வேதம் அருளினை நீர்
வேதத்தில் சொல்லப்பட்ட கைங்கர்யம் தர வேண்டாவோ
விரோதிகளை கிழங்கு எடுத்தது மட்டும் போதாதே
அதிகாரி புருஷணனான அயனுக்கு கண் கொடுத்தது போல் வேதங்களைக் கொடுத்தீரே
அதில் சொல்லப்பட்ட கைங்கர்ய பிரார்த்தனை இதில்
வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-
முன் பரி முகமாய் —
ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால்
இவன் இறாய்க்கும்-என்று
இவன் தன்னை தாழ விட்டு ஹயக்ரீவனாய்
நின்று யாய்த்து உபதேசித்தது –
சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள்
இவற்றை உண்டாக்கினவனே
என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
நூல் -என்று சாஸ்த்ரங்களை சொல்லவுமாம்
அன்றிக்கே –
அல்லாத இதிஹாச புராணங்களை சொல்லிற்றான போது
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -என்கையாலே
அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று தான்
சொல்லுகையாலே அவன் சொன்னான் என்னத் தட்டு இல்லை –
(முனிவரை இடுக்கி -ஹயக்ரீவர் கொடுத்ததாக சொன்னதுக்கு இந்த பிரமாணம் )
—————————-
தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் –
பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ்
அங்கு நின்றும் போந்து விபாவமான
ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே -ஸ்ரீ பெரிய திருமொழி -7-8-2-
பண்டு இவ் உலகங்கள் ஏழையும்
அந்தகாரமானது தான் கண்ட படியே பரந்து புஜிக்க –
முனிவரோடு தாநவர்கள் திசைப்ப –
சாத்விகரோடு அசாத்விகரோடு வாசி அற அறிவு
கெட்டுக் கலங்க –
வந்து அவதரித்து –
பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய
அர்த்தத்தை எல்லாம்
ஸ்ரீ ஹயக்ரீவ முகத்தாலே
அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply