திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி யுனது புனல் பொன்னித் தென் பால்
திரு மால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே –10-8-1
திரு பேர் நகர்
அப்பக் கூடத்தான்
கோவில் அடி- திரு அரங்கம் பக்கம் என்பதால்
திவ்ய தேச பெயரை சொன்ன உடனே
நெஞ்சையே சோலை மலை ஆக்கி கொண்டு
நெஞ்சு நிறைய -வேறு எண்ணம் இடம் கொடுக்காமல்
ஆழ்வாருக்கு வேற எண்ணம்- தேவாந்தர பரர் போல் இன்றி
வேறு யாருக்கும் இடம் இன்றி-மற்றைய அர்ச்சை பெருமாளும் காத்து இருக்க
அழகரே ஹிருதயத்தில் பேரென் என்று –
கார்ய அர்த்தமாக -மண்டக்க படி- தென் திரு பேர் சென்று -பேரென் என்று சொல்லி கொண்டு நிறைய புகுந்தான்
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் எழ கடல் எழ மலை ஏழு உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே –10-8-2
அனைத்தையும் உண்டவன்
அலங்கார மகா போஜஜனம்
ஆரா வயிற்றான்
கை அடக்கமாக பிடித்து கொண்டேன்
பேரென் என்று கிடைத்தான் கட்டி கொண்டேன்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கை யுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிதாயின வாறே 10-8-3
திரு அடி பிடித்ததும்
பிறவி போக்கி
சம்சார பிணி உலக மாயை மக்கி போக
கோபுரமும் கொடியும் கண்ணுக்கு தெரியுமே
எளிதாயின வாறென்று என் கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தை யனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேன் விசும்பு தருவானே –10-8-4
பகவத் பக்தி விட சுலபம் இல்லை
செய்யும் பொழுதே இனிமை பலனும் இனிமை
ருசியாக அலுக்காமல் சு சுகம்-சங்கல்பித்து பொழுது போக்கு கொடுத்தான்
சிந்தை பக்தி ரசத்தால் கற்பிதமாக இருக்க
கிளி தாவும் சோலைகள்
தெளிந்த ஸ்ரீ வைகுண்டம் தருவான்
வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனே குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடு மாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென் திரு பேர் நகரானே –10-8-5
ஸ்ரீ வைகுந்தம் தர நினைத்து
அந்தர்யாமியாக
துணைவனாக காலம் பார்த்து
அவசர பிரதீஷனாக இருந்து
இரண்டு பஷி-மரம்-போல்
மாமிசம்-குடிசை-உடம்பில் ஒட்டி கொண்டு
எனக்கு என்று இதனுள் புகுந்து இன்று
அத்தை தின்று அங்கே கிடந்தான்-என்னை பார்க்க வில்லையே
காத்து இருந்து –தடு மாற்றம் வர-
ஊர்த்த நாடி-வழியாக -அனுப்ப காத்து கொண்டு இருக்கிறான்
வினைகள் தவிர்த்து-பரம பதம் செல்ல துணைவன் –
திரு பேர் நகரான் திரு மால் இரும் சோலை
பொருப்பே யுறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6
அழகர் இன்று வந்து இருப்பேன் என்று
மூல ஸ்தானம் உன் நெஞ்சே
புகுந்து-நித்ய வாசம்-ஆள் கொண்டு-
பெரிய பேரு-அமுதம் உண்டு
குண அமிர்தம் தெவிட்டாத அமிர்தம் உண்டு களித்தேன்
–
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை ? மேலைத்
தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே –10-8-7
கல்யாண குணங்கள் மனசை விட்டு அகலாது
வேறு என்ன வேண்டும்
மேலும் கைங்கர்யம்-அந்தி தொழும் சொல்
சாதிக்க -கிடைத்ததே
அருள பாடு வீணையும் கையுமாக லவ கேசர் காத்து இருந்து
வண்டும் நாம சங்கீர்த்தனம் செய்யும்-
பார்க்கிறவனும் பார்க்கிற படுவனும் அவனே
கண்ணாடி சேவை போல்
பக்தி பண்ண வைத்து தானே மகிழ்ந்தான்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் எழ இசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8
கண்ணுள் நின்று அகல மாட்டான்
சூஷ்முமான அநந்த பொருளும் அவனே
எண்ண எண்ண தித்திகிறான்
இசை சேர்த்து -ராக பாவ தாளம் ஆனந்தம் தானே ஆகி
மனசில் புகுந்தான்
இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் ?
குன்று என்னத் திகழ மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –10-8-9
பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி
ஆதங்கம் –
பத்து மாசம் பிராட்டி பிறிய-சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல வந்ததே ஸ்ரீ ராமாயணம்
கதற விட்டு இருக்க வேண்டுமா
இன்று மயர்வற மதி நலம் அருளின பின்பு
அன்று -அவ் விசேஷ கடாஷம் முன்பு இருந்த அநாதி காலம்
ஈஸ்வரன் சொன்ன உத்தரம் எது பட்டரை நம் ஜீயர் கேட்க
லஜ்ஜை உடன் -நின்றான்
பழி அவர் தலையில் கட்ட –முடியவில்லை விருப்பமும் இல்லை
தாம் நஷ்டம் பட்டோம்-
பூதனை வேஷம்-விஷம் கொடுத்தவளுக்கு அமிர்தம் கொடுத்தாய்
யசோதைக்கு என்ன கொடுப்பாய்-பிரமன் கேட்டதும் தலை குனிந்தானே
திணறினார்-
திணற அடிக்கணும் -ஆழ்வார் எண்ணம்-
உரிமை உடன்கேட்டேன்-திணறினதே போதும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் !
கற்றார் மறை வாணர்கள் வாழ திரு பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே –10-8-10
சரண சேவை கிடைக்க வேண்டியது பெற்ற பின்
வேற என்ன வேண்டும்
ஈதே இன்னும் வேண்டுவது
பரம வைதிகர் வாழும் திவ்ய தேசம்-
இவனுக்கே என்று இருப்பவர்
அல்லல்- பகவத் பக்திக்கு பிர பந்தம் -இன்றி கிட்டும்
நில்லா வல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ்குருகூர் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11
தொண்டர் ஆவார் பலன்
திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்தன் அன்று அகல்விப்பான் என் ? –பெருமாள் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடர் உற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –98
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply