இப்படி உபதேச அநு குண நியமங்களை தர்சிப்பித்த அநந்தரம் -உபதேசிக்கும் அளவில் –
இந்த மந்த்ரத்தை உபதேசித்தவனையே -சாஷாத் ஆசார்யன் என்பது -என்கிறார் –
சூரணை -315-
நேரே ஆசார்யன் என்பது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –
நேரே ஆசார்யன் என்பது –என்கிறது -ஆசார்யத்வம் குறைவன்றி இருக்கச் செய்தே –
ப்ரதீதி மாத்திரம் கொண்டு செல்லும் அளவு அன்றிக்கே -சாஷாத் ஆசார்யன் என்று சொல்லுவது -என்றபடி –
சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை -என்றது
ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப் படியே அகில பல பிரதமாய் இருந்ததே ஆகிலும் –
அந்ய பலங்களில் தாத்பர்யம் இன்றிக்கே -மோஷ பலத்தில் நோக்காய் இருக்கையாலே –
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம் அபுநர்ப்பவ காங்ஷீணாமம்-என்கிறபடியே
சம்சார நிவர்தகமாய் -அத ஏவ – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாணாம் குஹ்ய முத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன -என்கிறபடியே
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான பெருமை உடைத்தான திரு மந்த்ரத்தை –
சம்சார நிவர்தகத்வ பிரதி பத்தி யோடே கூட உபதேசித்தவனை-என்கை –
த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே -இதில் மத்யம சரம பத விவரணமாய் -சரம ஸ்லோகம் பூர்வ உத்தர அர்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமாய்
இருக்கையாலே -மற்றைய ரஹஸ்ய த்வயமும் -பிரதம ரஹஸ்யமான இத்தோடே அன்வயமாய் இருக்கையாலே -இத்தைச் சொல்லவே – அவற்றினுடைய உபதேசமும் தன்னடையே சொல்லிற்றாம் என்று திரு உள்ளம் பற்றி -பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை – என்கிறார் –
ஆகையால் இது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லஷணம் –
———————————————————-
பகவன் மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசித்தவர்களுக்கும் ஆசார்யத்வம் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -316-
சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –
அதாவது –
சம்சாரத்தை நிவர்த்திப்பியாத மாத்திரம் அன்றிக்கே -வளர்க்குமவையாய்-
பெருமை அன்றிக்கே ஷூத்ரங்களுமாய் இருந்துள்ள -தத் இதர பகவன் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு -உபதேஷ்ட்ருத்வ பிரயுக்தமான ஆசார்யத்வ பிரதீதி மாத்ரம் ஒழிய தத் பூர்த்தி இல்லை -என்கை –
——————————-
ஷூத்ரங்கள் எனபது -ஷூத்திர தேவதா மந்த்ரங்களை அன்றோ –
பகவந் மந்த்ரங்களை இப்படிச் சொல்லுகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –
சூரணை -317-
பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பல த்வாரா –
அதாவது –
பர தேவதையான பகவத் விஷயம் ஆகையாலே வந்த பெருமையை உடைய மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்று சொல்லுகிறது -அர்த்த காம புத்திர வித்யாதி ஷூத்திர
பலன்களைக் கொடுக்கிற வழியாலே –
———————————————
சம்சார வர்த்தகங்கள் என்கிறது என் என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை-318-
சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –
அத்தாலே -என்றது கீழ் சொன்ன பந்தகமான ஷூத்திர பலன்களைக் கொடுக்கையாலே -என்கை –
——————————————
ஆனால் இவற்றுக்கு இது ஸ்வாபாவிகமோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -319-
இது தான் ஒவ்பாதிகம் –
இது தான் -என்று ஷூத்ர பல பிரதத்வத்தை பராமர்சிக்கிறது –
(ஒவ்பாதிகம் -என்றது -உபாதி பிரயுக்தமாய் வந்தது இத்தனை -என்கை -)
—————————————–
அத்தை உபபாதிக்கிறார் –
சூரணை -320-
சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –
அதாவது –
பகவன் மந்த்ரங்கள் ஆகையால் -மோஷ ப்ரதத்வ சக்தியும் உண்டாய் இருக்கச் செய்தே -இவற்றினுடைய ஷூத்திர பல ப்ரதத்வம்
பிரகிருதி வஸ்யனான சேதனனுடைய ஷூத்திர பல ருசியாலே வருகையாலே -என்கை –
ஐஸ்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் –
புத்திர காமர்க்கு ராம மந்த்ராதிகளும் –
வித்யா காமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும் –
விஜய காமர்க்கு -ஸூதர்ஸன நாரஸிம்ஹ மந்த்ராதிகளுமாய் -இப்படி நியமேன
ஷூத்திர பலன்களையே கொடுத்துப் போருகிற இது -சேதனனுடைய ருசி அநு குணமாக
இவ்வோ மந்த்ரங்களில் இவ்வோ பலன்களைக் கொடுக்கக் கடவது என்று ஈஸ்வரன் நியமேன கல்பித்து வைக்க இறே –
அது தான் சேதனருடைய ருசி அநு குணமாக கல்பித்தது
ஆகையாலே அவற்றுக்கு அவை ஸ்வாபாவிகம் அன்று -ஒவ்பாதிகம் என்னலாம் இறே
——————————
ஆக –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது -308-என்று துடங்கி -ஆசார்யத்வ பூர்த்தி இல்லை -320-என்னும் அளவும் ஆசார்ய ஸ்வரூபம் சோதனம் பண்ணி -அநந்தரம் அதின் மேல் வந்த
பிராசங்கிக சங்கைகளையும் பரிகரித்தார் கீழ்- மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –
சூரணை -321-
சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதன ஸூஸ்ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநஸூயையும்
உடையவனை –
சிஷ்யன் என்பது -என்றது -உபதேச ஸ்வரணம் மாத்திரம் கொண்டு -மேல் எழுந்த வாரியாக
சொல்லுகை அன்றிக்கே-சிஷ்யன் என்று முக்யமாக சொல்லுவது -என்றபடி –
சாத்யாந்தர நிவ்ருத்தி-யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற
ப்ராப்யாந்தரத்தில் மறந்தும் அன்வயம் அற்று இருக்கை –
அன்றிக்கே
இவ் வாசார்யன் தன்னை ஒழிய வேறு ஒரு பிராப்ய வஸ்து அறியேன் என்று இருக்கையும் ஆகவுமாம்-
பல சாதன ஸூஸ்ரூஷை-யாவது -குரு ஸூஸ்ரூஷயா வித்யா -என்கிறபடி
ஆசார்யனை தான் பண்ணுகிற ஸூஸ்ரூஷையாலே சந்தோஷிப்பித்து ஞானோப ஜீவனம் பண்ணுகை ப்ராப்தம் ஆகையாலே -ஆசார்யன் தனக்கு உபகரிக்கிற தத்வ ஞானம் ஆகிற
பலத்தினுடைய சித்திக்கு சாதனமாய் இருந்துள்ள ஆசார்ய பரிசர்யை –
அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான பலத்திலும் -சாதனத்திலும் உண்டான ஸ்ரோதும் இச்சை யாகவுமாம்-
அதவா
ஆசார்ய முக உல்லாசம் ஆகிற பலத்துக்கு சாதனமான தத் பரிசர்யை -என்னவுமாம் –
ஆர்த்தி -யாவது -இருள் தருமா ஞாலம் -என்கிறபடியே பிறந்த ஞானத்துக்கு விரோதியான
இவ் விபூதி யினின்றும் கடுகப் போகப் பொறாமையாலே வந்த க்லேசம் –
அன்றிக்கே
ஆசார்ய விக்ரக அனுபவ அலாபத்தில் க்லேசம் ஆகவுமாம் –
ஆதரம்-ஆவது -உத்தரோத்தரம் அனுப பூஷை-(விருப்பம் )– விளையும் படி ஆசார்யன் அருளி செய்கிற பகவத் குண அனுபவத்தில் மென்மேலும் உண்டாகா நிற்கிற விருப்பம் –
அன்றிக்கே
ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலே -தத் அனுபவ
கைங்கர்யங்களிலே மண்டி விழும்படியான விருப்பம் ஆகவுமாம் –
அநஸூயை ஆவது -ஆசார்யன் -பகவத் பாகவத வைபவங்களை பரக்க உபபாதியா நின்றால்-ப்ரவஹ்யாம் யநஸூயவே -என்னும் படி இதில் அஸூயை அற்று இருக்கை –
அன்றிக்கே
ஆசார்யனுடைய உத்கர்ஷத்தையும் -ச பிரமசாரிகளுடைய உத்கர்ஷத்தையும் கண்டால்
அதில் அஸூயை அற்று இருக்கை -என்னவுமாம்-
அஸூயா பிரசவ பூ -என்கிற இதுக்கு ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமே ஆயிற்று
பொறாதது என்று இறே பூர்வர்கள் அருளி செய்தது -பகவத் விஷயத்தில் உள் பட அஸூயை
பண்ணா நின்றால் -ததீய விஷயத்தில் சொல்ல வேணுமோ –
இதம் துதே குஹ்ய தமம் ப்ரவஹ்யாம் யநஸூயவே-என்றான் இறே –
ஆக -இப்படி இருந்துள்ள சத் குண சம்பன்னனை ஆயிற்று -நேரே சிஷ்யன் என்பது –
———————————
இப்படி உக்த லஷணனான சிஷ்யனுக்கு ஸ்வ ஆசார்யர் விஷயத்தில்
உண்டாக வேண்டும் பிரதிபத்தி விசேஷத்தை விதிக்கிறார் மேல் –
சூரணை-322-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்கக் கடவன் –
அதாவது –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே அநு சந்தாத்ரு ரஷகமாய் இருந்துள்ள –
திருமந்த்ரமும் –
தத் பிரதிபாத்ய -பர தேவதையும் –
தத் பிரசாத லப்தமான -கைங்கர்ய ரூப மகா பலமும் –
தத் அநு பந்திகளான-அவித்யாதி (கர்மம் வாசனா ருசி)நிவ்ருத்தி பூர்வகமான -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாகமும் –
சா லோக்யாதிகளும் -ஆகிய இவையும் –
ததாவித பல பிரதமான சாதனமும் –
புத்திர தார க்ருக ஷேத்திர பசு அன்னாத்ய அநு பவ ரூபமான இஹலோகத்தில் போக்யமான இவை எல்லாம்
நமக்கு நம்முடைய ஆசார்யனே என்று பிரதிபத்தி பண்ணக் கடவன் -என்கை-
குருரேவ பரம் ப்ரஹ்ம
குருரேவ பரா கதி
குருரேவ பரா வித்யா
குரு ரேவ பராயணம்
குருரேவ பரா காமோ
குருரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு-என்றும் –
ஐஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷரதோ குரு இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி-என்றும் இப்படி
சாஸ்த்ரங்களில் சொல்லுகையாலே -நினைக்கக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்கிறார்-
——————————–
இப்படி தாம் அருளிச் செய்த இவ் வர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக இது பரமாச்சார்ய வசன சித்தமும் -என்று அருளிச் செய்கிறார் –
சூரணை -323-
மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –
அதாவது
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி ஸ சர்வம்
யதேவ நியமேந மதன்வயானாம் -என்றி ஐஹிக போகங்களையும் -சர்வம் -என்று
அநுக்த சகல கதநத்தாலே -மந்திர தேவதா பலாதிகளையும் எடுத்து –
இத்தனையும் ஆழ்வார் திருவடிகளே என்று அருளிச் செய்கையாலே –
அந்த ஸ்லோகத்தில் இவ் அர்த்தத்தை பரமாச்சார்யான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் என்கை –
————————————————–
இப்படி எல்லாம் இவனே என்று அநு சந்திக்கைக்கு அடி எது என்ன- அருளிச் செய்கிறார் –
சூரணை -324-
இதுக்கடி
உபகார ஸம்ருதி-
அதாவது –
இப்படி ஆசார்யனே நமக்கு சகலமும் என்று அநு சந்திக்கைக்கு ஹேது –
நித்ய சம்சாரியாய் கிடந்த தன்னை உபதேசாதிகளாலே திருத்தி
நித்ய ஸூரிகளுடைய அனுபவத்துக்கு அர்ஹனாம் படி பண்ணின உபகார அநு சந்தானம் என்கை –
————————————————–
இவ் வுபகார ஸ்ம்ருதி பிரசங்கத்திலே -அதனுடைய பிரதம சரம அவதிகளை
தர்சிப்பிக்கிறார்-
சூரணை -325-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை-
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –
இச் சேதனன் முந்துற அநு சந்திப்பது -அஞ்ஞான ஞாபனக முகத்தாலே -தனக்கு அகிலத்தையும் அறிவித்து -பகவத் விஷயத்தை கைப் படுத்தின -ஆசார்யன் பண்ணின உபகாரத்தை ஆகையாலே -உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை -என்கிறது –
க்ருதஜ்ஜ்தையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம்
ஆச்சார்ய கெளரவம் (மஹா உபகாரம் )நெஞ்சில் பட -அவ் விஷயத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஈஸ்வரன் பண்ணின கிருஷி பரம்பரையை பின்னை அநு சந்திக்கையாலே –முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –என்கிறது -இதுவும் ஈஸ்வரன் பக்கல் உபகார ஸ்ம்ருதி என்றபடி –
இத்தால் -பகவத் விஷயத்தை உபகரித்த ஆசார்யன் பண்ணின உபகாரத்தை அநு சந்திக்க இழிந்தால் -அவனுடைய வைபவம் நெஞ்சிலே ஊற்று இருந்தவாறே –இப்படி இருக்கிற விஷயத்தை நாம் பெற்றது எம் பெருமானாலே அன்றோ என்று தத் க்ருத உபகார அநு சந்தானத்திலே சென்று தலைக் கட்டும் என்றது ஆயிற்று –
———————————
இந்த சாதாச்சர்ய -சச் சிஷ்யர் களுடைய பரிமாற்றம் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை-326-
சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்துகை யாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
ஆசார்யன் சிஷ்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
நடத்தக் கடவர்கள் –என்றது இதனுடைய அவஸ்ய கரணீயத்வம் -தோற்றுகைக்காக-
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply