1-கலவ் புந பாப ரதாபி பூதே –பக்தாத்மநா –ஸ உத் பபூவ
பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்
2-திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்தி தா
யதி பா ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்ம ந –ஸ்ரீ கீதை –11-12-
ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்
3-நூபுராத்ய பரிமித திவ்ய பூஷண –ஸ்ரீ கத்ய த்ரயம்
நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன்
4-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-
தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை
5- வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்
வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம்மாதிரி அறிபவன் இப்பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது –
7–ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது
8-கதா புனஸ் சங்க ரதாங்க கல்ப த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-
திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய
திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ
8-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-
விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது
காமத்தினால் கோபம் ஏற்படுகிறது
9-ஆஹார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -சாந்தோக்யம் -7-26-2-
உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது
10- ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யஷா வகமம் தர்ம்யம் ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –கீதை -9-2-
வித்யைகளுக்குள்ளும் ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது –
பாபங்களைப் போக்கடிப்பதில் உயர்ந்தது -என்னை நேரில் காட்டுவது இது தான்
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாதது –
11-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -தைத்த ஆனந்தவல்லி -5-
அப்படிப்பட்ட இந்த விஞ்ஞான மெய்ஞான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனும்
அந்த ஜீவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஆனந்த மெய்ஞான பரமாத்மா
12-க்லஸோ அதிக தரஸ் தேசம் அவ்யக்தா சக்த சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர வாப்யதே – -கீதை-12-5-
அவ்யக்தம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட மனத்தை யுடையவர்களுக்கு
அதை அடையும் விஷயத்தில் மிகவும் துக்கம் உள்ளது
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆத்ம ச்வரூபத்தை அடைவது மிகவும் கடினம் அன்றோ
13-சராசர விவேக ஜ்ஞா கரீயாம்ஸோ விமத் சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதே வேதார்த்த ஸங்க்ரஹ –வேதார்த்த ஸங்க்ரஹம் -நிகம ஸ்லோகம்
சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக்காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் செய்யப்பட்டது
14-ஆயுரா ஸாஸ் தே -யஜுர் அஷ்ட -3-5-
நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன்
15- ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நே ஸா ந -மஹா உபநிஷத் –1-
நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான்
பிரமனும் இல்லை சிவனும் இல்லை
16-த்ரவீபூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பா நீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷர ளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத் யவதாரணாத்
வர்ஷா யுதான் யத பாஹுந் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
மா முனிவரே திரு உலகு அளந்து அருளினை அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான்
17-ஏகஸ்மின் நப்யதிக் ராந்தே முஹுர்த்தே தியாக வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதே நேவ யுக்த மாக் ரந்திதும் ப்ருசம்
பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது
18-குஹேந ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசான் பஹுன்
ஆசயா யதி வா ராம புந சப்தா பயே திதி –அயோத்யா –59-3-
பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன்
19-ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் தனம் இச்சேத் ஹுதா ஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அன்விச்ச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் –ப்ரஹ்மாண்டம்
ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும்
ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன்
மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்
20-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய–ப்ருஹ 6-5-6-
கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்காத தக்கது
21-யஸோதாஸ் த நந்த யமத் யந்தம் விமுக்தம்
மிகவும் அழகியதான யசோதையின் கைக்குழந்தை
22-கதம் ந்வயம் ஸி ஸூ ஸேத லோகே நாசமுபாகதே
ஸாகா யாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூ சிஸ் மித –பார -ஆற –188-94-
உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக்கிளையில் உள்ள இளம் தளரில்
இனிய புன் முறுவலுடன் கூடிய இக்குழந்தை எப்படிப் படுத்துக்க கொண்டு இருக்கிறது
23-ப்ரஹ்மாணம் நீல ஸிதி கண்டம் ச யாஸ் சாந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி -350-36
பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள்
ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –
24-ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் தாஸ்து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி
ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில்
ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்
இப்படி அறிந்து இம்மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply