திருப்பாவை ஸ்வாபதேசம்” –ஓரிரு வார்த்தைகளில்–
(ஸ்ரீ ராமானுஜர் இதழில் வெளியிட்ட திருப்பாவை மகாத்மியம்)
1. மார்கழிக்கு…..ப்ராப்ய, ப்ராபகம்.
2. வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்.
3. ஓங்கி…….திருநாம சங்கீர்த்தனம்.
4. ஆழிமழை……பாகவத ப்ரபாவம்.
5. மாயனை……வித்யா ப்ரபாவம்.
6. புளளும்…….அர்ச்சாவதாரம்.
7. கீசுகீசு…….சேஷத்வ ஞானம்.
8. கீழ்வானம்……பாரதந்த்ர்யம்.
9. தூமணிமாடம்……. பாரதந்த்ர்யம்.
10. நோற்று……ஸித்த தர்மம்.
11. கற்று…….அநுஷ்டானம்.
12. கனைத்திளம்……அநுஷ்டானம்.
13. புள்ளின்வாய்……ஸ்வரூப ஞானம்.
14. உங்கள்…….ஆத்மகுண பூர்த்தி.
15. எல்லே……பாகவத ஸ்வரூபம்.
16. நாயகனாய்…….ஆசார்ய ப்ரபாவம்.
17. அம்பரமே…..ஸ்வகத ஸ்வீகாரம்.
18. உந்து…..பிராட்டி.
19. குத்துவிளக்கெரிய …புருஷகார.
20. முப்பத்துமூவர்…..வைபவம்.
21. ஏற்ற கலங்கள் ….ஸ்வரூபக்ருத தாஸ்யம்.
22. அங்கண்மா…..அநந்யார்ஹ சேஷத்வம்.
23. மாரிமலை……பகவத் க்ருபை.
24. அன்றிவ்வுலகம்….. மங்களாசாஸனம்.
25. ஒருத்தி…….தத்வ த்ரயம்.
26. மாலே…..ஸாரூப்யம்.
27. கூடாரை ….ஸாயுஜ்யம்
28. கறவைகள் …ப்ராபகம் (உபாயம்)
29. சிற்றஞ்சிறு……ப்ராப்யம் (உபேயம்)
30. வங்கக்கடல்…..பலச்ருதி.
———-
ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்
1) பாரை உண்டு –
2) பார் உமிழ்ந்து –
3) பார் இடந்த எம்பெருமான்,
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தார்!
அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை
அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.
இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான்
கோதா சதுச்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். (#ஸ்ரீ_கோதா_சதுச்லோகி )
அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை உபதேசிக்கிறார்.
1) ‘கீர்த்தனம்’ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
2) ‘தஸ்மை ப்ரசுரார்ப்பணம்’ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
3) ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்று அருளினார் ஸ்ரீ வராஹ மூர்த்தி.
பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில்
பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார்.
ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.
ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,
1. தூமலர் தூவித்தொழுது
2. வாயினால் பாடி ️
3. மனத்தினால் சிந்திக்க
என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள்.
“உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!
வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை – மூன்று பத்து பாசுரங்களாக திருப்பாவையில் பாடினாள் ஆண்டாள்.
1) முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்துகிறது.
2) 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது.
3) 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது.
“மாயனை மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்”
என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை,
திருப்பாவையை நித்யமாகவே பாடுவோம். பாடி தொழுது வணங்குவோம்!
——————–
ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ திவ்ய தேச அனுபவ ஸூசகமும் –
மார்கழித் திங்கள் – நாராயணன் – பரமபத நாதன்
வையத்து – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் – அழகிய பாற் கடல் (க்ஷராப்தி நாதன்)
ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி மழை – பழியம் தோளுடைப் பத்ம நாபன் – திருவநந்தபுரம்
மாயனை – வடமதுரை அனுபவம் – மதுரா
புள்ளும் சிலம்பின – திருவண்வண்டூர்
கீசு கீசு என்று -திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானம் – தேவாதி தேவன் – திருவத்தியூர் அனுபவம்
தூ மணி – திருக்கடிகை
நோற்றுச் சுவர்க்கம் – திருக்காட்கரை
கற்றுக் கறவை – திருமோகூர்
கனைத்து இளம் கன்று – திருசித்ரகூட அனுபவம்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை
உங்கள் புழக்கடை – திருஅழுந்தூர்
எல்லே இளம் கிளியே – திருவல்லிக்கேணி அனுபவம்
நாயகனாய் நின்ற – திருக்குறுங்குடி அனுபவம்
அம்பரமே தண்ணீரே – காழிச் சீராம விண்ணகரம்
உந்து மதகளிற்றன் – திருநறையூர் அனுபவம்
குத்து விளக்கு -திருவிடவெந்தை
முப்பத்து மூவர் – திருப்பாடகம்
ஏற்ற கலங்கள் – திருக்கண்ணமங்கை – திருநாராயணபுரம்
அம்கண் மாஞாலம் – திருமால் இரும் சோலை
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம்
ஒருத்தி மகனாய் – திருக்கண்ணபுரம்
மாலே மணிவண்ணா –ஸ்ரீ வில்லி புத்தூர்
கூடாரை வெல்லும் – திருவேங்கடம்
கறவைகள் பின் சென்று –ஸ்ரீ விருந்தாவனம்
சிற்றம் சிறு காலை –ஸ்ரீமத் த்வாராபதி
வங்க கடல் கடைந்த –ஸ்ரீ வில்லி புத்தூர்.
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply