மீமாம்சை -விளக்கம் -வேதங்கள்-அங்கங்கள் -உப அங்கங்கள் –

இத்தத்துவப் பிரிவை நிறுவியர் ஜைமினி (கி. மு. 200).
இது மீமாம்ச சூத்திரங்களைக் அடிப்படையாக கொண்டது.[1] [2]

மீமாம்ச சூத்திரங்களுக்கு சபர சுவாமி (கி. மு. 57) விளக்க உரை எழுதியுள்ளார்.
இதை பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்சம் (ஞான காண்டம்) என்று
இரு காண்டங்களாக பிரித்துள்ளனர். பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும்.
உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர்.
நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர்.

ஜெய்மினி முனிவர் தொகுத்த பூர்வ மீமாம்சை எனும் கர்ம காண்டத்தை பனிரெண்டு காண்டங்களாகவும்,
அறுபது அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பல சூத்திரங்களாகச் செய்யப்பட்டுள்ளது.

பூர்வமீமாம்சைக்கு, சபரர், குமரிலபட்டர், பிரபாகரர் மற்றும் சாயனர் ஆகியவர்கள்
மீமாம்சா சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர்.
பூர்வ மீமாம்சையில், பிரம்மம், படைப்பு, மோட்சம் குறித்த விசாரணைகள் இல்லை.
இதில் குறித்த யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள்,
சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக
நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

ஆதிசங்கரர் அவதாரம் பண்ணப் போறார். அதுக்கு ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி, இந்த குமாரிலபட்டர் அவதாரம் பண்ணி,
கர்மாவெல்லாம் பண்ணனும், அப்படின்னு இந்த பௌத்த மதத்தை கண்டனம் பண்ணி, கர்மா பண்ணனும் எங்கறதை அவர் நிலைநாட்டினார்.
குமாரிலபட்டர், வேதமே ஸத்யம், அது என்னை காப்பாற்றும், அப்படின்னு சொல்லாமல்,
வாயில ஒரு வார்த்தை கொஞ்சம் மாறி, “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி” “ஸ்ருதி என்பது ப்ரமாணம் ஆகுமானால்,
எனக்கு, என் உடம்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும்”, அப்படீன்னு சொல்லிண்டு அந்த ஏழாவது மாடிலேர்ந்து கீழே விழுந்தாராம்.
அவருக்கு உயிருக்கு ஆபத்து ஒண்ணும் வரலை. கண்ணுல ஒரு காயம் பட்டுதாம்.
அவர் ஏன் எனக்கு காயம் பட்டுதுன்னு கேட்டாராம். “நீங்க அந்த “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி”,
“ஸ்ருதி என்பது ப்ரமாணமாம் ஆகுமானால்”, அப்படீன்னு ஒரு வார்த்தை சொன்னதுனால்,
அது உங்களுக்கு சின்னதா ஒரு காண்பிச்சு கொடுத்துருக்கு.
“வேதம் தான் ப்ரமாணம்” அப்படீன்னு சொல்லியிருந்தா, இது கூட பட்டிருக்காது” அப்படீன்னு அசரீரீ கேட்டதாம்.

இந்த குமாரிலபட்டரும் மண்டன்மிச்ரரும் திரும்பவும் வேத மதம் நன்னா செழிக்கும்படியாக பண்ணி இருந்தா.

“நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத : –
உடம்பு இருக்கறவன், நான் இந்த உடம்புன்னு நினைக்கறவனால காரியங்களை ஒரேடியாக விட முடியாது.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் |
இந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||

ஒருவனுக்கு கர்மாவில் ஆசை இருக்கும் போது, உலக விஷயங்களில் இன்னும் ஆசை மிஞ்சி இருக்கும் போது,
இந்த்ரியங்களை மட்டும் அடக்கிண்டு, வாசனா பலத்துனால, மனசுல அந்த போகங்களை எல்லாம்
பண்ணிண்டு இருந்தான் ஆனால், அது “மித்யாசார:’ hypocrisy தான்.
அதுனால நீ பண்ண வேண்டாம்னு நினைச்சாலும்

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த : ஸ்வேந கர்மணா |
கர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவஷோபி தத் ||

நீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும் மோஹவஷாத் அதைதான் நீ பண்ணுவே.
அதனால் காரியத்தை விடாதே. நீ “நான் யுத்தம் பண்ணனுமா?” னு கேட்கற.
“நீ க்ஷத்ரியன். யுத்தம் வந்திருக்கு. யுத்தம் பண்ண வேண்டியது தான்.”

ஆனா அதை எப்படி பண்ணனும்னா “தத் குருஷ்வ மதர்ப்பணம்” எனக்கு அர்ப்பணம் பண்ணிடு.
இதோட பலாபலன்களை பத்தி நினைக்காதே. அப்படி நீ பண்ணினால் “லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா”
ஒரு தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத மாதிரி இதோட பாபங்கள் உன்னை ஒட்டாது.
இப்படி நீ கர்மாவை ஈஸ்வர அர்ப்பணமாக பண்ணிண்டே வந்தால், உனக்கு சித்த சுத்தி ஏற்பட்டு,
ஞானத்துக்கு உனக்கு அருகதை ஏற்படும்.
“ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ” இது ஒரு சின்ன ஸித்தி. ஆரம்ப ஸ்டேஜ்.
இதுலேயே அப்பறம் ஞானத்தை பத்தி தெரிஞ்சுண்டு, அந்த சாதனைகள் எல்லாம் பண்ணிண்டே வந்தால்
“நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேன அதிகச்சதி”
நைஷ்கர்ம்ய ஸித்தினு காரியமே பண்ணாத ஒரு நிலைமை இருக்கு. அது உனக்கு சன்யாசத்தினால் கிடைக்கும்.

ஆருருக்ஷேர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே |
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம : காரணம் உச்யதே ||

இந்த சாதனைகள் எல்லாம் பண்றதுக்கு, சில வழிமுறைகள் இருக்கு. அது முனியினுடைய யோகம்.
யோகாரூடன், அந்த ஞானத்தை அடைசுன்ட்டான்னா ஸமஹா அவன் மனசு அடங்கறதுதான்
அவன் பண்ணவேண்டிய காரியம். அவன் சாதனைகள் கூட பண்ண வேண்டியது இல்லை.

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே –
ஒருத்தனுக்கு ஞானம் வந்துவிட்டதென்றால் அவனுடய, physical-லாகவோ, mental-லாகவோ
எல்லா காரியங்களும் நின்னு போய்விடும்.

தஸ்ய கார்யம் ந வித்யதே – அவனுக்கு காரியமே கிடையாது.

குமாரிலபட்டர் ஒரு ப்ரசாரகரா, ஒரு பண்டிதராக இருக்கார்,
அதை வந்து நன்னா அப்பியாசம் பண்ணிண்டு practice பண்ணிண்டு இருக்கக் கூடியவர் மண்டனமிஸ்ரர்.
சபரி, சரபங்கர் எல்லாம் ராம தர்சனத்தோடையே மேலுலகத்துக்கு போன மாதிரி,
அவர் இந்த தூஷக்னி-யில தன்னோட உடம்பை விடறார்.
இந்த இடத்துல பெரியவா வந்து இரண்டு சொல்றா. அவருக்கு அந்த நெருப்பு சுடவே இல்லையாம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கில வேனிலும்
மூசுவண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே

அப்படின்னு, அப்பர் பெருமான் சுண்ணாம்பு களவாயில இருந்தாலும் அவருக்கு அது சுடாதது போல,
ஆச்சார்யாள் தரிசனத்துனால குமாரிலபட்டருக்கு, அந்த நெருப்பு சுடவே இல்லை, அப்படின்னு சொல்றார்.
இன்னொன்னு சொல்றா பெரியவா,
சீதாதேவி பிரார்த்தனை பண்ணினதால ஹனுமார் வால்ல எப்படி அக்னி சுடாமல் குளிர்ச்சியாக இருந்ததோ,
அந்த மாதிரி இவருக்கு குளிர்ச்சியா இருந்தது. சுடலை-ங்கறது ஒரு பக்கம். குளிரிச்சியா இருந்தது-ங்கறதுக்கு
இந்த ஹனுமார் வால்ல வச்ச தீ அவருக்கு, சீதாதேவி அம்பாள் அனுக்கிரஹத்துனால சுடாததை போல அப்படின்னு சொல்றார்.
அப்படி அந்த குமாரில பட்டராக வந்த சுப்ரமண்ய ஸ்வாமி வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்றிட்டு அவர் கைலாசத்துக்கு போயிடறார்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்காகும்.
இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது.
யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும்,
அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன.

ரிக் வேதம்
ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன.
இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8×8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும்.
க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் – இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.

யஜுர் வேதம்
இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது.
இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன.
கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும்.
கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.

சுக்ல யஜுர் வேதம்
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன.
1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன,
இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன.
இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.

சாமவேதம்
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர்.
பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன.
தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது.
இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர்.
இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம், கோபதம் ஆக ஏழாகும்.
உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு.
இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை.
இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.

அதர்வண வேதம்
அதர்வண வேத மொழிகளுக்கு மந்திரங்கள் என்பது பெயர். இவ்வேதத்துள் 5847 மந்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை 733 வர்க்கங்களாகவும் 111 அனுவாகங்களாகவும் 34 ப்ரபாடங்களாகவும் 20 காண்டங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த வேதத்திற்கு சாகைகள் பிப்ப லாதம், தனதம், இளதம், சளநகீயம், ஜாஜலம், ஜலதம், பிரமவதம், தேவதர்சனம், சாரனைவத்யம் எனும் ஒன்பதாகும்.
இவற்றில் பிப்லாதமும் சௌனகமும் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்த வேதத்திற்குரிய பிரமாணங்கள் கல்பசூத்ரங்கள் அரண்யங்கள் ஏதும் இல்லை.
உபநிஷதங்கள் முண்டகம், பிரச்சினம், மாண்டூக்யம் என்ற மூன்றாகும்.

வேதம் பயில்வதை விளக்கிக் கூறும் அங்கநூல்கள் ஆறாகும்.
சீட்சை, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருத்தம் கல்பம், கல்பசூத்ரம் என்பவையே அவை.

சீஷை:
சிட்ஷை என்பது வேத மந்திரங்களில் உள்ள மந்திரச் சொற்களை உச்சரிக்கும் முறைகளை விளக்குவதாகும்.
இதில் எழுத்து, ஸ்வரம், மாத்திராகாலம் முதலியன விளக்கப்பட்டுள்ளன.
பாணிணி இதற்கு விளக்க நூல்களை செய்துள்ளார்.

வியாகரணம்
என்பது வேதத்தின் இலக்கணத்தை விவாரிப்பதாகும்.
பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் முதலியோர் வியாகரண விளக்க நூல்கள் செய்துள்ளனர்.

சந்தஸ்
என்பது வேதத்தை இசைக்கும் முறையில் எழுத்துக்களின் எண்ணிக்கையை விளக்குவதாகும்.
வேதத்தில் காயத்ரி, உஷ்ணிக், ஸ்னுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ருஷ்டுப், ஜகதீ எனும் ஏழு சந்தஸ்கள் உள்ளன.
இவை வேதத்தினை எப்படி ஏற்றி இறக்கி ஓத வேண்டும் என்பதையும் வேதத்தின் ஒவ்வொரு அடியிலும்
வர வேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் வரையறுப்பதாகும்.
பிங்கல முனிவர் இதற்கு நூல் எழுதியுள்ளார்.

ஜோதிஷம்
என்பது வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தை விளக்குவதாகும்.
வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்திகளையும் தானங்களையும் முறைப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டும்.
அதற்குக் காலத்தைப்பற்றிய அறிவு அவஸ்யமாகிறது.
காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட நூல் துணை செய்கிறது.
ஆதித்தன் பாஸ்கர பட்டர் இதற்கு நூல் செய்துள்ளார்.

நிருத்தம்:
இது வேத மொழிகளுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் விளக்கம் கூறும் அகராதி போன்றதாகும்.
இதன் மூலம் வேத வாக்யங்களின் உண்மைப் பொருளை அறிய முடிகிறது.
இதற்குப் பாஸ்கரராயர் உரை உள்ளது.

கல்பம்
என்பது வேதங்கள் கூறும் மந்திரங்களின் அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்திக் கூறுவதாகும்.
இவை ஸ்ரௌதம், கிருஹ்யம், தர்மம் என மூன்று வகைப்படும்.

மீமாம்சை
என்பது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டு வகையாக உள்ளது.
பூர்வ மீமாம்சை ஜை மினியால் செய்யப்படுவதாகும்.
12 கண்டங்களுடன் 60 அத்தியாயங்களும் பல சூத்திரங்களையும் கொண்டது.

வேதாந்தம்
என்பது வேதத்தின் முடிவு அல்லது வேத சாரத்தைக் குறிப்பதாகும்.
191 விஷயங்களைப் பற்றி 558 சூத்திரங்களால் இந்நூல் ஆக்கப்பட்டது.
இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்டவை.
இதனை ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பர். இது வேத வியாசர் இயற்றியது.

நியாயம்
என்பது ஒன்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை நிறுவும் நூலாகும்.
இதனை இயற்றியவர் கௌதமர் ஆவர். 537 சூத்ரங்களைக் கொண்டது.
ஒரு பொருள், செயல் நிஜமா என்பதை ப்ரமாணம், ப்ரமேயம், சம்சயம், ப்ரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், வாதம்
முதலியவற்றால் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று கூறுகிறது.

வைசேஷிகம்:
வையத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பிரித்து அதன் குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவிக்கும் நூலாகும்.
கணாத முனியால் அருளப்பட்ட இந்நூல் 373 சூத்ரங்களைக் கொண்டது.
த்ரிவ்யம் குணம் கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் முதலிய ஆறு வகையாக உணர்த்துவதாகும்.

வேத படனம்:
வேதத்தைப் பல்வேறு வகையில் ஓதுவதே வேதபடனம் எனப்படும்.
அவை மூலசமிதை, பதசமிதை, கிரமம், ஜடை, கனம் என்பனவாகும்.
மூலசமிதை என்பது வேத மந்திரங்களைச் சந்தி சேர்த்துச் சொல்வது.
பதசமிதை என்பது பதம் பதமாகப் பிரித்துச் சொல்வதாகும்.
கிரமம் என்பது ஒரு பதத்தை இன்னொரு பதத்திற்கு முன்னும் பின்னும் சேர்த்துச் சொல்வதாகும்.
ஜடசம்ஹிதை பதங்களைச் சேர்த்துப் பிரித்துச் சொல்வதாகும் (ஜடை பின்னுவது போல்).
வேதம் பயிலும் மாணவர்கள் நிலையாகத் தங்கிப் பயின்ற இடங்கள் கடிகை எனப்பட்டன.
காஞ்சீபுரம், சோழங்கிபுரம் முதலிய ஊர்களில் கடிகைகள் இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

————————

பிரதான சதகம் -தேசிகன் –பிரதானங்கள் -கத்யமாக -101-சூர்ணிகைகள்
பஜதி சத கோடி பவதி-பூர்வ பஷம் –
முதல் சூர்ணிகை -ஸ்ருதி வைபவம் -ப்ரத்யஷாதி ப்ராமணங்களில் -பரம் நாஸ்தி -வேதமே பிரதானம் –
உபநிஷத்துகளில் பிரதானம் -இரண்டாவது சூர்ணிகை –
வேதம் -சாகா -த்ரயீ- ஸ்ருதி
ஸ்ரு -கேட்பது -கேட்பதால் மட்டுமே அறிகிறோம் -ஸ்ருதி -காது என்றுமாம்
அதி கவனம்-அதிக வனம் விளையாடும் ஸிம்ஹம் -கவி தார்த்த சிம்மம்
சுருதி யுக பரி பூர்த்தி காதுகள் நிரம்பும் கர்ஜிக்கும்
இரண்டு வேதங்களையும் பொருத்தி -வேதம் தமிழ் செய்த மாறன் -இதுவே சுருதி யுகம் –
இதற்கு பூர்ணத்வம் ஆச்சார்ய ஸிம்ஹங்கள்
நிகமம் ஆகமம் இவற்றுக்கும் பல அர்த்தங்கள்
சர்வ யோக்யதை -தமிழ் மறை
இரு காது பரி பூரணமான பின்பு குறை இருக்காது
பாஹ்ய குத்ருஷ்டிகள் இருக்காமல் ஓடுவார்கள் –

வேதங்களுக்கு கண்ணாக-சஷுஸ்–த்ருஷ்யதே ரெங்க மத்யே -புதையல் –
வேதமும் -திவ்யம் -ரெங்க மத்யே -த்ருஷ்யதே -மூன்று வேறுபாடுகள்
திவி பவம்-பூமிக்குள் உள்ளை -சஷுஸ் சுருதி பரிஷத்-கட் செவி- கண்ணும் காதும் வேதமே –
அரங்கு ஏற்றம் -அம்பலத்தில் உள்ள புதையல் -அந்தர் ஜ்யோதி —
அநந்தாவை வேதா -கண்ணான வேதக் கூட்டங்களுக்கு கண் -விழி ஒப்பார் வேதங்களுக்கு –
கண்ணால் பார்ப்பது -கண்ணைப் பார்ப்பது -கண்ணாலே கண்ணைப் பார்ப்பதும் வேத வைபவமே –
காதுக்கு கண் போல் வேதம் ஆகிய சுருதி-காதுக்கு கண்ணும் உண்டே –

used less ஆனால் useless ஆகுமே -நாமும் ஓதி ஓதுவித்து பிறந்த பயன் பெறுவோம்

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading