பிரமேய சாரம்-8/9/10- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வித்த மிழ வின்பம் துன்பம் நோய் வீகாலம்
தத்த மவையே தலை யளிக்கும் –அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8
சார தமம் -காயத்ரி–வேத சார -உபநிஷத் -சாரம் நாராயண காயத்ரி-மூன்றும் வியாபக திரு நாமம் -அதில் சாரம் திரு மந்த்ரம்
பிரமாண சாரம் பெரிய திரு மந்த்ரம்–ஞானம் பெறுவோர் பிரமாதா -அறியும் விஷயம் பிரமேயம் –பிரதம துவதீய சரம மூன்று பதங்களிலும் மூன்று பிரமேயம் -அனந்யார்க்க சேஷத்வம் -பிரமாணம் சொல்லும் பிரமேயம்–ஞானம் வந்த பின்பு -இது முதல் படி-ரஷணன் ஜகத் காரணன் பல பிரமேயம் -சாரம் அருள தான் வந்தார் -பிறப்பால் ஏற்றம் -யதீந்திர ஆச்ராயர் அவரை ஆச்ரயிப்போம் இவற்றை அறிய பிர பந்தம் அருளி உபகரித்தார் -சத் சிஷ்யர்-சதாச்சர்யர் சத் சிஷ்யர் பூர்த்தி கூரத் ஆழ்வான்– வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –மேல் உபதேசிக்கும் சத் சிஷ்யர் — ஆற்ற படைத்தவர் எம்பெருமானார்–தோன்ற கடவது என்று கண் குளிர கடாஷித்தார் — நேரான உபதேசம் குறைவு தான் -தன நெஞ்சில் தோற்றதே சொலி இது சுத்த உபதேசம் என்பவர் மூக்கவர் –திரு கண்களில் ஒன்றை தராசில் வைத்தும்-ருத்ரன் 3 நான்முகன் 8 விஷ்ணு 1000 கண் வைத்தாலும் இது வெல்லுமே -ஆச்சர்ய வைபவம்–கடகர்-சுவாமி இடம் சொத்தை சேர்க்கும் -சத் சிஷ்யர்–பரமம் ஜீவாத்மா ஞானம் திரு மந்த்ரம் எல்லா அசத் போல் -இருந்ததாம் ஆச்சார்யர் சேர்த்த பின்பே சத்தை பெற்றதாம் –அம்தாமத்து அன்பு செய்து — ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யர் முக்தர் கொடுக்கும் அன்பை என் இடம் காட்டி ,கலந்த பின்பு என் ஆவி சேர் அம்மான்—சுவாமி வகுத்த சேஷி–அந்தாம -ஆரம் உள–இவை உடன் சேர்ந்தான் வாள் முடி சங்கு இவை முன்பு இருந்தன இருந்தும் இல்லாததற்கு சமம் கலந்த பின்பு தான் சத்தை பெற்றதாம் -உள -அளனவாக ஆனதாம்-கலந்த பின்பு தான் அம்மான் ஆனான்பரான்குச நாயகி பெற்றதும் அம்மான்- திரு மங்கை ஆள்வரும் அவன் திரு அடி தளிர் விட்டதாம் அருளியது போல் -திரு மந்த்ரம் உபதேசித்த பின்பு தான் அவனே உள்ள படி ஆனான் –

ஆச்சார்யர் பற்றி இவர் அருளியது ராமானுஜர் சத் சிஷ்யர் ஆக இருந்த படி வேத சாஸ்திரம் சொன்ன அர்த்தம் தான் –
ஆச்சர்ய அபிமான சாரம் ஒன்றையே விளக்கி அருளுகிறார் இந்த பிரபந்தங்களில்
வேதத்தின் திரண்ட பொருள்-
சந்நியாசி ஆஸ்ரமம் கொண்டவர் -யாரையும் மயக்க வேண்டி சொல்ல வேண்டாம்
தேவ ராஜா முனி-அவனின் கருணை மூலம் வந்த அருளால் அருளுகிறார்
வரம் தரும் வரதன் சர்வ பூத சுக்ருதம் ஸ்ரீ நிதிம் -பிள்ளை லோகாசார்யர் இவர் போல்வாரை கொண்டு ஆச்சர்ய அபிமானம் பிரசாரம் பண்ணுகிறான் தேவ ;எருமால்- எதிராஜரையும் ஆக்கினவரே இவர் தானே -வரதராஜ ஸ்தவம் அருளி கூரத் ஆழ்வானும்-நன்றி அருளுகிறார்

வடுக நம்பி கிடாம்பி ஆச்சான்–மடப் பள்ளி கிடாம்பி ஆச்சான்-பால்  அமுதம் வடுக நம்பி  கூரத் ஆழ்வான்  புஸ்தக பண்டாரம் முதலி ஆண்டான் தென் அரங்கம் திருத்த -அத்யந்த திரு ஆராதன கைங்கர்யம் அருளாள பெருமாள் எம்பெருமானார்- பெருமாள் விபீஷணுக்கு அருளியது போல் காரேய் கருணை அண்ணன் போல் தம்பி–
புள்  பிள்ளைக்கு இறை தேடும் போல் சாரமான இவற்றை அருளுகிறார் நாவால் சொல்லி முடிக்க முடியாத பெருமை இவர் உடையது — தீம் தமிழில் அருளி –மா முனிகள் வியாக்யானம் சம்ஸ்க்ருத பிரமாணம் கொண்டு –மணி பிரவாள நடை –ஸ்ரீ வசன பூஷணம் -தேவ பெருமாள் ஆற்றின் ஒழுக்கு இருவரும்..-ஆச்சர்ய அபிமானமே உத்தாரம் -அடிப்படி ஞான பிரமேய சாரம் ..1371 அவதாரம்  மா முனிகள் -400 வருஷம் கழித்து பிரமாணம் அடிப்படை கூறினதர்க்கு -கடாஷம் குரு வழியாக பொய் இல்லா மா முனிகள் பூர்வாசார்யர்  பட்டம் இவர் உடன் முடியும் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -அநந்ய சரணத்வம் நம சப்த அர்த்தம்

நாராயணாய -அவனுக்கு என்று ஆக கடவேன் -பிரார்த்தனை-அநந்ய போக்யத்வம் —
அவன் நம்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தையும் பண்ண பிரார்த்திப்பது எப் பொழுதும் இதே –அங்கேயும் பொய் இதையே சொல்ல -கேட்ட உடனே பண்ணுவார் விஷய வைலஷ்ணண்யம் அறிந்த பின் -குருஷ்வ மாம் அனுசரம்-இளைய பெருமாள்—முகப்பே கூவி பணி கொள்ளாய்-அவர் கூவி தானே பாசுரம் அருளி கொண்டு இருக்கிறார் இருந்தும் இப் படி -தனக்காகவே இருக்க வேண்டும்-சந்தானம் புஷ்பம் சூடி கொள்பவனுக்கு -முதல் படி நமக்கும் அவனுக்கும் -அடுத்த படி அவன் ஆனந்தத்துக்கு –
வித்தம் இழவு= தனம் இழந்து போதல் -இன்பம் படுதல்– துன்பம் படுதல்– நோய் -வீ காலம் சரீர விநாச காலம் -ஆகிய இவை அனைத்தும் -தத்தம் அவையே தலை அளிக்கும் கர்மம் படி -களிப்பும் கவர்வும் அற்று—அனைத்தும் கர்மம் படி தானே நடக்கும்–நோய்க்கு அறிகுறி இவை நோய் தான் கர்மா-நோய் நாடி நோய் முதல் நாடி–இன்பம் அனுபவிக்க புண்யம் போகும்–துன்பம் அனுபவிக்க பாபம் போகும் –மேலும் கர்மம் சேர்கிறோம்–கர்மாதீனம்–அத்தை விடீர்-இதில் மனசு வைக்காமல்–தேக யாத்ரை -ஆத்ம யாத்ரை–என் நினைந்து போக்குவர் இப் போது–

திரு அடி கீழ் நண்ணுவார் நிழலும் அடி தாரும் போல் -இவரோ தலை மேல் ஏத்தி கொண்டாடுவார் -மூர்தானம்  பதி –மண பெண் சொல்லும் மந்த்ரம்-அழகிய மனவாளான் -இச்சியான்- வேறு பிரயோஜனம் மேல் இச்சை படாதவன் –இச்சியாது ஏத்த -அர்த்தம் கிரமம்  சப்த கிரமம் உலப்பில் கீர்த்தி அம்மான் பேசினார் எவ் அளவும் பேசினார் – ஏத்த இச்சியாது -பேசினார் பிறவி நீத்தார் -பேசி முடிக்க முடியாதவன்- அவன் கல்யாண குணங்களை வாயார பேச -எழில் வானத்து -உச்சியான் -ஸ்ரீ வைகுண்ட நிகேதன்-தன உச்சியில் வைத்து கொள்வானாம் –இச்சியாது ஏத்த -ச்வார்த்த புத்தி விட்டு  பரார்த்த மோஷம் -பரகத–அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்– அதனால் தான் இச்சியாது ஏத்த என்கிறார் அவன் முக மலர்ச்சியே பிரயோஜனம்-அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகர் உளானே -ஏத்த இவர்–அச்சுதா அமரர் ஏறே என்னும் அவர்-பாடும் இன்பத்துக்கு பாடினேன்-உன் திரு மகம் மலர தான் –

அநந்ய போகத்வம் அருளி செய்கிறார்-அடியேன் உனக்கு போகம் –பெருமான் நம் போகம் இல்லை -அஹம் அன்னம் அஹம் அன்னம்அஹம் அன்னம்அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத –அவர் ஆனந்தம் தான் நமக்கு போக்கியம் –கைங்கர்யமே புருஷார்த்தம் அது பண்ணும் கிரமம் சொல்லும் நாராயணாய பதம் –கைங்கர்யம் புருஷார்த்தம் நிஷ்கரிகிறார் 2 -9 3 -3பிரார்த்திக்கிறார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -அறுதி இட்டதை வேண்டினார் ஒழிவில் காலம் திரு வாய் மொழியில் —எம்மா ஒழிவில் நெடு வேய் பிராப்யம் சொல்ல வந்தவை –ததீய சேஷத்வம் நெடுமாற்கு அடிமை 10 -3 வேய் மறு –கைங்கர்யமும் களை அற்ற கைங்கர்யம் -பிரபல விரோதி அற்ற கைங்கர்யம் அருளுகிறார் வித்தம் இழவு–தனம் இழவு–தத் விநாசம் –வரவு இன்பம் இழவு துன்பம் மாறி மாறி வரும் என்கிறார் வயசும் ஆகும் மரணமும் வரும்-மனசு இதன் பால் ஈடு படும் -பகவத் கைங்கர்யம் இழந்து போவோம் -அகற்ற நீ வைத்த மாய வலை -நன்கு அறிந்தேன்–வகுத்தது கைங்கர்யம்- சரீரம் இருக்கும் வரை இவை கைங்கர்யம் இழக்க தானே மனசை வேறு வழியில் இழுத்து போகும் —சரீரமே வியாதி புரிந்து கொள்ள வேண்டும் விரோதியே சம்சாரம்புரிந்து இறைவன் கைங்கர்யம் இழிய வேண்டும் –வெவ் வேற கோஷ்ட்டி -சரீர யாத்ரை ஆத்ம யாத்ரை—புரிந்து கொண்டு விலகி இருந்தால்-கிருபாதீனம் கைங்கர்யம்-கர்மாதீனம் இவை–தங்கம் ஏறித்தா இறங்கித்தா விலை இல்லை இடுப்பிலா க்ரீடத்திலா அவனுக்கு பார்க்கலாம் -பிரதி கூல வஸ்து வந்துடுமோ பயம் வந்து வந்த பின் துக்கம் –ஆசை ராகம் -முதலில் சுகம் கிடைத்த பின் பீத ராக பய குரோதம் ஒழிக்க வேண்டும்–வீ காலம் வீழ்கின்ற காலம் -விநாச காலம்-மான மிலா பன்றி-அபிமானம் இல்லா /உபமானம் இலா பன்றி-ஆகாரம் பிரகாரம் உப காரம் போல்–பிராரப்த கர்ம பலன் வாராது ஒழியாது -கர்ம பலனும் க்ருபா பலனும் அனுபவித்தே கழிக்க வேண்டும் –இதில் மனசு வைக்க வேண்டாம் என்கிறார் -இது இல்லை என்று சொல்ல வில்லை–சம்சாரமே துக்கமே என்று அந்தமில் பேர் இன்பம் பெற மனசை கொள்ள வேண்டும்–இச்சியான் -வீடு முன் முற்றவும்–திவி வா புவி வா உன் இச்சை உன் சொத்து -திரு அடி நினைவு மட்டும் மாறாமல் இருக்க வேண்டும் நாம சந்கீர்தனதுக்கு பதிலாக இல்லை-மாணிக்கம் -கண்ட அவன் வியாபாரி -அரசன்-சூட்டி மகிழ்வது போல்-இந்த மாணிக்கம் போல் -மோஷம் வேணும் என்று இல்லாமல் சுயம் பிரயோஜனம் ஏத்துவது –யேதுதலே பிரயோஜனம் –வாசிக்க கைங்கர்யம் – அம்மானை  அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழி அம் கை அம்மானை ஏத்தாது –வாழாது ஒழிந்தேன்-ராமானுஜர் ஐதீகம் அன்று நான் இருந்து தலை வைத்து பெருமாள் காலை சுடாமல் இருக்க கொடுத்து வைக்க வில்லையே –நறும் குஞ்சி புன் சடையாய் -லஷ்மணன் இலை தளை போட்டு நடாத்தி போனதை கேட்டு –ஏத்தும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிறார்–வாசிகமாய் அங்கு அடிமை செய்தார் ஆழ்வார் –அனைத்து கைங்கர்யத்துக்கு உப லஷணம்–அம்பச்ய பாரே –நாகச்ய-சர்வேச்வரனுக்கு -சிரசா வாசியாம் ஞானி தனக்கு அந்தர் ஆத்மா கீதை-நித்ய முக்தர் கைங்கர்யம் பண்ணும் அவன் தன சிரசில்  கொள்வானாம் இங்கு மானச காகிக வாசக கைங்கர்யம் செய்தவனுக்கு கிட்டும் பாக்கியம் இத்தால் அருளுகிறார்
தத்தம் இறையின் வடிவு என்று தாள் இணையை

வைத்த வவரை வணங்கி இராப் -பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம்  நீதியால்
வந்திப்பார்க்கு உண்டு ஆழியாவான்  –9
அக்ஞானம் போகும் படி தாள் இணையை வைத்த ஆச்சர்யரை–ராமானுஜர் ஊமை மேல் -பெருமாளும் பரதன் மேல் வைத்தது போல்- தம் தம் இறை எங்கள் பெருமாள் எங்கள் பெருமாள் என்று அபிமானம் கொண்டு–வடிவு என்று -திவ்ய மங்கள விக்ரகம் -என்றே -பகவத் அவதாரம் ஆச்சர்ய தேவோ பவ -தேவு மற்று அறியேன்-கிரமமாக பற்றாமல் பித்தராய்-மனுஷ்ய ரூபம் சஜாதி என்று நிந்திப்பார்க்கு-நிந்தனை -மானுஷ பிரதி பத்தியே நிந்தனை –தனித்து வைய வேண்டாம்-ஏறா-கரை ஏற்றம் இல்லாத நிரயம்-நரகம்-சம்சாரம்–மாயா பிரக்ருது சத்யம் அசத்தியம் நித்யம் அநித்தியம் குழப்பும் சம்சாரம் நரகம் என்று புரியாமல் இருக்கிறான்–அழுந்தி விடுகிறான் –ஆச்சர்யரை உதாசீனம் படுத்தினால் வஸ்து உயர்த்தி புரிய  இல்லையே என்று அவன் கோபம் கொள்வான் -செம்மளிகன் -சக்கரத்தால் சாமாறு தலை கொண்டாய்- அம்பரீஷன் துர்வாசர் -திரு ஆழி படுத்தின பாடு தெரியுமே நீளா நரகம் தான் -நீதியால் -முறை தப்பாமல்-மனுஷ்யன் நினைவு-நீதி வானவர் -நித்யர் -இழியா வான்-திரும்பி வராத ஸ்ரீ வைகுண்டம் கீழ் எட்டு பாசுரங்களால் பத த்ரய அர்த்தம் பிரேமேய சாரம்  அருளி- தத் உபதேசித்த ஆச்சார்யர் வைபவம் அருளி செய்கிறார்-ஈஸ்வர பரிதி புண்யம் அப்ரீதி பாபம் -சஜாதி புத்தி பண்ணுவதே நிந்தை–தத் வைபவம் அறிந்து செவிப்பவரின் பல விஷயம் அருளுகிறார்

தம் தம் மெல் ஒற்றை வால் ஒற்றை ஆகி  தத்தம் ஆனது –எந்த பெருமாளை அபிமானித்து இருகிறார்களோ அவரே ஆச்சார்யர்..அவர் அவர் மதி விகர்ப்பால் -நம் பெருமாள் -அனைவருக்கும் -பெரிய பெருமாள்-நாராயணன் ஆனா படியாலே- நாரங்களுக்கு அயனம் அனைவரும் தம் சுவாமி சொல்லலாம் படி சாதாரண சேஷி –போது சேஷி-அசாதாரணம் -தனி–சாஷாத் நாரயனோ தேவ -ஆசார்யரே பகவத் அவதாரம்-சாஸ்திர பாணி-ஞான தீபம் ஏற்றி வைத்தவரே ஆச்சார்யர்-அனுக்ரகமே பண்ணி கொண்டு -அக்ஞானம் போக திரு அடி வைத்து –மனசை தெளிவு படுத்துபவர் ஆச்சார்யர் தானே -வஸ்து ஸ்வாபம் அறியாத பித்தர்–சாஸ்திரம் தெய்வமாக நினைத்து கொள் சொலிற்று முயன்றேன் -அது நிச்சயம் உன் பார்வை குறை தான் -சித்த குறை தான் -மானுஷ்ய பிரதி பத்தி பண்ணுவதே நிந்தனை–ஏறா நீள் நரகம் -ஏறுகிற நீள் நரகம் -எம பட்டணம்-ஒரு கால் கரை ஏற்றம் உண்டே -நரகம் என்றதும் ஏறி வரணும் -இங்கு சுக பட்டணம் என்று பித்தராய் இருக்கும் நித்ய சம்சாரிகள் ஆக போவார் ஆச்சர்ய அபிமானம் இல்லாமல் போவது குரூரம் என்று காட்டுகிறார்–விடாமல் கைங்கர்யம் செய்பவர்-மீளுதலா ஏதம் இலா நீள் வானம் அடைந்து அங்கு அடியார் குழாம் உடன்–தேவு மற்று உரியேன் என்பவர் –நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே  –ஆழ்வார் திரு நகரி இரண்டு மன்னர் ஆழ்வார் ஆதி பிரான் -அங்கு விஷ்வக் சேனர் இவர் இடம் கொடுத்து ஓர் அரசர் ஆழ்வார் மட்டுமே –சமான போகம்  பாகிகளாகி-சாம்யா பத்தி மோஷம்–அன்பிலா மூடரை நிந்திப்பார் அன்பால் ஆள் செய்பவரை ஆதரிக்கிறார்-ஆழ்வார் பகவான் விஷயத்தில் அருளினதை இவர் ஆச்சார்யர் விஷயத்தில் அருளுகிறார்
இறையும் உயிரும் இருவருக்கும் உள்ள

முறையும் முறையே மொழியும் –மறையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
வுணர்த்துவார் உண்டான போது –10
உணர்த்துவார் உண்டான போது ஆன -சத்தை அடைந்தன

இறையும்  ஜீவாத்மாவும் சம்பந்தமும் -அ வானவர் ம வானவர் -வேத வார்த்தை திரு மந்த்ரமும் அசத் ஆக இருந்தன

பகல் கண்டேன் நாரணனை கண்டேன்–சு ஸ்பஷ்டமாக சொல்லி ஆச்சார்யர்  பண்ணும் உபகார வைபவம் உலகு எல்லாம் அறியும் படி —

சகல வேத சாரம் திரு மந்த்ரம் -அளவில் சிறுத்து கீர்த்தியில் பெருத்து –என்னமோ ஆச்சர்ய பிரதி பத்தி -இறைவன் இருக்கிறான் நாமும் இருக்கிறோம் அவர் தான் வாழ்வு என்ற எண்ணம் இல்லாமல் இருக்கிறோம் -எல்லாம் அசத் அவர் உபதேசம் இல்லாத பொழுது -சு ஸ்பஷ்டமாக ஆத்ம பரமாத்மா வே இல்லை  திரு மந்த்ரமே இல்லை —இந்த பிர பத்தி இன்றி-சிறு மா மனிசராய் என்னை ஆண்டார்—நம் அருளாள பெருமாள் எம்பெருமானாரை போல்–எம்பெருமானார் விட்டு சென்ற சொத்தை ஆளும் கீர்த்தி– இறையும் உயிரும்  உபய சம்பந்தமும்  -மறையை மறைத்து வைத்து இருக்கும் திரு மந்த்ரமும் -நித்தியமாய் இருந்தாலும் சொல்லுவார் இல்லா விடில் –கிளி காவேரி விரஜா சேயம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் -சொல்லசொல்ல கிளி சோழன் -நம் இடம் அக்ஞானம் விலக ஆச்சார்யர் வேண்டுமே –அறிவிப்பார் இருக்கும் காலத்தில் உள-ஆயின -உபகார -அறியாதன அறிவித்த அத்தா -வைபவம்-பாட்டம் மழை பொழிந்து போட்டால் காடு விளைய பண்ணி-கடக கருத்தியம்    பண்ணி அருளின ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம்
திரு வாழும் தென் அரங்கம் சிறக்க வந்தான் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசர் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான பிரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரும் மதுர கவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு உடை மடம் சித்தைத்து விட்டான் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன்  தாள் வாழியே
அருள் கார்த்திகை பரணியோன் அனைத்து ஊழி வாழியே

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading