ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ கண்ணன் அவதார பாசுரங்கள் —

ஸ்ரீ பெரியாழ்வார்  திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்தளற் ஆயிற்றே 1-1-1

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே 1-1-3

மத்தக் களிற்று வசுதேவர் தம் உடை சித்தம் பிரியாத தேவகி தன வயிற்றில் அததத்தின்
பத்தா நாள் தோன்றிய வச்சுதன் முத்த மிருந்த்தவா காணீரே முகிழ் நகையீர் ! வந்துகாணீரே 1-2-5

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வாசு தேவர் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்  கண்கள் இருந்தவா காணீரே  காண வளையீர் ! வந்து காணீரே 1-2-18

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
வுருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே ! பூண் முலையீர் ! வந்து காணீரே 1-2-17

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் 1-7-11

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயார் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சன் மாளப் புரட்டி 2-1-4

செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றி 2-1-6

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் 2-2-6

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் என் இளம் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான் 3-2-8

ஸ்ரீ திருப்பாவை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -5

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே ! -21

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -25

உன் தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் 28

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி

உன்னை மாமி தன மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே 2-1

நடை ஒன்றில்லா வுலகத்து நந்தகோபன் மகன் என்னும் கொடிய
கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு புடையும் பெயரகில்லேன் நான் 13-6

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை 14-3

ஸ்ரீ பெருமாள் திருமொழி

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ .. ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று என்று உன்னை
என் வாயிடை நிறைய  தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத் தாயரில் கடையாயின தாயே 7-1

உந்தை யாவன் என்று உரைப்ப நின்  செம் கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட 
நந்தன் பெற்றனன் நல் வினை இல்லா நங்கள் கோன் வசு தேவன் பெற்றிலனே 7-3

வாய் இடை முத்தம் தருதலும் .. வெகுளியாய் நின்று உரைக்கும் அவ உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே 7-5

ஸ்ரீ திரு சந்த விருத்தம்

ஆடகத்த பூண் முளை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் சாடுதைத்தொர் புள்ளதாவி  கள்ளதாய பேய்மகள் வீட வைத்த 36..

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தியான் 40

ஸ்ரீ பெரிய திருமொழி

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்   8-5-1

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை 8-8-9

பெற்றோர் தளை கழல பேர்ந்து 10-5-4

அங்கு ஓர் ஆய்க் குலத்துள் வளர்ந்து 11-1-4

அறியாதார்க்கு ஆன் ஆயனாகிப் போய் 11-5-5

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன் காதல் மகனை சிறை செய்த
வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என் நெஞ்சே ! நினை-92

ஸ்ரீ திரு விருத்தம்

சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந் தூபந் தரா நிற்கவே
அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்திமி  லேற்று வன் கூன் 
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே  -21

ஸ்ரீ பெரிய திருவந்தாதி

தானே தனித் தோன்றல் தன்னைப் பொன்று இல்லாதான்  -24

ஸ்ரீ திரு வாய் மொழி

சன்மம் பல பல செய்து வெளிப் பட்டு சங்கோடு சக்கரம் வில்
ஒண்மை வுடைய வுலக்கை ஒள் வாழ் தண்டு கொண்டு புள்ளூர்ந்து 3-10-1

துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து தன தெய்வ நிலை
உலகில் புகவுய்ககும் அம்மான் துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே 3-10-6

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டி இட்டுச் செய்து போன மாயங்களும் 5-10-1

வேண்டித் தேவர்  இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய்
அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்  செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே ? 6-4-3

கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய்  ஒருநாள் விண்ணும் மண்ணும் மகிழவே 6-9-1

பிறந்த மாயா ! பாரதம் பொருத மாயா ! 8-5-10

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே
வட மதுரைப் பிறந்தான்  திண்ணமா நும் உடைமை வுண்டேல் அவனடி சேர்த்து உய்ம்மினோ 
எண்ண வேண்டா நும்மதாதும் அவன் அன்றி மற்று இல்லையே 9-1-10

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading