வேதாந்தம் என்பது வேத + அந்தம் என்று பிரித்து, வேதத்தின் இறுதி பாகம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
இது ஞானத்தை கொடுக்ககூடியது. ஒரு பிரமானத்தின் மூலம் அறிந்ததை வேறொரு பிரமானத்தால் அறியவும் முடியாது, நீக்கவும் முடியாது.
ஆறுவிதமான லிங்கங்களை (குறிப்புக்கள், அடையாளங்கள்) வைத்து
உபநிஷத்தின் மையக்கருத்தை (தாத்பர்யம்) கண்டுபிடித்து விடலாம், உறுதி செய்து விடலாம். அவைகள்
1. உபகிரம, உபசம்ஹாரம் – துவக்கம், முடிவு.
சாஸ்திரத்தின் துவக்கமும், முடிவும் அது சொல்ல வருகின்ற மையக்கருத்தை தெரிவிக்கும்,
துவக்கம் என்பது உபதேசம் துவங்கும் இடம், முடியும் இடம் நாம் பார்க்க வேண்டும்.
2. அப்யாஸஹ:
மீண்டும், மீண்டும் கூறுதல். எந்தக் கருத்து திரும்ப திரும்ப சொல்லப்படுகிறதோ,
அதுவே அது கூற விரும்பும் மையக்கருத்து என்று புரிந்து கொள்ளலாம்.
3. அபூர்வதா – புதிய அறிவு
உபநிஷத்தினால் மட்டும் அறியக்கூடிய கருத்துதான் அது கூற விரும்பும் மையக்கருத்து.
4. பிரயோஜனம்: உபநிஷத்தை படிப்பதால் அடையும் பலனை கொண்டு அதன் மையக்கருத்தை என்று புரிந்து கொள்ளலாம்.
5. அர்த்தவாதம்: எந்த அறிவை உபநிஷத் புகழ்கின்றதோ அதுதான் மையக்கருத்தாக் இருக்கும்.
எதை நிந்தனை செய்கின்றதோ அது மையக்கருத்தல்ல என்று புரிந்து கொள்ளலாம்.
6. உபபத்தி: யுக்திபூர்வமான விளக்கத்தை சொல்கின்ற கருத்து.
நாம் உபநிஷத்தை படிப்பதற்கு முன்னர் கீழ்கண்ட மூன்று விதமான கருத்துக்களை வைத்து
உறுதி செய்த பிறகு அதை படித்தால், குழப்பம் இல்லாமல் ஞானத்தை அடையலாம்.
1. ஆத்ம ஞானம் மோட்சத்தை அடைவதற்கு உதவி புரியம் சாதனம்
2. இந்த ஞானத்தை உபநிஷத் மூலம்தான் அடைய முடியும்.
3. உபநிஷத் கொடுக்கின்ற ஞானம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.
உபநிஷத் என்றால் ரகசியம் என்ற அர்த்தமும் உண்டு. பிரம்ம வித்யா எல்லாவற்றைக் காட்டிலும்
மேலானது, உயர்வானது எனவே ரகசியம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மோட்சத்தை கைவல்யம் என்று இந்த உபநிஷத் அழைப்பதால் இதற்கு கைவல்ய உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மம் ஒன்றாக் இருப்பதை குறிப்பதற்கும் கைவல்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இருமையிலிருந்துதான் பயம் வருகின்றது.
நான் ஒருவன்தான் எங்கும் வியாபித்திருக்கிறேன் என்று உணரும் நிலையை கைவல்யம் என்றும் கூறப்படுகிறது.
——-
சாந்தி பாடம்
நாங்கள் தெய்வீகமான விஷயஙளையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும்,
சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும்.
அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.
இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும்.
(யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.
இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,
மனத்தூயமையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.
பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும்.
(வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும்,
உறுதியான, நலமான, திடமான உடலுறுப்புகளைக் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.
———-
ஸ்லோகம்-1
ஆஷ்வலாயன் என்ற சிஷ்யர் கேட்கும் கேள்வியாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது.
அத: பிறகு, சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்த பிறகு,
ஆஷ்வலாயன் என்பவர் பகவான் பிரம்மாவை பணிவுடனும், சிரத்தையுடனும் அணுகி
வரிஷ்டாம் : மேலான, உயர்ந்த அறிவான
பிரம்ம வித்யாம் அதீஹி – பிரம்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினார்.
உயர்ந்த அறிவு என்று சொல்வதற்கு காரணம் அதனால் அடையப்படும் விஷயமும் மிக உயர்ந்ததாக இருக்கிறது.
सदा எப்பொழுதும்
सद्भिः மேலானவர்களால், சத்புருஷர்களால், சான்றோர்களால்
सेव्यमानाँ – தேடப்படுகின்ற, நாடுகின்ற இந்த அறிவானது
निगूदाम् – கிடைத்தற்கரியது, மிகவும் ரகசியமானது
இந்த வித்யாவின் பலனையும் கூறுகிறார்.
ய்யா – அந்த அறிவினால்
அசிராத் – அப்பொழுதே, அறிவை அடைந்த அந்தக்கணமே
ஸர்வ பாபம் – எல்லா பாவ-புண்ணியங்களும், அக்ஞானமும்
வ்யபோஹ்ய – நீங்கி
பராத்பரம் – மேலானவற்றுக்கெல்லாம் மேலான பிரம்மத்தை, மாயையை காட்டிலும் மேலான
புருஷம் – பரம்பொருளை
யாதி வித்வான் – அடைகின்றான் இந்த ஞானத்தை அடைந்தவன்.
————
ஸ்லோகம்-2
தஸ்மை – அவருக்கு (சிஷ்யனுக்கு)
ஸஹ பிதாமஹன் உவாச – குருவான பிரம்மதேவன் உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
பிரம்மத்தை அடைவதற்கான வழியை சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரத்தாபக்தித்யானயோகாதவேஹி – சிரத்தை, பக்தி, தியானம் ஆகியவற்றின் உதவியால் அந்த பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே இவை மூன்றும் சாஸ்திரத்தின் மேலுள்ள நம்பிக்கையும் அதனால் அதை பிரமானமாக் வைத்துக் கொண்டு
பிரம்ம வித்யாவை குருமுகமாக கேட்டல் என்ற சிரவணம் என்ற சாதனத்தையும்,
பக்தி என்பது மனமானது முழுமையாக இதில் ஈடுபடுதல் இது மனனத்தை குறிக்கிறது. தியானம் என்பது நிதித்யாஸனத்தை குறிக்கிறது.
பிறகு எவைகளெல்லாம் பிரம்மத்தை அடைவதற்கு பயன்படாது, சாதனங்களாக இருக்காது என்று விவரிக்கப்படுகிறது.
ந கர்மணா – கர்மத்தினால் அதை அடைய முடியாது
ந ப்ரஜயா – நமது சந்ததிகள் இருந்தாலும் அடைய முடியாது
ந தனேன – செல்வத்தாலும், வேறெந்த பொருட்களினாலும் அடைய முடியாது
த்யாகேன ஏகே – தியாகத்தினால் மட்டும்தான் ( தியாகம் என்பது வைராக்யத்தை குறிக்கிறது)
அம்ருதத்வமானஷு – பிறப்பு-இறப்பற்ற நிலையான மோட்சத்தை சிலர் அடைந்துள்ளார்கள்.
தியாகம் என்ற சாதனத்துடன் சிரவண, மனன, நிதித்யாஸனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து சிலர் மோட்சத்தை அடைந்துள்ளார்கள்.
——–
ஸ்லோகம்-3
பரேன நாகம் – சொர்க்கத்தைக் காட்டிலும் மேலான
நிஹிதம் குஹாய – மனதில் வெளிப்படுகின்ற
யத3யஹ விஷந்தி – இவ்வாறு தியாகத்துடன் முயற்சி செய்பவர்கள்தான் அடைகிறார்கள்.
எந்த தத்துவமானது ஸ்வயம் பிரகாசமாக அவரவர்களின் மனதில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ
விப்ராஜதே – அதையேதான் அடைகிறார்கள்.
மோட்சத்தை அடையும் சாதனத்தை படிப்படியாக சொல்லப்படுகிறது. மோட்ச லட்சணத்தையும் கூறுகிறது.
வேதாந்த விக்ஞானம் – வேதாந்தத்திலிருந்து பெறும் அறிவிலிருந்து
அர்த்தஹ – அதன் மையக்கருத்தை, தாத்பர்யத்தை
சுனிஷ்சித: – திடமாக புரிந்து கொள்கிறார்கள்.
சுத்3த4 சத்வா: – தூய்மையான மனதை அடைந்து, ( விருப்பு, வெறுப்பில்லாத மனம்.
இந்த நிலையில்தான் தர்மப்படி வாழும் நிலை தானே உருவாகும். இது விவேகத்தை கொடுக்கும்.
எதை அடைந்தால் நிலையான மனநிறைவை கொடுக்கும் என்ற அறிவு.
இதனால் எது நிலையானது, எது நிலையற்றது என்று பிரித்தறியும் அறிவு உண்டாகும்.)
அடுத்து லட்சியத்தை அடைய முயற்சி செய்யும் நிலைக்கு முமுக்ஷுத்வம் என்று பெயர்.
சந்நியாஸ யோகாத் யதய: – இந்த முயற்சியை தொடர்ந்து செய்வதற்கு சந்நியாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
சந்நியாஸம் என்பது அநித்தியமானவைகளையெல்லம் விட்டுவிடுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
————
ஸ்லோகம்-4
தே பிரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே–
இவர்கள் இறந்த பிறகு பிரம்ம ஸ்வரூபத்தில் ஐக்கியமாகி விடுவார்கள், ஒன்றாகி விடுவார்கள்.
இவர்கள் உயிரோடிருக்கும்போதே பிரம்ம மாகவே மாறி விடுவார்கள், பூரணமான மனநிறைவை அடைந்தவர்களாவார்கள்.
ஜீவன் முக்தனாகி விடுவார்கள். பிராரப்த கர்மபலன் முடியும்வரை இந்த நிலையில் இருப்பார்கள்.
இவர்கள் அடையும் மரணம் இறுதியானதாக இருக்கும்.
————
ஸ்லோகம்-5
இதில் நிதித்யாஸனம் செய்வதற்கான நிபந்தனைகள் சொல்லப்படுகிறது.
விவிக்த தேஷே – தனிமையான, ஆள் அரவமில்லாத, தூய்மையான இடமாக இருக்க வேண்டும்.
·ஸம்ஸ்காரத்தாலான தூய்மை, இடமும் தூயமையாக இருக்க வேண்டும்.
·அமரும் இடம் சமமாகவும், பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.
ஆசனத்தில் அமரும் விதம்:
·நாம் அமரும் நிலை நமக்கு சௌகரியமாகவும் இருக்க வேண்டும்.
ஷுசிஹி – தூய்மையான சூழ்நிலை, உடலைத் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஸம, சிர, திரிவ சரீரம் – தலை, கழுத்து, உடல்பாகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமர வேண்டும்,
அத்யாஸ்ரம் – சந்நியாஸி – எல்லா ஆசிரமங்களை விட மேலானதாக சந்நியாஸ ஆசிரமம் சொல்லப்படுகிறது.
சந்நியாஸம் என்பது யாருடனும் சம்பந்தமில்லாத நிலையில் இருக்க வேண்டும்.
தியானத்தில் அமரும்போது நான் யாரோடும் சம்பந்தமற்றசன் என்ற நினைப்போடு இருக்க வேண்டும்.
சகலேந்திரியானி நிருத்3ய – எல்லா இந்திரியங்களையும் கட்டுபடுத்திய நிலையில் இருக்க வேண்டும்.
பக்தியா – பக்தி என்ற பாவனையுடன் குருவை மானசீகமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.
————–
ஸ்லோகம்-6
நிதித்யாஸனத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
சாஸ்திரம் மூலம் பெற்ற அறிவினால் பயனடைய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த தியான முறை.
இதை எப்படி செய்ய வேண்டும், எந்த இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்,
அந்த நேரத்தில் மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லம் இதில் விவரிக்கப்படுகிறது.
விரஜம் – ரஜோ குணத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். சத்துவ குணத்திற்கு மனதை கொண்டு செல்ல வேண்டும்.
விசித்திய – கவனத்தை திருப்புதல், மனமானது பிரம்மத்தை அறியும் விஷயத்தில் இருக்க வேண்டும்.
அதைக் குறித்து தியானித்து கொண்டிருக்க வேண்டும், விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
பிரஹ்ம லக்ஷணங்கள்:
1. விஸத்த4ம் – தூய்மையானது, அசுத்தங்கள் எல்லாம் மனதைத்தான் சார்ந்தது, சரீரத்தை சார்ந்ததல்ல. நான் மனமும் அல்ல, உடலும் அல்ல என்ற உணர்வுடன் இருத்தல்
2. விசோகம் – நான் துயரமற்றவன். துயரம் என்பதை அனுபவிப்பது மனமும், சரீரம்தான் நானல்ல என்ற நிலை.
3. அசிந்தியம் – சிந்தனைக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றேன். நான் ஞான ஸ்வரூபமாகவே இருக்கிறேன். எல்லாமும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள்.
4. அவ்யக்தம் – வெளித்தோற்றத்திற்கு வராதது. நான் இந்திரியங்கள் மூலம் அனுபவிக்கப்படுபவன் அல்ல.
5. அனந்த ரூபம் – நான் எண்ணிக்கையிலடங்காத ரூபங்கலாக இருக்கிறேன்.
6. சிவம் – மங்கலம், பாவங்களை போக்குபவர் சிவன். நான் மங்கலம் ஸ்வரூபமாக இருக்கிறேன்.
7. ப்ரசாந்தம் – நான் முழுமையான அமைதி ஸ்வரூபமானவன்
8. அம்ருதம் – நான் மரணமற்றவன்
9. பிரஹ்மயோனி – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கின்றேன். நான் ஆதியும், அந்தமும் அற்றவன்
10. ஏகம் – நான் ஒன்றாக இருக்கின்றேன்.
11. விபும் – நான் விதவிதமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றேன்.
12. சிதானந்தம் – ஞான ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
13. ஆனந்தம் – வரையறுக்கப்படாதவனாக, பூரணமாக இருக்கின்றேன்.
14. அரூபம் – உருவமற்றவனாக இருக்கின்றேன்.
15. அற்புதம் – ஆச்சரியமானவன் – தன்னையே ஆச்சரியமாக பார்த்து ஆனந்தமடைவது
——————
ஸ்லோகம்-7
இதில் சகுண பிரம்மத்தை தியானிப்பது பற்றி விளக்கபடுகிறது.
உமாசகாயம் – உமாதேவியுடன் காட்சியளிப்பவர்
பரமேஸ்வரன் – எல்லா தேவதைகளுக்கும் ஈஸ்வரனாக இருப்பவர்
பிரபும் – தலைவன், கர்மபலதாதா
திரிலோச்சனம் – மூன்று கண்களையுடையவனர்
நீலகண்டம் – நீலவர்ண கழுத்தையுடைவர்
பிரசாந்தம் – அமைதி ஸ்வரூபமாக இருப்பவர்
இப்படிபட்ட சிவபெருமானை தியானம் செய்ய வேண்டும். இது மோகஷத்தின் கடைசி படி வரை நம்மை கொண்டு செல்லும்.
இதுதான் சகுண பிரஹ்ம தியானம். இந்த தியானம் நம்மை நிர்குண பிரம்ம தியானத்திற்கு கொண்டு சென்று பிறகு
அதன் மூலம் மோக்ஷத்தை அடையச் செய்யும். எல்லா ஜீவராசிகளும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற பிரம்மத்தை அடையலாம்.
சமஸ்த சாக்ஷிம் – எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை அடையலாம்.
தமஸ – அறியாமை, அக்ஞானம்
பரஸ்தா – கடந்து இருக்கின்ற பிரம்மம்.
—————-
ஸ்லோகம்-8
இதில் சகுண பிரம்மம் எல்லாமாக இருக்கின்றது என்பதை விளக்குகிறது.
ஸஹ பிரம்மா – பிரம்மனாக இருக்கின்றார், சிவபெருமானாகவும், இந்திரனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கின்றார்.
ஜீவனிடத்தில் இருக்கும் பிராண சக்தியாகவும், காலனாகவும் அக்னியாகவும், சந்திரனாகவும் அனைத்து பிரபஞ்சமாகவும் இருக்கிறார் அதுவே ஈஸ்வரன்.
அக்ஷரம் – அழிவற்றவராக, பரம் – மேலான ஆனந்தம்
ஸ்வராட் – அறிவு ஸ்வரூபம்,
ஸ்வயம் ஜோதிஹி – ஒளிர்கின்ற ஸ்வரூபம்.
—————
ஸ்லோகம்-9
தேச, காலம் இவைகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம். இதை ஞானத்தால் மட்டும்தான் அடைய முடியும்.
அவரே அனைத்துமாக இருக்கின்றார், மூன்று காலங்களிலும் இருக்கின்ற பிரம்மம்.
முன்பு இருந்தது இப்பொழுது இருப்பது, பிற்காலத்தில் இருக்கப்போவது இந்த மூன்று கால வஸ்துக்களிலும் இருப்பது
( ஸனாதானம் – எப்பொழுதும் ) அப்படிபட்ட பிரம்மத்தை அறிந்து மரணத்தை (சம்சாரத்தை) கடந்துவிடுகின்றான்.
விமுக்தயே – இப்படிபட்ட பிரம்மத்தை
ந பந்தயா – வேறு மார்க்கமானது கிடையாது.
பிரம்மத்தை பற்றிய அறிவே அதை அடைதலுக்கு சமமாகும். முக்திக்கு வேறு வழியே கிடையாது.
———————
ஸ்லோகம்-10
ஆத்மஞானம், ஞானப்பலன் என்ற இரு கருத்துக்களை விளக்கப்படுகிறது.
தியானத்தில் அமர்ந்து இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்திக்க வேண்டும்.
பானக்குள் உள்ள ஆகாசம்தான் பானைக்கு வெளியிலும் இருக்கிறது. இந்த பானையே ஆகாசத்தில்தான் இருக்கிறது.
ஜீவன் தன்னை எல்லா ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் இருப்பதாக பார்க்க வேண்டும்.
அதே போன்று எல்லா ஜீவராசிகளும் தன்னிடத்தில் இருப்பதாக பார்க்க வேண்டும்.
இப்படி யார் பார்த்து கொண்டிருக்கின்றார்களோ அவன் தான் மேலான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.
இதைத்தவிர வேறெந்த அறிவினாலும் பிரம்மத்தை அடையமுடியாது. இந்த மந்திரத்தோடு நிதித்யாஸனம் முடிவடைகிறது.
————-
ஸ்லோகம்-11
இதிலிருந்து 14வது ஸ்லோகம் வரை சிரவணம் பற்றி கூறப்படுகிறது.
இரு மரக்கட்டைகளைக் கொண்டு நெருப்பு உண்டாக்குவதில் நமது மனமானது அசையாத மரக்கட்டை
அதை உரசுகின்ற மேலே இருக்கின்ற மரக்கட்டை உபநிஷத்- வேதாந்த வாக்கியங்கள்,
உரசுவது என்பது விசாரம் செய்வதற்கு ஒப்பிடப்படுகிறது. நெருப்பானது நாம் அடையும் ஆத்ம ஞானம்.
நெருப்பின் குணமானது எதையும் எரிக்கும் தன்மை அதைப்போன்று ஆத்மஞானமானது நமது பாவ-புண்ணியங்களை,
அக்ஞானத்தை, சம்சாரத்தை எரித்து விடுகிறது.
ஆத்மானம் – மனதை,
அரணிம் க்ருத்வா – கீழேயுள்ள கட்டை
ப்ரணவம் ச உத்தராணி – மேலேயுள்ள கட்டை, ஓம்காரம், இதை உபநிஷத் வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஞான நிர்மதன அப்4யாஸ – இரண்டு கட்டைகளையும்
தொடர்ந்து உரசுவதால் – விசாரம் செய்தல்
பாஷம் தஹ்திஹி பண்டிதா – சம்சாரத்தை எரிக்கின்றான்.
பண்டிதன் – ஆத்மஞானத்தை அடைந்தவன்.
————
ஸ்லோகம்-12
எப்படி விசாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
ஸஹ ஏவ – அந்த பிரம்ம ம்தான் (ஈஸ்வரன் தான்)
மாயா பரிமோகதாத்மா – மாயையினால் வசப்பட்ட மனதினால் மோகத்தினால் விழிப்பு நிலையை அனுபவிக்கின்றோம்.
சரீரம் – உடல், ஆஸ்தாய – அமர்ந்து-அபிமானம் கொண்டு
சர்வம் கரோதி – எல்லா விவகாரங்களையும் செய்கின்றோம்
மாயைக்கு இரண்டு சக்தி இருக்கின்றது. 1. ஆவரணம் (மறைத்தல்) 2. விக்ஷேபம் ( பொய் தோற்றம்).
விசித்ர போகைஹி – விதவிதமான போகத்தை அனுபவிக்கின்றோம்.
அன்னபாநாதி – குடிப்பதற்கு பானங்கள்
ஸஹ ஏவ ஜாக்ரத் – அந்த ஜீவன் விழித்துக் கொண்டு
பரிதிருப்திம் ஏதி – வித விதமான பொருட்களின் மூலமாக திருப்தியையும், அதிருப்தியையும் அனுபவிக்கின்றான்.
—————-
ஸ்லோகம்-13
ஸ்வமாயயா – மாய சக்தியினால்
கல்பிதா விஸ்வலோகே – கற்பணை செய்யப்பட்டு உருவான ஜீவலோகம் அதில் சுக-துக்கங்களை கனவு நிலையில் அனுபவிக்கின்றான்.
சுஷூப்தி காலே – ஆழ்நிலை உறக்கத்திலிருக்கும் வேளையில் மனமானது காரண சரீரத்தில் ஒடுங்கி விடுகின்றது
சகலே விலீனே – எல்லா அனுபவங்களும் வேற்றுமைகளும் ஒடுங்கி விடும்போது
தமோ அபிபூதஹ – அக்ஞானத்தால் மறக்கப்பட்டவனாக
சுகரூபமேதி – சுக ரூபமாக இருக்கிறான், ஆனந்தத்துடன் இருக்கின்றான்.
———————
ஸ்லோகம்-14
மூன்று அவஸ்தைகளையும் ஆராய்வதால் அடையும் பலன் இதில் விவரிக்கப்படுகிறது.
மஹா வாக்கிய மந்திரம். நாம் ஒரு பொருளை அனுபவிக்கிறோம் என்றால், நாம் அந்த பொருளிலிருந்து வேற்பட்டிருக்கிறோம் என்பது நியதி.
இதே போல மூன்று நிலைகளிலும் நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்.
நான் என்ற ஒருவன் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருக்கின்றேன்.
(பிரத்யபிக்ஞா) இந்த மூன்று நிலை அனுபவங்களும் நமக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
எனவே மாறாமல் ஸ்வரூபமாக நானிருக்கின்றேன். இந்த மூன்று நிலைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றது.
எது மாறாமல் இருக்குமோ அது நித்யம்; எவையெல்லாம் வந்து போகின்றதோ அவைகள் அநித்யம், நிலையற்றவைகல், அழியக்கூடியது.
இதிலிருந்து நான் என்றும் இருக்கின்றவன் ஸத் ஸ்வரூபமானவன், இந்த அனுபவங்களையெல்லாம் அனுபவிப்பதால் அறிவு ஸ்வரூப்மானவன்,
அனுபவிக்கும் பொருட்கள் எல்லாம் ஜடம். இந்த மூன்று அவஸ்தைகளும் உனக்குள் இருக்கின்றது,
அனுபவங்கள் எல்லாம் வந்து போவது என்று உபநிஷத் கூறுகின்றது.
விசாரம்:
இந்த உலகம் தோன்றுவதற்கு காரணம் ஈஸ்வரன். அவர் இரண்டு ஸ்வரூபமானவர். இரண்டு தத்துவங்களை உடையவர்.
அவைகள மாயா, பிரம்ம (சத்யம், நித்யம், ஞானம்) எந்த ஜீவன் மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்கின்றானோ
அவனிடத்திலேதான் மூன்று அவஸ்தைகளும் ஒடுங்குகின்றது.
ஜீவனின் உண்மையான ஸ்வரூபமும் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற பிரம்ம ஸ்வரூபமும் ஒன்றேதான்.
————
ஸ்லோகம்-15
யே தஸ்மாத் – இதனிடமிருந்து – இந்த ஜீவனிடமிருந்து
உடல் மீது அபிமானம் வைக்கும் போதுதான் ஜீவனாக இருக்கின்றான்.
என்னுடைய உண்மையான ஸ்வரூபம் ஆத்மா என்று நிச்சயிக்கும் போது என்னிடமிருந்துதான் இந்த பிரபஞ்சம் தோன்றியது,
இதனால் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம்.
ஜாயதே – தோன்றியது
கம் – ஆகாசம்; வாயு, ஜோதி (அக்னி), ஆப(நீர்), ப்ருத்வி (நிலம்)
விஸ்வஸ்ய தாரிணி – அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற நிலம்.
இந்த சூட்சும பூதங்கள்தான் முதலி தோன்றியது.
பிராணஹ, மனஹ, இந்திரியங்கள் à சூட்சும சரீரங்கள் தோன்றின.
இந்த சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்களும், சூட்சும சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரம் தோன்றியது.
அ. பரிணாமி உபாதான காரணம் – தானே உருமாறி, மாற்றமடைந்து வேறொன்று தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.
உ-ம்: பால் மாற்றமடைந்து தயிராவது
ஆ. விவர்த்த உபாதான காரணம் – ஒன்று எந்தவித மாற்றமும் அடையாமல் வேறொன்று தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.
————
ஸ்லோகம்-16 – மஹா வாக்கியம்
யத் பரம்பிரம்ம – எது பூரண ஸ்வரூபமாக இருக்கின்றதோ
ஸர்வாத்மா – எல்லா ஜீவரசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. அதுவே எல்லாமுமாக இருக்கின்றது.
விஸ்வஸ்ய ஆயதனம் – ஸத் ஸ்வரூபமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது
மகத் – மிகப்பெரியது, இதற்கு மேல் வேறொன்றுமில்லை.
சூட்சுமாதி சூட்சுமம்- சூட்சுமமானதைக்காட்டிலும் சூட்சுமமாக இருக்கின்றது
ஆத்மஸ்வருபத் நித்யம் – என் ஸ்வரூபமாக நித்தியமாக இருக்கின்றது.
தத்-த்வம்-ஏவ – இப்படிப்பட்ட பரம்பொருள் நீயாக இருக்கிறாய்
த்வம்-தத்-ஏவ – நீயே அந்த பரம்பொருளாக இருக்கிறாய்.
நிஷ்கலம் – பிளவுபடாதது, பூரணமானது, அவயவங்களற்றது.
—————–
ஸ்லோகம்-17 – மஹா வாக்கியம்
விழிப்பு, கனவு, சுஷூப்தி என்கின்ற இந்த மூன்று நிலைகளிலும் எந்த தத்துவம் பிரபஞ்சத்தை பிரகாசிக்கின்றதோ,
அந்தந்த நிலைகளில் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தத்துவமே பிரம்மம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதுவே நான் என்று அறிந்து கொள்வதால் எல்லாவித பந்தங்களிலிருந்து முழுமையாக விடுதலையடைவோம் (ப்ரமுச்யதே).
பிரம்மனிடமிருந்து வேறுபடாத இந்த ஜீவனிடமிருந்துதான் எல்லாவிதமான அவஸ்தைகளும் தோன்றுகிறது.
தத்ஸ்வ ஜாதம் சகலம் விசித்ரம் – நாமே கனவுலகை சிருஷ்டி செய்துவிட்டு நாமே சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.
இதுதான் மாயையின் விளையாட்டு. இதேமாதிரிதான் விழிப்பு நிலையிலும் நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தையும்
அதிலுள்ள ஜீவராசிகளையும் நம்மிடமிருந்தேதான் தோன்றியுள்ளன இருந்தாலும் அறியாமையினால் சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.
ஆத்மஞானத்தினால்தான் நம்மால் இதுவும் மாயை என்று அறிய முடியும்.
கனவுலக சிருஷ்டிகள் விழித்த தும் எப்படி என்னிடமே லயமடைகின்றதோ
அதேமாதிரி விழிப்பு நிலை சிருஷ்டிகளும் என்னிடமே அழிவிற்குப்பின் லயமடைகிறது.
ஆதாரம் – கயிறானது பாம்பின் மாயத்தோற்றதிற்கு ஆதாரமாக இருப்பது போல,
பாம்பல்ல என்ற ஞானம் வந்தவுடன் அது மறைந்து ஆதாரமான கயிறு தோன்றுகிறது.
ஆனந்தம் – பூரணமான, வரையறுக்குட்பட்டதல்ல (காலத்தால், தேசத்தால்)
அகண்டம் – பிளவுபடாதது, அறிவு ஸ்வரூபம் இந்த ஆத்மா.
எது மூன்று அவஸ்தைகளுக்கும் ஆதாரமாகவும், வரையறுக்கப்படாததாகவும், பிளவுபடாததாகவும்,
மூன்று அவஸ்தகளும் லயமடைவதற்கு இடமாகவும் இருப்பது ஆத்மா.
இந்த மூன்று அவஸ்தகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நிலை துரியம்.
—————
ஸ்லோகம்-18 – நிதித்யாஸனம்
இந்த மந்திரத்தில் உள்ளதை பற்றி தியானித்து அறிவை அடைந்து அதில் நிலை பெற்றிருக்க வேண்டும்.
த்ரிஷு தா4ம – மூன்று அவஸ்தகளிலும்
யத்3 – எந்த, போ4க்3யம் – அனுபவிக்கப்படும் பொருட்கள் – உலகம்
போ3க்3தா – அனுபவிப்பவன்;
போ4க்3 கரணம் – அனுபவிக்க உதவும் கருவியாக
யத் பவேத் – எது இருக்கின்றதோ
தேப்4ய – அவைகளைக்காட்டிலும்
விலக்ஷண – வேறுபட்டவன் நான்
ஸாக்ஷி – இவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கின்றேன்.
சின்மாத்ர – சைதன்ய ஸ்வரூபமாக மட்டும் நான் இருக்கின்றேன்.
ஸதா3ஷிவஹ – எப்பொழுதும் ஆனந்தஸ்வரூபமானவன்.
————-
ஸ்லோகம்-19
மயி ஏவ – என்னிடத்தில்ருந்துதான்
ஸகலம் ஜாதம் – அனைத்தும் தோன்றியது
மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் – என்னிடத்தில்தான் அனைத்தும் சார்ந்திருக்கின்றது
மயி ஸர்வம் லயம் யாதி – அனைத்தும் என்னிடத்திலேதான் ஒடுங்குகிறது
தத்3 ப்ரஹ்ம அத்வயம் அஸ்மி அஹம் – இரண்டற்ற பூரணமாக நான் இருக்கின்றேன்.
——————-
ஸ்லோகம்-20
அணோஹ அணியான் – அணுவைக் காட்டிலும் அணுவாக இருக்கின்றேன். சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றேன்.
தத்3வத் மஹான் அஹம் – பெரியதைக்காட்டிலும் பெரியதாக இருக்கின்றேன்.
விசித்ரம் விஸ்வம் அஹம் – இந்த விதவிதமான உலகமாக இருக்கின்றேன்.
புராதனோஹம் – நான் என்றும் இருப்பவன்
புருஷ: அஹம் – பூரணமாக இருப்பவன் நான்
ஈஷஹ அஹம் – நான் எல்லாவற்றையும் ஆள்பவனாக இருக்கின்றேன்
ஹிரண்மய அஹம் – ஞான ஸ்வரூபமாக, சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றேன்
ஷிவரூபம் அஸ்மி – ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
—————-
ஸ்லோகம்-21
அசிந்தயம் சக்தி – அளவுக்கதிகமான சக்தியுடையவன்
அபாணிபாதம் அஸம் – எனக்கு கர்மேந்திரியங்கள் கிடையாது
பஷ்யாமி – நான் பார்க்கின்றேன்
அசக்ஷுஹு – கண்கள் இல்லாமல் இருந்தாலும்
அகர்ணஹ ஸ்ருனோதி – காது கிடையாது ஆனால் நன்றாக கேட்கின்றேன்.
இவைகள் இந்திரியங்களும் என்னைச் சார்ந்திருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. நான் தொடர்ந்து இருக்கின்றேன்.
இந்திரியங்கள் வந்து செல்வதால் அவைகள் மித்யா.
விவிக்தரூபஹ – விதவிதமான ரூபத்தில் இருந்து கொண்டு
விஜானாமி – நான் அனைத்தையும் அறிகின்றேன்.
மமவேத்தா – என்னை அற்கின்றவன்
ந ச அஸ்தி – யாரும் இல்லை
ஸதா சித் அஹம் – எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாகவே இருக்கின்றேன்.
————–
ஸ்லோகம்-22
அனைகைஹி வேதைஹி – எல்லா வேதங்களின் மூலமாக
அஹம் ஏவ வித்யஹ – நான்தான் அறியப்படுபவனாக இருக்கிறேன்.
வேதந்தக்ருத் அஹமேவ – நானேதான் வேதாந்தத்தை உபதேசித்தவன்
வேதவித் அஹம் ஏவ – வேதத்தை அறிபவனும் நானே
ந புண்ய பாபே மம நாஸ்தி – புண்ணியமும் பாவமும் எனக்கு கிடையாது.
மம நாஷ நாஸ்தி – எனக்கு அழிவு என்பதும் கிடையாது.
ந ஜென்ம நாஸ்தி – பிறப்பே கிடையாது
ந தேஹ, புத்தி, இந்திரிய அஸ்தி – ஸ்தூல உடல், இந்திரியங்கள், புத்தி இவைகளும் கிடையாது
ந பூமி அஸ்தி – இந்த நிலமும் நானல்ல
ந ஆப அஸ்தி – இந்த நீரும் நானல்ல
ந ச வன்னிஹி – நெருப்பும் நானல்ல
ந ச அனிலஹ – வாயுவும் நானல்ல
ந ச அம்பரம் – ஆகாசமும் நானல்ல.
————
ஸ்லோகம்-23
ஏவம் – இவ்விதம் (குரு உபதேசித்த விதம் , சிஷ்யன் புரிந்து கொண்டபடி)
ப்ரமாத்மாரூபம் – பரமாத்மாவினுடைய தன்மையை இவ்விதம் புரிந்து கொண்டு, பரமாத்மாவையே அடைகின்றான்.
குஹாஷயம் – புத்தியில் சாட்சியாக இருந்து கொண்டு
நிஷ்கலம் – பிளவுபடாத
அத்விதீயம் – இரண்டற்ற
சமஸ்த சாக்ஷி – அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற
ஸத்-அஸத் விஹீனம் – காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டது. மாயைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் வேறுபட்டவன்.
ப்ரயாதி சுத்தம் ப்ரமாத்மரூபம் – தூய்மையான பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகின்றான்.
—————
ஸ்லோகம்-24
யஹ – எவனொருவன்
ஷதருத்ரீயம் அதீயதே – ஸ்ரீருத்ரத்தை ஒதுகின்றவன்
ஸஹ அக்னி பூதஹ – அவன் நெருப்பினால் தூய்மையாக்கபட்டவனாகின்றான்.
சுராபானாதி பூதா பவதி – மது அருந்தியதால் அடைந்த பாவத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.
ப்ரஹ்மஹத்யாத் – பிராமணனை கொன்ற பாவத்திலிருந்தும் விடுதலையடைகின்றான்
க்ருதயாத் அக்ருத்யாத பூதோ பவதி – செய்யக்கூடாததை செய்து, செய்ய வேண்டியதை செய்யாமல் வரும் பாவத்திலிருந்தும் விடுதலை.
தஸ்மாத் அவிமுக்தாம் ஆஸ்ரிதஹ – இவ்வாறு ஸ்ரீருத்ரத்தை ஓதியதால் சிவபெருமானை சார்ந்தவனாகின்றான்.
அத்யாஸ்ரம் – சந்நியாஸி, ஸர்வதா ஜபேத் – எப்பொழுதும் ஜபம் செய்ய வேண்டும், ஒருமுறையாவது சொல்ல வேண்டும்.,
————–
ஸ்லோகம்-25
அனேன – இவ்விதம் தன்னை தூய்மைபடுத்தி கொண்ட காரணத்தால்
ஞானம் ஆப்னோதி – ஞானத்தை அடைகின்றான்
ஸம்சார அர்ணவ நாஷனம் – சம்சாரமெனும் கடலை கடந்துவிடுகின்றான்
தஸ்மாத் – ஆகவே
ஏவம் – இவ்விதம், இந்த உபநிஷத்தில் சொல்லியதை
ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை அறிந்து
கைவல்யம் பலம் அஸ்னுத – மோட்சம் என்ற பலனை அடைகின்றான்.
கைவல்யம் – அதுவாக மட்டுமே இருக்கின்ற நிலை.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply