ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 84–சமந்தக பஞ்சக யாத்ரை/தசகம் 85– ஜராஸந்த வதம் –சிசுபால வதம் —

தசகம் 84. சமந்தக பஞ்சக யாத்ரை

பிரிந்தவர் கூடினால்…..

மஹாபாரத யுத்தம் நடந்த ஸ்தலம் குருக்ஷேத்ரம். குருக்ஷேத்திரத்துக்கு இன்னொரு பெயர் சமந்த பஞ்சகம் (ஐந்து ஏரிகள் ). குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனோடு யுத்தத்தில் ஆயுதம் தொடாத பார்த்தசாரதியாக பங்கேற்ற கிருஷ்ணன் முந்தைய ஒரு அவதாரத்தில் பரசுராமராக 27 தலைமுறையைச் சேர்ந்த க்ஷத்ரியர்களைக் கொன்று அவர்களுடைய ரத்த ஆறு பெருகி ஓடி ஐந்து ரத்த ஏரிகளாக காணப்பட்ட இடம் தான் குருக்ஷேத்ரத்தில் சமந்த பஞ்சகம் .

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் தனது குடும்பத்தோடு சமந்த பஞ்சகம் செல்கிறார். அங்கே கிருஷ்ணன் வரப் போவதை அறிந்த பிருந்தாவன கோபியர்கள், ராதை உட்பட கிருஷ்ணனை அங்கே சந்திக்கிறார்கள்.

க்வசித³த² தபனோ பராக³காலே
புரி நித³த⁴த் க்ருத வர்ம காம ஸூனூ |
யது³குல மஹிலாவ்ருத꞉ ஸுதீர்த²ம்
ஸமுபக³தோ(அ)ஸி ஸமந்த பஞ்சகாக்²யம் || 84-1 ||

சூர்ய கிரஹண புண்ய காலத்தில் பலர் சமந்த பஞ்சகம் சென்று தர்ப்பணம் பண்ணுவது வழக்கம். கிருஷ்ணன் துவாரகையிலிருந்து தனது குடும்பத்தோடு அங்கே செல்கிறார். இதற்காக கிருஷ்ணா, நீ க்ருதவர்மன், அநிருத்தன் இருவரையும் அழைத்து ”நாங்கள் திரும்பி வரும் வரை நீங்கள் துவாரகையை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பினாய். உன்னோடு பல யாதவ குடும்பங்களும் சேர்ந்து கொண்டது.

————-

ப³ஹுதர ஜனதா ஹிதாய தத்ர
த்வமபி புனர் வினிமஜ்ஜ்ய தீர்த²தோயம் |
த்³விஜ க³ண பரி முக்த வித்த ராஶி꞉
ஸமமிலதா²꞉ குரு பாண்ட³வாதி³மித்ரை꞉ || 84-2 ||

பலரின் ஆத்ம சாந்திக்காக கிருஷ்ணா நீ எண்ணற்றோருக்கு தர்ப்பணங்கள் செய்தாய். அநேக பிராமணர்களுக்கு தான தர்மம் வழங்கினாய். பாண்டவ கௌரவ குடும்பங்களும் மற்றவர்கள் பலரும் அங்கே உன்னை சந்தித்தனர்.

இந்த தீர்த்தம் பாவநாமாக்கவும் நீ தீர்த்தமாடினாய்-ஸமமிலதா-உரையாடினீர்

————–

தவ க²லு த³யிதா ஜனை꞉ ஸமேதா
த்³ருபத³ ஸுதா த்வயி கா³ட⁴ப⁴க்தி பா⁴ரா |
தது³தி³த ப⁴வதா³ஹ்ருதி ப்ரகாரை-
ரதி முமுதே³ ஸமமன்ய பா⁴மினீபி⁴꞉ || 84-3 ||

துருபதன் மகள் பாஞ்சாலி, எனும் திரௌபதி, உன் பக்தை, உன் மனைவிகளை எல்லாம் தனித் தனியே சந்தித்து அவர்கள் உன்னை மணம் செய்து கொண்ட விதம், பற்றிய பழங்கதைகளைக் கேட்டு மகிழ்கிறாள்.

துஷ்யந்தி ச ரமயதி ச -இருவரும் மகிழும்படி சொல்லிக் கேட்டார்கள்

————–

தத³னு ச ப⁴க³வன் நிரீக்ஷ்ய கோ³பா-
நதிகுது காது³பக³ம்ய மானயித்வா |
சிரதர விரஹாதுர அங்க³ரேகா²꞉
பஶு பவதூ⁴꞉ ஸரஸம் த்வமன்வயாஸீ꞉ || 84-4 ||

சமந்த பஞ்சகம் அங்கே வந்திருந்த பிருந்தாவன கோப கோபியர்களை சந்தித்து மிகவும் சந்தோஷமாக பேசி குசலம் விசாரித்தாயே கிருஷ்ணா ஞாபகம் இருக்கிறதா உனக்கு? எல்லோருமே நீ இல்லாமல், உனைக் காணாமல் துரும்பாக இளைத்திருந்தார்கள்.

————-

ஸபதி³ ச ப⁴வதீ³க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி³தமான ஹ்ருதா³ம் நிதம்பி³னீனாம் | [** ப்ரமுஷித **]
அதி ரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசித ஹ்ருத்³யதரே குசேந் யலைஷீ꞉ || 84-5 ||

ஆனால் உனைக் கண்ட மறுகணமே, அத்தனை பேரின் துயரமும் துன்பமும் கதிரவன் முன் பனி போல் விலகி விட்டதே. உன்னோடு அவர்கள் கழித்த அந்த பழைய பிரிந்தாவன ஆனந்த வாழ்க்கை மனக் கண் முன் தோன்றி மகிழ்வித்தது.

———-

ரிபு ஜன கலஹை꞉ புன꞉ புனர்மே
ஸமுபக³தைரியதீ விலம்ப³னாபூ⁴த் |
இதி க்ருத பரி ரம்ப⁴ணே த்வயி த்³ரா-
க³தி விவஶா க²லு ராதி⁴கா நிலில்யே || 84-6 ||

கிருஷ்ணா, நீ வந்திருக்கிறாய் என்ற சேதி கேட்டு உனை மீண்டும் பார்க்க கிடைத்த ஆனந்தத்தில் ராதை உன்னைத் தேடி ஓடி வந்தாள் . உன்னை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள்
”கிருஷ்ணா, என் கிருஷ்ணா..”.. அவளால் மேலே பேச முடியவில்லை… உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் திரையிட்டது..
”ராதா, எத்தனை காலம் ஆச்சு உன்னை பார்த்து?
”ஆமாம் கிருஷ்ணா, நீ தான் எங்களை, என்னை, அடியோடு மறந்து போய்விட்டாயே, கல் நெஞ்சக் காரா”
‘ ராதா, உனக்கு சொன்னால் புரியவே புரியாது. நான் எதிர்கொண்ட இக்கட்டுகள், முடிவில்லாத சோதனைகள்,என்னை எப்போதும் தொடர்ந்து என் உயிரைக் குடிக்க அலைந்த விரோதிகள், எத்தனை எத்தனை, தெரியுமா உனக்கு? அவற்றை, அவர்களை சமாளிக்கவே, வெல்லவே, எனக்கு மூச்சுவிட கூட சரியான நேரம் கிடைக்கவில்லை என்பதை நீ எப்படி அறிவாய்?’ BETTER LATE THAN NEVER. ஒருமுறையாவது உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க இந்த சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்கிறேன். ராதா, நான் மனதால் உன்னை எப்போதும் பிரியவே மாட்டேன் என்று உனக்கே தெரியுமே”

ஸ்ரீ மத் பாகவதத்தில் நேராக ராதா பற்றிய குறிப்பு இல்லை எனிலும் இங்கு உண்டு
பரிஷ்வங்கம் -கரதூஷண வதம் பண்ணியதும் -ஆலிங்கனம் பண்ணி முன்பு சொன்னதுக்கு மன்னிப்பு-அதே போல் இங்கும் பரி லம்பனம் சொல்கிறான்

————–

அபக³த விரஹ வ்யதா²ஸ் ததா³ தா
ரஹஸி விதா⁴ய த³தா³த² தத்த்வ போ³த⁴ம் |
பரம ஸுக²சிதா³த்மகோ(அ)ஹமாத்மே-
த்யுத³யது வ꞉ ஸ்பு²ட மேவ சேதஸீதி || 84-7 ||

கிருஷ்ணா, அவர்கள் அனைவரின் மனத் துயர் துடைத்தவனே, மெதுவாக அந்த எளிய கிராம ஜனங்களுக்கு நீ யார் என்பதை உணர்த்தினாய். ”என் பிரியமானவர்களே, உங்கள் மனதில் எப்போதும் நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒளிரும் பிரம்மானந்த தெய்வீக சந்தோஷம் என்பதே நான் தான் என்று நீங்கள் உறுதியாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணும் சகல உயிர்களிலும் என்னையே நீங்கள் எப்போதும் காண்பீர்கள். எல்லாவற்றிலும் திகழும் ஆத்மாவான பரமாத்மா நானே ”

உன் பேச்சின் அர்த்தம் அவர்களுக்கு புரிந்ததோ இல்லையே உன் மதுரக் குரலில் நீ சொல்வதை மனதில் அப்படியே பதித்துக் கொண்டார்கள்.

———-

ஸுக² ரஸ பரி மிஶ்ரிதோ வியோக³꞉
கிமபி புரா(அ)ப⁴வது³த்³த⁴வோபதே³ஶை꞉ |
ஸம ப⁴வத³முத꞉ பரம் து தாஸாம்
பரம ஸுகை²க்யமயீ ப⁴வத்³விசிந்தா || 84-8 ||

நீ பிருந்தாவனத்தை விட்டு சென்றதும் ஒரு நாள் உத்தவரை பிரிந்தவனத்துக்கு அனுப்பினாய். கிளிப் பிள்ளையாக நீ சொன்னதை அழகாக அப்படியே அந்த கோப கோபியருக்கு அந்த மஹான் எடுத்துச் சொன்னார். உன்னைக் காணாத கண்களுக்கு உத்தவர் விருந்தாக காட்சி அளித்ததுடன் உன் வார்த்தைகளால் அவர்கள் மனதில் இடம் பிடித்தார். இதயத்துக்கு இதமாக இருந்தது அவர் அளித்த ஆறுதல் சொற்கள். அவர்கள் மீண்டும் ஆனந்த பரவசம் எய்தினார்கள்.

————–

முனி வரனிவஹைஸ் தவாத² பித்ரா
து³ரித ஶமாய ஶுபா⁴னி ப்ருச்ச்²ய மானை꞉ |
த்வயி ஸதி கிமித³ம் ஶுபா⁴ந்தரைரி-
த்யுரு ஹஸிதைரபி யாஜிதஸ் ததா³ஸௌ || 84-9 ||

மீண்டும் சமந்த பஞ்சகத்துக்கே போவோம். நீங்கள் எல்லாரும் ஸ்னானம் செய்து பிரார்த்தனைகள் செய்யும்போது அங்கே கூடியிருந்த முனிவர்களை, ரிஷிகளை அணுகி உன் தந்தை வசுதேவர் ‘ இன்னும் பாபங்கள், தீமைகள் என்னை விட்டு விலக நான் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ” என்று கேட்டார்.
”ஐயா, வசுதேவரே , நீர் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. எந்த பரிகாரமும் உங்களுக்கு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பகவானையே பிள்ளையாக பெற்ற பாக்கியசாலி உங்களை பார்த்ததில் எங்கள் பாபம் எல்லாம் தீர்ந்து விட்டது” என்றார்கள் அந்த ரிஷிகள். ஏதோ வேடிக்கை பேச்சு என்பது போல் அருகே நின்றிருந்த நீ ஹாஹா என்று வாய்விட்டு சிரித்தாய். வசுதேவர் சில யாகங்களை செய்து முடித்தார்.

—————–

ஸுமஹதி யஜனே விதாய மானே
ப்ரமுதி³த மித்ர ஜனே ஸஹைவ கோ³பா꞉ |
யது³ ஜன மஹிதாஸ் த்ரி மாஸ மாத்ரம்
ப⁴வத³னுஷங்க³ரஸம் புரேவ பே⁴ஜு꞉ || 84-10 ||

கிருஷ்ணா நீ சமந்த பஞ்சகத்தில் மூன்று மாத காலங்கள் இருந்தாய். அத்தனை கோப கோபியரும் உன்னோடு தாங்களும் தங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்ட யாதவர்கள் குடும்பத்தோடு, உனது அன்பு நண்பர்களான அவர்களை வணங்கி மகிழ்ந்தார்கள். அந்த மூன்று மாத காலமும் கோப கோபியர்கள் ஒவ்வொரு நிமிஷமும் தாங்கள் முன் போல் உன்னோடு பிருந்தாவனத்தில் இருப்பதாக தான் உணர்ந்தார்கள்.

————

வ்யபக³ம ஸமயே ஸமேத்ய ராதா⁴ம்
த்³ருட⁴முப கூ³ஹ்ய நிரீக்ஷ்ய வீத கே²தா³ம் |
ப்ரமுதி³த ஹ்ருத³ய꞉ புரம் ப்ரயாத꞉
பவன புரேஶ்வர பாஹி மாம் க³தே³ப்⁴ய꞉ || 11

எல்லோரும் புறப்படும் நேரம் வந்தது. ராதா மறுபடியும் கண்களில் நீரோடு உன்னெதிரே சிலையாக நின்றாள். அவளை அப்படியே அணைத்து தாய் போல் முதுகைத்த தட்டி ஆறுதல் அளித்தாய். அவள் மனதில் இருந்த சோகம், துயரம் வருத்தம் வேதனை அனைத்தும் நீங்கச் செய்தாய். அவள் மலர்ந்து சிரித்தாள். அந்த மலர்ச்சியில் நீயும் புத்துணர்ச்சி பெற்றாய். நீங்கள் எல்லோரும் துவாரகைக்கு திரும்பினீர்கள். எண்டே குருவாயூரப்பா, நானும் மகிழ என் நோய் தீர்த்து ரக்ஷிப்பாயப்பா ..

————-

தசகம் 85– ஜராஸந்த வதம் –சிசுபால வதம்

த்ருதி சந்தஸ்ஸு அனைத்தும்-

ததோ மகக பூப்ருதா சிர நிரோத ஸங்க்லேசி’தம்
ச’தாஷ்டக யுத அயுத த்விதய மீச’ பூப்ருதாம் |
அனாத ச’ரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோத்3
அயாசத ஸமாகத க்ஷபணமேவ கிம் பூ4யஸா || ( 85 – 1)

ஹே ஸ்ரீ சர்வேசா! மகத தேசத்து அரசனால் சிறையில் வெகுகாலம் அடைக்கப் பட்டிருந்த(ச’தாஷ்டக யுத அயுத த்விதய) 20,800 அரசர்கள் வருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களிடம் ஒரு புருஷனைத் தூதாக அனுப்பினார்கள்.-அவன் தங்களிடம் வேண்டிக் கொண்டது மகத தேச அரசனின் வதம் ஒன்றையே.

——–

யியாஸு ரபி மாகதம் ததனு நாரதோ தீரிதாத்
யுதிஷ்டிர மகோத்யமாத் உபய கார்ய பர்யாகுல : |
விருத்த ஜயினோத் த்வரா உபய ஸித்தி ரித்யுத்தவே
ச’ச’ம்ஸுஷி நிஜைஸ் ஸமம் புர மியேத யௌதிஷ்டிரீம் || ( 85 – 2)

உடனே ஜராசந்தனை நோக்கிச் செல்ல விரும்பினீர்கள். ஸ்ரீ நாரதன் வந்து தர்மபுத்திரன் செய்யவிருந்த யாகத்தைப் பற்றிக் கூறினான் . ஒரே சமயத்தில் இரண்டு காரியங்கள் வந்து சேர்ந்ததால் சற்றுக் கலக்கம் அடைந்தீர்கள்.-விரோதிகளை வென்று செய்ய வேண்டிய யாகத்தில் இரண்டு காரியங்களும் கைக் கூடும் என்று ஸ்ரீ உத்தவர் உரைத்தவுடன் தாங்கள் பந்துக்களுடன் இந்திரப் பிரஸ்தம் சென்றீர்கள்.

—————

அசே’ஷ  த3யிதாயுதே த்வயி ஸமாக3தே த4ர்மஜா
விஜித்ய ஸஹஜைர் மஹீம் ப4வத் அபாங்க3 ஸம் வர்த்தி4தை: |
ச்’ரியம் நிருபமாம் வஹன்னஹஹ ப4க்த தா3ஸாயிதம்
ப4வந்த மயி மாக3தே4 ப்ரஹிதவான் ஸ பீ4மர்ஜுனம் || ( 85 – 3)

ஹே ஸ்ரீ ஈசா! எல்லாப் பத்தினிகளுடனும் தங்கள் இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த போது உங்கள் கடாக்ஷத்தால் விருத்தி செய்யப்பட்ட , தன் தம்பிகளால் ஜெயிக்கப்பட்ட பூமியையும் செல்வத்தையும் அடைந்திருந்தான் ஸ்ரீ தர்மபுத்திரன். பக்தர்களின் தாசனாகிய தங்களை அவன் பீம, அர்ஜுனர்களுடன் ஜராசந்தனிடம் அனுப்பினான். என்ன ஆச்சரியம்!

————-

கி3ரிவ்ரஜபுரம் க3தாஸ் தத3னு தே3வ யூயம் த்ரயோ
யயா ச ஸமரோத்ஸவம் த்3விஜமிஷேண தம் மாக3த4ம் |
அபூர்ண ஸுக்ருதம் த்வ மமும் பவனஜேன ஸங்க்3ராமயன்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுனா த்வமபி ராஜ யுத்4வா ஸ்தித: || ( 85 – 4 )

அதன் பிறகு தாங்கள் மூவரும் பிராமணர்கள் என்ற வியாஜத்துடன் கிரிவ்ரஜம் என்ற அவன் நகரை அடைந்தீர்கள்.-ஜராசந்தனிடம் யுத்த உற்சவத்தை யாசித்தீர்கள். புண்ணியம் பூர்த்தியாகாத அவனைப் பீமனுடன் (பவனஜேன)போர் செய்வித்தீர்கள்.-அர்ஜுனனுடன் அரசர்களை யுத்தம் செய்வித்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?

———–

அசா’ந்த ஸமரோத்3த4தம் விடப பாடன ஸம்க்ஞயா
நிபாத்ய ஜரஸஸ் ஸுதம் பவனஜேன நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீன் முதா ஸமனுக்3ருஹ்ய ப4க்திம் பராம்
தி3தே3சி’த2 க3தஸ் ப்ருஹானபி ச த4ர்ம கு3ப்த்யை பு4வ: || ( 85 – 5)

முடிவே இல்லாத அந்தப் போரில் மிகவும் துணிவுற்ற ஜராசந்தனை கொல்லும் உபாயத்தை ஒரு மரக் கொம்பை உடைத்துப் பீமனுக்கு உணர்த்தினீர்கள். பீமன் போல ஜராசந்தனை இரண்டாகப் பிளந்து கீழே தள்ளினான்.
சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுதலை செய்தீர்கள். அவர்களுக்குச் சிறந்த பக்தியைத் தந்தீர்கள். அவர்கள் ஒன்றிலும் பற்று இல்லாமல் போதிலும் பூமியைத் தர்மத்துடன் ஆளுவதற்குக் கற்றுக் கொடுத்தீர்கள் அல்லவா?

————-

ப்ரசக்ருஷி யுதி4ஷ்டி2ரே தத3னு ராஜ ஸூயாத்4வரம்
ப்ரஸன்ன ப்ருதகீ ப4வத் ஸகல ராஜ கவ்யா குலம்|
த்வமப்யயி ஜகத் பதே த்3விஜ பதா3வஜாதி3கம்
சகர்த2 கிமு கத்யதே ந்ருப வரஸ்ய பா4க்3யோன்னதி: || ( 85 – 6 )

தர்ம புத்திரன் மகிழ்சி அடைந்தவர்களும், அவனுக்கு வசப்பட்டவர்களும், ஆகிய அரசர்கள் நிறைந்த சபையில் ராஜ ஸூய யாகத்தை அனுஷ்டித்தான் . தாங்களும் பிராமணர்களின் கால்களை அலம்புவது போன்ற சேவைகளைச் செய்தீர்கள் அல்லவா ?அந்த அரசர் அரசனின் பெருமையை என்னவென்று சொல்வேன்?

———

தத: ஸவன கர்மணி ப்ரவரம்  அக்3ரய பூஜா விதி4ம்
விசார்யா ஸஹதே3வ வாக் அனுக3த: ஸத4ர்மாத்மஜ: |
வ்யத4த்த ப4வதோ முதா3 மத3ஸி விசஸ்வ பூ4தாத்மனே
ததா ஸஸுர மானுஷம் பு4வன மேவ த்ருப்திம் த3தௌ4 || ( 85 – 7 )

யாகம் செய்யும் போது சர்வோத்தமனான ஒருவருக்குச் செய்ய வேண்டிய பூஜை விதிகளை ஆலோசித்தனர்.
சஹாதேவன் கோரியபடி சமஸ்த பிராணிகளின் ஆத்மாவாகிய தங்களுக்குத் தர்ம புத்திரர் அதைச் செய்தார்.
அதனால் தேவர்கள், மனிதர்களுடன் உலகம் முழுவதுமே திருப்தி அடைத்தது அல்லவா?

———-

ததஸ் ஸபதி3 சேதி3போ முனி ந்ருபேஷு திஷ்ட2த்ஸ்வஹோ
ஸபா4 ஜயதி கோ ஜட3: பசு’பது3ர் து3ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து3ர்வசோ விததி முத்3வமன் னாஸநாத்3
உதா3பத த3தா3யூத4: ஸமபதன்னமும் பாண்ட3வா:|| ( 85 – 8)

அப்போது சிசுபாலன், “முனிவர்களும், அரசர்களும் இருக்கும் போது இடையர்களால் இகழப்படும் ஒரு வாலிபனை ஒரு முட்டாள் பூஜிக்கின்றான்!” என்று கொடிய சொற்களைக் கூறிக் கொண்டு, தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். அவனைப் பாண்டவர்கள் எதிர்த்தனர்.

———-

நிவார்ய நிஜ பக்ஷகா3 னபி4முக2ஸ்ய வித்3வேஷிண:
ஸ்தவமேவ ஜஹ்ருஷே சி’ரோ த3னுஜ தா3ரிணா ஸ்வாரிணா |
ஜனுஸ் த்ரிதய லப்3த4யா ஸதத சிந்தயா சு’த்3த4 தீ4:
ஸ்த்வயா பரமேகதாம் அத்4ருத யோகி3னாம் து3ர்லபா4ம் || ( 85 – 9 )

தங்களைச் சேர்ந்தவர்களைத் தடுத்து நிறுத்தினீர்கள். அசுரர்களை அழிக்கும் சக்கராயுதத்தினால் தங்களை எதிர்த்து வந்த பகைவனின் தலையைத் துண்டித்தீர்கள்.
மூன்று ஜன்மங்களில் இடைவிடாது தங்களைச் சிந்தித்ததால் மனம் பரிசுத்தமாகிய சிசுபாலன், யோகிகளும் பெறுவதற்கரிய பரம ஐக்கியத்தை அடைந்தான் அல்லவா?

———

ததஸ் ஸமஹிதே த்வயா க்ரது வரே நிரூடே4 ஜனே
யயௌ ஜயதி த4ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபன் |
க2ல : ஸ து ஸுயோத4னோ து4தமனாஸ் ஸபத்ன ச்’ரியா
மயார்பித ஸபா4முகே2 ஸ்த2ல ஜல ப்4ரமாத் அப்4ரவீத் || (85 – 10)

ராஜசூய யாகம் சிறப்பாக முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள், “தர்மபுத்திரன் மேன்மை பெற்று விளங்குகின்றான்.-ஸ்ரீ கிருஷ்ணன் மேன்மை பெற்று விளங்குகிறான்” என்று கூறியபடித் திரும்பிச் சென்றனர்.
துஷ்டனான துரியோதனன் மட்டும் தன் பகைவர்களாகிய பாண்டவர்களின் சிறப்பைக் கண்டு மனம் கலங்கினான்.
அவன் மயன் அமைத்த சபா மண்டபத்தில் நிலத்தை ஜலம் என்றும் ஜலத்தை நிலம் என்றும்
என்று எண்ணிப் பிரமித்துத் தத்தளித்தான்.

—————-

ததா3 ஹஸித முத்தி2தம் த்3ருபத3 நந்த3னா பீ4மயோ:
அபாங்க3லயா விபோ4 கிமபி தாவ து3ஜ்ஜ்ரும்ப4யன் |
த4ரா ப4ர நிராக்ருதௌ ஸபதி3 நாம பீ3ஜம் வபன்
ஜனார்த3ன மருத் புரீ நிலய பாஹி மாம் ஆமயாத் || ( 85 – 11)

துஷ்டர்களைச் சம்ஹாரிக்கும் ஸ்ரீ பிரபுவே! அப்போது ஸ்ரீ திரௌபதிக்கும் பீமனுக்கும் உண்டான சிரிப்பைத் தங்கள் கடைக் கண் பார்வையால் மேலும் வளரச் செய்து பூ பாரத்தைக் குறைக்க விதை விதைத்த ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேணும் !

திரௌபதி சிரித்ததாக மஹா பாரதத்தில் இல்லை-த்ருதராஷ்டரனிடம் துரியோதனன் இவள் சிரித்ததாகச் சொல்லி அவனை ஒப்புவிக்க பார்த்தான்

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading