திருச்சந்த விருத்தம் -21-30-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

21-பாடல்-

அவதாரிகை –
சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்
தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை  அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை
ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது

இவ் வாஸ்ரித பஷபாதத்தை வேறாக தெரிய அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம் இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

பதவுரை

குரங்கை

வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !

உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே

ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று

(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க

அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க

பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய்

வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த

(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற

அருகே நின்று கொண்டிருந்த
சூரர்

மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார்

என்ன  காரியம் செய்தார்கள்
இது

இவ்விஷயத்தை
வேறு

விசேஷித்து
தேற

நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு

அருளிச் செய்யவேணும்.

 

வியாக்யானம் –

அரங்கனே –
அரங்கனே என்கிற இது விசேஷ்யம் யாகையாலே க்ரியை கூட அந்வயிகக் கடவது

தரங்க நீர் கலங்க –
அப்ரமேயோம ஹோததி -என்கிறபடியே அத்யகாதமான கடல் ஆகையாலே

தன்னை-அனுபவிக்க இழிந்தாரைக் கரையிலே ஏறிட வல்ல திரைக் கிளர்தியை உடைத்தான-

கடல் குளப்படி போலே கலங்க –

வன்று –
சகல தேவதைகளும் துர்வாச சாபத்தாலே நஷ்ட ஸ்ரீ காரராய்

தங்கள் ஐஸ்வர்யத்துக்கு-தேவரீர் கை பார்த்து இருந்த வன்று –

குன்று சூழ் மரங்கள் தேய –
மந்த்ரத்தை சூழ்ந்த மரங்கள் வாஸூகி உடல் பட்டு தேய

மா நிலம் குலுங்க –
சமுத்திர கோஷத்தின் உடைய அதிசயத்தாலே அத்தோடு சேர்ந்த புஷ்கர தீபங்கள் ஆகிற-மஹா ப்ர்த்வி குலுங்க

மா சுணம் சுலாய் நெருங்க –
நெருங்க -மாசுணம் சுலாய் -வாசுகியை நெருக்கி சுற்ற

சுலாய் -சுலாவி -சுற்றி என்றபடி

ஸ்வ தேஜஸ்ஸாலே உபப்ர்ம்ஹிதமான படியாலே கூசாதே மந்த்ரத்தில் வாசுகியை நெருங்க சுற்றி-

மந்தராத் ரோதிஷ்டாநாம் மதநே பூத் -என்று மந்த்ரத்துக்கு அதிஷ்டாநமும் தானே என்றும் –

தேஜஸா நாக ராஜாநாம் ததாப்யா யிதவான் ப்ரபு -என்று

வாசுகிக்கு பல கரனும் தானே என்றும்-சொல்லக் கடவது இறே –

நீ கடைந்த போது –
ததோ மதிது மாரப்ய -என்று தேவர்களுக்கு ஆரம்ப மாத்ரமேயாய் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடிந்தான் -என்கிறபடியே அக்கடலை தேவரீரே  கடைந்த போது

நின்ற சூரர் என் செய்தார் –
அதிபல பராக்ரமான தேவர்களும் அசூரர்களும் செய்தது என்-

அம்ருத மதன சாமர்த்தியத்தை தேவர்கள் பக்கலிலே ஏறிட்டு கொண்டாடுகைகாக அவர்கள்-செய்த கார்யம் என் –

கூர்ம ரூபியாய் மந்த்ராத்ரிக்கு -அதிஷ்டாநம் ஆனார்களோ
உபர்யாக்ராந்த வாந்சைலம் ப்ர்ஹத்ரூபேண கேசவ -என்று மந்த்ரம் சலியாதபடி நோக்கினர்களோ-

தேஜஸ்சாலே வாசுகிக்கு பல கரரானார்களோ-
பல போக்தாக்களாய் நின்ற இது ஹேதுவாக அவர்களையே கர்த்தாக்கள் ஆக்கின இத்தனை அன்றோ –

தேவதாந வயத்நே ந ப்ரசூதாம்ர்த மநதநே -என்று

அம்ருத மதன வ்யாபாரம் அசூரர்களுக்கும்-ஒத்து இருக்க –

அவர்களை கிலேச பாகிகளாக்கி –

தேவர்களை அமர்த்த பாகிகளாக்கி-

இதுவும் அதுக்கு மேலே ஒரு பஷபாதம் இறே

பிரயோஜநாந்த பரர் என்று பாராதே தேவர்கள் பக்கலில் பஷபாததுக்கு அடி
சரணம் த்வா அனுப்ராப்தா -என்று சரணம் என்ற அதிலே இறே

குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.

ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக-

ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே

எந்தை –
என்று நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து
திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –

அரங்கனே கூறு தேற வேறிதே —
ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக

அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-

இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –

கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது 

பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து

——————————————————————————————

22 பாட்டு –அவதாரிகை –
பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22-

பதவுரை

பண்டும் இன்றும் மேலும் ஆய்

மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே
ஞானம் எழும்

உலகங்களையெல்லாம்
மண்டி உண்டு

(ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து
ஓய் பாலன் ஆகி

ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே !

மூல புருஷனே!
வண்டு

வண்டுகளானவை
கிண்டு

(மதுவுக்காக வந்து) குடையும்படியான
தண் துழாய் அலங்கலாய்

குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே!
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!

அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே!
பூமி நாதனே!

பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம்-

பண்டு இன்று மேலுமாய் –
பண்டு -சிருஷ்டி பூர்வ காலத்தை
இன்று -சிருஷ்டி காலத்தை
மேல் -பிரளய வேளையில்

சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து அசித விசேஷிதமாய்
சோச்ய தசாபன்னமான சகல பதார்த்தங்களையும் –

ஸ்ருஷ்டி வேளையில் கர்ம அநுரூபமாக ஸ்ருஷ்டித்து

தத் அநுரூபமாக ரஷித்தும் –

பிரளயம் கொள்ளும் அளவில் வயிற்றிலே வைத்து நோக்கியும்
போருமவன் ஆகையாலே

ஆய் -என்றது ஆகையாலே என்று ஹேது கர்ப்பமாய் கிடக்கிறது

ஓர் பாலனாகி –
அத்விதீயமான முக்த சிசுவாய்

ஞாலம் ஏழும் உண்டு மண்டி –
சகல லோகங்களையும் தன் பேறாக விரும்பி அமுது செய்து சிறிய வயிற்றிலே

சகல-லோகங்களையும் அடக்கின அகடிதகட நா சாமர்த்தியத்தால் தேவரீருடைய
ஐஸ்வர்யமான சக்தியைப் பிரகாசிப்பித்த படி இறே இது

ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-
ஒரு பவனான ஆலிலையிலே -ஜகத் காரண வஸ்து என்று தோற்றும்படி கண் வளர்ந்து அருளினவனே-

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் –
இப்படி பிரளயார்ணவத்திலே பரிவர் ஒன்றிக்கே தனியே கண் வளர்ந்து அருளுகிறவன்-சர்வாதிகன் கிடீர் என்கிறது-இப்பாட்டில் சேஷமும் –

செவ்வியாலே வண்டுகள் புக்குப் பருகும்-ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையை உடையவனே –

கிண்டல் -கிளர்தலும் -கிழித்தலும்

இத்தால் -ஆதி ராஜ்ய ஸூசுகமான திருத் துழாய் மாலையை உடையவன் -என்கை

கலந்த சீர்ப் புண்டரீகப் பாவை சேரு மார்பா –
ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலே நித்ய சம்ச்லேஷ ஸ்வபாவையாய்
தாமரைப் பூவை ஜன்ம பூமியாய்  உடையளாய் -நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பிராட்டி-
அகலகில்லேன் இறையும் -என்று அவள் ஆதரிக்கும் திரு மார்பை உடையவனே

பூமி நாதனே –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு நாதன் ஆனவனே –

இத்தால் –ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்கிறபடியே –
ஸ்ரீ பூமி சஹிதனான ஏற்றத்தை உடையவன் என்கை –

இப்படி சர்வாதிகன் கிடீர் பிரளய
ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கை-

———————————————————————————————–

23 பாட்டு -அவதாரிகை –

பிரளய ஆபத் சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே –
தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை

நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா –
என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும்

ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி

அர்த்தித்வ நிரபேஷமாக -பிதாவாலே புத்ரனுக்கு
பிறந்த ஆபத்தை -தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே

தூணிலே தோற்றின அகடிதகடநா
சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே –-23-

பதவுரை

வால் நிறத்து

வெளுத்த நிறத்தை யுடைய
ஓர் சீயம் ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன்

வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களை யுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து

சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய்

கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர்

உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
நால் நிறத்த வேதம்

உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர்

நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால்

விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு

வணங்குவதற்கு இடமான
பால் நிறக் கடல்

திருப்பாற் கடலிலே
கிடந்த

பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே

பத்மநாபன் நீயே யன்றோ

வியாக்யானம் –

வால் நிறத்தோர் சீயமாய் –
புருஷோத்தமன் தன்னை அழிய மாறி சிம்ஹ சஜாதீயனானாப் போலே ஸ்வாபாவிகமான-நிறத்தையும் -மாறாடுவதே என்கிறார் –

வால் நிறம் -வெளுத்த நிறம் –

ஓர் சீயமாய் –
பஹூதா விஜாயதே -என்றும் -பஹூநி -என்றும் சொல்லுகிற
அசங்யாதமான அவதாரங்களிலே இங்கன் இருப்பது ஓன்று இலாமையாலே
அத்வதீயம் -என்கிறார்

அழகியான் தான் -என்கிறபடியே போக்யதையில் அத்வதீயத்தை சொல்லவுமாம்

சீயம் -சிங்கம் –

வளைந்த வாள் எயிற்றவன் –
வளைந்து ஒளியை உடைத்தான எயிற்றை உடைய ஹிரண்யன் –

இத்தால் வர பலத்தில்-அந்தர்பவியாத ஆசூரமான புஜ பலத்தை சொன்னபடி –

ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் –
சரீரத்தில் மர்மத்திலே திரு உகிரை அழுத்தினவனே

உகிர் தலம்  அழுத்தினாய் என்று -அவன் வரத்திலே அந்தர்பவியாத வத சாதநத்தாலே-

அநாயாசேந அழித்தபடி சொல்லிற்று ஆகிறது –

உலாய சீர் நால் நிறத்த வேத நாவர் –
சர்வ லோக ப்ரசித்தமான ப்ராமாண்யத்தை உடைத்தாய் -உதாத்த அநுதாத்த –
ஸ்வரித ப்ரசய ரூபமான நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள் –

(மேலாக கீழாக சமமாக கண்ட -உள்ளிருந்து -இப்படி நான்கு ஸ்வரங்கள் வேத சரீரம் என்றபடி )

நிறம் -மேனி

இத்தால் -அநுமாநாதிகளாலே தத்வ ஹிதங்களை நிர்ணயிக்குமவர்கள் அன்றியே
வைதிகர் ஆஸ்ரயிக்கும் அவன் என்கை –

நல்ல யோகினால் வணங்கு –
பக்தி யோகத்தாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் –
விலஷணமான பிரதிபத்தியாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் —

யோகு -யோகம் -உபாயம் –

பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –
தேவரீர் திருமேனிக்கு பரபாக ரூபமான நிறத்தை உடைத்தான கடலிலே ஜகத்துக்கு-உத்பாதகன் என்று –

தோற்றும் வடிவோடே கண் வளர்ந்து அருளுகிற பத்மநாபன் அல்லையோ

நல்ல யோகினால் -என்கையாலே –
(வாக்ய ஜெனித )வாக்யார்த்த ஜ்ஞானம் என்ன -கர்ம ஜ்ஞான சமுச்சயம் என்ன -இவற்றை மோஷ
சாதனம் என்கிற குத்ர்ஷ்டிகளில் வைதிகருக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்லுகிறது –

(மஹா வாக்கியங்கள்
தத் த்வம் அஸீ ஸ்வேதகேது -அஹம் ப்ரஹ்மாஸ்மி -சேதனமும் ப்ரஹ்மமே
ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம-அசேதனமும் ப்ரஹ்மமே
நாநா நாஸ்தி இத கிஞ்சித்

பிரிவு இங்கே அங்கு கூடி -மோக்ஷம் -யாதவ பிரகாசிகள் பேத அபேத வாதிகள் -கர்ம ஞான சமுச்சயம் -கூடி இருந்தால் மோக்ஷம்
இத்தைத் தாண்டி பக்தி ரூபா பன்ன ஞானம் -யோகி
இத்தையும் தாண்டி பிரபத்தி -நல்ல யோகி )

உலாய சீர் -என்று அதிகாரி விசேஷணம் ஆகவுமாம் –

உலாய சீர் -பத்ம நாபன் -என்று அந்வயிக்கவுமாம் -அப்போது –

விதிதஸ்ய தர்மஸ்ய சரணாகத வத்சல்ய தேன மைத்ரீ பவது –என்கிறபடியே-கல்யாண குண யுக்தனான ஜநகன் என்கிறது –

———————————————————————————————

24 பாட்டு –

அவதாரிகை –
பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல
பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக திவ்ய
விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை
நித்யஸூரிகள் அறிதல் –
பிராட்டி அறிதல் -ஒழிய
வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-

பதவுரை

கங்கை நீர்

கங்கா தீர்த்தத்தை
பயந்த

உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே

திருவடித் தாமரையை யுடைய எம்பெருமானே!
அம் கை

அழகிய திருக் கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும்

பஞ்சாயுதாழ்வாரக்ளை
ஏந்தினாய் !

ஏந்திக் கொண்டிருப்பவனே!
சிங்கம் ஆய

நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த
தேவ தேவ!

தேவாதி தேவனே;
தென் உலாவும் மெல்மலர் மங்கை

தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி
மன்னிவாழும் மார்ப

(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே!
ஆழி மேனி

கடல் போன்ற திருமேனியையுடைய
மாயனே

ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே –
குரு பாதகனான ருத்ரனுக்கும் சக்தியைப் பிறப்பிக்கும் அக் கங்கைக்கும் உத்பாதகனாய் –
சுத்தி உக்தருக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை உடைய என் நாதனே –
அச்ப்ர்ஷ்ட சம்சார தோஷரான நித்யருக்கும் முக்தருக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளை உடையவன் என்கை –

இப்போது –அண்ணல் -என்றது -இவ்வர்த்தத்தை தமக்கு நிர்ஹேதுகமாக பிரகாசிப்பித்த
உபகார ச்ம்ர்தியாலே என் நாதனே -என்கிறார் –

அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
அத் திருவடிகளை அனுபவிக்க இழிந்தாருக்கு விரோதிகளை அழியச் செய்யும் திவ்ய
ஆயுதங்களை -எப்போது யாருக்கு என் வருகிறதோ என்று சர்வதா தரித்து நிற்குமவனே
தனக்கு தானே ஆபரணமான திருக்கையில் திருவாழி தொடக்கமான ஸ்ரீ பஞ்சாயுதங்களை
தரித்த இதுவும் திருவடிகளோபாதி தமக்கு போக்யமாய் இருக்கிறது ஆய்த்து

சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –

திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய ஸூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது

தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
செவ்வியையும் மென்மையையும் உடைத்தான தாமரையில் பிறப்பாலும் பருவத்தாலும்
நிரதிசய போக்யையான பிராட்டி நித்ய வாஸம் பண்ணி அனுபவிக்கும் திரு மார்பை உடையவனே –

இப்போது -அகலகில்லேன் -என்று சாமான்யம் அன்றிக்கே ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தாலே
பர்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே இவ்வடிவிலே பிராட்டி அத்ய ஆதாரம் பண்ணின
படியைச் சொல்லுகிறது –

இத்தால் -நித்ய ஸூரிகள் அளவும் அன்றிக்கே தலைநீர்ப் பாட்டில் அனுபவிக்கும் பிராட்டியும்
இவ் வாஸ்ரித பஷபாதத்துக்கு தோற்று இருக்கும்படியை சொல்லிற்று ஆய்த்து –

என்னடியார் அது செய்யார் -என்று இறே அவன் படி இருப்பது

வாழி மேனி மாயனே —
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஆச்சர்ய பூதனே

ஹிரண்யனுக்கு அநபிபவநீயமான அவ்வடிவு தான் ஆஸ்ரிதருக்கு ஸ்ரமஹரமான படியைச் சொல்லுகிறது –

—————————————————————————————————-

25 பாட்டு –

அவதாரிகை –

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை
அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே –

பிரயோஜனாந்தர  பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே 

விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில் திரு வயிற்றில் வைத்து ரஷித்த

இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் -என்கிறார் –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

பதவுரை

வரத்தினில்

(பிரமன் கொடுத்த) வரத்திலே
சிரத்தை மிக்க

அதிகமான நம்பிக்கையுடையவனாய்
வாள் எயிறு

வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான
மற்றவன்

ஆச்ரித சத்ருவான இரணியனுடைய
உரத்தினில்

மார்விலே
கரத்தை வைத்து

திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை

நகரங்களை
ஊன்றினாய்

அழுத்திக் கொன்றாய்;
நீ

இப்படிப்பட்ட நீ
இரத்தி

(ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்;
இது என்ன பொய்

இது என்ன இந்திரஜாலம்!
இரந்த மண்

யாசித்துப்பெற்ற உலகத்தை
வயிற்றுளே கரத்தி

(ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்;

கண்ணனே! கண்ணபிரானே!

உன் கருத்தை

(இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை
யாவர் காண வல்லர்

யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.)

வியாக்யானம் –

வரத்தினில் சிரத்தை மிக்க –
தனக்கு தந்த வரத்தில் -அத்ய ஆதரத்தைப் பண்ணி -வரப்ரதானனான ப்ரஹ்மாவுக்கு
உத்பாதகன் ஆனவனோடே விரோதித்து -அவனாலே உத்பன்னனான ப்ரஹ்மா தனக்கு
தந்த வரத்திலே இறே மிக்க சிரத்தையைப் பண்ணிற்று -கோயம் விஷ்ணு -என்றான் இறே –
தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை என்று உன்னை அறியாதே வரத்தையே
விஸ்வசித்து இருந்தவன் –

வாள் எயிற்று –
வாள் போலே இருக்கிற எயிற்றை உடையவன் -இத்தால் ஹிரண்யன் உடைய புஜ
பலத்தை சொல்லிற்று -வர பலத்துக்கு புறம்பான வடிவு கொண்டாப் போலே புஜ
பலத்தை அழிக்க வல்ல சர்வ சக்தி என்று அறிந்திலன் –

உன்னை அறியாதே வர பல புஜ-பலங்களை விஸ்வசித்து இருந்த மதி கேடன்

மற்றவன் –
சத்ருவானவன் –
சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே

உரத்தினில் –
துர் மாம்சம் இருந்த விடத்தை கொட்டம் இடுவாரைப் போலே துர்மானம் கிடந்த மார்விலே

கரத்தை வைத்து –
அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹச்த பத்மம் கரிஷ்யதி -என்று அக்ரூராதிகளுக்கு ஜீவன ஹேதுவாய்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று ப்ரணயிநிக்கு போக்யமாய் இருக்கும்
திருக் கையை துஷ் பிரக்ருதியான அவனுடைய திண்ணிய மார்விலே வைத்து –

உகிர் தலத்தை ஊன்றினாய் –
வர பலத்துக்கு புறம்பான வத சாதனமாய் அத்யந்தம் ஸூகுமாரமான உகிராலே
அநாயாசேந கொன்றாய்

தலம் -நிலமும் இதழும்

இரத்தி நீ-
ஹிரண்யனில் காட்டில் தத் சந்தாஜனான மஹாபலி பக்கல் ஔ தார்யம் குணம் என்பதொரு
குணம் உண்டாகையாலே அர்த்தித்வத்திலே இழிந்தாய்

இரத்தி நீ –
சர்வ சக்தியாய் அவாப்த சமஸ்த காமனான நீ
அலம் புரிந்த நெடும் தடக்கையாலே இரப்பதே –
ஹிரண்யனுக்காக உடம்பை அழிய மாறினாய்
பிரயோஜநாந்த பரனான இந்த்ரனுக்காக உனக்கு நிரூபகமான ஔ தார்யத்தை அன்று அழிய மாறிற்று –

இது என்ன பொய் –
உன்னது அல்லாத ஒன்றை அர்த்தித்தாய் ஆகிலே இ றே உன் அர்த்தித்வம் மெய்யாவது
தன்னது ஒன்றை தந்தான் ஆகில் இ றே மஹாபலி ஔ தார்யம் மெய்யாவது –

இது பொய் என்னாதே- இது என்ன பொய் -என்றது அர்தித்வ பலமான த்ரைவிக்ரம
அபதாநத்தை சுருதி ஓதா நின்றது -யத்ராம் புவின் யஸ்ய -என்று ஔதார்யத்துக்கு பலமாக
மஹாபலிக்கு இந்திர பதத்தை சொல்லா நின்றது -ஆக பிரமாணங்களாலே பொய் என்ன ஒண்ணாது-

தன்னத்தை அவனதாக்கிக் கொண்டு இரக்கையாலும் -மகாபலி அவனத்தை தன்னதாக்கிக்
கொடுக்கையாலும் மெய் என்ன ஒண்ணாது -ஆகையாலே –இது என்ன பொய் –என்கிறார்

யிரந்த மண் வயிற்றுளே கரத்தி –
அர்த்திதுப் பெற்ற பூமி என்று பிரளய ஆபத்திலே ஆபத்தே ஹேதுவாக திரு வயற்றிலே
ஒளித்து வைத்து ரஷித்து

யுன் கருத்தை யாவர் காண வல்லர் –
உன் நினைவை யாவர் காண வல்லர் –
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்

கண்ணனே —
கிருஷ்ணனாய்  வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும்
பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி
அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –

——————————————————————————————-

26 பாட்டு –

அவதாரிகை –

சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ
சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சர்யங்களை
ஆர் அறிய வல்லார் என்கிறார் –

வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு
ஒரு வகையில் சாம்யம் சொல்லலாய் இருக்கை யாலே இரண்டு அவதாரத்தையும்
சேர்ந்து அனுசந்திக்கிறார் –

ஆணினோடு பெண்ணுமாகி அல்லாவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

 

பதவுரை

ஆணினோடு பெண்ணும் ஆகி

புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய்
அல்லவோடு நல்ல ஆய்

மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய்
ஊணொடு ஓசை கூறும் ஆகி

ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய்

உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும்

பசுக்களை மேய்கிக்கிற
ஆயன் ஆகி

இடையனாய்
பொய்யினோடு மெய்யும் ஆய்

பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்
காணிப்பேணும் மாணி ஆய்

(மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி
கரந்து சென்ற கள்வனே!

(மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே!
உன்னை யார் மதிக்கவல்லர்!

உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்?

வியாக்யானம் –

ஆணினோடு பெண்ணுமாகி –
ஜன்ய ஜனந பாவத்தாலே ஜகத்து விச்த்ர்த்தமாய் வேணும் என்று ஸ்த்ரீபும் விபாகத்தாலே
ஸ்ருஷ்டித்தும் -அந்யோந்யம் சம்பந்தித்தும் -சம்ஸ்ர்கிர்பித்தும் இப்படி அந்தர் ஆத்மதயா
நின்று -நிர்வாஹனாய் –

அல்லவோடு –
ஒன்றுக்கும் உடல் அன்றிக்கே இருக்கிற நபும்சக பதார்த்தத்துக்கு நிர்வாஹகனாய்

நல்லவாய்
இந்த விரகத்ரய விசிஷ்ட பதார்தங்களிலே விலஷண பதார்த்தங்களுக்கு நிர்வாஹகனாய்
வைலஷண்யம் ஆவது -புருஷார்த்த ருசி உண்டாகை

அவர்களுக்கு நிர்வாஹகன் ஆகை யாவது -ததாமிபுத்தி யோகாந்தம் -என்கிறபடியே
புருஷார்த்த சாதன பூதனாகை

ஊணோடு ஓசை யூறுமாகி –
புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு போக்யமான சப்தாதிகளுக்கு கர்ம அநுகூலமாக
நியாமகனாய் -ரச சப்த ஸ்பர்சமான -இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணம் –

ஒன்றலாத மாயையாய் –
இவற்றினுள்ளே ஒன்றுக்கு காரணமான அளவு அன்றிக்கே -உக்தங்களோடு அனுக்தங்களோடு
வாசியற சர்வமுமாய்க் கொண்டு பரிணமிக்க வல்ல பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
மாயாந்து ப்ரக்ர்திம் வித்யாத் -என்னக் கடவது இ றே

மாயை -என்று ஆச்சர்ய வாசியாய் ஒன்றுக்கு நிர்வாஹகனாம் அளவு அன்றிக்கே
சகல பதார்த்தங்களையும் சேதனனுடைய கர்ம அநுகூலமாக நிர்வஹிக்க வல்ல
ஆச்சர்யத்தை உடையவன் என்னவுமாம் –

பூணி பேணு மாயனாகி –
இப்படி சங்கல்பத்தாலே சகலமும் நிர்வஹிக்கிற நீ ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக
அசாதாராண விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து -உன்னைப்
பேணாதே பசுக்களைப் பேணும் இடையனாகி –

பொய்யினோடு மெய்யுமாய் –
அவதரித்து ரஷிக்கும் போது அநாஸ்ரிதரான துர் யோநாதிகள் பக்கலிலே பொய்யையும்
ஆஸ்ரிதரான பாண்டவர்கள் பக்கலிலே மெய்யையும் உடையையாய்

காணி பேணு மாயையாய்
மகாபலியாலே அபஹ்ர்தமாய் பூமியைப் பேணி தன்னைப் பேணாதே ப்ரஹ்மசாரியாய்

கரந்து சென்ற கள்வனே –
மறைத்துக் கொண்டு சென்ற க்ர்த்ரிமனே
மறைத்துக் கொண்டு செல்கையாவது -ஐஸ்வர்யமான வைபவம் தோற்றாமே -பூமியை
மகாபலியதாக்கி அர்த்தியாய்ச் செல்லுகை
க்ர்த்ரிமன் ஆகையாவது -சுக்ரன் வார்த்தை செவிப்படாதபடி -அழகாலும் -சீலத்தாலும் –
மகாபலியை வசீகரித்து சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகை

கரந்து சென்ற கள்வனே –
உன்னை யார் மதிக்க வல்லர் -என்று மேல் பாட்டோடே அந்வயம் –

——————————————————————————————–

27 பாட்டு –அவதாரிகை –

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

பதவுரை

விண் கடந்த சோதியாய்

விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே!
விளங்கு

ஸ்வயம்ப்ரகாசனான
ஞானம்

ஜீவாத்மாவை
மூர்த்தியாய்

சரீரமாக வுடையவனே!
பண்கடந்த தேசம் மேவு

வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
பாவநாச நாதனே!

ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே!
எண் கடந்த யோகினோடு

எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு
மாணி ஆய்

வாமனாய்
இரந்து சென்று

(மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம்

பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை

உன்னையும்
ஆர் மதிக்க வல்லர்

அளவிடக்கூடியவர்கள் யார்?

வியாக்யானம் –

விண் கடந்த சோதியாய் –
விபுவான மூல ப்ரகர்தி உனக்குள்ளே யாம்படியான ஸ்வரூப வைபவத்தை உடைய ஸ்வயம்
பிரகாச வஸ்துவாய் –சுரர் அறி வரு நிலை விண் -என்று மூல பிரக்ர்தியை விண் என்ற சப்தத்தால்
சொல்லிற்று இ றே -இது தனக்கு அடி கார்கி வித்யையில் -ஆகாசே ஓதஞ்சப் ரோதஞ்ச –
என்கிறபடியே விபுத்வ சூஷ்மத்வங்களைச் சொல்லிற்று

பண் கடந்த தேச மேவு பாவ நாச நாதனே –
வேதத்தாலே பரிச்சேதிக்க ஒண்ணாத தேஜஸ்சையே ஸ்வரூபமாக உடையையாய் –
ஹேய பிரத்யநீகனான சர்வேஸ்வரனே

வேதம் ஸ்வர பிரதானம் ஆகையாலே தத்வாசி சப்தத்தாலே வேதத்தை சொல்லுகிறது
சேதன அசேதனங்களை வியாபித்து நிற்கச் செய்தேயும் -தத்கத தோஷ ரசம் அச்ப்ர்ஷ்டன் ஆகையாலும்
அசித் சம்சர்க்கத்தாலே சேதனனுக்கு வந்த தோஷத்தை போக்க வல்லன் ஆகையாலும்
ஹேய பிரத்யநீகன் என்கிறது

எண் கடந்த யோகினோடு –
அசங்க்யாதமான கல்யாண குணங்களோடு கூட –யோகு -யோகம் -அதாகிறது கல்யாண குண யோகம் –
பஸ்யமே யோகே ஐஸ்வரம் -என்று யோக சப்தத்தாலே குண யோகத்தை சொல்லிற்று இறே

இரந்து சென்ற மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறினவன் என்று தோற்ற வாமன வேஷத்தைக் கொண்டு அர்த்தியாய்ச் சென்று –

மண் கடந்த வண்ணம் –
பூமியை அளந்து கொண்ட பிரகாரத்தை –
அதாகிறது -இந்தரனுக்கு மகாபலியாலே அபஹ்ர்தமான ராஜ்யத்தை வாங்கிக் கொடுக்க -என்கிற
வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் அற சதுர்தச புவன அந்தர்கதமான சேதனர்
தலைகளிலும் திருவடிகளை வைக்க –

நின்னை –
சேதன அசேதன விலஷணமாய் -வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப வைலஷண்ய
வைபவத்தை உடையையாய் -அதுக்கு மேலே குண ப்ரேரிதனாய்க் கொண்டு பூமியை
அளந்து கொண்ட உன்னை –

ஆர் மதிக்க வல்லரே –
பரிச்சேதிக்க வல்லார் ஆர்

வேதங்களாலே பரிச்சேதிக்கலாமோ –
ஜ்ஞாநாதிகரான வைதிகரால் தான் -பரிச்சேதிக்கலாமோ-
அம்மேன்மையை பரிச்சேதிக்கவோ –
அந் நீர்மையை பரிச்சேதிக்கவோ —
எத்தை யார் பரிச்சேதிக்க வல்லார் –

அதவா
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது

விளங்கு ஞான மூர்த்தியாய்
ஞானம் விளங்குகிற மூர்த்தியை உடையையாய் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக
உடைய ஜ்ஞானத்துக்கு பிரகாசமான திவ்ய விக்ரஹத்தை உடையையாய்
இந்த ஜ்ஞானம் ஷட் குணங்களுக்கும் உப லஷணம் –ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் –
என்னக் கடவது இறே

பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
சுருதியால் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனாய்
சம்சாரிகளுடைய தோஷத்தை போக்க வல்ல ஹேய பிரத்யநீகத்தை உடைய சர்வேஸ்வரனே

எண் கடவ யோகினோடு –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ருயதே -என்கிறபடி அபரிச்சின்னமாய் -அசங்க்யாதமான-
ஆச்சர்ய சக்தி யோகத்தை உடையையாய் கொண்டு

மாணியாய் இரந்து சென்று –
அதீந்த்ரியமாய் அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிச்சின்னமாக்கி
மகாபலி உடைய சஷூர் விஷயமாக்கி அர்த்தியாய் சென்று –

மண் கடந்த வண்ணம் –
மூன்றடியை அர்த்தித்து -இரண்டு அடியாலே சகல லோகங்களையும் அளந்து கொள்ளுகையும்
சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகையுமாகிற இப்ப்ரகாரத்தை உடைய

நின்னை
அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்
அந்த ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்
உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க -அத்தால் ப்ரேரிதனாய் வந்து -பூமியை அளந்து கொண்ட உன்னை

ஆர் மதிக்க வல்லரே –
இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –

———————————————————————————————

28 பாட்டு –

அவதாரிகை –
சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ –
ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக உன்னை அழிய மாறி அநேக
அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய
ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யங்களை ஒருவரும்
அறிய வல்லார் இல்லை என்கிறார் -ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே –
என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

பதவுரை

பௌவம் நீர்

(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து

ஸ்ருஷ்டித்து
படைத்த

(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார்

பூமியை
இடந்து

(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து

(த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு

(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து

(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர்

(இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து

ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து

முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த

(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!

(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த

செருக்கி வந்த
மாலி

மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி

அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக

யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த

ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!

பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)

வியாக்யானம் –

படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –

இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –

அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே

முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –

கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –

மிடைத்த மாலி –
கோபித்த மாலி

மாலிமான் விலங்கு –
பெரு மிடுகனான ஸூ மாலியான திர்யக்
திர்யக் ப்ரவர்தனான ஸூ மாலி -என்னவுமாம்-

காலனூர் புகப் படைக்கலம் விடுத்த –
அவர்களையும் அப்புறத்திலே புகும் படி ஆயுதத்தை ஏவினவன் -இத்தால் ஆஸ்ரித
விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன் என்கிறது –
பல் படைத் தடக்கை மாயனே —
பின்பு விரோதி நிரசநத்து ஈடான அநேக ஆயுதங்களை உடைத்தாய்
அவ்வாயுதங்களுக்கு ஸத்ர்சமான சுற்றுடைதான திருக்கையை உடைய ஆச்சர்ய பூதனே –

——————————————————————————————

29 -பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி
சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே எளிய கார்யங்களுக்கு
அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது
இதில் –
இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது1- சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் –
3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் –
4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி —

இப்படி பட்ட அனுக்ரஹம்-ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-

பதவுரை

நாத

ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய்

ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி

பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை

ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில்

திருமார்பிலே
வைத்து

பிரியாமல் அணையவைத்து
உகந்து

மகிழ்ந்து
பௌவம் நீர் அணை கிடந்து

திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி
அது அன்றியும்

இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல்
நரத்திலும்

ஹேயமான மானிட சாதியிலும்
பிறத்தி

வந்து பிறக்கின்றாய்;
நினாது தன்மை

உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை
ஒருத்தரும்

யாராகிலும்
இன்னது என்ன வல்லரே?

இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.)

வியாக்யானம் –

பரத்திலும் பரத்தையாதி –
பர பராணாம் பரம -என்கிறபடியே த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகான
ஸ்வரூப வைலஷண்யம் உடையையாய் –

அநந்தரம் –உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது-என்கிற இது அந்விதமாக கடவது –

கீழ் சொன்ன ஸ்வரூப வைலஷண்யத்துக்கும் -அவ்வருகான உத்கர்ஷத்துக்கும் ஹேதுவாய்
இ றே ஸ்ரீ ய பதித்வம் இருப்பது –

உரத்திலும் –
சப்தத்தாலே -ஸ்வரூப அந்தர்பாவத்தையும் சமுச்சயிக்கிறது -அதுக்கே மேலே மகிஷி
வர்க்கத்தையும் வ்யாவர்த்திக்கிறது

ஒருத்தி –
அத்வதீயை -வடிவிணை இல்லா மலர் மகள் -அதாகிறது த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும்
ஸ்வாமிநியாய -சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் இருக்கை

தன்னை வைத்து
அகலகில்லேன் இறையும் -என்று மேல் விழக் கடவ இவள் தன்னை தான் -இறையும்
அகலகில்லேன் -என்று திரு மார்விலே வைத்து –

உகந்து –
துலய சீல வயோ வர்த்ததையாய் இருந்துள்ள அவளோடே சம்ச்லேஷ ரசங்களை
அனுபவிக்கிற நீ –

பௌவ நீர் அணைக் கிடந்த –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம் -பிராட்டி பக்கல் ப்ரீதிக்கு போக்குவீடாய் இறே -இருப்பது
ஆர்த்த ரஷணத்துக்கு அநிருத்த ரூபியாய்க் கொண்டு -ஷீராப்தியிலே நீரே படுக்கையாகக்
கண் வளர்ந்து அருளி -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்கிறபடியே தாபார்த்தருக்கு
கொண்டு அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை -சொல்லுகிறது
இது சங்கர்ஷன பிரத்யும்ன வ்யூஹங்களுக்கும் உப லஷணம்

அதன்றியும் –
சம்சாரத்தில் அசித் கல்பமாய்க் கிடந்த சேதனருக்கு ரூப நாமங்களைக் கொடுத்தும்
சாஸ்திர ப்ரதா நாதிகளைப் பண்ணியும் -ப்ரஹ்மாதிகளுடைய ஆர்த்திகளைப்
பரிஹரித்தும் -இப்படி ரஷித்து ப[ஒந்த வ்யூஹ அவதாரங்களிலே தேவரீர் உடைய அனுக்ரஹம்
பர்யவசியாமையாலே -அதுக்கு மேலே –

நரத்திலும் பிறத்தி –
சர்வ கந்த -என்கிற நீ ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸா விஷயமான மனுஷ்ய யோநிகளிலே
தத் சஜாதீயனாய்க் கொண்டு ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே வந்து அவதரித்து -இது தேவ
யோநி யிலும் திர்யக் யோநியிலும் உண்டான அவதாரங்களுக்கும் உப லஷணம்

ஸூர நரதி ரச்சாமவதரன் -என்னக் கடவது இறே

நாத –
இப்படி விஸத்ர்சமான தேவ யோநியிலே வந்து அவதரிக்க வேண்டுகிறது -இவற்றை
உடையவன் ஆகையாலே

ஞான மூர்த்தி யாயினாய் –
ஜ்ஞான ஸ்வரூபன் ஆயினாய் -இப்போது ஞாநாதிக்யம் சொல்லுகிறது -ரஷிகைக்கு
விரகு அறியுமவன் என்கைக்காக -ப்ராப்தி உண்டானாலும் விரகு அறியாத வன்று ரஷிக்க
போகாது இ றே -சாஸ்திர பிரதானம் என்ன -ஆசார்ய உபதேசம் என்ன -அழகு என்ன -சீலம் -என்னை
ஏவமாதிகளாலே ஆச்ரயண அநுகூலமான ருசியைப் பிறப்பிக்க வேண்டும்படி இறே
சேதனனுடைய ப்ரக்ருதி பேதம் இருப்பது

ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே –
வேதங்கள் என்ன –
ஜ்ஞாநாதிகரான வைதிகர் என்ன –
இவர்கள் ஒருத்தரும் உன்னுடைய அனுக்ரஹத்தினுடைய எல்லையை ஏவம் விதம்
என்று பரிச்சேதிக்க வல்லரோ –தன்னை அழிய  மாறி -பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும்
சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –

——————————————————————————————-
30 பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்
ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய
மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீர ஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

பதவுரை

வானகமும்

வானுலகத்திலுள்ளளாரயும்
மண்ணகமும்

மண்ணுலகத்திலுள்ளாரையும்
ஏழ் வெற்பும்

ஸப்தகுலபர்வதங்களையும்
ஏழ் கடல்களும்

ஸப்தஸாகரங்களையும்
போனகம் செய்து

அமுது செய்து
ஆல் இலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின்
புண்டரீகனே!

தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே!
தேன் செய் அகம்

தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய்
தண்

குளிர்ந்ததாய்
நறு

பரிமளிதமான
மலர் துழாய்

திருத்துழாயை
கல் மாலையாய்!

நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன்

(கூனியினுடைய) கூனானது
அகம் புக

உள்ளே யொடுங்கும்படி
தெறித்த

விட்டெறிந்த
கொற்றம் வில்லி அல்லையே

வெற்றி வில்லை யுடையவனான்றோ

வியாக்யானம்

வானகமும் மண்ணகமும் –
ஸ்வர்க்க வாசிகளான இந்த்ராதி தேவர்களும் -அவர்களுக்கு போகய போக உபகரண
போக ஸ்தாநமான ஸ்வர்க்கம் தானும் –
பூமியில் உள்ள மனுஷ்யாதிகளும் -அவர்களுக்கு வாஸஸ்தானமான பூமியும் –
மஞ்சாக்ரோசந்தி -என்னுமா போலே தேச வாசி  சப்தத்தாலே -தைசிகரையும் சொல்லுகிறது
பிரளயத்தில் ஆபன்னர் ஆனார் தைசிகர் ஆகையாலே –

இத்தால் –
பூமியில் உள்ளாருக்கு ஆராத்யராய் அவர்களுக்கு அபிமத பல ப்ரதருமான இந்த்ராதிகளோடே
ஆராதகரான மனுஷ்யாதிகளோடு வாசி யற பிரளய ஆபத்தில் வந்தால் எல்லாருக்கும்
ஒக்க ஈஸ்வர ஏக  ரஷ்ய பூதர் என்கிறது

வெற்பும் —
அந்த பூமிக்கு ஆதாரமாய் இருந்துள்ள சப்த குல பர்வதங்களும்
இத்தால் -ஆதாரமான குல பர்வதங்களோடே ஆதேயமான பூமியோடு வாசி யற
எல்லாவற்றுக்கும் தத் காலத்திலே ஈச்வரனே அதார்சம் என்கை

வெற்பு -என்று ஸ்தாவர ஜாதிக்கும் உப லஷணம்

ஏழ் கடல்களும் –
த்வீபங்களுக்கு பேதகமான சப்த சமுத்ரங்களும் -அத்தாலே -ஜலவாசி சத்வங்களையும் சொல்லுகிறது

ஆக
ஆராய்த்ரனா இந்த்ராதிகளோடே -ஆராதகரான மனுஷ்யர்களோடே -தாரகங்களான
பர்வதங்களோடு -தார்யையான பூமியோடு -சமுத்ரங்களோடு -ஜல சர தத்வங்களோடு –
வாசி யற எல்லாவற்றுக்கும் சர்வேஸ்வரனே ரஷகன் என்றது ஆய்த்து

போனகம் செய்து –
போனகம் செய்து -என்றது -ரஷகனுக்கு ரஷக தர்மம் பசியருக்கு சோறு போலே அபிமதமாய் இருக்கை -என்கை –
யஸ்ய ப்ரஹ்ம சஷத்ரஞ் சொபே பவத ஒதனம் -என்றும் -அத்தா சராசர க்ரஹணாத்

ஆலிலைத் துயின்ற –
அவ்வடிவுக்கு அளவாய் தன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின –

புண்டரீகனே –
புண்டரீக அவயவனே –
செங்கனிவாய்ச் செங்கமலம் கண் பாதம் கை கமலம் -என்கிறபடியே திவ்ய அவயவங்கள் –
அப்போது அலர்ந்த செந்தாமரைக் கண்கள் போலே இருக்கையாலே புண்டரீக சப்த வாச்யன் என்கிறது –
த்ரை லோக்ய ரஷணத்தால் வந்த ப்ரீதி திரு வடிவிலே தோற்றி இருக்கிறபடி –

தேனகம் செய் –
உள்ளெல்லாம் வண்டுகளாலே மிடைந்து இருக்கும் என்னுதல் –
மதுவாலே பூரணமாய் இருக்கும் என்னுதல் –

தண்ணறு மலர்த் துழாய் –
ஸ்ரமஹரமாய் -பரிமளிதமாய்ச் செவ்வியை உடைத்தான திருத் துழாய்

நன் மாலையாய் –
அவயவ சோபையைக் காட்டில் ஆகர்ஷமாய் இருக்கும் மாலை -என்னுதல்
ரஷணத்துக்கு இட்ட தனி மாலை யாகையாலே விலஷணம் -என்னுதல்

ஆக –
சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்

கூனகம் புகத்தெறித்த –
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது

கொற்ற வில்லி யல்லையே —
வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –

கொற்றம் -வென்றியும் -வலியும்

புண்டரீகனே -கொற்ற வில்லி அல்லையே என்று அவதார அந்தரமாய் இருக்கச் செய்தேயும்
தரம்யைக்யத்தாலே -பால்ய யவன அத்யவஸ்தா விசேஷங்கள் போலே தோன்றுகிறது  ஆய்த்து

இவர்க்கு -இப்பாட்டு தொடங்கி மேல் -மாயம் என்ன மாயம் -என்கிற பாட்டளவும் வர
அதுவே க்ரியையாகக் கடவது –

—————————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading