ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை–450/451/452/453/454/455/456–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

இப்படி ஸூலபமான ஆசார்ய விஷயம் ஸ்வ ரஷணத்துக்கு உண்டாய் இருக்க
இத்தை உபேஷித்து துர்லபமான பரத்வாதிகளை வாஞ்சிக்க கடவன் அல்லனே ஆகிலும் –
ப்ராப்யத்வேன அவை இவனுக்கு வாஞ்சநீயங்கள் அன்றோ என்ன -அவை எல்லாம் ஆசார்யனே என்று இருக்கக் கடவன் -என்கிறார் –

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —

அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –
நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –
திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே -இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
ஏஷாம் இந்தீவரஸ்யாமோ ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டத -என்றும் –
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் –
சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –
இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் -தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-

வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் – ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய வியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–

அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே -அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று
இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்கவுமாம் —

———————————————

ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகத்வ -ஸ்வரூப வர்த்தகத்வ –
தத் உபய ரஹீதத்வங்களாலே -பிரதிகூலராயும் -அனுகூலராயும் -அநு பயராயும்-
இருக்கும் அவர்களை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

அதாவது –
இப்படி ஆசார்ய அபிமான நிஷ்டனாய் -பரத்வாதி பஞ்சகத்திலும் உள்ள ப்ராவண்யம் உடைய -இவ் விஷயத்திலே ஒரு மடைப் படுத்தி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் இவ் வதிகாரிக்கு –
அணுகில் ஆத்ம நாசத்தை பிறப்பிக்கும் பிரதி கூலர் -ஆத்ம அபஹாரிகளான ஸ்வ தந்த்ரரும் –
பாரதந்த்ர்யத்துக்கு இசைந்து வைத்தே பகவத் வ்யதிரிக்த தேவதைகளுக்கு பாரதந்த்ரமாய் இருக்குமவர்களும் —
 ஸ்வ சம்சர்க்கத்தாலே ஸ்வரூபத்தை வளர்க்கும் அனுகூலர் –
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து -தச் சரம அவதி நிஷ்டரான சதாசார்யா பரத்ந்த்ரர் –

இப்படி ஸ்வரூப நாசகரும் ஸ்வரூப வர்த்தகரும் அல்லாமையாலே -வெருவதலுக்கும் விருப்பத்துக்கும் விஷயம் அல்லாத வுபேஷணீயர் –
சரம பர்வமான ஆசார்ய பாரதந்த்ர்யத்தில் ஊற்றம் அன்றியிலே பிரதம பர்வமான பகவத் பாரதந்த்ர்யத்தில் ஊன்றி நிற்கும் அவர்கள் -என்றபடி –

பிரதிகூலரை சொல்லுகிற இடத்தில் -ஸ்வ தந்திர தேவதாந்திர பரதந்த்ரர் இருவரையும் சொன்ன இது –
பிரபத்தி பிரகரணத்தில் சொன்ன மற்று உள்ள பிரதிகூலருக்கும் உப லஷணம்-
பிரதம பர்வ நிஷ்டனுக்கு பிரதிகூலரான அவர்கள் இவனுக்கு பிரதிகூலர் அல்லாமை இல்லை இறே –

இத்தால் கீழ் பகவத் பிரபன்ன அதிகாரிக்கு -சஹவாச தந் நிவ்ருத்திகளுக்கு உறுப்பாக அனுகூல பிரதிகூல தர்சனம் பண்ணு வித்தாப் போலே –
ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனுக்கும் சஹவாச நிவ்ருத்தி விஷயமான பிரதிகூலரையும் -சஹவாச விஷயமான அனுகூலரையும் -தர்சிப்பித்து –
தத் அதிகமான வுபேஷணீய விஷயமும் இவனுக்கு ஓன்று உண்டு என்னும் இடம் தர்சிப்பித்தாராய் ஆயிற்று —

————————————————-

இவ் வதிகாரிக்கு உண்டாக வேண்டும் பிரதிபத்திய அனுஷ்டானங்களை பல படியாலும் அருளிச் செய்தார் கீழ் –
இந்த பிரசங்கத்திலே -அந்ய உபாய நிஷ்டருடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -உண்டான விநியோக விசேஷத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் அல்லாதார்க்கு
உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

அதாவது –
தத்வ ஞானமும் -தத் அநு ரூபமான அனுஷ்டானமும் -ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனை ஒழிந்த அதிகாரிகளுக்கு –
உபாயம் அதிகாரி சாபேஷம் ஆகையாலே -உபேய ப்ராப்தி அளவும் -உபாய அதிகாரம் நழுவாமல் நடக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு –
அவ்வழியாலே உபாய சேஷமாய் -இருக்கும் –

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்  ஆகையாலும் -உபாய அதிகார சேஷமாக வேண்டுவது ஓன்று இல்லாமையாலே –
இவ் வதிகாரிக்கு உண்டான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் ஆசார்யன் முக மலர்த்தி ஆகிற உபேயத்துக்கு சேஷமாய் இருக்கும் -என்கை –

இவனுக்கு உபேயமாய் இருக்கும் என்ற பாடம் ஆனபோது -ஆசார்யனுக்கு அபிமதமாய் கொண்டு இவை தான் அவனுக்கு உபேயமாய் இருக்கும் -என்றபடி –

———————————————-

இப்படி ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் -ஆசார்ய ப்ரீதி ஹேதுவாக நினைத்து
குறிக் கொண்டு வர்த்திக்கும் இவ் வதிகாரிக்கு அவஸ்யம் நிவர்தநீயங்களை அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி -பிரதமம் -நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

அதாவது –
ஏவம் பூதனான இவ் வதிகாரிக்கு -பரதார பரிஹரகாதி நிஷித்த அனுஷ்டானம் –
ஸ்வ விநாசத்தையும்-ஸ்வ அனுஷ்டானம் கண்டவருடைய விநாசத்தையும் –
பண்ணுகையாலே -பரி த்யஜிக்க படுமது ஓன்று என்கை-

————————————————

உபய விநாசமும் இத்தாலே வருகிறபடி எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

அதாவது –
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி –
பகவத் -பாகவத -ஆசார்ய -விஷயங்கள் மூன்றுக்கும் -அபிமத விஷயமாய் இருக்கிற தான் நசிக்கிறது –
அம் மூவருக்கும் அது அநிஷ்டம் ஆகையாலும் -அபசாரம்-ஆவது -அநிஷ்ட கரணம் ஆகையாலும் –
அதி க்ரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கையாலே –

பிறர் நசிக்கிறது -சரம பர்வ பர்யந்தமாக வந்து நிற்கிற பாகவத உத்தமனான தன்னை நிஷித்த அனுஷ்டானம் பண்ணினான் என்று அநாதரித்து-
தத்வ வித்தான இவன் இப்படிச் செய்கிறான் -இதில் தோஷம் இல்லையாகப் பட்டன்றோ -நமக்கு பின்னை என் என்று –
தன்னுடைய அனுஷ்டானத்தை தாங்கள் அங்கீகரித்தும்  -என்கை —

அநாதரிப்பார் பாகவத வைபவம் அறியாதவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிப்பார் -ப்ராப்த ப்ராப்ய விவேக ஸூன்யர் ஆனவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிக்கிறவர்கள் நசிக்கிறார்கள்-அநாதரித்தவர்கள் நசிப்பான் என் –
தோஷம் கண்டால் அநாதாரிக்கல் ஆகாதோ என்னில் –
ராஜ புத்ரனனுக்கு தோஷம் உண்டானால் -ராஜா தான் சிஷித்து கொள்ளும் அது ஒழிய
அவனை அநாதரித்தவர்கள் மேலே நிக்ரஹம் பண்ணி தண்டிக்குமா போலே –
ஸ்வ அபிமதனான இவனுக்கு தோஷம் உண்டானாலும் -சர்வேஸ்வரன் தானே திருத்திக் கொள்ளும் அது ஒழிய
பிறர் அநாதரிக்க பொறாமையாலே- அநாதரித்தவர்களுக்கு விநாசமே பலிக்கையால் அநாதரிகல்  ஆகாது –

அபிசேத ஸூதுரா சாரோ பஜதேமாம நந்யபாக் சாதுரேவச மந்தவ்யஸ் சம்யக்வ்யவஹி தோஹிச-என்று
பாஸக விஷயமாக அருளிச் செய்தபடி கண்டால்-எல்லை நிலத்தில் வந்து நின்ற இவ் வதிகாரி விஷயத்தில் இவன் இருக்கும்படி சொல்ல  வேண்டா இறே-

ஆகையால்-
இப்படி தானும் பிறரும் நசிக்கும்படி இருக்கையாலே -இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் பரித்யாஜ்யம் -என்றது -ஆயிற்று –

———————————————

இப்படி பரதாராதி போகம் -ஸ்வ -பர -விநாச ஹேது வாகைக்கு அடி -சாஸ்திர நிஷித்தமாகை -இறே –இங்கன் அன்றிக்கே -சாஸ்திர விஹித விஷயமான -ஸ்வதார போகத்துக்கு குறை இல்லையே -என்ன -அருளிச் செய்கிறார் -மேல் –

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று – நரக ஹேதுவும் அன்றாய் – இருக்கச் செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் -ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

அதாவது –
விசிஷ்ட வேஷ விஷயீயான சாஸ்த்ரத்தாலே விதிக்கப் பட்ட -ஸ்வ தாரத்தில் போகம் -தாத்ருச சாஸ்திர நிஷித்தமான -பர தார போகம் போலே –லோக விருத்தமும் -அன்று –
செம்பினால் இயன்ற பாவையை தழுவுகை முதலான கோர துக்க அனுபவம் பண்ணும் நரக ஹேதுவும் அன்று —
இப்படி ப்ரத்யஷ பரோஷ சித்தங்களான லோக விருத்த நரக ஹேதுக்கள் இரண்டும் அற்று இருக்கச் செய்தே -அநந்ய போகாத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய் -சாந்தோதாந்த உபதர ஸ்திதி ஷூச்சமாஹிதோ பூத்வாத்மந்யே வாத்மானம் பஸ்யேத்-இத்யாதிகளாலும் –
திருமந்த்ராதிகளாலும் -உபாசகனோடு பிரபன்னனோடு வாசி அற-இருவருக்கும் -விஷய போகம் ஆகாது என்னும் இடத்தைப் பிரதிபாதிக்கிற -வேதாந்தத்துக்கு விருத்தமாய் -தோஷ தர்சனத்தாலும் -அப்ராப்த்த தர்சனத்தாலும் -விஷய போகத்தை அறுவறுத்து   இருக்கும்
ஆசார்ய பிரதானரான சிஷ்டர்களாலே ஹேயம் என்று நிந்த்திக்ப் பட்டு இருக்குமதாய் -அப்ராப்த விஷய விரக்தி பிரியனான ஆசார்யனுக்கு அநபிதம் ஆகையாலே –
ஆசார்ய முக கமல விகாச அனுபவ ரூப ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமாய் -இப்படி அநேக அநர்த்தா வஹமாய் இருக்கையாலே -இவ் வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்றபடி –

——————————————

போக்யதா புத்தியை விட்டு தர்ம புத்த்யா வர்த்திக்கும் அளவில் -இவை ஒன்றும்
இல்லையே -என்ன -அருளிச் செய்கிறார் -மேல்-

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்
ஸ்வரூபம் குலையும் –

அதாவது –
விஹித விஷய பிரவ்ருத்தியில் காமுகதயா வரும் போக்யதா புத்தியை விட்டு -உபாசகரான மகரிஷிகள் தொடக்கமான சிஷ்டர்
பைத்ரு கருண மோசக பிரஜோத் பாதந அர்த்தமாகவும் -ஸ்நான திவசத்தில்  அங்கீகரியாவிடில் ப்ப்ரூனஹத்யாதி தோஷம் உண்டு என்னும்  அத்தைப் பற்றவும் -தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்குமா போலே –
இவனும் அப்படி தர்ம புத்த்யா ப்ரவர்த்தித்தாலும் சித்த தர்ம நிஷ்டனான இவனுக்கு -அந்ய தர்ம அந்வயம்-விரோதி ஆகையாலே –
அநந்ய உபாயத்வ  ரூபமான ஸ்வரூபம் குலையும் -என்கை-

இத்தால்-
போக்க்யதா புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய போகாத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமோ பாதி – தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய உபாயத்வ ரூபமான ஸ்வரூபம் -குலையும் என்கை —

ஆன பின்பு ஒருபடியாலும் -இவ் அதிகாரிக்கு விஹித  விஷய பிரவ்ருத்தி ஆகாது என்றது -ஆயிற்று –

ஆகையாலே
ஏதேனும் ஒருபடி அன்வயித்தாலும் ஸ்வரூப ஹானி தப்பாது – ஆன பின்பு பரித்யஜிக்க வேணும் என்னும் இடம் நிச்சிதம் -இறே-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading