அவதாரிகை –
ஏடு இத்யாதி –
கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர்
ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும்
பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக்
கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில்
முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி
உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம்
என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் –
பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை
ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்
அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-
ஏடு -பொல்லாங்கான
நிலத்தில் -மூல பிரக்ருதியிலே
இடுவதன் முன்னம் -சேர்ப்பதருக்கு முன்னே
வந்து
எங்கள் குழாம் -அநந்ய பிரயோஜனரான எங்கள் திரளிலே
புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் -கூட வேண்டும் என்ற நினைவு உடையவர்களாய் இருப்பீர் ஆயின்
வரம்பு ஒழி -வரம்பு ஒழிய
வந்து ஒல்லைக் கூடுமினோ -விரைவாக வந்து சேரும் கோள்
நாடு -நாட்டில் உள்ள அவிசேஷஜ்ஞரும்
நரகமும் -நகரத்தில் உள்ள விசேஷஜ்ஞரும்
நன்கு அறிய -நன்றாக அறியும் படி
நமோ நாராயணா என்று
பாடும் -பாடத்தக்க
மனமுடை-மனஸ் உண்டாம்படியான
பத்தர் உள்ளீர் -பிரேமத்தை உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூறுமினே -வந்து பல்லாண்டு பாடும் கோள் என்கிறார்
வியாக்யானம் –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்
ஏடு என்பது பொல்லாங்கு -உங்களைப் பொல்லாங்கு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்று பிள்ளை அமுதனார் –
ஏடு -என்கிற சூஷ்ம சரீரத்தை -ஸ்தூல சரீரத்தை காட்டில் பிரதானமாய் -அதனுடைய
பிரயோஜனமாய் நிற்கையாலே -பாலில் ஏடு -என்னுமா போலே -சொல்லுகிறது
நிலத்தில் இடுவதன் முன்னம் –
ஸ்வ காரணமான மூல பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே –
இது நிர்வஹித்து போரும்படி
ஏடு -என்று உடம்புக்கு பேராய் -ஸ்தூல சூஷ்ம ரூபமான சரீரம் ஸ்வ காரணமான
மூல பிரக்ருதியிலே லயிப்பதருக்கு முன் என்னவுமாம் –
இவ்வாக்யத்தால் அவர்கள் அநர்த்தத்தை கண்டு அழைக்கிறார் என்னும் இடம் தோற்ற இருக்கிறது இ றே
வந்து
ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவிலே வரும் இடத்தில் உண்டான தூரத்தை சொல்லுகிறது
எங்கள் குழாம் புகுந்து –
கேவலரும் ஒரு சமஷ்டியாய் இறே இருப்பது -அது ஸ்வதந்த்ரம் ஆகையாலே அந்யோன்யம்
சேர்த்தி அற்று இருக்கும் -ஒருத்தருடைய ச்ம்ர்த்தி ஒருத்தரதாய் இ றே இத் திரள் இருப்பது –
பரஸ்பர நீஸ பாவை -என்னக் கடவது இ றே
இத்திரளில் புகுவாருக்கு எவ்வதிகாரம் வேணும் என்னில்
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
அவி லஷணமான புருஷார்தங்களுக்கு புரச் சரணங்கள் கனக்க வேண்டி இருக்க
அதில் விலஷணமான இத் திரளிலே புகுருகைக்கு புரச் சரணம் வேண்டாது இருப்பது என்
என்னில் -அவை அப்ராப்த புருஷார்த்தங்கள் ஆகையாலே புரச் சரணங்கள் அபேஷிதங்களாய் இருக்கிறன
இது ஸ்வரூப ப்ராப்தம் ஆகையாலே வேண்டா-உடையீர்கள்-
இந்த இச்சையால் வந்த பிரயோஜன அதிசயத்தாலே -வைஸ்ரவணன் -என்னுமா போலே
அருளிச் செய்கிறார் -கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்
வரம்பு ஒழி வந்து
வரம்பு ஒழிய என்கிற இது வரம்பு ஒழி -என்று கிடக்கிறது
சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனாய் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
அனுபவிக்க இட்டுப் பிறந்தவன் -ஜரா மரண மோஷாயா -என்று ஸ்வ அனுபவத்தளவிலே
ஒரு வரம்பை இட்டுக் கொண்டான் இ றே -அத்தை ஒழிந்து வாரும் கோள் -என்கிறார் –
ஒல்லைக் கூடுமினோ –
பற்றுகிற புருஷார்தத்தின் உடைய வை லஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக் கொண்டு
வந்து விழ வேண்டாவோ –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்றது சரீரத்தில் அஸ்தைர்யத்தை பற்ற –
இங்கு ஒல்லை -என்கிறது -பற்றுகிற விஷயத்தினுடைய வை லஷண்யத்தைப் பற்ற –
கூடும் மனம் உடையீர்கள் -என்றும் –கூடுமினோ -என்றும் -அருளிச் செய்கிறார் இ றே
யோக்யதையைப் பற்ற –
அத்திரளில் நின்றும் -பிறிகதிர் பட்டார் சிலர் இவர்கள் என்றும் தோற்றும் இ றே
ஸ்வரூபம் வெளிச் செறித்தக்கால் -விளங்க நிற்றல் –
நாடு நகரமும் நன்கறிய –
இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார் -இதுக்கு மேல் மங்களா சாசனத்துக்கு
வேண்டுவன அருளிச் செய்கிறார் –நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்
நன்கறிய –
நன்றாக அறிய –
பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக
விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்
நாமோ நாராயணா என்று –
இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply