ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் மஹாத்ம்யம்–

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் மஹாத்ம்யம்–தமிழ்‌ இலக்கிய வரலாறு பதினாறாம்‌ நூற்றாண்டு, பாகம்‌ -3 –ஸ்ரீ மு. அருணாசலம்‌ அவர்கள் —

திரவிட சிசு
செளந்தரியலகரி மூலத்தில்‌ 75ஆம்‌ பாடல்‌:
தவஸ்தன்யம்‌ மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹி ஸாரஸ்‌ வதமிவ
தயாவத்யா தத்தம்‌ த்ரவிட சிசுராஸ்வாத்ய தவயத்‌
கவீனாம்‌ ப்ரெளடானாம்‌ மஜனி கமனீய: கவயிதா.
மலையரசன்‌ மகளே, உனது திருமுலைப்பால்‌, இதயத்திலிருந்து உதித்த. அமிருதப்‌ பிரவாகம்‌ போலும்‌, சரசுவதியே உருக்கொண்டு
வந்தாற்போலும்‌ பெருகுகிறது என்று கருதுகிறேன்‌; ஏனெனில்‌
நீ அருள்‌ சுரந்து அளித்த திருமுலைப்பாலை அருந்தித்‌ திரவிட சிசு (தமிழ்க்குழந்தை) பெருமை மிகக்‌ கவிஞருக்குள்‌ மனங்கவரும்‌
கவிஞன்‌ ஆகிவிட்டான்‌ அன்றோ” என்பது இதன்‌ பொருள்‌.

இங்கு திரவிட சிசு என்பது தமிழ்க்‌ குழந்தையாகிய திருஞான சம்பந்தர்‌ என்பதே நேரான பொருள்‌. வேறு அக்காலத்‌ திராவிட நாட்டில்‌ சிசு கவிஞன்‌ அன வரலாறு இல்லை. ஞானசம்பந்தர்‌-திருமூலைப்‌ பாலருந்திய செய்தியை அவரே தமது பாசுரத்தில்‌
போதையார்‌ பொற்கிண்ணத்‌ தடிசில்‌ பொல்‌ லாதெனத்‌
தாதையார்‌ முனிவுறத்‌ தானெனை யாண்டவன்‌. என்று பாடுகிறார்‌.

இது பெரியபுராணத்தால்‌ நாடெங்கும்‌ நன்‌ கறியப்பட்ட வரலாறு. சம்பந்தர்‌ கி.பி. ஏழாம்‌ நூற்றாண்டின்‌
முற்பாதியில்‌ (640) வாழ்ந்தவர்‌. சங்கரர்‌ கி.பி. 820 வரை வாழ்ந்‌ தவர்‌. ஆகவே சம்பந்தரை இவர்‌ அறிந்து குறிப்பிடுவதும்‌ பொருந்‌தக்கூடியதே.
திரவிடம்‌ என்றால்‌ அக்காலத்தில்‌ தமிழ்‌ என்றே பொருள்‌; திரவிட சிசு என்றால்‌ மூன்றே வயதான தமிழ்க்‌ குழந்தை
யான சம்பந்தர்‌ என்பதுதான்‌ எளிதான கருத்து.
ஆனால்‌ தமிழுக்குச்‌ சிறப்புத்‌ தரலாகாது என்று கருதிய அத்வைதிகள்‌ இதைச்‌ சும்மா விடவில்லை. சங்கரரே திரவிடர்‌,
அவர்‌ சிறு குழந்தையாக இருக்கையில்‌ ஒரு சமயம்‌ தாயும்‌ தந்தையும்‌ வீட்டில்‌ இல்லாதபோது அழுதுகொண்டிருந்ததால்‌
பார்வதி தேவியே தோன்றிப்‌ பாலூட்டித்‌ தேற்றினார்‌ என்றும்‌,
சங்கரர்‌, “கவிஞருக்குள்‌ பெருங்‌ கவிஞனாக அனான்‌”: என்று தம்‌மையே படர்க்கையில்‌ சொல்லிக்கொண்டார்‌ என்றும்‌ சொல்‌வார்கள்‌.
இது பிற்காலத்தெழுந்த பொருந்தாக்‌ கூற்று. கவிராச பண்டிதர்‌, இங்கு தம்‌ மொழிபெயர்ப்புப்‌ பாடலில்‌ “கவுணியன்‌
சிறுமதலை’ (கவுணியன்‌ கோத்திரத்தில்‌ உதித்த திருஞான சம்‌ பந்தர்‌) என்றே பாடுகிறார்‌. உரையாசிரியரும்‌ இப்படியே எழுது
வதும்‌ காணத்தக்கது. தமிழில்‌ பாடினோருக்குத்‌ திரவிடசிசுசங்கரர்‌ என்ற கருத்தே எழவில்லை. இது பிற்காலத்தில்‌ புனையப்‌
பட்ட போலிக்கதை என்பது தெளிவு.

———–

அருளாளதாசர்‌ பாடிய மிக விரிவான 9142 பாடல்‌ கொண்ட புராண பாகவதமும்‌
செவ்வைச்‌ சூடுவார்‌ பாடிய 4973 பாடல்‌ கொண்ட இதிகாச பாகவதமும்‌
இக்‌காலத்தில்‌ தோன்றிய பெருநூல்கள்‌.
ஆசிரியர்‌ பெயர்‌ தெரியாத கூ!_ற்புராணமும்‌
திருக்குருகைப்‌ பெருமாள்‌ கவிராயர்‌ பாடிய திருக்குருகை மான்மியமும்‌
இக் காலத்தில்‌ தோன்றிய தல :புராணங்கள்‌.
இவையே வைணவத்தில்‌ தோன்றிய முதல்‌ புராணங்களுமாகும்‌.
இவையன்றி, அரிதாசர்‌ பாடிய இரு சமய விளக்கம்‌ என்ற தத்துவ சம்வாத நூலும்‌ இக்காலத்துக்குரியது

விசய நகர மன்னர்‌ தோன்றித்‌ தமிழ்நாட்டிற்‌ பெரும்‌ பகுதியைத்‌ தங்களுக்குட்படுத்தி, முகம்மதியர்‌ படையெடுப்பால்‌
வைதிக சமயத்துக்கு ஏற்பட்‌டிருந்த சீர்குலைவைப்‌போக்கி மீண்டும்‌ வைதிக சமயம்‌ தலையெடுக்குமாறு செய்‌தார்கள்‌.
விசயநகர மன்னரும்‌, அவர்கள்‌ ஆணையின்படி தமிழ்‌நாட்டில்‌ மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில்‌
தங்கி நாட்டைப்‌ பரிபாலித்த தலைவர்களான நாயக்கர்களும்‌,திருமாலடியவர்கள்‌.
எனவே, இவர்களாட்சியில்‌ திருமால்‌ சமயத்‌ திற்குப்‌ பேராதரவு இருந்தமை இயல்பு.

————-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

இராமானுசார்ய திவ்ய சரிதை முதலான சில வைணவ சரித்திர மணிப்பிரவாள நூல்கள்‌ எழுதியமையால்‌
இவர்‌ வைணவ சமய இலக்கிய வரலாற்றில்‌ ஒரு நிலைத்த இடம்‌ பெறுகிறார்‌.

இவர்‌ மணவாள மாமுனிகள்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கோவித்தப்பருடைய திருவம்சத்தில்‌ உதித்தவர்‌.
இந்தக்‌ கோவிந்தப்பர்‌ துறவியாகி, பரவஸ்து பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ என்று அஷ்டதிக்கஜங்களில்‌ ஒருவராயிருந்தவர்‌,
இவருடைய புதல்வர்‌  அழகிய மணவாளன்‌;
இவருடைய பெளத்‌திரார்‌ வரதாசாரி எனப்பட்டவர்‌; இவ்வரதாசாரி துறவு பூண்டு பிள்ளைலோகம்‌ சீயர்‌ எனப்‌ பெயர்‌ பூண்டார்‌;
இப்பெயர்‌ பிள்ளை லோகார்யம்‌ சீயர்‌ என்றும்‌ வழங்குவதுண்டு.
பிள்ளை லோகாசாரியர்‌ என்ற பிரசித்தி பெற்ற ஆசாரியர்‌ இருப்பதனாலே, இவர்‌ பெயர்‌
பிள்ளைலோகம்‌ ஜீயர் எனச்‌ சுருக்கப்பட்டது என்று சான்றோர்‌ கூறுவர்‌.
இவருடைய திருநட்சத்திரம்‌ சித்திரைத்‌ திருவோணம்‌.
இவர்‌ கடல்‌ கொண்ட கடல்மல்லைத்‌ தலசயனத்‌ துறைவார்‌ சந்நிதியைப்‌ புதிதாய்க்‌ கட்டி,
பெருமாளைப்‌ பிரதிஷ்டை பண்ணி, தீர்த்தம்‌ மரியாதைகளெல்லாம்‌ பெற்றவர்‌-
புரட்டாசித்‌ திருவோணம்‌ சிறப்புடையது,–அது பொய்கை யாழ்வார்‌, பிள்ளை லோகாசாரியர்‌ திருநட்சத்திரம்‌.

நூல்கள்‌

பிள்ளை லோகஞ்சீயர்‌ முந்தையோர்‌ நூல்களில்‌ சம்பிரதாய வியாக்கியானம்‌ ஏற்படாதவற்றுக்கு மட்டும்‌ வியாக்கியானம்‌ எழுதினார்‌.
இவர்‌ செய்த நூல்கள்‌ பின்வருவன;
இவையாவும்‌ மணிப்பிரவாள நடை.
சிலவற்றில்‌ நடை முழுமையுமே வடமொழியாயிருக்கும்‌.
1. இராமானுசார்ய திவ்ய சரிதை.
2. மணவாள மாமுனிகள்‌ சரித்திரமாகிய யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவம்‌.
இவை இரண்டும்‌ புதிதாக எழுதிய தனி வரலாற்று நூல்கள்‌.
3. திருவரங்கத்தமுதனார்‌ செய்த இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்‌.
4. பின்ளைலோகாசாரியா்‌ செய்த உரைநடை நூலான அர்த்த பஞ்சக வியாக்கியானம்‌.
5. அவருடைய மாணாக்கர்‌ விளாஞ்சோலைப்‌ பிள்ளை செய்த சப்த காதை வியாக்கியானம்‌.
6. மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ள திவ்ய பிரபந்தங்கள் வியாக்கியானம்‌:
௮. உபதேச ரத்தினமாலை,
அ. ஆர்த்திப்‌ பிரபந்தம்‌;
இ.திருவாய்மொழி நூற்றந்தாதி உரை.
7. ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம்‌. இது தனி உரை நடை நால்‌.
8-அனைத்து நாலாயிர திவ்யப்‌ பிரபந்தத்‌ தனியன்‌களுடைய வியாக்கியானம்‌.
9. உபதேசத் திருநாமம்‌.
10. திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்‌.

———–

இராமானுசார்ய திவ்ய சரிதை

இந்த நூல்‌ இராமானுசர்‌ சரித்திரத்தை மிகவும்‌ விரித்து (ராயல்‌ அளவில்‌ 200 பக்கம்‌ கொண்ட) பெருநூலாகச்‌ சொல்வது.

இவ்வாசிரியருக்கு மூலம்‌, இராமானுசர்‌ காலத்திலேயே கருட வாஹன பண்டிதர்‌ எழுதிய திவ்விய ஸூரி சரிதம்‌
முதலான வட. மொழி நூல்களும்‌, பெரிய திருமுடி அடைவும்‌, பின்பழகிய சீயருடைய ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவமும்‌.
வழக்கம்‌ போல்‌, இதுவும்‌ அதிக வடமொழித்‌ தொடர்கள்‌ கலந்த மணிப்‌ பிரவாளமே.
வாதங்கள்‌ வருமிடங்களில்‌ இவர்‌ பக்கம்‌ பக்கமாக வடமொழிச்‌ சுலோகங்களையே சொல்லிக்கொண்டு போகிறார்‌.
அன்றியும்‌ இராமானுசர்‌ வரலாற்றையே விரித்துக்‌ கூறும்‌ தமிழ்ப்‌ பாடல்களையும்‌ இடையிடையே தருகிறார்‌.
பல பாடல்கள்‌ இவ்வாறு உள்ளன.
இவை இவரே செய்தனவா, அல்லது
வேறு ஏதேனுமொரு நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துத்‌ தருக றாரா என்பது சொல்ல முடிய வில்லை. இரண்டொன்றைக்‌ கீழே தருகிறோம்‌.
பேரருளாளர்‌ (அத்திகிரி வரதராசப்‌ பெருமாள்‌) இராமானுசர்‌, கோயிலுக்கு (திருவரங்கத்துக்கு)ப்‌ போக விடை கொடுத்தனுப்புகிறார்‌:
சந்ததி யில்லா மனைமகள்‌ போலே
தடமுலை யில்லா மடமகள்‌ போலே
செந்தண லில்லா ஆகுதி போலே
தேசிக னில்லா வோதுகை போலே,
சந்திர னில்லாத்‌ தாரகை போலே,
இந்திரனில்லா உலகம்‌ போலே
எங்கள்‌ இராமா னுசமுனி போனால்‌
இப்புவி தானினி எப்படி யாமோ?

இராமானுசர்‌ பிரிய மனமின்றிப்‌ பிரிந்து செல்கிறார்‌:
திக்கு நோக்கித்‌ திரும்பித்‌ திரும்பியே
தேவராசர் தம்‌ கோயிலை நோக்கியே
செக்கர்‌ மேனி மிகப்பெருங்‌ கைகளால்‌
சோர்ந்த கனிகள்‌ பனிநீர்‌ தெளித்திட
மிக்க கோயில்‌ பெருவழி தன்னிலே
வேதம் வல்ல மறையோர்கள்‌ தம்முடன்‌
புக்குகத்துக்குப்‌ போகிற பெண்கள் போல்‌
போயினார்‌ பெரும்‌ பூதூர்‌ முனிவனார்‌.

இவையன்றி, இராமானுசரைப்‌ புகழும்‌ பாடல்கள்‌ மிகப்பல
உள்ளன.
யாவும்‌ பிரபந்த அமைப்பும்‌ உடையவை.
சில பின்‌ வருவன. தாலாட்டுப்‌ பாடல்‌:

அத்திரிசூர்‌ ஞால மனந்தாவ தாரமெனச்‌
சித்திரையில்‌ ஆதிரைநாள்‌ வந்துதித்த தேசிகனோ.
கேசவனார்‌ வாழக்‌ கிளை வாழக்‌ கீர்த்தி மிகும்‌
ஆசூரி வந்துதித்த ஆரியனைச்‌ சொன்னாரார்‌.*

திருமஞ்சனக்‌ கவி:
குத்திரப்‌ பர சமய நிரசநந்‌ தால் வந்த கொடுவிடாய்‌ தீருகைக்கோ
கூற்றப்‌ பெருங்கலியை மாற்றிப்‌ புகட்ட கொடுஞ்‌ சந்தாப மாறுகைக்கோ
மத்தளத்‌ தோடு முரசுடக்கை மல்லாரி பேரிகைகள்‌ திமிதிமெனவே
வானவர்கள்‌ மலர்தூவ ஆவலொடு கின்னரர்கள்‌ தனாதனா என்றேத்தவே
எத்திசையு மெண்ணில்‌ எழுபத்து நால்வருடனே எந்தை கந்தாடை யாண்டான்‌
எப்பொழுது மினிதாக ஏற்ற கைங்‌ கர்யங்கள்‌ செய்து இணையடி தொழுதேத்தவே
பத்தியுடை யடியவர்கள்‌ சுற்றி நீராகவே பண்ணும்‌ பரந்தாமனே
பரவாதி மத்த கஜ பஞ்சானைப்‌ பெரிய பாபாத்ரி வச்ராயுதா
முத்திதனை வித்தார மாகவரு எண்ணலே முடி மன்னர்‌ பணி பாதனே
முரவைரி பரனென்ற எதிராசனே நீரிந்‌ நின்ற திருமஞ்சனம்‌ செய்வதே.

திருமஞ்சனக்‌ கவி, வாகனக்கவி, கட்டியம்‌ முதலாயின விருத்த மாயினும்‌, நான்கடியின்‌ மிகுந்து போதலுண்டு.

திருச்சின்னம்‌:
யதிராசன்‌ வந்தான்‌ யதிராசன்‌ வந்தான்‌ யதிராசன்‌ வந்தான்‌
எதிராரு மில்லாதான்‌ வந்தான்‌ மதிராசி இராமானுசன்‌ வந்தான்‌.
ஆமா றறியும்‌ பிரான்‌ வந்தான்‌ சீமான்‌ சரணாகதி தந்த பிரான்‌ வந்தான்‌
அரணாகுங்‌ கழலோன்‌ வந்தான்‌ முரணாகும்‌ வாதியரை வெல்லுமவன்‌ வந்தான்‌
மாநிலத்தில்‌ வேதியரில்‌ மிக்கமகன்‌ வந்தான்‌. வாய்த்த பெரும்பூதூரில்‌ மன்‌ வந்தான்‌
ஏத்து மிளையாழ்‌ வாரென்னு மெம்பிரான்‌ வந்தான்‌
வளையாழி ஏந்திய மால்‌ வந்தான்‌
நளினமுக வெம்பெருமான்‌ எங்கள்‌ எதிராசன்‌ வந்தான்‌
வம்பொருநாட்‌ செய்யா வானவன்‌ வந்தான்‌
உம்பரெல்லாம்‌ நோக்கும்‌ இராமானுச முனிவனோ வந்தான்‌
வாக்கிலுயர்‌ சூரியில்‌ மன்னவன்‌ வந்தான்‌
பார்க்கு ரூடையவவரா மென்னு மொரு முதல்வன்‌ வந்தான்‌.

பல்லாண்டு முதலான பாடல்களும்‌ உள்ளன.

வாழித்‌ திருநாமம்‌:

நிழல்‌ கொடுத்துப்‌ புகழ்படைத்து நின்றபிரான்‌ வாழியே
நின்றிருந்து பட்டோலை கொண்டபிரான்‌ வாழியே
நின்றிருந்து பட்டோலை கொண்டபிரான்‌ வாழியே
களிக்குமறைப்‌ பொருள்‌ விரித்துக்‌ கீண்ட பிரான் வாழியே
கேள்விமிகு மாறன்‌ செந்‌ தமிழ்செய்தான்‌ வாழியே
அழித்தலுத்‌ தவன்றிசைக ளாக்கினான்‌ வாழியே
ஆளவந்தா ராக்கினையை அறவளர்த்தோன்‌ வாழியே
கொழிக்குமணி மாடம்சூழ்‌ பூதூரான்‌ வாழியே
குரைகழற்குப்‌ பாதுகமாய்க்‌ கூடினான்‌ வாழியே

சந்தர்ப்பம்‌ நேரும்போதெல்லாம்‌ இந்நூலாசிரியர்‌ இராமானுசர்‌ பாடியதாக அனேகம்‌ பாடல்கள்‌ பாடியிருக்கிறார்‌.
திருக்குருகூரை நண்ணியதும்‌ -“இதுவோ திருநகரி” என்று இரா மாநுசர்‌ பாடியதாக வரலாறு.

இராமானுசர்‌ ஆண்டாளைப்‌ பின்வரும்‌ பாடல்‌ சொல்லி மங்களா சாசனம்‌ பண்ணினார்‌ என்று சொல்கிறார்‌.
வாழி திருப்பாவை பாடு மடப்பாவை,
வாழி யரங்க மணவாளர்‌, – வாழியவன்‌
மாடு நிற்கும்‌ புள்ளரையன்‌, வாழி பெரியாழ்வார்‌
பாடு நிற்கும்‌ வேதாந்தப்‌ பா.

கிடாம்பிப்‌ பெருமாளைப்‌ புகழ்ந்த ஒரு பாடல்‌:
வேதாந்தங்‌ கொண்டு வடதிசைப்‌ போதந்து மீண்ட வந்நாள்‌
போதார்‌ பொழிற்றும்பை யூர் வந்த கொண்டிதன்‌ புன்மைகெட
யாதானு மாகிலு மென் பேற்றை யெய்தென்‌ றெழுதியருள்‌
தாதாரு மையன்‌ கிடாம்பிப்‌ பெருமாள்‌ தயா நிதியே.

இராமானுசர்‌ முதவிகளை அழைத்துக்கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ செல்லுங்காலை, அவர்கள்‌ சோர்ந்து போனார்கள்‌ போலும்‌.
இவர்‌ இடமணித்து என்று அகத்துறையில்‌ தலைவன்‌ தலைவிக்குக்‌ காட்டுவதுபோல்‌ காட்டுவதாக ஒரு பாடல்‌:
முத்தூரும்‌ வெண்ணகையாய்‌! கடந்தோம்‌ முதுபாலைநிலம்‌,
எத்தூரம்‌ போகும் முன்‌ செல்லுகின்ற தூரம்‌ எனிலிரண்டு
செய்த்தூரம்‌ போருந்‌ திருமல்லி நாட்‌ டுறைந்தவில்லி
புத்தூரும்‌ பச்சைத்‌ துழாய் மணம்‌ நாறிய பொய்கையுமே.

ஆண்டாளைப்‌ பாதாதி கேசமாகச்‌ சேவிக்குமிடத்தில்‌ ஒரு பாடல்‌:
மெல்லிய பஞ்சடி யுந்துவ ராடையும்‌ மேகலையும்‌
வல்லியை வென்ற மருங்குமுத்‌ தார வனமுலையும்‌
சொல்லியல்‌ வன்மையும்‌ வில்லிபுத்‌ தூரம்மை தோளழகும்‌
முல்லையை வென்ற நகையுமெல்லாமென்றன்‌ முன்னிற்குமே.

கோவிந்தப்‌ பெருமாள்‌ எம்பார்‌ ஆகியபின்‌, அவர்‌ நிலையைக்‌கண்ட முதலிகள்‌ அவரைப்‌ போற்ற,
அப்போற்றல்‌ சரியென்று அவர்‌ தம்மையே சிலாகித்துப்‌ பாடியதாக ஒரு பாடல்‌:
பற்ப மெனத்திகழ்‌ பைங்கழ லுன்றன பல்லவ மேவிரலும்‌
பாவன மாகிய பைந்துவ ராடை பதிந்த மருங்கழகும்‌
முப்புரி நாலொடு முன்கையி லேதிகழ்‌ முக்கோல்‌ தன்னழகும்‌
முன்னவர்‌ தந்திடு மொழிகள்‌ நிறைந்த முறுவல்‌ நிலா வழகும்‌
கற்பக மேவிய கருணைபொ ழிந்திடு கமல முகத்தழகும்‌
காரி சுதன்கழல்‌ சூடிய முடியுங்‌ கனநற்‌ சிகைமுடியும்‌
எப்பொழு தும்மெதி ராசன்‌ முகத்தழ .கென்னித யத்துளதால்‌
இல்லை யெனக்கெதி ரில்லை யெனக்கெதிர்‌ இல்லை யெனக்கெதிரே.

இராமானுசர்‌ மேல்‌ நாட்டிலிருந்து கோயிலுக்குத்‌ திரும்பிய போது கோயிலார்‌ அவரைப்‌ போற்றுகிறார்கள்‌:
வையம்‌ குருடன்றோ, மாமறையும்‌ பொய்யன்றோ,
ஐய னுரைத்தமிழ்‌ ஆரறிவர்‌:- வையத்துக்‌
கூன்று கோ லெந்தை எதிராசர்‌ ஆதரித்த
மூன்றுகோல்‌ காண்பதற்கு முன்‌.

இவர்‌ மங்களாசாசானம்‌ பெற்ற தலங்கள்‌ யாவும்‌ சென்று வழிபட்டார்‌ என்று ஒவ்வொன்றாய்‌ விரித்துக்‌ கூறுகிறது.
.இவருடையசித்தாந்தத்தைப்‌ பிரமாணத்திலே தரிசிப்பித்ததைப்‌ பிரத்தியடஷசத்திலும்‌ தரிசிப்‌பிக்க வேண்டும்‌ என்று கேட்‌.ட அரசன்‌
வித்துவான்‌ களின்‌ பொருட்டாக ஒரு ராத்திரியிலே வேதாந்த சாரத்தைத்‌ தம்முடைய திருக்கைகளிலே விரித்தெழுதி
அதைச்‌ சரசுவதியின்‌ கரத்திலே வைத்துக்‌ கதவைச்‌ சாத்தி மறுநாள்‌ இரவு பார்க்க,
அது சரசுவதியின்‌ சிரசிலே சிரோ பூஷணமாயிருந்ததாம்‌. கண்டு-இராமானுசர்‌,
நாம்பெற்ற நன்மையும்‌ நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பியிருந்‌ தெம்மை ஒதுவித்து – வேம்பின்‌
பொருணீர்மை யாயினும்‌ பொன்னாடுபா டென்னும்‌
அருள்‌ நீர்மை தந்த அருள்‌–என்று பாடித்‌ துதித்தாராம்‌.

பெரிய நம்பியிடம்‌ இவர்‌ இரண்டாம்‌ முறையும்‌ துவயார்த்தம்‌ கேட்கிறார்‌.
உடையவர்‌ திருவேங்கட யாத்திரை சென்றபோது, பருத்திக்‌ கொல்லையம்மாள்‌ என்ற பக்தர்‌ திருமாளிகைக்கு எழுந்தருளினார்‌.
அவர்‌ அந்நேரம்‌ தெருவில்‌ உபாதானம்‌ எடுக்கச்‌ சென்றிருந்தார்‌.
அவருடைய தேவிகள்‌ மிகவும்‌ கந்தலான புடவை மட்டுமே அணிந்திருந்தபடியால்‌, வெளியிலே வந்து,
இவரை உபசரிக்க லச்சித்து ஒளித்‌ திருந்தார்‌.
உடையவரும்‌ தெரிந்து, ஒரு புடவையை எறிய,
அவ்வம்மையார்‌ அதை அணிந்து வெளிவந்து இவரை உபசரித்துச்‌ சமையல்‌ செய்து உண்பித்தார்‌ என்பது ஒரு வரலாறு
அக்காலத்துப்‌ பாகவதர்களின்‌ வறுமை நிலையை விளக்கிக்‌ காட்டுகிறது.

உடையவரின்‌ ஆசாரியருள்‌ ஒருவரான பெரிய திருமலை நம்பிகள்‌ இவர்‌ வருவதை அறிந்து,
வழியில்‌ எதிர்‌ சென்று தீர்த்தப்‌ பிரசாதம்‌ கொடுத்து வரவேற்றபோது,
இவர்‌ “தேவரீரே எழுந்‌ தருளவேண்டுமோ, ஒரு சிறியார்களில்லையோ?” என்று கேட்டார்‌.
அவரோ, “நாலு வீதியிலும்‌ ஆராய்ந்தவிடத்து என்னில்‌ சிறியாரைக்‌ கண்டிலேன்‌” என்றாராம்‌.
எத்துணைப்‌ பணிவும்‌ அதனாலேயே உயர்வும்‌ சிறப்பும்‌ பொருந்திய சொற்கள்‌!

ஒருநாள்‌ கோவிந்தப்‌ பெருமாள்‌ நந்தவனத்தில்‌ ஒரு பாம்பின்‌ வாயில்‌ கைவிட்டுப்‌ பிறகு
தம்‌ பின் வருவதைக்‌ கண்டு உடையவர்‌, “இதுவென்ன? என்று கேட்டபோது,
அவர்‌ “ஒரு பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு நோவு படும்படிகண்டு, சமீபத்திலே போய்ப்‌ பார்க்குமளவில்‌.
அதன்‌ நாக்கிலே முள்ளிருக்கக்‌ கண்டு அந்த மூள்ளை வாங்கினேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய,
உடைய வரும்‌ “இவருடைய தயை இருந்தபடி என்‌!” என்று மிகவும்‌ உகந்தருளினாராம்‌.

மின்னையு மொருநாள்‌ கோவிந்தப்‌ பெருமாள்‌, திருமாலை நம்பிக்குத்‌ திருப்படுக்கை படுத்துத்‌
தாம்‌ முதலடியிலே படுத்துக்‌ கொண்டு பார்க்க;
உடையவரும்‌ இத்தை ஒருநாள்‌ கண்டருளி திருமலை நம்பிக்கு விண்ணப்பஞ்‌ செய்ய;
திருமலை நம்பியும்‌ கோவிந்தப்‌ பெருமாளை அழைத்தருளி,
“நீர்‌ நமக்குப்‌ படுத்த படுக்கையிலே படுத்துக்‌ கொண்டிருந்தீர்‌ என்று கேட்டோம்‌,
இப்படிச்‌ செய்யலாமோ? இதுக்குப்‌ பலமேது?’ என்று கேட்டருள,

கோவிந்தப்‌ பெருமாளும்‌, “நரகம்‌” என்ன;
நம்பியும்‌, “இப்படி யறிந்திருந்து செய்வானென்‌” என்ன;
கோவிந்தப்‌ பெருமாளும்‌, “தேவரீர்‌ திருமேனியிலே ஒன்று உறுத்துதல்‌, கடித்தல்‌ செய்யாமல்‌
கண்‌ வளர்ந்தருளப்புக்கால்‌ அடியேனுக்கு நரகமே யமையும்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய;
நம்பியும்‌ “”இதொரு ப்ரபத்தி இருந்த படியென்‌’ என்று மிகவும்‌ உகந்தருளினார்‌.
சபரியின்‌ செயலும்‌ கண்ணப்பர்‌ செயலும்‌ இங்கு நினைவு கூரத்தக்கன.

இராமானுசர்‌, வீதியில்‌ சீரார்‌ வளையொலிப்ப வந்து திறவாய்‌ என்று
திருப்பாவையை அனுசந்தானம்‌ பண்ணிக்‌ கொண்டே நின்ற அளவில்‌
பெரிய நம்பி திருமாளிகையில்‌ அவர்‌ மகள்‌ அத்துழாய்‌ கதவுதிறக்கவும்‌ கண்டு மூர்ச்சித்து விழுந்தார்‌
என்ற செய்தி,
இதில்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி திருமாளிகையில்‌ அவர்‌ மகள்‌ தேவகிப்‌ பிராட்டி கதவு திறக்க நேர்ந்தது என்று
சொல்லப்பட்டுள்ள து.

கோவிந்தப்‌ பெருமாளைத்‌ திருத்திப்‌ பணிகொண்டு சந்நியாச ஆஸ்ரமம்‌ கொடுத்து, உடையவர்‌ தம்முடைய திருநாமத்தையும்‌ கொடுத்தாராம்‌.
அப்போது அவர்‌ “உமது திருவடி. நிழலையே பற்றி இருந்த அடியேனுக்குத்‌ திருநாம நிழலே போதும்‌”
எனலும்‌
இவர்‌ தம்‌ பெயரின்‌ (எம்பெருமானார்‌ என்பதன்‌) அதியந்தத்தை மட்டும்‌ வைத்து “எம்பார்‌” என்று பெயரிட்டாராம்‌.
சுவையான வழக்குக்களும்‌ பல இந்நூலின்கண்‌ உள்ளன.
திருமலைமேல்‌ இராத்‌ தங்கல்‌ கூடாது என்பது ஒன்று; இன்றும்‌ கூட உள்ளது.
‘திருச்சித்ரகூட கிரியிலே பெருமாள்‌ பிராட்டி கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உலாவி யருளினாப்‌ போலே,
அத்திகிரியிலே, திருக்கச்சி நம்பிக்குத்‌ திருஷ்டி,கோசரமாய்‌
இவர்‌ ஆனந்திக்கும்படி பெருந்தேவியாரான பெரியபிராட்டியின்‌ திருக்கையைப்‌ பிடித்துக்கொண்டு வைய மானிகையிலே பேரரு ளாளர்‌ தாம்‌ வளைய வளைய உலாவி யருள்வது” – என்கிறார்‌.
இதுவும்‌ இருபதாம்‌ நூற்றாண்டுக்‌ கண்ணோடு பார்த்துச்‌ சுவைக்க கூடிய செய்தி.
தேசாந்தரகதனான புத்ரன்வருகிறான்‌ என்றால்‌ மாதாபிதாக்கள்‌ காண அசைப்படுமாப்‌ போலே,
திருவரங்க நாதன்‌ இராமானுசரைக்‌ காண ஆசைப்பட்டான்‌ என்கிறார்‌.

க்ருமி கண்ட சோழன்‌ என்ற வரலாறு ஒன்று;
மற்றது கோவிந்தப்‌ பெருமாள்‌ வரலாறு. இவர்‌ உடையவருடைய சிறிய தாயார்‌ புதல்வர்‌.
காசியில்‌ கங்கையில்‌ இவர்‌ நீராடியபோது கையில்‌ ஒரு சிவலிங்கம்‌ வர அதைப்‌ பூசை செய்துகொண்டு
இவர்‌ காளத்தி யில்‌ தங்கியிருந்தார்‌
உள்ளங்கை கொணர்ந்த நாயனார்‌ என்பது பெயர்‌.
இவரை வைணவத்துக்கு மாற்றினால்‌, தம்‌ சமயத்துக்குப்‌ பலம்‌ என்று உடையவர்‌ கருதினார்‌.
அக் கருத்தை முற்றுவிக்கும்‌படி திருமலையிலிருந்த பெரியதிருமலை நம்பிக்குச்‌ சொல்லி அனுப்பினார்‌.
“உள்ளங்கை குளிர்ந்த விடத்தே சுருள்‌ நாற்றம்‌ எழும்பிற்று.
அவர்‌ இப்போது துூர்வாசனாதியாத்தாலே அன்னியபரராய்க்‌ காளத்தியாகிய காட்டிலே நின்றார்‌” என்கிறார்‌.
அவர்‌ “ரநுத்ராபிஷேகக்‌ குடமெடுத்து வரக்கண்டு, நம்பியும்‌ அவனைப்‌ பார்த்து,
கொன்றைச்‌ சடை முடியானைக்‌ குளிர நீராட்டினால்‌
இன்றுனக்‌ குண்டாகும்‌ பயனென்‌? என்றருளிச்‌ செய்ய, அவரும்‌ இப்பாசுரங்‌ கேட்டு விஸ்மயமானமுகனாய்‌ இவரையும்‌ ஏறப்‌ பாராநின்று கொண்டு போனான்‌.
திருமலை நம்பியும்‌ அவரிடம்‌ பக்குவமாகப்‌ பேச்சுக்‌ கொடுத்தார்‌.
பின்‌ தேவனெம்‌ பெருமானுக்‌ கல்லால்‌ பூவும்‌ பூசனையும்‌ தகுமே என்ற பாசுரத்தை நம்பி சொல்லியபோது,
அவனும்‌ திடுக்கென்று குதித்துக்‌ கையில்‌ படலிகையையும்‌ கழற்றி எறிந்து தரித்திருந்த ருத்ராக்ஷ வடங்‌ களையும்‌
அலங்கலழிய வீசிப்போகட்டு ‘ தகாது தகாது’ என்று நம்பி திருவடிகளிலே அடைவுகெட விழுந்து புலம்பினார்‌.

பின்னால்‌ தம்மைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்ளும்போது இவர்‌
“காளத்தியில்‌ கையும்‌ குடமும்‌ கழுத்தில்‌ இலந்தைக்‌ கொட்டை யும்‌ ருத்ராக்ஷ வடமூமாய்‌ எளிவரவு பட்டு நிற்கின்ற நிலைமை’ என்கிறார்‌.
முன்னமே கோவிந்தபட்டர்‌, அவர்‌ இவர்‌ என்ற மரியாதை பெற்றிருந்த அவர்‌,
ருத்ராபிஷேகக்‌ குடம்‌ என்று சொல்ல வந்த வுடனே அவன்‌ இவன்‌ போனான்‌ என்றாகிவிடுகிறார்‌.
திருமலைமேல்‌ நின்ற சிலை வடிவத்தை இராமானுசர்‌ திருமாலாக நிரூபித்த விருத்தாந்தமும் இங்குள்ளது.

வருணனை
பல இடங்களில்‌ இவர்‌ வருணனைப்‌ பகுதிகளைப்‌ பெரும்‌ பான்மையும்‌ வடமொழி விரவாமல்‌ அடுக்கிச்‌
சுவைபடச்‌ செய்யுளோசையாய்ச்‌ சொல்வது படித்து இன்புறத்தக்கது.
கலியனுடைய திருவுருவ வருணனை:
அணைத்தவேலும்‌ தொழுதகையும்‌ அழுந்திய திருநாமமும்‌ ஓமென்ற வாயும்‌
உயர்ந்த மூக்கும்‌ குளிர்ந்த முகமும்‌ பரந்த விழியும்‌ இருண்ட குழலும்‌
சுருண்ட வளையமும்‌ வடிந்த காதும்‌ அலர்ந்த காது காப்பும்‌
தாழ்ந்த செவியும்‌ சரிந்த கழுத்தும்‌ அகன்ற மார்பும்‌ திரண்ட தோளும்‌ நெளிந்த முதுகும்‌ குவிந்த இடையும்‌
அல்லிக்‌ கயிறும்‌ அழுந்திய சீராவும்‌ தூக்கிய கடுங்கோவையும்‌ தொங்கலும்‌
தனி மாலையும்‌ சாத்தின திருத்தண்டையும்‌ சதிரான வீரக்‌ கழலும்‌
குந்தியிட்ட கணைக்காலும்‌ குஸிரவைத்த திருவடி மலரும்‌
வாய்த்த மணங்கொல்லையும்‌ வயலாலி மணவாளன்‌ வாடினேன்‌ வாடி. வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி மருவலர்த்த மூடல் துணிய
வாள்‌ வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னனான வடிவே.

ஆண்டாள்‌ திருவுருவ வருணனை –பாதாதிகேசம்‌
பாடகமே யென்னப்படுமதான பாடகஞ்சேர்‌ மெல்லடி களையும்‌,
ஆடையுடுப்போம்‌ என்று அவனுடுத்த பீதக வண்ணவாடையையும்‌
அன்றிக்கே, மந்திரக்கோடியுடுத்தபடி யையும்‌
என்கைப்பற்றி அவன்‌ கையைப்‌ பற்றப்படுமதாய்‌ சூடகத்தோடே கூடின வெள்ளை வளைக்கையையும்‌,

அதிலே கழுநீர்‌ பிடித்த அழகையும்‌ அத்தோபாதி தோள்வளையோடே கூடி. அழகியதாய்‌
மருங்கிலே நீட்டி நேரே பொகட்ட மற்றத்‌ திருக்கையழகையும்‌, கொம்மை முலையு மிடையும்‌,
“ஊனுடையாழிசங்‌ குத்தமற்கென் ன்னித்‌ தெழுந்த வென்‌ தடமுலைகள்‌” என்று கொண்டாடும
தான திருமுலைத்‌ தடங்களையும்‌, அதின்‌ மேலே பல்கலனும்‌ யாமணிவோம்‌ என்கிறபடியே

அதில்‌ அவன்‌ தங்கும்படியான குங்குமக்‌ குழம்பின்‌ எழிலையும்‌ அவன்‌ பூட்டப்‌ பூட்டின பல ஆபரணங்களையும்‌,

அதில்‌ மேலாய்க்‌ காறை பூணும்‌ கண்டத்‌ தினழகையும்‌,
அதுக்கு மேலே செவிப்பூவே என்று அவன்‌ தோள்களுக்கு அடையாளமானவற்றோடே கூடின திருச்செவி மலர்களையும்‌,
அவன்‌ விரும்பிப்‌ போடுமதான முத்தன்ன வெண்‌ முறுவல்‌ செய்ய வாயையும்‌
அதினழகுக்கு மேலே குமிழழகைக்‌ கொள்ளை கொள்ளும்‌ கொடி மூக்கையும்‌
அத்தோடே சேர்ந்து செவியளவும்‌ வளர்ந்து இனவேல்‌ தெடுங்கண்கள்‌ என்றும்‌
என்‌ பொரு கயல்‌ கண்ணிணை என்றும்‌ சொல்லப்படுகிற திருக்‌ கண்களையும்‌,
அதுக்கு மேலான நன்னுதலையம்‌ திங்கள்‌ திரு முகத்தையும்‌,
குழல்கோதை என்னும்படி யான மயிர்‌ முடியையும்‌
மணமாலை சூடின கோலத்தோடே நிற்கிற சூடிக்‌ கொடுத்த சுடர்க்‌ கொடியை
பதி ஸம்மானிதமான வடிவழகைப்‌ பாதாதி கேசாந்தமாக ஸேவித்தார்‌.

காவிரிச்‌ சோலைகளின்‌ வருணனை
பொன்னு மாமணியும்‌ முத்தமும்‌ சுமந்து பொருதிரை மாநதி புடை சூழ்ந்து
அன்னமாடுலவு மலைபுனல்‌ சூழ்ந்த படியையும்‌
சந்தினொடு மணியும்‌ கொழிக்கும்‌ புனல்‌ காவிரி என்றும்‌,
வண்டு பாடும்‌ மதுவார்‌ புனல்‌ வந்திழி காவிரி என்றும்‌,
துளைக்கை யானை மருப்பும்‌ அகிலும்‌ கொணர்ந்துந்தி முன்‌ திளைக்கும்‌ செல்வப்‌ புனல்‌ காவிரி என்றும்‌,
பரந்த பொன்னிரந்து நுந்திவந்‌ தலைக்கும்‌ வார்புனல்‌ என்றும்‌,
புண்ணந்‌ துழாமே பொருநர்‌ என்றும்‌,
இப்படி. ப்ரவஹிக்கிற திருக்காவேரியின்‌ ஜலஸம்ர்த்தி யையும்‌,
அதில்‌ நண்டையுண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை. கொண்டு கெண்டை மேயும்‌ படியையும்‌, அதனருகில்‌
அண்ட நாறும்‌ பொழில்களையும்‌ அணி பொழில்களையும்‌, கொங்கு நீர்‌ பரந்து பாயும்‌ பூம்‌ பொழில்களையும்‌
அதில்‌ போதில்‌ வைத்த தேன்‌ சொரியும்படியையும்‌,
அதினருகில்‌ அங்கயல்‌ பாய்‌ வயலையும்‌ அதில்‌ சேவலொடு பெடையன்னம்‌
செங்கமல மலரேறி ஊசலாடும்படியையும்‌, திருமுகமாய்ச்‌
செங்கமலம்‌ திருநிறமாய்க்‌ கருங்குவளை பொருமுகமாய்‌ நின்‌ றலரும்‌ படி யையும்‌
திருவடி.தன்‌ திருவுருவும்‌ திருமங்கை மலர்க்‌ கண்ணும்‌ காட்டி. நின்று
உருவுடைய மலர்‌ நீலம்‌ காற்றாட்ட வோசலிக்கும்‌ படியையும்‌ உரம்‌ பெற்ற மலர்க்கமல மூலகளந்த சேவடி. போலுயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச்‌ செந்நெல்‌ தாள்‌ சாய்த்துத்‌ தலைவணங்கும்‌ படியையும்‌ –
புதுநாண்மலர்க்‌ கமலம்‌ எம்‌ பெருமான்‌ பொன்‌ வயிற்றில்‌ பூவே போல்வான்‌
பொது நாயகம்‌ பாவித்திறுமாந்து பொற்சாய்க்கும்‌ படியையும்‌;
அதில்‌
பூமருவு புள்ளினங்கள்‌ புள்ளரையன்‌ புகழ்‌ குழறும்‌ படியையும்‌,
யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ படியையும்‌,
எல்லியம்‌ போதிருஞ்‌ சிறை வண்டெம்‌ பெருமான்‌ குணம்‌ பாடும்‌ படியையும்‌,
மற்றும்‌ வண்டின முரலுஞ்‌ சோலை இத்யாதியான
ஆராமங்களையும்‌ கரை வழியே கண்டு கேட்டு அநுபவியா நின்றார்‌.

சொற்கள்‌
இந்நூல்‌ அக்காலத்து வைணவ சமூகத்தில்‌ வழங்கிய சொல்லாட்சிகளைக்‌ காட்டும்‌ கண்ணாடியபோல்‌ உதவுகிறது.
முந்தை வைணவச்‌ சொல்லாட்சிகளை இவர்‌ அப்படியே காட்டுகிறார்‌.
போர்‌ என்பது ஒரு சொல்‌; மிகவும்‌ என்ற பொருளுடையது.
இராமாயணத்தின்‌ பகுதிகளை இவர்‌ ஸ்ரீமத்‌ ஆரணிய காண்டம்‌, ஸ்ரீமத்‌ சுந்தர காண்டம்‌ என்றே வழங்குவார்‌. அரங்கத்‌ தமுதனாரைப்‌ பிள்ளையமுதனார்‌ என்பார்‌. வீராணத்தேரியை வீராவணத்‌ தேரி என்பார்‌.
மனைவி என்ற சொல்லை மிகவும்‌ மரியாதை யாகவே குறிப்பிடுவது வைணவ மரபு.
கூரத்தாழ்வானுடைய தேவிகள்‌ என்று சொல்லும்போது பொருள்‌ மனைவி என்பது; பன்மையல்ல; ஒருமையே.
விளியாக எப்போதும்‌ சொற்கள்‌
முதலிகாள்‌ என்றே வரும்‌; முதலிகாள்‌, வாரிகோள்‌, அறிவிகோளே போந்திகோளே கேட்டிகோளே பாரிகோள்‌ (முதலிகளே வாருங்கள்‌ அறியுங்கள்‌ போந்தீர்களோ கேட்டீர்களோ பாருங்கள்‌ என்பது பொருள்‌)
மூன்றாம்‌ வருணத்தில்‌ பிறந்த திருக்கச்சி நம்பிகள்‌, தம்மைத்‌ தளிகை செய்ய அழைத்திருந்த
இராமானுசர்‌ திருமாளிகை அடைந்து அவருடைய தேவிகளை விளித்து மதினியாரே தளிகை படையுங்கள்‌ என்கிறார்‌;
இராமானுசர்‌ முதலாம்‌ வருணம்‌-இவரினும்‌ ஆண்டில்‌ மிகவும்‌ இளையவர்‌
மதினியார்‌ என்பது உரிமை பாராட்டி. அழைக்கும்‌ சொல்‌ என்று அறிகிறோம்‌.
ஸ்ரீபாஷ்யத்தை ஓரிடத்தில்‌ போாட்சியம்‌ என்று சொல்கிறார்‌
உடையவர்‌ வைபவத்தை முன்னிருந்தவர்களும்‌ சொல்‌ கிறார்களாம்‌.
அவர்‌ பெருமையை அவர்‌ சாதனைகளாலும்‌ பிற்காலத்தார்‌ வாக்காலும்‌ உணர்தல்‌ போதாது என்று ஆசிரியா்‌
கருதியிருக்கிறார்‌.
எம்பெருமான்களில்‌ நம்பெருமாள்‌, திரு வேங்கட முடையான்‌, பேரருளாளர்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌,
அழகர்‌, திருக்குறுங்குடி நம்பி இவர்கள்‌ தமிழில்‌;
பின்‌ ரிஷிகள்‌, வடமொழியில்‌ சொல்கிறார்கள்‌; நம்மாழ்வார்‌, நாதமுனிகள்‌, ஆளவந்தார்‌, பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி, திருமலை நம்பி,
திருமாலையாண்டான்‌, திருவரங்க.ப்‌ பெருமாளரையர்‌,
பிறகு இராமானுசருக்குப்‌ பின்வந்தவர்கள்‌,
பின்‌ நூலைப்‌ பின்வரும்‌ சொற்களால்‌ முடிக்கிறார்‌:
“சக்கரவர்த்தித்‌ திருமகன்‌ வைபவம்‌ போலே ஸ்ரீராமானுஐார்யார்‌ வைபவமும்‌ அவாங்‌ மனஸ கோசரமிறே.
சாகரத்தைக்‌ கை நீச்சினால்‌ நீந்தினாலும்‌ உததியைச்‌ சிறாங்கிச்சாலும்‌,
உடையவர்‌ வைபவம்‌ அடையச்‌ சொல்லப்போகாதிறே. யதாமதி யதாணருதமாகச்‌ சொன்னேனத்தனை,
இப்படி எல்லோருக்கும்‌ ஸ்வரூபோபாய புருஷார்த்தங்களை நியமித்துக்‌ கொண்டு
எம்பெருமானார்‌ ஐகதாசார்யராய்‌, யதிஸமர்வ பெளமராய்‌ நம்பெருமாள்‌ கோயிலிலே நூற்றிருபத்தைந்து
திருநட்‌சித்திரங்கள்‌ எழுந்தருளியிருந்தார்‌.”

“விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தபாகரான இளையாழ்வார்‌
வைபவத்தை அவதார காலமே தொடங்கி
எல்லோருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி பரம காருணியரான பிள்ளை லோகஞ்சீயர்‌ அருளிச்‌ செய்த ராமானுஜாரிய திவ்ய சரிதை

—————

பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ – யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவம்‌

இது மணவாள மாமுனிகளுடைய வரலாற்றைக்‌ கூறும்‌ மணிப்பிரவாள உரைநடை, நூல்‌.
முனிகள்‌ வரலாற்றைக்‌ கூறத்‌ தொடங்கி, இவர்‌ முனிகளிடம்‌ ஆசாரிய பரம்பரை வந்த வரலாற்றைச்‌ சொல்லுகிறேன்‌ என்று
பிள்ளைலோகாசாரியர்‌ நம்‌ பிள்ளை அனுக்கிரகத்தினால்‌-வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை புதல்வராகப்‌ பிறந்த செய்தி தொடங்கியுரைக்கிறார்‌.
முன்னர்த்‌ தோன்றியிருந்த ஆறாயிரப்படி குருபரம்‌பராப்‌ பிரபாவம்‌ பரமபதநாதன்‌ தொடங்கி,
நம்பிள்ளை வரையிலுள்ள ஆழ்வார்‌ ஆசாரியர்‌ வரலாற்றைக்‌ கூறுவதாக,
நம்பிள்ளையின்‌ மாணாக்கரான பின்பழகிய பெருமான்‌ சீயரால்‌ செய்யப்பட்டது.
நம்பிள்ளையின்‌ சீடர்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை,
அவருடைய புதல்வரும்‌ சீடருமாயிருந்தவர்‌ பிள்ளைலோகாசாரியர்‌ என்ற ஆசாரியர்‌
இவருடைய மாணாச்கர்‌ பலராயினும்‌, அடுத்த ஆசாரியராக, வந்தவர்‌ திருமலையாழ்வார்‌ என்னும்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை.
இவருடைய மாணாக்கரே மணவாள மாமுனிகள்‌ என்ற ஆசாரியர்‌ (கி.பி. 1370-1444).
இவரை ஆதிசேஷ அவதாரம்‌ என்பது வைணவ மரபு. மணவாள மாமுனிகளுக்குப்‌ பின்‌, அவர்‌ சீடரும்‌
அட்டதிக்கஜங்களில்‌ ஒருவருமான பரவஸ்து பட்டர்‌ பிரான்‌ சீயருடைய பேரராக வந்தவர்‌
பிள்ளைலோகம்‌ சீயர்‌ என்று முன்பு காட்டினோம்‌.
நம்பிள்ளைக்குப்‌ பின்‌ மணவாள மாமுனிகள்‌ வரையிலுள்ள ஆசாரியர்‌ வரலாற்றுக்கு இந்த
யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவமே ஆதாரம்‌.
முதல்‌ குருபரம்பரை செய்த பின்பழகிய பெருமாள்‌ சீயர்‌, தாம்‌ அறிந்தனவும்‌, கேட்‌ டனவுமாகிய செய்திகளை மட்டும்‌
முறையாகத்‌ தொகுத்துச்‌ சொல்லிக்‌ கொண்டு போகிறார்‌.
முக்கியமான சிலவற்றைப்‌ பின்னே கூறுவோம்‌.
திருவாய்மொழிக்குப்‌ பல வியாக்கியா னங்கள்‌ பிறந்தமைக்குக்‌ காரணத்தை உணர்த்தினார்‌.
பலர்‌ தங்கள்‌ புத்திக்குத்‌ தோன்றின பிரகாரம்‌ வியாக்கியானம்‌ இட்டமை யால்‌, எம்பெருமானார்‌, சகஸ்ரசாகோப நிஷத்‌ சமாகத்வம்‌ விளங்கும்படி
ஒரு பிரபந்தமிடும்படி. திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளானைக்‌ கடாட்‌சித்தார்‌
பின்னர்‌ பெருமாள்‌ அர்ச்சகமுகேந, நஞ்சீயரை, பட்டர்‌ திருவுள்ளப்‌ படிக்கு ஒன்பதினாயிரப்படி. வியாக்கியானம்‌ செய்யும்‌
என்று நியமித்தருள, ஆறாயிரப்‌ படிக்குக்‌ கனகாபிஷேகமென்னும்படி. அவர்‌ செய்தார்‌.
இதைப்‌ பட்டோலை கொள்ள ஒரு நல்ல லேகரியை நஞ்சீயர்‌ தேடி யிருந்த சமயம்‌, தேவராஜர்‌ என்பவரை அழைத்துச்‌ செய்க என்று ஸ்வப்னமாயிற்று.
அவர்‌ “நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌ பட்டர்‌ திருவடிகளே சரணம்‌: என்று எழுத்து எழுதிக்‌ காட்டினார்‌.

அவருக்கு இந்த ஒன்பதாயிரப்‌ படியை எழுத ஸ்ரீ ரங்கராஜரே முன்னின்று உதவினார்‌.
“நம்‌ இராமானுஜன்‌ தரிசனத்தை வளர்த்துக் கொண்டு மோரும்‌ என்று நஞ்சீயர்‌, பட்டர்‌ சரம காலத்திலே தமக்கு சாதித்திருந்த
தர்சன ப்ரவர்த்தகருக்குரிய மோதிரத்தை நம்பிள்ளை திருவிரவிலேயிட்‌ டார்‌.
பெரியவாச்சான்பிள்ளை செய்தது போலவே இவைரும்‌
(வடக்கு திருவீதிப்‌ பிள்ளையும்‌) செய்திருக்கக்‌ கண்டு நம்பிள்ளை முதலில்‌ கோபித்துப்‌ பின்‌ தெளிந்தார்‌.
(நடுவில்‌ திருவீதிப்பின்ளை எழுதிய வரலாறு இங்கில்லை.
நம்பிள்ளை இவர்‌ வியாக்கியான ஏட்டைப்‌ பலவாகப்‌ பெருக்கி,
“உம்வழியில்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ ஒருவர்‌ வருவார்‌’ என்று கூறினார்‌.

பிள்ளைலோகாசாரியர்‌ செய்த ஸ்ரீவசன பூஷணம்‌ பற்றிச்‌
சிலர்‌ பெருமாளிடம்‌ போய்க்‌ கோள்‌ சொல்ல
அவரும்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ மூலம்‌ இதன்‌ சிறப்பைக்‌ கேட்டுப்‌ பாராட்டினார்‌.
துருக்கர்‌ கலகத்தின்போது, ஆழ்வாரை (பெருமாளை) ஒரு
பள்ளத்திலே இட்டு வைத்திருந்து பின்‌
திருமலையாரழ்வார்‌ உதவி கொண்டு எடுக்க முற்பட்‌. போது, ஆழ்வார்‌ வரவும்‌,
தோழப்பார்‌ சங்கிலி அறுந்து காலமானார்‌ என்ற செய்தியைச்‌ சொல்லு கிறார்‌.
கூரகுலோத்தமதாசர்‌ சென்று திருமலையாழ்வாரை ஆட்கொண்ட வரலாற்றை மிகவும்‌ விரித்துச்‌ சொல்லுகிறார்‌.
விளாஞ்சோலைப்பிள்ளை ஸ்ரீவசன பூஷணத்தின்‌ தாத்பர்‌ யத்தை ஏழு காதையாகச்‌ சங்கிரகித்து அருளிச்‌ செய்தார்‌ என்பர்‌.
திருவாய்மொழிப்பிள்ளை ஒரு சமயம்‌,
இன்றோ எதிராசர்‌ இவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலியிருள்‌ நீங்கிய நாள்‌-என்று பாடி,
அதற்குமேல்‌ வராமல்‌ நிற்க, அப்போது அங்கிருந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற மணவாள
மாமுனிகள்‌,
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ விரைமகிழோன்‌ தான் வாழ வாதியர்கள்‌ வாழ்வடங்கு நாள்‌.–என்று பாடி முடித்தாராம்‌.
இவர்‌ திருமலை தரிசிக்கச்‌ சென்ற செய்தியைப்‌ பிள்ளை லோகம்‌ ஜீயர் எழுதும்போது பல செய்திகள்‌
இன்று போலவே இருந்ததை அறிகிறோம்‌.
மொண்ணைக்‌ கோபுரம்‌, ஸ்ரீபாதரேணு. அன்றும்‌ இருந்து இருக்கிறது, அதில்‌ சேவார்த்திகள்‌ காணிக்கை
சமர்ப்‌பிக்கிறார்கள்‌.
மாமுனிகளுடைய தந்தை பெயர்‌ திகழக்‌ கிடந்தான்‌ திரு
நாவீறுடைய பிரான்‌ தாதரண்ணரையன்‌.
திகழக்கிடந்தான்‌ என்ற தொடர்‌, மறைந்து போயிருந்த நாலாயிரமும்‌ வெளிப்‌ படுத்துவதற்குக்‌ காரணமாயிருந்த குடந்தைப்‌ பாசுரம்‌ –
ஆரா வமுதே அடியேன்‌ உடலம்‌ நின்பால்‌ அன்பாயே என்பதில்‌ வரும்‌ “திகழக்‌ கிடந்தாய்‌ கண்டேன்‌’ என்ற தொடரிலிருந்து எடுத்ததாகும்‌.
அண்ணன்‌ என்றாலும்‌ ஐயன்‌ என்றாலும்‌ பொருள்‌ ஒன்றே.
இருப்பினும்‌ இரண்டையும்‌ சேர்த்துப்‌ பெயரில்‌ வழங்கும்‌
வழக்கு அக்காலத்தில்‌ இருந்திருக்கிறது.
அக் காலத்தில்‌ கிருஷ்ண தேவராயர்‌ ஆதரவில்‌ வாழ்ந்தவர்‌ அரி தாசர்‌ என்ற புலவர்‌; இரு சமய விளக்கம்‌ என்ற பெருநூல்‌ செய்தவர்‌.
அவருடைய தமையன்‌ பெயா்‌ வடமலை அண்ணகளரையன்‌ என்பதும்‌ காணத்தக்கது.
பெரியாழ்வார்‌ திருமொழிப்‌ பகுதிக்குப்‌ பெரிய வாச்சான்‌ பிள்ளை செய்திருந்த வியாக்கியானம்‌
மணவாள மாமுனிகள்‌ காலத்திலேயே எப்படியோ மறைந்து போய்விட்டது;
அது பற்றி இதற்கு மட்டும்‌ மாமுனிகள்‌ வியாக்கியானமிட்டார்‌ என்று பிள்ளைலோகம்‌ எழுதுகிறார்‌.
வெவ்வேறு காரணங்களாலும்‌
சூழ்நிலைகளாலும்‌ திருவாய்மொழி போன்ற பிரபந்தங்களுக்கு வியாக்கியானம்‌ பல ஏற்பட்டிருந்த போதிலும்‌,
ஒருவர்‌ வியாக்‌கியானம்‌ செய்த நூலுக்கு மற்றவர்‌ வியாக்கியானம்‌ செய்வதில்லை என்ற மரபு வைணவரிடையே போற்றப்பட்டு வந்திருக்கிறது.
கணக்கில்லாமல்‌ வடமொழித்‌ தொடர்களையும்‌ சொற்‌
களையும்‌ நல்ல தமிழோடே கலந்து விளையாடுகிற
இந்த வைணவ சம்‌பிரதாயத்தில்‌, தொடர்பாக, சமஸ்கிருதத்தில்‌ மனத்தைச்‌ செல்லவிடவேண்டாம்‌ என்று
எல்லோரும்‌ உபதேசம்‌ செய்‌வதையும்‌ காண்கிறோம்‌.
ஆண்டான்‌ திருவங்கிபுரத்து நம்பியைப்‌ பார்த்து, உனக்கு இன்னும்‌ முரட்டுச்‌ சமஸ்கிருதம்‌ விட்ட பாடில்லையே* என்கிறார்‌;
பெரியவாச்சான்‌. பிள்ளை திருமாலை வியாக்கியனத்தில்‌, வடக்குத்‌ திக்கு ஆரிய பூமியாகையாலே
சமஸ்கிருதம் மட்டுமே நடையாடுகிறது -, ஆழ்வார்கள்‌ ஈரச் சொல்லும்‌ நடையாடாத தேசம்‌ என்கிறார்‌.
நஞ்சீயருக்கு பட்டரும்‌, நம்‌ பிள்ளைக்கு
நஞ்சீயரும்‌ “சமஸ்கிருதத்தில்‌ பலகால்‌ கண்‌ வையாதீர்‌’ என்றே
தம்‌ ஆயுள்‌ இறுதிக்‌ காலத்தில்‌ கடைசி உபதேசமாகச்‌ செய்கிறார்கள்‌.
அந்த மரபிலேயே இங்கும்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை தம்‌ இறுதி நாளில்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளும்‌ சமயம்‌
மணவாள மாமுனிக்கு உபதேசம்‌ செய்கிறார்‌ என்று பிள்ளை லோகம்‌ ஜீயர் எழுதுகிறார்‌.
“காலம்‌ கவிகாலமாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸுத்திகளான அருளிச்‌ செயலிலே
ருசி விச்வாசங்களையுடையராய்‌ இத்தை வளர்த்துப்‌ போருவாராரென்று மிகவும்‌ க்லேச மாயிரா நின்றது” என்ற,
பின்பு
நாயனாரும்‌ திருவடிகளிலே ஸேவித்து, அடியேன்‌ அப்படியே செய்கிறேனென்ன,
கேவலம்‌வார்த்தை போராதென்ன, நாயனாரும்‌ திருவடிகளைத்‌ தொட்டு சப பூர்வமாக அப்படி யே செய்கிறேனென்றருளிச்‌ செய்ய,
பின்பு திருவுள்ளம்‌ தேறி நாயனாரை யழைத்தருளி, “ஸ்ம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பலகாலும்‌ கண்‌ வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு
நமக்கும்‌ எம்பெருமானார்க்கும்‌ ப்ரியமாக
திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயலிலே அநவரதம்‌ பரிசீலநம்‌ பண்ணிக்‌ கொண்டு
பூர்வர்களைப்‌ போலே பெருமாளுக்கு மங்களாசாஸந பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாசு
எழுந்தருளியிரும்‌” என்று நியமித்தருளினார்‌.

சொல்லாட்சிகள்‌
வைணவ மணிப்பிரவாள நூல்கள்‌ யாவும்‌ தனித்த சொல்‌
லாட்சியுடையவை.
இவை 12ஆம்‌ நூற்றாண்டு தொடங்கி, அதிக அளவில்‌ மணிப்பிரவாள வியாக்கியானங்களில்‌ காணப்‌ படுகின்றன.
பல வடசொல்லடி யாகப்‌ பிறந்தவை, சில சிறப்‌ புடைய தமிழ்ச்‌ சொற்கள்‌.
இவை யாவும்‌ வடமொழிக்‌ கலப்பு என்று ஓதுக்கி விடுவது விவேகமன்று.
சிலவற்றை மட்டும்‌, யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவத்திலிருந்து கீழே விளக்குகிறோம்‌.
அமுது என்பது உணவுக்கு வழங்கும்‌ பொதுச்சொல்‌.
எல்லா உணவுப்‌ பொருளும்‌ அமுதென்றே வழங்கக்‌ காண்கிறோம்‌.
அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பழ அமுது, பாலமுது,-நெய்யமுது, தயிரமுது, உப்புச்சாற்றமுது என.
சாதம்‌ என்ற சொல்லும்‌ அருமையாக வருகிறது –
திருவுற்ற சாதம்‌. சாதம்‌ என்பது பிரசாதம்‌ என்பதன்‌ தலைக்குறையென்று கருதுகிறார்கள்‌.
இங்கு இச்சொல்‌ பயில்கிறது.
அரவணையென்பது ஒரு சொல்‌;
சர்க்கரைப்‌ பொங்கல்‌ நிவேதனத்துக்கு வழங்குகின்ற அபூர்வ மான ஆட்சி.
தோசைப்படி யென்ற சொல்லையும்‌ காண்கிறோம்‌.
தோசை என்ற சொல்‌ ஓர்‌ அப்ப வகையின்‌ பெயராக முதல்‌ முதல்‌ திவாகரத்தில்‌ காணப்படுகிறது.
சர்க்கரைப்‌ பொங்கலுக்கு அக்கார அடிசில்‌ என்ற பெயருண்டு.
அக்கார அடிசில்‌, அக்காரக்‌ கனி என தெரடர்கள்‌ நாலாயிரத்திலும்‌, வருகின்றன.
படி.மா என்பது விரதமிருந்து உண்ணும்‌ உணவின்‌ பெயராக வருகிறது.
தமப்பனார்‌ என்பது ஒரு சொல்‌; தம்‌-அப்பனார்‌. இச்சொல்‌ தந்தையென்று பொருள்படும்‌.
ஆனால்‌ இது, முதல்‌ நிகண்டு களில்‌ காணப்படவில்லை. திருவாசகம்‌ முதலாகத்‌ தகப்பன்‌ என்ற சொல்‌ ஆட்சிக்கு வந்துவிட்டது.
அன்றாடும்‌ – அன்றாடம்‌.-
சயிக்கவிடுதல்‌ – சயனிக்க விடுதல்‌.
ஞாயிறுபாடு – காலை,
நாயன்‌-தலைவன்‌, நாயன்தே, நாயன்தே – தெய்வமொத்த தலைவன்‌,
வேளையம்‌ – வெற்றிலை பாக்கு என்ற பொருளில்‌; இது ஓர்‌ அபூர்வப்‌ பிரயோகம்‌,
பிற்காலத்தில்‌ இதுவே விடையம்‌.என்றாகி யிருக்கலாம்‌. இரகிடுதல்‌ என்பது ஒரு சொல்‌; காணுதல்‌ என்ற பொரு ளுடையது போலும்‌.
இவர்‌ கிடாய்‌ – இவர்‌ கண்டாய்‌;
நாமே கிடீர்‌ – நாமே கண்டீர்‌.
இவை போல்வன பல.
இவை காண்‌ என்பதனடி யாகப்‌ பிறந்த அசைச்‌ சொற்கள்‌. மிடறு செய்தல்‌ – வருந்துதல்‌.
தினவு கெடுதல்‌ – அறிவுத்தாகம்‌ அடங்குதல்‌.
இந்த நூலில்‌ ஐயங்கார்‌ என்னும்‌ சொல்லாட்சி மிகவும்‌ அதிகமாய்‌ உள்ளது.
ஐயர்‌ – அவர்கள்‌ என்ற சொற்கள்‌ (அவர்கள்‌ – தெலுங்கில்‌ காரு) ஐயன்கார்‌ ஐயங்கார்‌ என அன்றோர்‌ கருதுவர்‌.
ஆசூயாளுக்கள்‌ – பொறாமையுடையவர்கள்‌,
உபலாளித்தல்‌- கொண்டாடுதல்‌.
த்வரை – வேகம்‌; இதிலிருந்து வந்ததே துரை என்ற சொல்‌,
லேகரி -எழுதுபவன்‌.
வியாக்கியானங்களெங்கும்‌ பெண்மைக்குப்‌ பெரு மதிப்புக்‌ கொடுக்கப்பட்டு இருக்கக்‌ காணலாம்‌.
எந்த ஆசிரியரும்‌ மனைவி என்று சொன்னதில்லை; மனைவி என்றால்‌ தேவிதான்‌-
அதுவும்‌ ஒருமையல்ல,-எப்போதும்‌ தேவிகள்‌ என்று பன்மை யிலேயே சொல்வார்கள்‌. இது வைணவத்தின்‌ சிறப்பு,
ப்ரவணம்‌- ஈடுபாடு.

—————–

இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்‌
திருவரங்கத்தமுதனார்‌ பிரபன்ன காயத்திரி என்னும்‌ பெய ருடைய 108 பாடல்‌ கொண்ட இராமானுச நூரற்றந்தாதிக்கு

முதலில்‌ மணவாள முனியின்‌ சீடரான அப்பிள்ளை ஓர்‌ உரை செய்தார்‌.
பிறகு பிள்ளை லோகம்‌ சீயர்‌ விரிவான வியாக்கியானம்‌ எழுதினார்‌. இது மிகவும்‌ விரிந்தது,
அதிகமாக எழுதிப்‌ பழக்கமுடைய இவர்‌ இதை விரிவாக எழுதியதில்‌ வியப்பில்லை. மேற்‌ கோள்கள்‌ நிரம்பத்‌ தருகிறார்‌.
பாசுபதர்‌ வேத பாஹ்யர்‌ என்று கூறுவார்‌;
பாசுபதர்‌ தமிழ்நாட்டில்‌ என்றுமே திரளாக வாழ்ந்தவர்களல்லர்‌;

அவர்களுடைய ஆசாரங்கள்‌ தாழ்வானவையாதலால்‌ ஜீயர்‌ சொல்வதில்‌ தவறு இல்லை.
“ருத்ர வசனமான ஆகமத்தை அதிகரித்துப்‌ போந்து அதி தாமசரா யிருக்கிற பாசுபதரும்‌,
பெளத்தரை எடுத்தவுடனே பாசுபதரை எடுத்தது, அவர்களோ பாதி இவர்களும்‌ வேத பாஹயரென்னுமிடம்‌ தோற்றுகைக்காக…
ஜகத்‌ உபாதானகாரணம்‌ ஆகமசித்தேசுவரன்‌ நிமித்த காரணம்‌…
கர்மானுஷ்டானத்தலலோ பசுபதிசாரூப்யம்‌ பெறுகை, மோட்ச மாகிறது என்று சொல்லுமவர்‌,
‘ சைவம்‌ என்ற இடம்‌ வந்தால்‌, பிற சமயத்தார்‌ (அத்வைதிகளும்‌ விசிஷ்டாத்வைதிகளும்‌)
பாசுபதர்‌ காளாமுகர்‌ என்று நினைக்கிறார்களே தவிர, சைவ சித்தாந்தி என்று நினைக்கவில்லை.
பல இடங்களில்‌ நயம்படி. உரை எழுதுவார்‌.
ஈரத்தமிழ்‌சம்சார தாபமெல்லாம்‌ அறும்படியான ஈரப்பாட்டையுடையது. ஸ்ரீ பராங்குச நம்பி என்பார்‌.
கார்த்திகையானும்‌ என்ற, பாட லுரையில்‌, பாணாசுரன்‌ வரலாறு விரிவாகக்‌ கூறுகிறார்‌.
அநிருத்‌ தனைக்‌ குறிப்பிடும்போது, அநிருத்தாழ்வான்‌ என்கிறார்‌.
99ஆம்‌ பாடல்‌ உரையில்‌ தற்கச்‌ சமணரும்‌ சாக்கியப்‌ பேய்களும்‌ என்பதை விளக்கும்போது
பல சமயத்தாரை விரிவாகக்‌ குறிப்பிட்டுப்‌ பேசுகிறார்‌:
சாக்கியர்‌ சைனர்‌ சாருவாகர்‌ நையாயினர்‌ வைசேடிகர்‌ பாசுபதர்‌ சூனியவாதர்‌ வைபாடிகள்‌ செளந்திராந்திகர்‌
யோகா சாரர்‌ மாத்யமிகர்‌ என்ற நால்வகைப்‌ பெளத்துர்‌, சங்கரன்‌ பாஸ்கரன்‌ யாதவன்‌ ருத்ரன்‌ பாட்டப்‌ பிரபாகரர்‌ ஏகாயநர்‌ என்கிறார்‌.
இவருடைய போக்குக்கு எடுத்துக்காட்டாக, 98ஆம்‌ பாடல்‌ அவதாரிகைப்‌ பகுதியை இங்கு குறிப்பிடலாம்‌:
இப்படி எம்‌பெருமானார்‌ தம்மை சர்வோத்கிருஷ்டமான அதிகாரத்திலே மூட்டின உபசாரத்தை அனுசந்தித்து
ஹரிஷ்டானவாறே இவ ருடைய திருவுள்ளமானது, தீர்‌ இப்படி சொன்னீரேயாகிலும்‌ சர்வ நியந்தாவான
சர்வேஸ்வரன்‌ அநாதி காலந்‌ தொடங்கி தத்தத்‌
கர்மானுகுணமாகப்‌ பலத்தைக்‌ கொடுப்பதாகச்‌
சங்கல்பித்துக்‌ கொண்டி ருக்கிறா னொருவனாகையாலே இவ்வளவும்‌ ஸ்வர்க்க நரக சர்ப்பங்களிலே இடைவிடாதே அடைவே
தட்டித்‌ திரிய விட்டி ருந்தது நம்முடைய கர்மத்தைக்‌ கடாட்சித்தன்றோ,
அக்கர்மங்களை உண்டாக்‌கக் கடவதான பிரகிருதி சம்பந்தம்‌ நமக்கு இன்றும்‌ கிடக்கையாலே,
துர்வாசனை மேலிட்டு திரும்‌பும்‌ நிக்ரகத்துக்கு உடலான துஷ்கார்யங்களிலே அன்வயிக்கவும்‌ யோக்யுதையுண்டே,
ப்ராப்திபர்யந்தமானாலிறே நீர்‌ இப்படி நிர்ப்பரராய்ச்‌ சொல்லக்‌ கடவது என்று தளரா நிற்க;
எம்பெரு மானர்‌ தம்மை சரணமென்றால்‌ அப்படி ஸ்வர்க்க நரகாதிகள்‌ ஒன்றிலும்‌ விட்டுக்‌ கொடுக்கும்‌ ஸ்வபாவரல்லராகையாலே

இனி ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாமென்கிறார்‌.

—————

அர்த்த பஞ்சக வியாக்கியானம்‌
பிள்ளை லோகசாரியர்‌ அஷ்டா தச ரகசியம்‌ என்று 18 நூல்கள்‌ செய்தார்‌.
அவையனைத்துக்கும்‌ மணவாள மாமுனி வியாக்கியானம்‌ செய்தார்‌.
அவற்றுள்‌ அர்த்த பஞ்சகம்‌ என்பது மூன்றாவது நூல்‌.
அறிய வேண்டிய பொருள்கள்‌ ஐந்து. இவையே அர்த்த பஞ்சகம்‌ எனப்படும்‌.
இவையாவன:
ஸ்வ ஸ்வரூபம்‌ (உலகின்‌ இயல்புதன்‌ நிலை)
பர ஸ்வரூபம்‌ (இறைவன்‌ நிலை),
விரோதி ஸ்வரூபம்‌ (உயிர்‌ இறைவனை அடையாது தடை செய்து நிற்கும்‌ வினையின்‌ இயல்பு).
புருஷார்த்த ஸ்வரூபம்‌ (புருஷனால்‌ வேண்டப்படும்‌ பேற்றின்‌ நிலை),
உபாய ஸ்வரூபம்‌ (பேற்றிற்குத்‌ தடையைப்‌ போக்கி இறைவனை அடைதற்குரிய உபாயத்தின்‌ நிலை) என்ற ஐந்து.
இப்பெயரில்‌ வேதாந்த தேசிகர்‌ ஒரு பிரபந்‌ தமே பாடியிருக்கிறார்‌.
லோகாசாரியர்‌ நூலுக்குப்‌ பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ ஒரு வியாக்கியானம்‌ எழுதியிருக்கிறார்‌.
இதன்‌ விரிவான அவதாரிகையில்‌, பகவான்‌ வேதங்களையும்‌ சாஸ்திரங்‌ களையும்‌ நாலாயிரப்‌ பிரபந்தங்களையும்‌ உபதேசித்ததோடமையாது,
பிள்ளை லோகாசாரியர்‌ மூகமாக அர்த்த பஞ்சக ரகஸ்ய சாஸ்திரத்தை வெளிப்படுத்தியருளினான்‌ என்று கூறுகிறார்‌.
அர்த்த பஞ்சகமானது 49 வாக்கியங்களாக அமைந்துள்ளது.
இவர்‌, வாக்கியத்திலுன்ள ஒவ்வொரு தொடராக எடுத்து விரிவாக உரை எழுதிக்கொண்டு செல்கிறார்‌.
உரை மணிப்பிரவாள நடை. இதன்‌ பகுதியொன்று பின்னால்‌ உரைநடை என்ற தலைப்‌பில்‌ எடுத்துக்‌ காட்டப்படும்‌.
அட்டாங்கயோகம்‌ பற்றி இவர்‌ கூறும்‌ கருத்துக்களை மட்டும்‌ இங்கு தருகிறோம்‌:
யமம்‌ ஆவது பாஷ்ய இந்திரிய நிக்கிரகம்‌;
நியமம்‌ அவது அந்தரிந்திரிய நிக்கிரகம்‌:
பாஹ்ய பரிசுத்தி என்றும்‌ அந்தர பரிசுத்தி என்றும்‌ சொல்லுவார்கள்‌.
ஆசனம்‌ ஆகிறது கூர்மாசனம்‌குக்குடாசனம்‌ பத்மாசனம்‌ முதலியவை.
பிராணாயாமம்‌ ஆவது ஒரு யாமத்தளவு பஞ்ச வாயுக்களை நவரந்த்ரங்களால்‌ சரீரத்தில்‌ நின்றும்‌ புறப்படாதபடி பிடித்துக்‌ கொண்டிருக்கை.
பிரத்தி யாகாரம்‌ ஆவது பஞ்ச வாயுக்களை சாத்மிக வெளியில்‌ புறப்பட விடுகை.
அதவா, பிரத்தியாகாரம்‌ என்பதற்கு காய கோஷணத்‌துக்குத்‌ தக்க ஆசாரத்தையும்‌ சொல்லவுமாம்‌.
பிரகரணத்துக்குச்‌ சேருவது முதலில்‌ சொன்னதாகும்‌.
தியானம்‌ ஆவது அவிச்சின்ன ஸ்மரணம்‌.
தாரணம்‌ ஆவது மலதாரணம்‌. அன்றிக்கே சக்தி விசேஷத்தைச்‌ சொல்லவுமாம்‌.
அதாவது ஹ்ருதயத்தில்‌ பகவத்‌விக்கிரக சிந்தை நிறுத்தலுமாகும்‌.
சமாதி ஆகிறது, ஈசுவரன்‌ திருவடிகளிலே மனசை இடைவிடாதே பொருந்தியிருக்க வைத்தல்‌.
இப்படி யான ஆதாரங்களையு/டையவையான அஷ்ட
வித அங்கங்களோடு கூடியிருக்கிற யோகத்தின்‌ கிரமம்‌.”

—————–

சப்தகாதை வியாக்கியானம்‌
பிள்ளை லோகாசாரியரின்‌ மாணாக்கர்‌ விளாஞ்சோலைப்‌ பிள்ளை. இவர்‌ “தீண்டாத: வகுப்பினர்‌.
இவருடைய இயற்‌ பெயர்தானும்‌ தெரிந்திலது.
* தமக்குப்‌ பின்‌ ஆசாரியராய்‌ வரத்‌ தக்கவரான திருமலையாழ்வாருக்குத்‌ திருவாய்மொழியைக்‌ கற்பிக்கும்படி,
பிள்ளை லோகாசாரியர்‌ இவருக்கு நியமித்‌திருந்தார்‌. திருமலையாழ்வார்‌
இவரிடம்‌ கற்றபின்‌ திருவாய்‌ மொழிப்‌ பிள்ளை என்றே பெயர்‌ பெற்றார்‌.
விளாஞ்சோலைப்‌ பிள்ளையின்‌ வரலாறு தெளிவாகத்‌ தெரியவில்லை.
சில செய்திகள்‌ சியர்‌ உரையால்‌ மட்டுமே தெரிய வருகின்றன:
இவர்‌ “உடையவருக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸரைப்‌ போலவும்‌,
நம்‌ பிள்‌ளைக்கு ஏறு திருவுடையான்‌ தாஸரைப்‌ போலவும்‌,
நடுவில்‌ திரு வீதிப்‌ பிள்ளை பட்டர்க்குப்‌ பிள்ளை வானமாமலை தாஸரைப்‌போலவும்‌,
பிள்ளை லோகாசார்யருக்கு ஆத்ம ஸமராயும்‌, ப்ராண ஸமராயும்‌, த்ருஷ்டி ஸமராயும்‌, பாஹு ஸமராயும்‌,
ஆபரண ஸமராயும்‌, பாத ஸமராயும்‌, பாத ரோகா ஸமராயும்‌, பாதச் சாயா ஸமராயும்‌, பாதுகா ஸமராயும்‌,
பாதோபதாநஸமராயுமெழுந்‌ தருளியிருக்குமவராய்‌ இருந்தவர்‌ இவர்‌.
அன்றியும்‌ தீதற்ற ஞானத் திருவாய்மொழிப்‌ பிள்ளை என்னும்படி,
ஸமஸ்த சாஸ்‌திரபா ரங்கதராயும்‌ ஸர்வஜ்ஞராயும்‌ பெருமதிப்பராயும்‌ போருகிற திரு வாய்மொழிப்‌ பிள்ளையுங்கூடத்‌
தம்மருகே சென்று சரமார்த்த விசேஷங்களைக்‌ கேட்டுப்‌ போரும்படி மிகவும்‌ ஸர்வஜ்ஞராய்‌ இருந்தார்‌.
பிள்ளை லோகாசாரியருடைய திருவோலக்க வாழ்வைத்‌ தியானித்துக்‌ கொண்டு தம்‌ திருமேனியில்‌
சிலந்தி நூல்‌ இழைக்கும்படியாகவும்‌ நாலாறு நாள்‌ சமாதியிலே எழுந்தருளியிருந்தார்‌.’
உரையில்‌ இராமானுசர்‌ நூற்றிருபதாண்டு குறைவு நிறைவு களின்றிக்கே யிருந்தார்‌ என்பதையும்‌ சொல்லுகிறார்‌.

பிள்ளை லோகாசாரியருடைய திருவுருவ வருணனை:

தேமருவும்‌ செங்‌ கமலத்‌ திருத்தாள்களும்‌ திகழும்‌ வான்பட்டாடை பதிந்த திரு மருங்கும்‌ முப்புரி நூலின்‌ தாமமணி வடமமர்ந்த திருமார்பும்‌,
முன்னவர்‌ தந்தருள்‌ மொழிகள்‌ நிறைந்த திருமுறுவலும்‌, கருணை பொழிந்திடுமிணைக்‌ கண்களும்‌
கனநல்ல சிகை முடியும்‌ திங்கள்‌ போலும்‌ திருநுதலும்‌ திருக்கண்ணும்‌ செவ்வாயும்‌,
பொங்கொளி சேர்பொன்மொழியும்‌ புரிநூலும்‌ பொற்றோனும்‌,
மங்கலமான மலர்‌ மார்பும்‌ மணிவடமும்‌, மருங்குதனில்‌ பரியட்டமும்‌ கமலப்‌ பதயுகமும்‌,
அழகிய பத்மாஸநமும்‌, ஈராறு திருநாமமணிந்த வெழிலும்‌,
இனிதிருப்போ டெழில்‌ ஞான முத்திரையும்‌ தாமு மாக வெழுந்தருளியிருக்கிற
பிள்ளை லோகாசார்யருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைப்‌ பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாகவும்‌
உருவ வெளிப்பாட்டாலே விசத விசததர விசததமமாகத்‌ த்யாநித்து-
சப்த காதைக்கு இவர்‌ வியாக்கியானமும்‌ தனிப்‌ பதவுரையும்‌ எழுதியிருக்கிறார்‌

அவதாரிகையின்‌ தொடக்கத்தில்‌ இவர்‌ சப்த காதைக்குக்‌ கூறும்‌ தனியன்‌:
வாழி நலந்திகழும்‌ நாரண தாதனருள்‌
வாழி அவனமுத வாய்மொழிகள்‌ – வாழியே
ஏறு திருவுடையான்‌ எந்தை உல காரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌.
சப்த காதை என்பது விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச்‌ செய்த ஏழு வெண்பா.
இது தென்கலையாருக்கு நித்தியானு சந்தானமாக உள்ளது.
இந்த உரையின்‌ இறுதிப்‌ பகுதி இவர்‌ வாக்குக்கு எடுத்துக்காட்டாகக்‌ கொள்ளத்தகும்‌.
“ஆக இப்பிரபந்‌ தத்தால்‌ – அர்த்த பஞ்சக உபதேஷ்டாவே ஆசார்யனாகிறான்‌ என்னுமிடத்தையும்‌,
அவனிடத்தில்‌ ப்ரேமமற்றிருப்பார்‌ ஸ்வாத்‌காதக ரென்னுமிடத்தையும்‌,
அவர்கள்‌ ஜ்ஞானவிசேஷண யுக்தரோயாகிலும்‌, நித்ய ஸம்ஸாரிகளாய்ப்‌ போருவர்‌ என்னுமிடத்‌தையும்‌,
அதுக்கு க்ருதக்நரான இவர்கள்‌ அதிக்ரூர ரென்னு மிடத்தையும்‌,
ஸ்வோத்கர்ஷத்தைத்‌ தேடுகை ஆசார்யனுக்கு அழுக்கென்னு மிடத்தையும்‌,
இவ்வழுக்குக்கடி யான தோஷத்தைப்‌ பெரிய பெருமாள்‌ தாமே தமக்குப்‌ போக்கியருள வேணுமென்னு மிடத்தையும்‌.
ஆசார்யன்பக்கல்‌ ப்ரேமயுக்‌ தனானவன்‌ அர்ச்சிராதி மார்க்கத்தாலே
பரமபதத்திலே சென்று முக்தைசுவரியத்தைப்‌ பெற்றுக்‌ கைங்கர்ய ஸாம்‌ ராஜ்யத்திலே மூர்த்தாபிஷிக்தனாய்க்‌
கொண்டு யாவதாத்ம பாவியாக விரு.ப்பனென்னு மிடத்தையும்‌ அருளிச்‌ செய்து நின்றராய்த்து.”

சில கருத்துக்கள்‌:
அரங்கத்தின்‌ சிறப்பு – இனிதாகத்‌ திருக்‌கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌ என்று சொல்கி
விரோதி: அமர வஸ்‌துக்களில்‌ பரத்வ புத்தியும்‌,
அரக்ஷ்யரிடத்தில்‌ ரக்ஷ்கத்வ புத்தியும்‌.
அசேஷிகளிடத்தில்‌ சேஷித்வ புத்தியும்‌, அனுபாஸ்யரிடத்தில்‌ உபாஸ்ய புத்தியும்‌,
அனாத்மாவில்‌ ஆத்மபுத்தியும்‌.
அஸ்வதந்திரனான தன்னிடத்தில்‌ ஸ்வதந்திரபுத்தியும்‌,
அனுபாயங்களில்‌ உபாயத்வபுத்தியும்‌,
அபந்துக்களில்‌ பந்துத்வ புத்தியும்‌,
அபோக்‌யங்களில்‌ போக்யதாபுத்தியும்‌
பகவத்கைங்கரியத்தில்‌ ஸ்வபோக்‌த்ருத்வபுத்தியும்‌,
இவையெல்லாவற்றுக்கும்‌ வேர்ப் பற்றான அஹங்கார மமகாரங்களும்‌.

——————–

உபதேச ரத்தின மாலை வியாக்கியானம்‌
இம்மாலை மணவாள மாமுனி செய்தது. – 73 வெண்பாக்களுடையது.
இறுதியில்‌ உள்ள தனியன்‌
மன்னுயிர்காள்‌ இங்கே மணவாள மாமுனிவன்‌
பொன்னடியாம்‌ செங்கமலப்‌ போதுகளை – உன்னிச்‌
சிரத்தாலே தீண்டில்‌ அமானவனும்‌ நம்மைக்‌
கரத்தாலே தீண்டல்‌ கடன்‌.
சுவையான பல செய்திகளும்‌ இங்கு காணப்படும்‌. “நஞ்சீயர்‌ செய்த வியாக்கியைகள்‌ நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கு மில்லையே” (47) என்ற தொடருக்கு வியாக்கியானம்‌ சொல்லுவதுகாணத்தக்கது:
“பெரிய வாச்சான்‌ பிள்ளையைப்‌ போல திவ்வியப்‌
பிரபந்த முழுமைக்கும்‌ இவர்‌ வியாக்கியானம்‌ எழுதவில்லை;
நாலிரண்டுக்கே செய்தார்‌. நாவிரண்டு என்பது ஒரு முழுச்சொல்‌ (மரபுத்தொடர்‌), சில என்பது பொருள்‌.
இவர்‌ செய்தவை திருப்‌ பாவையும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பும்‌; பின்னையும்‌ உண்டாகில்‌
கண்டு கொள்வது” என்று எழுதுகிறார்‌.
நாலிரண்டு என்பது எட்டு அல்லது ஆறு என்று பொருளல்ல; சில என்றே பொருள்படும்‌ என்று இவர்‌ குறிப்பிடுவது ஒரு மரபு விளக்கமாகும்‌.
இவர்‌ இந்‌. நூலுக்குரிய இரண்டு தனியன்களுக்கும்‌ சேர்த்தே வியாக்கியா னம்‌ எழுதியுள்ளார்‌.

மூதற்பாடலுரையில்‌, பேசுகின்றேன்‌ மன்னியசீர்‌ வெண்‌
பாவில்‌ வைத்து என்பதன்‌ உரை
தமிழுக்கு வெண்பா கலித்துறை என்னுமாப்போலே அனேகம்‌ பாக்களுண்டிறே,
அதில்‌ கலித்‌துறையாலே ப்ரவிருத்தமாய்த்து சரம ப்ரபந்த நூற்றந்தாதி.
அதிலும்‌ அப்பியசிக்க எளிதாயிருக்கிற வெண்பா என்கிற சந்தஸ்ஸிலே வைத்தாய்த்து சதியருடைய
தமிழ்‌ விரகரான தாம்‌ அருளிச்‌ செய்தது. கற்கவிறே தாம்‌ உபதேசிக்கிறது.
“வெண்பா இரு காலிற்‌ கல்லானை”: என்றிறே இதன்‌ எளிமையிருப்பது.
அதுக்குச்‌ சீர்‌ மன்னுகையாவது,
முச்சீர்‌ நாற்சீர்‌ என்று சொல்லப்படுகிற சீரோடே பொருந்தியிருக்கை.
அன்றிக்கே
புகழ்‌ மலிந்தபா என்னுமாப்போலே இதுவும்‌ சீர்‌ மன்னியிருக்கிற தென்னவுமாம்‌,
எண்ணருஞ்சீர்‌ –
பொய்கை முன்னோருடைய சீரோடேபொருந்தியிருக்கிறது.

பின்னும்‌ சிலசெய்திகள்‌:
திருவிருத்தம்‌ முதலான நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நாலுக்கும்‌
திருமொழி முதலான பிரபந்தங்கள்‌ ஆறும்‌ அங்கங்களாயிறே இருப்பது.
அது திராவிட வேதமானால்‌, இதுவும்‌ திராவிட ரூபமான அங்கங்களென்னக்‌ குறையில்லை.
தமிழ்‌ செய்கையாவது,
எய்தற்கசிய மறைகளை ஆயிரம்‌ இன்தமிழால்‌ செய்தற்கு உலகில்‌ வரும்‌ சடகோபனை என்கிறபடியே,
வேதமானால்‌ அதிக்ருதாதிகார.மாயிருக்குமாகையால்‌ அகில சேதனர்க்கும்‌ அப்பியசித்து உஜ்ஜீவிக்கை
அரிதென்று
ஸர்வாதிகாரமாய்‌ ஸர்வோப ஜீவ்யமுமாயிருக்கும்‌
படி திராவிட பாஷாரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீகரித்து அருளிச்‌ செய்தாரென்கை (பாடல்‌ 14),
இவர்கள்‌ கலை திராவிட ப்ரஹ்ம வித்தை.
மற்றோரிடம்‌: ஆண்டாள்‌ பிறக்கைக்‌ கடியான அவருடைய
(பெரியாழ்வாருடைய) பெருமை இருக்கிறபடி,
திருமாலை கட்டுகையே தொழிலாக இருக்கிற இவர்‌ திருத்துழாயடி யிலே அவதரித்த இவளை
எடுத்துக்‌ கொண்டு போரய்த்‌ தந்தேவிகள்‌*
* தேவிகள்‌ என்பது இங்கு வைணவ சம்பிரதாயத்தில்‌ ஒருமையே; தேவியார்‌ என்பது போல.
கையிலே காட்டிக்‌ கொடுக்க, வந்த்யையா கையாலே அவரும்‌ அரும்பெறல்‌ பெண்ணாயிருக்கிற இப்பெண்பிள்ளையை அதிப்ரீதியடனே எடுத்துக்‌ கொள்ள, அப்போது வனமுலைகள்‌ சோர்ந்து பாய என்னும்‌ படி.யிறே ஸ்தன்யம்‌ பிரவஹித்தது
23-ஆதித்யோதயத்துக்கு அருணோதயம்‌ போலே வகுள பூஷண பாஸ்கரோதயத்துக்கு முன்னே வந்து அவதரித்த மதுரகவியாழ்வார்‌.
திருமங்கையாழ்வார்‌ அவதரித்த குறையலூர்‌ மண்ணியாற்றின்‌ ஜலஸம்ருத்தியையுடையது.
ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருப்பத்து நாலா
யிரப்படி, முப்பத்தாறாயிப்படி. என்ற வியாக்கியானங்கள்‌ நான்கும் முறையே
புராண ரத்னமான விஷ்ணு புராணம்‌, ஸ்ரீ பாஷ்யம்‌,
ஸ்ரீ ராமாயணம்‌, சுருதப்பிரகாசிகை
ஆகியவற்றின்‌ சங்கியையால்‌ செய்யப்பட்டன என்று சொல்லுகிறார்‌.
“நம்‌ சடகோபனைப்‌ பாடினையோ என்று நம்பெருமாள்‌ விஞ்சிய வாதரத்தாற்‌ கேட்ப என்றாய்த்து” என்று
சடகோபரத்தாதித் தனியனைக்‌ குறிப்பிடுகிறார்‌.
வரதராசர்‌, நஞ்சீயர்‌ பிரசாதித்த ஒன்பதினாயிரப்படியைக்‌
காரவேரியிலே விட்டு விட்டுப்‌ (பின்‌ தம்‌ நினைவாற்றலால்‌
முழு மையும்‌ எழுதி நம்பிள்ளை என்று பெயர்‌ பெற்ற செய்தியைச்‌ சொல்லுகிறார்‌.
இவையன்றி, இராமானுசருக்கு முன்‌ தொடங்கி, மணவாள மாமுனிகள்‌ வரையுள்ள ஆசாரியர்‌ வாழ்க்கையிலும்‌
உபதேசத்திலும்‌
கண்ட பல செய்திகளையும்‌ கருத்துக்களையும்‌ தம்‌ உரையெங்கும்‌ சொல்கிறார்‌.
இவ்வுரைகள்‌ யாவுமே குறித்த நூலின்‌ உரைகள்‌ மட்டுமல்ல;
உரை என்ற வியாஜத்தால்‌ அளவற்ற செய்திகளைத்‌ தெரிவிக்கும்‌ ஒரு சமய வரலாற்றுக்‌ களஞ்சியம்‌.

————–

திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம்‌
நம்மாழ்வாரின்‌ திருவாய்மொழியில்‌ ஒவ்வொரு திருவாய் மொழிக்கும்‌ (பதிகத்துக்கும்‌) முதற்பாடலின்‌ தொடக்கச்‌ சொல்லையும்‌
இறுதிப்‌ பாடலின்‌ இறுதிச்‌ சொல்லையும்‌ ஒரு வெண்பாவின்‌ தொடக்கமாகவும்‌ இறுதியாகவும்‌ முறையே அமைத்து
மணவாள மாமுனிகள்‌ ஒரு நூல்‌ செய்தார்‌.
திருவாய்மொழி முழுமையும்‌ அந்தாதி ஆனமையால்‌ இந்நூலும்‌ அந்தாதியாக உள்ளது.
இது திருவாய்மொழி நூற்றந்தாதி என்று பெயர்‌ பெறும்‌. இதன்‌ பாடல்களில்‌ ஒவ்வொன்றும்‌ நம்மாழ்வார்‌ புகழைக் கொண்டது. பாடல்‌ தொகை 100.
இந்நூலுக்குப்‌ பிள்ளை லோககஞ்சீயா்‌ விரிவான வியாக்கியானம்‌ செய்தார்‌.
இப்‌ பாடல்களில்‌ அமைந்த சில வரையறையை இவரே பின்வருமாறு கூறுகிறார்‌:
“இப்பிரபந்தங்களுக்கு அனேக நிர்பந்தங்களுண்டாயிறே இருப்பது.
அதெங்ஙனே என்னில்‌,
வெண்பா என்கிற சந்தஸ்‌ ஆகையும்‌,
இப்படியான இப்பாட்டில்‌ முற்பாதியிலே ஓரோர்‌ திருவாய்‌ மொழியின்‌ தாத்பர்யமும்‌,
தத்சங்கதிகளடைகையும்‌,
பாட்டுக்கள்‌ தோறும்‌ ஆழ்வார்‌ திருநாமங்கள்‌ வருகையும்‌,
அதில்‌ தாத்பர்யங்‌ களைத்‌ தாத்பர்யந்தமாய்ப்‌ பேசுகையும்‌, அந்தாதியாய்‌ நடக்கையுமாகிற-ஐந்து நிர்ப்ந்த முண்டாயிருக்குமாயிற்று’

இந்நூற்றந்தாதியின்‌ தனியன்‌ இரண்டுக்கும்‌ இவர்‌ உரை எழுதவில்லை.
இவ்வந்தாதிக்கு இவர்‌ பாடிய தனியன்கள்‌:
அல்லும்‌ பகலும்‌ அனுபவிப்பார்‌ தங்களுக்குச்‌
சொல்லும்‌ பொருளும்‌ தொகுத்துரைத்தான்‌ – நல்ல
மணவாள மாமுனிவன்‌ மாறன்‌ மறைக்குத்‌
தணவா நூற்‌ றந்தாதி தான்‌.
மன்னு புகழ்சேர்‌ மணவாள மாமுனிகள்‌
தன்னருளா லுட்பொருள்கள்‌ தன்னுடனே – சொன்ன
திருவாய்‌ மொழிநூற்றந்‌ தாதியாம்தேனை
ஒருவா தருந்துநெஞ்சே உற்று.

ஆர்த்திப்‌ பிரபந்த வியாக்கியானம்‌
மணவாள மாமுனிகள்‌ செய்த மூலம்‌, பெரும்பகுதி வெண்பா, சிறு பகுதி விருத்தம்‌ கலித்தாலிசை கலிப்பா கொண்டது.
பாடல்‌ எதிராசரைப்‌ புகழ்வது.
ஆயுள்‌ இறுதியில்‌ பரமபதத்தில்‌ ஆசை பிறந்து இந்நூல்‌ பாடிப்‌ பரமபதம்‌ அடைந்தார்‌ என்பார்‌.
பிள்ளை லோகஞ்சீயர்‌ இந்நூலுக்குத்‌ தாம்‌ செய்த வியாக்கியானத்‌ தொடக்கத்தில்‌ இரு தனியன்களைக்‌ குறிப்பிடுகிறார்‌
இவை முன்னமே உண்டாயிருந்தன என்கிறார்‌:
தேன்பயிலுந்‌ தாரா னெதிராசன்‌ சேவடிமேல்‌
தான்பரம பத்தி தலையெடுத்து – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன்‌ ஒண்தபிழ்கள்‌ செய்தான்‌
மணவாள மாமுனிவன்‌ வந்து.
வம்பவிழ்தார்‌ வண்மை மணவாள மாமுனிவன்‌
அம்புவியிற்‌ கால்பொருந்தா ஆர்த்தியினால்‌ – உம்பர்தொழும்‌
விண்ணுலகிற்‌ செல்ல விரைந்தெதிரா சன்பதங்கள்‌
நண்ணி யுரைத்தான்‌ நமக்கு.

இந்நூலுக்குத்‌ தமிழில்‌ பதவுரையும்‌ மணிப்‌ரவாளத்தில்‌ விரிவான வியாக்கியானமும்‌ செய்திருக்கிறார்‌.
பாடல்‌ தோறும்‌ விரிவான அவதாரிகை கூறிப்‌ பொருளைத்‌
தொடர்புபடுத்துகிறார்‌.
சில கருத்துகள்‌:
அஞ்சு வயசுக்குட்பட்ட ப்ரஜையுடைய துர்மரணமெல்லாம்‌ மாதாவினுடைய அனவதானத்தாலே வந்ததாக
அவளுக்கு சாஸ்திரம்‌ தோஷம்‌ விதிக்கையால்‌ கண்ணிலே
வெண்ணெயிட்டு நோக்கவேணுமிறே;
பிரஜையைக்‌ கிணற்றின்‌ கரையில்‌ நின்றும்‌ வாங்காதொழிந்தால்‌ தாயே தள்ளினாள்‌ என்னக்‌ கடவதிறே,
உடைமைக்கொரு முழுக்கு, உடையவனுக்கு-உடைமை பெறுந்தனையும்‌ முழுகவேண்டும்படியிறே இருப்பது.
ஓலமிடுதல்‌, வாக்காலே பெருமிடறு செய்து கூப்பிடுதல்‌. வாழி-நித்ய மங்களமாய்ச்‌ சொல்லவேணும்‌.
ஆழ்வார்கள்‌ பதின்மர்‌ என்கிறார்‌.
அருளுவீர்‌-அருளுவுதீர்‌ என்கிறார்‌.
————–

தனியன்‌ வியாக்கியானம்‌
நாலாயிரத்‌ இவ்வியப்‌ பிரபந்தங்கள்‌ இருபத்து நான்குக்கும்‌
தனி தனியான பல தனியன்கள்‌
(சிறப்புப்‌ பாயிரம்‌ போன்றவை) செய்யப்‌ பெற்றுள்ளன: அவற்றை ஓதியே பாசுரங்களை ஓதுவது
வைணவ சம்பிரதாயம்‌.
இவற்றுள்‌ வடமொழிச்‌ சுலோகங்கள்‌ சில,
தமிழ்ப்‌ பாடல்கள்‌ 34. இவற்றுள்‌ இரண்டொரு பாடல்கள்‌
நீங்கலாகச்‌ சம்பிரதாயமாக வழங்கும்‌ ஏனையவற்றுக்குப்‌
பிள்ளை லோகஞ்சீயர்‌ வியாக்கியானம்‌ எழுதியிருக்கிறார்‌. இவ்‌ வியாக்கியானங்கள்‌ பொதுவாய்‌ அவ்வப்‌ பிரபந்தங்கள்‌ தமக்குரிய பெரிய வாச்சான்‌ பிள்ளை வியாக்கியானம்‌ அரும்பதம்‌ முதலி
யவற்றோடு
தனிநூல்‌ எனப்‌ பதிப்பிக்கப்பட்ட இடங்களில்‌,
முற்சேர்க்கையாகச்‌ சேர்த்துப்‌ பதிப்பிக்கப்பெற்றுள்ளன.
தனி நூல்‌ வடி. வத்தில்‌ அச்சிடப்‌ பெறவில்லை போலும்‌. இத்தனியன்‌ வியாக்கியானங்களில்‌ பிள்ளை லோகம்‌ மூலத்தின்‌ பொருளை மட்டும்‌ விளக்கிக்கொண்டு போகிறார்‌.

————

உபதேசத்‌ திருநாமம்‌
இப்பெயருடைய ஒரு செய்யுள்‌ நூல்‌ ஏட்டுவடி வில்‌ உள்ளது.
நூலில்‌ ஆசிரியர்‌ பெயர்‌ குறிக்காவிட்டாலும்‌ இந்நூல்‌ தொடக்‌ கத்தில்‌ எழுதப்பெற்றுள்ள வடமொழித்‌ தனியன்‌,   “தம்‌ லோக தேசிக முனிம்‌ சரணம்‌ ப்ரபத்யே”என்று கூறுவதால்‌ இந்நூல்‌ லோகம்‌ ஜீயர்‌(லோகதேசிகர்‌) செய்ததாயிருக்கலாம்‌ என்று கொள்ளப்படுகிறது.
இது 89 பாடல்‌ கொண்டது; வெண்பா கட்டளைக்‌ கலித்துறை விருத்தம்‌ முதலான பல பாவினங்களும்‌ உள்ளன.
இப்பாடல்கள்‌ அனைத்தையுமே சீயர்‌ செய்யவில்லை.
தமக்கு முன்னே வழங்கிய பிள்ளை லோகாகாரியர்‌ மணவாள மாமுனிகள்‌ பற்றிய பாடல்கள்‌,
சில உபதேச ரத்தினமாலைப்‌ பாடல்கள்‌ ஆகியவற்றோடு தாமும்‌ சில புதுப்பாடல்கள்‌:. புனைந்து
இந்நூலாகக்‌ கோத்தார்‌ என்று தெரிகிறது.
பிள்ளை லோகாசாரியர்‌, அவர்‌ சீடரான கூர குலோத்தமதாசர்‌, திருமலை யாழ்வார்‌ என்னும்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை;
இவர்‌ சீடரான மணவாள மாமுனிகள்‌; இவர்‌ தந்தையான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌
தாதரண்ணரையன்‌, மாதா மகரான குரவை மணவாளர்‌ ஆகியோர்‌ இங்கு போற்றப்‌ பெறுகின்றனர்‌.
(குரவை மணவாளர்‌ – திருக்கோட்டியூர்‌ அழகிய மணவாளர்‌
என்பவர்‌).
பல இடங்களிலிருந்து பாடல்கள்‌ தொகுக்கப்பட்டன என்று தெரிகிறது.
இதன்‌ முதல்‌ பாடல்‌, யதீந்திர ப்ரவணப்ரபாவத்தின்‌ தொடக்கத்திலுள்ள பாடல்‌:
குலநாத னெங்கள்‌ மணவாள யோகி குணக்கடலைப்‌
பலநாளும்‌ மண்டிப்‌ பருகிக்‌ களித்திந்தப்‌ பாரினுள்ளே
உலகாரிய முனிமேகம்‌ முன்னாள்‌ என்‌ உள்ளங்குளிர
நலமான நீர்மழை நாளும்‌ பொழியுமிந்‌ நானிலத்தே.

————–

திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்‌
வைணவத்தில்‌ மூன்று மந்திரங்கள்‌ .மந்திரத்திரயம்‌ எனப்படும்‌.
அவற்றுள்‌ முதலாவது திருமந்திரம்‌; ஓம்‌ நமோநாராயணாய என்பது; இதுவே அஷ்டாக்ரம்‌, எட்டெழுத்து;
நான்‌ கண்டு கொண்டேன்‌ என்று திருமங்கையாழ்வார்‌ பாடுவது.
இதன்‌ பொருளை விளக்கிப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ முமுட்சுப்படி என்று எழுதினார்‌.
இது அவர்‌ எழுதிய அட்டாதச ரகசியங்களில்‌ ஒன்று.
முமுட்சு என்றால்‌ வீடுபேற்றில்‌ விருப்பமுள்ளவன்‌ என்று
பொருள்‌.
முதல்‌ திருமந்திரார்த்தப்‌ பகுதிக்கு, பின்ளையின்‌
தம்‌பியான அழகிய மணவாளப்‌ பெருமான்‌ நாயனாரே வியாக்‌கியானம்‌ எழுதியிருக்கிறார்‌.

இவ்வியாக்கியானத்துக்கு, பிள்ளை லோகம்‌ சீயர்‌ சுருக்கமாயும்‌, சுத்தசத்துவம்‌ தொட்டாசாரியர்‌ சற்று விரிவாயும்‌,
அரும்பத விளக்கம்‌ எழுதியிருக்கிறார்கள்‌.
பின்னர்‌ எம்‌. பாவையங்கார்‌ மிகவம்‌ விரிவான மற்றொரு வியாக்‌யானம்‌ எழுதினார்‌.
இவை யாவும்‌ ஒரு நூலாக 1893இல்‌ அச்சிடப்‌ பெற்றன.
பல கதைகளை எழுதித்‌ தேர்ந்தவரான பிள்ளை லோகஞ்‌
சீயர்‌ இங்கும்‌ தம்‌ அவதாரிகை உரையில்‌ பலசெய்திகளைச்‌
சொல்லுகிறார்‌.
“சர்வேஸ்வரன்‌ பெரிய பிராட்டியாருக்கு உபதேசம்‌
பண்ணினாரென்கிறது மந்திர த்வயத்துக்கும்‌ உபலஷ்ணமாய்‌,
அவள்‌ சேனை முதலியாருக்கு உபதேசிக்க, அவர்‌ பிராட்டி
நியோகத்தாலே நாதமுனிகளுக்குப்‌ பிரசாதித்தார்‌…
நாத முனிகளுக்கு ஸ்வப்னமுகனே உபதேகித்தார்‌ என்றும்‌ அருளிச்‌ செய்‌வார்கள்‌.
“ஒருநாள்‌ ரகஸ்யார்த்தமும்‌ மற்றைநாள்‌ திருவாய்மொழி
முதலான பிரபந்தமும்‌, அதின்‌ மற்றைநாள்‌ அவற்றினுடைய
அர்த்தமும்‌
ஆக மூன்று நானாக அருளிச்‌ செய்தருளினார்‌ என்று
அருளிச்‌ செய்வர்‌.
கண்ணிநுண்‌ சிறுத்தாம்பைப்‌ பன்னீராயிரம்‌ உருப்புரச்சரணம்‌ பண்ணப்‌ பிரத்தியட்சமாய்த்‌
திருத்திரை வளைத்துக்‌ கொண்டிருந்து
விசத விசததர விசததமமாகப்‌ரசாதித்தார்‌ என்று அருளிச்‌ செய்தருளுவர்‌.
“பிராட்டி பிரமா வுக்குப்‌ பிரசாதிக்க, பிரமா இவ்வருகுண்டான சிஷ்யாதிகளுக்கு
ரகஸ்யத்ரயோபதேசம்‌ பண்ணினார்‌
என்று ரிஷிகளுக்கு ரகஸ்‌யத்தினுடைய வரலாறு என்று அருளிச்‌ செய்து”…
“நாத முனிகள்‌தொடங்கி, நமக்கு சம்பிரதாயமாயிருக்கும்‌; பிரமா முதலாக, ரிஷிகளுக்கு சம்பிரதாயமாயிருக்கும்‌”-
என்றெல்லாம்‌ கூறியிருக்‌கும்‌ வரலாறுகள்‌ காணத் தக்கன.
இவருடைய அரும்பத விளக்கம்‌ பெயருக்கேற்றாற்போல்‌
மிகவும்‌ சுருக்கமாகவே இருக்கும்‌;
சுவையான பகுதிகளும்‌ நிரம்ப உள்ளன.

—————-

ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம்‌
இது மிகவும்‌ விரிந்த நூல்‌. டெம்மியளவில்‌ 600 பக்கம்‌
உடையது.
பரதத்துவ விவேகம்‌, சதாசார்ய விவேகம்‌, சித்தோபாய
விவேகம்‌, பாஞ்சராத்ப்ரமாண வைபவ விவேகம்‌,
பகவத்‌ பக்த துர்ஜாத்யபகம விவேகம்‌, வர்ணாச்மாசார விவேகம்‌, ஸ்ரீ வைஷ்ணவ யதச்ருஹஸ்தாதி
அந்யோந்ய வந்தநாதி சமர்த்தனம்‌, ப்ரபந்த தினசர்யை, பகவத்‌ ப்ரசாத யோக்யாயோக்யதாதியதிதி நிர்ணயம்‌,
சிஷ்டாசார்ய ப்ராதான்ய நிரூபணம்‌ என்ற பத்துப்‌ பிரகரணங் களைக்‌ கொண்டது.
இதன்‌ நடையைப்‌ பார்க்கும்போது, இவ்‌வாசிரியர்‌ இதை முதலில்‌ எழுதியிருக்கலாமோ என்று கருதத்‌ தோன்றுகிறது,
முழுமையும்‌ வரிவரியாக, வாக்கியம்‌ வாக்கியமாக வடமொழியாகவே எழுதியிருக்கிறார்‌.
200 சொற்கள்‌ கொண்ட ஒரு பக்கம்‌ முழுமையும்‌ எடுத்துக்கொண்டால்‌, 22 சொற்களே தமிழ்ச்‌ சொற்கள்‌.
ஏனைய யாவும்‌ வடச்சொற்களே. ,
ஆகையாலே,
அனைவர்க்கும்‌, என்று, அத்தனையிறே, அங்கு, ஆகையால்‌,
என்று சொல்லக்‌ குறையில்லை,
ஆகையால்‌, என்கிற, இதன்‌ படியே, கீழ்ச்‌ சொன்ன, என்று விவேகிகள்‌ கண்டு கொள்வது,
இன்னமும்‌, யதிகளுக்குச்‌ சொல்லியிராமையாலும்‌, அவற்றில்‌, அந்த, அவர்களைப்‌ போலன்றிக்கே,
அந்த உண்டாகச்‌ சொல்லி யிருக்கையாலே, இல்லையென்னுமதுவே – இவையே தமிழ்ச்‌
சொற்கள்‌.
ஏனைய யாவும்‌ வடசொற்கள்‌, கிரந்த எழுத்து. ஒருகால்‌
பொருளானது சமயாசாரமானபடியால்‌, முழுமையும்‌
இங்கு வடமொழியாகத்‌ தந்து இடைச்சொற்களை மட்டும்‌ தமிழாகப்‌ பெய்து தந்தார்‌ போலும்‌.
ஓரிடத்தில்‌ இவர்‌ ‘விப்ரயதி: என்னுமத்தாலே வர்ணத்ரயத்திலும்‌ யதிகள்‌ உண்‌
டென்னுவதும்‌
அவர்களுக்குண்டான தண்டபேதங்களும்‌
சுப்பிரசித்தம்‌’ என்று எழுதியிருப்பது கருதத்தக்கது.
பிராமணருக்கு மட்டுமே சத்நியாசமும்‌ ஆசாரிய
பதவியும்‌ உண்டென்று அத்வைதிகள்‌ கூறிய கூற்றை
மறுத்துச்‌ சிவாக்கிரயோகிகள்‌, மற்ற வருணத்தாருக்கும்‌ சந்நியாசயும்‌ ஆசாரிய பதவியும்‌ உண்டென்று நிலைநாட்டிச்‌ சைவ சந்நியாச
பத்ததி (வடமொழியில்‌)
எழுதியமை முன்னர்க்‌ குறிப்பிட்டோம்‌.
வைணவ பரமாக இந்த ஜீயரும்‌ இதைச்‌ சொல்வது காணத்தக்கது.
ஒவ்வொரு பத்தியின்‌ முடி விலும்‌ இவர்‌, இப்படி, விவேகிகள்‌ கண்டு கொள்வது (அல்லது நிச்சயித்துக்‌ கொள்வது) என்று முடிப்பார்‌.
இது, பெருந்தேவனார்‌ பாரத வெண்பாவின்‌ உரை நடைப்‌ பகுதியின்‌ இறுதியிலும்‌
‘இவ்வாறு செய்தாராகக்‌ கண்டு
கொள்வது” என்று வரும்‌ தொடரை நினைவூட்டுகிறது.
காலம்‌
மணவாள மாமூனிகள்‌ 15அம்‌ நூற்றாண்டின்‌ இடைப்‌ பகுதியில்‌ (கி.பி. 1443) பரமபதம்‌ அடைந்தார்‌. அக்காலத்தில்‌
பரகால நல்லான்‌ பட்டர்பிரான்‌ ஜீயர்‌ பிரசித்தமாய்‌ விளங்கிய சீடர்‌.
அவர்‌ வழியில்‌ மூன்றாம்‌ தலைமுறையில்‌ வந்தவரே பிள்ளை லோகஞ்சிீயர்‌.
எனவே, இவர்‌ காலம்‌ கி.பி. 1525-50 எனக்‌ கொள்ளுதல்‌ பொருந்துவதாகும்‌.

————–

பரகால நல்லான்‌
இவர்‌ பதினாறாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்து, ஸ்ரீ வைஷ்ண
வத்தின்‌ ரகஸ்யத்ரயம்‌ என்னும்‌ மூன்று மந்திரங்களுக்கும்‌ விரிவான விளக்கம்‌ எழுதினார்‌.
இவ்விளக்கம்‌ ரகஸ்யார்த்த ப்ரதபரகை என்றும்‌, பரகால நல்லான்‌ ரகஸ்யம்‌ என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
இவர்‌ பெயரும்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ என்றும்‌ பர காலார்யார்‌ என்றும்‌ வழங்குவதுண்டு.
இவர்‌ நூலும்‌ இவர்‌ வர லாறும்‌ பிரசித்தமாக வழங்கவில்லை.
நூலிலிருந்து சில செய்தி களை இங்குக்‌ குறிப்பிடலாம்‌.
நூல்‌ பெரிய நூல்‌; டெம்மி அளவில்‌ 308 பக்கம்‌ கொண்டது.
மூன்று பிரகரணமாயுள்ளது. முதலாவது திருமந்திரப்‌ பிரகரணம்‌.திருமந்திரம்‌ – ஓம்‌ நமோ நாராயணாய.
இதன்‌ ரகஸ்யார்த்தத்தை 72 பக்கங்களில்‌ விளக்குகிறது. இரண்டாவது த்வயப்‌ பிரகரணம்‌.-த்வயம்‌ என்பது இரண்டு மந்திரங்கள்‌.
ஸ்ரீமந்‌ நாராயணாய சரணெள சரணம்‌ ப்ரபத்யே-ஸ்ரீமதே நாராயணாய நம; என்பன.
இவற்றின்‌ ரகஸ்யார்த்தத்தை 76 பக்கங்களால்‌ விளக்கு
கிறது.
மூன்றாவது சரம சுலோகம்‌ (பகவத்‌ கதையிலுள்ளது):
ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம்‌ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமா சுச:
(எல்லாக்‌ கர்ம யோகாதி உபாயங்களையும்‌ விட்டு என்னொரு வனையே சரணமாக அடைவாய்‌,
நான்‌ உன்னை உனது பாபங்்‌களிவிருந்தும்‌ விடுவிப்பேன்‌: நீ சோகிக்கவேண்டிய நிமித்தமில்லை என்பது இதன்‌ பொருள்‌;
கண்ணன்‌ இப்பொருளைக்‌ குருக்ஷேத்‌ திரத்துப்‌ போர்முனையில்‌ அருச்சுனனுக்கு உபதேசித்தான்‌.)
இது இங்கு 71பக்கங்களால்‌ விளக்கப்படுகிறது.
நல்லான்‌ இம்மந்திரத்தையும்‌ சொல்‌ சொல்லாகப்‌ பிரித்து விரிவாகப்‌ பொருள்‌ எழுதுகிறார்‌.
நடை அதிகமான வடமொழி. கலந்த மணிப்பிரவாளம்‌ என்பது மட்டுமல்ல. மிகவும்‌ கடினமானது.
அதனால்தான்‌ இது அதிகம்‌ ஆட்சி பெறவில்லை போலும்‌: தெளிவாக விளங்கிக்‌ கொள்ளக்கூடி யவாறு இதிலிருந்து சில வரிகளை எடுத்துக்‌ காட்ட இயலவில்லை. கீழ்வரும்‌ பகுதியைக்‌ காண்க.
“மாம்‌ என்று அசரயண்யமான வயக்தியைச்‌ சொல்லு
கையாலே –
நாராயண பதத்தில்‌ அனுஸந்தேயமான வாத்ஸல்யாதி குண சதுஷ்டயங்களும்‌ அனுஸந்தேசங்கள்‌.
“வாத்ஸல்யமாவது – அன்றீன்ற கன்றின்‌ பக்கல்‌ தாய்‌
பண்ணும்‌ வ்யாமோஹம்‌,;
அதாவது – சுவடுபட்ட தரையில்‌ புல்லையும்‌ காற்கடைகொள்ளும்‌ தேநுவானது தன்கடையில்‌
நின்றும்‌ புறப்பட்ட
கன்றினுடைய தோஷத்தைத்‌ தன்பேறாக நக்கி தன்‌ முலைப்‌ பாலாலே அத்தைத்‌ தரிப்பிக்குமாபோலே
ஆஸ்ரிதகமான தோஷமே போக்யமாக அங்கீகரித்து பாலே
போல்‌ சீர்‌: என்கிற தன்‌ கல்யாண குணங்களாலே அவர்களை ரக்ஷிக்கை.
ஸ்வாமித்வமாவது – ஆஸ்ரிதருடைய பேறிழவினுண்‌
டான ஸூக துக்கங்கள்‌ அவர்களுக்கன்றிக்கே யாம்படி, அவர்‌ களையுடையனாகை
ஸெளஷஸீல்யமாவது – ‘அவாக்ய நாதராக” என்கிறபடியே பெரிய மேன்மையுடையனாய்‌ ‘அவனெவ்விடத்‌
தான்யானார்‌’ என்னும்படி யிருக்கிறவன்‌ க்ஷுத்ரஸம்சாரியான சேதநனோடே அவன்‌ சிறுமையாதல்‌ தன்‌ பெருமையாதல்‌ தன்‌ நெஞ்சிற்‌ படாதபடி புரையறக்‌ கலக்கை.
ஸெளலப்யமாவது, கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென்றிவர்க்குக்‌ கட்கரிய கண்ணன்‌” என்கிறபடியே
அதீந்த்ரியனான தான்‌ எல்லாருடைய கண்ணுக்கு
மிலக்காய்க்‌ கொண்டு ஸுலபனாய்‌ நிற்கை.”

பூர்வாசாரியர்கள்‌ குறித்த பல செய்திகளும்‌ வரலாறும்‌
கூறுகிறார்‌. பட்டர்‌ பற்றிய செய்தியொன்று: பட்டர்‌ பாதிரிக்‌
குடியிலே எழுந்தருனினபோது, மறவன்‌ : முயற்குட்டியைப்‌
பிடித்தேன்‌;
அதன்‌ தாய்‌ முன்னே வந்து தண்டனிட்டவாறே
விட்டுப்‌ போந்தேன்‌” என்ன,
முயலுக்குச்‌ சரணாகதியே ரஷகமென்று உபதேசித்தாரில்லை.
அரி: ப்ராணாந்‌ பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: என்கிற ஞானம்‌ வேடனுக்கு இப்படியிருக்க,
ப்ரபத்தி வைபவம்‌ இருந்த படியென்‌ என்று பட்டர்‌ விஸ்மிதரானார்‌
துவயத்தை விளக்குமிடங்களில்‌, எம்பார்‌ பட்டர்‌ ஜீயர்‌ சிறியாத்‌ தான்‌ கொற்றியம்மைப்‌ பிராட்டி, அருளாளப்‌ பெருமாள்‌ அம்‌ மங்கியம்மாள்‌ அனந்தாழ்வான்‌ நஞ்சீயர்‌ போன்றார்‌ செய்திகள்‌ பல கூறுகிறார்‌.
நூல்‌ முழுமையும்‌ ராமாயணம்‌ உபநிடதம்‌ கதை நாலாயிரப்‌ பிரபந்தம்‌ முதலியவற்றின்‌ மேற்கோள்கள்‌ அளவின்றிக்‌ காணப்படும்‌.

——–
மணிப்பிரவாளம்‌
மணிப்பிரவாளம்‌ பற்றிய பல செய்திகளை எமது தமிழ்‌ இலக்கிய வரலாற்று நூல்களில்‌ வெவ்வேறிடங்களில்‌ விளங்கக்‌ கூறியிருக்கிறோம்‌
* இங்கு மலையாள மொழியிலக்கணத்திலிருந்து
சில குறிப்புக்களை மட்டும்‌ தருகிறோம்‌. இக்குறிப்புக்களோடு அச்‌ செய்திகளையும்‌ சேர்த்துப்‌ படித்துக்‌ கொள்க:
“இரண்டு வகையான சொற்கள்‌ கலப்பதாலேயே நாட்டு
மொழி – சமஸ்கிருதக்‌ கலப்புத்‌ தோன்ற முடியும்‌.
அவ்வாறு தோன்றும்‌ தனித்‌ தன்மையுடைய வாக்கியங்களை மணிப்பிர வாளம்‌ என்று பெயரிடுவது இலக்கணை.
மணி என்பது நாட்டு மொழியையும்‌ பிரவாளம்‌ என்பது சமஸ்கிருதத்தையும்‌ ஒரு தலையாகக்‌ குறிக்கின்றன.
தமிழ்மணி ஸம்ஸ்க்ருத பவழம்‌ கோக்கின்றேன்‌. வ்ருத்தமான செந்நூன்‌ மேல்‌. என்று வழங்குதலைப்‌ பார்க்க.
ஆனால்‌,தமிழ்‌ சம்ஸ்க்ருதம் என்று உள்ள ஸுமனஸ்ஸுகள்‌ கொண்டொரு : இண்ட மால தொடுக்கின்றேன்‌
புண்டரிகாக்ஷ பூஜயா(ய்‌). என்றும்‌,
ஸம்ஸ்க்ருத மாயின செங்கழிநீரும்‌
நற்றமி மாயின பிச்சக மலரும்‌
ஏக கலந்து கரம்பக மாலாம்‌
வ்ருத்த மனோஜ்ஞாம்‌ ஸம்க்ருத யிஷ்யே.
என்றும்‌ கற்பிக்கின்ற கருத்துக்கள்‌ மணிப்பிரவாளம்‌ என்ற
பெயருக்குப்‌ பொருந்துவதில்லை.
இப்பாடல்களில்‌ காணப்படும்‌ “மாலை: என்பது நாட்டு மொழி – சமஸ்கிருதக்கலப்பின்‌ பெயரன்று.
ஒப்புமை அடிப்படையிலமைந்த இலக்கணையால்‌
மாலை எனக்‌ கூறப்படுகின்றது. ஆனால்‌ மணிப்பிரவாளம்‌ என்ற பெயரோ, இலக்கணை இடுகுறி ஆகிய இரண்டின்‌ அடிப்படை யிலும்‌ அமைந்ததாகும்‌.”*
இக்கருத்து மலையாள மொழி மணிப்பிரவாளத்துக்கு
லீலாதிலகம்‌ என்பது அவ்விலக்கணத்தைக்‌ கூறும்‌ மலையாள இலக்கண நூல்‌.
தமிழில்‌ மணிப்பிரவாளம்‌ உரை நடையில்‌ வருவதே யொழியச்‌ செய்யுளில்‌ வந்ததில்லை, அதற்கு இலக்கணமும்‌ இல்லை.

————

உலாப்‌ பிரபந்தம்‌
உலா என்பது இறைவன்‌ நீராடி அலங்கரித்துக்‌ குழாங்கள்‌ புடை சூழ நையாத மனத்தினரையும்‌ நைவிக்கும்‌ பொருட்டு

வீதியிலே உலாவரும்போது, சம்பிரதாயமான
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்‌ என்ற ஏழு பருவ மகளிரும்‌
கண்டு காழமுறுகிறார்கள்‌ என்று பாடும்‌ அமைப்‌ புடையது.
இது அடி வரையறையின்றி நிமிர்ந்து செல்லுகின்ற கலிவெண்பா யாப்பினால்‌ பாடப்பெறும்‌.
இறைவனே ஆன்மாக்‌ களுக்கெல்லாம்‌ நாயகனாதவின்‌ அவனை கண்டு பெண்டிர்‌ காமுற்றனர்‌ என்று சொல்லும்போது,
பெண்டிர்‌ மட்டுமல்லாது எல்லா உயிர்களுமே அவன்மீது காதல்‌ கொண்டன என்று சொல்லும்‌ பொருத்தமும்‌ அமைகிறது.

தலத்தின்‌ சிறப்புக்கள்‌,
இறைவன்‌ பெருமை, அவன்‌ திருமஞ்சனம்‌ கொள்ளும்‌ சிறப்பு,-அவன்‌ அணிகலன்‌ அணிந்து அலங்கரித்துக்‌ கொள்ளுதல்‌,
அவன்‌அமர்ந்து வருகின்ற வாகனச்‌ சிறப்பு, உடன்வரும்‌ குழாங்கள்‌ முதலியன தொடக்கப்‌ பகுதியில்‌ விரிவாகச்‌ சொல்லப்பெறும்‌.
வீதிகளின்‌ வழியே பெருமான்‌ உலா வருங்கால்‌ எழு பருவ மகளிரும்‌ கண்டு காதலித்துக்‌ கலக்க முற்றார்கள்‌ என்று
கவிராயர்‌ பருவத்துக்குப்‌ பொருந்த கற்பனைத்‌ திறனோடு சொல்வது இப்‌ பிரபந்தமாகும்‌.
அவ்வப்‌ பருவங்களுக்குரிய செயலாகிய சிற்றி லிழைத்தல்‌, கழங்காடுதல்‌, அம்மனையாடுதல்‌,
பாவை விளை யாட்டு, ஊசல்‌ நீராடுதல்‌, பந்தாடுதல்‌, யாழ்‌ வாசித்தல்‌ முதலிய விளையாட்டுக்களும்‌ பிறவும்‌ சொல்லப் பெறும்‌.
சொல்லுங்கால்‌ மடக்கு முதலிய சொல்லணிகள்‌ அதிகம்‌ அமைக்கப் பெறும்‌.
சமயம்‌ நோக்கி மாதப்‌ பெயர்கள்‌ நாட்‌ பெயர்கள்‌ வாரப்‌ பெயர்‌ கள்‌ முதலியன சிலேடை வகையால்‌ சுவையாகச்‌ கூறவும்‌ பெறும்‌.
இடையே தல புராணச்‌ செய்திகள்‌ பலவும்‌ பெய்யப்பெறும்‌,
இவ்வாறெல்லாம்‌ நிகழ, பாட்டுடைத்‌ தலைவன்‌ போந்தான்‌ உலா என்று நூலை முடிப்பது மரபு.

ஏழு பருவத்துக்கும்‌ உரிய ஆண்டுகளை இலக்கணநூல்கள்‌
கூறும்‌.
இவை முறையே 3-8, 9-70, 77-74, 75-15, 24, 29, 36 என்பது
பன்னிரு பாட்டியல்‌; 7, 77, 73, 19, 25, 31, 40 என்பது பிங்கல
நிகண்டு.
பிற பாட்டியல்களும்‌ வெவ்வேநாகக்‌ கூறும்‌.
பின்‌ வருவது ஒரு தனிப்பாடல்‌;
பேதை தனக்குப்‌ பிராயமும்‌ ஏழு; பெதும்பைக்கு ஒன்பது;
ஒதிய மங்கைக்குப்‌ பன்னிரண்‌ டாகும்‌; ஒளிர்‌ மடந்தை
மாதருக்‌ கீரேழ்‌; அரிவை பதினெண்‌; மகிழ்‌ தெரிவைச்‌
சாதிமூவே ழெனும்‌; பேரிளம்‌ நாலெட்டுத்‌ தையலர்க்கே.
காதல்‌ தோற்றியும்‌ தோன்றாதும்‌ உள்ளது பெதும்பைப்‌
பருவநிலையாதலால்‌, அதைப்‌ பாடுவது கடினம்‌ என்ற கருத்தோடு,
பேசும்‌ உலாவிற்‌ பெதும்பை புலி’ என்று பழம்பாடல்‌ கூறும்‌.

திருமால்‌ பிரபந்தங்களாக அறியப்‌படுபவை மூன்றே,
திருக்குறுங்குடி. அழகிய நம்பியுலா
சிறுபுலியூர்‌்உலா –
இரண்டின்‌ ஆசிரியர்‌ பெயரும்‌ தெரியவில்லை;
காலம்‌ 77ஆம்‌ நூற்றாண்டு.
மற்றது திருவேங்கடஉலா, காலத்தால்‌ அவ் விரண்டுக்கும்‌ முற்பட்டது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading