ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -1-ஸமாதி பாதம் –

பதஞ்சலி மஹாமுனிவர்‌, சரீர சுத்தி செய்து, ௮கனால்‌ காய ஸித்தி பெறுவதற்கு அநுகூலமாக வைத்திய சாஸ்திரத்தையும்‌;
வாககு சுத்தி செய்து, அதனால்‌ சப்‌தப் பிரஹ்ம உபாஸனை நலம்‌ தரும்படி. அனுஷ்டிப்பதற்கு,  பாணிநி வியாகரண சூத்திரங்கட்குப்‌ பெயர்போன மஹா பாஷ்யத்தையும்‌ ;-மனத்தைச்‌ சுத்த செய்து, கைவல்யம்‌.பெறுவதற்கு அனுகூலமாக இந்த யோக சாஸ்‌திரத்‌தையும்‌,-மனிதர்களின்‌ மேல்‌ உள்ள. காருண்யத்தினால்‌ அருளிச்‌ செய்தார்‌.
அவர்‌.இன்ன தேசத்தில்‌ இன்ன காலத்தில்‌ அவதரித்‌தார் என்பது, வியக்தமாகத்‌ தெரியவில்லை.
ஆனால்‌ இற்றைக்கு 2,300 வருஷங்களுக்கு முன்னர்‌ காஷ்மீரத்தில்‌ இருந்து இருக்கலாம் என்று வித்துவான்‌௧ளின்‌ அபிப்பிராயம்‌.
இவளை ஆதிசேஷ அவதாரமரசச்‌ சொல்‌லுவதுண்டு,

யோகசாஸ்திரம்‌ நான்கு பாதங்களாக நடை பெறுகிறது
(1) சமாதி பாதம்‌
(2) ஸாதந பாதம்‌
(3) விபூதி பாதம்‌
(4) கைவல்ய பாதம்‌ என்பனவாம்‌,

இக்த யோக சாஸ்திரத்துக்கு பாஷ்பம்‌ செய்தவர்‌ வியாசர்‌,

இவர்‌ பகவான்‌ ஸ்ரீ, வேதவியாளர்‌ எனச்‌ சிலர்‌ அபிப்பிராயப்படுகின்‌றனர்‌.
மற்றும்‌ இலர்‌, இவர்‌ வேரொரு ரிஷியாவர்‌ என்றும்‌, வேத வியாஸாரல்லர்‌ என்றும்‌ சொல்‌ கிறார்கள்‌.
இவ்வியாஸ பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிச்ரர்‌ என்பவர் தத்வ வைசாரதி ‘” என்னும்‌ விரிவான வியாக்யானம்‌ செய்‌திருக்கிறார்‌.
மேலும்‌, விஞ்ஞானபிக்ஷு என்பவர்‌ **யோக வார்த்திகம்‌” என்னும்‌ வார்த்திகமும்‌ எழுதியுள்‌ளார்‌-
ஸ்ரீ. போஜ ராஜர்‌ என்பவர்‌, ராஜ மார்த்தாண்டம்‌’” என்னும்‌ ஓர்‌ விருத்தியையும்‌ செய்திருக்கிறார்‌.

———————-

சகல கிலேசங்களும்‌ அற்றுப் போனவரும் , உக்கிரமான விஷத்தை யுடையவராயும்‌, அநேக முகங்களை யுடையராயும்‌,
யோக ஸித்தியைக்‌ கொடுக்கிறவராயும்‌, எப்போதும்‌ தியானத்தில்‌ இருப்பவராயமுள்ள
ஸர்ப்ப ராஜாவான ஆதி சேஷன்‌, உலகத்தின்‌ அநுக்கிரகத்திற்‌காக அனேக ரூபமாக அவதரிக்கிறர்‌. அத்தகைய ஆதிசேஷ பகவான்‌ சீஷர்களான உங்களை இரக்ஷிக்கட்டும்‌. –பதஞ்சலியார்‌ ஸ்தோத்திரம்‌.

வாக்கு , காயம்‌, மனம்‌ இவைகளின்‌ மலங்களைப்‌ போக்கடிக்கும் படியாக முறையே சப்த சாஸ்த்ரத்தையும்‌,
வைத்திய சாஸ்திரத்தையும்‌, யோக சாஸ்திரத்தையும்‌ ஜன உபகாரமாக அருளிய பகவான் பதஞ்சலியாரைப் போற்றுவாம்‌.

—————

(1) சமாதி பாதம்‌

யோக சாஸ்திரம்‌ பூர்வ மறையின்‌ சார்பாய்‌ ஆரம்பிக்கப் படுகிறது.–1-

ஆதியில்‌ சாங்கியதுக்குக்‌ கபில முனியும்‌, வேதாந்தத்திற்கு வியாச பகவானும்‌ இருக்கன்‌றமை போல,
யோக சாஸ்திர,த்‌திற்கு ஆதி கர்த்தர்‌ ஹிரண்ணிய கர்ப்பராவர்‌:
பதஞ்சலியார்‌ முன்‌னுள்ள சாஸ்‌திரத்தை அநுசரித்துப்‌. பிரக்ருத நூலைச்‌ செய்திருக்கின்றனமையால்‌
சூத்திரத்தில்‌ **அநு சாஸநம்‌” என்ற பதம்‌. உபயோகிக்கப்‌ பட்டுள்ளது.

யோகம்‌ என்றால்‌ சமாதி என்று பொருள்‌, அல்லது சேர்தல்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, –
ஜீவாத்மா பரமாத்மாவினுடன்‌ ஒன்றுபடுதலாம்‌. -முன்னது தான்‌ இந்த நூலாசிரியரின்‌ கருத்து.
யோக சாஸ்‌திரத்‌தின்‌ பிரயோஜனம்‌ ப்ரக்ருதிக்குட்பட்ட ஆன்மாவை வியோகம்‌ பெறும்படி செய்தல்‌.
பந்தத்‌திற்குட்பட்டவன்‌ யந்த விமோசனம்‌ பெறுதலுக்குச்‌ .சாதனமான நூல்

சிதித்தமானது ஐந்து பூழிகள்‌ அல்லது ஐந்து படிகளை உடையது.
(1 ஷிப்தம்‌-சஞ்சலமான நிலைமை:
(2) ‘மூடம்‌-ஒன்‌றும் அறியாத நிலைமை.
(8) விஷிப்‌தம்–சொற்ப காலம்‌ சஞ்சலமின்‌மையும்‌, வெகு காலம்‌ சஞ்சலமுண்மையும்‌ இருக்கின்ற நிலைமை.
(4). ஏகாக்கிரம்‌- ஓரே வஸ்துவை அவ லம்பித்திருக்கின்‌ற
நிலைமை.
(5) நிருத்தம்‌ –விருத்தி சூந்யமான நிலைமை,

ஆனால்‌ விருத்தி பீஜமாகிய சம்ஸ்கார மாத்‌திரம்‌ உள்ள. நிலைமை.
முதல்‌ மூன்று படிகளில்‌ யோகாப்பியாசம்‌ முடியாது, : நான்காம் ஐந்தாம் படிகளில்‌ கூடும்‌.

—————

யோகம்‌ என்பது சித்த ந்ருத்திகளை நிரோதம்‌ செய்தலாம்‌.–2-

இந்த சூத்‌திரத்தால்‌ நிருத்தம்‌ என்ற நிலையான : அஸம்பிரஞ்ஜாத சமாதி என்பது மாத்திரம் தான்‌ யோகம்‌ எனப்‌ பொருள்படும்‌.
ஆனால்‌ எல்லாச்‌ சித்த விர்த்திகள்‌ என்று சூத்திரத்‌தில்‌ சொல்லாமையால்‌ கீழான படிகளான ஷிப்தம்‌, மூடம்‌, விக்ஷிப்‌தம்‌ இவைகளை நீக்கி
ஏகாக்கிரம்‌, நிருத்தம்‌ என்ற இரண்டு படிகளும்‌ யோகப் பயிற்சிக்கு உரியதாகும்‌,
சித்தம்‌ என்பது சத்வ, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற முக் குணங்களுடன் கூடி நிகழ்வது. -சத்வ குணமானது எப்போதும்‌ ௮தனிடம்‌ உள்ளது,
சித்தம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை களுடன் சம்பந்திக்கும் போது, உலக விஷயங்களின்‌ பாவங்கள்‌ உண்‌டாகின்றன
தமல்‌ மேலிட்டால்‌, அதர்மம்‌, அஞ்ஞானம்‌, லைராக்‌கியமின்மை, ஐஸ்வரியமின்‌மை மனத்திற்கு எற்படும்‌.
ரஜஸ்‌ மேலிட்டால்‌, மேலிட்ட .பாவங்களின்‌ எதிர் மறையான நிலைமை உண்டாகிறது.

ரஜஸ்‌ அற்பமேனும்‌ இல்லாமல்‌ பொய்த்துப் போமாகில்‌, புருஷஸ்வ ரூபத்தில்‌ பிரதிஷ்டை உண்டாகிறது.
இந் நிலையானது தர்மமேகத் தியானத்‌திற்குப்‌ போதலுக்கு. அனு கூலமாயுள்ளது .
தர்ம மேக சமாதி வரையில்‌ உள்ள சமாதியின்‌ பல படிகள்‌ ஸம் பிரஞ்ஞாத சமாதியில்‌ அடங்கும்‌.
தர்ம மேக சமாதியைப் பற்றிப்‌ பின்னர்‌ விவரிப்‌போம்‌,

ஸம்ஸ்சார மாத்திரம்‌ மிகுந்து இருந்து விர்க்திகள்‌ ஓழிவடையும் போது , அந்நிலை அஸம் பிரஞ்ஞாத சமாதியாம்‌,
யோகம்‌ ஸம்‌ பிரஞ்ஞாத சமாதி யென்றும்‌ அஸம்‌ பிரஞ்ஞாத சமாதி யென்‌றும்‌ இருவகைக் தாம்‌.
இவ் விரண்டும்‌ முறையே ஸ்பீஜம்‌ என்றும்‌ நிர்பீ ஜம்‌ என்‌றும்‌ பெயர் பெறும்‌.

—————–

அப்போது. (விக்ருதிகள்‌ அடங்கும் போது) புருஷன்‌ தன்‌ ஸ்வரூபத்‌தில்‌ இருப்பான்‌. –3-

விக்ருதிகள்‌ அடங்கினால்‌ வீஷயம்‌ ஒன்‌றுமில்லை.-அச் சமயத்தில்‌ கேவலம்‌ தன்னிலைபில்‌ புருஷன்‌ இருப்பான்‌.
அது கைவல்ய ஸ்திதியைப்‌ போன்றதாம்‌,

ஏனைய காலத்தில்‌ (விக்ருதிகள்‌ அடங்காமல்‌ இருக்கின்ற காலத்தில்‌) புருஷன்‌, நிகழம்‌ அந்தந்த விரக்தியுடன்‌, ஸம்பந்தித்து இருப்பான்‌. –4-

விக்ருதிகள்‌ ஐவகை. சில துக்க்காமானவை. சில துக்கமின்மையானவை. –5-

பிரமாணம்‌, விபரியயம்‌, விகற்பம்‌, நித்திரை, ஸ்மரணை என்பன ஐவகை விர்த்திகளாம்‌. –6-

பிரத்யக்ஷம்‌, அநுமானம்‌, ஆகமம்‌ என்பன பீரமாணங்கள்‌. –7-

உபமானம்‌, அருத்தாபத்தி, அனுபலப்தி, இம்‌ மூன்றையும்‌ சேர்த்து சிலர்‌ ஆறு பிரமாணங்கள்‌ உண்டென்பார்கள்‌.
ஆனால்‌ இவை மூன்றும்‌ ௮நுமானத்தில்‌ அடங்கும்‌,
ஆகமம்‌ ஆப்‌த வாக்கியம்‌, சப்தம்‌, –சர்வஞ்ஞனாகவும்‌, கருணை யுள்ளவனாகவுமிருக்‌கின்ற புருஷனின்‌ வாசகம்‌.

இம்மூன்று ்‌ பிரமாணங்களினும்‌ தாரதம்மியமுண்டு.
சாதாரண மனிதன்‌ பிரத்தியக்ஷத்தையும்‌,
அறிவில் மிகுந்தவன் பிரத்தியக்ஷம்‌ அனுமானத்தையும்‌,
இன்னும்‌ விசால அறிஞன்‌ சப்தத்தையும்‌ பிரமாணமாகக் கொள்ளுவான்‌,
எல்லாம்‌ பிரமாணங்களும்‌, ஆத்ம ஸம்வித்‌ பெறும் வரையில்‌ பயனுள்ளவை,
ஆத்‌ம ஸம்வித்‌ அடைத்த மஹா புருஷனுக்குத்‌ தன்னுடைய சாக்ஷாத்காரமே அன்றி, மத்றவை பிரமாணமன்று ,
அந்த உயர்நிலை பெறுவதற்கே, பிரமாணங்கள்‌ படிகளாம்‌,-சாதனங்களாம்‌.

விபர்யயலம் என்பது ஒரு வஸ்துவிற்கு உரிய ஸ்லருபம்‌ தோன்றாமல் பொய்யான வேறே ஒரு ஸ்வரூபம் தோன்றலாம்‌.–8-

சந்தேகம் என்பது விபர்யயத்தில்‌ சேர்ந்ததாகவே சூத்‌திரக்காரர்‌ அபிப்பிராயம்‌. அதனால்‌ அதைப் பற்றி வேறாகச்‌ சொல்ல வில்லை.

விகற்ப்பம்‌ என்பது வஸ்து உண்மையில்‌ இன்றி, வார்ததை மாத்திரையை அநுசரித்து உண்டாகும்‌ மனோ விர்த்தியாம்‌.–9-

முயக்கொம்பு, வந்தியா புத்திரன்‌, சைதன்னியம்‌
(அறிவு) புருவனுடைய ஸ்வரூபம்‌, ( இதில்‌ சை தன்னியம்‌, புருஷன்‌ என்ற இரண்டு வார்த்தைகளினால்‌
வித்தியாசமிருப்பினும்‌, அவைகள்‌ குறிக்கும்‌ பொருள்‌ ஒன்‌றே , இரண்டல்ல).
ராகுவின்‌ தலை இவை போன்றவை உதாரணமாகும்‌.

———

நித்திரை என்பது வெளி விஷய பிரஜ்ஜை இன்றி (சத்வ ரஜோ குணங்கள்‌ அடங்கி, தமோ குணம்‌ மேலிடும்‌ காலையில்‌) அவித்யை சம்பந் தமான மநோ விர்த்தியாம்‌.–10-

சாதாரண ஜனங்களின்‌ அபிப்பிராயத்தில்‌, நித்திரையில்‌ விர்த்தி சூன்யமாம்‌.
தூங்கி விழித்ததன் மேல்‌, “சுகமாய்‌ தூங்கினேன்‌” என்ற ஸ்மரணை இருக்கின்‌றமையால்‌,
உண்மையில்‌ அது தூக்கத்‌தில்‌ ௮பாவ ரூபமான ஒரு விர்த்தியாக இருக்கின்றது.

ஸ்மிருதி என்பது அனுபவித்த விஷயம்‌ மனத்தை விட்டு நழவாமல் இருத்தலாம்–11-

அனுபவித்த(பிரமாணத்தினால்‌ அனுபவித்த) இவ் வைந்து விர்த்திகளும்‌ சகம்‌, துக்கம்‌, மோகம்‌ இவைகளுக்குட் பட்டவை.
இவ் விர்த்திகளில்‌ பிரமாணம்‌, விபரியயம்‌, விகற்பம்‌ இவை மூன்றும்‌-ஜாக்கரத அவஸ்‌தையில்‌ அனுபவிக்கப் படுகின்‌றன.
இவைகளின்‌ வாசனைகள்‌ மாத்திரம்‌ ஸ்வப்ந அபவஸ்தையில்‌ அனுபவிக்கப்படுகின்‌றன –
ஸூ ஷுப்தி அவஸ்தையில்‌ நித்திரை மாத்திரம்‌ உள்ளது,
ஸ்மிருதி மற்றைய இரண்டு அவஸ்தைகளிலும்‌ உள்ளது -நித்திரையில்‌ இன்றாம்‌.

இவைகள்‌ (மேற்கண்ட விர்த்திகனள் ) அப்பியாசம்‌, வைராக்கியம்‌(என்ற உபாயங்களால்‌) நிரோதம்‌ செய்யத் தக்கவை.–12=

மநோ விர்‌த்திகளாகிற பிரவாகமானது , சத்வம்‌ மேலிட்டிருந்தால்‌, நல்ல மார்க்கத்திலும்‌, ரஜஸ்‌, தமஸ்கள்‌ மேலிட்டிருந்தால்‌ தீய மார்க்கத்திலும்‌ செல்லுகின்றது.
நல்‌ மார்க்கம்‌ என்பது அந்தர் முகமாய்க் கைவல்லியத்துக்குக்‌ கொண்டு போய்ச்‌ சேர்ப்பிக்கும்‌.
தீய மார்க்கமானது விஷய நுகர்ச்சி என்ற ஸம்ஸாரத்‌திற்குள்‌ கொண்டு போய்‌ விடும்‌,
வைராக்ய ஸாதநத்தால்‌, விஷயப்‌ பிரவாகத்தைத்‌ தடுத்து அணை போட்டும்‌, அப்பியாச ஸாதனத்தால்
நல்ல மார்க்கம்‌ என்றதனை வெட்டி விட்டும்‌, அதில்‌ மநோ விர்த்திகளைச் செல்லும்படி. செய்தலுமாம்‌.
வைராக்கியம்‌, பிரதி பந்தம்‌ அநிஷ்ட நிவிர்‌த்தியையும்‌, அப்பியாசம்‌ இஷ்டப் பிராப்‌தியையும்‌ தரும்‌.

அதில்‌ (அப் புருஷனிடத்நில்‌) மனத்தை ஸ்திரமாக நிறுத்தலின்‌ ழயற்சி அப்பியாசமாம்‌,–13-

பஹிர் முகமாகிய விர்த்திகள்‌ போய் அந்தர் முகமான விர்த்திகள்‌ நடை பெறல்‌ ஸ்‌திதி எனப்படும்‌.
அந் நிலையை ௮டைவதற்காக, பஹிர்‌ அந்தர் சாதநங்களை அனுஷ்டித்தல்‌ அப்பியாசமாம்‌.

நீண்ட காலம் இடையறாமல் குறித்த லஷ்யத்தில் ப்ரயத்தனத்துடன் அவ்வப்பியாஸம் நிகழுமாகில் அது திடமானதாகும் –14-

வைராக்யம் என்பது சாஸ்திரங்களில் பிரஸ்தாபித்து இருக்கிற ப்ரத்யக்ஷ விஷயங்களில் அவாவின்றி
அவைகளை ஸ்வா தந்தர்யம் செய்யும் தகைமையாகும்–15

வேண்டுதல் -வேண்டாமை -இல்லா நிலைமை வைராக்யம் -அது நாலு படி யுள்ளது
1- யதமாநம் -முயற்சி -மனம் இந்திரிய விஷயங்களில் செல்லாமல் தடுத்தலின் முயற்சி முதல்படி
2- வியதிரேகம் -அம்முயற்சி செய்கிறதில் சில விஷயங்களைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் முன்னரே தள்ளப்பட்ட விஷயங்கள் ஆகின்றன
அதாவது அவைகள் சம்பந்தமாக வைராக்யம் பக்குவமாய் இருக்கிறது
சில நம்மை இழுக்கின்றன -அவை நம்மை இழுக்காமல் தடுக்க முயல்கின்றோம் -இவைகளை பற்றிய வைராக்யம் பக்குவமாகிக் கொண்டு வருகின்றது
சில நம்மை இழுக்கின்றன -ஆனால் அவைகளைத் தடுக்க எவ்வித முயற்சியும் செய்ய நாம் ஆரம்பிக்க வில்லை
இவைகளை பற்றி வைராக்யம் ஏற்டபட்டு இனி பக்குவம் ஆக வேண்டும்
இவ்விதமாக விஷயங்களின் இழுப்பில் தாரதம்யம் அறிதல் இரண்டாம் படி
3-ஏகேந்த்ரியம் -பக்குவமான வைகளில் இந்திரியங்கள் சலிக்காமல் இருக்க மனம் மாத்ரம் விஷயங்களில் விருப்பு அல்லது வெறுப்பு கொள்ளுதல்
மனமாகிய ஒரு இந்திரியத்தின் தொழில் இருக்கின்றமையால் ஏகேந்த்ரியம் என்பது மூன்றாம் படி
4-வஸீ காரம்-விஷயங்கள் தாமே ஒழிவை அடைகின்றன -இந்திரியங்கள் சலிக்கவில்லை –
மனத்தில் உள்ள விருப்பு வெறுப்பு அற்றுப்போதல் -அதனால் ஸூ தந்திரம் ஏற்படும்
நாம் விஷயங்களின் வசமாகாமல் அவைகளை நமது வசமாக்கிக் கொள்ளுதல் -வசீகரம் நான்காம் படி
புருஷ தர்சனம் நிகழ்வதால் இது உண்டாகும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை

ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –
ஏக ஆஸ்ரய தோஷம்

ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்

பரம வைராக்கியம்‌ என்பது, புருஷ தர்சனம்‌ நிகழ்வதினால்‌(சத்வ,ரஜஸ்‌, தமஸ்‌ என்ற) குணங்களினும்‌ பற்றில்லாத நிலையாம்‌.–16-

சாதாரண வைராக்கியம்‌, காரியங்களான விஷயங்களில்‌ பற்றில்லாமை. –காரணங்களான குணங்களில்‌, பற்றில்லாமை பரம வைராக்யம்‌.
முன்னது அபர வைராக்கியம்‌ என்றும்‌ பின்‌னது பரம வைராக்கியம்‌ என்றும்‌ பெயர் பெறும்‌.
முன்னது ஸத்வ குணம்‌ மேலிட்டு ரஜோ குணம்‌ சம்பந்தமுடையதாய்‌ தமஸ்‌ அற்றுப் போயிருக்கின்‌ற நிலை.
இதில்‌ சித்திகள்‌ அடையலாம்‌. சுவர்க்கம்‌, விதேகிகளின்‌ நிலைமை, பிரக்ருதி லயம்‌ முகலியவை பெறலாம்‌. பின்னதான பரம வைராக்யம் பெற்ற யோகி மேற்படி அனுப வங்கள்‌ அடைய அருகனாக விருந்தும்‌; அவைகளை அலஷியம்‌ செய்து புருஷ தர்சநம்‌ நோக்கமுள்ளவனாக, புருஷனை சாஷாத்கரிக்கிறான்‌.

ஸம் பிரஞ்ஞாத ஸமாதி என்பது விதர்க்கம்‌, விசாரம்‌, ஆநந்தம்‌ அஸ்மிதை என (நால்‌ வகை) ரூபத்தை அனுசரித்து நிகழ்வதாதம்‌.–17-

சாதனங்களைச்‌ சொல்லி, பின்னர்‌ சாத்தியம்‌, அதாவது அடையப்படும்‌ ஸமாதிகளைச்‌ சொல்லுகின்றார்‌.
ஸமாதி இரு விதம்‌. முதற்படி ஸம் பிரஞ்ஞாத ஸமாதி,-இரண்டாம்படி. ௮ஸம்பிரஞ்ஞாத ஸமாதி.
ஸம் பிரஞ்ஞாத ௪மாதி நான்கு உட்பிரிவுகளை யுடை.
பது. யோகி யானவன்‌ ஸ்தூல வஸ்துவை முதன்மையில்‌ தியானம்‌ செய்து (விதர்க்கம்‌),
பின்பு ௮தன்‌ ஸூஷ்ம நிலையான. தன்மாத்திரைகளைத் த்யானம் இயாசம்‌ செய்கிறான்‌ (விசாரம்‌).
இது வில் வித்தையில்‌ பழகுவோன்‌, முதலில்‌ ஸ்தூல லஷியத்தையும்‌, பின்பு ஸூஷ்ம லக்ஷியத்தையும்‌. வைத்துப்‌ பழகுவது போன்றதாகும்‌.

(1) ஸ்தூல வஸ்து த்யானம் –விதர்க்கம்‌.
(2) ஸூக்ஷ்ம வஸ்து தியானம்‌–விசாரம்‌,
(8) இந்திரியங்கள்‌ ஸ்தூல வஸ்‌துக்களில்‌ செல்லாமல்‌ அதனதன்‌ ஸ்தானத்தில்‌ நிற்கும்படி செய்‌தலினால்‌ உண்டாகும்‌ அனுபவம்‌–ஆனந்தம்
(4) வேறு ஒன்றும்‌ மனத்தில்‌ வராமல்‌ பிரயத்தனத்தால்‌ தடுத்து நான்‌ என்ற பிரஞ்ஞை மட்டும்‌ இருப்பது ௮ஸ்மிதை,
விசாரம்‌, ஆனந்தம்‌; ௮ஸ்மிதை இம் மூன்றும்‌ விதர்க்கத்தில்‌ இருக்கின்‌றன
ஆனந்தம் ௮ஸ்மிதை இவ் விரண்டும்‌ விசாரத்திலிருக்கின்‌றன. அஸ்மிதை மாத்திரம்‌ ஆனந்தத்தில்‌ இருக்கின்றது.

மேதல் கண்ட. விஷயங்களையே அடியில்‌ வருமாறு சொல்லலாம்‌:
(1) முதற் படியில்‌ ஸ்தூல விஷயங்களின்‌ ஓன்றை லஷியம்‌ செய்து தியாநம்‌ நிகழும்‌–விதர்க்கம்‌,
(3) இரண்டாம் படியில்‌ ஸூஷ்மமான விஷயங்களின்‌ யாதேனும்‌ ஒன்றை லக்ஷியம் செய்து த்யானம் நிகழும்‌.
பஞ்ச தன்மாத்திரை அஹங்காரம் , மஹத் தத்‌வம்‌ முதலியவைகளில்‌ ஒன்றின்‌ மேல்‌ தியாநிப்பது –விசாசம்‌.
(3) மூன்றாம் படியில்‌, ஸ்தூல ஸூஷ்ம விஷயங்கள்‌ இல்லாமல்‌, இந்திரியங்களை அதனதன்‌ ஸ்தானத்தில்‌ நிறுத்தி, அந் நிலையில்‌ தியாநம்‌ பண்ணுவது ஆனந்தம்‌,
4- நான்காம் படியில் இந்திரியங்களையும்‌ விட்டு நான்‌ என்ற பாவம்‌ தனித்திருத்தல்‌ ௮ஸ்மிதை ,
இம் முறையில்‌ மனத்திற்கு யாதேனும்‌ ஆலம்பநம்‌ (பிடிப்பு) உள்ளது , அதனால்‌ இந் த ஸமாதிக்கு ஸம் பிரஞ்ஞாத ஸமாதி எனப்‌ பெயர்‌.

மற்றது (அஸம் பிரஞ்ஞாத சமாதி யானது) மநஸ் சிங்களம் இன்மையை அடிக்கடி அப்பியசிப்பதினால் உண்டாதம்‌.
(ஆனால் ) சித்தத்தில்‌ பூர்வ ஸம்ஸ்கார சேஷமிருக்கும்‌.–18-

இம்முறையின்‌ அப்பியாஸம்‌ ஸ்‌திரமான பிறகு, ஒரு
வித அலம்பநமுமின்றி மனம்‌ தனித்திருத்தல்‌ எற்படும்‌.
ஆனால்‌ ஸம்ஸ்கார சேஷம்‌, இச் சமாதி நிகழுங்கால்‌, இருக்கும்‌, -இச் சேஷமும்‌ இச் சமாதி ஸ்திரப்படு மாகில்‌ ஓழியும்‌.

இந் நிலையைத்‌ திரு மூலர்‌ அடியில்‌ வருமாறு பிரஸ்‌,தாபிக்கிறார்‌–
நானென்றுந் தானென்று நாடி நான்‌ சாரவே
தானென்று நானென்‌ றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்‌
றானென்று நானென்‌றுஞ்‌ சாற்‌ற கிலேனே –திருமந்திரம்

இது எல்லா விர்த்திகளும்‌ ஓய்ந்த நிலை. –திரிபுடி, அற்ற படி–ஆனால்‌ இது ஸூஷ்ப்தியின் லயம்‌ அன்று –
பிரஞ்ஞை மாத்திரம்‌ இருக்கும்‌. -அலை யற்ற கடல் போன்ற நிலை இது,
திரை பொரா மன்‌னும்‌ அமிர்தத் தெண்‌ கடலே” என்ற மாணிக்க வாசகர்‌ ௮னுபவ வாக்கு இங்கு கவனிக்கத் தக்கது .
ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குணங்கள்‌ நீங்கப் பெற்று , சுத்த ஸத்வ குண ஸ்வரூபமாகவே ஆகின்ற நிலை இது:வாம்‌.
பர வைராக்கியம்‌ இவ் வுயர் நிலைக்குச்‌ சாதனமாம்‌-

மனத்‌தின்‌ ஏகாக்கிர நிலையில்‌ ஸம் பிரஞ்ஞாத சமாதி ஏற்படக்‌ கூடியது, மனத்தின்‌ நிருத்த நிலையில்‌, அஸம் பிரஞ்ஞாத சமாதி ஏற்படக் கூடியது .
அதனால்‌ ௮ஸம்பிரஞ்ஞாத சமாதி, நிரோத சமாதி என்றும்‌ பெயர்‌ பெறும்‌,

இந்த அஸம் பிரஞ்ஞாத சமாதி யானது( வைராக்கியம்‌ முற்றும்‌ ஏற்‌படாமல்‌ போன நிலையில்‌)
தேவர்களின்‌ ஸ்தானத்தையும்‌ பிரகிருதி லய ஸ்தானத்தையும்‌ கொடுக்கும்‌.

அஸம்பிரஞ்ஞாத சமாதி
(1) பவப் பிரத்தியயம்‌
(2) உபாயப் பிரத்தியயம்‌ என இரு படிகள்‌ உடையது,

(1) பவப் பிரத்தியயம்‌, அவித்தையைக்‌ காரணமாக உடையது -அதாவது அவித்தையின்‌ சம்பந்தமுடையது,
இந்நிலையில் அவித்யை என்ற ஆவரணம்‌ உள்ளது -. பல புவனங்களின்‌ போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இச்சை யோகியைப் பற்றி நிற்கும்‌,–வைதேகியம் அல்லது தேவர்களின்‌ நிலைமையும்‌ இதல்‌ அடங்கும்‌.-இவ்வித ௮னுபவங்களுக்குக்‌ கால வரம்பு உண்டு,
இந்திரியங்களை உபாஸிக்கிறவர்கள்‌, 10 மந்வந்தரங்கள்‌ லோகாந்தரங்களில்‌ வசிப்பார்கள் என்றும்‌,
பூதங்களை, ௮தாவது பஞ்ச தந் மாத்திரைகளை உபாஸிக்கிறவர்கள்‌ 100 மந்வந்தரங்கள் லோகாந் தரங்களிலும்‌,
அகங்காரத்தை உபாஸிக்கிறவர்கள்‌ 1000 மந்வந்தரங்கள்‌ லோகார்தரங்களிலும்‌ வசிப்பார்கள் என்றும்‌ வாயு புராணத்தில்‌ சொல்லி யிருக்கிறது,

பிரக்ருதி லயாள்‌, மகத்‌, அவியக்தம்‌ முதலியவைகளை உபாஸிக்‌கிறவர்கள்‌. அதாவது அதுவும்‌ தானும்‌ ஒன்று என, உபாஸிக்றவர்கள்‌. சரீரம்‌ போன பிறகு, உபாஸ்யுமான வஸ்துவுடன்‌ லயத்தை அடைகிறார்கள்‌.

புநஷன்‌ எந்த சங்கல்பத்துடள்‌ மரணம் அடைகிறானோ , அந்த சங்கல்ப ரூபமாக லோகாந்தரத்தில்‌ ஆகிறன்‌. –சாந்தோக்யம்

**கெளந்தேய (ஒருவன்‌ தனது வாழ்வின்‌) முடிவிலே எந்தெந்தப்‌ பொருளை நினைந்து சரீரத்தை விடுகின்றானோ .
அதனைப்‌ பற்றிய பாவனையை எப்பொழதும்‌ பாவித்த, (ஸம்பாதித்துக் கொண்ட) வனாய் அதையே அடைகிறான்‌. –ஸ்ரீ கீதை

இவர்களுக்கு நீடித்த சுகமிருக்தானும்‌ அதற்கு முடிவு உண்டு—புநர் ஜென்மம் உண்டு.
தவளைகளின்‌ கருக்கள்‌ மழையில்லாத காலத்தில்‌ மண்ணோடு கலந்து அந்தர்கதமாக இருக்கின்றன.
அவை போல, இப்பிரக்௫தி லயாள்‌ அவியக்தத்தில்‌ லயமடைகிறார்கள்‌.
பின்பு தவளைக்‌ கருக்கள்‌: வருஷ காலத்தில்‌ உண்டாகுமாறு போல, இப் பிரகிருதி லயாளரானவர்கள்‌, பூமியில்‌ சரீரம்‌ பெறுகிறார்கள்‌.
அவர்களுக்கு அந்த லய காலத்தில்‌ அந்த லயம்‌ கைவல்லியத்‌திற்குச்‌ சமமானதாகத்‌ தோன்றும்‌;
ஆனால்‌, அது கைவல்லியமன்று .

உபாயப் பிரத்தியயம்‌:–புருஷ ஸாக்ஷாத்காரத்னத உண்டி பண்‌ணுதல்‌ மநத்தின்‌ பிரயோஜாம்‌.
மேற்கண்ட பிரக்ருதியை ௮னுபவங்களில்‌ பற்றில்லாமல்‌, மநம்‌ மேல்‌ நோக்கி , புருஷ தர்ஸநம்‌ பெறுமாகி ல்‌, ௮துவே கைவல்லிய நிலை. இது தான்‌ உபாயப் பிரத்யயம்‌.
மஹத்தை அதாவது புத்தியை நான்‌ என்று உபாஸிக்கிறவர்கள்‌, 10,000 மந்வந்தரங்கள்‌. லோகாக்‌தரங்களில்‌ வசிப்பார்கள்‌ என்றும்‌,
அவியக்தத்தை உபாஸிப்பவர்கள்‌ 100,000 மந்வந் தரங்கள் லோகாந்தரங்களில்‌ வசிப்பார்கள்‌ என்றும்‌,
புருஷ தர்சனம் அடைகிறவர்கள்‌ கால வரம்பைத்‌ தாண்டுகிறார்கள்‌ என்றும்‌, வாயு புராணத்தில்‌ சொல்லி யிருக்கின்‌றன,

முன்‌ பிரஸ்தாபித்த தேவர்களின்‌ ஸ்தாநம்‌,-பிரகிருதிலயஸ்தாநம்‌ இவைகளைக்‌ கருதாத) மற்றவர்களுக்கு
சிரத்தை, வீரியம்‌, ஸ்ம்ருதி; ஸமாதீ இவைகள்‌ மூலமாய்‌ (கைவல்யம்‌ சித்திக்கும்‌.)–20-

சிரத்தை என்பது இங்கு, உயர் நலம் அமைந்த லஷ்யமான கைவல்யத்தை நோக்கான மநத்‌தின்‌ தெளிவும்‌, ௮தனால்‌ மநத்தின்‌ விசேஷ முயற்சியுமாம்‌.
புத்தி மேன்மேலும்‌ தெளிவு பெற, விரியம்‌, அதாவது மந எழுச்சி, மந உத்ஸாகம்‌ ஏற்படும்‌,

ஸ்ம்ருதி: அந்த உயர் நலமுள்ள லக்ஷியம்‌ மநத்தில்‌ தோன்றவே, அதை இடையறாது நினைத்தல்‌, த்யாநித்தல்‌.
ஸமாதி: அப்படி நினைத்தலால்‌ மநம்‌ ஐகாக்ரியம்‌ -கொள்ளும்‌.-மநச் சலநமின்மை: உண்டாம்‌.
பிரஞ்ஜை : மநம்‌ ஸமாதி பெறவே யதார்த்தமான .ஞாநம்‌,
‘மெய்யுணர்வு உண்டாகும்‌.
இவைகளில்‌ முன்னது , .பின்னது உண்டாவதத்கு .அநு கூலமாலம் ,

தீவிரமான வைராக்கியம் உள்ளர்களுக்‌கு ஸமாதி நிலை ஸமீபமா யுள்ளது.–21-

யோகிகள் 9 வித படி.களில்‌ உள்ளவர்கள்‌. உபாயங்‌கள்‌, வைராக்கியங்களின்‌ தார .தம்மியங்களினால்‌ அப்‌ படிகள்‌ ஏற்படுகின்றன.
உபாயம்‌ மூன்று விதம்‌–மிருது , மத்தியமம்‌, அதிமாத்‌திரை;-வைராக்கியமும்‌ மூன்று விதம்‌.
அதி மாத்திரையான உபாயம்‌, அதி மாத்ரையான வைராக்கியம்‌ இவை யிரண்டும்‌ கூடிய யோகிக்கு,
இந்த சூத்திரத்திற்‌ சொல்லிய பிரகாரம்‌, ஸமாதி ஸமீபத்‌திலுள்ளது . அதாவது ஸமாதி லாபம்‌, ஸமாதி பலம்‌ உண்டாகிறது –

சிரத்தை முதலிய உபாயங்களை அப்பியஸித்தாலும்‌, ஸமாதி லாபம்‌, ஏன்‌ எல்லாரும்‌ அடைய வில்லை என்றால்‌,
மேற்கண்ட விதமாக, சிரத்தை முதலியவைகள்‌ பல படிகளாக இருக்கின்றன,
அப்‌ படிகளின் கண்ணுள்ள யோகிகள்‌ பல திறத்தாராக இருக்கின்றார்கள்‌. -உபாயம்‌, வைராக்யம்‌ பல தாரதம்மியங்களை உடையன.
அத்‌ தார தம்மியங்களுக்குக்‌ காரணம்‌, பூர்வ ஜந்மங்களில்‌ ஏற்பட்ட ஸம்ஸ்கார விசேஷங்களாம்‌.
ஸம் பிரஞ்ஞாத ஸமாதியின்‌ பலன்‌ அஸம்பிரஞ்ஞாத ஸமாதியாம்‌, அஸம் பிரஞ்ஞாத சமாதியின் கைவல்லயமாம்‌

மேலும் அத் தீவிரமான வைராக்கியம்‌ மூன்று படிகளை உடையது-மிருது, மத்தியமம்‌, அதிமாத்திரை .–அவைகளில்‌ பின்னது முன்னதை விட. விசேஷமாம்‌.–22

ஈஸ்வர பக்தி விசேஷத்தினாலாவது.–23-

முன்‌ 20-ம்‌ சூத்‌திரத்தில்‌: கண்ட உபாயங்களைத் தவிர, பின்வரும்‌ சூத்‌திரங்களில்‌ பிரஸ்‌தாபிக்கப்படும்‌. இன்னும்‌
பல: உபாயங்களால்‌ ஸமாதி நிலையைப்‌ பெறலாம்‌ என்பதைச்‌ சொல்லுகிறார் -இந்த சூத்திரத்தில்‌ ஈஸ்வரப்‌ பிரணிதாநம்‌, ௮தாவது
இறைவனிடம் அன்பின்‌ மிகுதியால்‌ ஸமாதி லாபம்‌, பலம்‌ பெறலாம்‌ என்பது சொல்லப்படுகிறது.
வேறு வியாபாரமின்‌ றி பக்தியினால்‌ மாத்திரம்‌.இச் சமாதி லாபம்‌ ஸித்‌திக்கும்‌.
பக்தி. என்பது. மநம்‌,. மொழி, மெய்‌களால்‌ நிகழ்வன… பக்தியினால்‌ மாத்திரம்‌ என்பதனை கீதை -9-22- சொல்லும்

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்—৷৷9.22৷৷

என்னை நினைப்பது தவிர வேறு பயன் இல்லாதவர்களாய் -என்னையே நினைப்பவர்களாய் –
எந்த மஹாத்மாக்கள் என்னை எல்லாக் கல்யாண குணங்களோடும் எல்லா விபூதிகளோடும் முழுமையாக
உபாசிக்கிறார்களோ -என்னோடு எப்போதும் சேர்ந்து இருக்கையையே விரும்பும் அவர்களுக்கு
நான் என்னை அடைவதாகிற யோகத்தையும் –
மறுபடி சம்சாரத்துக்குத் திரும்பி வராமையாகிய ஷேமத்தையும் அளிக்கிறேன்

கிலேசம்‌, கர்மம்‌, பலன்கள்‌, ஆசயம்‌ இவைகள்‌ இல்லாத புருஷ ஸ்ரேஷ்டன்‌ ஈஸ்வரனாம்‌–24–

ஈஸ்வரன் எத் தன்‌மையன்‌ என்பதை, 24, 25, 26-வது சூத்திரங்களிலும்‌,
அவரைப்‌ பக்‌தி செய்யும்‌ முறையை -27- 28-லும்‌,
அதன்‌ பயனை 29-லும்‌. விவரிக்கிறார்‌.

கிலேசம்‌, 2-வது பாதம்‌… 8-ம்‌ சூத்திரத்திற்‌: சொல்லி யிருக்கிறபடி, அவித்தை, அஸ்மிதை, ராகம்‌, துவேஷம்‌, ௮பி நிவேசம்‌, என்பனவாம்‌.
கர்மங்கள்‌ என்றால் அவைகளுக்குக்‌ காரணமான நன்மை, தீமையாம்‌.
பலம்‌ என்பது அக் கர்மங்சளின்‌ பயன்கள்‌- -அவை . ஜாதி ; ஆயுஸ்‌, போகங்கள்‌ என்பவையாம்‌.
ஆசயம்‌ என்றால் : பூர்வ கர்ம வாசனைகள்‌… இப்‌ பூர்வ கர்ம வாசனைகளே இந்த ஜென்மத்தில்‌ கர்மங்கள்‌ நடைபெறக்‌ காரணமாகும்‌.
இவை சித்தத்தில்‌ ஸம்ஸ்கார ரூபமாக இருக்கின்றன. புருஷன்‌ அவைகளின்‌ பலன்களை அனுபவிப்பதால்‌ அவனிடம்‌ ஆரோபிக்கப்படுகின்‌றன.
இவை , சண்‌டையில்‌ யுத்த வீரர்கள் ஜயித்தாலும்‌ தோல்வி யடைந்தாலும்‌, அஜ் ஜயமும்‌ தோல்வியும்‌ இராஜாவைச்‌ சேர்கின்‌றமை போலவாம் .
இந்த போகம்‌ சுத்தமாய்ப்‌ பற்றாத புருஷ ஸ்ரேஷ்டன்‌ ஈஸ்வரன்‌.

(1) வேதாந்திகள்‌, ஜீவனுக்கு அஞ்ஞாந தசையில்‌, கர்த்ருத்துவமும் போக்த்ருக்‌வமும்‌ உணடென்பார்‌. சாங்க்யர்களும் பாதஞ்சலர்களும்‌, கர்த்ருத்வம்‌ புத்திக்கும்‌, போக்த்ருக்துவம்‌ ஜீவனுக்கும்‌ உண்டென்பார்கள்‌. இந்த வித்தியாசம்‌ கவனிக்கக்‌ தக்கது.
(2) கைவல்யத்தை அடைந்த மஹா புருஷர்கள்‌ அநேகர்‌ உண்டு. ஆனால்‌, அவர்கள்‌ ஈஸ்வரர்கள்‌ ஆக மாட்டார்கள்‌ என்பதைக்‌ குறிப்பிட,
சிரேஷ்டன்‌, விசேஷன்‌ என்ற பதங்கள் உபயோகிக்கப்‌.பட்டு இருக்கின்றன
அவர்களுக்கு முன்‌ மூன்று பந்தங்கள்‌ இருந்து; பின்‌ அவைகள்‌ விலகிவிட்டன.

மூன்று பந்தங்களாவன
பிரகிருதிலயாளுக்கு ்‌ மூலப் பிரகிருதியால்‌ மாத்திரம்‌ பந்தம் உண்டு:

விதேகாளுக்கு (தேவர்களுக்கு): பிரக்ருதி விகாரங்‌களால்‌ (மஹத்‌, அஹங்காரம்‌, பஞ்ச தன் ,மாத்திரைகளால்‌) ஏற்படுகிற பந்தம் உண்டு,

மேற்கண்டவர்களுக்குக்‌ கீழானவர்களுக்கு தக்ஷிணாதி பந்தம் உண்டு. அதாவது பூத பவ்திகமான பந்தம் . .

ஈஸ்வரனோ எப்போதும்‌ எக்காலத்திலும்‌ பந்தம் இல்லாதவன்‌
பிரகிருதிலயாளுக்கு முன்‌னும்‌ பந்தம்‌ இருந்தது. இனியும்‌ பந்தம்‌.நேரிடும்‌. அவர்களுக்குப்‌. பிரக்ருதி யாலேயே பந்தம் ஏற்படுகிறது –

(3) அத் தன்மையான புருஷ ஸ்ரேஷ்டர்‌ இருக்கிறார் என்பதற்குப்‌ பிரமாணம்‌ என்னவென்ளால்‌, சாஸ்திரம் தான்‌.–ஸாஸ்த்ரம் எப்படிப்‌ பிரமாணமாகும்‌?
௮து உத்தம மானவர்களின்‌ உயர் நலம் அமைந்த புத்தியின்‌: ௮னுபவ ஞானம்‌. அத் தன்மையான புத்திக்‌கும்‌ சாஸ்திரத்திற்கும்‌ உள்ள சம்பந்தம்‌ அநாதி .
இது முன்னது, இது பின்னது என்று நம்மால்‌ அறிய முடியாது. அதனால்‌ ஈஸ்வரன் என்றும்‌ முக்தர்‌, என்றும்‌ எல்லா-சம்பத்துமுள்ளவர்‌.
மேலானவரையும்‌ சமானமான வரையும்‌ இல்லாதவர்‌,-அவர்‌ எல்லா ஐஸ்வர்யத்துக்கும்‌ முடிவ, எல்லை.

மனனக மலமற மலர் மிசை யெழு தரும்‌
மனனுணர்‌ வளவிலன்‌ பொறி யுணர்‌ வவையிலன்‌
இனனுணர்‌ முழுநல மெதிர் நிகழ்‌ கழிவினும்‌
இனனிலன் எனனுயர்‌ மிகுநரை யிலனே..

(4) உலகத்தில்‌ எல்லா வகையாலும்‌ சமமாயுள்ள இரண்டு
வஸ்துக்கள்‌ இல்லை. காலத்‌தினாலாவது வித்தியாலம்‌. ஏற்படும்‌.
““முன்புமாய்ப்‌ பின்பு மூழுதுமாய்ப்‌ பரந்த முத்தனே! முடிவிலா முதலே! ?
“குறைவிலா நிறைவே! கோதிலா ௮முதே !
ஈறிலாச்‌ கொழுஞ்சுடர்க்குன்றே!” மாணிக்க வாசகர்‌..-என்றபடி தானாய் தனி முதலாய் என்றும் உள்ளவர்

அத்வைத வேதாந்தத்தின்‌ மோக்ஷத்திற்கும்‌ பாதஞ்சலாள்‌
சைவல்யத்திற்கும்‌ வித்யாஸம்‌ என்னவென்றால்‌,
பின்னதில்‌ ஜீவ பேதத்துவம்‌, ஈஸ்வர பேதத்துவம்‌ இருக்கின்றன. முன்னதில்‌ இவைகள்‌ அற்று அகண்டாகார விர்த்தியைப்‌ பெறுதலே மோஷமாகும்

ஐஸ்வரியம்‌, ஞாநம் , இச்சா, கிரியா, சக்நிகளின்‌ ஸம்‌:பூர்ணமும்‌, விசேஷ ஞாநமும்‌, கிரியையும்‌ ஈஸ்வரனிடம்‌ எவ்விதம்‌ இருக்கப்பால் என?
ஈஸ்வரன்‌ ஸதா முக்தன்‌.. அவித்தைக்குப்‌ புறம்‌பானவர்‌. போக அப வர்க்கங்களுக்காக நம்மைப் போல அவருக்கு. மநம்‌ இல்லை.
அப்படியானால்‌ மநம்‌ இன்றி, ஞாநம் இரியா சக்திகள்‌ எவ்விதம்‌ அவரிடம்‌ உள்ளன என்றால்‌,
ஜீவர்களிடம்‌ உள்ள மநம்‌.ஸத்துவ, ரஜஸ்‌, தமஸ்‌ உள்ளதாக இருக்கிறது. அவர்‌ சுத்த ஸத்வமான மநத்தைச்‌ சுவிகரித்துக் கொள்ளுகிறார்‌.
தாமே அத்த சுத்த மநத்தில்‌, ஞாநம் , கிரியை-என்ற சக்திகள்‌ அமைகின்றன.
ஈஸ்வரன்‌ இத் தன்மையான மநத்தைச்‌ சுவிகரித்துக் கொளல்‌, மனிதர்களைப் போல் ௮வித்யையால் அன்று. அதனால்‌ இம் மநத்தில்‌ ஸ்வாமி,ஸ்வாமித்துவம்‌ இல்லை. ஜனங்கலின் மேலுள்ள பரம. கருணையால்‌,.
தாபத் திரயத்தினின்‌று அவர்களைக்‌ கரை யேற்றும்‌ பொருட்டு,
ஞாந தர்ம உபசேசத்திற்காக, தாமே சுத்த சத்துவமான மநத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்‌.
சாதாரண மனிதன்‌ அவித்தை வசமாகிறான்‌. ஈஸ்வரன்‌, ௮வித்தையின்‌ ஸ்வரூபத்தைத் தெரிந்து . கொண்டு…
அவித்தையை, லோகோபஹாரார்த்தம்‌, ஸ்‌வீகரித்துக் கொள்ளுகிறார்‌.
இராமனின்‌ வேஷம்‌ பூண்ட ஒருவன்‌, இராமனாக. நடித்தாலும்‌, அந்த நாடக காலத்‌திலும்‌, உண்மையில்‌ தான்‌
ராமன்‌ அல்லன்‌ என்த் தெரிந்து இருப்பான் போல, ஈஸ்வரன்‌ தாமே இந்த அவித்யை வருவித்‌துக் கொள்ளுகிறார்‌. இது அவருடைய தத்துவம் அன்று

(6) ஜகத்திற்கு க்ஷேமம்‌ உண்டாக்க வேண்டியதற்காக, ஸத்வ குணத்தை ஈஸ்வரன்‌ ஸ்வீகரித்துக் கொள்ளுகிறார்‌.

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

ஸத்வ குணமிருந்தால்‌ தான்‌, ஐகத்திற்கு அநு க்‌ரஹம்‌ செய்ய வேண்டுமென்று ஈஸ்வரனுக்கு இச்சை யுண்டாகிறது,
இவ் விதமாக அந்நியோந்நிய ஆஸ்ரய தோக்ஷம்‌ போலத் தோன்றுகிறது–உண்மையில்‌.இல்லை,
ஜகத்‌ ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம்‌ என்பவை அநாதியாக இருப்பதால்‌, ஈஸ்வரனிடம்‌ எப்போதும்‌ ஸத்துவ குணம்‌ உள்ளது.
அடுத்த கல்பத்தில்‌, ஸ்ருஷ்டி முறை இவ் விதமென்று சங்கல்பித்துக்‌ கொண்டு, ஈஸ்வரன்‌ ஒரு கல்பத்தின்‌ சிருஷ்டியை ஸம்ஹரிக்கிறார் –
முன்‌ சங்கல்பமானது மூலப் பிரகிருதியுடன்‌ மஹாப்‌பிரளய காலத்தில்‌ லய அவஸ்தையைப்‌ பெற்றிருந்தாலும்‌,
சிருஷ்டி காலத்தில்‌ அந்த ஸங்கல்ப வாசனையானது ,பின்பு ஈஸ்வரனின்‌ ஸத்வ ஸித்த ருபமாகப்‌ பரிணமிக்கின்றது.
ஒருவன்‌ மறு நாள்‌ சூரிய உதயத்திற்கு முன்‌ எழுந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன்‌ தூங்குகிறான்‌.
பின்பு, அவ்வெண்ணத்தின்‌ காரியமாக, அந்தக்‌ குறிப்பிட்ட காலத்தில்‌ எழுந்திருக்கிறான்‌.
இது போலவே ஈஸ்வரன்‌ ஸ்ருஷ்டி விஷயமும்‌, ஈஸ்வரன்‌ ஐகத்திற்கு ௮நு க்ரஹம்‌ செய்ய வேண்டுமென்று இச்சையும்‌,
௮தற்காகச்‌ சத்‌துவ குணத்தைச்‌ சுவீகரித்தலும்‌, அதனால்‌ ஸ்ருஷ்டியும்‌, இவை அநாதியாக
இருக்கின்‌றமையால்‌) மேல் கண்ட அந்யோன்ய ஆஸ்ரய தோஷம்‌ இல்லை.

(9) பிரளய காலத்தில்‌, ஈஸ்வரனின்‌ சித்தமானது, பிரகிருதியில்‌ லயத்தை அடைகிறது இல்லை யென்று சிலர்‌ சொல்லுவார்‌. அது சரி யன்று.
பிரகிருதியில்‌ லயத்தை அடையாமல் போனால்‌,சித்தம்‌ ௮தினின்று உண்டானதாகச்‌ சொல்ல இயலா.து ,
சித்தம்‌ ஜடமாயும்‌, ஈஸ்வரன்‌ சேதனனாகவும்‌ இருக்‌கின்றமையால்‌, சித்தம்‌ ஈஸ்வரனிடமிருந்து உண்டாவது என்று சொல்ல இயலாது .
அதனால்‌, மூன்றாவதாக வேறு ஒன்றைக்‌ கற்பிக்க,-மூன்றாவதாது இருப்பத்குப்‌ பிரமாணம்‌ இல்லை.
அதனால்‌, ஈஸ்வரரின்‌ சித்தமானது பிரதாநத்தில்‌ லயம்‌ ௮டைகிறது.

மேற்கண்டபடி சொல்வதற்குப்‌ பிரமாணம்‌ யாது?சாஸ்‌த்ரம் அதாவது வேதம்‌, ஸ்மிருதி, புராணங்கள்‌, இதிஹாஸங்கள்‌,
இவைகள்‌ ஈஸ்வரனின்‌ உத்கிருஷ்ட ஸத்வ குணத்தினின்று உண்‌டாயின. அதாவது மகரிஷிகளின்‌
சுத்த மநத்தின்‌ ஸத்துவ நிலையில்‌ தோன்றிய விஷயங்கள்‌ பின்பு வெளி வந்தன

அவரிடத்தில்‌ (ஈஸ்வரனிடத்தில்‌)) எல்லாவற்றையும்‌ அறியும்‌ சக்தியானது உயர்வற உயர்வு பெற்றது .–23-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் இத்யாதி
இந்திரியங்களுக்குப்‌ புறம்பாய்‌ உள்ள விஷயங்களில்‌,
நடந்த விஷ்யம்‌, நடக்கப் போகும்‌ விஷயம்‌, நடக்கிற விஷயம்‌ இவைகளைசத் தனியாகவோ, ஒருங்காகவோ, பெரிதாகவோ, அல்லது சிறிதாகவோ அறியும்‌. சக்தியானது ஸர்வஞ்ஞபீஜம்‌, அதாவதுமேன்மேலும்‌ பெருகிக் கொண்டு போய்‌ எந்த இடத்தில்‌ முடிவு பெறுகிறதோ, அந்த ஞாந ஸ்வரூபி ஈஸ்வரன்‌.
ஞாநம்‌ பெருகிக் கொண்டு போய்‌ முடிவுபெறும்‌ இடம்‌ ஈஸ்வரன்‌ என்றதினால்‌, ஈஸ்வரன்‌. இருக்கிறான்‌ என்று சித்திக்கும்‌.
௮ப்போது, சப்தப்‌ பிரமாணம்‌ வேண்டுவது இல்லையே என்றால்‌, அறுமாநத்தில்‌ ஈஸ்வரன்‌ உளன்‌ என்று சாமாந்தியமான அறிவு மாத்திரம்‌ உண்டாகும்‌.
அவன்‌ குணங்களைப் பற்றியும்‌, இத்தன்மையன்‌ என்பதைப்‌ பற்றியும்‌ உள்ள விசேஷ ஞாநம்‌ சப்தப் பிரமாணத்தினால் தான்‌ உண்‌டாகும்‌.

அவருடைய ஸ்ருஷ்டியினால்‌ அவருக்கு யாதொரு பிரயோஜாநமுமில்லை. பிராணிகளின பிரயோஜநம்‌ உண்டாகிறது-பிராணிகளுக்கு ஞான தர்மங்களை உபதேஸிப்பதனால்‌,“ கல்பம்‌, பிரளயம்‌, மஹாப் பிரளயம்‌ இவைகளில் எற்படும்‌ ஜநந மரணங்களினின்று பிராணிகள்‌ .கரையேறும்படி செய்வது தான்‌ ஈஸ்வரன்‌ அடையும்‌ பிரயோஜநம்‌.இவ்விதமே பஞ்ச சிகாசாரியார்‌ முன்னர்‌ அடியில்‌ வருமாறு சொல்லி யிருக்கின்றார்
.” ஆதி வித்வான் (கபிலர்‌) சுத்த ஸாத்விக சித்தத்தை நிர்மித்து, அதன்‌ மூலமாய்‌, கருணையால்‌ ஜிஞ்ஞாஸூவாகிய ஆசுரி ‘என்பவருக்கு ஸாங்கிய சாஸ்திரத்‌தை உபதேஸித்தார்‌.
கபிலர்‌, மஹா விஷ்ணுவின்‌ ௮வதாரமாகையால்‌, ஈஸ்வரன்‌ பிராகிருத்‌ சரீரமில்லாதவர்‌, அதனால்‌ சுத்த சித்தத்தை நிர்மித்துக் கொண்டார் எனச்‌ சொல்லி யிருக்கிறது.”
3. சாதாரணமாய்‌ ஜநங்களுக்கு, அறிவு, ரஜஸ்‌, தமஸ்‌. என்ற குணங்களின்‌ சம்பந்தத்‌தினுல்‌, மநம்‌ ஆவரண விஷேப சக்திகளுக்‌கு உட்பட்டிருக்கிறது. -ஈஸ்வரனுக்கோ இவை யில்லை.
4-புத்தர் கபிலர் அர்ஹதர்கள்‌ முதலான அநேக தீர்த்தங்கரர்கள்‌ (சாஸ்திரத்தை உண்டு பண்ணியவர்கள்‌, அவதார புருஷர்கள் மஹான்கள் அந்த அந்த மதங்களில்‌ ஏன் ஸர்வஞ்ஞா்களாகச் சொல்லக்கூடாது-ஸர்வஞ்ஞன் என்ற பதம் அனுமானத்தினால் ஒருவன் என்றே ஏற்படும்
அனுமானத்தினால் ஸாமாந்யமான ஞாநம்‌ உண்டாகுமே யன்றி விசேஷ ஞாநம்‌ உண்டாகாது. அவ் வீஸ்வரனுடைய விசேஷ குணங்‌களைப் பற்றிய ஞாநம்‌ உண்டாகாது,அது ஆகமத்தினால்‌ தான்‌ கூடும்‌. (ஆகமம்‌- வருதல்‌. இந்திரியங்கட்குப்‌ புறம்பான விஷயங்களைப்‌ புத்திக்குத்‌ தெரிவிக்கும்‌ சாஸ்திரம்‌, ஆகமம்‌.
இது வழக்கமாய்‌ வேதத்‌திற்கே சொல்லப் படுகிறது). ஆனால்‌ புத்தர்‌ முதலியவர்களால்‌, உண்டு பண்ணப்பட்ட சாஸ்‌திரங்கள்‌ ஆகமங்கள்‌ ஆக மாட்டா, ஆகம ஆபாசமாம்‌. போலியானவைகள்‌ எல்லாப்‌ பிரமாணங்களுக்கும்‌ விரோதமான க்ஷணிக ஞாநம்‌, ஆத்மா இல்லை என்‌பது
முதலியவைகளை அம்மத சாஸ்திரங்கள்‌ உபதேஸிப்பதனால்‌ அவை புத்திக்கு மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன.
சுருதி, ஸ்ம்ருதி , இதிஹாஸங்கள்‌, புராணங்கள்‌ இவைகள்‌ தான்‌ இஹ, பர , லோக விஷய சுகங்கள்‌, ஸாஸ்தமான பேறு இவைகளை அடைவதற்கு உண்மையான உபா யங்களை உபதேஸிக்கின்றன.
ஈஸ்வரனின்‌ பெயர்‌, குணங்கள்‌ முதலியவை வேத சாஸ்‌திரங்களால்‌ தான்‌ ௮றியக் கூடியவை, பெயர்‌ என்‌றால்‌ ஆறு அங்கங்கள்‌. பத்து குணக்கள்‌ ஏற்படுகின்றன

இவ்விதம்‌ வாயு புராணம்‌:– எல்லாவற்றையும்‌ அறியும் தன்‌மை, என்றும்‌ திருப்தியாபிருத்தல்‌, ௮நாதியான ஞாநம்‌, ஸ்வ தந்த்ரம் , குறைவில்லா சக்தி , அநன்த சக்தி இவை ஆறும்‌ ஈஸ்வர அங்‌கங்கள்‌ என்று அறிஞர்கள்‌ சொல்‌லுகின்றார்கள்‌.
ஞாநம்‌, வைராக்‌கியம்‌, ஐஸ்வரியம்‌, தபஸ்‌, ஸத்தியம்‌, ஷமை, தைர்யம்‌, ஜகத்தை சிருஷ்டிக்கும்‌ சக்‌தி -ஆத்ம ஸ்வருப ஞாநம்‌, எல்லாவற்றிற்கும்‌ அதிஷ்டமாக விருத்தல்‌ என்ற 10 குணங்கள்‌ எப்பொழுதும்‌ அழிவில்லாமல்‌ ஈஸ்வரனிடம்‌ இருக்கின்றன.
இத்தன்மையான குணங்‌களை உடையவரானால்‌ துக்கம்‌ நிறைந்த இந்த லோகத்தை ஈஸ்வரன்‌ சிருஷ்டித்திருக்க மாட்டார்‌ என்ற ஆக்ஷேபணைக்கு சமாதாநம்‌ :–பரம சிரேயஸ் கரமான கைவல்யத்தைப்‌ பிராணிகள்‌ அடையும்‌ பொருட்டு சுக துக்கங்களை ஏற்படுத்தி, அவைகளின்‌ ௮னுபவங்களினால்‌ பிராணிகளின்‌ மநஸ்‌ சுத்தியாகி , ஞாநம்‌ உண்டாகி, பிரகிருதி புருஷ விவேகம்‌ ஏற்படுகிறது . அதனால்‌ கைவல்யம்‌ சித்திக்கிறது -இது ஈஸ்வரனின்‌ பரம காருண்யத்தைக்‌ காட்டுகிறது.

முக்தி இரு விதம் :–1) சத்யோ முக்தி (2) கிரம முக்தி –இந்த ஜந்மத்திலேயே உடனே முக்தி பெறுதல்‌ ஒரு விதம்‌.
மேல்‌ மேல்‌ படியேறி மேல்‌ மேல்‌ லோகங்களிற்‌ சென்று கடைசியில்‌ பிரஹ்ம லோகம்‌ 7-வது லோகம்‌) போய்‌
பிரஹ்மாவுடன்‌ தங்கி யிருந்து மஹா பிரளயாந்தத்தில்‌ பிரஹ்மாவுடன்‌ சேர்ந்து முக்தி பெறுதல்‌ தான்‌ கிரம முக்தி எனக்‌ கூறப்படுவது.
ஈஸ்வரனால்‌ உபதேஸிக்கப்‌ பட்ட ஞாந தர்மங்‌களினால்‌ அநேகர் இம் முக்தியை அடைகிறார்கள்‌–மற்றவர்களோ பிரகிருதியில்‌ லயமடைகிறார்கள்‌,
மரணத்துக்குச்‌ சமாநமான துக்கத்தை யடைகிறார்கள்‌. அவரவர்கள்‌ விகாச முறையில்‌ இருக்கின்‌ற படிகளான நிலைமையுடன்‌ லயம்‌ அடைகின்றார்கள்‌.
பின்பு வேறு ஒரு பிரஹ்மாண்டம்‌ ஸ்ருஷ்ட்டி ஏற்படும் காலத்தில் அந்தந்த நிலையில்‌ வெளிக் கிளம்புகின்றார்கள்
ஆனால் இவர்கள் ப்ரக்ருதி லயர்கள் அல்லர் , பிரகருதி லயர்கள்‌ உபாஸனைக் கிரமத்தில்‌ முக்‌தி யடைகின்றவர்கள்‌.
பிரஹ்மாவின்‌ ஒரு பகலில்‌ 14 கல்பம்‌, 14 “மனு , 14 இந்திரன் , இவ்வாறு! ௮திகாரிகள்‌ பதினான்கு பதினான்காக நிகழும்‌, பிரண்மாவின்‌ இராத்திரி தினப் பிரளயம்‌, ஓர் ஓர் கல்பத்தில் -பூ: பூவ: ஸ-மவ: என்ற மூன்று லோகங்களுக்கு மாத்திரம்‌ லயம்‌,
4 யுகங்களும்‌ 72 தரம்‌ சுற்றி வந்தால்‌ ஒரு கல்பம்‌. இப்போது பிரஹ்மாவுக்கு 51-வது வயது நடப்பு.
வைவஸ்வத மந்வந்தரத்தில்‌ 27 தடவை சதுர் யுகங்களும்‌ சுற்றி வந்து விட்டன. பிரஹ்மாவின்‌ 100-வதுவயசு முற்றுப்பெறுகிற காலமே மஹாப் பிரளய காலமாம்‌. சத்திய லோகத்தில்‌ பூசல்கள்‌ எல்லாம்‌ லயமடைகின்‌றன.-யோகிகளின் குரு பரம்பரை ஈஸ்வரன்‌, ஹிரண்ணிய கர்ப்பராவர்‌,

கால வரம்பைக் கடந்தவராகையால்‌ அவர்‌, பூர்விக ஞாநாசாசியர்‌களின்‌ குரு வாவர்‌–26-

அவருடைய பெயர் பிரணவம்–27-

பிரணவம்‌ என்பதின்‌ பொருள்‌ என்றும்‌ புதிதாயுள்ளது . என்பதாம்‌,” மற்றைய சப்‌த ராஸிகள்‌ மாறும்‌,
பிரணவம்‌ ஒன்றே என்றும்‌ மாறாதது , நித்யமானது. *ஓம்‌’ என்ற பதத்தித்‌குப் பொருள்‌ ஈஸ்வரன்‌ என்பதே
பதம்‌, அர்த்தம்‌ (பொருள்‌) இவைகளின்‌ ஸம்பந்தம்‌ ஸங்கேதமாக எற்பட்டதா , அல்லது தீபம்‌, பிரகாசம்‌ இவைகளின்‌ சம்பந்தம்‌ போன்று என்றும்‌ உடன்‌ நிகழ்வதா!
அவருக்கும்‌ (அர்த்தத்திற்கும்‌ பிரணவத்தித்கும்‌ பதத்திக்கும்‌ உள்ள சம்பந்தம்‌ ஸ்வபாவமாய்‌ என்றும்‌ உள்ளது.
மேலும்‌, சங்கேதம் என்றால்‌ மனிதர்களுடைய தன்று. ஈஸ்வரனால்‌ சிருஷ்டி காலத்திலேயே, இன்ன பதத்திற்கு இன்ன பொருளென்று சங்கற்பிக்கப் பட்டது .
பதத்திற்கும்‌ அர்த்தத்திற்கும்‌ உள்ள சம்பந்ததை சங்கேதம்‌ வெளிப்படுத்துகின்‌றது.
பிதா, புத்தன்‌ என்பவர்களுக்குள்‌ நிகமும்‌ சம்பக்தம்‌ என்றும்‌ உள்ளது. அதை வார்த்தை பிரகாசப்படுத்‌துகிறது
ஓர் ஓர் கல்பத்தின்‌ முடிவில்‌, பிராணிகள்‌ வாசனைகளுடன்‌
லயமடைந்து, பின்பு வேறு கல்ப ஆரம்பத்தில்‌ எல்லா வாசனைகளுடன்‌ வெளி வருமாறு போலே , சப்‌த ராஸிகள்‌ அவைகளின்‌ சக்தியுடன்‌
(இன்ன அர்த்தத்திற்கு இன்ன சப்தம்‌ என்ற சம்பந்தம்‌) பிரளய காலத்தில்‌ பிரக்ருதியில்‌ லயம்‌ ௮டைகின்றன. பின்பு ஸ்ருஷ்டி காலத்தில்‌ வெளிப் படுகின்றன,
சப்தத்திற்கும்‌ .அர்த்தத்திற்குமுள்ள சம்பந்தம்‌ பரிணாம நித்தியம்‌, கூடஸ்‌த. நித்தியமன்று .-புருஷன்‌ ஒருவனே கூடஸ்‌த நித்தியன்‌
சப்‌த ராசிகள் எப்போதும்‌ மாறிக் கொண்டே யிருக்கின்‌றன.
பூமிபினின்று உண்டாகின்ற ஜீவ ராசிகள்‌ (உத் பிஜம்‌) மற்ற காலங்களில்‌ பூமியோடு பூமியாக லயமாகி, வருஷ காலத்தில்‌ வெளியாகின்றன.
அவை போல ஸ்ருஷ்டி காலத்தில்‌, முன்‌ லயம்‌ அடைந்த வஸ்துக்கள்‌, ஜீவ ராஸிகள்‌, -சப்‌த .ராசிகள்‌ பின்‌ வெளிப்படுகின்‌றன.*

அப் பிரணவத்தை ஜபித்தலும்‌ அதன்‌ பொருளாகிய ஈஸ்வரனைத்‌ தியாநித்தலும்‌ வேண்டும்‌.28-

அப்புடிச்‌ செய்வதனால்‌ யோகியின்‌ ,மனம் ஆவரண விக்ஷேப சக்தி குறைந்து வர ஐகாக்ரிபம்‌ பெறுகிறது
அந்த ஐகாக்ரியத்தினால்‌ ஸமாதியும்‌ ௮தன்‌ பலனான ஈஸ்வரப்‌ பிரகாசமும்‌ உண்‌டாகும்‌.

அதனால்‌ (பிரணவ தியாநத்தினால்‌) பருஷனுடைய உண்மையான ஸ்வரூப ஞாநமும்‌ விக்நங்கள்‌ நீங்குதலும்‌ உண்டாகும்‌,–29-

ஈஸ்வரப்‌ பிரஸாதத்தினல்‌ வியாதி முதலானவைகள்‌-இவனை அணுகா. இவனை விட்டு அகன்று விடும்‌.
தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தைப்‌ பார்ப்பான்‌. ஈஸ்வரன் ஸுத்தனாயும் பிரஸந்நராயும்‌ (கிலேசங்கள்‌ இல்லாதவராயும்‌),
கேவலனாயும்‌ (புண்‌ணிய பாப சம்பந்தம் இல்லாதவனாயும் -ஜென்ம ஆயுஸ் போகங்க ள் இல்லாதவனாயும்‌ எப்படி. இருக்கிறுனோ,
அப்படியே புத்திக்குப்‌ பிரகாசத்தை உண்டு பண்ணுகிற புருஷனும்‌ இருக்கிறான்‌.
விருத்த தர்மங்‌கள்‌ உள்ள இரண்டு வஸ்‌துக்களில்‌ ஒன்றை அறிந்தால்‌ மற்றதை அறிய முடியாது. ஓரே மாதிரியான தர்மங்களை யுடையவைகளாக இருப்பின்‌ ஒன்றை அறிந்தால்‌ மற்றதை அறிதல்‌ கூடும்‌,
அதனால்‌, ஈஸ்வரனுக்கும்‌ புருஷனுக்கும்‌ (யோகியின்‌ புத்திக்கு சாஷியான புருஷனுக்கும்‌) மேற்கண்டபடி. குண ஸாம்யமிருப்பகால்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தை அறிவதால்‌, புருஷ ஸ்வருபத்தை அறிவதாகும்‌.
பிரத்யக் சேதனன்‌ என்றால்‌ அவித்தியாவான்‌, ௮தாவ,து உள்ளபடி அறியாமல்‌ விபரீதமாக அறிவன்‌ என்பதாம்‌,
இதன்‌ தேர்ந்த கருத்து, இந்தப்‌ பிரணவ உபாஸனையால்‌, சித்தம்‌ அந்தர் முகப்படுத்தலும் தடைகள்‌ நீங்குதலும்‌ உண்டாகும்‌.

தடைகளாவன?–(1) வியாதி, (2) மந நொய்மை, (8) ஸம்சயம்‌,(4) பிரமாதம்‌, (5) ஆலஸ்யம்‌, (6) அவிரதி (துறத்தல் இன்மை),
(7) பிராந்தி தர்சநம்‌, (5) யோக பூமியை அடையாமை,(9) சமாதி நிலையினின்று நழவுதல்‌. மநத்திற்கு விக்ஷேபத்தை யுண்டு பண்ணும்‌ தடைகளான,
இவை ஒன்பது, இவைகளால் தான்‌ மநோ விர்த்திகள்‌ உண்டாகின்றன.–30-

வியாதி வாத, பித்த, ஸ்லேஷ்ம தாதுக்களும்‌, ஆகாரங்‌ களின்‌ ரசமும்‌, மநஸ்‌ முதலிய விந்திரியங்களும்‌ நேர்மை யில்லாமலிருத்‌தலால்‌ உண்டாகும்‌.
மந நொய்மை–ஒரு காரியத்தைச்‌ செய்வதற்குத்‌ தகுதி இல்லாமை, அதாவது, பூர்வ அனுபவமின்மையாலும்‌,
பூர்வ ஸம்ஸ்காரம் இன்மையாலும்‌ ஒரு காரியத்தைச்‌ செய்வதற்குத்‌ தகைமையின்றி இருத்தல்‌.
ஸம்சய்ம்‌– இதுவோ அதுவோவென்று சந்தேகம் கொள்ளுதல்

பிரமாதம்‌-ஸமாதி ஸாதநங்களில்‌ பிரவிர்த்தி யில்லாமை.
ஆலஸ்யம்‌– தமஸினால்‌, சரீரம்‌, மநம்‌; இரண்டும்‌ பிரவிர்த்தி இல்லாமல்‌ இருத்தல்‌,
அவிரதி– விஷய சுகங்களின்‌ மேல்‌ ஆசை, விஷயங்களில்‌ ஓழிவில்லாமை.
பிராந்தி தர்சநம்‌–பிரமையினால்‌ ஒன்றை வேறொன்றாக வறிதல்‌
யோக பூமியை யடையாமை-*யோகாப்பியாஸம்‌ செய்து கொண்டு வருகையில்‌ உயர்ந்த ஸமாதி நிலையைப்‌ பெறாமல்‌
கீழான பூமிகளின் கண்‌ உண்டாம்‌ சித்திகளின்‌ மேல்‌ ஆசை கொண்டு, அவைகளில்‌ திருப்தியாக விருத்தல்‌.
ஸமாதி நிலையினின்று நழுவுதல்‌ — ஸமாதி நிலை பெற்ற பிறகு அதைக்‌ காப்பாற்றிக் கொள்வதில்‌ முயற்சி யில்லாமை,

துக்கம்‌, தவ்ர் மநஸ்யம்‌, சரீர நடுக்கம்‌, உச்வாஸம்‌, நிச்வாஸம்‌ இவை விக்ஷேபத்துடன்‌ நிகழ்பவை.–31-

துக்கம்‌ என்பது ஆத்யாத்மிகம்‌, ஆதி பெளதிகம்‌, ஆதி தைவிகம்‌ இவைகளால்‌ உண்டாகும்‌.துக்கம்‌– பிரதி கூலமான ௮னுபவம்‌.
தெளர்மால்யம்‌- செய்த முயற்சி பலிக்காமல்‌ அதனால்‌ உண்‌டாம்‌ மநச் சஞ்சலமாம்‌.
சரீர நடுக்கம்‌- அங்கங்களின்‌ அசைவு. இது யோகாப்பியாஸத்திற்கு விரோதி, –
உச்வாஸ நிச்வாஸம்‌–நம்முடைய ஸ்வாதீநமின்‌றி காற்று உள்‌ளே போவதும்‌ வெளியே வருதலும்‌,
ரேசகம்‌, பூரகம்‌ என்றவை இத்தனை மாத்திரை என்ற ௮ள வுக்‌குட் பட்டு சுவாஸம்‌ நடை பெறும் படி செய்‌தல்‌,

இவைகளை நிவிர்த்தித்து ஒன்றான தத்துவத்தை மாத்திரம்‌ அப்பியஸித்‌தல்‌ வேண்டும்‌.–32-

(1) நிவிர்த்தித்து என்றால்‌, முன்‌ சொல்லி யிருக்கிற படி, வைராக்யத்தால் நிவிர்த்தி எற்படுத்தலாம்‌,
ஒன்றான தத்துவம்‌ என்பதற்கு ஈஸ்வரன்‌ என்பது அர்த்‌தமாம்‌.
விஞ்ஞாந பிஷுவின்‌அபிப்‌பிராயப்படி யாதேனும்‌ ஒரு தத்துவத்தைப்‌ பற்றிச்‌ சிந்தனை கொள்ளுதல்‌ இதில்‌ பயன்படும்‌ என்‌கிறார் ,
ஆனால்‌ முன்னுள்ள சூத்திரங்களை நோக்க , ஈஸ்வரன்‌ என்று கொள்ளுதலே உசிதமாகும்‌.
மேலும்‌ மநம்‌ ஒருமுகப் பட வேண்டுமென்றால்‌ உயர்வற உயர்நலம் அமைந்த அந்த பரம புருஷனையே தியானித்தல் வேண்டும்‌.

க்ஷணிக விஞ்ஞா௩ வாதிகளின்‌ மத கண்டநம்‌:…-
(1) அவர்கள்‌ மதப்படி, மநோ விர்த்திகளைத்‌ தவிர,மநம்‌ என்று பிரத்தியேகமாக வேறு ஓன்‌றுமில்லை.
ஒவ்வொரு விர்த்தியம்‌ க்ஷணிகம்‌ –அதனால்‌ ஒவ்வொரு விர்த்தியும் நிகழ்தல் ஏகாக்கரமாகும்‌-
அதனால்‌ விக்ஷிப்தமே இல்லை என முடியும்‌. அதனால்‌ யோகாப்பியாஸ முயற்சி வேண்டுவதில்லை யென வேற்படும்‌. அது சரி யன்று
மநம்‌ வேறு, க்ஷணிகமன்று, நிலையுள்ளது. ஒரு பதார்த்தத்தையோ பல பதார்த் தங்களினின்‌று வேறுபடுத்‌தி
அந்த வேறு படுத்தப்பட்ட பதார்த்தத்தில்‌ மநத்தை நிற்கும்படி செய்தல்‌ கூடும்‌, அதனால்‌ ஏகாக்ரம்‌ எற்படும்‌,
அதனால் விக்ஷேப நிவர்த்திக்காகச் செய்ய வேண்டிய முயற்‌சி பிரயோஜநமுள்ளது தான்‌.
2) க்ஷணிக விஞ்ஞாந வாதிகளின்‌ வேறு அபிப்பிராயம்‌-
விர்‌த்திகள்‌ பல உள. அவைகளின்‌ பிரவாகத்தில்‌, ஓரே விர்த்தியாகவே மநம்‌ மாறி நிற்றல் கூடுமன்றோ?
௮து சரியன்று -. அவர்களின்‌ ஸித்‌தாந்தப்படி, விருத்தியும்‌ மநமும்‌ க்ஷணிகமென்பதனால்‌, இரண்டினும்‌ பிரவாகம்‌ ஏற்படுதல்‌ கூடாது.
அதனால் ஏகாக்கிரம் உண்டாவதற்கு அவகாசமில்லை. நான்‌ என்ற ஆலய விஞ்ஞாகம்‌ (சாமாந்ய அஹங்காரம்
என்பார்‌ வேதாந்திகள்‌) என்ற ஸ்திரமான நிலைமை இருக்கின்றது என்றாலோ,
அந்த “நான்‌!” என்பதற்கு விக்ஷிப்தம் ,இன்‌மையாலும்‌, விக்ஷிப்‌தம்‌ மநத்தை பொறுத்ததாக விருக்கின்றமையாலும்‌ யோக முயற்சி. பிரயோஜநம்‌ இன்றே என்பது ஏற்படும்‌,

3-க்ஷணிக விஞ்ஞாநவாதிகள்‌, ௮தாவது வைநாசிகர்களின்‌ சித்தாந்தத்தில்‌, தர்மம்‌ ஒன்றே உளது.-அது ஆஸ்ரயிக்கும்‌ தர்மி என்பது இலது என்பதாம்‌. அதனால்‌ அந்தக் கரணம்‌ இல்லை என்‌பார்‌.
விர்த்திகளின்‌ பிரவாகம்‌ இருக்கின்றது என்றால்‌, அது சரி : யன்று. பிரவாகம்‌ என்றால்‌ ஸஜாதீயப்‌ பிரத்தியயம்‌ (ஒரே மாதிரி யான விர்த்திகள்‌) தொடர்ந்து நிகழ வேண்டும்‌,
அப்படியில்லாமல்‌ விஜாதீயப்‌ பிரத்தியயம்‌ (விருத்தமான பிரத்தியயங்கள்‌] நடை பெற்றால் பிரவாகம்‌ எங்கனம் உண்டாகும்‌? விர்த்திகள்‌ தனித்தனியாக உண்டாகி அழிகின்றமையால்‌, ஒரு விர்க்தியின்‌ பலனை மற்றொரு விர்த்தி அனுபவிப்பதும்‌ அறிதலும்‌ எங்கனம்‌?

4-மநம்‌ ஒவ்வொரு ஷணத்தித்கும்‌ வேறு வேறு என்றால்‌ நான்‌ என்ற அநுபவம்‌ நிகழ மாட்டாது.
விர்த்தி பேதங்கள்‌ இருப்‌பினும்‌, நான்‌ என்ற தொடர்புள்ளது. விர்த்திகள்‌ விஷயங்கள்‌ வெவ்வேறு ஆயினும்‌, நான்‌ என்ற ஞானம் அபி பின்னமாக அனுபவத்திலிருக்கின்றது.
சித்தம்‌ ஓவ்வொரு விஷயத்திற்கும்‌ வேறு வேறு ஆயின் இந்த நான்‌ என்ற அநுபவம்‌ எப்படி உண்டாகும்‌?
அது பிரமை (மருள்‌) என்று சொல்வது சரியன்று, அபேதமான “அஹம்‌” என்ற ஞாநம்‌ பிரத்தியஷமான அநுபவம்‌, இதற்கு விரோதமான வைநாசிகர்களின்‌ மதம்‌ சரியன்று,

சுகமாமிருப்பவர்கள்‌, துக்கிக்கிறவர்கள்‌, புண்யம்‌ செய்பவர்கள்‌,பாபிகள்‌. இவர்களிடம்‌ முறையே
ஸ்நேஹம் , கருணை, சந்தோஷம்‌, உபேக்ஷை இப் பாவனைகளை அப்பியாசம்‌ செய்வதால்‌ மனம் பிரஸாதம்‌ பெறுகிறது.–33

ராகத்‌ த்வேஷாதிகள்‌, அகங்காரம்‌, அசூயை , சரிஷை, கோபம்‌ முதலிய துர்க் குணங்கள்‌ நீங்கி மநம்‌ நிர்மல்மாக வேண்டியதற்கு உபாயம்‌ சொல்லுகின்றார்‌. சுகமாயிருப்பவரைப்‌ பார்‌த்தால் ஈரிஷை உண்டாகும்‌ அதனால்‌ மநத்திற்குக்‌ கல்மஷ்ம்‌ உண்‌டாகும்‌.
அப்படி, உண்டாகாமல்‌ இருத்தற்‌ பொருட்டு அவர் பால்‌ ஸ்நேஹ பாவத்தையும் துக்கத்திற்குள்ளானவர்களிடம்‌ தயை, காருண்ணியத்தையும்‌ புண்ணியம்‌ செய்பவர்களிடம்‌ சந்தோஷத்தையும்‌, பாபம்‌ செய்பவரிடத்தில்‌, அவரையும்‌ அவர்‌ செய்யும்‌ பாபத்‌
தொழிலையும் பற்றிக்‌ கவநியாதிருத்தலையும்‌, நம்‌ மநத்தில்‌ உண்டு பண்ணிக் கொளல்‌ வேண்டும்‌.
அப்படிச்‌ செய்வதனால்‌ மநத்தின்‌ சாஞ்சல்லியம்‌ நீங்கும்‌. பரிசுத்தமாகவும்‌, ரஜஸ்‌, தமோ குணங்கள்‌ நீங்கப் யெற்று, மநம்‌ சுத்த ஸாத்விக குணமுடைய தாகும்‌ அதனால்‌ சித்தம்‌ ஐகாக்ரியம்‌ அடையும்‌, மநம்‌ ஒரு நிலைப் பெறும்‌.

இந்த சூத்திரம்‌ த்யான காலங்களில்‌ தவிர, மற்ற காலங்களில்‌,-அதாவது உலகத்தில்‌ நடைபெறும் காலத்தில்‌, யோகி ஒழுக வேண்‌டிய முறையை உபதேசிக்கின்றது

பிராணனைப்‌ பிரயத்நத்தால்‌ (யோக முறைப்படி) வெளியே விடுதலும் , உள்ளே நிறுத்தலும்‌, என்ற பயிற்சியாலாவது (மநத்தை ஒருதலைப்‌ படுத்தல்‌ வேண்டும்‌,)–34-

முந்திய சூத்திரத்திற்‌ சொல்லியிருக்கிறபடி. **மைத்‌ரீ கருணை ”” முதலிய தன்மைகள்‌ ஏற்படாவிடில்‌, மநத்தை ஒரு நிலையில்‌ இருக்கும்படி செய்தலுக்குச்‌ சாதநங்களைச்‌ சொல்‌கிறார்‌,
இந்த சூத்திரத்தில்‌ ஒரு உபாயம்‌ சொல்லுகிறார் அது தான் -பிராணாயாமம் – வா என்பது இனி வரும்‌ மற்ற சாதநங்களை உத்தேசித்தது.
பிராணாயாமம் செய்தலினால் மனத்தின் கண் உண்டாகும் விர்த்திகள் ஒடுங்கும்

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்கு உண்டு
மன்மனம் எங்‌கில்லை வாயுவும் அங்கு இல்லை
மன்மனத்‌ துள்ளே மகிழ்ந்து இருப்‌ பார்க்கு
மன்மனத் துள்ளே மனோ லயமாமே….திரு மந்த்ரம்

வெளியே விடுதல்‌ (ரேசகம்‌ செய்தல்‌) உள்ளே நிறுத்தல்‌ (கும்‌பகம்‌ செய்தல்‌) என்ற முறை இந்த சூத்திரத்தில்‌ சொல்லி யிருக்கிறது .
அதாவது பூரகம்‌ செய்யாமல்‌ கும்பகம்‌ செய்தலாம்‌. இம்‌ முறையில்‌ வெளியேறின வாயுவை வெளியிலேயே இருக்கும்படி. செய்தல்‌ கும்பகமாம்‌.
இவ்விதம்‌ செய்வதால்‌, சரீரம்‌ லகுத்துவத்தை அடைகிறது,-அதன் மேல்‌ மநம்‌ ஸ்‌திரப்படுறது,
பூரகம்‌, கும்பகம்‌, பின்பு ரேசகம்‌ என்ற முறை மற்ற ஓன்று -அது இந்தவிடத்தில் சொல்லப்பட வில்லை

அல்லது. விஷயங்களை ஆஸ்ரயித்த பிரவிர்த்தியானது மநத்தை அசையாமல்‌ கட்டுப்படுத்‌தும்‌–35-..

விசேஷமான இந்திரிய சக்திகளை உண்டுபண்ணக் கூடிய மூக்கு நுனி முதலிய ஸாதாநங்களில்‌ இத்த ஏகாக்ரிய முறைகளே நாடுதல்‌,
யோக முறையில்‌ நன்னம்பிக்கையை யுண்டு பண்ணும்‌.-அப்‌படிச்‌ செய்வதால்‌ தூரத் திருஷ்டி தூரக் கேள்வி, வாசனைப்‌ பொருளின்றி நல்ல வாசனைகளின்‌ அனுபவம்‌ இவை போன்ற சித்திகள்‌ உண்‌டாகிறதனால்‌, யோகாப்பியாசத்‌தில்‌ உண்மையான நம்பிக்கை ஏற்படும்‌. அதனால்‌, தீவிரமான யோக முயற்சி உண்டாகும்‌.
நாஸிகாக்கிரத்தில்‌ மநத்தை நிறுத்தினால்‌ திவ்விய(சூக்ஷ்மமான) கந்தங்களின்‌ ௮னுபவமும்‌, நாக்கின்‌ நுனியில்‌ மநத்தை நிறுத்தித்‌
தியாநம்‌ பண்ணினால்‌ தாரணை, த்யானம் , சமாதி முறைகளை அப்பியஸித்தால்‌ (இதுவே ஸம்யமம் என்றும்‌ பெயர் பெறும்‌),
திவ்ய ரஸங்களின்‌ அநுபவமும்‌, தாலுவில்‌ தியாநம் செய்தால்‌ திவ்ய ரூபங்களின்‌ அனுபவமும்‌, நாவின்‌ மத்தியில்‌ த்யானம் செய்தால்‌ திவ்ய ஸ்பரிசங்களின்‌ ௮னுபவமும்‌, நாவின்‌ அடி மூலத்தில் த்யானம் செய்‌தால் திவ்ய சப்‌தங்சனின்‌ ௮நுபவமும்‌ உண்டாகும்‌.
இவ்விதமான அனுபவம்‌ ஏற்பட்டால்‌ ஸம்சயம் நீங்கி ஸ்தைர்யம்‌ உண்டாகி சமாதிப் பிரஞ்ஞைக்கு துவாரம்‌ (வழி) உண்டாகும்‌.
முன்‌ சொன்ன த்யானமானது சந்திரன் சூரியன்‌, , கிரகங்கள்‌, ரத்நங்கள்‌, தீபம்‌,மணி, முதலியவைகள்‌ மேலும்‌ நிகழலாம்‌,
அதனால்‌ மேற்கண்ட. படி சமாதி பிரஞ்ஞைக்கு வழி ஏற்படும்‌.

சாஸ்திரத்தினாலும்‌, அனுமாநத்தினாலும்‌, குரு உபதேசத்தாலும்‌ தெரிந்த விஷயம்‌ ௮வன்‌ அவன்‌ ஸ்வந்த ௮நுபவமில்லாவிடில்‌ பரோஷமாகவே யிருக்கும்‌.
அதனால்‌ மோக்ஷம்‌ முதலிய சூஷ்ம விஷயங்களில்‌, உண்மையான ஸ்திரமான நம்பிக்கை உண்டாகிறது இல்லை.
யாதேனும்‌ ஒரு சூஷ்மமான விஷயத்தில்‌ பிரத்தியஷ மான அனுபவம்‌ ஏற்படுமாகில்‌ சாஸ்திரம்‌, அனுமாநம்‌,
குரு உபதேசம் இவைகளால்‌ தெரிந்து கொண்ட ஞாநம்‌ ஸ்‌திரப் படுகிறது .
அதனால்‌ மோக்ஷம்‌ வரையுள்ள மற்ற சூஷ்மமான விஷயங்கள்‌ உண்மையென நம்பிக்கை உண்டாகிறன்றன
இதனால்‌ தான்‌ மநத்திற்கு ஸம்ஸ்கார அப்பியாஸ முறைகள்‌ சொல்லப் படுகின்றன.
விர்திகள்‌ நானா விதமாக மாறிக் கொண்டிருக்கிறமையால்‌ விர்த்திகள்‌ ஒடுங்கும் பொருட்டு அநேக அப்பியாஸங்கள்‌ இப்போது சொல்லப் படுகின்றன. அந்த அப்பியாஸம்‌ பிரயோஜநப் படவேண்டு மானால்,-அதாவது மநத்தின்‌ ஸ்திரமான நிலை உண்டாக வேண்டுமானால்‌, அப்பியஸிக்கப்டும்‌ முறையைத் தவிர மற்ற விஷயங்களில்‌ வைராக்‌யமும் வேண்டும்‌.-அந்த வைராக்கியத்தை வசீகாரம்‌ எனச்‌ சொல்‌கிறது.

அல்லது துக்கம் இல்லாமல் ஜோதிஸ்ஸை -மனத்தின் ஸ்த்வ பாவத்தை) ஆஸ்ரயித்த பிரவி௫த்தி (மநத்தை அசையாமல்‌ கட்டுப்படுத்‌தும்‌.)–36-

ஹிருதய புண்டரீகத்‌தில்‌ மநத்தை நிறுத்தி , தாரணை தியாநம்‌, ஸமாதி கொள்ளுகிறவனுக்கு புத்தி நிர்மலமாகவும்‌
ஆகாசம் போல்‌ எல்லாவற்றிலும்‌ வியாபிக்கும்‌ இயல்பின தாகவும் ஆகிறது

ஹிருதய புண்டரீகத்தில்‌ ஒரு சக்ரம்‌ உள்ளது . அது 8 தளமுள்ளது- அதோ முகமானதாக இருக்கிறது.
பிராணாயாமத்‌தினால்‌ ஊர்த்‌வ முகமாகத்‌ திருப்பி, அதில்‌ மநத்தை நிறுத்த வேண்டும்‌, ௮தன்‌ மத்தியில்‌ சூரிய மண்டலம்‌ ஜாக்கிரத அவஸ்தையின்‌ இருப்பிடமும்‌ அகாரம்‌ என்ற அக்ஷரமும்‌,
௮தன்‌ மேல்‌ சந்திர மண்‌டலம்‌ ஸ்வப்ந அவஸ்தையின்‌ இருப்பிடமும்‌ உகாரம்‌ என்ற அக்ஷரமும்‌,
அதற்கும் மேல் அக்நி மண்டலம்‌ ஸூஷுுப்தி அவஸ்தையின்‌ இருப்பிமுடம்‌ மகாரம்‌ என்ற அஷரமும்‌, அதற்கும்‌ மேல்‌,பர வியோம ஸ்வரூபம்‌ துரீய அவஸ்தை பிரஹ்ம நாதம்‌ என்று சொல்லப்படும்‌ அர்த்த மாத்திரையும்‌ இருக்கின்றன.
அந்தத்‌ தாமரையின்‌ கர்ணிகையில்‌ ஊர்த்துவ முகமான ப்ரஹ்ம நாடி இருக்கின்றது -அது சூரியாதி மண்டலங்களின்‌ மத்‌தியில்‌ பிரவேசிக்கிறது. அதற்கு. மேல்‌ போய்க் கொண்டிருக்கிறது ஸுஷும்நா நாடி.-அது வெளியிலுள்ள சூரிய மண்டலங்களைத் தாண்டிப் போகின்றது. அது தான்‌ மநத்தின்‌ ஸரியான ஸ்தாநம்‌,-அதில்‌ தாரணை, தியாநம்‌ செய்தால்‌, சித்த ஸம்வித்‌ உண்டாகிறது – வஸ்துக்களின்‌ உண்மையான நிலை (Thought Forms) ஸாஷாத்காரம்‌ பெறுகிறான்‌,-அந்த ஸ்தாநத்‌தில்‌ மநம்‌ நிற்பதினால்‌ சூரியன்‌, சந்திரன்‌, கிரகங்கள்‌, ரத்நங்கள்‌ இவைகளின்‌ தேஜோ ருபங்களாக நாநா விதாமாகத்‌ தோன்றுகிறது . அதாவது அந்த மநம்‌ அந்த ரூபங்களாக ஆகிறது .
ஸுுஷும்நா நாடியை ஆஸ்ரயித்திருக்கின்றமையால்‌, இந்‌த மநஸ்‌ ரஜஸ்‌, தமஸ்‌ இரண்டும்‌ குறைந்தும்‌ சத்வம்‌ மேலிட்டும்‌ இருக்கின்றது .
அதனால்‌ அந்த நிலை ஜோதிஷ் மதீ (ஜோதிஸை உடைய) என்று சூத்‌திரத்தத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது –

முன்னே சொல்லியபடி விஷயங்களில்‌ சம்பந்தம்‌ பெற்றது போல் , அஸ்மிதையில்‌ (நான்‌ இருக்றேன்‌ என்ற பாவம்‌) ஏகாக்ரம் பெற்ற மநஸ்‌ ஆனது
அலையற்ற சமுத்திரம்‌ போலவும்‌, சாந்தமாயும்‌, (ரஜஸ்‌, தமஸ்‌ அற்றதாயும்‌) எங்கும்‌ வியாபகமுள்ளதாயும்‌, நான்‌ என்ற சுத்தப்‌ பிரஞ்ஞஜை மாத்திரம்‌ உள்ளதாயுமிருக்‌கின்றது .இவ்விதமாகவே சாங்க்ய சூத்திர வியாக்கியாதாவான பஞ்சசிகாசாரியாரும்‌ சொல்‌லுகின்றார்‌,

விஷயங்களை ஆஸ்ரயித்து நிகழும்‌ பிரவிர்த்தியும்‌, அஸ்மிதையை ஆஸ்ரயித்த மநப்‌ பிரவிர்த்தியும்‌ ஜோதிஷ்மதீ எனப்‌.பெயர்‌ பெறும்‌.
இதனால்‌ யோகியின்‌ மநம்‌ ஸ்திரமான நிலையை யடைகின்றது,

அல்லது ஆசைவிட்ட மஹா புருஷர்களை மநம்‌ விஷயிகரித்தலிதனால்‌ (௮து ஸ்தைர்யம்‌ பெறும்‌.)–37-

ஆசை விட்டவர்களான வியாஸர்‌ முதலிய மஹ ரிஷிகளின் குணங்களைத்‌ தியானித்தல் வேண்டும்‌.
அவர்களின்‌ மநோ நிலையைத்‌ த்யானித்தலால் அந் நிலையை, அப்பியாஸம்‌ செய்கிற யோகி பெறுகிறான்‌.

அல்லது ஸ்வப்நத்திலும்‌ நித்திரையிலும்‌ ஏற்படும்‌ ஞாநத்தை ஆஸ்ரயித்துத்‌ தியாநிப்பதால்‌ மநம்‌ நிலை பெறும்‌.–38-

(1) வேறு ஒரு அர்த்தம்‌ “அல்லது ஸ்வப்நத்திலும்‌ நித்திரையிலும் ஞாநம்‌ நழுவாது வைத்துக் கொளல்‌,”” என்‌பதாம்‌.
ஜாக்கிரதையினின்று ஸ்வப்நத்திற்குப்‌ போகும் போதும்‌, ஸ்வப்நத்தினின்று ஸூஷுப்திக்குப்‌ போகும்போதும்‌ நான்‌ என்ற பிரஞ்ஜையின்‌ தொடர்பு அற்றுப் போகிறது.-அத் தொடர்பு அறாமல்‌, பிரஞ்ஜை நிலைத்தல்‌ வேண்டும்‌. அற்றுப் போகும்‌ நிலையை பாழ்‌ என்று சொல்கிறது .
அப்‌ பாழைத்‌ தாண்டுதலுக்கு முயல வேண்டும்‌. இது தான்‌ இந்த சூத்திரத்தின்‌ தாத்பரியம்‌.
நினைவிற்கும்‌ கனவிற்கும்‌ மத்தியில்‌ ஒரு பாழ்‌, கனவிற்கும்‌ ஸுாஷுப்‌திக்கும்‌ மத்‌தியில்‌ ஒரு பாழ்‌,
ஸுாஷுப்‌திக்கும்‌ துரியத்துக்குலம் . மத்தியில்‌ ஒரு பாழ்‌, ஆக முப்பாழ்கள்‌, அதாவது லய ஸ்தாநங்கள்‌ உண்டு,

இந்திரியங்களுக்கு விஷயங்கள்‌ இல்லாமலும் , மநஸ்‌ ஆனது வாஸநா ரூபமான விஷயங்களை அனுபகிக்கும்‌ ஸமயம்‌ ஸ்வப்னமாம்
நித்திரையில் லக்ஷணம் முன் 19 சூத்திரத்தில் கண்டு கொள்க

ஸ்வப்நத்தில்‌ யாதேனும்‌ ஒரு தேவதை அல்லது மஹா புருஷர்‌ அல்லது உயர்ந்த பாவம்‌ தோன்றும்‌ பக்ஷத்தில்‌
நினைவில்‌ அந்த தேவதை, அந்த புருஷன்‌, அந்த. உயர்ந்த பாவம்‌ இவைகளின் மேல்‌ மநத்தை நிறுத்தினால்‌, மநம்‌ ஒரு முகப்படும்‌. யோகி ஸ்தைர்யம்‌ பெறுவான்
ஸுஷுப்தியின்‌ ஞாநம்‌ –ஸாத்விக ஸுஷுப்‌தியின்‌ ஞாநம்‌, “சுகமாய்த்‌ தூங்கினேன்‌ ‘* என்ற மட்டில் தான்‌ ஸ்மிருதி நினைவில்‌ உண்டாகும்‌.
அந் நிலையில்‌ (சகம்‌ ௮னுபவித்த நித்திரை சமயத்தில்‌) மநம்‌ தன்‌ நிலையிலிருக்கும்‌. ௮துவே ஏகாக்ரமான நிலை,
பிரஹ்ம வித்துக்கள்‌ அந்த ஸுுஷுப்தி சுகத்தையே பிரஹ்ம ஸ்வரூபம்‌ என்‌கின்றார்கள்‌,
சாந்தோக்கிய உபரிஷத்தில்‌ ஸுஷுப்‌தியின்‌ விசாரணையைப் பற்றிய விஷயம்‌ இங்கு கவநிக்கத் தக்கது.

அல்லது எது உனக்க நலமெனப்படகிறதோ, அதின்‌ மேல்‌ தியாநித்தலினால்–39-

எது பிரியமாக விருக்கறதோ, அதன் மேல்‌ மநம்‌ நிற்பதாகும்‌. அதனால்‌ ஐகாக்ரியம்‌ சித்திக்கும்‌.
தேவதையைத் தனக்குப்‌ பிரியமான ரூபமாக) தியாநித்தலினால்‌, மநம்‌ ஸ்தைர்யம்‌ பெறும்‌,

(இவ் விதமாகத்‌ தியாநிக்கின்ற யோகிக்கு) பாம அணு முதல்‌ பரம மஹத்‌ வரையில்‌ உள்ள எல்லாம்‌) ஸ்வாதீநப் படும்‌,–40-

மேற் கண்ட உபாயங்களினால்‌, யோகி யானவன்‌ ஸ்தூல வஸ்து முதல்‌ வர வர மஹா ஸூக்ஷ்ம வஸ்து வரை த்யானம் செய்யும் படியான திறமையும்‌
சூஷ்ம வஸ்து முதல்‌ மஹா ஸ்தூல வஸ்து வரை தியாநம்‌ செய்யும்படியான திறமையும்‌ பெறுதல்‌ கூடும்‌. இதில்‌ எவ்விதத் தடையும்‌ கிடையாது.
இந் நிலையைப்‌ பெற்ற யோகி யானவன்‌, ஜகாக்ரியத்‌தின்‌ – பூர்ணத் திறமையைப்‌ பெறுகிறான்‌. இனி அவ்விஷயத்தில்‌ பழக்கம்‌ வேண்டுவதில்லை.

இவ்வித அப்பியாசத்தால்‌, மநோ விர்த்திகள்‌ ஷீணமாகி யிருக்கின்ற யோகியின்‌ மதஸ்‌ அஸ்மிதையையும்‌ இந்திரியங்கள்‌, விஷயங்கள்‌ இவைகளுடன்‌ ஏகி பாவத்தையும்‌ அடையும்‌. நிர்மலமான ஸ்படிக மணியைப்‌ போன்றதாதம்‌.–41-

ஸ்படிக மணியின்‌ ஸமீபத்தில்‌ செம்பருத்தியின்‌ புஷ்பத்தை வைத்தால்‌ அதன்‌ நிறம்‌ ௮ம்‌ மணியில்‌ தோன்றிடும்‌, அது போல யோகியின் மநம்‌ நிகழும்‌,
விர்‌திகள்‌, சாத்விக, ராஜஸ்‌ தாமஸம்‌ என மூன்று விதங்கள்‌, ராஜஸ, தாமஸ விர்திகள் மாத்ரம் ஷயத்தை அடைகின்றன-சாத்விக விர்த்தி மட்டும் இருக்கின்‌றது .
சாத்விக விர்த்தி நிகழ்‌தலைத் தான்‌ மநம்‌ அந்தர் முகப்படுகிறது என்று சொல்லுகிறது.
மற்ற இரண்டு விர்‌த்திகள்‌ (ராஜஸ, தாமஸம்‌) பஹிர்‌ முகமானவை.
முதன்மைபில்‌ இவ்விரண்டு வித விர்திகள்‌ அடங்கி , மநம்‌ அந்தர் முகப்படும்‌, சாத்விக விர்த்தி மாத்திரம்‌ நிகழும்‌.
பின்பு, இவ் விர்தியும்‌ ஒடுங்கும் .
ராஜ்ஸ தாமஸ விர்‌திகள்‌ நிகழும்‌ காலத்தில்‌ மநம்‌ மலிநமாக விருக்கும்‌, இவை நீங்கி ஸாத்லிக விர்த்தி
௮திகப்படவே, மநம்‌ ஸ்படிகம் போல்‌ நிர்மலமாக இருக்கும்‌. அப் போது எந்த வஸ்‌து வுட.ன்‌ மநம்‌ ஸம்பந்தப் படுகிறதோ,௮ந்த வஸ்துவின்‌ தன்மையாக ஆகி விடுகிறது.
இதற்கு க்ராஹ்ய ஸமா பத்தி என்று பெயர் -௮து ஓர்‌ நிலைமை, மநஸ்‌ ஆனது விஷயங்களுடன்‌ சம்பந்திக்காமல்‌, இந்திரியங்களுடன்‌ மாத்திரம்‌ சம்பந்தித்து இந்திரியங்களை விஷயமாகக் கொள்ளும்‌ நிலைமை
‘இரண்டாவது. -கிரஹண ஸமா பத்தி – மநம்‌ பிரமாதாவுடன்‌ (ஆத்மாவுடன்‌) சம்பந்தித்தல்‌
மூன்றாம்‌ நிலைமை. இதற்கு கிரஹீதிரு ஸமாபத்தி என்று பெயர்‌. கிரஹீதிரு என்றால்‌ க்ரஹிக்கிறவன் -அதாவது ஆத்மா என்றர்த்தம்‌
ஸமாபத்தி– தந் மயமான பரிணாமம்‌, தன்னிடத்தில்‌ உள்ள ஆத்மாவினிடம்‌ தந் மயப்படுதலைத்‌ தவிர,
முக்தர்களான சுகர்‌, பிரஹ்லாதர்‌ முதலானவர்களிடம்‌ மநத்தை ஓரே பிடியாய்‌ நிறுத்தலும்‌ இந்த ஸமாபத்தியிலடங்கும்‌.

மேற்கண்ட ஸமாபத்திகளுக்குள்‌, சப்தம்‌, அர்த்தம்‌; ஜாநம்‌ இவைகளுடன்‌ கலந்து நிகழம்‌ ஸமாபத்தியானது ஸ்விதீர்க்க ஸமாபத்தி என்று பெயர்‌ பெறும்‌.–42-

41-ம்‌ ‘ சூத்‌ரத்தில்‌ ஸமாபத்தியின்‌ பொதுவான லக்ஷணம் சொன்னார்‌, இந்த சூத்திரம்‌ முதல்‌ 44-ம்‌ சூத்திரம்‌ வரையில்‌, ஸமாபத்தியின்‌ விசேஷ லக்ஷணங்கள்‌ சொல்லப் படுகின்றன.
உதாரணமாக இந்த ஸமாபத்தியில்‌ “பசு? என்ற பதம்‌, அதன்‌ பொருள்‌, அதன்‌ ஞாநம்‌ இவை த்யானத்தில் கலந்து நிற்றலாகும்‌.
இது திரிபுடி நிகிழும்‌ நிலை. அதாவது மநோ விர்த்தியானது மேற்கண்ட மூன்றிலும்‌ சம்பந்தப்பட்டிருக்கும்‌.
பதத்தையும்‌ ஞாநத்தையும்‌ விட்டு பொருள் மாத்‌திரத்தில் மநம்‌ தனித்து நின்றால்‌, அத்துடன்‌ ஒன்றுபட்டால்‌, அது நிர் விதர்க்க ஸமாபத்தி என்று சொல்லப்படும்‌.
அதாவது இதில்‌ சப்தத்தினுடைய ஸங்கேத ஞாநமும்‌, அனுமாத்‌திற்கு ஸாதநமான ஸ்மரணமும்‌ விலகும் போது, மநம்‌ அர்த்தத்தில்‌ மாத்திரம்‌ நிற்கும்‌.
இந்த நிர்விதர்க்க ஸமாபத்தியில்‌ உண்டாகின்ற வஸ்து ஞாநமானது யோகிக்கு உண்மையான பிரத்தியக்ஷப்‌ பிரமாணமாகிறது,
இப்பிரமாணம்‌, சப்தம்‌, ௮னுமாநம்‌ என்ற பிரமாணங்‌களுக்குக்‌ காரணமாக இருக்கின்றது.

ஸ்மிருதி போயும்‌, நான்‌ என்ற பிரஜ்ஜை அற்று இருக்கிறது போலவும்‌ (தியாதம்‌ பண்ணப்படும்‌) வஸ்து மாத்திரமாக
மநம்‌ நிற்கும்‌ நிலமை யானது, நிர் விதர்க்க ஸமாபத்தி எனச்‌ சொல்லப்படும்‌,–43–

ஸ்மிருதி, பிரத்தியக்ஷம்‌, சப்தம்‌, அனு மாநம்‌ முதலிய பிரமாணங்களால்‌ அனுபவித்‌த விஷயங்களின்‌ நினைப்பு .
இந்த ஸமாப்தியில்‌ திரிபுடி. அற்று மநம்‌ வஸ்‌து ரூபமாக ஆகிறது
மேற் கூறிய இரண்டு ஸமாபத்திகளும்‌ ஸ்தூலமான: வஸ்‌துக்களைக்‌ தியாநித்தலாம் ,

முன்‌ சொன்ன (ஸ விதர்க்க நிர் விதர்க்க ஸமாபத்திகளின்‌ முறைப்படியே) ஸூக்ஷ்மமான வஸ்துக்களை விஷயீ கரிக்கிற .
ஸ விசார, நிர்விசார ஸமாபத்திகள்‌ சொல்லப் படுகின்றன்.

முன்‌ ஸ விதர்க்க நிர் விதர்க்க ஸமாபத்‌திகளில்‌, ஸ்தூல மான விஷயங்களின்‌ த்யானம் திரிபுடி. உள்ளதாகவும்‌, திரிபுடி, ௮ற்றதாகவும்‌ நிகழ்ந்தது.-அவ்விதமே சூஷ்மமமான்‌ வஸ்துக்களை விஷமீ கரித்தலிலும்‌, தியாநித்தலிஓம்‌, திரிபுடி உள்ள்து ஸ விசார்‌ ஸமாபத்தி என்றும்‌,-திரிபுடி, அற்றது நிர் விசார ஸமாபத்தி மென்‌றும் அறியத்தக்கது –
விசாரம்‌ என்றால்‌ தியாநத்தில்‌ ஒரு நிலையாம்‌, தர்க்க விசாரம்‌ அன்றாம்‌.
ஸூஷ்ம வஸ்து என்றால்‌ பரம அணு: இவைகள்‌” அலையும்‌ மநத்தை நிறுத்தும்‌ முறை

(மேற்கண்ட) ஸூஷ்மம்மான் வஸ்துவை விஷயி கரித்தலானது மூலப்‌ ப்ரக்ருதி வரை நடை பெறுகிறது.–45-

பஞ்ச பூகங்களின் ஸூஷ்மமமான நிலை –பஞ்ச தன்மாத்திரைகள் — பஞ்ச தன்மாத்திரைகள் ஸூஷ்மமமான நிலை லிங்கம்‌ அதாவது மஹத் த,த்வம்‌,
மஹத் தத்துவத்தின்‌ ஸூஷ்மமமான நிலை அலிங்‌கம்‌, ௮தாவது மூலப் ப்ரக்ருதி -. மூலப் ப்ரக்ருதியை விட ஸூஷ்மமான வஸ்து இல்லை.
மூலப் ப்ரக்ருதியை விட சூஷ்மமாகப்‌ புருஷன்‌ இருந்தாலும்‌, புருஷன்‌ பிரபஞ்சத்‌திற்கு உபாதான காரணமாக
இல்லை, மூலப் பிரருதி பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக, இருக்கின்றமையால்‌, அதுவே முடிவாகச்‌ சொல்லப் பட்டு இருக்கிறது

(மேற்கண்ட நாலு ஸமாபத்திகளும்‌) பீஜத்துடன்‌ கூடிய ஸமாதிகளே.–46-

“பீஜத்துடன்‌ கூடிய” என்றால்‌ “வெளியிலுள்ள வஸ்‌துவை ஆலம்பநமாக ஆஸ்ரயித்த ” என்பதாம்‌.

நிர்விசார சமாதியில் சாமர்த்தியம் உள்ளவனாகில் மனத்தில் தெளிவான ஞானம் உண்டாகிறது –47-

ரஜஸ்‌, தமஸ்‌ இவைகள்‌ விஷயங்களை மறைத்தலாகிய ஆவரணத்தை யுண்டு பண்ணுகின்‌றன,
இவைகள்‌ யோகாப்பியாஸத்தினால்‌ போகவே, மநம்‌ ஸத்துவமாகப்‌ பிரகாசிக்கின்றது ,
பாண்டித்தியம்‌ உண்டாகும் போது, சாதாரணமாய் ஏனையருக்கு ஞாநம்‌ ஒன்‌றன் பின்‌ ஒன்றாய்க் கிரமமாக உண்டாகிறது – இந்நிலையை அடைந்தவனுக்கு அப்படியின்றி ஏக காலத்‌தில்‌ எல்லா விஷயங்களின்‌ ஞாநம்‌ உண்டாகின்றது .
இந் நிலையில்‌ உள்‌ளவன்‌, பிறர்‌ யாராலும்‌ பரிதபிக்கக் கூடாதவனாக ௮த் தன்மையான உயர்ந்த ஸ்தாநத்தை அடைந்து பர்வதத்தின்‌ மேலுச்சியிலுள்ளவன்‌ போல, ஜநங்களைக்‌ கருணையுடன்‌ பார்க்கிறான்‌.-இவ்விதம்‌ மஹா பாரதத்தில்‌ சாந்தி பர்வத்தில்‌ சொல்லப்பட்டுள்ளது.

அந் நிலையிலுள்ள பிரஜ்ஞை ‘ரிதம்பரா* என்று பெயர்‌ பெறும்‌,—48-

அந் நிலையில்‌ உள்ள பிரஞ்ஞையானது, ஸம்சய விபரியங்களின்றி வஸ்துக்களின்‌ உண்மையான ஸ்வரூபத்தையே அறிவிக்கிறது
ரிதம்பரா – உண்மை தரித்தல்‌.

முன்‌ சொல்லிய ரிதம்பரா என்ற பிரஜ்ஜையானது) ஸ்ருதி, அநுமாநங்களால்‌ ஏற்படும்‌ பிரஜ்ஜையை விட வேறானது,
அது வஸ்துக்களின்‌ விசேஷ:ஸ்வரூபத்தைத்‌ தெரிவிக்கிறது.,–49-

ஸ்ருதி ௮னு மாநங்களால்‌ கிடைக்கும்‌ ஞாநம்‌ சாமாந்‌நியமானது. வஸ்துக்களின்‌ விசேஷ ஸ்வருபத்தைக்‌ காட்டும்‌ தன்‌மையது அல்ல,
ரிதம்பரா என்ற பிரஞ்ஞையானது மேற் கண்ட . இரண்டு பிரமாணங்களும்‌ பிரவேசிக்க இயலாத பிரஞ்ஞாபூமி
இதில்‌ உள்ளபடி -யதார்த்த ஞாநம்‌ உண்டாகிறது.-சூக்ஷ்மமாண பரம அணுக்கள்‌, மறைவுள்ள வஸ்துக்கள்‌, தூரத்தினுள்ள வஸ்துக்கள்‌ இந்த பிரஞ்ஞா நிலையில்‌, பிரத்தியக்ஷமாகின்‌ றன.-இவைகள்‌ லௌகிக ப்ரத்யக்ஷம் சப்தம்‌, அனுமாநங்களான பிரமாணங்களுக்குப்‌ புறம்பானவை.

மேற்கண்ட (ரிதம்பரா என்ற பிர்ஜ்ஞா நிலையால்‌ ஏற்படும்‌ ஸம்ஸ்காரமானது) மற்றைய வெளி விஷயங்களால்‌ ஏற்படும்
ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாகாமல்‌ தடுக்கும்‌ தன்மையது –50-

இந் நிலையில்‌ உள்ள யோகியானவன்‌, வெளி லிஷயங்‌கள்‌ தன்‌ மநத்‌தில்‌ தங்க இடம்‌ கொடான்‌.
அத்தன்மையான பூர்வ வாஸனைகள்‌ இருப்பினும்‌, ௮வைகள்‌ தன்னை மேற் கொள்ளவும்‌ இடங்‌கொடான்‌.
ஸமாதியினால்‌, பிரஞ்ஜையானது ஸ்‌திரப்படுகிறது.-ஆனால்‌ ஸமாதி ருபமான ஸம்ஸ்காரமானது , மேன்மேலும்‌ விருசத்தி யடைகிறது.
சாதாரண விஷய அனுபவத்தில்‌ மநம்‌ அதன் கண்‌ சேர நிற்பது போல ஸமாதி நிலை உறுதிப்பட, மநம்‌ அந் நிலையில்‌ இருப்பதாகும்‌.
இரண்டிற்கும்‌ வித்‌தியாஸம்‌ இல்லை யென்றாலோ,-வித்தியாஸம்‌ உண்டு. ஸமாதி நிலையால்‌: ஏற்படும்‌ ஐகாக்ரியமானது மநத்தின்‌ விஷய வாஸனைகளைப் போக்கி அதைத்‌ தூய்மைப் படுத்தும்‌ இயல்பினது புருஷ ஸாஷாத்காரம்‌ உண்டாகும்படி, செய்கிறது.
புருஷ ஸாஷாத்காரம்‌ உண்டாகவே மநம்‌ விர்‌த்தி யின்றி ஓய்வடைகிறது. மநோ நாசம்‌ உண்டாகிறது என்னலாம்‌. விஷய அனுபவத்தின் ஐகாக்ரியமானது விஷய அனுபவங்களை விருத்தி பண்ணுகிறது–

மேற்கண்ட ரிதம்பரா ப்ரஞ்ஜையால் ஏற்படுகின்ற ஸம்ஸ்கார ப்ரவாஹத்திற்குத் தடை உண்டாகும் போது
எல்லா ஸம்ஸ்காரங்களுக்கும் தடை உண்டாகின்றன அந்நிலை நிர்பீஜம் என்ற சமாதியாகும் -51-

இந்த நிர்பீஜ ஸமாதியானது எல்லா ஸம்ஸ் காரங்களையும் பாதிக்கின்றது. இதனால்‌ மநத்தின்‌ விஷய அனுபவச் செயல்‌ அற்றுப் போகிறது -.
யோகியானவன் கைவல்லியத்தை அடைகிறான் அந்நிலையில்‌ புருஷன்‌ தன்‌ ஸ்வருப மாத்திரத்தில்‌ இருப்பவனாயும்‌, சுத்தனாயும்‌, கேவலனாயும்‌ ஆகிறான்-இந்நிலையில்‌ முக்தன்‌ எனப் படுகிறான்‌. முதன்மையில்‌, பல விர்த்திகளால்‌ சித்தம்‌ அலை யுள்ளதாக. இருந்து பின்னர்‌ யோகப் பயிற்சியால் பல விர்த்திகள்‌ தவிர்ந்து, ஒரே விர்த்தி மாத்திரம்‌ எற்பட்டது.
இந் நிலையில்‌ நான்‌ என்ற பிரஜ்ஜை உள்ளது. பின்னமர் அந்த விர்த்தியும்‌ ஒழியவே. கைவல்லிய ப:தவி ஸித்திக்கிறது-
அடியில்‌ வரும்‌ திரு மந்த்ர வசநம்‌ இங்கு கவனிக்கத் தக்கது …

நான் என்றும் தான் என்று நாடி நான்‌ சாரவே
தானென்று நானென்‌று இரண்டிலாத்‌ தற்பதங்‌
தானென்று தானென்ற. தத்துவ நல்கலாற் ,
றானென்று நானென்றுஞ்‌ சாற்றகிலேனே

சாற்ற அரிதாகிய தத்துவஞ்‌ சித்தித்தால்
ஆற்ற அரிதாகிய ஐந்தும் அடங்கிடு
மேற்றிகழ்‌ ஞானம்‌ விளக்கொளி யாய்நிற்கும்‌.
பாற் பர சாயுச்சிய மாகும்‌ பதியே– திரு மூவம்‌

ஸமாதி பாதம்‌ முற்றிற்று,

———————————————————

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading