ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்
(துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).
ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே
(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).
குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே
(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)
ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்
ஆசார்யபதம் எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய் வரவர முனியாய் வந்துதித்தார். நம் பெருமாள் இவருக்கு எம்பெருமானாரிடம் இருந்த ப்ரேமத்தின் கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்” என்று தாமருளிச் செய்த ஸ்ரீசைலேச தனியனில் பெயரிட்டருளினார். அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும் அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர் இந்த திவ்ய க்ரந்தத்தை அருளிச் செய்யாவிடில் நம்பிள்ளைக்குப் பின்னர் தோன்றிய ஆசாரியர்களின்-குறிப்பாக பெரிய ஜீயரின் வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும். ஆகவே நாம் பிள்ளை லோகார்ய் ஜீயர் விஷயத்தில் கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்தமாகிறது.
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அவர்களுக்குப் பின் அவதரித்த பூர்வாசாரியர்கள் வைபவங்களை நம்பிள்ளையின் திருவடியான பின்பழகிய பெருமாள் ஜீயர் ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்’? என்ற கரந்தத்தில் வெளியிட்டு அருளினார்.
அந்த க்ரந்தம் நம்பிள்ளை வைபவத்துடன் முடிவடைகிறது, அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல் வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் ஈடு முப்பத்தாறாயிரப்படியின் அவதாரம், நம்
பிள்ளை நியமனத்தால் அது பிராசாரமடையாம லிருந்தது, நம் பிள்ளை யருளால் வடக்குத் தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற இரு குமாரர்களின் அவதாரம்- அவர்கள் ரஹஸ்ய க்ரந்தங்கள் அருளிச் செய்தமை, பிள்ளை லோகாசாரியர் நம்பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால் விளைந்த கலாபத்தில் வலசையாய் எழுந்தருளப் பண்ணியது. ஆழ்வார் திரு நகரி நம்மாழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம் பெருமாளுடன் ஆழ்வார் ஸமாகமம், பிரிவு, இந்த விக்ரஹங்கள் சேமமாகப் பேணப்பட்ட வைபவங்கள் எல்லாம் இந் நூலில் முற்பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர் நியமனப்படி கூர குலோத்தம தாஸரால் திருத்தப்பட்டது.
பெருமாள் கோவிலில் சேம வைப்பாயிருந்த ஈடு முப்பத்தாறாயிரப்படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப் பிள்ளை பெறுதல், திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார் திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம் பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
ஆழ்வார் திருமேனியை எழுந்தருளப் பண்ணி ப்ரதிஷ்டிப்பித்தல்,மணவாள மா முனிகளின் அவதாரம், அவர் திருவாய்மொழிப்பிள்ளையிடம் ஆச்ரயித்தல் முதலான விஷயங்கள் அடைவே பேசப்பட்டுப் பின்னர் மணவாளமாமுனிகளின் வைபவம் பரக்கப் பேசப் பட்டுள்ளது-
—
பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத் தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும். பிள்ளை லோகம் ஜீயர், இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||
கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய், கருணை மிக்கரான பட்டர் நஞ்ஜீயர், நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்.
(கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:
கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே
(1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]
ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன் ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும் நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்களையும் அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப் பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள் குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்.
அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும் ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும் கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும் அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.
சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-
(1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந் சரணம் ப்ரபத்யே ॥-என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம் நஞ்ஜீயர்க்கும் நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம் பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்;
கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங் குரவை மணவாளர்
ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான் தாத ருடன்
போத மணமான முனி பொன்னடிகள் போற்றுவனே –
என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள் நித்யப்படி கால ஷேபம் நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள் ஸம்பந்தியான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவளைக் கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ் செய்யப் போகிறேன்? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப் பெண் பெரியவளானாள்; ஸஹ சயன கல்யாணம் பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்?’ என்று எல்லாரும் உள்ளே புக, உடம்பெல்லாம் புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்?” என்று கேட்டேன்-
அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன், இன்னுமொரு நாள் அந்தப் படியே யாச்சுது” என்று வ்யாகுலப்பட, பிள்ளையும் சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
*இப்படி யருளிச் செய்யுமோ? பெண் வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப் பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும், ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண் ருது ஸ்நாதையாய் வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும் அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கிட்ட வழைத்தருளி அவள் வயிற்றைத் தம் திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப் போலிருப்பானொரு பிள்ளையைப் பெறக் கடவாய் ” என்று ஆஸீர்வாதம் பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத் திருவீதிப் பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால் லோக மரியாதைக்கு நாம் சொன்னதற்காக இன்றிராக் கூடியிரும்’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்பந் தரித்து லோக விலஷணமாய் :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம் மாஸத்திலே ஐப்பசியில் திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப் பன்னிரண்டாம் நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர் பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக் கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும் போர வுகந்தருளி-தீர்த்தம், ஸ்ரீ சடகோபன், சந்தனம், ஸூகந்தம், திருமாலை ப்ரஸாதங்களும் பட்டுச் சிற்றாடையும் ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப் போலே யொரு பிள்ளை கொடுத்தீரே; இனி தம்மைப் போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவவதாரஞ் செய்தருளினார்.-
(1147 நம்பிள்ளை அவதாரம்
1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)
ஒருநாள் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும் நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்
ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப் பார்த்து *இத்தப் பெண் ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்?” என்ன, அவர்கள். சொன்னபடி –
**தாலு நா ள் தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’” என்ன. அது கேட்டு நம் பிள்ளையும் உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப் போலோரு பிள்ளையைப் பெறுவாயாக” என்று திருவுள்ளம் பற்றி யருளினர். அத்தைக் கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்-நமக்குக்குமாரனுண்டானால் ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம்’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்ஸரத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள் கர்ப்பவதியாய்ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம் மாஸத்தில் க்ரோதந வருஷம் ஐப்பசியில் திருவோணத்தில் ஒரு குமாரர் திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்டாம் தாள் நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர் என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின் திருநாமம் சாத்தி யருளினார்-பிள்ளையும் அது கேட்டு, வடக்குத் திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம் பெருமாளின் திருநாமம் சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர் நம்மைக் கேளாமல் இப்படிச் செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய் நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும் “தேவரீர் திருநாமம் சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர் உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும் உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன் இன்னுமொருவன் உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத் திருலீதிப் பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர் -திருவவதரிக்க, பிள்ளையும் அதுகேட்டு ஸந்துஷ்டராய், பத்துநாளும் கடத்த இரண்டாம் நாள் அவரை அழகிய மணவாளப் பெ௫மாள் நாயனார்” என்று நம் பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்.
இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய் ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும், அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர் திருத் தம்பியரான அழகிய மணவாளப் பெருமான் நாயனாரும், தத்வ ரஹஸ்யந் தொடங்கி அநேக ப்ரபந்தங்கள் இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்
தம்பியுடன் தாசரதியானுனும் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும்–பொங்கு புனல்
ஒங்கு முடும்பை யுலகாரியனும் அறந்
தாங்கு மணவாளனுமே தான்
என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய் யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர் திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார் பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய் :ஸம்பந்தாத் ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்.
அவர்களில்
கூர குலோத்தம தாஸ நாயனும்,
மணப் பாக்கத்து நம்பியும்
கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையும்,
கோட்டூரிலண்ணரும்,
விளாஞ்சோலைப் பிள்ளையும்,
ஸாத்விகைகளில் திருமலை யாழ்வார் திருத் தாயார் தொடக்கமான சில அம்மையார்களும்,
திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய் அகலாமலிருந்தார்கள். இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக் திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள் ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம் இன்னபடியும் இன்னபடியு மென்று அருளிச் செய்தருளினார் .
அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய் ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர் ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்.அவ்வளவே யன்றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத் ஸமாகமத்வம் ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான் பிள்னாளை எப்பெருமானார்
கடாக்ஷிக்க, அவரும் அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார் திருவுள்ளத்தை அடி யொற்றிக் கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ் செய்தருளினார்–
இன்பு, அவரும் மற்றுமுள்ள பெரியோர்களும் ‘இன்னம் இவ் வர்த்த விசேஷங்களுங் கூட்டி அனைவர்க்கும் ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
வையும்”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும் அத்தைத் திரு வுள்ளத்திலே வைத்துக் கொண்டு மாதவர் என்னும் திரு நாமத்தை யுடையராய், ஸகல சாஸ்த்ர வித்தமராய், ஸந்யஸித்து
வேதாந்தி என்னுந் திருநாமத்தை யுடையராய், பின்பு பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம் திருவடிகளுக்கு அந்தரங்கராயிருக்க, இவரை பட்டர் *’நம் ஜீயர்” என்று அபிமானித்துப் பெருமாளைத் தொழ வெழுந்தருள, பின்னும் சில ஜீயர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களும் நிறைந்து நிற்க, பெருமாள் உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப் பிடித்து, ‘வாரீர் நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர் திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்” என்று நியமித்தருள ஆறாயிரப்படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்தருளினார். அன்று முதல் இவருக்கு நஞ்சியர் என்று இதுவே திருநாமமாயிற்று,
பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம் வார்த்தக்யத்தை யடைந்தோம் -ஸ்வாமி பட்டருக்குச் சிறு வயஸ்ஸாகையாேலே தர்சந ஸ்திதிக்குக் குறைவில்லை, உத்தரோத்தரம் தழைக்கு மென்றிருந்தோம்; அது போய் இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர் திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும் அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர் சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப் பெருவீர்” என்றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும் ஸமாஹிதராய் திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர் திரு நாட்டைந்தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம் இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்கு இடம் கொடுக்கத் தக்க அர்த்த பூர்த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத் திருவுள்ளமாய் நல்ல லேகரி விசாரித்தருள:
அவ் வளலிலே -பருஷக சக்ரவர்த்தி திருமகன் கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய், பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும் ஆதரிக்கும் படியான வைபவத்தை யுடையராய் உபாதாந பரராய் தேவ ராஜர் என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப் பண்ணுவியும்* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்” என்று உகந்தருளி, மறு நாள் -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கேட்டருள, அவர்களும் உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன் என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக் கொடுத்து எழுத்து எழுதிக் காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர் திருவடிகளே சரணம், பட்டர் திருவடிகளே சரணம்” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும், திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‘ என்று விண்ணப்பம் செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும் அலேகத்தையும் ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்’ என்று விடை கொடுத்தருள; அவரும் அக்கரைக் கெழுந்தளுவதற்காகப் புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப் பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும் திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம் அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும் அலேகமும் திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர் போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்பட்டு, ‘ஆசார்யாபசாரம் வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்டு தேற்றி இவர் திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும் கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத் திருவாராதன மின்றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத் தாமும் நீராடி யருளித் திருமண்காப்பு சாத்திக் கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர் திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப் பண்ணும்;நாம் முன் நிற்கிறோம்” என்ன, “ஸ்ரீய:பதியாய்’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம் பண்ணி யருளினான்” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப் பெற்றுத் தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித் தாமும் அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக் கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து
ஸ்ரீ கோசத்தையும் ஸமர்ப்பிக்க, ஜீயரும் உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக் கூட்டிக் கொண்டு கடாக்ஷித்தருள: தாம் ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்களும் அர்த்தங்களும் நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும் உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்? இதென்ன சாதுர்யம்?” என்று கேட்க, அவர் இஸ் ஸந்நிதியினின்றும் புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம் நடந்த படியே தப்பாமல் விண்ணப்பஞ் செய்யக் கேட்டருளி -ஜீயரும் உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ் செல்வத்தைத் திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம் பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத் திருவாய் மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன் தரிசனச்தை வளர்த்துக் கொண்டு போரும்” என்று நியமித்து-பட்டர் சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்திருந்த மோதிரத்தை நம்பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங் கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள். இப்படி தர்சந ப்ரவர்த்தகராய் ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்தை யுடையராய், அத்புத வ்யாக்யான வைபவராய் எழுந்தருளி யிருக்கிறபடிகைக் கண்டு அநேகம் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆச்ரயித்து, நம்பெருமாள் கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள் அனேகமா யிருக்கும்.
இப்போது பெரிய வாச்சான் பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர் அன்றைக்கன்றாடம் பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும் அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்த்திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச் செய்தே
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஐயரையும் (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப் பிள்ளையையும் (ஈ யுண்ணி மாதவர்) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான் பிள்ளையும்! அடியேனுங்கூட ஸேவித்து வருகிறேன்” என்ன, “ஆனால் பெருக்காம்” என்றருளிச் செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம் ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப் (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்-வடக்குத் திருவீதிப் பிள்ளை- சேர்த்துக் கட்டி வைக்க; ஒரு நாள் நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன் புது?!” என்று கேட்க, ஐயர், ”தேவரீர் ஸாதித்தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக் குறிப்பாக இட்டு வைத்தேன்” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில் திருவாராதனம் நீரே செய்யும்” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும் போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும் சிறியாழ்வான் அப் பிள்ளையையும் “நீங்கள் இந்த விரசைப் பார்த்துக் கொண்டிருங்கோள்” என்று சடக்கென வமுது செய்தருளித் தாமுமங்கே யெழுந்தருளி பின்னும் தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக் கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர் அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச் செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர் இப்படிச் செய்ததென்? ஆச்சான் பிள்ளை பண்ணலாமோ? நாமும் பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச் செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர் நடு நடுங்கி சோகித்து மோஹித்துத் தெளித்து ‘ஐயா! அடியேன் அப்படிச் செய்திலேன்; விஸ்மரித்தால் பார்த்துக் கொள்ளச் செய்தேன்” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம் வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்தோம்:’ என்றருளிச் செய்து, ‘ ‘நீர் ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம் ஜீயர் ப்ரஸாதமாகச் சொன்ன அர்த்தத்தில் ஒரு-ச-து-போடாமல் எழுதினீர்;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்?” என்று மிகவும் ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம் வேணும்”! என்று “திருவுள்ளம் தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின் திருநாமத்தை யுடையராய் நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்!? என்ன ஐயரும் மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்”” என்று தீர்க்க ப்ரணாமம் பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச் சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம் படி பண்ணி இத்தை பஹு முகமாகப் ப்ரவர்த்திப்பியும்” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன் வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம் முன் நிற்கும் திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும், துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பர் ஸ்வப்நத்திலே பேரருளாளப் பெருமாள்,
ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥
உலகத்தைக் காப்பாற்றுவதில் ஊற்றமுடைய திருவனந்தாழ்வான் [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும் அவதரிக்கப் போகிறார். [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள் ஸதாசாரமும் ஸத்துவ குணமும் தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச் செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான் எம்பெருமானருடைய அவதாரமானாப்போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப் போகிறார் -அவர் முப்பத்தாறாயிரப் பெருக்கராய் இத்தை ப்ரவர்த்திப்பிக்கப் புகுகிறார் -நீர் ஓராண் வழியாய் நடததிப் போரும்” என்று பட்டோலைக் கட்டை ப்ரஸாதித்தருளினார். அவரும் அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப் பண்ணித் தம் குமாரருக்குப் பிரஸாதித்தருளினார்.
நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள் ஒரு நாள் தளிகைக்குச் செய்ய இளைய தேவிகள் ஒரு நாள் தளிகைக்குச் செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள் மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்” என்ன, அவளும் அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர் நம்பெருமாளுடைய அபராவதாரம் அடியேனுக்கு ஆசார்யர்” என்றும், திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யங்கள் ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம் * என்றும் நினைத்திருப்பன்” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்திருக்கும்படி யென்?” என்று கேட்டருள , அவளும் லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர் பர்த்தா,அடியேன் பார்யை என்றன்றோ நினைத்திருக்கும் படி என்று விண்ணப்பஞ் செய்யக் .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப் பெருமாள் தளிகைக்கு ப்ரதி தினம் செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய் தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச் செய்தால் எம்பெருமானைத் திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித் தமக்கபிமதராய் உத்க்ருஷ்ட ஜந்ம ஜாதராய் வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர் கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர். இத்தால் இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும் நியத ஸத் பாத கர ஸ்பர்சமும் அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.
நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர் திருவவதரிக்க, முதலிகள் வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்பேராச்சான், ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார் திருவவதாரம்”!என்று உகந்தருளினார். இத்தால் ஆசார்ய புத்ரன் அத்ய ஜாதனேயாகிலும் பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும் ஜாத கர்மம் செய்து, பன்னிரண்டாம் நாள் நாம கரணத்திலே தூவி யம்புள் என்று திரு நாமம் சாத்தி யருளினார்.
நம்பிள்ளை பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே யொரு நாள் எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள் என் செய்யக் கடவது?‘ என்று விண்ணப்பஞ் செய்ய பிள்ளையும், ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும் (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்தூல சரீரம் கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும் கைங்கர்ய ப்ராப்திக்கும் நடுவே அவ் வவஸ்தையைப் பிறப்பித்து எம்பெருமான் காரியம் செய்யும்” என்றருளிச் செய்தார். இதுக்கு ப்ரமாணம் ‘ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள் யமனுடைய தேசத்தை யடையார் ] என்றும், அவன் தமர் எவ் வினையராகிலும் எம் கோனவன் தமரே என்றொழிவதல்லால் நமன் தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர் [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில் ஊன்றிப் போரும் எம் பெருமான் ஸ்தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப் பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத் தன் திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும் வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்டாக்கிக் கைக் கொண்டருளும் படி.
நம்பிள்ளை பெரிய கோயில் வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில் முதற்பதத்துக்குத் தாத்பர்யமருளிச் செய்ய வேணும் என்ன, அவரும், “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கினால் குலந்தரும்:’ என்றருளினார். அதாவது, பண்டைக் குலத்தைத் தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில் குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய் ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார் ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்றபடி-
*அவதாரமிருக்கும்படி யென்?’ என்று முதலிகள் நம்பிள்ளையைக் கேட்க, பிள்ளையும், *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்’என்றருளினார். “முதலிகளும் “அது வென்?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்; பெற்றாலும் ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்’? என்றருளினார். ஆகையால் ஆசார்யவானான
அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான் தேடிப் பார்க்கிலும் துர் லபனென்றபடி.
முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில் வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத் திரு நாமமாகைக் கடி யென்?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும், ஸ்ரீ மான் பிதாவாகையாலும், ஸ்ரீ மாதா வாகையாலும் ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும் ஸ்ரீமான் இவர்கள் வைபவ மறிகையாலும், ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும், ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும் இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச் செய்தாரிறே.
நம் பிள்ளையைச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘*ப்ரபந்நனுக்குத் தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும், “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
விச்வஸித்திருப்பான். த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந் தானால் எம்பெருமானைப் பற்றியிருக்கும்; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்; இனி எம்பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன் திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள் இவனளவிலே பிச்சேறி யிருக்கும். இவன் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும் இவன் மேல பிச்சேறி யிருக்கும். இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும் இவன் விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்- என்றருளிச் செய்தார்,
நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள் ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்; ப்ராண ஸமாநர்; திருஷ்டி ஸமாநர்,பாஹு ஸமாநர்; ஆபரண ஸமாநர்; ஆயுத ஸமாநர்; பாத ஸமாநர்”
பாத ரேகா ஸமாநர்; பாதுகா ஸமாநர்; சாயா ஸமாநர்; ஜிஹ்வா ஸமாநர்,
அதெங்ஙகனே யென்னில்;
*ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம் (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப் பற்றவும்-ஆத்ம ஸமாநர்-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
*மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம் உத், 90-32)[பாண்டவர்கள் எனது ப்ராண பூதர்கள் அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும் -ப்ராண ஸமாநர்-;
*யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள் எனக்குக் கண்ணான செல்வங்கள் ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்ருஷ்டித்வத்தைப் பற்றவும்–திருஷ்டி ஸமாநர்-;
*ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர் இளைய பெருமாள்] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப் பற்றவும்)–பாஹு ஸமாநர்;-
சாப மாதாயா ஆத்ம விபூஷணம் [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர் பாவத்தைப் பற்றவும்–ஆபரண ஸமாநர்;-;
*அலர்மகள் கேளவன் கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற் 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப் பற்றவும்-ஆயுத ஸமாநர்=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம் [ஜ்ஞானிகளின் இதயங்கள் எம்பெரூமானுக்கு நடமாடும் ஸ்ரீவிமானங்கள் –கர்ப்ப க்ருஹங்கள் ] நடையாவுடைத் திருநாரணன் (திருவாய் 3-7-4) என்கிற கௌரவத்தைப் பற்றவும்-பாத ஸமாநர்–;
ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்”! என்கிற பாதுகா த்வத்தைப் பற்றவும்-பாதுகா ஸமாநர்–;
*நிழலும் அடி தாறுமானோம் (பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப் பற்றவும்–பாத ரேகா ஸமாநர்-சாயா ஸமாநர்-;
*ரஸாந் பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும் பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன் ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப் பற்றவும் -ஜிஹ்வா ஸமாநர் -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்,-எங்ஙனே யென்னில் ஸத்கார யோக்யரென்றும்,
ஸஹவாஸ யோக்யரென்றும், ஸதாநுபவ யோக்யரென்றும்.
இதில் ஸத்கார யோக்யராவார்-ரூப தாம ப்ராதாத்யர், உச்சாரண ப்ராதாந்யர்,அபிமானப் ப்ராதாந்யர், ஸஹவாஸ யோக்யராவார்–ஜ்ஞாத ப்ராதாந்யர்,அனுஷ்டான ப்ராதாந்யர், அங்கீகார ப்ராதாந்யர்,
ஸதாநுபவ யோக்யராவார் – ஆர்த்தி ப்ராதாந்யர், அபிநிவேச ப்ராதாந்யர்- அபிருசி ப்ராதாந்யர்.
இதில் த்யாஜ்யோபாதேயத்தைத் தெளிய வறியாதவர்களாய் ஸம்பந்த மாத்ரமே யானவர்கள் நமஸ்கார யோக்யர்-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்ம சாரிகள் *போதயந்த:பரஸ்பரம் (கீதை 10-9) பண்ண யோக்யர், ஆசார்யனும், ஸதாசார்ய ஸத்ருசரும் உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.
(நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளிச் செய்தது)
இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும் அபராதம் பண்ணாதொழிவான். ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்கும் ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும் -ப்ரஹ்மவிதக்ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம் உடலும் உயிரும் பிரியும்படியாய் ஸத்தாஹாநியாம்படி யாயுமிருக்கும். *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம் ப்ரஹ்ம விதோ வமாநாத் [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன் ] என்றும், *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில் அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும் நாசமடைவிக்கும்] என்றும் இந்த பாகவதாபசார விஷயமாக
ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள் கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள் பாத தூளி பட்டு இவ் வுலகம் பூதமாம் படி) *ஸ்ரீதரஸன் தொல் புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம் பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள் ஓடுகிறார்கள், தேவர்கள் வணங்குகிறார்கள்] என்றும், *உன் தமர்க் கென்றும் நமன் தமர் கள்ளர் போல் (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக் கண்ட மாத்திரத்தில் க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள் காடேறி விழுந் தாடவும், ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார் அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும் படியுமிறே இவர்கள் வைபவமிருப்பது என்றருளினாரிறே–
ஒருகால் யதி ராஜ தாஸர் பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக் கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள் ‘(இதுக்கடியென்?” என்று கேட்க,பிள்ளையும், ‘த்ருஷ்டத்தில் தனக்குண்டான ஸம்பத்தைத் தனக்கே என்கை நரக ப்ராயம்; தனக்கும் எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்; அவனுக்கும் அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்” என்றருளினார். ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத் ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில் நிச்சல் பாலொடு (திரு வாய் 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத் திருமாலடியார்களைப் பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)
இப்படி பிள்ளை *ஊரும் நாடும் உலகமுமெல்லாம் கலி யிருள் நீங்கிப் பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகும்படி எல்லாரையும் திருத்தித் திருமாலுக்கே யாக்கிச் சிறிது காலம் வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் அவஸந்நராய் முதலிகளெல்லாரையும் தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள் சேஷமும் அங்கீ கரித்தருளி திருநாட்டுக் கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள் ப்ரஹ்மவல்லி, சூழ் விசும்பணிமுகில் முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் திருமடியிலே திருமுடியையும் பின்பழகிய பெருமாள் ஜீயர் திருமடியிலே திருவடிகளையும் வைத்துக் கண் வளர்ந் தருளி நஞ்சியர் திருவடிகளை த்யாநித்துக் கொண்டு ப்ரஹ்ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான் பிள்ளை, நடுவில் திருவிதிப் பிளளை பட்டர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் முதலாக எல்லாரும் கடலோசைப் போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய் மோஹித்துக் கிடந்து சதைர் மோஹந் தெளிந்து சோகாகுலராய் கண்ணீர் பெரு வெள்ள மிட்டுப் பெருக பஹுதா ப்ரலாபித்துத் தங்களிலே தேறி நின்று,பரியட்டம் திருமாலை யுடனே பெருமாள் பரிகர மனைத்தும் வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர் தூவியம் புள்ளைக் கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும் திருமுடி விளக்குவித்துக் கொள்ள;
நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரும் திருமுடி விளக்க வைத்துக் கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர் (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப் பார்தது, திருக் கலி கன்றி தாஸர் பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூர குலத்திலே பிறந்தவரொருவர் தலை க்ஷவரம் பண்ணுவித்துக் கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும் அவரைப் பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள் கூர குலத்துக்கிழுக்காய்ப் பிறந்தேனே; இக் குறையை நீர் என்றைக்குத் தீர்த்துக் கொள்ளக் கடவீர்?’” என்று வ்யதிரேகம் சொல்லிப் போக விட, அவர் இத்தைப் பொறுக்க மாட்டாமல் பெருமாள் ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ் செய்ய அத்தைப் பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச் செய்யலாமோ?” என்ன, பட்டரும், “பெரிய திருவோலக்த்திலே அடியேன் செய்த முறை கேட்டைப் பொறுத்தருள வேணும்” என்று தண்டனிட பெருமாளும் ‘இதென் நினைத்துச் சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும், ‘-பிள்ளையையும் அடியேனையும் பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக் கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால் அவர் திருவடிகளில் ஆச்ரயித்த நான் ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின் தாஸ்ய க்ருதயமான மோவாயும் முன்கையும் வபதம் பண்ணுவித்துக் கொள்ள வேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம் ஷவரம் பண்ணுவித்துக் கொண்டதுக்கு தேவரீர் முனிந்தருளக் கூடுமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய் பட்டருக்கு தீர்த்தம் திருமாலையுடனே பரியட்டமும் ப்ரஸாதித்து உபலாளித்துத் திருமாளிகை யேறப் போக விட்டருளினார். அதந்தரம் பிள்ளைக்குப் பெருக்கத் திருவத்யயதம் நடத்தி யருளினார்கள்.
லோகாசார்யன் என்று திரு நாமம் பெற்ற தன்னேற்றமும்-அரிய வருளிச்செயல் பொருள்களறிந்துரைக்கப் பெற்ற தன்னேற்றமும் – பரமபதம் தம் சிறுமுறிக்குச் செல்லப் பெற்ற தன்னேற்றமும் நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
இவர் தனியன்,
வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலி வைரி தாஸம்
[நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும் உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக் கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –
நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம் ஸூக்தி மயம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥
[யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில் அந்வயித்தவர்கள் ஸ்ரீவைகுண்டத்திலும் ஸம்ஸாரத்திலும் செல்லாத மனத்தினராய் அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்) சிஷ்யரான நம்பிள்ளையின் திருவடிகளை வணங்குகிறேன்]
வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட் யந்தராணாம் ப்ரதமா பவந்தி |
ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்ஸ ஒக்தி மஹார்ணவாய
[யாதொரு நம்பிள்ளையின் கால க்ஷேப கோஷ்டியில் பிறக்கும் வார்த்தைகளில் பிஷையாவது பெற்றவர் (சிறிதாவது பெற்றால் அது கொண்டு) இதர கோஷ்டிகளில் தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள் நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர் என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன் ]
நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணாம் புயமென் தலைக் கணிந்தே-இயல்பா சாத்துமுறைப் பாடல்-
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில் க்ருஜ்ஞ்தை எத்தனை நாள் நடக்கும்?” என்று கேட்க, பட்டரும் “நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும் என்ன, அவரும், ஆசார்ய விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய் விட்டார்–
—
பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
அனந்தரம் பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக் கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம் நிர்வஹித்தருளா நிற்க, நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் பெரியவாச்சான் பிள்ளையைப் பார்த்தருளி, ”குரு பரம்பரையையும் த்வயத்தையும் உபதேசித்தவர்களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்’ என்று ப்ரஸாதித்தீர். பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள் உம்மை அநுவர்த்திக்கிறதற்கு என் நினைந்திருப்பீர்?’” என்று கேட்டருள, ஆச்சான் பிள்ளையும், அடியேன் அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும், ஸ்ரீவைஷ்ணவத்வம் உண்டென்று நினைத்திருப்பன், ஈச்வரன் பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன் என்று நினைத்திருக்கும். (இனி இவர்கள் என் நினைத்திருக்கிறார்கள்?! என்று கூசிக் கொண்டிருக்கும். இவர்கள் என்னைக் கண்டு அநுவர்த்திக்கையாலே இவர்கள் பக்ஷத்தாலும் ஸ்ரீவைஷ்ணவத்வம் உண்டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும் அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்’ ”என்றருளினார் ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும் ஸ்வ வைஷ்ணவத்வம் ஸித்தமாய், ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம் சொல்லப்பட்டது.
ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரள விருந்து “நாம் லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில் லீலைக்கு விஷயமாகிறோம்” என்றருளிச் செய்தார். [ஆச்சான் பிள்ளையும் -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும், நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும் அவன் இனிமைக்கு விஷயமாகிறார்கள். அஹங்கார மமகார வச்யராய் இருந்து வைத்து அக் குறையுங் கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள் லீலைக்கு விஷயமாகிறார்கள்- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம் அறிய வேணுமென்றிருக்கிற நாம் (முமுஷு)௮வன் இரக்கத்துக்கு விஷயமாகிறோம் என்றருளிச் செய்தார்]. ஆக, ஸர்வ சேதனரைரயும்,சர்வேஸ்வரன் அஹம் மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –
ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே சிலர் ஸ்ரீவைஷ்ணவர்கள்-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்” என்ன, அவரும், ‘*கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும், தெளிவிக்கறவனும் தெளிகிறவனும் தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில் கலங்குகிறவன்-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்–ஸம்ஸாரிகள்; தெளிவிக்கிறான்–ஆசாரியன்; தெளிகிறான் சேதனன்; தெளிந்திருக்கிறான்–ஈச்வரன், ஆகையாலே ஆசார்யோபதேசேந தெளிந்தவன் கலங்குகிற தன்னையும் கலக்குகிற ப்ரக்ருதியையும் கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும் தஞ்சமன்றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும் தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகை காண் இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்” என்றருளிச் செய்தாராயிற்று.
ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ”ஸ்வரூப பாரதந்தர்யமிருக்கும்படி. என்” என்று கேட்க, அவர் அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில் கந்தலற்று உபேயத்தில் த்வரை விஞ்சி யிருக்கை காண் பாரதந்தர்ய ஜ்ஞாநம்’” என்றருளினார். இத்தால் நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம் பர ப்ரேரிதமா மத்தனை யிறே.
(த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)
ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும் ‘*முமுஷு தசையில் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்; முக்த தசையில் ப்ராப்யாநுரூமாயிருக்கம் ஸ்வரூபம்” என்றருளிச் செய்தார்.
(போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)
நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார் இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய்ப் போருகிறவர்கள் ஒரு கால் ராக த்வேஷம் கொண்டாடி, அதிலொருவர் ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச் சென்று மற்றவருடைய குற்றம் விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர், “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ஆச்சான் பிள்ளையும், “அவர்கள் சொல்லுகிறபடி கேளீர்: தண்ட தரனான யமன்“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்
போகாதீர்கள் என்று தனதாட்களிடம் என்றான். **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர் பணி-௨லகில் யார் தான் குற்றம் செய்தவரில்லை- என்றாள் பிராட்டி; ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் [அடியார்கள் குற்றம் செய்தாராகில் அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான். ஆழ்வார்கள், அவன் தமர் ! எவ்வினையராகிலும் எங் கோனன் தமரே–(முதல்திரு, 35)என்றார்கள். இப்படி யிருக்க, ”அவர் குற்றம் இவரை யொழியச் சொல்லுவார் யார்?” என்றருளினார். இத்தால் சக்திமான்களுமுட்பட ததீய தோஷம் சொல்லக் கூசுவர்கள் என்றபடி,
ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ஒருவர் பகவத் வைபவஞ் சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்” என்றருளிச் செய்தார். இத்தால் பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம் சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)
ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் பெரிய பிள்ளையும் ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப் போருகிற காலத்திலே,இவர் சோகார்த்தராக, ஆச்சான் பிள்ளை ‘*நீர் சோகிக்கிற தென்?’। என்ன, அவரும், :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன் என்னை இன்னம் தள்ளப் போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர் கேடு? என்றிருந்தாய், உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில் பல் பிறவிப் பெருமான் (திருவாய், 2-9-5) என்றும் , *பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் (திருவாய், 2-10-11) என்றும், *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும் ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல் அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத் ஸ்வாமியாகைக் கன்றோ?” என்றருளினார். “ஆகையால் ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப் பெறுகை அலப்ய லாபம் என்றும், எதிர் சூழல் புக்குத் தேடித் திரியுவன் தானே, “பேறும் இழவும் தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்”-என்றபடி-
அநந்தரம் பெரியாழ்வார் திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச் செயல்களுக்கெல்லாம் வ்யாக்யாநம் செய்து லோகத்தை வாழ்வித்தருளினார், இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும் தெரிய வியாக்கி யானங்கள் செய்வால் அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச் செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர் அருளிச் செய்ததும், பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம், தத்வ த்ரய நிர்ணயம் முதலான அநேக ரஹஸ்ய மருளிச் செய்தருளினார்.
ஒருநாள் பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்களைக் கண்டு ”படிக்கிறதென்?” என்று கேட்க அவர்களும் “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம் (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும் அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான் பின்ளைக்கு விண்ணப்பம் செய்ய, அவரும் மந்தஸ்மிதம் செய்து, அவர்கள் உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்?” என்று பரிஹஸித்து விட்டார்கள்’ என்றருளிச் செய்ய இவருமத்தைக் கேட்டு லஜ்ஜாவிஷ்டராய், சலம் பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர் (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும் பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும் அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய் “’முஸல கிஸலயம்” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய் ஆஸ்ரம ஸ்வீகாரம் செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும் சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் என்று ப்ரஸித்தரான இவர் பூர்வர்கள் செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம் திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும் ஸுக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம் உரை செய்தருளினார். ஜீயரும் உபதேசரத்தின மாலையில் *அன்போடழகிய மணவாளச் சீயர் என்று தொடங்கி–ஏதமில் பன்னீராயிரம் (45) என்றித்தையு மருளிச் செய்தார் இறே -பின்னையும் தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம் முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும் அருளிச் செய்து உபகரித்தருளினார்,
ஆச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளையும் தீபாதுத்பந்ந ப்ரதீபம் போலே தர்சநம் நிர்வஹித்துக் கொண்டு போர மதிப்புடையராய் ஸகல வித்யாபாரங்கதர்’‘ என்கிற விருதை
யுடையவராய், :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்” என்று பெளண்டரீக யாகம் செய்து ப்ரஸித்தராய், தத்வ ஸங்க்ரஹம், முக்த போகா வலீ: ஜ்நார்ணவம், ஸாரீரம் முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
யத் கடாஷண லக்ஷ்யாணாம் ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥
யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன் எப்போதும் ஸுலபனாயிருக்கிறானோ, யாமுனர் குமாரராய், ஸ்ரீமானான க்ருஷ்ணர் என்கிற
திரு நாமத்தை யுடையரான அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன்-
நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம் சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்–
ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம் ஸ்ம்ருதி பால மித்ரம் பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி ॥
வேதங்களின் ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய் ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய் தாமரை போல் ப்ரகாசிக்கும் பகவச் சரணங்களுக்குப் புராதந பந்துவாய், ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின் அரசராய் அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின் குமாரராய்ப் பரம காருணிகராய் அஸ்மதாசார்யரான நாயனாராச்சான் பிள்ளையை வணங்குகிறேன் –
வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திரு நக்ஷத்ரம் மகம்-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர் தனியன்– ்
ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம் |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம் ।
அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம் | வாதி கேஸரிணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥
ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும் ஜீவர்களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித் தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன். (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்) ப்ரீதியினல் நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்.]
–
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
நம் பிள்ளை பக்கல் ஈடு முப்பத்தாறாயிரமும் பெற்ற ஈயுண்ணி மாதவப் பெருமாள் தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் பின்னும் வேண்டும் ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்த்தகர் ஆக்கி அருளினார்.ஸ்ரீபத்ம நாபப் பெருமாளும் தமக்கு அந்தரங்க சிஷ்யராய், கோல வராஹ நாயனார் என்ற திருநாமமுடைய நாலூர் பிள்ளைக்குத் தம் பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும் பின்னும் வேண்டின தர்ஸநார்த்தங்களெல்லாம் ப்ரஸாதித் தருளினார். நாலூர் பிள்ளையும் தம் தல்ல மகனாரான நாலூராச்சான் பிள்ளைக்கு ஸ்வாசார்யரான பத்ம நாபப் பெருமாள் ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்தங்களையும் ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித் தருளினார். நாலுராச்சான் பிள்ளையும் மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும், திரு நாராயண புரத் தாயிக்கும் -திருவாய் மொழி யாச்சான் பிள்ளைக்கும் திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார் என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தங்கையில், பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம் நல்ல மகனார்க் கவர் தாம் மேலோர்க்கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர் தாமே தெளிய வருளிச் செய்தாரிறே –
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் திரு நஷத்ரம் ஹஸ்தம்.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர் தனியன்–
வரதார்ய க்ருபா பாத்ரம் ஸ்ரீமாதவ குரும் பஜே |
குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம் ॥
நம்மாழ்வார் அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால் தெளித்த ஜ்ஞானமுடையவராய் வரதார்யரென்ற நம்பிள்ளையின் தயைக்கு கொள்கலமான் ஈ யுண்ணிமாதவப் பெருமாளை வணங்கிப் போற்றுகிறேன்-
பத்ம நாபப் பெருமாள் திரு நக்ஷத்ரம் ஸ்வாதி– இவர் தனியன்–
யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம் |
ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥
யார் ஓருவரால் நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்திலுண்டான அர்த்த விசேஷங்களின் தெளிவான அறிவாகிற அமுதக் கடலில் ௮மிழ்ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப் பண்ணக் கடவோம்-
நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம் புஷ்யம், இவர் தனியன்…
ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக் முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம் ॥
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர் அந்த ஈட்டை நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில் வாஸத்தால் ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம் பற்றுகிறேன்-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)
நாலுராச்சான் பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்
நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1
ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும் நாலூர் பிள்ளையின் குமாரராய் குண பூர்ணராம் நாலூரில் வாஸம் பண்ணுமவரான தேவ ராஜர் என்னும் நாலூர் ஆச்சான் பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்-
கோலாதிபாத் பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம் ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம் |
த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம் பஜே தம்
யாவரொருவர் பூர்வர்களான ஆரியர்களால் ரஹஸ்ய மாகக் காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின் வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும் நாலூர்ப் பிள்ளை யிடத்தில் நின்றும் பெற்று மூவர் மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில் ப்ரஸித்தி யடையப் பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான் பிள்ளையை), நான் போற்றி வணங்குகிறேன் –
ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்–
ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥
எந்த திருவாய்மொழியின் பாஷ்யமான ஈட்டின் ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று
–
வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
அநந்தரம் வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம் நிர்வஹித்தருளுகிற காலத்தில் ஸ்ரீபாதத்து முதலிகள் –ஆத்ம ஸ்வருபமிருக்கும் படியென்?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும், –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்” என்றிறே” என்றருளினார். இத்தால் ‘ஈஸ்வரோஹம்-என்கிற அஹங்காரம் பற்றற்றால் ஆத்மாவுக்கு தாஸோஹம் என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம் என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும் தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம்மடியாரடியோங்களே (திருவாய், 3-7-10) என்றிருக்க வேணுமென்றருளியும், (அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டு கொண்டே.”–10-6-7-)
எல்லா வேதங்களையும் எல்லா சாஸ்த்ரங்களையும் எல்லா ஆழ்வார்கள் பாசுரங்களையும் எல்லா ஆசார்யர்கள் வசநங்களையும் ஆராயந்து பார்த்த விடத்தில் ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில் நித்யத்வமும் நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம் ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்.
இத்தால், ஆசார்யாபிமானம் நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும் கை புகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும், தத் விஷயத்தில மஹா விச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம் :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும் நிரநுதாபமான பாகவதாபசாரம் ஸ்வ ஸத்தையை விளக்குப் பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர் மாட்டல் செய்து நஸிப்பிக்கு மென்றபடி
இப்படி ஸர்வரையும் உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர் தம் குமாரரான பிள்ளை லோகாசார்யரையும், அவர் திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரையும் தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப் பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார் . பிள்ளை லோகாசாரியரும், உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்பட்டு க்லேஸித்துத் தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்தாலே சரம கைங்கர்யம் செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம் கொண்டாடிப் பெருக்கத் திருவத்யயனமும் நடத்தி யருளினார்.
வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம் ஆனி-ஸ்வாதி–இவர் தனியன்- –
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வ ஸித்திர பூந் மம ॥
யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல் எனக்கு ஸமஸ்த புருஷார்த்த ஸித்தியும் உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருவடித் தாமரைகளை எப்போதும் தலையால் வணங்குகிறேன்-
பிள்ளை லோகாசார்யர் வைபவம்
அநந்தரம் நம்மாழ்வார் திருவவதார மென்னலாம்படியான வைபவமுடையவராய் நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த் திருவவதரித்திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும், அவருடைய அருளே தாரகமாய் வளர்ந்த அவர் திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய் இணைத் தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும் பெருமாளையும் போலவும் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் (பெரியாழ்வார் திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் போலவும்,
தம்பி யுடன் தாசரதி யானுனுஞ் சங்க வண்ண
நம்பி யுடன் பின்னடந்து வந்தானும் –பொங்கு புனல்
ஒங்கு முடும்பை உலகாரியனும் அறந்
தாங்கு மணவாளனுமே தான்
என்னும்படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர் தம் பரம க்ருபையாலே பெண்ணும் பேதையும் அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம், தனி த்வ்யம் தனி சரமம், பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ஸார ஸங்க்ரஹம், தத்வ த்ரயம், தத்வ சேகரம், ப்ரபந்த பரித்ராணம், ப்ரமேய சேகரம், அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம். நவவித ஸம்பந்தம், நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம் முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும் கூடி வாழ்ந்தருளுங் காலத்திலே பிள்ளை லோகாசாரியர் திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்தம தாஸர் நாயனும் -மணப் பாக்கத்து நம்பியாரும், கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையும், கோட்டூரில் அண்ணரும், திருமலை யாழ்வாரும், விளாஞ் சோலைப் பிள்ளையும்-ஸாத்விகைகளில் திருமலை யாழ்வார் திருத் தாயார் முதலான சில அம்மைமார்களும் திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய், ‘“ஸம்பந்தாத் ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்பரராய் *ஓழிவில் காலப் படியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியா திருந்தார்கள்–
(நம்பெருமாளை -1311-முதல் -1313-1323- பங்குனி ப்ரஹ்மோத்சவம் எட்டாம் நாள் -கிளம்பி -ப்ரஹ்மத்துக்கு வேர்க்க -விசிறச் சொல்லி -அம்மையார் விசிற)
இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச் செய்து
சீராருந் திருவத்தியூர் தன்னில் நின்றும் சிறந்த மணப்பாக்கத் துறு நம்பியாரை
ஏராருங் கனவிலுபதேசத்தால் முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நீர்
சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால் சேர்ந்ததற் பின் அவர்க்கு
நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால் முன்னம் விரித்த கலை வசன பூஷண மா நிதியே
என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்.
அநந்தரம் நாயனாரும் ”வாக் பூஷணம் வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச் செய்து தோதவத்தித் தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக் கூட்டிப் பின்னையு மருளிச் செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள் தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும் ஆசார்ய ஹ்ருதயம் பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்; அவரும் திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்.
மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றார் ஆய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று-தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல்
பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர்
ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்
ஈட்டுத் தனியன் வியாக்கியானத்தில் ‘பிள்ளை லோகஞ் சீயர் அருளிச் செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர், நாயனாராச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர் இவர்கள் நால்வரும் ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச் செய்தேயும், பிள்ளை லோகாசாரியர் ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச் செய்கையாலும்; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்; அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவாய் மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்ய ஹ்ருதயமருளிச் செய்கையாலும் வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர் பன்னீராயிரப்படியையும், திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும் அருளிச் செய்கையாலும் இவர்களுடைய தனியன்களும் அநு சந்திக்கிறார்கள் ‘நம் ஆசார்யர்கள்” என்று பிள்ளை லோகாசாரியரும் நாயனாரும் ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும் அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத் தமது தமப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை வாயிலாகக் கேட்டே யிருப்பார்கள்-
இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம் ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும், அவருடைய திருத்
தமப்பனாரான அண்ணரும் அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும் கூர குலோத்தம தாஸரிடத்திலும் ஜ்ஞாநோபஜீவநம் பண்ணி உஜ்ஜீவித்தார்கள். இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும் உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார் திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்–
இப்படி யெழுந்தருளி யிருக்கும் பிள்ளை லோகாசார்யர் பரம ரஹஸ்யமுமாய் திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும் அதிகரித்து ஈடேறலாம் படி யருளிச் செய்து லோகத்தை
வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம் பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள் நம் பெருமாள் பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷணமென்று
ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம் தர்சனத்தை யெல்லாம் வ்யர்த்தமாக்கினார்” என்று பெருமாளுடனே கோள் சொல்ல; அத்தைக் கேட்ட பெருமாளும் சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர் நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இவ் விசேஷங் கேட்டு பெருமாள் ஸந்நிதியில் சென்றவாறே பெருமாளும், அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம் அநந்தமான அவதாரம் பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள் ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்?” என்று வினவி யருள; அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச் செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள் ஸ்ரோதாவாய் தாம் வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப் பொடி யாழ்வார் திருமாலை சொன்னாற் போலே இவர் ஆசார்ய ஹ்ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள் மிகவுகந்தருளி. “இதுவும் நாம் செய்ததொன்றன்றோ?” என்று கோள் சொன்னவர்களை வாரி யடித்துத் தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம் ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம் ப்ரஸாதித்து ௨பலாலித்துத் திருமாளிகை யேற போக விட்டருளினார்.-இவ் வைபவங் கேட்டுப் பிள்ளை லோகாசார்யரும் -வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்
கொண்டருளினார்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம் நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச் செய்யப்பட்டதென மணவாளமா முனிகள் ஸாதித்தருளி யிருப்பதால் இங்கு காணும் ஐதிஹ்யம் ப்ராமாணிகமா? என்ற ஐயம் எழுகிறது பின்புள்ளார் எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம் என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள் தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்யான அவதாரிகையில் ஸாதித்தருஞம் பங்க்திகள் வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும் பல ப்ரபந்த்தங்கள் அருளிச் செய்த பிள்ளை லோகாசார்யர், ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்களில் அவர்கள் தாங்கள் கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப் போந்தவையாய் அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும் ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும், பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்
பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்.
முன்பே பேரருளாளப் பெருமாள் (கச்சித் தேவப் பெருமாள்) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம் பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத் தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர் போய் இரண்டாற்றுக்கும் நடுவே வர்த்தியும்; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம் விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக் கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்த்தங்களையும் அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச் செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள் அந்தக் கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம் ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்த்தங்களை யவர்களுக் கருளிச் செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப் பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர் போர வித்தராய் உள்ளினின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்*அவரோ நீர்?” [அந்த பேரருளாகப்பெருமாள் தானோ நீர் என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள் தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித் தருளினபடியையும், இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்-இன்னமுமங்கே சொல்லுகிறோமென் றருளிச் செய்தபடியையும், லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே, பெருமாள் அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்
மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச் சொன்னோமென்று நீர் பிள்ளைக்குச் சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள் திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால் அப்படியே செய்வோம்” என்று” திருவுள்ளம் பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே, [இதுவரை மணவாளமாமுனிகளின் ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ் செய்தருளினார்.இத்தை நினைத்திறே –தன் சீரால் வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ் சில– என்று ஜீயரும் ௮நு சந்தித்தருளினார். [உபதேச ரத்ன மாலை-47]-
பின்பு பிள்ளைலோகாசாரியரும் நாயனாரும் அதி விரக்தராய் வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார் சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும் பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும் சோகார்த்தராய் அவர் திருமுடியைத் தம் மடியிலே வைத்துக் கொண்டு
மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன் வைகுந்தஞ் சென்றக்கால்–மாமென்று
தொட்டுரைத்த சொல்லுந் துயந் தன்னின் ஆழ் பொருளும்
எட்டெழுத்து மிங்குரைப்பாரார்
என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள் தேற்றத் தேறி நின்று நாயனாருக்குச் சரம கைங்கர்யஞ் செய்து திருவத்யயனமும் நடத்தி யருளினார்.
இவர் தனியன்
திராவிடாம்நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம் |
ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுநா ॥
க்ருஷ்ணரென்னும் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய் ஆசார்ய ஹ்ருதயம் என்ற க்ரந்தம்
அருளிச் செய்யப் பட்டது
(1323 தொடங்கி 48 ஆண்டுகள் கழித்து வந்தால் 12 ஆண்டுகள் பின்பே -சித்திரை திருநாள் தொடர்ந்து நடந்தது)
நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்–
ஸர்வ சேதநரு முஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்பித்துக் கொண்டு பிள்ளை லோகாசார்யர் பெருமாளுக்கு ப்ராண பூதரா யெழுந்தருளி யிருக்குங் காலத்தில் ஸ்ரீ ரங்கம் (கலாபகாலத்தில் )துருஷ்காக்ராந்தமாய்க் குடி யிருக்கப் போகாமல் பெருமாள் நாய்ச்சி மாருடனே் புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத் திரு முன்பே கல் காப்புச் சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப் பண்ணி வைத்து, சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல் காநமடைந்து (பெருமாள் திரு4-6) என்றும் *தம்பியோடு தாமொருவர் தம் துணைவி காதல் துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள் தம் அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும், வாளும் வில்லுங் கொண்டு பெருமாளைப் பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார் சக்கரஞ் சங்கு சுமந் திங்கும் மோடொரு பாடுழல்வானோ ரடியான் (திருவாய் 8-3-7)
என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த் தாமும் முதலிகளும் ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம் பெருமாளும், ப்ரவிஸ்யது மஹாரண்யம் ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்) என்றும் ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம் (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான் மனைவியுடனும் லஷ்மணனுடனும் சூரியன் மேக மண்டலத்தைப் புகுவது போல வநம் புகுந்தனர்-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய் *சிலைக் கை வேடர் திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு (திருவாபரணம் களவு போக தன்னைக் காட்டி யருளி) ஸர்வஸ்வதாநம் பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர் மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில் அவர்களுக்குத் தாமும் (ரஹஸ்யத்ரயர்த்தங்கள் பிரசாதித்து அருளி )ஸர்வஸ்வதாநம் பண்ணி யருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர் வந்து அவர் பதம் பணிந்து பச்சை கட்ட,
கலகமிகு பஞ்சமுடன் கள்ளர் பற்றில் கத்திருவிர் காரியப் பேரொருவர் வந்து
பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல் வாங்கி நீங்க
நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல் நம்பெருமாளும் உம்பருடன் நயந்து வாழும்
இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –-என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:
உலகாரியன் திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரித்தல்
ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில் பெருமாளுடனே யெழுந்தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண் வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள் “எங்களுக்குத் தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ் செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிடத்தில் திருவுள்ளம் ப்ரஸந்நமாய்க் குடி.புகுந்து, ஒரு மிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்
மதுரை ராஜ்யாதிபத்யம் பண்ணுகிறவர் அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்வதித் தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்யங்களையும் அர்த்தங்களையும் நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர குலோத்தம தாஸ நாயனாருக்கும், –திருவாய் மொழியை ப்ரஸாதிக்கும்படி திருக் கண்ணங்குடிப் பிள்ளைக்கும் திருபுட்குழி ஜீயருக்கும், –மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்,–
ஸப்த காதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ் சோலைப் பிள்ளைக்கும் நியமித்தருளி,
ஆனி தனில் வளர்பஷத் தாறிரண்டாம் நாள் தன்னில், ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர் திவத்து, வானவர்கள் தற் சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது வீற்றிருக்கத் திருவுள்ளமாய், விளாஞ்சோலைப் பிள்ளையைத் திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக் கெழுந்தருளினார். முதலிகள் சோகார்த்தராய் மிகவும் க்லேஸித்துத் தேறி, பெருமாள் திருப்பரிவட்டம் திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப் பள்ளிப் படுத்துத் திருவத்யயநத்தைப் பெருக்க நடத்தி யருளினார்கள்.
பிள்ளை லோகாசாரியர் திரு நக்ஷத்ரம் ஐப்பசியில் திருவோணம், அவர் தனியன்,
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥
ஸம்ஸாரமாகிற பாம்பினால் கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய், வடக்குத் திருவீதப் பிள்ளையின் திருக் குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்-
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply