சிறை இருந்தவள் ஏற்றம் –
தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாகக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே —திரு வாய் மொழி –4-8-2-
தூது போனவன் ஏற்றம்
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே –பெரிய திருமொழி –2-2-3-
ஆச்சார்ய ஹிருதயம் –
திருக் குணங்கள் காட்டும் வரிசை
திருவரங்கம் -சொல்லி -திருமலை -ஆழ்வார் திருநகரி
திரு மால் இரும் சோலை -பின்பு அருளியதற்கு காரணம்
பரத்வம் குணம் சொல்ல வந்த
வண் பெரு வானகம் உய்ய -திருவரங்கம் சூரணை -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் -சூரணை -160
உறை கோயிலில் பரே சப்தம் பொலியும் -சூரணை -161
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -சூரணை -162
திருக்குறுங்குடி -என்னாதே வைஷ்ணவ வாமனம் -என்பதற்கு காரணம்
மகா பலி இடம் வாமனன் தாழ நின்று இரந்தது போல் நம்பியும் எம்பெருமானார் இடம் சிஷ்யனாக இருந்ததால் –
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் -என்று இத் திவ்ய தேச திருவாய் மொழி
பலன் சொல்லித் தலைக் கட்டுவதால் –வைஷ்ணவருடைய வாமன ஷேத்ரம் என்று காட்ட
இங்கு லாவண்யம் பூர்ணம் -சமுதாய சோபான லாவண்யம் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த –
என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –
லவணம் -உப்பு உணவில் பயன் படுத்துகையில் முழுமையாய் இருப்பது போல்-
நம்பியின் நிறைந்த சோதி வெள்ளம் -முழுமையாக நிறைந்து இருக்கையாலே – பூர்ணம் என்கிறார் –
நம் பூர்வர்கள் ரகஸ்ய அர்த்தங்களை எங்கு எல்லாம் எடுத்து சொல்ல முடியுமோ
அங்கு எல்லாம் கோடிட்டு காட்டுவர் –
ஈட்டில் நம்பிள்ளை நாலாம் பத்து பிரவேசத்தில் -முதல் மூன்று பத்து த்வயார்த்தத்தின்
உத்தர வாக்யத்தையும் -அடுத்த மூன்று பத்து பூர்வ வாக்யத்தையும் அனுசந்திப்பதாக காட்டுவர்
முமுஷூ ப்படி -த்வயார்த்தம் -116-சூத்தரத்தில் –
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும்
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும்
புறம்புண்டான பற்றுக்களை அடைய -சர்வ தர்மான் -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
வாசனையோடு விடுகையும் -பரித்யஜ்ய -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
எம்பெருமானை -மாம் என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
ஏ-என்கிற ஏகாரத்தாலே ஏகம் என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
தஞ்சம் -சரண பதத்தின் அர்த்தத்தையும்-
பற்றுகை -வ்ரஜ-பதத்தின் அர்த்தத்தையும்-
அடைவே சொல்லுகையாலே -கருத்தை அருளி இட்டு விளக்கிக் காட்டி அருளுகிறார் –
மன்னு குறுங்குடியாய்–பெரியாழ்வார் திரு மொழி –1 -6 -8
-பிரளய த்திலும் அழியாதபடி வர்திக்கிறவனே-
ஸ்ரீ கிருஷ்ணன் திரு மாளிகையை சாகரம் அழித்தால் போல் அழியாமல்-
பொத்த உரல் – பெரியாழ்வார் திரு மொழி — 1- 10- 7- –
பொத்துண்ட உரல் -நல்ல உரலானால் நடுவே தேடுவார் உண்டாய் இருக்குமே என்று ஆய்த்து-
பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது-
ஸ்ரீ பெரியாழ்வார் நான்காம் பத்தில் திருவரங்கம் அனுபவிக்கப் புக
அவதாரிகை மா முனிகள் காட்டும் விதம்
பரத்வாதி குணங்கள் பிரகாசிக்கை –சகலரும் அனுபவிக்கை –
முன் அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று –
சகல லோகங்களுக்கும் அதீனம் –பகலிருக்கை –ஸ்ரீயப்பதித்வம் –
விபவ அவதாரத்தை அனுபவித்த அநந்தரம் -மற்றைய திவ்ய தேசங்களை அனுபவித்த அநந்தரம்
அவற்றுக்கு வேர்ப் பற்றான திருவரங்கத்தை அனுபவித்து –
பரத்வதாதிகளில் உண்டான குணங்கள் —
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவன்
வ்யூஹம் –கடலிடம் கொண்ட கடல் வண்ணன்
அந்தர்யாமி -கட்கிலீ
விபவம் -காகுத்தா கண்ணனே
அர்ச்சை -திருவரங்கன் –
உபய விபூதி அதீனம் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –ஆள்கின்ற எம்பெருமான் -நாச்சியார் திரு மொழி -11 -3 –
சகல தேசத்தில் உள்ளாறும் உஜ்ஜீவிக்கை –
வன் பெரு வானகம் உய்ய -அமரர் உய்ய -மண் உய்ய -பெருமாள் திரு மொழி – -1 -10 –
முன்பு அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்றான இடம் –
திரு மால் இரும் சோலை –
மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் – நாச்சியார் திரு மொழி- -4 – 1 –
-என்றும் -பொன்னி சூழ் அரங்க நகருள் முனிவனை -பெரிய திரு மொழி – 9- 9- 2- -என்றும்
திருவரங்கன் அவ்விடம் அழகனாக இருக்கிறான் என்றும்
திருக் கோஷ்டியூர் –
பயின்றது அரங்கம் திருக்கோட்டி -இரண்டாம் திருவந்தாதி – – –
தேனார் திருவரங்கம் தென் கோட்டி -மூன்றாம் திருவந்தாதி –
என்று திருவரங்கம் பெருமானே அங்கு அருள் பாலிக்கிறான் -என்றும்
உகந்து அருளின நிலங்களுக்கு எல்லாம் பகல் இருக்கை –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் பாசுரத்தால் அறுதி இட்டு –
சகல தேசத்திலும் ருசி பிறந்தார் எல்லாடும் அனுபவிக்கும்படி –
தென் நாடும் வட நாடும் தொழ நின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 11- –
யாவரும் வந்தடி வணங்க -பெருமாள் திருமொழி – 8- 10-
அனைவருக்கும் ருசி பிறந்து பாடி தொழுது
ஸ்ரீ ய பதித்வம் –
திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 10- –
மா முனிகள் இந்த திரு மொழிக்கு அவதாரிகையாக
திருவரங்க மகிமை அருளி -நாம் அனுபவிக்க கொடுத்தருளுகிறார்
மிடறு மிடறு மெழு மெழுத் தோட –வெண்ணெய் விழுங்கி -பெரியாழ்வார் திருமொழி — -3 -2 -6 – –
ஒதனா பூபாதிகள் அமுது செய்யும் போது குறிக் கொண்டு –
திருப் பவளத்தில் இட்டு இருக்கும் என்று மெள்ள மிடற்றுக்கு கீழே இழிச்ச வேணும் இறே
மிடற்றில் அழுத்தாமல் மெழு மெழுத்து உள்ளே ஓடும்படி இறே இருப்பது –
இலட்டும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்க வேண்டுமானால்
கல் உண்டோ என்று சோதித்து மெதுவாக கடித்து உண்ண வேண்டும் –
வெண்ணெய் ஆகில் வருத்தம் இன்றி மெழு மெழு என்று உள்ளே இழியுமே –
கண்ணன் வெண்ணெய் களவு காண்கையில் திட பதார்த்தம் ஆனால்
அத்தைக் களவு கண்டு ஓடுகையில் அவசரத்தில் கடித்து முழுங்குவது கடினம்
த்ரவ்ய பதார்த்தமானால் அதைப் பாதுகாப்பாக எடுத்து செல்வது கடினம்
வெண்ணெய்க்கு இவ்விரண்டு தோஷமும் இல்லை -வாயில் அடைத்துக் கொண்டு
செல்லுகையில் பிரயத்தனம் இல்லாமல் முழுங்கி விடலாமே –
ஸ்ரீ வசன பூஷணம் சூரணை – 82-பிராட்டி சக்தியை விட்டாள் -திரௌபதி லஜ்ஜையை விட்டாள்
சூரணை -81 -பிராட்டிக்கும் திரௌபதி க்கும் வாசி சக்தியும் அசக்தியும் –
பிராட்டி சக்தி வெளிப்பட்டது எப்போது -ஸீ தோ பவ -என்று அக்நியை நியமித்து
திருவடிக்கு இட்ட அக்நியை தணித்தது அறிவோமே -அதை -தக்தோ பவ -என்று
இலங்கையை எரிக்க விட்டு இருக்கலாமே -திரௌபதி லஜ்ஜையை விட்டது தான்
அரிதான செயல் -எம்பெருமானே வந்து தன்னை ரஷிப்பது தான் ஸ்வரூபம் என்று
அறிந்த பிராட்டி பேரளவு உடையவள் -அப்படி பேரளவு உடையவளாக இல்லாமல் இருந்தும்
பெரும் சபை நடுவே -கண்ணனை விச்வசித்து -லஜ்ஜையை விட்டது மிக அரிய செயல் –
என்று மா முனிகள் காட்டி அருளுகிறார் –
குலம் பாழ் படுத்த பெருமான் -பெரியாழ்வார் திருமொழி – -4 -2 -1 –
விபீஷணன் இவர் குலத்தவன் இல்லையே
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை -ஆண்டாள் –
விபீஷணன் பிரகலாதன் இருவரும் நல்ல அரக்கர்கள்
இலங்கை அரக்கர் குலம் முறுடு தீர்த்த பிரான் -திருவாய்மொழி – – – –
பெருமாள் கைக் கொண்டு அருளின போதே அந்த ஜன்மம் மாறிப் போந்தது இறே -மா முனிகள் ஸ்ரீ ஸூ க்தி
கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்து –
ஆதலால் இவ்விடத்தில் சொன்ன அரக்கர் ராவணாதி களும் அவர்களை சேர்ந்தவர்களும் –
ஆதலால் குலம் பாழ் படுத்து -என்னக் குறை இல்லை –
பரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகை கண் பெறுத்த பெருமான் -பெரியாழ்வார் திருமொழி -4 -7 -5 –
இந்த லோகத்தை கண் பெறுவித்தவன் -நிர்வாக வஸ்துவாய்ச் சொல்கிறது –
இத்தால் விரோதியான ராவணனை நிரசித்து -அவனாலே நெருக்குண்ட பிராணிகளை
எல்லாம் ரஷிக்கையாலே -இந்த லோகத்துக்கு தானே ரஷகன் என்னும் இடம் அறிவித்தான் -என்கை-
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply