ஜாலம் பனிப்ப செறுத்து நன் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் லேறு பொரா நின்ற வானம் இது , திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூண்
காலம் கொலோ அறியேன் வினை ஆட்டியேன் காண்கின்றனவே
அவதாரிகை :துறை கால மயக்கு வர்ஷாவிலே வரக் கடவதாக காலம் குறித்து போன தலை மகன் வர்ஷா வாக செய்தே வராது ஒழிய இவ் வளவிலே தலை மகள் மோகிக்ற படியை கண்ட தோழி அவன் வரும் அளவும் இவள் சத்தையை தரிப்பிக்கை காக -” வர்ஷா வந்தது அன்று .. கறுத்தன இரண்டு ரிஷபம் அந்யோந்யம் விரோதத்தாலே பூமியில் இடம் போராமை ஆகாசத்திலே பிணன்குகிறது காண் “என்று பிரபஞ்சாபா லாபம் பண்ணி ஈசவரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் : இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகுகைக்கு செய்கிறான் இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில் நாயகி ஆற்றாளாய் முடியும் இவள் இல்லை யாகவே அவன் இல்லையாம் பின்னை விபூதியாகஇல்லையாம்..
பிரிவாற்றாமை தாங்காமல் நாயகி யான ஆழ்வாரும் தரிக்க மாட்டார் ..ஆழ்வார் இன்றி தோழியான ஸ்ரீ வைஷ்ணவர்களும் தரிக்க மாட்டார்கள்
ஜாலம் பனிப்ப செறுத்து–லோகம் அடங்க இவ் வதிர்ஷ்டியாலே குளிர்ந்து நடுங்குகிற படி பாராய் என்று நாயகி சொல்ல /அங்கன் அல்ல காண்..இவை அந்யோந்யம் பிணன்குகிற படியை கண்டு பீதியாலே நடுங்குகிற படி காண்
செறுத்து-அந்யோந்யம் சீற்றம் இருந்த படி ..
நன் நீர் இட்டு..நெடும் பொது வர்ஷித்த படியாலே தரையிலே அழுக்கு கழிந்து அள்ளி பருகலாம் படி பெருகுகிற நீரைக் கண்டு -இச் சுத்த மான ஜல சம்ருத்திக்கு அடி என் என்ன -விலஷனமான ருஷபங்கள் சீற்றத்தால் எப்போதும் நீர் இடுகிற படி காண்
கால் சிதைந்து.. வர்ஷத்தின் உடைய பூர்வ அவஸ்தையிலே கால் விழவு என்று சொல்லும் அளவு தவிர்ந்து வர்ஷத்தின் இடை மத்யமாம் ஆயிற்று ..
நீல வல் லேறு பொரா நின்ற வானம் இது–பூர்வ அவஸ்தையில் காற்று தவிர்ந்து நிலை நின்ற வர்ஷம் ஆயிற்று என்று சொல்ல அங்கன் அல்ல காண் கோபத்தாலே கால் சிதை கொள்ளுகிற படி காண் கறுத்து மிடுக்கை உடைத்தான ருஷபங்கள் இடை விடாதே பொருகிற ஆகாசம் காண்
. திருமால் கோலம் சுமந்து–.இச் சொல்லாலே இவற்றை சொல்லுவான் என் என்னில் இவை விலக்ஷன சப்த்தாலே சொல்ல கடவது காண்..முடிய பொய் சொல்லும் அது அன்றிக்கே தன்னை விச்வசிக்கைக்காக தானும்காலத்தை சம்சயிகிறாள் இத் திசை வந்தால் நாயகன் வரவு சம்பவிக்கும் என்னும் அத்தாலே
கொடுமை குழறு– அவனுக்கு போலியான வடிவோடு கூட நின்று நான் வந்த பின்பு அவன் வந்திலன் கண்டாயே என்று அவன் உடைய குற்றத்தை இவளுக்கு முன் இடுகிறார் போலே இரா நின்றது .
தண் பூண் காலம் கொலோ அறியேன்…குழறுகிற படி குளிர்ந்து அழகியதான காலமோ அறிகிலேன் சம்போக யோக்யமான காலம் தானோ என்னும் படி
.. வினை ஆட்டியேன் காண்கின்றனவே-அவன் உகப்பாரை கை விடுமவனாய் அன்று ..இவளுக்கு ஆசை இல்லாமை அன்று வர வேண்டும் தசை இல்லாமை அன்று பிராப்தி இல்லாமை அன்று காண்கிற என் பாப்பம் இத்தனை இறே மத பாபா மேவாத்ர நிமித்தம்..
ஸ்வாமி நம்பிள்ளை திரு வடிகளே சரணம்.
ஸ்வாமி பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Related
This entry was posted on October 11, 2010 at 7:31 pm and is filed under Acharyarkall, Namm Aazlvaar, Prabandha Amudhu. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply