ஸ்ரீ ராமாயணத்தில் ஸரணாகதி-

சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான். அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி “பார்த்தன் மாமணித் தேர்விடும் பாகனாய்” நன்கமர்ந்து கீதையாம் அமுத மொழியில் அதையே பலவாறாக மொழிந்து அருளினான்.  

“வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்சந்தி” என்பது வேதவாக்யம். இதன் பொருள் “கொல்லத் தகுந்த குற்றமே செய்திருந்தாலும் அடிபணிந் தவனைக் காட்டிக் கொடுப்பதில்லை” என்கிறது மறை. இதை விளக்கவே ஸ்ரீராமகிருஷ்ண அவதாரம் தோன்றிற்று. 

சுவாமி ஸ்ரீதேசிகன் தாம் இயற்றி அருளிய ‘ஸ்ரீஅபயப்ரதான ஸாரம்’ என்ற நூலில், ”ஸ்ரீமத் ராமாயணத்தில் சரணாகதி அஞ்சுரு வாணியாய் கோர்க்கப் பெற்றது” என்கிறார். 

ஸ்ரீமத் ராமாயணமே ஒரு தேர் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய சட்டங்களையெல்லாம் சேர்த்து இடையிலே ஒரு கடை ஆணி போடப்பட்டுள்ளது. அக்கடையாணிதான் “சரணாகதி” என்பது. ”சரணாகதி என்கிற ஆணியை ராமாயணத்திலிருந்து எடுத்துவிட்டால் ஸ்ரீமத் ராமாயணமாகிற தேர் – நிலைகுலைந்து விழுந்துவிடும் என்கிறார் அவர். 

ஸ்ரீபாலகாண்டத்தில் தேவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் செய்யும் சரணாகதி. அதே பாலகாண்டத்தில் ஸ்ரீதசரத சக்ரவர்த்தி, ஸ்ரீபரசுராமரிடம் செய்யும் சரணாகதி. 

ஸ்ரீஅயோத்யா காண்டத்தில் ஸ்ரீசீதா பிராட்டியின் முன்பு ஸ்ரீலக்ஷ்மணன், ஸ்ரீராமபிரானிடம் செய்யும் சரணாகதி. அதே அயோத்யா காண்டத்தில் ஸ்ரீவசிஷ்டர் முதலானோர்களை முன்னிட்டுக் கொண்டு சித்ரகூட பர்வதத்தில் ஸ்ரீபரதன், ஸ்ரீராம பிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீஆரண்ய காண்டத்தில் தபோதனர்களான மகரிஷிகள் அனைவரும் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

அடுத்து ஸ்ரீகிஷ்கிந்தா காண்டத்தில் வானரத் தலைவனான ஸ்ரீசுக்ரீவன் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீசுந்தர காண்டத்தில் ஸ்ரீவிபீஷணனின் மகளான திரிஜடை ஸ்ரீசீதாபிராட்டியிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீயுத்த காண்டத்தில் ஸ்ரீவிபீஷணன், ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. அதே யுத்த காண்டத்தில் ஸ்ரீராமன், சமுத்ரராஜனிடம் செய்த சரணாகதி. ஸ்ரீஉத்தர காண்டத்தில் தேவர்கள், திருப்பாற்கடலில் ஸ்ரீமந் நாராயணனிடம் செய்த சரணாகதி. 

இப்படி ஸ்ரீமத் ராமாயணத்தில் காண்டம் தோறும் சரணாகதி அழுத்தம், திருத்தமாகப் பேசப்பட்டுள்ளதை நன்கு கவனிக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீமத் ராமாயணத்திற்கு ”ஸ்ரீசரணாகதி சாஸ்த்திரம்” என்றே பெயர் அமைந்தது. 

ஒரு பெரும் சபையில் பண்டிதர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். அதில் சில பேர் தர்க்கம் படித்தவர்கள். சிலர் வ்யாகரணம் படித்தவர்கள். சில பேர் மீமாம்ஸா சாஸ்த்திரம் படித்தவர்கள். இவர்களுக்கிடையில் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. அவர்கள் இவரிடம், “கஸ்மிந் சாஸ்த்ரே ப்ரவேசோஸ்தி?” – ‘நீங்கள் எந்த சாஸ்த்திரத்தில் வல்லுனர்?’ என்று கேட்டார்கள். 

அதற்கு அவர், “சரணாகதி சாஸ்த்ரே ” – சரணாகதி சாஸ்த்திரத்தில் என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அத்துணை சாஸ்த்திர வல்லுனர்களும் திகைத்தனர். தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை என்ற சாஸ்திரங்கள் உலகில் புகழ்பெற்றவைகள். ஆனால் ‘நீங்கள் சொல்லும் சரணாகதி சாஸ்த்திரம் என்பதை நாங்கள் கேள்விப் பட்டதே இல்லையே!’ என்றனர். 

அப்போதுதான் இந்தப் புதுவித்வான், “இது தெரியாதா உங்களுக்கு? மற்ற சாஸ்திரங்கள் கற்று பிரயோஜனமில்லையே! ”சரணாகதி சாஸ்த்திரம்” தெரியவில்லை என்றால் மற்றைய சாஸ்த்திரங்கள் இருந்தும் பயனில்லை. எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தாலும், ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்பது இதன் மூலம் காட்டப் பட்டது.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
‘சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்’

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

அறந்தலை நிறுத்தி வேதமருள்சுரந் தறைந்த நீதித்
திறந் தெரிந்துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்–பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (அத்தியாயம் 4 ஸ்லோகம் 8)

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில்லேந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
-யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.

தேவர்ஷி–பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்–ஸ்ரீமத் பாகவதம் (11.5.41)
எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாத கமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை.”

தன்னுடைய வாக்கைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு துளஸீதாஸர் ராமனின் புகழை கூறுகிறார். “ராமனின் சரிதம் கரை காண முடியாத கடல். இந்தச் சரிதத்தை கேட்பவர்களுக்கு எப்பொழுதும் உற்சாகம்தான். ஆனந்தம்தான். ஏனெனில் ராமனுடைய புகழ் மங்களங்களின் உறைவிடம்”

மரவுரி – முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலாவைப் போன்ற சில மரங்களின் உட்பட்டைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, மரச்சுத்தியால் தட்டி மிருதுவாக்கப்படும். அப்பட்டை தகடு போன்று இருக்கும். அதற்கு நிறம் கொடுக்கப்படும்; அல்லது ஓவியத்தால் அழகுபடுத்தப்படும். அது பார்வைக்கு நெய்த துணி போல இருக்கும். இத்தகைய ஆடைகள் மரவுரிகள் எனப்படுகின்றன.

1. தசரதன் கைகேயிக்கு தந்த வாக்கைக் காப்பாற்ற செய்த உயிர் (ராமன்) தியாகம்.

2. ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற செய்த அரசுரிமை தியாகம்.

3. சீதை ராமனோடு வனவாசம் செல்ல அரச போகங்களை துறந்த தியாகம்.

4. சுமித்திரை ராமனையும், சீதையையும் காக்க லட்சுமணனை அனுப்பிய தியாகம்.

5. ஊர்மிளை தனது கணவனான லட்சுமணனை, சீதா-ராமருக்காக தந்த தியாகம்.

6. பரதன் தனது அரசாட்சியை ராமனின் பாதுகைகளுக்கு வழங்கிய தியாகம்.

அனுமான் தனது தலைவன் (Leader) கூறும் வேலையில் இருந்து நொண்டிச் சாக்குகள் (Lame excuses) கூறித் தப்பிக்க நினைக்காமல் அதனைச் சென்று முடிக்கும் சுறுசுறுப்பைக் கொண்டவர் (Go-Getter). அவர் பொறுப்புகளைத் (Responsibility) தன் தோளில் ஏற்பவர்.

அனுமான் தனக்குக் கொடுத்த பணியை சிறப்புற முடிக்கும் செயலாளர் (Secretary) போன்றவர்.

அனுமான் ராமனை சந்திக்கையில் தன்னை சுக்ரீவனின் மந்திரியாக முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் தன்னை சுக்ரீவனின் தாழ்மையான பணியாளனாகவே (Obedient Servent) காட்டிக் கொள்கிறார்.

அனுமான், ராமன் கோபம் கொண்டு லட்சுமணனை அனுப்பும் முன்பே வரவிருக்கும் சிக்கலை ஊகித்தறிந்து அதற்கான முன்னேற்பாடுகளையும் (Precaustionary Measures) சுக்ரீவனிடம் கூறி வானரப் படைகளை திரட்டும் வேலைகளை செய்து விடுகிறர். அது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான செயல் ஆகும். (Right Action at Right Time)

லக்ஷ்மணன் கோபத்தோடு கிஷ்கிந்தை வருகையில் அவர் கோபத்தைக் குறைக்கும் பணியில் ஒரு மத்தியஸ்தர் (Mediator) ஆக செயல்பட்டவர் அனுமான்.

அங்கதன் தன்னைவிட வயதில் இளையவனாக இருந்தாலும் தனக்கு தலைவனாக இருப்பதனால் அவன் அனுமதி பெற்று அனுமான் செயல்படுகிறார். (Egoless Nature).

அனுமான் சூழலில் உள்ள குறிப்புகளை அறியும் கவனம் (Attentive) கொண்டவர். அதனாலேயே அவர் ஈரத்தில் நனைந்து வரும் பறவைகளின் இறக்கைகளைக் கண்டு நீர்நிலைகள் அருகில் உள்ளன என்று அறிந்து தனது படைகளுக்கு வழிகாட்டுகிறார்.

அனுமான் ஒரு அணியின் தலைவனாக (Team Leader) சுயம்பிரபையின் அனைத்ஹ்டு வினவல்களுக்கும் (Queries) பதில் அளித்து அவர்களை மீட்கிறார். அனுமான் சூழலுக்கு ஏற்றாற்போல விரைவான, சிறந்த முடிவுகளை எடுப்பவர் (On-time decision maker, அங்கதன் சீதையைக் கண்டறிய முடியாமல் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து உயிரை விடலாம் என்று கூறியபோது, உடனடியாக தனது திறமையினால் (Efficiency) தனது படைகளுக்கிடையே பேதம் ஒன்றை உருவாக்கி நல்வழிப்படுத்துகிறார். தன் வலிமை அறியாத அனுமானின் தன்னம்பிக்கையை (Self Confidence) உயர்த்தி அவருக்கு ஊக்கமளிப்பவராக (Motivator) இருப்பவர் ஜாம்பவான். ராமாயணமும், அனுமானும் மற்ற கதாபாத்திரங்களும் என்றைக்கும் மேலாண்மை பாடத்திற்கான முன்னோடிகளாகவே இருந்துள்ளன


யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் கதம் வா கரவாண்யாஹம்-2-2-15-

இது எனது விருப்பம்; நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு -உங்களுடைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்ய வேண்டும் என்றும் விளம்புங்கள் .
யத்யப்யேஷா மாமா ப்ரீதிர் ஹிதம் அந்யத் அபி சிந்த்யதாம்
அன்யா மத்யஸ்த்ய சிந்தா ஹி விமர்த்தாப்ய அதிகோதயா–2-2-16-

இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்று வழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்க வேண்டும். நடு நிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக் கூடியவை

மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்–6-28-3

நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்க மாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் –ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதை

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு சரணம் ஆகதஹ
அர்ச்சிதஹ ச யதா ந்யாயம் ஸ்வைஹி ச மாம்ஸைர் நிமந்த்ரிதஹ

ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .

ஸ ஹி தம் ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புனர் மத் விதோ ஜனஹ

ஓ குரங்கினப் பெருந் தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்ற போதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப் போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்ய வேண்டும் ?

ருஷேஹே கண்வஸ்ய புத்ரேன கண்டுனா பரம ருஷிணா
ஸ்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்டாம் ஸத்ய வாதினா

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்

பத்த அஞ்சலி புடம் தீனம் யாசந்தம் சரண ஆகதம்
ந ஹன்யாத் ஆன்ருசம்ஸ்ய அர்த்தம் அபி சத்ரும் பரம் பத

எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக் கூடாது

அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ
அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா

முன்னர் அகந்தையுடனும் அடக்கி யாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்

ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்

பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பாதுகாக்கா விடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்-

வினஷ்டக பச்யதம் தஸ்ய ரக்ஷிணஹ சரண ஆகதஹ
ஆதாய சுக்ருதம் தஸ்ய ஸர்வம் கச்சேத் அரக்ஷிதஹ

ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்க நேரிட்டால் இது வரை கிடைத்த நற் பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய் விடும்

ஏவம் தோஷோ மஹான் அத்ர ப்ரபந்நாம் அரக்ஷணே
அஸ்வர்க்யம் ச அயசஸ்யம் ச பல வீர்ய விநாசனம்

அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும்

கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே

நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி திறக்கும் ; கை மேல் பலன் தரும்-

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-6-18-33-

ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் , எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதி மொழி . என்னுடைய உறுதியான கொள்கை

ராமாயண காவியத்தினுடைய ஆன்மீக சாரமாக விளங்குவது சரணாகதி தத்துவம் தான். இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டவேண்டும் என்று கருதியே கம்பர் தனது முதல் பாடலிலேயே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று குறிப்பிடுகிறார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

ஐயா, உங்களுடைய பெருமையைப் பற்றி ரொம்பவே கேள்விப்பட்டிருக்கேன். ஒருமுறை நீங்கள் நடந்துபோகும்போது வழியில் கிடந்த கல் உங்க பாததூளி பட்டு ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அவ்வளவு கடினமான கல்லுக்கே அப்படி நேர்ந்தது என்றால், மரத்தால் செய்த என் படகு எப்படி ஆகும் என்று தெரியவில்லையே. அதுவும் ஒரு அழகியாகி விட்டால், என் பிழைப்பு என்ன ஆவது? அதனால் உங்களது பாதங்களை நான் என் கையால் நன்றாகக் கழுவிய பிறகு தான் படகில் ஏற அனுமதியளிக்க முடியும்” என்று பணிவுடன் கூறுகிறான் படகோட்டி.படகோட்டி தனது தோல்பையிலிருந்து தண்ணீரை எடுத்து ராமரின் பாதங்களின் மீது வார்க்கிறான். அருகில் நிற்கும் அவனது குடும்பத்தாரும் வருகிறார்கள். அளவற்ற அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டு அலம்பி அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொள்கிறார்கள்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான்.திருவடி சூடிய திருமுடி:

அரண் உடைத்தாக உய்ந்தேன்;ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்தாங்குதல் தருமம் என்றான்.

‘மற்று, இனி உரைப்பது என்னே?வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என்இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.

இடைந்தவர்க்கு, “அபயம் யாம்“ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading