மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே! {திருவாய்மொழி. 1-1-1}
ஆயிரங் கண்ணன் அரன் அயனாதி யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில் நிலையுற நிலவு செய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும் பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள்.
கிட்டிய கேடன் கனகனை மாளக் கிடத்து மாவூருடைத் திருத்தாள்
ஒட்டிய மைந்த னுரையினை மெய்ப்பித் துவந்தவன் தொழுதெழுந் திருத்தாள்
மட்டிலா வினையேன் மனத்திலு மன்ன மகிழ்ந்தருள் பரப்பிய திருத்தாள்.
களமிகக் கமலங் கொண்டயன் துலக்கக் கங்கையைக் கான்றதோர் திருத்தாள்
வளமிக வழங்கு மாவலி சிரத்தே வைப்புற மகிழ்ந்தருள் திருத்தாள்
எளியனே னிருளா ரிவ்வித யத்து மிலங்கிடத் தலங்கொளுந் திருத்தாள். திருமகள் வருடச் சிவந்தலர் திருத்தாள் செவ்வியத் தாமரைத் திருத்தாள்
வரமது வேண்டி யணுகிய வானோர் வணங்கிட மகிழ்ந்தருள் திருத்தாள்
தருமசிந் தையனாந் தசரதன் மனையில் தவழ்ந்தலங் கரித்தருள் திருத்தாள்
கருமியேன் வினைகள் களைந்தருள் வானென் கருத்தினுங் கனிந்தமர் திருத்தாள்.
தூயமா முனிவன் கௌசிகன் பின்னர்த் தொடர்ந்து கானடந்தருள் திருத்தாள்
சாயலாண் மங்கை யகலிகை சாபந் தவிர்த்தருள் பவித்திரத் திருத்தாள்
தீயவ ரரக்கர் பூண்டொடு தீவான் செறிவன முகந்தருள் திருத்தாள்
பேயனே னேனும் பெரும்பதந் தனையான் பெற்றிட வருள்செயுந் திருத்தாள்.
கொங்கல ரடிக்கே யுரியவ னென்ற குகன்றனுக் குதவிய திருத்தாள்
கங்கையின் மதுரக் கனிகளாய்ந் தளித்த சபரியை யுவந்தருள் திருத்தாள்
கங்குலும் பகலும் கருணையே பொழியுங் கமலமா மென்மலர் திருத்தாள்
துங்கமி லெளியேன் மனத்திலுந் துலங்கத் தோய்ந்தருள் பரப்பிய திருத்தாள்.
பரிவுடன் பணிந்த பரத நம்பிக்குப் பாதுக மீந்தருள் திருத்தாள்
விரியழற் பங்கி விராதனை யுதைத்து வீழ்த்தி விண் ணருளிய திருத்தாள்
அரியெனக் கவந்த னறிந்துள முருக வாதரித் தருளிய திருத்தாள்
எரிவினை மிஞ்சு மெளியனே னுளத்து மிலங்கிவீற் றிருப்பமர் திருத்தாள்.
அஞ்சலி கரத்தோ டடிபணிந் தேத்தும் அனுமனுக் கருள்புரி திருத்தாள்
செஞ்சிறைக் கிழவன் சடாயு கண் டேத்தச் சேண்பத மருளிய திருத்தாள்
தஞ்சனே னடியே னென்ற வீடணற்குத் தண்ணளி யருளிய திருத்தாள்
நஞ்சினுங் கடிய நெஞ்ச னேனுக்கும் நலந் தர நயந்தருள் திருத்தாள்.
நிராசனராய தண்டக முனிவர் நினைவினில் நிலவு செய் திருத்தாள்
விராவரு கானப் புள்விலங் கவைக்கும் வியன்பத மருளிய திருத்தாள்
தராதலத் தன்று சராசர முற்றுந் தனிக்கதி தந்தருள் திருத்தாள்
பராவுத வில்லாப் பாவியே னுளத்தும் படிந்தருள் பண்ணிய திருத்தாள்.
வேண்டிய வசுதே வன்றளை யவிழ வியந்தவன் கண்டதோர் திருத்தாள்
ஆண்டவ னருளார் நந்தகோ பன்ற னகந்தனிற் றிகழ்தரு திருத்தாள்
மூண்டெழு காத லசோதையா மன்னை முகந்தனை மலர்த்திய திருத்தாள்
ஈண்டி வந்திந்த எளியனே னகத்து மிருளற வொளிதருந் திருத்தாள்.
தலைவனா நந்தன் மாளிகை யெங்குந் தவழ்ந் தெழிலூட்டிய திருத்தாள்
முலையினூ டுயிருண் டரக்கியை வீழ முடித்துமீ தாடிய திருத்தாள்
தலைநெறித் தோடித் தங்கிய கபட சகடிறத் தாக்கிய திருத்தாள்
நிலையிலா வெளியேன் நெஞ்சிலு நிலைத்து நின்றருள் பரப்பிய திருத்தாள்.
தயிர்கடை யொலிக்குத் தாளமிட்டது போற் சதிருட னாடிய திருத்தாள்
உயருர லுருட்டி நிறுத்திமீ தமுத முண்ணுவா னுயர்ந்தெழு திருத்தாள்
நயமுற மடுவிற் காளியன் முடிமேல் நடனமுற் றருளிய திருத்தாள்
மயலுறு மெனது மனதையு முகந்து மன்னிட மகிழ்ந்தருள் திருத்தாள்.
வலம்புரி யாழிக் குறிகண்மண் படிய வனவிருந் தையிலுலாந் திருத்தாள்
சிலம்புகள் செய்யுஞ் சிஞ்சித மார்ப்பத் தெருவெலாந் திரிந்தருள் திருத்தாள்
நிலம்பெறு நித்ய போக்யமா யிலகும் நிதியென நிலவிடுந் திருத்தாள்
அலம்பெறு மடியே னகத்தையுந் தனதோ ராசனமாக்கிய திருத்தாள்.
சுருதிபின் தொடரக் குழலிசை சுவைப்பச் சுரபிகள் பின்தொடர் திருத்தாள்
அரிவையர் துகிலை யபகரித் தாங்கோர் குருந்திடை யமர்ந்தருள் திருத்தாள்
இருமையு மெவர்க்கு மிணையிலாக் கதியா யிலகிடு மிண்டைநாண் மலர்த்தாள்
கருவினை கனிந்த கடையனே னகத்துங் கருணையோ டமர்ந்தருள் திருத்தாள்.
தன்னையா தரித்த தருமனாதி யர்க்காய்த் தூதுசென் றருளிய திருத்தாள்
சொன்னவா றிளையோன் தூய சிந்தனையினாற் சுருக்குறக் கட்டுணுந் திருத்தாள்.
மன்னவன் வகுத்த மல்ல ரீட்டத்தை மட்குழி யொத்திய திருத்தாள்
என்னையா தரிப்பா யென்னுளந் தங்கி யிலங்கிய பங்கயத் திருத்தாள்.
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply