ர்திகள் வார்த்தையும் கேளாதே
நத்யஜேயம் -என்றும் -ஏதத் வ்ரதம் மம -என்றும் -பிரசாதத்தைப் பண்ணி -ராஜ்ய ஸ்பர்ஹை
அவனுக்கு இன்றிக்கே இருக்க -தாஸ வச்சாவமா நி தா -என்று புறப்பட விட்டான் என்று
அந்தலங்கா ராஜ்யத்தைக் கொடுப்பதே -இது என்ன ஸ்வபாவம் -என்கிறது

பெற்றி -ஸ்வபாவம்

நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ-
நல்ல நிறத்தையும் -இனிய பேச்சையும் உடையளாய் -தேவரீர் பக்கலிலே
அதி சபலையான நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே -இத்தால்
நப்பின்னை பிராட்டியாருடைய ரூப குணங்களும் ஆத்ம குணங்களும்
தேவரருக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு
போக்யனாய் இருக்கும்படியை சொல்லுகிறது

மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே —
நித்தியமான ஔ தார்யாதி குணங்களையும் -அந்தராதித்யே ஹிரண்மயே புருஷோ
த்ர்ச்யதே -என்றும் -ருக்மாபம் -என்றும் சொல்லுகிற ஸபர்ஹணீய விக்ரஹத்தை
உடையையாய் -யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்கிறபடி
புண்டரீகாஷனாய் இருக்கிறவன் அல்லையோ –
இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்

நிறம் -வடிவு

வண்ணம் -நிறம்

ஆக அவயவ சோபையும் -வர்ண சோபையும் சொல்லுகிறது
இத்தால் ஆதித்ய மண்டல மத்ய அவதாரத்தின் ஆத்ம குணங்களும் ரூப குணங்களும்
மஹிஷீ வர்க்கத்துக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
போக்ய பூதனாய் இருக்கிறபடியைச் சொல்லுகிறது –

——————————————————————————————-

34 பாட்டு –அவதாரிகை –
கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண  ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு
பார்க்காதே –விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் –இதில் –
கார்ய காரணங்கள் என்ன –
பிரமாண ப்ரமேயங்கள் என்ன –
சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன
ஆச்சர்யம் -என்கிறார் –

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

பதவுரை

ஆதி ஆதி ஆதி நீ

மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி

அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால்

இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ

பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில்

அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய்

(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி

யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய்

உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி

இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம்

இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம்

என்ன ஆச்சரியமோதான்.

வியாக்யானம் –

ஆதி யாதி யாதி நீ –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –

ஓர் அண்டமாதி –
மஹதாத்யவஸ்தனான நீயே ஏக ரூபமான அண்ட ஜாதியுமாவுதி –
ஈத்ர்சாநாம் ததா -என்கிறபடியே அண்டங்கள் ஏக ரூபமாய் இறே இருப்பது

ஏக வசனம் ஜாத் யபிப்ராயத்தாலே

அதாகிறது –

அண்டத்தில் உத்பன்னமான ப்ரஹ்மாதி பீபீலிகாந்தமான சகல
பதார்த்தங்களையும் ஸ்ர்ஷ்டித்து -தத் அனுப்ரேவேசத்தாலே சகல
அந்தர்யாமியாய் நிற்கை

ஆதலால் சோதியாத சோதி நீ –
இப்படி சகல ஜகத் காரண பூதனாகையாலே பரீஷிக்க வேண்டாத உபாஸ்ய தேஜஸ்
தத்வம் -நீ –உபாஸ்யமான தேஜஸ் தத்வம் –

த்ரிவித மஹா பூதமோ -தேவதையோ -ஆதித்யனோ -வைச்வானர அக்நியோ
என்று சங்கித்து -சர்வ நிர்வாஹகமான தேஜஸ் தத்வமே உபாஸ்யம் என்று
நிர்ணயிக்க வேண்டாது இருக்கை

அதயதத பரோதி வோஜ்யோதி -என்றும் –

ததேவ ஜ்யோதி சாஜ்யோதி -என்றும் –

நாராயண பரோஜ்யோதி -என்கிற தத்வம் அல்லையோ நீ –
அது உண்மையில் விளங்கினாய் –
அந்த தேஜஸ் தத்வம் நித்ய நிர்தோஷ ப்ரமாண சித்தம் ஆகையாலே –

இதர விஸ ஜாதீயனாய்க் கொண்டு விளங்கினவனே

வேதமாகி
வேதத்தினுடைய நித்ய நிர்தோஷத்துக்கு நிர்வாஹகனாய் -அதாவது
சம்ஹார வேளையில் திரு உள்ளத்தில் சம்ச்காரத்தாலே வைத்து
யோவை வேதாம்ச்ச ப்ரஹி ணோ தி தஸ்மை -என்கிறபடியே ஆதியிலே
வேதத்துக்கு அத்யாபன் ஆகை

வேள்வியாகி –
ததர்த்தமான யாகத்துக்கு நிர்வாஹகனாவனே -அதாவது –ஆராத்யனாகை –

விண்ணினோடு மண்ணுமாய் –
ஆராதன பலமான போக மோஷ பூமிகளுக்கு நிர்வாஹகனாகை

விண் -என்று பரமபதம்

மண் -என்று சதுர்தச புவனத்துக்கும் உப லஷணம்

யாகம் அந்யோந்ய வ்ருதங்களான போக மோஷங்கள் இரண்டுக்கும் சாதனம் ஆமோ
என்னில் –
ஜீவ பர யாதாம்ய ஞான பூர்வகமான யாகம் மோஷத்துக்கும்
கேவல யாகம் போகத்துக்கும் சாதனம் ஆகையாலே அவிருத்தம்

ஆதியாகி –
இது எல்லாம் ருசி உடையவனுக்கு அங்கம் இ றே -அந்த ருசி ஜநகனாய்க் கொண்டு

ஆயனாய மாயம் என்ன மாயமே –
அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு
ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –

————————————————————————————————-

35 பாட்டு –

அவதாரிகை –
அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்
கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –

இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான
குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க  தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே –35-

பதவுரை

என் இசனே

எம்பெருமானே! (தேவரீர்)
ஆழியார் தம் பிரானும் ஆகி

திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து
அம்பு உலாவும் மீனும் ஆகி

ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி

ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது

அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது

மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும்

இதற்கு மேலும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய்

வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல்

எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.

வியாக்யானம் –

யாழியார் தம்பிரானுமாகி –அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி -மிக்கது என்று அந்வயமாகக் கடவது –

தமஸ் பரமோதாத சங்கு சக்ர கதாதர-என்கிறபடியே –
சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருவாழியை உடைய சர்வாதிகனுமாய் வைத்து

அம்பு உலாவு மீனுமாகி –
அம்பிலே வர்த்திக்கிற மத்ச்யமாய்

அப்பை அம்பு என்று மெலித்துக் கிடக்கிறது

முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -என்கிறபடியே
பிரளயார்ணவத்தில் நோவுபட்ட தேவர்களுடைய ஆபத்தை போக்குகைகாக தன்னிலமான நீரிலே
சஞ்சரிக்கக் கடவதான மத்ச்யமுமாய் –

சப்தத்தாலே -தேவ யோநி மனுஷ்ய யோநிகளிலே பண்ணின அவதாரங்களால்
பர்யவசியாத அனுக்ரஹ அதிசயத்தை சொல்லுகிறது

ஆமையாகி
அமர்த்த மதன வேளையிலே மந்த்ர தாரண அர்த்தமாக கூர்மமாய் –
கூர்மம் பூதம் சர்ப்பந்தம் -என்கிறபடியே பிரளய வேளையில் கூர்ம விக்ரஹத்தை
சொல்லிற்று ஆகவுமாம்

மிக்கது –
ஷூத்ர யோநி என்றும் -பாப யோநி என்றும் பாராதே கை கழிய அவதரித்து

அன்பு மிக்கு –
ஆபன்னராய் அவதாரங்களுக்கு நிமித்த பூதரான சேதனர் பக்கலில் உண்டான
சங்க அதிசயத்தால் வந்து அவதரித்த இத்தனை இறே
ஒரு கர்மம் பிரேரிக்க வாதல் -ஒரு கர்த்த பிரேரிக்க வாதல் அன்று இறே

மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கு -என்னக் கடவது இறே

அன்றியும் –
அதுக்கு மேலே ஸூரி போக்யமான வடிவை ஜல சர சத்வ சஜாதீயம் ஆக்குவதே
என்று அதிலே ஈடுபட்டு ஆய்த்து இவர் தாம் இருப்பது

அதில் காட்டிலும் கிருஷ்ணாவதாரத்தில் குணாதிக்யம் தம்மை ஈடுபடுத்திய படியைச் சொல்லுகிறார் மேலே –

கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் –
கொம்பு -போலேயும் அரவு போலேயும் –நுண்ணிய இடையை உடைய அசோதை
பிராட்டிக்கு பிள்ளையாய் -மத்ஸ்யாதி அவதாரங்களில் ரஷணத்தில் தன்
ஸ்வா தந்த்ர்யங்கள் குலைந்தது இல்லை -இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும்
அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே

ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –

அவதாரங்களில் ஸ்வரூபத்தை அழிய மாறின இத்தனை இறே

எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ-
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படியான நீர்மையைக் காட்டி எங்களை
அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்டது என் செய்த படி –
பஹூ வசனத்தாலே மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார்

எம் ஈசனே –

அறிந்தோம் –
எங்களுடைய இழவு பேறுகள் உன்னது என்னும்படியான சம்பந்த்தாலே –

————————————————————————————————

36 பாட்டு –அவதாரிகை –

கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-

பதவுரை

ஆடகந்தபூண் முலை

ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய்

யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து

சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள்

சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட

நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த

உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை

(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால்

ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து

உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர்

பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது

அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல்

என்ன வித்தகம்!

ஆடகம் -ஹாடகம் -ஆபரணம்

ஐய -சூஷ்மமான பிராணனை கிரஹிக்க வல்ல

வியாக்யானம்-

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் -என்றது தன்னையே
முக பேதத்தாலே அனுபவிக்கிறார் –

ஆடகத்த பூண் முலை –
பொன்னாலே செய்த ஹாரத்தாலே அலங்க்ர்தமான முலையை உடையவள் –
க்ருஷ்ணன் அமுது செய்யக் கடவன் -என்று முலையை ஒப்பித்துக் கொண்டு
நிற்கிறாள் ஆய்த்து அவள் -அந்த பிரேமத்தை அனுபவிக்கிறார் இ றே இவர் –

ஆயார் மாதர் பிள்ளையாய் -என்ற சாமாந்யத்தை –அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்று விசேஷிக்கிறார் –

சர்வ நியந்தாவானவன் ஓர் இடைச்சி -என் மகன் -என்று
நியமிக்கலாம்படி இருக்கிற ஆச்சர்யத்தில் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர் –

சாடு உதைத்து –
ஸ்தநயார்த்தியாய் திருவடிகளை நிமிர்த்து -சகடாசுரனை நிரசித்து –
தநம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு -என்றும் -அநந்ய பிரயோஜநருக்கு ப்ராப்யமான
திருவடிகளை துஷ் பிரக்ர்திகளுக்கு -வாத சாதனம் ஆக்குவதே -என்கை –

ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள் –
பிள்ளைகள் அனுங்க சஞ்சரிக்கும் புள்ளின் கருத்தை உடையளாய் -அபூர்வை
என்று சங்கித்து விலங்க ஒண்ணாதபடி க்ர்த்ரிமான ஜனநியான பேய்ப் பெண் –

ஓர் புள் என்று தப்ப ஒண்ணாதபடி அனுங்கப் பண்ணும் புள் என்றபடி –

வீட வைத்த வெய்ய கொங்கை –
ஜகஜ் ஜீவநமான உன் திறத்திலே தீங்கை விளைப்பாளாக திருப் பவளத்திலே
வைத்த க்ரூரமான முலையில் –

ஐய பால் அமுது செய்து –
ஸூஷ்மமான பிராணனைப் புக்கு க்ரஹிக்கவல்ல அதி ஸூஷ்மமான பாலை
அமுது செய்து –
அவள் தன்னுடைய க்ரௌர்யத்தையும் ஸ்தனத்தினுடைய க்ரௌர்யத்தையும்
விரித்துப் பேசுகிறார் ஆய்த்து -தம்முடைய பய அதிசயத்தாலே

ஐய -என்று சம்போதனம் ஆகவுமாம்

பூதனையை தாய் என்று மௌக்யத்தாலே அவள் முலையை அமுது செய்தான் –
பிரகாஸ சந்நிதியிலே தமஸ் போலே துஷ் பிரகிருதிகள் நசிக்கும் தரமி
ஸ்வபாவத்தாலே அத்தலை இத்தலை யான வித்தனை –

ஆடகக் கை மாதர் வாய் அமுது உண்டது என் கொலோ –
அப்பருவத்தில் -உன்னையும் ஒக்கலையில் கொண்டு -என்னுமா போலே

அவ் ஊரில் கன்னிகைகள் தங்கள் க்ரஹத்தில் கொண்டு போக யௌவன
தசையைப் பரிக்ரஹித்து விதக்தனாய் கலந்து அவர்கள் வாக் அம்ர்தத்தை உண்ட
இது என்னோ –

ஆடகக் கை மாதர்
பொன்னாலே அலங்கரித்த கை வளையை உடைய பெண்கள் –
அவன் பிடிக்கும் கை என்றும் –
அவன் அணைக்கும் கொங்கை என்றும் -அலங்கரிக்கிறார்கள் ஆய்த்து

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின
செய்து வரும் கன்னியரும் மகிழ-அவர்கள் வாய் அமுதம் உண்பானே
என் கொலோ -என்றது –

அவ்விஷத்துக்கு இவ் வாக் அம்ர்த்தம் பரிஹாராமோ
சர்வ தாரகனாய் வேறு தாரகாந்தரம் இன்றிகே இருக்கிற உனக்கு -ப்ரதிகூலர்
பிராணனும் -அனுகூலர் ப்ரேமமும் தாரகமாய் இருந்ததோ

பால்ய அவஸ்தையில் யுவாவாயும்
யுவாவான நீ பாலனாயும் இருந்த விது என்ன ஆச்சர்யமோ என்கிறார் –

——————————————————————————————-

37 பாட்டு –

அவதாரிகை –
பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்
அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ர்ஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்
ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க
அனுபவிக்கிறார் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

பதவுரை

காய்ந்த

காய்கள் நிறைந்ததும்
நீள்

உயர்த்தியையுடையதுமான
விளங்கனி

(அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து

உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம்

எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
சாய்த்து

முடித்து
மா பிளந்த

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த
கைத் தலத்த

திருக்கைகளையுடைய
கண்ணன் என்பர்

கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள்.
ஆய்ச்சி பாலை

யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை
உண்டு

அமுது செய்து
வெண்ணெய் உண்டு

நவநீதத்தை அமுத செய்து
பேய்ச்சிபாலை உண்டு

பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு
பின்

கல்ப்பத்தின் முடிவில்
மண்ணை

பூமியை
உண்டு

திருவயிற்றிலே வைத்து
பண்டு

கல்பத்தின் ஆதியிலே
ஓர் ஏனம் ஆய

ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த
வாமனா

வாமந மூர்த்தியே!

வியாக்யானம் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
பூத்து நின்றது ஆய்த்து –

இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
சொல்லிற்று –

மா பிளந்த –
ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

கைத்தலத்த கண்ணன் என்பரால் –
ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

பேய்ச்சி பாலை உண்டு –
தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
அவ்வழியாலே அவளை முடித்து –

யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
பின் மண்ணை உண்டு –
க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

பண்டு ஓர் ஏனமாய வாமனா —
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

——————————————————————————————

38- பாட்டு –

அவதாரிகை
பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்
செய்தும் -அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணா அவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

பதவுரை

கடம் கலந்த

மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி

வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு

கொம்பை
ஒசித்து

முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய்

ஓர் மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல்

விஷமனான காளியநாகத்தின் மேல்
நடம் பயின்ற

நர்ததனம் செய்தருளின

நாதனே! ஸ்வாமியே!

குடம் கலந்த கூத்தன் ஆய

குடக்கூத்தாடின
கொண்டல் வண்ண!

காளமேகம் போன்ற கண்ணபிரானே!
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப

குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே!
காலநேமி காலனே!

காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து –
குவலயாபீடத்தை மதிப்பித்த படியாலே அம்மத ஜலம் உடம்பிலே வ்யாப்தமாய் அதி
ப்ரபலமாய் இருந்த அதின் கொம்பை முறித்து -இத்தால்
ஸ்வாபாவிகமான பலத்தாலும் மத பலத்தாலும் துர்ஜயமான குவலயாபீடத்தை
அநாயாசேந அழித்தான் என்கை –

கடம் -ஆனை மதம்

ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –
வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே
அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –
முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –

விஷமே இவனுக்கு உபாதானம் என்னும்படி விஷ ப்ரசுரமான காளியனுடைய
பணங்களிலே வல்லார் ஆடினாப் போலே திருவடிகளை மாறி இட்டு அவ் வழியாலே
அவனைத் தமித்துப் போகவிட்டு -யமுனையை சர்வ உபஜீவ்யமாம்படி பண்ணி
உன்னுடைய நாதத்வத்தை பிரகாசிப்பித்தவனே

துஷ்டு வுர்முதிதாகோபாத்ர்ஷ்ட்வா சீத ஜலாம்நதீம் -என்னக் கடவது இறே
இவ்வளவில் துஷ்க்ர்த் விநாசம் சொல்லி -மேல் சாது பரித்ராணாம் சொல்லுகிறது –

குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண –
கையில் திருவாழி பொருந்தினால் போலே பொருந்தின குடத்தை உடையனாய்
ஜாதி ப்ரயுக்தமான கூத்தையாடி –மன்றிலே உன்னுடைய அழகை சர்வ ஸ்வதாநம்
பண்ணிணவனே -பிரயோஜநாந்தர  நிரபேஷமாக ஜல ஸ்தல விபாகம் அன்றிக்கே
வர்ஷிக்கும் மேக ஸ்வபாவனேகுடக் கூத்து ஆடின போதை காளமேக நிபாச்யமான
நிறத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப –
இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –
அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின
திரு மார்வை உடையவனே –

வடம் -தொடை –

மாலை -வனமாலை

காலநேமி காலனே —
ஆபன்னராய்த் திருவடிகளில் விழுந்த தேவர்களுக்கு விரோதியான காலநேமிக்கு
ம்ர்த்யு வானவனே

இத்தால் சர்வ அசாதாரணனாய் இருக்கச் செய்தேயும் தன் திருவடிகளில் தலை
சாய்ந்தாருக்கு விரோதிகளானார் தனக்கு சத்ரு என்கை –

——————————————————————————————

39 பாட்டு –

அவதாரிகை
சாது பரித்ராணமும் துஷ் க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்
இதில் –இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதி களுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை
அழியச் செய்து அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான்
ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

பதவுரை

வெற்பு எடுத்து

மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர்

கடல் நீரை
கலக்கினாய்

கலங்கச் செய்தாய்
அது அன்றியும்

அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து

மலைகளைக்கொண்டு
வேலை நீர்

(தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி

திருவணையைக்கட்டி
வேலைசூழ்

கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்

மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை

லங்கையினுடைய
கட்டு

அரணை
அழித்த

அழியச் செய்த
நீ

தேவரீர்
வெற்பு எடுத்து

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த

மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே

காளமேக நிபச்யாமரன்றோ!

வியாக்யானம் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
துர்வாச சாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –

ஏதத் கதம் கதய யன்மதிதஸ் த்வயா சௌ ஹித்வா ஸ்வ பாவ நியமம் ப்ரதிதம்
த்ரிலோக்யாம் -அச்வாப்சரோ விஷ ஸூ தாவிது பாரிஜாத லஷம்யாத்மநா
பரிணதோ ஜல திர்ப்ப பூல -என்னக் கடவது இறே

பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும்
தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம்
பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –

அதன்றியும் –
இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து
இருக்கைக்கு -அதுக்கு மேலே –

வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி –
இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது
இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –

வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –
கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப்
பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –
யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –

இனி இந்த்ரன் தான் ஆஸ்ரிதருக்கு துஷ் க்ர்த்தானால் அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும்படி சொல்லுகிறது

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
இடையர் க்ருஷ்ணனை அண்டை கொண்டு நம்முடைய மசுபங்கம் பண்ணினார்கள்
என்று சம்வர்த்த கணத்தை ஏவி வர்ஷிப்பிக்க -அவனை அழியச் செய்கை ப்ராப்தமாய்
இருக்க -ப்ராதிகூல்யத்தில் நியதன் அல்லாமையாலும் -ந  நமேயம் -என்கிறபடியே
திருவடிகளில் தலை சாயேன் என்கிற நியதி இல்லாமையாலும்

கோவர்த்தன கிரியை எடுத்து வர்ஷத்தால் வந்த அநர்த்தத்தை பரிஹரித்த
மஹா உதாரன் அல்லையோ -காளமேக நிபாஸ்யாமமாய் ஸ்ரமஹரமான
விக்ரஹத்தை சொல்லவுமாம் –

ஒரு மேக சமூஹம் பாதக கோடியிலேயாய்
நிற்க ஒரு மேகத்தால் வந்த ஆபத்தை பரிஹரித்ததாப் போலே இருந்தது என்கை-

——————————————————————————————

40 பாட்டு –

அவதாரிகை –
ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் –
இப்பாட்டில் –அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில் நித்ய ஸூரிகளுக்கு
மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன்
வாசியற -தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன
பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார்

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-

பதவுரை

ஆனை காத்து

கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி

அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய்

கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று

குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை

பசுக்களை
மேய்த்தி

மேய்த்தருளா நின்றாய்;
ஆ நெய்

பசுக்களின் நெய்யை.
உண்டி

அமுது செய்யா நின்றாய்;
அன்று

இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில்
குன்றம் ஒன்றினால்

கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு
ஆனைக் காட்டு

பசுக்களை ரக்ஷித்து
மை அரி கண் மாதரார் திறந்து

மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று

அக்காலத்திலே
முன்சென்று

அவளெதிரே நின்று

ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம்

என்ன மரயம்

என்ன ஆச்சரியம்!

 

வியாக்யானம் –

ஆனை காத்து –
அநந்ய பிரயோஜநத்வம் ஒழிய இவ்வருகு ஜன்மாதிகளாலே ஒரு யோக்யதை இல்லாத
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து —

இவ்வானை என்னாதே –ஆனை காத்து -என்கிறார் ஆய்த்து அவனுடிய ஆபத் பிரசித்தியாலும்
அவனை ரஷித்த ரஷண பிரகாரத்தின் பிரசித்தியாலும் –
கஜ ஆகர்ஷேதேதீரே -என்றும் -பரமாபதமாபன்ன -என்னும் படி இ றே அவனுடைய
ஆபத்து -அதந்த்ரி தசமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்றும் -தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப -என்னக் கடவது இறே

ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய் –
அதன்றி ஆயர் பிள்ளையாய் –
தேவரை தஞ்சம் என்று இருக்கைக்கு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ரஷண ப்ரகாரமே
அமையும் -அதுக்கு மேலே இடைச் சாதிக்கு நியாமனாய் வந்து அவதரித்து கீழ்-
அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்றதை வ்யாவர்த்திக்கிறது –

ஓர் ஆனை  கொன்று –
ஸ்ரீ வசுதேவர் தேவகிப் பிராட்டி -ந சமம் யுத்தம் இத்யாஹூ -என்கிற ஸ்ரீ மதுரையில்
பெண்களாக இவ் அநுகூல வர்க்கம் அடைய பயப்படும்படி -மதிப்பித்து கம்சன் நிறுத்திய
அத்வதீயமான குவலயாபீடத்தை அநாயாசேந கொன்று
ஸ்வா பாவிகமான பலமும் மத பலமுமாய் அத்வதீயமாய் இறே இருப்பது –

கடம் கலந்த வன் கரி -என்றார்  இறே

அதன்றி ஆனை மேய்த்தி –
அதுக்கு மேலே அந்த ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களை ரஷியா நிற்றி –
விஜிகத்ச -விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் -என்கிறபடியே
தன் அழகாலே வயிறு நிரம்பும்படி இ றே பசுக்களை ரஷித்தது

ஆ நெய் உண்டி  –
பசுக்களின் நெய்யை அமுது செய்யா நிற்றி
சத்யகாமனாய் -விஜிகத்சனாய் இருக்கிற நீ ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய தொரு
த்ரவ்யத்தை ஒழிய செல்லாமை யிலே இ றே அத்தை விரும்பி அமுது செய்தது –

யன்று குன்றம்  ஒன்றினால் ஆனை காத்து –
அதுக்கு மேலே இந்த்ரன் சம்வர்த்த கணம் -என்கிற மேக சமூஹத்தைக்
கொண்டு ஊரை அழியச் செய்கிற தசையில் -கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து
பசுக்களை ரஷித்தது –ஆன் -பசு -கீழில் பாட்டிலும் இவ் வபதானம் சொல்லிற்று –

அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் –
ப்ராதிகூல்யத்தில் நியதன் இல்லாமையாலே இந்த்ரனை அழியச் செய்ய மாட்டாத
நீர்மையை சொல்லிற்று அங்கு -இங்கு -தன்னை ஒழிய செல்லாத பசுக்களை ரஷித்த
படியை சொல்லுகிறது –

மை யரிக்கண் மாதரார் திறத்து –
அஜ்ஞனத்தாலே அலங்க்ர்தமாய் செவ்வரி கருவரிகளோடே கூடின திருக் கண்களை
உடைய நப்பின்னைப் பிராட்டிகாக

முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம்-
சம்ச்லேஷ அர்த்தமாக ஒப்பித்து நிற்கிற தசையிலே அவள் சந்நிதியிலே சென்று
ரிஷபங்கள் ஏழையும் அடர்த்த ஆச்சர்யம்

என்ன மாயமே —
முன்பு செய்த செயல்களுக்கும் அவ்வருகாய் ஒன்றாய் இருந்ததீ –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading