ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-2 – ஸ்ரீ அபவாத பிரதானம்–அஜாதசத்ரு பிரமாணம் /பிராண பிராமணம் (சிஷு பிராமணம்)/மூர்த்த-அமூர்த்த பிராமணம்–

சங்கரரின் முகவுரை
ஆத்மாவை தேடுதல், அறிதல், அடைதல் எல்லாமே ஒன்றேதான். உண்மையிலேயே நாம் நாடிக் கொண்டிருப்பது ஆத்மாவைத்தான்.
ஆனால் அதை அறியாமல் இருக்கிறோம். எதை நான் நிபந்தனையின்றி விரும்புகின்றேனோ அதுதான் ஆத்மா.
ஆத்மாதான் அடைய வேண்டிய லட்சியம், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும், சம்சாரமும் விளக்கப்பட வேண்டியது,
அதிலிருந்து எப்படி விடுபட என்ன வழி என்பதைப் பற்றியும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.

————-
பகுதி-1 : அஜாதசத்ரு பிரமாணம்
ஸ்லோகம்-1
அஜாத சத்ரு – பகைவனே இல்லாதவன். யாரையுமே பகைவனாக நினைக்காதவன்.
த்ருப்தஹ – கர்வம்; அனுசான – வேதங்களை பயின்றவர்.
காஷ்யம் – காசியை ஆள்பவர்; ப்ரவாணி – உபதேசிக்கிறேன்.
தத்ம – நாங்கள் கொடுக்கிறோம். வாசி – சொல்லுக்கே,
தாவந்தீதி – சொல்கிறார்கள்.

———–

ஸ்லோகம்-2-13
பாலாகியின் உபதேசம்:
ஒரு தேவதையை அறிமுகப்படுத்தி அதன் மீது ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய உபதேசிக்கிறார்.
ஆதித்யதேவனை ஆலம்பனமாக அறிமுகப்படுத்தி சில குணங்களை கூறி தியானம் செய்ய சொல்கிறார்.
ராஜா அஜாதசத்ரு இதற்கும் மேலே சில குணங்கள் எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.

—————–

ஸ்லோகம்-14
एतावन – இவ்வளவுதான, एतावत् इति-இவ்வளவுதான்
न विदितँ – அறிந்து கொள்ளவில்லை , त्वा – உங்களை , उपयानी – அணுகுகிறேன்
அஜாதசத்ரு பாலாகியிடம் இவ்வளவுதானா? என்று கேட்க அவரும் இவ்வளவுதான் என் உபதேசம் என்ற கூறினார்.
இவ்வளவுதான் அறிந்து கொண்டேன் என்றால் நீ பிரம்மத்தை பூரணமாக அறியவில்லை என்று ராஜா அஜாதசத்ரு கூறினார்.
பாலாகி தலை குனிந்து தான் சிஷ்யனாக உங்களை அணுகுகிறேன். எனக்கு நிர்குண பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று வேண்டினார்.

—————-

ஸ்லோகம்-15
அஜாதசத்ரு இவ்விதம் கூறுகின்றார்,
இது தலைகீழாக இருக்கிறது (प्रतिलॊमँ), பிராமணன் சத்திரியனிடம் பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று அணுகுவது.
இருந்தாலும் உனக்கு தெளிவாக உபதேசிக்கிறேன் என்ற ராஜா உறுதி கூறினார். ராஜா, பாலாகியின் தோளில் கை போட்டு எழுந்தார்.
இருவரும் உறங்கிக் கொண்டிருந்த மனிதனிடம் சென்று அடைந்தார்கள். அவனை பிராணனுடைய பல பெயர்களை கூறி அழைத்தார்கள்.
அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லை. ஆகையால் அவனை உலுக்கி எழுப்பினார்கள். அவன் எழுந்து விட்டான்.
இதிலிருந்து ஸ்தூல சரீரமும், பிராணனும் அறிவு ஸ்வரூபம் இல்லை என்று தெரிகின்றது.

சங்கரரின் விளக்கவுரை
சேதன (அறிவு) தத்துவம் எப்பொழுதுமே அறிபவனாக இருக்கின்றது.
அசேதன (ஜடம்) தத்துவம் எப்பொழுதுமே அறியப்படுவதாக இருக்கிறது.
ஆனால் இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறது. இதைப் பிரித்துப் பார்த்துத்தான் அறியத்தான் இந்த விசாரம்.

அறிவு ஸ்வரூபமாக இருப்பது அறிபவன், அனுபவிப்பவன்; ஜடமாக இருப்பது அறியப்படும் பொருளாக, அனுபவிக்கப்படுவதாக இருக்கிறது.

கேள்வி-1: குருவானவர் நிர்குண பிரம்மத்தை உபதேசிப்பதற்கு தூங்கி கொண்டிருப்பவனை
உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி உபதேசிக்க முடியும்.
பதில்-1: ஆழ்ந்த உறக்கம் ஞானத்தை கொடுக்காது, அதை ஆராய்ந்து பார்த்தால்தான் ஞானம் அடைய முடியும்.
எனவே இங்கே அனுபவத்தை ஆராய்வதற்காகத்தான் தூங்கும் மனிதனை உதாரணமாக எடுத்துக் கொண்டார்.
அக்னிக்கு விஷயமான பெட்ரோல், நெய் இவைகளை ஊற்றினால் அது அனுபவிக்க ஆரம்பித்து விடும்.
அப்படி போக்தாவாக இல்லாவிட்டால்ய் அது அக்னி இல்லை என்று உறுதியடையலாம்.
அதுபோல சப்தம் கேட்டவுடன் பிராணன் சேதனமாக இருந்தால் பதிலளித்திருக்கும் .
ஆனால் அமைதியாக இருப்பதால் அது அசேதனம் என்று உறுதியாகிறது.

கேள்வி-2: நாம் அழைத்த போதிலும் அது பிராணனை அடையவில்லையென்றால் அது எப்படி பதிலளிக்கும்?
பதில்-2: பிராணன் தேவதை என்று கர்மகாண்ட்த்தில் ஏற்றுக்கொண்டு, யாகத்தின் போது சத்தமாகவோ
அல்லது மனத்துக்குள்ளே சொன்னாலே அது பிராணனை அடையும் என்று நம்பி செய்வதைப் போல
இங்கே எப்படி கூப்பிட்டிருந்தாலும் அது பிராணனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.

கேள்வி-3: சரி இவ்வாறு அழைத்தும் பிராணன் பதிலளிக்காததால் ஜீவனில் சேதனம் என்று எதுவுமே இல்லையென்றுதானே தோன்றுகிறது.
பதில்-3: உடலிலுள்ள சேதனம் எல்லா அங்கங்களிலும் வியாபித்திருக்கிறது, அபிமானம் வைத்திருக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் காரணத்தில் லயம் அடைந்து விட்டதால் அது பதிலளிக்காது.

பல பொருட்களை சேர்த்து உருவாக்கிய வண்டியை அதை உருவாக்கியவர்கள் அனுபவிப்பதில்லை,
அதை வாங்கியவர்தான் அனுபவிக்கிறார்.
அதுபோல பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் இந்த ஜீவனில் ஒரு அங்கமான பிராணன் போக்தாவாக இருக்க முடியாது.
இங்கு பிராணனுக்கு மேலான ஒன்றை உபதேசிக்க இருப்பதால் பிராணனை ஆத்மா என்று உபதேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
இப்பொழுது ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறான். அவனுடைய ஸ்வரூபம் பற்றி உபதேசம் செய்வதற்காக இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்.

—————–

ஸ்லோகம்-16
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் என்ன?
யத்ரேஷ – எப்பொழுது இந்த ஜீவன், ऎतद अभुत – இந்த மாதிரி தூங்கிக்கொண்டிருப்பவன்
விக்ஞானமய புருஷ – புத்தியுடைய மனிதன், कुव – எங்கு ऎव-இவன்; ததா3-அந்த நேரத்தில் अभुत -இருக்கின்றான்

தூங்கும்போது ஒருவன் எங்கிருக்கிறான்?
कुतः ऎतद आगात – எங்கு இருந்து இவன் திரும்பி வருகிறான்?
என்று அஜாதசத்ரு கேட்டார். तद ह न मेने – சிஷ்யர், பாலாகிக்கு தெரியவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஆத்மஸ்வரூபத்திற்கு சென்றிருந்தான். பிரம்ம ஸ்வரூபத்திலிருந்து வருகிறான்.

கேள்வி-1: ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் ஸ்வரூபத்திலிருந்து வேறெங்காவது சென்று திரும்பி வந்ததா?
பதில்-1: ஒருவேளை ஆத்மா வேறெங்காவது சென்று வந்தால், இது உண்மையாகி விடும்.
ஆத்மா வேறெங்கும் செல்லவில்லையென்றால் சென்று வருதல் என்ற விவகாரம் உண்மையற்றதாக இருக்கும்.
கற்பணையாகத்தான் இருக்க முடியும். ஆத்மா வேறெங்கும் செல்வதில்லை, வருவதுமில்லை.
ஆகவே ஆத்மா எப்பொழுதும் தன் ஸ்வரூபத்திலேயே இருக்கிறது.
ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் தன் ஸ்வரூபத்தில் இருந்தால் அதன் தன்மை என்ன?
அதிகரணம் – இருக்குமிடம், அபாதனம் – இடத்திலிருந்து வரும் இடம்.

விக்ஞானமய புருஷஹ – விக்ஞானமயகோசம்.
சைதன்யமய – சைதன்யத்தினுடைய விகாரம் – சைதன்யத்துக்கு விகாரம் கிடையாது.
சைதன்யமய என்பதற்கு பிரம்மத்தின் உறுப்பாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியான பொருள் புத்தியையுடைய ஜீவன்.

—————–

ஸ்லோகம்-17
விழிப்பு நிலையில் நாம் கர்த்தாவாக, போக்தாவாகவும் இருக்கிறோம். ஆனால் அது நம்முடைய ஸ்வரூபமல்ல.
ஏனென்றால் கனவில் நாம் இரண்டுமில்லாத நிலையில் இருப்பதால் அதுதான் சுபாவ ஸ்வரூப நிலை.
எந்த வித குணமுமில்லாத சைதன்யத்துடன் ஒடுங்கியிருக்கிறான்.
மோட்சத்திற்கு ஒரு உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் அந்த நிலையில் சம்சாரம் இல்லை. ஆனால் அக்ஞானம் இருக்கிறது.
எனவே அது மோட்சம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மா-சிதாபாஸனாக நாம் நான் என்று எடுத்துக் கொள்கிறோம்.

स्वम् अपि इदि – நாம் நம்மிடத்திலேயே இருத்தல்; க்ருஹீதம் – ஒடுங்குதல்
तदा- அப்பொழுது, तेषाँ प्राणानँ – எல்லா இந்திரியங்களின்
आदाय – , விக்ஞானேன – சிதாபாஸத்துடன்
अन्तहम् – மனதில், आकाशा- பரமாத்மா ,तस्मिन छेत् – அந்த இடத்தில் ஒடுங்குகிறான்.

எப்பொழுது இந்திரியங்களிலிருந்து விலகி, சிதாபாஸத்துடன் நிர்குண சைதன்யத்துடன் லயமாகி விடுகிறான்.
இந்த ஜீவனின் ஆழ்ந்த உறக்கத்தில் மூக்கினுடைய செயல்பாடுகள், நாக்கினுடைய செயல்பாடுகள்,
வாயினுடைய செயல்பாடுகள் என எல்லாய் இந்திரியங்களின் செயல்பாடுகளும் ஆத்மாவில் ஒடுங்கி விடுவதால்
எந்த விவகாரமும் நடக்காமல் இருக்கிறது. எல்லா இந்திரியங்களும் சிதாபாஸத்தில் ஒடுங்கி
பிறகு இதயத்தில் உள்ள பரமாத்வாவுடன் லயம் அடைகிறது.

————–

ஸ்லோகம்-18
निगच्छति – அடைகின்றான், उच्छवयँ- மேலான, கீழான, जानपदान् – வேலையாட்கள் ,
जनपदे- நாட்டில், परिवतत- உலாவருகின்றான்
நாம் அனுபவிக்கும் சம்சாரம் வந்து போகிற விஷயம், இந்திரியங்களோடு அபிமனமில்லாத போது சம்சாரம் இல்லை.
எனவே சம்சாரத்திற்கு ஸ்வரூப சம்பந்தம் இல்லை. விழிப்பு நிலைஇல்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சம்சாரத்தை அனுபவிப்பதில்லை. காரணம் இந்திரியங்களோடு சம்பந்தமில்லை.

கேள்வி-1: கனவு நிலையிலும் இந்திர்யங்களுடன் தொடர்பில்லை ஆனாலும் ஸ்வப்ன பிரபஞ்சத்தை உருவாக்கி
சம்சாரத்தை அனுபவிக்கிறான். எனவே சம்சரத்திற்கு காரணம் இந்திரியங்களோடு உள்ள சம்பந்தம் என்பதில்லை
அது உனது ஸ்வரூபம்தான்.
பதில்-1: விழிப்பு ஸம்ஸ்காரங்கள்தான், கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணமாகிறது.
ஆகவே கனவு என்பது விழிப்பு நிலையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் உருவாக்கிய உலகத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.
ஆழ்நிலை உறக்கத்தில் இந்த ஸ்ம்ஸ்காரங்களில் இருந்து விடுதலையடைகிறோம்.

கனவு எப்படி வருகிறது? (சாஸ்திர விளக்கம்)
மனம் நாடிகளின் வழியாகத்தான் கனவுலகில் சஞ்சரிக்கிறது. மனதின் இருப்பிடம் இதயம், இதிலிருந்துதான் பல நாடிகள் செல்கிறது.
மனமானது நாடிகள் வழியே கண், காது போன்ற இந்திரியங்களை அடைகிறது. பிறகு இந்த உலகத்தை அனுபவிக்கிறது.
கனவு நேரத்தில் அந்தக்கரணம் நாடிகள் வழியே சென்று கோளகத்தை அடைகின்றது. நம்முடைய ஸம்ஸ்காரத்திற்கேற்ப
கர்ம வசத்தினால் எதோ ஒரு வாசனையுடன் தொடர்பு கொண்டு நாடிகளுக்குள்ளே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி
அந்த பிரபஞ்சத்தை ஜீவன் அனுபவிக்கிறான். அவனுக்கு தைஜஸன் என்று பெயர்.
கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணம் கர்ம வினை காரணமாக ஏதாவது ஒரு ஸம்ஸ்காரத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால்தான்.

மந்திர விளக்கம்:
ஒருவன் எப்பொழுது கனவு நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் தன்னுடைய கர்ம பலனைத்தான் அனுபவிக்கிறான்.
கனவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் கர்ம பலனை அனுபவிக்கிறோம். கனவுப் பிரபஞ்சமும் மித்யா என்று இந்த மந்திரம் உணர்த்துகிறது.
கனவில் மகாராஜாவாக இருப்பது போல, பெரிய பண்டிதனாக இருப்பது போல, மேலான, கீழான பிறவியை அடைந்து,
மகாராஜா நகர்வலம் வரும்போது எந்தவித தடையும் இல்லாமல் படைகளுடன் அனுபவிக்கிறாரோ
அதுமாதிரி ஜீவனும் தன்னுடைய வாஸனையால் ஒரு தனி உலகத்தை படைத்துக் கொண்டு தன் விருப்பப்படி
தன்னுடைய உடலில் உலா வருகின்றான்.
ஆகவே சம்சாரம் என்பது அனாத்மாவை அபிமானிக்கும் போதுதான் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

———————-

ஸ்லோகம்-19
अथ – அதுவே , यदा सुषुप्तो भवति – எப்பொழுது உறங்கிக்கோண்டு இருக்கின்றானோ,
न कस्यचन वेद – எதையும் அறியவில்லை.
நம் உடலில் 101 பிரதான நாடிகளும், 72,000 நாடிகளும் இருக்கின்றன. இதற்கு ஹிதர என்று பெயர்.
இவைகளனைத்தும் இதயத்திலிருந்து உடல் முழுவதும் வியாபித்து செல்கின்றது.
இந்த நாடிகள் வழியே சென்று இதயத்திற்குள் ஒடுங்கி விடுகின்றான் ஜீவன்.
ताभि – அதே நாடி வழியே திரும்பி , पुरीतति – இதய ஆகசத்துக்குள் உறங்குகின்றான்.
குழந்தையாக இருந்தாலும், மகாராஜாவாக இருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும், எல்லோருமே ஆனந்தத்தினுடைய
எல்லையை அடைந்து உறங்குகின்றான். இதுதான் உறக்கத்தைப்பற்றிய விசாரம். ஜீவனில் ஏற்படும் சம்பந்தத்தால் சம்சாரம் ஏற்படுகிறது.
முதலிரண்டு அவஸ்தைகளிலும் சம்பந்தம் இருக்கிறது.
எனவே சம்பந்தம் நித்யமாக இருப்பதால் சம்சாரமும் நித்யமாக இருப்பது போல் தோன்றுகிறது.
ஆனால் ஆழ்நிலை உறக்கத்தில் எந்தவித சம்பந்தம் இல்லை.

————

ஸ்லோகம்-20
இந்த மந்திரத்தில் பிரம்ம லட்சணம் விளக்கப்படுகிறது. உபநிஷத் இதை முக்கியமானது, ரகசியமானது என்று கூறுகிறது.
1. பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது à ஜகத்துக்கும், ஜீவனுக்கும்
2. எந்தவொரு சைதன்யம் நம்முடைய ஒரு சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருக்கிறது.
3. பிரம்ம – ஆத்ம ஐக்கியத்தை குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
4. பிரம்மத்தின் புதிய லட்சணம் – (ஜகத் மித்யா, பிரம்ம சத்யம், பிரம்ம அத்வைதம்)
5. ஜீவன் எங்கிருந்து வருகின்றான்

மந்திர விளக்கம்:
சிலந்தி பூச்சி அதன் வலையை அதுவே பின்னிக்கொண்டு அதன் மீது ஊர்ந்து சென்று, வந்து கொண்டிருக்கின்றது.
நெருப்பிலிருந்து சிறிய சிறிய தீப்பொறிகள் தோன்றுகின்றனவோ.
சேதனமான சிலந்தி ஜடமான வலைக்கு உபாதான காரணமாக இருக்கிறது, அதாவது யாருடைய உதவியுமில்லாமல்
தன் வலையை தானெ உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல பிரம்மன் யாருடைய உதவியுமில்லாமல்
ஜகத் உருவாகுவதற்கு உபாதான காரணமாக இருக்கின்றது. அதுவே நிமித்த காரணமுமாக இருக்கின்றது.
பிரம்மன் ஜீவன் உருவாகுவதற்கு காரணாமாக இருக்கிறது. நெருப்பிலிருந்து தோன்றும் தீப்பொறி ஸ்வரூபத்தில் ஒன்றாக இருக்கிறது
ஆனால் உருவத்தில் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மனில்ருந்து தோன்றும் ஜீவனும் ஒரே ஸ்வரூபத்தை உடையது.
இதனால் எந்தவித மாற்றமுடையாமல் பிரம்மன் இருக்கிறது, ஜீவனை தோற்றுவிக்கிறது.

ஏவம் ஏவ – இவ்விதமாகவே, உதாரணத்தைப் போல
அஸ்மாத் ஆத்மனஹ – இந்த உடலுக்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவிடம் இருந்தே
ஸர்வே பிராணாஹ – எல்லா பிராணன்களும், ஜீவராசிகளுடைய எல்லாய் இந்திரியங்களும்
ஸர்வே லோகாஹ – எல்லா லோகங்களும்,- அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உலகத்தை
ஸர்வே தேவாஹ – எல்லா தேவர்களூம் – இந்த உலகத்தினுடைய நியதியை கண்காணிப்பவர்கள்.
ஸர்வானி பூதானி – எல்லாய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. இதனால் பிரம்மன் என்று சொல்ல வேண்டிய இடங்களில்
ஆத்மா என்ற சொல்லை உபயோகித்திருப்பதால் இரண்டும் ஒன்றே என்று குறிப்பால் உணர்த்துகிறது.
தஸ்ய – பிரம்மத்தினுடைய, உபநிஷத் – ரகசியமான பெயர்.
அது ஸத்யஸ்ய ஸத்யம் – சத்தியத்தினுடைய சத்யம்

இது ரகசியம் என்று கூறுவதற்கு காரணம் இது மிகவும் சூட்சுமமான லட்சணம். இதை புர்ந்துக் கொள்வதற்கு மிகவும் கடினம்.
இது புனிதமான பெயர் என்றும் கூறலாம். இந்தப் பெயரை தகுதியானவர்க்கு மட்டும்தான் சொல்ல வேண்டும்.
”ஸ்த்யஸ்ய” என்ற சொல்லில் உள்ள சத்யமானது பிராணனை குறிக்கும்.
பிராண ஏவ ஸத்யம் – பிராணனுடைய சத்யம், உலகத்தினுடைய சத்யம் என்று இதை பொருள் கொள்ள வேண்டும்.
தேஷாம் ஏவ ஸத்யம் – பிராணன்களுக்கு பிரம்மன் ஸத்யம். உலகத்தை எப்படி சத்தியம் என்றூ கூறமுடியும் என்றால்
சத்தியம் என்ற சொல்லை இரண்டாக பிரித்தால் உருவத்துடன் கூடியது, உருவமில்லாதது அல்லது வியாவகாரிக ஸத்யம் என்றும் இதைக் கூறலாம்.
வியாவஹாரிக சத்தியத்திற்கு பாரமார்த்திக சத்யமாக இருப்பது–

சங்கரரின் விளக்கவுரை (ஸத்யஸ்ய ஸத்யம்)
கேள்வி-1: இரண்டு கேள்விகளையும் ஒரு கேள்வியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்?
எங்கிருக்கிறானோ அங்கிருந்துதான் வரவேண்டும். எனவே இரண்டாவது கேள்விக்கு அவசியமிலை.
பதில்-1: குதஹ: எங்கிருந்து, எதனால் என்று இரண்டு பொருள் உள்ளது.
அபாதானத்தை நீக்கி நிமித்தத்தை எடுத்துக்கொண்டால் நீ கேட்ட கேள்வி சரி.
எனவே எதன் காரணமாக திரும்பி வருகிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி-2: பதிலைப் பார்க்கும் போது நிமித்தக்காரண அடிப்படையில் இல்லை. அபாதான அடிப்படையில்தான் இருக்கிறது.
பதில்-2: முதல் கேள்வியில் ஆதாரம், ஆதேயம் என்ற சந்தேகம் வந்து விடும்.
இந்த சந்தேகத்தை நீக்கி அத்வைதத்தை நிலைநாட்ட இந்த இரண்டாவது பதிலும் தேவை.

சங்கரரின் விளக்கம்
விளக்கம் ஏன் தேவை? எங்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசாரம் செய்யல்லாம்.
பிரயோஜனம் இருக்க வேண்டிய இடத்தில் விசாரம் செய்யல்லாம். இந்த இரண்டுமே இல்லை.
பிறகு ஏன் விளக்கம் தேவை என்று சங்கரர் விளக்குகிறார்.

தஸ்ய உபநிஷத் – அவனுடைய ரகசியம் என்பது ஜீவனுடையதா, பிரம்மத்தினுடையதா? என்ற சந்தேகம் வரலாம்.
தஸ்ய – ஜீவனுடைய லட்ச்ணமாக இருந்தால் சம்சாரத்தைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தஸ்ய – பிரம்மத்தின் லட்சணமாக இருந்தால் அதன் ஞானத்தைத்தான் அடைவோம்.

ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்றால் மஹா வாக்கியமே தவறாகி விடுகிறது.
ஜீவன் அசம்சாரியென்றால் சாஸ்திர உபதேசம் அனர்த்தமாகி விடும்.
ஜீவனும், பிரம்மனும் ஒன்றென்றால் பிறகு சாஸ்திர உபதேசம் தேவையற்றதாகி விடும்.

கேள்வி: குருவானவர் உறங்கிக்கொண்டிருந்தவனிடம் சென்று பிரம்மத்தை உபதேசிக்க அணுகினார்.
ஆகவே ஜீவாத்மாவைத்தான் குறிக்கிறது. இங்கு ஜீவனைப்பற்றித்தான் விசாரிக்கின்றோம்.
“தஸ்ய” என்பது ஜீவனைத்தான் குறிக்கிறது. நம்மால் அறியப்பட வேண்டியது ஜீவனைத்தான்.
ஆத்மாவை இத்யவெ உபாஸீதே என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பல இடங்களில் ஆத்மாவைத்தான் அறிய வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஈஸ்வரன் ஒருவர் இருந்தால்தானே அவரை குறிப்பதற்கு.
பதில்: ஜீவாத்மாத்தான் என்று நீ சொல்கிறாய், இதை சம்சாரி என்று ஓரிடத்திலும்,
அசம்சாரி என்று வேறிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவனில் இரண்டு அவஸ்தைகள் இருப்படாக வைத்துக் கொள்ளலாம்.
அசம்சாரியாக இருக்கிறது ஜீவனிலிருந்துதான் ஜகத் வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே.

கேள்வி: இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இரண்டு விபரீதமான தர்மத்துடன் ஒரு பொருள் இருக்க முடியாது.
தடஸ்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்வேன், ஜீவனிடமிருந்து வேறான தடஸ்த ஈஸ்வரன் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது.
இந்த பிரகரணம் பிரம்மத்தைப்பற்றித்தான் விளக்கப்படுகிறது. 15வது ஸ்லோகத்தில் “பிரம்மத்தே வர்ஷியதே இதி” என்பதிலிருந்து
பிரம்மத்தை உபதேசிக்கிறேன் என்ற குருவின் பதிலிலிருந்து, பிரம்மந்தான் விசாரம் செய்யப்படுகிறது.

ஜீவன் வேறு, ஈஸ்வரன் வேறு, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வரனிடம் தங்குகிறான்.
எனவே அவன் அந்த நிலையிலே ஈஸ்வரனிடத்தில் தங்குவதாலேயே, நாம் ஜீவனை அறிவது ஈஸ்வரனை விசாரிப்பதிலிருந்துதான்.
வேறு சில இடங்களில் ஈஸ்வரனைப்பற்றியும் பேசப்படுகிறது.
அந்த ஈஸ்வரனும் அறியப்பட வேண்டியதுதான் என்று சாஸ்திரம் சொல்லியிருப்பதால்,
ஆத்மாவையும் அறிய வேண்டும், ஈஸ்வரனையும் அறிய வேண்டும்.
எல்லா இட்த்திலும் ஜீவ-ஈஸ்வரனை வேறுபடுத்தி பேசியிருக்கிறது.
“அஹம் பிரஹ்மஸ்மி” என்பதெல்லாம் உபாஸனைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
பதில்: பிரவேச ஸ்ருதிவசாத் – பிரவேச ஸ்ருதியின் அடிப்படையில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம்தான் உண்மை.
ஜீவனிடமிருந்து வேறுபடாத ஈஸ்வரனைதான் “தஸ்ய” என்ற சொல் குறிக்கிறது.
இந்த உலகத்துக்கே ஆதாரமாக உள்ள ஈஸ்வரந்தான் ஜீவனுக்குள் சென்றிருக்கிறார்.
ஆத்மா என்ற சொல் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஒன்று.
ஈஸ்வரனாக இருக்கும்போது ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குகிறான் என்பது தவறு.

கேள்வி- ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் என்று சொன்னால் அதில் இரண்டு தோஷம் உள்ளது.
ஜீவன் சம்சாரி, ஈஸ்வரன் அசம்சாரி. எனவே இந்த ஐக்கியம் இருவரும் சம்சாரியாக இருப்பார்கள்.
முதல் கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கும். இரண்டாவது கருத்தை ஏற்றுக்கொண்டால் சாஸ்திரமும் தேவையில்லை என்றாகி விடும்.

பேதாபதிவாதி — விருத்திகார மதம் – உருவாக்கியவர் பர்த்துரு பிரவஞ்சம்.
விசிஷ்டாவைதம் பேதமும், அபேதமும் சேர்ந்திருப்பதால் இந்தப் பெயர். ஈஸ்வரன் ஒருவர்தான்
ஜீவனை சம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈஸ்வரன் அசம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் சொல்லியிருக்கிறது.
ஈஸ்வரன் ஜீவனுக்குள் செல்லும்போது விகாரமடைந்து சென்றிருக்கிறார்.
இப்படி புரிந்து கொண்டால் ஜீவனை ஈஸ்வரனிடமிருந்து வேறாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம்.
இந்த பேத, அபேத லட்சணத்தால் எல்லா வேத வாக்கியங்களும் சரியாக பொருந்தி வரும்.

கேள்வி-1: பல பரமாத்மாக்கள் இருக்கிறார்கள் அதில் சில பரமாத்மா ஜீவாத்மாவாக இருக்கிறது.
மற்றவைகள் பரமாத்மாவாகவே இருக்கிறது. உதாரணமாக பல விதைகளில் சில விதைகள் விதைகளாகவே இருக்கிறது,
மற்றவைகள் விதைக்கப்பட்டு மரமாகி விடுகிறது.
பதில்: உபநிஷத் பல பரமாத்வாக்களை பற்றி பேசவில்லை. ஜீவர்களை பலவாக சொல்லியிருக்கிறது. ஆகவே இது தவறு.

கேள்வி-2: ஒரு பரமாத்மா முழுமையாக ஜீவனாக மாறியிருக்கிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பாலையும் தயிராக மாற்றுவது போல.
பதில்-2: பரமாத்மா ஜீவாத்மாவாக மாறிவிட்டால், பரமாத்வே கிடையாது. எனவே பரமாத்வை அடைய முடியாது.
ஈஸ்வரன் இல்லாத நிலையில் மோட்சம் என்பது கிடையாது.

கேள்வி-3: ஏகதேச விகாரஹ- ஒரு பகுதியில் மட்டும் விகாரம் நடந்திருக்கிறது.
பரமாத்மவுடன் ஒரு பகுதி ஜீவாத்மாவாக மாறியிருக்கிறது.
உதாரணமாக பூமியில் சில பகுதிகள் பாலைவனம், மலைகள், விளை நிலங்கள், விதவிதமாக இருப்பது போல
ஈஸ்வரன் ஜீவாத்மாவாக விதவிதமான மாற்றங்களுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.
பதில்-3: அங்கங்கள் என்று சொன்னால், அதற்கு வரும் நாசமெல்லாம் அது எதனோடு சேர்ந்திருக்கிறதோ அதற்கும் நாசமேற்படும்.
ஜீவர்கள் ஈஸ்வரனின் அவயவங்கள் என்று கூறினால், ஜீவர்களில் சம்சார குணம், ஈஸ்வரனையும் சம்சாரியாக்கி விடும்.
எனவே சம்சாரியை நாம் ஏன் அடைய வேண்டும் அது நம்முடைய லட்சியமல்ல. ஏற்கனவே நாம்தான் சம்சாரியாக இருக்கிறோம்.

எந்த வாக்கியத்திற்கு பலன் கிடைக்கிறதோ, புருஷார்த்தமாக வைக்க முடியுமோ அதைத்தான் மகாவாக்கியம் என்று கூறமுடியும்.
ஈஸ்வரனை முக்தனாக வைத்து அசம்சாரியாக வைத்திருந்தால்தான் ஜீவர்களும் அந்த நிலையை அடைவதற்கு லட்சியமாக வைத்து கொள்ள முடியும்.
பிரம்மத்தை புரிந்து கொள்வதற்கு எந்த உபமானமும் கிடையாது.
அப்படி கூறப்பட்டிருந்தால் அதை பிரமாணமாக எடுத்துக்கொள்ளாமல் அதைப்புரிந்து கொள்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபநிஷத்தில் த்வைதத்தை, பேதத்தை நிந்தித்திருப்பதாலும் ஏற்கனவே ஜீவன் நான் சம்சாரி என்று நன்றாக தெரியும்.
எனவே அசம்சாரியைப்பற்றித்தான் சொல்ல வேண்டும். பேதம்-அபேதம் என்றூ வாதம் சரியாக இல்லை.
ஜீவனும் பிரம்மனும் பக்கத்திலே இருக்கிறதென்றால் அது ஒன்றையொன்று ஒட்டாததாக இருக்க வேண்டும்,
ஜீவன் மித்யாவாக இருப்பதால் அவனால் பிரம்மத்தை தொடமுடியாது.

பூர்வபக்‌ஷம்:
ஜீவ-பிரம்மத்திற்கிடையே நான்கு தோஷங்கள் இருக்கின்றன.
1) ஸ்வார்த்த விரோதம் – உபநிஷத் முரண்பாடாக பேசுகிறது
2) கர்மகாண்ட அபிரமானம் – கர்ம காண்டம் பிரமானம் என்ற தகுதியை இழந்து விடும்.
3) பிரத்யக்‌ஷ விரோதம் – அனுபவத்திலே விரோதம்
4) அனுமான விரோதம் – அனுமானத்திலேயே விரோதம்.

கேள்வி: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக நன்கு வர்ணித்திருக்கிறது. ஜீவனுக்கு பல சாதனைகளை சொல்லியிருக்கிறது.
சில இடங்களில் ஜீவன் முக்தன், பிரம்மன் என்று ஐக்கியப்படுத்துகிறது.
பதில்: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக சொல்கிறது அது உபதேசமல்ல அனுவாதம்.
ஆனால் எதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ அதுதான் உபதேசம் (பிரமானம்).

கேள்வி: ஞான காண்டத்தில் உபநிஷத் எல்லாவற்றையும் நிஷேதம் செய்கிறது. பிரமாணத்தால் அறிய முடியாதது பிரம்மம்.
கர்ம காண்டம் ஜகத்தைத்தான் விஷயமாக வைத்திருக்கிறது அதை நீக்கி விட்டது கர்ம காண்டம் அபிரமானம்;
காரணம் நிர்விஷயமாக இருக்கிறது. ஜீவனை அகர்த்தா, அபோக்தா என்று சொல்கிறாய்,
கர்ம காண்டம் கர்மத்தை செய் என்று சொல்கிறது, இப்படி செய் என்று கர்த்தாவிடம்தான் சொல்ல முடியும்.
ஆனால் அகர்த்தாவிடம் கர்மத்தை கொடுத்து விடுகிறது.
இரண்டாவது காரணம் பிரமாஜனகத்வாத் – கர்ம காண்டமே நமக்கு மோகத்தை கொடுத்து விடுகிறது.
எனவே கர்ம காண்டம் பிரமானமல்ல என்ற நிலை உருவாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் நிர்விஷயமல்ல, விஷயமிருக்கிறது. இந்த ஜகத்தான் விஷயம். இது சாதனை, இது சாத்தியம்
என்ற ஞானத்தைக் கொடுக்கிறது. இந்த சாத்தியத்திற்கு இந்த சாதனம் என்று கூறுகிறது.
இஷ்ட பிராப்தி, அனிஷ்ட நிவிருத்தி (இஷ்டமில்லாததை நீக்குவது).
இதற்கு கர்ம காண்டமி சாதனையைக் கொடுக்கிறது அதன் பலனையும் சொல்கிறது.

கேள்வி: சாதனை, சாத்தியம் மித்யா என்று தெரிந்து விட்டால், கர்ம காண்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள்,
அப்பொழுது இது பிரயோஜனமில்லாததாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் சாதனை, சாத்தியம், அஸத்வம், ஸத்யத்வம் இரண்டுமே பேசவில்லை. கர்ம காண்டம் விஷயம் வேறு,
ஞான காண்டம் விஷயம் வேறு. அதனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கக்கூடாது.
கர்ம காண்டம் அக்ஞானிக்கு பிரமானம்; ஞானிக்கு பிரமானமல்ல. கர்ம காண்டம் ஞானிக்கு பிரயோஜனமில்லை.
அதனால் அபிரமாணமாக இருக்கிறது.. பிரமாணமாக இருந்தால் பிரயோஜனத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
கர்மகாண்டம் எல்லோருக்கும் பிரமாணம் தான்.

கேள்வி: நம்மை செயலில் ஈடுபடுத்துவது யார்? தூண்டுவது யார்?
பதில்: நம்மிடத்தேயுள்ள ராக, துவேஷம்தான் நம்மை செயலை செய்யத் தூண்டுகிறது.
வெளி விஷயங்களில் பற்றுடையவனை சாஸ்திரத்திற்கும் கூட அதை நீக்கும் சக்தி கிடையாது.
சாஸ்திரத்தால் பற்றில்லாத ஒருவனை மீண்டும் பற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ள முடியாது.
அது இருப்பதைக் காட்டி கொடுக்கும், ஆனால் தூண்டி விட்டு செயலில் ஈடுபடுத்தாது.
அவரவர் புத்திக்கேற்றவாறு சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுகிறான். அது கர்மகாண்டமாக இருக்கலாம், அல்லது ஞான காண்டமாக இருக்கலாம்,

அனுபவத்தினால் பேதத்தை நிலை நாட்ட முடியாது. அனுபவத்தில் ஆகாசம் பலவாக இருக்கிறது.
ஆனால் ஆகாசம் ஒன்றுதான் என்ற அறிவுடன் இருக்கிறோம்.

கேள்வி: பொருட்கள் விதவிதமான குணங்களுடன் இருக்கிறது. எனவே விதவிதமான ஆதாரம் இருக்க முடியும் அல்லவா?
பதில்: வித விதமான சப்தங்களுக்கு ஆகாசம் ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறது.
அதே போல விதவிதமான தர்மங்களுக்கு பிரம்மன் ஒன்றுதான் ஆதாரம்.
ஆத்மா பிரத்யக்ஷத்துக்கு அப்பாற் உள்ளதால், ஆத்மா அப்ரத்யக்‌ஷம். அனுபவத்திற்கு விஷயமாகாது.
எனவே ஆத்மாவை பிரத்யக்‌ஷத்துடன் சேர்க்கவேக்கூடாது.

கேள்வி: ஆத்மா பிளவுபட்டதாக இருக்கிறது. ஆத்மா ஒன்றுதான் என்றால் எல்லோரும் ஒரே அனுபவம்தான் வரவேண்டும்.
ஆனால் அப்படியில்லையே.
பதில்: பிரத்யக்‌ஷ பிரமானம் இருந்தால்தான் அனுமானம் பயன்படுத்த வேண்டும்.
உன்னுடைய ஸ்தூல சரீரம் அனுமானத்தை சொல்கிறதா? ஆத்மா அனுமானம் செய்கிறதா? யாரும் இந்த அனுமானத்தை செய்ய முடியாது

————

பகுதி-2 : பிராண பிராமணம் (சிஷு பிராமணம்)

இந்தப் பகுதியில் சத்தியத்தினுடைய சத்யம் அன்பதை மேலும் விளக்கப்பட்டுள்ளது.
பஞ்ச பிராண தத்துவத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெளியிலிருக்கும் காற்றுக்கு வாயு என்று பெயர், உடலுக்குள் சென்று வரும் போது அதையே பிராணன்கள் என்று ஐந்து விதமாக அழைக்கப்படுகிறது.
இந்திரியங்களையும் பிராணன் என்றும் அழைக்கப்படுகிறது
சில இடங்களில் ஸ்தூல உடலும், உலகமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது.
சூட்சும சரீரமாக பிராணன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பிராணனின் உண்மையான பொருளைத் தவிர வேறு விதமாகவும் அழைக்கப்படுகிறது.
பிராணனுடைய பெருமையைப் பற்றி பேசப்படுகிறது. இவ்வாறு பெருமையாக கூறினாலும் இது மித்யாதான்.
நம்முடைய மனம் ஸத்தியத்தின் ஸத்யம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால்,
இதற்கு தடையாக இருப்பது நம்முடைய இந்திரியங்கள், ஏனென்றால்
இந்திரியங்கள் ராக துவேஷங்களால் பலமாக ஆட்கொள்ளபட்டு இவ்வாறு தடையாக இருக்கிறது.
மனதை சஞ்சலபட வைத்து அதை சக்தியற்றதாக மாற்றி விடுகிறது.
எனவே இங்கு ஒரு விதமான உபாஸனை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திரியத்தை வெல்ல முடியும்.
இந்த கருத்துக்களெல்லாம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

சங்கரரின் முகவுரை
பிராணன் வியாவஹாரிக சத்யமாக இருக்கிறது. இப்படி சொல்வது இது தனக்கு வேறாக உள்ள பாரமார்த்திக
சத்யத்திலிருந்து சத்யத்தை எடுத்துக் கொண்டு ஸத்யமாக தோற்றமளிக்கிறது.
இங்கு பிராணனை இந்த ஜகத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தானாக இருத்தல் என்ற சக்தியற்று
வேறொன்றின் மூலம் இருத்தலை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கிறது.
இந்த ஜகத் எதனிடமிருந்து தோன்றி, எது இருப்பதால் தானும் இருந்து கொண்டு பிறகு அதனிடமே ஒடுங்குவதால் பிரம்மம்தான் ஸத்யம்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு யோக்யதையான பிரம்மத்தை விட்டு ஏன் பிராண தத்துவத்தை ஸத்யம் என்று கூறுகின்றது
என்ற விளக்கத்தை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகம் மூர்த்தம், அமூர்த்தம் என்று பிரிக்கப்படுகிறது. ஸத்யம்=ஸத் + த்யத் = உருவம் + உருவமற்றது.
பிராணனும் மூர்த்த-அமூர்த்தமாக இருக்கிறது. எனவே பிராணன் ஸத்யன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மந்திர விளக்கம்
பிராணனுக்கு ரகசியமான பெயர் – சிஷூ – கன்றுக்குட்டியை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவையிரண்டும் ராக-துவேஷமற்றது, வெளி விஷயங்களில் பற்றில்லாதது, தூய்மையானது.
இதைத் தியானம் பண்ணுவதால் மனமும் சுத்தமாகிறது. இந்திரிய ஜித் இந்த உபாஸனை:
1. ஆதானம் – இளைப்பாற தங்குமிடம் – பிராணனுக்கு இது சரீரமாக இருக்கிறது.
2. பிரத்யாதானம் – வசிக்குமிடம் – பிராணனுக்கு நம்முடைய தலை
3. ஸ்தூன் – கம்பம் – பிராணனுக்கு கம்பம் – சக்தி
4. தாம் – கயிறு – பிராணனுக்கு கயிறு – உணவு
இவ்வாறு பிராணனை தியானித்தால் எல்லோரையும் பிராணனாக நினைக்கும் மனப்பான்மை வந்து விடும்.

ஸ்லோகம்:2
எல்லா தேவதைகளும் பிராணனை தியானிக்கிறார்கள், கண்ணை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு
ஹிரண்யகர்ப்பனை தியானிக்கிறார்கள். ருத்ரதேவன் கண்ணிலுள்ள சிவப்பு நிற கோட்டை ஆலம்பமனமாக எடுத்துக் கொள்கிறார்கள்,
வருணபகவான் கண்ணீரை எடுத்துக் கொள்கிறார். சூரியபகவான் கருமையத்தை தியானிக்கிறார்கள்.

ஸ்லோகம்:3
இந்திரியமாக பிராணனை வைத்து தியானிக்கிப்படுகிறது. இப்படி செய்வதால் இந்திரியங்களும் தூய்மையடைகிறது.
இதனால் இந்திரியங்கள் நம்முடைய மேன்மைக்கு காரணமாகிறது.
இரண்டு கண்கள், இரண்டு மூக்குதுவாரங்கள், இரண்டு காது துவாரங்கள், வாய் ஒன்று இவை ஏழும் சப்த ரிஷிகள் என்று குறிக்கப்படுகிறது.
எது அறிகின்றதோ அவைகள் ரிஷிகள். எட்டாவதாக வாக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்லோகம்:4
ஏழு ரிஷிகளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.
2 காதுகள் – கோதம, பரத்நாஜன்
2 கண்கள் – விஸ்வாமித்ரர், ஜமதர்னி
2 மூக்கு துவாரங்கள் – வசிஷ்டர், காஷ்யப்பர்
1 வாய் – அதமி

இவ்வாறு பிராணன தியானித்து இந்திரியங்களை சுத்தப்படுத்தி அஹ்டன் மூலம் சித்தஸுத்தி அடையலாம்.

———–

பகுதி-3 : மூர்த்த-அமூர்த்த பிராமணம்
முகவுரை:
பிராண தத்துவத்தின் விளக்கம்: நிஷேதத்தின் மூலம் பிராண தத்துவம் மித்யா என்று சொல்லி, பிரம்மம் ஒன்றே அன்று நிரூபிக்கப்படுகிறது.
பிரபஞ்சம்-மூர்த்தம் (உருவமுடையது), அமூர்த்தம் (உருவமற்றது) என்று பிரிக்கப்படுகிறது.
மூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி; அமூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி

அதிதெய்வம்: சமஷ்டி மூர்த்தம்- பிருத்வி, நீர், நெருப்பு; வியஷ்டி அமூர்த்தம்- வாயு, ஆகாசம்
அத்யாத்மம்: சமஷ்டி மூர்த்தம்- ஸ்தூல சரீரம்; வியஷ்டி அமூர்த்தம்- சூட்சும சரீரம்.

சங்கரரின் அறிமுகம்:-
சத்தியத்தினடத்தில் உள்ள சத்யமான பிராணன்(ஜகத்) சேதனமா, அசேதனமா. அது திருஷ்யமாக இருப்பதால் அசேதனம்.
ஸ்வரூபம் காரணமா, காரியமா என்றால் இது காரண ஸ்வரூபமல்ல இதன் தோற்றம் பேசப்பட்டதால் இது காரியம்.
எது காரியமோ அது மித்யா. ஆகவே இங்கு ஸத்யஸ்ய என்ற சொல் மித்யாவை குறிக்கிறது.
மித்யாவாக இருப்பதால் ஏன் ஸத்யம் என்று சொல்லப்படுகிறது. மித்யா என்பது புரிந்து கொள்ள வேண்டிய வாக்கியம்.
அதை புரிய வைக்க வேண்டுமென்றால் அந்த வார்த்தையை பயன்படுத்தி பின் புரிய வைக்க கூடாது.
ஆகவே ஸத்தியஸ்ய ஸத்யம் என்பது சரியான வார்த்தைதான். பிரபஞ்சமற்ற, சம்சாரமற்ற ஒன்று அது பிரம்மம் என்று புரிய வைக்க வேண்டும்.

ஸ்லோகம்:1
பிரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள் இருக்கிறது. இது இரண்டு ரூபமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
அது மூர்த்தமாகவும், அமூர்த்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரம்மத்தை சுட்டிக் காட்டுவதற்கு இரண்டு விஷயங்களாக மூர்த்தா, அமூர்த்தா பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூர்த்தம் – மர்தியா – அழியக்கூடியது. (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – அம்ருதம் – அழியாதது அல்லது நீண்ட காலம் இருப்பது (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸ்திதம் – வரையறுக்கபட்டது – (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – யத்த – வரையறுக்கபடாதது – (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸத் – பிரத்யக்‌ஷ கோசரம் – இந்திரியங்களால் பார்க்க முடிவது அமூர்த்தம் –
த்யத – இந்திரியங்களால் பார்க்க முடியாதது

ஸ்லோகம்:2
அதிதெய்வமான மூர்த்தம் எது, வாயுவுக்கும் ஆகாசத்துக்கும் வேறாக உள்ளது எதுவோ (நீர், நிலம், நெருப்பு) அதுதான் மூர்த்தம்.
இது மர்த்தயம், இது ஸித்தம், இது சத் என்று குறிக்கப்படுகிறது. சூரியனுடைய சரீரம்தான் மூர்த்தமாக கூறப்படுகிறது.

ஸ்லோகம்:3
வாயுவும், ஆகாசமும் அமூர்த்தம், இது அம்ருதம், த்யத், யத். இதற்கு சாரமாக இருப்பது
சூரிய மண்டல தேவதையின் சூட்சும சரீரம். இது அதிதெய்வதம்.

ஸ்லோகம்:4
அத்யாத்ம மூர்த்தம், அமூர்த்தம் – ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம். இந்த ஸ்தூல சரீரம்தான் மூர்த்தம், பிராணன்,
ஆகாசத்துக்கு வேறாக உள்ளவைகல் மூர்த்தம். இதை மர்த்யம், ஸித்தம், ஸத் என்ற சொல்லபடுகின்றது,
இதற்கு நம் கண் சாரமாக இருக்கிறது.

ஸ்லோகம்:5
அமூர்த்தமானது ஆகாசம், பிராணன் போன்ற சூட்சும சரீரத்தைக் குறிக்கிறது.
இது அம்ருதம், யத், த்யத் என்று குறிக்கப்படுகிறது. சூட்சும சரீரமே சாரமாக இருக்கிறது.

ஸ்லோகம்:6
நம்முடைய சூட்சும சரீரத்தில் ஸம்ஸ்காரங்களே வாசனைகளாக இருக்கிறது. அதையும் அமூர்த்தத்தில் சேர்க்கப்பட்டிகிறது.
அதையும் நீக்க வேண்டும்.

நிஷேத வாக்கியம்- பிரம்மம் மூர்த்த-அமூர்த்தம் இல்லை என்று நீக்குதல்.
வாசனா க்‌ஷயம் – நமக்குள்ளிருக்கும் வாசனா சக்தியினால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயன்படாது.
வாசனைகள் சாத்வீகம், ராஜஸ, தாமஸ குணங்களை உடையது.
தவத்தினால் ராஜஸ, தாமஸ வாசனைகளை அடக்கி வைத்து சாத்வீக மனதையடைகிறோம்.
அப்பொழுதும் கூட சில வாசனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். எவ்வளவு பலமான வாசனை என்று எப்படி அறியமுடியும்?
நம் முயற்சியினாலே வாசனையை அடக்க முடிந்தால் அது பலவீனமான வாசனையாகும்.
எந்த வாசனைகள் செயலுக்கு தள்ளூகிறதோ அது பலமான வாசனை. இந்த பலமான வாசனைகளை அறிவு இருந்தும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற வாசனைகளை நிதித்யாஸனம் மூலமாக அமைதிபடுத்த வேண்டும்.
இதன் மூலம் எல்லா வாசனைகளும் மித்யா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மனதில் எந்த விருத்திகள் (எண்ணங்கள்) வந்தாலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவைகள் மனதை சார்ந்தது என்னைச் சார்ந்தது அல்ல என்ற நிலைக்கு வரவேண்டும்.
மனதில் வாசனைகள் இருக்கும் ஆனால் அவைகளை நிஷேதம் செய்யப்ப்பட்டிருக்க வேண்டும்.
புருஷஸ்ய – சூட்சும சரீரத்தினுடய விதவிதமான வாசனைகளை பிரம்மத்தை வெவ்வேறு விதமாக ஒப்பிடப்படுகிறது.
எப்படி மஞ்சள் வர்ணத்தில் நனைத்த துணியானது மஞ்சள் நிறமாக காணப்படும்.
இதில் துணியானது சூட்சும சரீரமாகவும், மஞ்சள் நிறமானது வாசனைகளை குறிக்கிறது.
வெளிர் மஞ்சள் கம்பளியும், மிகச் சிவப்பான பூச்சியும், நெருப்பின் ஜூவாலையும், தாமரையின் நிறமும்,
மின்னலைப் போன்ற ஹிரண்யகர்ப்பனின் சூட்சும சரீரத்தில் உள்ள வாசனைகள் போல் கலந்து இருக்கின்றன.
உபாஸகர்கள் ஞான நிஷ்டையை தொடராதவர்கள் இவர்களுக்கு எல்லாவித செல்வங்களும் ஒரு நொடியில் கிடைக்கும்.

பாஷ்ய விசாரம்:
புருஷஸ்ய ரூபம் – சூட்சும சரீரத்தில் உள்ள உபாஸனை.
சூட்சும சரீரத்தை நீக்கும் போது வாசனையையும் சேர்ந்து நிஷேதம் செய்யப்படுகிறது.
கானல் நீரை நிஷேதம் செய்தாலும் அது இருந்துக் கொண்டுதான் இருக்கும்.
அதுபோல் வாசனை நிஷேதம் செய்தாலும் அது இருந்து கொண்டிருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய- ஆத்மாவினுடைய; ரூபம் – ஸ்வரூபம்
வாசனைகள் எல்லாம் ஆத்மாவின் ஸ்வரூபங்கள் வெறும் வாசனா மயமான பிரபஞ்சமாக இருக்கிறது.
அதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம். அது க்ஷ்ணத்துக்கு க்ஷ்ணம் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது.
கனவில் தெரியும் விஷயங்கள் மனதில் இருப்பது போல், விழிப்பு நிலையிலும் தெரியும் விஷயமல்ல, மனதிலுள்ள எண்ணங்கள்தான்.
நேதி நேதி என்பது வெளியே தெரியும் விஷயங்கள் இல்லையென்று சொல்லுகிறது.
பதில்: உன்னுடைய கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கிறது. ஸ்ருதி நிலையான சைதன்யத்தை சொல்லுகிறது,
நீ நிலையற்ற சைதன்யத்தை புருஷார்த்த அபாவாத் பிரஸங்காத்- தோன்றி மறைவது ஆத்மாவென்றால் அது நம்முடைய லட்சியாக இருக்காது.
ஆத்மா க்ஷணிகம் என்றால் நாம் அடைய வேண்டிய புருஷார்த்தம் இருக்காது. விஷயம் இல்லாமல் விருத்தி எழும்பாது.
ஒவ்வொரு எண்ணத்துக்கும் பின்னால் ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஆத்மாவினுடைய குணம். ஆத்மாவினுடைய குணமாக இருப்பது இந்த வாசனைகள்தான்.
பதில்: ஆத்மா நிர்குணம் என்று ஸ்ருதி சொல்வதற்கு எதிராக இருக்கிறது.
குணம் அழிந்தால் அதைச்சார்ந்துள்ள பொருளும் அழிந்து விடும்.
வாஸனைக்கு கெடுதி வந்தால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆத்மா அப்படிப்பட்டதல்ல.

கேள்வி: வாசனைகள் மனதைச் சார்ந்தது ஆத்மாவை அல்ல. ஆனால் ஆத்மாவும், மனமும் சமமாக ஸத்தாவாக இருக்கிறது.
பதில்: அத்வைத தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. ஆத்மாவுக்கு இணையாக வேறொன்று இருந்தால்,
ஆத்மா எங்கும் வியாபித்திருக்கும் என்ற ஸ்ருதியின் வாக்கியத்துக்கு எதிராக இருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபம். பரமாத்மா என்பது வேறு.
பதில்: ஜீவாத்மாவுக்கும் பரம்மத்மாவுக்குள்ள வேற்றுமையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
உடலின் ஒரு உறுப்பு என்ற சம்பந்தமா அல்லது இரண்டு வெவ்வேறாக இருச்து சம்பந்தம் இருக்கிறதா?
இந்தக் கருத்து மஹாவாக்கிரத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே ஏற்றுக் கொள்ள முடியாது.

தர்மத்தின் துணைக்கொண்டு ராஜஸ, தாமஸ வாசனைகளை நீக்க வேண்டும்.
பிறகு ஞானத்தின் துணைக்கொண்டு சாத்வீக வாஸனைகளை பலவீனப்படுத்த வேண்டும்.

अथ – பிறகு – அத்ரோபத்திற்கு பிறகு (அனந்தரம்) முதல் சத்யத்தை விளக்கியபிறது,
अदः – ஆகவே இரண்லாவது ஸத்யம் விளக்கப்பட வேண்டியதனால், பிரம்மத்தை அதன் ஸ்வரூபத்தை விளக்குவதற்காக;
आदेश – உபதேசம், விளக்க வேண்டும்.
नेति नेति – न + इति – பிரம்மத்தை உபதேசிக்கின்ற விளக்கம்.
இந்த வாக்கியம்தான் பிரம்மத்தை நன்கு விளக்க க்கூடியதாக இருக்கிறது.
இதற்கு மேலாக பிரம்மத்தை உபதேசிக்க முடியாது.
ये तस्मात “நேதி” என்கின்ற சொல்லை காட்டிலும்,
अन्यपरम- வேறு நல்ல உபதேசம் ,
नहि अस्ति – கிடையாது. अत-ஆகவே, नामदयँ – “ஸத்யஸ்ய ஸத்யம்” என்கின்ற பிரம்மத்தை குறிக்கின்ற உயர்வான சொல்லாகும்.
ஸத்யமாக உள்ள பிராணனுக்கும் ஸத்யமாக உள்ளது.

நேதி நேதி விளக்கம்:
न – இல்லை, इति – न வினைச்சொல்லோடு சேரும்போது அப்படியே இருக்கும்.
பெயர் சொல்லோடு சேரும்போது “अ”- अगमणँ. इति – இது, இவ்விதம் என்று மாறுகின்றது,
இந்த மந்திரத்தில் “இது” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது
न इति – न इदँ अस्ति – இது இல்லை.

விளக்கம்-1 இரண்டு न க்கும், இரண்டு इति க்கும் ஒரே அர்த்தம்
इति – த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) – சிதாபாஸம் – சைதன்யத்துக்கு விஷயமாக இருக்கும் எல்லா ஜடமான அனாத்மாக்களாக இருப்பது.
பார்க்கப்படும் பொருட்கள் எல்லாம் இல்லை என்று இரண்டு முறை சொல்லப்படுகிறது.
இப்படி தெரிந்தே இரண்டு முறை பயன்படுத்தி இருப்பதனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதை உணர்த்துகிறது.
உதாரணமாக அவர் இந்த வட்டத்தில் உள்ள வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். இதற்கு அவர் எல்லா வீட்டிற்கும்
சென்று ஓட்டுக் கேட்டார் என்று அர்த்தமாகிறது. அதேபோல இங்கே எல்லா அனாத்மாக்களையும் எடுத்துக்கொண்டு நிஷேதம் செய்ய வேண்டும்.

விளக்கம்-2
முதல் इति மூர்த்த பிரபஞ்சம், இரண்டாவது इति அமூர்த்த பிரபஞசத்தை குறிப்பதாக எடுத்துக் கொண்டால்,
இந்த வாக்கியம் மூர்த்தத்தையும், அமூர்த்தத்தையும் நிஷேதம் செய்வதாக பொருள் கொள்ளலாம்.

விளக்கம்-3
முதல் इति ஜீவனுடைய உபாதி, இரண்டாவது इति ஈஸ்வரனுடைய உபாதியாக எடுத்துக் கொண்டால்,
இந்த வாக்கியம் ஜீவனுடைய உபாதியையும், ஈஸ்வரனுடைய உபாதியையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-4
முதல் इति காரிய பிரபஞ்சம், இரண்டாவது इति காரண பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால்,
காரிய பிரபஞ்சமாக இருக்கின்ற இந்த உலகமானது காரண அவஸ்தையிலிருந்து (மாயையிலிருந்து)
வெளித்தோற்றத்துக்கு வந்துள்ள நாம ரூபங்களே. இதையையும், காரண பிரபஞ்சமான மாயையையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-5 முதல் इति வியஷ்டி (அத்யாத்மம்), இரண்டாவது इति சமஷ்டி (அதிதெய்வம்)
விளக்கம்-6 முதல் इति சரீர நிஷேதம், இரண்டாவது इति ஜகத் நிஷேதம்
அனாத்மா à சேதனத்துடன் சம்பந்தபட்ட அனாத்மா, ஸ்தூல, சூட்சும சரீரம், ஜடமாக இருக்கும் இந்த ஜகத்.
இந்த இரண்டையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விசாரம்
நேதி, நேதி என்ற லட்சணமே சரியானது, மேலானது. இதைத்தவிர வேறெதுவும் பிரம்மத்தை விளக்க முடியாது.

கேள்வி: இந்த சொல் இல்லாமையை போதிக்கிறதா?
பதில்: இது இல்லாமையை சொல்லவில்லை. இல்லாமையிலிருந்து ஒரு பிரயோஜனமும் அடைய முடியாது (அபாவஸ்ய அக்ருத்யாவாத்).
இது நீக்குதல் என்ற பொருளைத்தன் குறிக்கிறது. நாம் ஒன்றை நீக்குகிறோம் என்றால் வேறு ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டுதான் செய்ய முடியும்.
ஆதாரம் இல்லாமல் எந்த தவறும் நடக்காது. உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்ப்பதற்கு
கயிறுதான் ஆதாரமாக இருந்தால்தான் பாம்பானது தோன்ற முடியும். இது ஒரு நியதி.
இதில் எது தவறாக பார்க்கப்படுகிறதோ அது நீக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து नेति என்ற சொல் எதையோ நீக்குகிறது
அதற்கு பிரம்மமே ஆதாரம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி இந்த ஜகத்தானது பிரம்மத்தின் மீது இருந்துக் கொண்டு,
தான் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லில் உள்ள
इति இந்த ஜகத்தை நீக்கினால் மீதி இருப்பது பிரம்மம்தான் என்று உணர்த்துகிறது.
பூரணமான பிரம்மன் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இதற்கு வேறாக ஒன்று உண்டு என்று சொன்னால்
பிரம்மம் பூரணமாக இருக்க முடியாது. எனவே ஜகத்தை இல்லை என்று புரிந்து கொண்டால் பிரம்மத்தை அறிந்து கொண்டது போலாகும்

கேள்வி: நேதி எப்படி மித்யாவை நிலை நாட்டுகிறது?
பதில்: இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது மாதிரி ஒரு நிலை ஏற்படாது.
உதாரணமாக மேசை மீது புத்தகம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையே ஏற்படாது.
மேசை மீது புத்தகம் இல்லை என்பதை நிரூபிக்க தேவையில்லை. மேசை மீது செயற்கை மலர் இருக்கிறது,
அதை நாம் மலரில்லை என்று சொல்லலாம் அதை நிரூபிக்கவும் முடியும்.
அதற்கு இது இயற்கையான மலரை போன்று தோற்றமளிக்கிறது என்ற உண்மையை சொல்லி
அடைந்த தவறான அறிவை நீக்கினால் போதும். மலர் பார்வைக்கு தெரிவதால் அதை நிஷேதம் செய்ய வேண்டியிருக்கிறது.

எது நீக்கப்படுகிறதோ அதற்கு இரண்டு நிலைகள் இருக்க வேண்டும். 1. ஸ்வரூபமாக இருக்க கூடாது, 2. இருக்கிற மாதிரி தோன்ற வேண்டும்.
நம்முடைய அனுபவத்தில் உலகம் தோன்றி கொண்டிருக்கிறது. எனவே நாம் ஸ்ருதி பிரமானத்தை எடுத்துக் கொண்டு
இந்த உலகத்தை நீக்கி பிரம்மத்தை உணர வேண்டும். இதற்கு ஸ்ருதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

மித்யா விஷயத்தில்தான் நேதி என்ற சொல்லை பயன்படுத்த முடியும், மற்ற விஷயங்களில் பயன்படுத்தினால்
இரண்டு விதமான குற்றம் வந்து விடும். இல்லாததை இல்லை என்று சொல்ல தேவையில்லை, இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

நிஷேதம் மூலமாக உபதேசம் செய்வதுதான் சிறந்த வழியாகும். நேரிடையாகவும் உபதேசம் செய்யலாம்.
இதை விதிமுக உபதேசம் என்று கூறுவர். நிஷேதம் மூலமாகத்தான் ஜக்த்தின் மித்யாத்வம் உணர்த்தப்படுகிறது.
பிரம்மத்தை விதிமுகமாக விளக்க முடியாது. ஏனெனில் பிரம்மத்திற்கு குணமும் இல்லை, சப்தங்களாலும் விளக்க முடியாது.
அதிஷ்டான-அத்யாஸ சம்பந்தம் மூலமாகத்தான் உபநிஷத் நேரிடையாக விளக்குகிறது.
மற்றெல்லா இடங்களிலும் நிஷேத முறையில்தான் விளக்கப்பட்டிருக்கிறது.

——–

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading