ஆரால் கடைந்து இடப் பட்டது அவன் காண்மின்
ஊரா நிரை மேய்த்து உலகெல்லாம் உண்டும் உமிழ்ந்தும்–27
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலை அல்குல் சீர் அடி செந்துவர்வாய்
வாரார் வன முலையாள் மத்தார பற்றி கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு—30
நாரார் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை
போரார் வேல் கண்ட மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
மோரார் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே–33
ஒராதவன் போல கிடந்தானை கண்டவளும்
சிலையும் கணையும் துணையாக ராமன் போக-வனமருவு வைதேகி பிரியல் உற்று–குரை கடலை அடல் அம்பால்-இலங்கை பாழ் ஆளாக படை பொருதான்-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருவிக் கிரமன்-அடி போற்றி -ராம-இலங்கை செற்றாய் அடி போற்றி- கிருஷ்ண -பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி- அது போல இங்கும் -மூன்றும்- வையம் அளந்தத இலங்கை பொடி பொடியாக்கி-கல்மாரி-அஞ்சாமுன் ரட்ஷித்தான் -குன்று எடுத்தாய் குணம் போற்றி–கோவர்த்தனம் தான் ரஷிக்கும் என்று சொன்னதை காட்ட அதை தூக்கி காட்டினான்-ஏழு வயசில் தூக்கி காட்டினான் -அகம் வோ பான்தவோ ஜாதகா -நான் உங்களில் ஒருவன்–கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்னும் -சோ ர்கின்றாள்– நான் சொல் எடுத்தது தான் கல் எடுத்ததை விட பெரிய கார்யம்–அமுதம் கடைந்ததே பெண் அமுது கொள்ள தான்-அரங்கனே–தரங்க நீர்-அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே — நெருக்க நீர் கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்-வரம் தான் கொடுக்க தெரியும்-கூப்பிடு கேட்க்கும் இடம்-குதித்த இடம் ஊட்டும் இடம் வளைத்த இடம் -பாட்டு கேட்க்கும் இடம் -எல்லாம் வகுத்த இடமே இருக்க கடவன்-ஆச்சார்யர் திருவடிகளே –– ஸ்ரீ வசன பூஷணம் -ஓர் இருவர் உண்டாகில்-ஆச்சர்ய அபிமானம் சொல்ல வந்தது-இது வரைபரத்வம் சொல்லி -இனி -எளிமை சொல்ல புகுந்தார்-சொவ்லப்யத்துக்கும் எல்லை காண முடியாது தாமோதரனை ஆமோ தரம் அறிய —வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை
தயிர் கடைவதே தாளம் போல கொண்டு-ஆடினான்-மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ–தயிர் கடையும் கோபி உடன் சேர்ந்து கடைக்கிறான்-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்–மாடு மேய்த்தால் உவப்பு —கன்று மேய்த்து இனிது உகப்பு-ஆமருவி அப்பன்-கன்றுகளை கூட்டி கொண்டே தேர் அழுந்தூர் வந்தார் -திரு மங்கை ஆழ்வார் தேவாதி ராஜன் என்று எண்ணி போக-கால் தளர-ஆ மருவி அப்பன் காட்ஷி காட்ட 40 பாசுரம் திருவுக்கும் திருவாகிய செல்வா என்று பாடுகிறார்/ அவன் காண்மின்- அந்த பரத்வனே-ஊரில் உள்ள பசுக்களை மேய்த்து -அதற்க்கு தான் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்தேன் என்று -ஆ நிரை மேய்த்து –உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்-மீண்டும் பரத்வம் சொல்லி-நடுவில் எளிமை சொல்லி-எல்லாம் ஓன்று தான் அவனுக்கு–
எல்லாம் அவ லீலை தான்-இதை சொல்ல தான் நடுவில் ஆ நிரை மேய்த்து/பசு மனுஷ பட்ஷி -ஆச்சார்யர் பற்றினவர் மோட்ஷம் போவார்-நடுவில் மனுஷ- அவன் கிருபை தான் முக்கியம்-இதை வலி உறுத்த தான் இந்த வரிசையில் சொன்னார்கள்//ராமானுஜ நூற்று அந்தாதியில் பொய்கை பூதம் பேய் ஆழ்வார் சொல்லி திரு பாண் ஆழ்வாரை சொல்லி திரு மழிசை ஆழ்வாரை சொன்னதும் -ஐவரும் ஊர் பேர் பலன் சொல்லாமல் பிர பந்தம் அருளினவர்கள்–இதை காட்ட தான் நடிவில் திரு பாண் ஆழ்வாரை வைத்தார்கள்–ஆங்கு ஆராததன்மையனாய்-பரம பதத்தில்–திருப்தி அடையாமல்- ஆங்கு ஒரு நாள்-நவநீத சோர சரித்ரம்-வெண்ணெய் திருட -உண்டுமிழ்ந்த கார்யம் திருப்தி இல்லையாம்—நான்கு சரித்ரம் சொல்லி அவன் காண்மின்-இவனே நோவு படுத்தினான் -ஊர் ஆ நிரை -மேய்த்து-உங்கள் தம் ஆ நிரை -கற்றுகரவை கணங்கள் பல -கூட்டம் கூட்டமாக பல கூட்டங்கள்-தங்கள் பசு குறைவால் ஊரார் பசு மேய்ப்பா போக வில்லை-அனைத்தையும் ரட்ஷித்து கோபாலன் பெயர் பெற–அவன் மேல் மேலும் ரட்ஷிக்க பாரிக்க நாமும் மேல் மேலும் கைங்கர்யம் பாரிக்க வேண்டும்–ராமன் பரிந்து நோக்கிய வானரங்களை இரவு முழுவதும் ரட்ஷித்தான்–நீண்ட அப் பெரிய வாய கண்கள்-உலகம் உயர்க்கெல்லாம் தாயாய் ரட்ஷிக்கும்–ஜகம் எல்லாம் ஏக தேசத்தில் அடங்கும் படி கண்கள் வளர்ந்தனவாம்-ரட்ஷனத்தில் பாரிப்பல் தானே ஏழு உலகும் அளந்தான்-சால பல நாள் உகந்து ஓர் உயிர் கள் காப்பான் கோல திரு மா மகள் உடன்--ஆ நிரை மேய்த்து உலகு உண்டு உமிழ்ந்து -கிள்ளி களைந்தான்-ஆண்டாள் ராவணனை முடித்ததை சொல்கிறாள்-அவன் பெருமைக்கு இது கிள்ளி களைந்தது போல் தான்-அகில புவன ஜன்ம ச்தேம பங்க லீலே-உலகம் யாவையும் -தாம் உள வாக்கலும் நீக்கலும் நீங்கலா -அலகிலா விளை ஆட்டு உடையவன்–ஆபத் சகத்வம்-உண்டு -நோவு படாமல் வைத்து நெருக்கு உண்டாகாமல் உமிழ்ந்து தயிர் உண்ட பொன் வயிறு—-எல்லாம் அவ லீலை-வாசி இன்றி- /கண்ணன் கழல்கள் நினைமினோ-பனை தாள் மத களிறு அட்டவன் -அதி மானுஷ சீல விருத்தம்
ஜடாயு மோட்ஷம்/இக் கரையிலே விபீஷண பட்டாபிஷேகம்/-மரியாத புருஷோத்தமன்–கண்ணன் செயல்கள்–ராசா கிரீடை–ஜன்ம கர்ம மே திவ்யம் நினைப்பவனுக்கு பிறவி இல்லை–அது இது உது எல்லாம் நைவிக்கும் அவன் செய்கை–பிரியம் அவனுக்கு புண்யம்/ராச கிரீடை பாட பாட பரம பாவனம் பவித்ரம்–அந்தர் ஆத்மா- ஆத்மா ராமன்-சரீர சம்பந்தம் இல்லை–பூஜ்யர்கள் செய்வது வரம்பு இல்லைபின் பற்றதக்க – நல் செயல் மட்டுமே நாம் செய்ய வேண்டும் –முற்றும் உண்ட கண்டம் கண்டீர்-ஆலில் இலை-அன்ன வசம் செய்யும் அம்மான் -ஞாலம் போனகம் பற்றி -ஆல் இலை பாலகன்–ஆல மா இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் -அகடிகதடா சாமர்த்தியம்-உள்ள சாப்பிட்டதில் ஒன்றின் மேல்-அந்தர் பகித்ச -வ்யாப்யோ- உள்ளும் புறமும் வியாபித்து -உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்–மார்கண்டேனயனும் கரியே–உண்டும் உமிழ்ந்தும் –கண்டும் தெளிகிளீர் -பொலிந்த நின்ற பிரான் ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே–பல் படி கால் வழி ஏற கண்டீர் -கூடி வானவர் ஏத்த நின்ற -அம்பரமும் பெரு நிலனும் –குல வரையும் -உண்ட கண்டன் -கொம்பு அமரும் –இலை மேல் பள்ளி கொண்டான்–ஆராத தன்மையன்-ஆறு விஷயம் சொல்லி–வெண்ணெய் சாப்பிட்டு போதும் என்று இருக்க மாட்டான்-பொருள் என்று இவ் உலகம் படைப்பான்-சோம்பாது மீண்டும் மீண்டும் –நியமனம் படி தான் நாம் இருந்தாலும் -அடையாமல் கர்ம வழியில் திரிந்து கொண்டு–அச்சுதன்-நழுவுதல் விட மாட்டான்-கோவிந்தா கூப்பிட்ட திரௌபதிக்கு – கழுத்தில் ஓலை கட்டி கொண்டு தூது நடந்ததும் தேர் நடாத்தி செத்தாரை மீட்டி –புருவம் காட்டிய இடத்தில் தேரை நடாத்தி -விரித்த குழல் காண சகியாதவன்-புடவை சுரந்ததும் -எல்லாம் பண்ணியும் -கடன் காரான் போல கலங்கி -கவலை உடன் போனானே-ஆராத தன்மையன்–உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–ஐஸ்வர்யம் அஷய கதிம் பரம பதம் வா -லஜ்ஜை -நமக என்று ஒரு தடவை சொல்லி சென்றவனுக்கு அனைத்தும் கொடுத்து -மாரில் போர் அரக்கன் –ஏறு சேவகனாற்க்கு -என்னையும் உளள் என்மின்கள்–ரஷிக்க வேண்டியவற்றில் ஓன்று மிச்சம் சொன்னால் போதும் பதறி அடித்து கொண்டு வருவான்–நீ மருவி அஞ்ச்சாதே–நல்கித்தான் ..ஓர் வாசகம் கொண்டு அருளாயே–சங்கு சக்கரம் சுமந்து -அடையாளம்-நாராயணன்-அதனை போரையும் ரஷிக்கும் பொறுப்பு பேர் நிலைக்க ஓடி வருவான் -உகந்து -கோபாலன்-ஆநிரையும்/வாக்கையும் -பூமியையும் பாலகம் பண்ணுவான்–ஆங்கு -தன்னை விச்வத்தித்து உடன் கிடந்தவன் மடி தடவி -தன காவல் சோர்வு -நெஞ்சு புண்பட்டு இருக்க -ரிஷிகள் தண்ட காரண்யத்தில்-ஒரு ரட்ஷகன் உளன்-என்றோ வந்து இருக்க வேண்டும் தபஸ் கொண்டு ரட்ஷித்து கொள்ளாமல் இவனை எதிர் பார்த்து இருந்த ஞான வான்களை–அவர்களே வந்து நோவு பட்டதை சொல்லும் அளவு கால தாமசம் பண்ணியதால் வெட்கி–ஆங்கு-ரட்ஷனம் இல்லாத தேசம்-பரம பதம்- இது தானே வருத்தத்துக்கு காரணம்-ஆங்கு ஆராத தன்மை–இங்கு ஆரிய தன்மை–காலம் செல்லு படி ஆகாத இடம் அங்கு-வந்தே வல்லபி ஜன வல்லபன் -கோபால விம்சதி-ஜெயந்தி சம்பவம்-ஆவணி அஷ்டமி ஸ்ரீ ஜெயந்தி வைஜயந்தி தரித்து விரஜை பூமி -ஒருத்தி மகனாய் பிறந்து -உன்னை அருத்தித்து -பிறந்தவாறும் -மாயங்கள்-அது இது உது என்னாலாவது அல்ல -உன் செய்கை நைவிக்கும் -இனிமை ஆகவும் மோட்ஷ ஹேது-ஜன்ம கர்ம மே திவ்யம் -மத கதா பிரீதி–மதுரா பாக்யமே கண்ணனாக உரு எடுத்து-பரகம கிஷோர் பாவ -உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்து ஆ நிரை மேய்த்து -பரத்வ சௌலப்யம்/—யஸ்ய பிரமச்ய ஷத்ரஜ்ச-விழுங்கி-மிருதுயு யஸ்ய உபசேஷனம்-ஊருகாய் போல–கறவைகள் பின் சென்று-நடந்து கொண்டே சாப்பிடுவது இடையர்-அமர்ந்தே உண்ண வேண்டும்–ஒரு நாள் ஆய்ப் பாடி-சூட்டு நன் மாலைகள்- தூயன ஏந்தி விண்ணோர்கள் நன் நீர் ஆட்டி – ஆங்கு ஓர் மாயையினால் –ஸ்ரீமான் நாராயணன்-மதுரா புரி-மாறன்பணித்த தமிழ் மறைக்கு -ஆறு அங்கம் கூற —அந்தூபம் தரா நிற்கவே ஆங்கு -ஓர் மாயையினால் -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமிலேற்று ..கோட்டுடிடை ஆடின கூத்து -அதே ஆங்கு இங்கு-சீர் ஆர் கலை அல்குல்- இடை படைத்தவள் சீர் அடி சென் துவர் வாய் வாரார் வன முலையாள் -யசோதை மத்தார பற்றி கொண்டு-ஏரார் இடை நோவ எத்தனை ஓர் போது –சீரார் தயிர் கடைந்து ..-ஆய பாடி-பரம பதம் போல காணும் -ஜன்ம விருத்தம் பிறப்பு ஆசாரம் இல்லை இரண்டு இடத்திலும்–வாழ்ச்சி வையத்தில் அன்றி வான் நாட்டில் இல்லை வையத்து வாழ்வீர்காள்-பிராமண புத்ரர்களை கூட்டி போய் -தேவிமார்கள் கண்ணனை காண -நித்யர் தான் இங்கு வர ஆசை கொள்ள/இங்கு உள்ளார் அங்கு போக ஆசை இல்லை-அவனே தேடி வர- திரு கமல பாதம் வந்து -சீரார் கலை-ஆடை சீர்மைதண் அம் தாமரை கண்ணா தவழ்ந்து மண்ணில் செம் போடி ஆடி வந்து என் மார்பில் மன்னிட பெற்றிலேன் அந்தோ–சீரார் கலை-பிள்ளை சீராமைக்கு -நல்ல புடவை-புழுதி அளைந்த சீர்மை-அழுக்கு கழித்து ஒப்பித்து இருக்கும் நித்யம்–அலங்காரம் பண்ணி கொண்டு-இவனுடைய பற்று மஞ்சளும் கண்ணும் மையுமாய் இருக்கும்–ஈசுவான்–சுமந்த்ரன் வர -வாசல் காப்பான் -சு அலன்க்ருதான் விருத்தர்கள் ராமனை அணைத்து கொண்டு அவன் அலங்காரம் ஏறி-விருத்தர்கள் பிறந்த நாள் தொடக்கம் ராமனை அறிந்தவர்கள் காஷாய -வேஷ்ட்டி பார்க்காமல் ராமனையே பார்த்து கொண்டு இருந்தவர்கள்/–செங்கல் பொடி கூரை- -மேனியை பேணாதவர்கள்-அலங்கரிப்பது ராமன் ஈசி கொண்டதால் வந்தது–அல்குல்-இடுப்பு- -சீர்மை-எடுத்து கொள்ளில் மருங்க இருத்திடும்–கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -வண்ண சிறு தொட்டில்–ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்–மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-பிள்ளை கால் மிருதுவானது -அதற்க்கு என்ன ஆகுமோ -பயம்-எடுத்து எடுத்து ஒசிந்த இடை சீர்மை-சேஷ்டிதம் நினைவு படுத்தும் கலை புடவை -பெரிய திரு நாள் சேவித்த முதலிகள் -அரையர் சேவை-வித்வான் வேஷ்ட்டி-அமிர்த மதனம்-21 வேஷ்ட்டி-இரட்டை- வைத்து இருப்பார்கள்–திரு மொழி திரு குறும் தாண்டகம் கேட்டது -மேலை திரு நாளுக்கு இருக்கட்டும் என்று வைத்து இருப்பார்கள் -முதலிகள்–சீர் திருவடி-அல்குல் சொல்லி திருவடி-காலை கட்டி கொண்டே இருக்கும்-தள்ளினால் காலை பற்ற – -மற்று அவள் தன் அருள் நினைந்தே இருக்குமே -அநந்ய கதித்வம்-பக்தன் நிலை-பரமாத்மா இங்கு பக்தி யசோதை திருவடி விடாமல் இருந்து காட்டி கொடுக்கிறான்–சீர் அடி சொல்லி சென் துவர் வாய்- காலை கட்டினால் உதருமே இவன் கெட்டியாக கட்டி கொண்டு ஸ்மிதம் பண்ணுமே வாய்-பெருமிதம் தோற்ற சிரிக்கிறாள்-உன் பவள வாய் காண்பேனே–அர்ச்சிராதி கதி போவதை அவனே காட்டி- ஸ்ரீ ரங்கத்தில் — உத்தம நம்பி-விரஜா நதியில்- தீர்த்தம் ஆடி-வைகுண்ட வாசல்- திரு பரிய வட்டம் சாத்தி -பக்தன் முக்தன் மாறுவதை காட்டி- திரு வாய் மொழி மண்டபம்-திரு மா மணி மண்டபம்-முன்னோடி -சிரித்தால்-வாரார் முலை-மார்பகத்தில் அபேஷை பண்ணும்–திருவடி பற்றினதும் சிரித்து உபேயமாக திருவடி கொடுப்பான்–நாகணை மிசை சரணே சரண்–அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்- முலை தருவது போல திருவடி தருவான்- திரு மேனி எல்லாம் உத்தேசம் தான் -இருந்தாலும் குழந்தைக்கு முலை போல பிர பன்னருக்கு திருவடி/–முடியுமானால் விடுவித்து கொள் என்று வாரார் வன முலை -கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அகத்தே-க்ரமம்–திரு மணம் -கை பிடிக்க மந்த்ரம் சொல்ல வாய் -அம்மி மிதிக்க கை வண்ணம்-மேல் பார்க்க வாய் கமலம் மந்த்ரம் கல் போல உறுதியாய் இரு-கண் பார்வை திருவடியில் விழுந்தாள்- முடி சோதி -அடி சோதியாய் -அல்குல் அரை சிவந்த ஆடை-..கட்டு உரைக்கில் கண் பாதம் கை ஒவ்வா -முதல் பாசுர வரிசை- முடி சோதி -ஸ்ரீ மன் நாராயணன் தெரிந்து கொண்டு திருவடியில் விழ தூக்கி மடியில் வைத்து கொள்வான் –சீர் அடி சென் துவர் வாய் வாரார் வன முலை யாள்–கார்த்திகை கார்த்திகை உடம்பு இருக்க தல குளிப்பார்கள் இடையர்-மூன்று பொழுதும் வெண்ணெய் கடைதல் ஆஸ்ரம தர்மம் சந்தா வந்தனம் பிராமணர்களுக்கு போல–
இவனுக்கு கடைந்தவள் -நன்கு அமைய வைத்தாள்-வருத்தம் கட்டுவிச்சி–பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையால் என் மகள் இருக்க -மேலை அகத்து நெருப்பு இறை பொழுது பேசி நின்றேன் –சாலக்ரமம் உடைய நம்பி பாலை சாய்த்து இட்டு பருகி போந்து நின்றான்–பாலும் வளையலும் போனதாம்- பெரிய திரு மொழி-8-1-சிலை இலங்கு- தெள்ளியீர் -கை வளையல் கொள்வது தக்கதோ-கை கூப்பினவள்-ஆலை கரும்பின் அனைய மொழி யசோதை நங்காய் உன் மகனை வர கூவாய்- போல இனிமையாக பேசுபவள் யசோதை-வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை -இவனே உண்டு-வெறும் கலத்தை ஓசை கேட்க்கும் கண்ணா பிரான் -பொத்தை உரல் -இவனுக்கே என்று வைப்பாள்-கவிழ்த்து அதன் மேல் ஏறி-வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்கி -போல -கள்வன் விரலோடு வாய் -திருட்டு பல நாள் திருட்டு–வைக்கிற போது பார்க்கிறான்- போரார் வேல் கண் -கூர்ந்து பார்ப்பாள் -முகவணை கல் எற்றுவாரை போல-சாரம் கட்டி-கோகுலம் ஏற்ற பிருந்தாவனம் இருந்து சாரம்–கட்டி ஏற்றுவார்களாம்–நன்கு அமைய போந்தனையும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி போல -இருக்கிற படி-வெண்ணெய் ஆசை இல்லாமல் இல்லை சபல புத்தி உண்டு களவின் மிகுதியால் ஆர கிடக்கிறான்-இப் பொழுது தான் நிறைய களவு உண்டு கிடக்கிறான்-பொய் உறக்கம்- அவன் உறங்கினான் என்று இவள் நினைக்கிறாள் உறங்குவான் போல் யோக நித்தரை அங்கு ஜகத்தை ரட்ஷிக்க இங்கு வெண்ணெய் திருட —
வேறு நினைவு இன்றி தூங்குகிறான்-அறிவுற்று-அசித் பதார்த்தம் -அறிவோடு எழுந்தால் போல-கல் கட்டை போல் இருந்தவன் உறங்கி உணர்ந்தவன் போல-அவளும் நம்பும் படி-கொட்டாவி விட்டு மூரி முழங்கிய படி–தாரர் தடம் தோள்-அகன்ற தாள் -உள் அளவும் கை நீட்டி -ஆராத வெண்ணெய் விழுங்கி–பக்தி கொண்டே உபாயம் உபேயம் போல வெண்ணெய் கொண்டே பசி வளர்த்து—மாலை உடன் வெண்ணெய் குடத்தில் கை விட்டான்–அணில் நிறைய தூரம் ஓடி மண் கொண்டு வர -அது போல உள் நீட்டி இவனும்-வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்-வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும் மெய்யன்–மெய் கலந்தானே–இடக் கை வல கையாக கலந்தான்- களவில் துணை புரிந்தாற்க்கு கலந்து உண்டான்-பாத்ரதோடு கை கலந்து உண்டான் –அறியா பிள்ளை- உள் அளவும்- ஜீயர் பட்டரை கேட்க-யசோதை-பானை விளிம்பில் கோவில் சாந்து கண்டாள்–கரைசல்-இன்றும் உண்டு-ஆராத வெண்ணெய் விழுங்கி-முன்னாடி சாபிட்டதர்க்கு இது மருந்து –நெய் ஊண் மருந்தே மா மாயன்-மண் கரைய -வெண்ணெயே அஜீரணம்- அதற்கும் அதே மருந்து–நிஸ் சேஷமாக விழுங்கி–கட சேஷம்-கோபி ஜனம் பரிகாசம்-களவேல்– களவு எழும் படி-மேலே ஈசி கொண்டே- கச்வம் பால -பல ராமன் தம்பி -என் வீடு -கன்று குட்டி காண வில்லை-தேடினேன் பார்த்தேன் இல்லை சொல்லி விட்டு போக இருக்கிறேன் -ஏலா பொய்கள் உரைப்பான்- காற்றில் கடியனாகிஒடி-பக்தன் உள்ளம் உருகி இருக்கும் பொழுது உண்டு உகக்கிறான் -கடையும் பொழுதே எழும் வெண்ணெய் போல இது–நன்றி இல்லாதவன் போல மோர் குடம்-ஆண்களையும் விருத்த ஸ்திரீகளையும் போல வெறுப்பான் –செல்வா சிறுமீர்காள் கண்ணனே ரட்ஷகன் தாரகம் என்று இருப்பார்கள் -அகங்காரம் அழிப்பான் போல–பதறி விழுந்தான்-தெய்வ யோகத்தால் பகவத் சங்கல்பம் முன் கிடந்த தானத்தே -படுக்கை உடன் பொய் திருடினது போல்-வெண்ணெய் ஓன்று இருக்கா என்று கேட்பவன் -ஒராதவன் போல் -பிரசங்கம் இல்லாத படி- மோர் வந்து நனைத்தாலும் அறியாமல்-கிடந்த கிடையில் இவனையே சங்கித்து–வைத்த குறி இல்லை பார்த்தால் வயிறு அடித்து இதனையும் தின்றால் வயிறு என்ன ஆகும் –என்று-
————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply