ஸ்ரீ இராமாயண ஸூதா –வாக் அம்ருத வர்ஷீ ஸ்ரீ . உ . வே . வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிகள் —

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

வ்யூஹேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ
ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயிநீ –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –
அகில குண பரிபூர்ணனான எம்பெருமான் ஸ்ரீ ராமனாக திருவாவதரிக்க ஸ்ரீ பிராட்டியும் ஜனக குல ஸூந்தரியாக திருவவதரித்தாள்-

புநஸ் ச பத்மா ஸம்பூதா ஆதித்யோஸ் பூத் யதா ஹரி
யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம்
ராகவவேஸ் பவத் சீதா ருக்மிணீ க்ருஷ்ண ஜென்மநி
அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ
விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத் யேஷாஸ் ஆத்மநஸ் தநும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-/144–145- என்று
ஆத்யன் -பத்மை /பரசுராமன் -தரணி/ ஸ்ரீ ராகவன் ஸ்ரீ சீதாபி பிராட்டி /ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி -என்று
இவனுக்குத் தக்க அவளும் தன்னை அமைத்து கொள்கிறாள் என்கிறார் ஸ்ரீ பராசர மகரிஷியும் –

யதிமநு ஜதிரஸ் சாம் லீலயா துல்ய வ்ருத்தே
ரநுஜநுரநுரூபா தேவி நாவா தரிஷ்ய
அசர சம பவிஷ்யந் நர்ம நாதஸ்ய மாதர்
தர தள தரவிந்தோ தந்த காந்தாயதாஷி –ஸ்ரீ குணரத்ன கோசம் –
ஸ்ரீ பராசர பட்டரும் லீலையில் பொருட்டே மிதுன தம்பதிகளின் திரு அவதாரம்

இவர்கள் இருவர் சரிதமாகவே ஸ்ரீ வாலமீகி பகவான் ஸ்ரீ ராமாயணத்தை செய்து அருளினார் –
ப்ரமேய பூதனான பகவான் திருவாவதரிக்கும் போது பிராமண பூதமான வேதமும் திரு அவதரிக்கும் –

வேத வேத்யே பரே பும்சி ஜாதி தசாரதாத்மஜ
வேத ப்ராசேதஸா தாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -ஸ்ரீ ஸ்காந்த புராண வசனம்

வேத வேத்ய நியாய லப்யம்
வேத உப ப்ரும்ஹணம் – எனவும்
ஆதி காவ்யம் – எனவும்
பக்தி வெள்ளம் – எனவும்
சரணாகதி சாஸ்திரம் -எனவும்
ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -எனவும்
ஸ்ரீ சீதையா சரித்திரம் -ஸ்ரீ ராமாயணம் சொல்லப்படும்

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திஸ் ச நியதா வீர பாவோ நான்யத்ர கச்சதி –உத்தர ஸ்ரீ ராமாயணம் -40-15-
ஸ்ரீ ராமன் ஆராதித்த ஸ்ரீ பெரிய பெருமாளைக் கண்ணாரக் கண்டும்
ஸ்ரீ ராமனால் தழுவப்பட்டத் தம் திரு மேனியை மனம் குளிர நுகர்ந்து கொண்டும்
ஸ்ரீ ராம கல்யாண குண ப்ரகாசகமான ஸ்ரீ ராமாயணத்தைக் காது குளிரக் கேட்டுக் கொண்டும்
இந்த நில உலகிலேயே ஸ்ரீ திருவடி எழுந்து அருளி
மற்று ஓன்று காணாவே என்று இருக்கும் படி அன்றோ ஸ்ரீ ராமபிரானுடைய குண பூர்த்தி
இவ்விஷயத்தையே ஸ்ரீ கூரத்தாழ்வான் –தாத்ருக் குண -அதிமானுஷ ஸ்தவம் -32-என்று பேசி அகம் மகிழ்கிறார்

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் என்று ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்த ஸ்ரீ நம்மாழ்வார்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றேர் -என்றும்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ-7-5-1 -என்றும்
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-என்றும்
ஸ்ரீ நாச்சியாரும்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -13-1-என்றும்
வேம்பேயாக வளர்த்தாள்-13-7-என்றும்
கொள்ளை கொள்ளிக் குறும்பன் -13-8-என்றும்
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இணையான -12-என்றும்
குணாபிராமனான ஸ்ரீ ராமன் இடம் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்கள் –

மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயீ ததை வார்த்ரா பராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்சை விபீஷணம் சரணமித் யுக்தி ஷமவ் ரஷத
சாநஸ் சாந்த்ர மஹாக சஸ் ஸூக யது ஷாந்திஸ் தவாஸ் அகஸ்மிகீ –ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

அணி மிகு செந்தாமரைக் கையின் உத்க்ருஷ்டம் -அச்சுதன் கைம்மேல் என் கை -6-9-
ஸ்ரீ பெருமாளாலே நாச்சியார் விழி விழிக்கப் போகாது இறே

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –ஸ்ரீ வசன பூஷணம் -5-

மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த்
தன் சரிதை கேட்டானை -10-8-ஸ்ரீ குலசேகரப் பெருமாளும்

இமவ் முநீ பார்த்திவ லக்ஷணாந்விதவ் குலீலவவ் சைவ மஹா தபஸ்விநவ்
மாமபி தத் பூதிகரம் ப்ரசக்ஷதே மஹாநுபாவம் சரிதம் நிபோதத–பால -4-35-

ததஸ்து தவ் ராமவச ப்ரசோதி தாவகாயதாம் மார்க்க விதாந ஸம்பதா
ச சாபி ராம பரிஷத் கத சநைர் பு பூஷயா சக்தம நா ப பூவ ஹா -பால -4-36-
இத்யாதியால் தன்னை தாழ விட்டு திரு வவதரித்தமையை ஸ்ரீ வால்மீகி பகவானும் அருளிச் செய்கிறார்

ராஜா தசரதோ நாம —ஸூந்தர -31-2-ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பிராட்டியையும் தரிக்கப் பண்ணினாரே-
ஐயன் வந்தான் ஆரியன் வந்தான் -என்று ஸ்ரீ பரத்தாழ்வானும் ஸ்ரீ திருவடி முகத்தால்
ஸ்ரீ ராம வ்ருத்தாந்தத்தைக் கேட்டுத் தரிக்கப் பெற்றான்

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -391-பரார்த்தி-திரு நாமத்துடன் தொடங்கும் பிரகாரண அவதாரிகையில்
ஸ்ரீ பராசர பட்டார் -இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் -என்று
ஸ்ரீ இராமாயண படனம் சகல ஷேம ப்ரதம்-என்பதால்
ஸ்ரீ இராமாயண ப்ரவசனமும்
ஸ்ரீ இராமாயண ச்ராவணமும்
ஸ்ரீ இராமாயண பாசனமும் செய்து
செங்கண் திரு முகத்துச் செல்வத் திரு மாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்

நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செயல்களின் வியாக்யானங்களிலும்
ஸ்ரீ ரஹஸ்ய க்ரந்தங்களிலும் அவற்றின் வியாக்யானங்களிலும்
ஸ்ரீ இராமாயண பிராமண வசனங்கள் மூலமாக த்ருஷ்டாந்த பரமாக இருக்கும் விவரணங்கள்
துல்யமாகவும் பரம விலக்ஷணமாகவும் ஐக கண்டமாயும் ரஸவாஹமாயும் இருப்பதை கண்டு அனுபவிக்கலாம்
வியாக்கியான சக்ரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த தனி ஸ்லோக
வியாக்யானங்களும் பரம விலக்ஷணமாய் இருக்கும்
பல நுண்ணிய வேத வேதாந்த தாத்பர்யங்களையும்
சிந்தாந்தக் கோட்ப்பாடுகளையும்
தத்வார்த்தங்களையும்
சீரிய சம்பிரதாய அர்த்த விசேஷங்களையும்
இவற்றால் வெளியிட்டு அருளினார்கள்

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-
இப்படி தான் -சப்த பிரயோகத்தால் ஸ்ரீ ராமாவதார ஏற்றத்தை அருளிச் செய்கிறார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்
அல்லாத இடங்கள் சக்தி ஏக தேசம் -அவன் தானே மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரக்ஷணம் பண்ணினான் தன்னை -என்கிறார் திருக்கண்ண புறத்தை நிகமித்து அருளும் கலியனும்

ஸ்ரீ ஆளவந்தார் நியமனத்தின் படியே ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி என்னும் ஸ்ரீ சைல பூர்ணர் என்னும்
ஸ்ரீ பாஷ்ய கார உத்தம தேசிகர் -எனப்படும்
ஒரு சம்வத்சர காலம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு கீழ்த் திருப்பதியில் திருமலை அடிவாரத்தில் உபதேசித்து அருளினார் –
இவரே பிதா மஹயாபி பிதா மஹாய -தாதா -பிதாவே என்று ஸ்ரீ திருவேங்கடமுடையான் அழைத்து அருளியதால் –
இவர் வம்சமே தாதாச்சார்யர்கள்
இந்த அர்த்த விசேஷங்கள் தான் நாம் வாழையடி வாழையாக பரம போக்யமாக அனுபவிக்கப்பட்டு
ஏடுபடுத்தப்பட்டு அனுபவிக்கலாம் படி காணக் கிடக்கின்றன

ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகதவத்தாலே -ஸ்ரீ மா முலைகளின் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்தி
நித்தியமாக ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் ஸ்ரீ ராமாயணம் பாராயணம் செய்ய
ஸ்ரீ உடையவர் திருச் செவி மடுத்துக் கேட்டருளி திரு உள்ளம் பூரிப்பதாக ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரிதை கூறும்

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் –
வாசம் அஹோசர மஹா குண தேசிகார்ய கூராதி நாதர் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-திருவாய் மொழி முழுவதுமே ஸ்ரீ ராமாவதார பரமாகவே
அனுபவித்து கால ஷேபம் செய்வார் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் கல்யாண குணக் கடல் -மற்ற திரு அவதாரங்களில் ஸ்ரீ எம்பெருமான் வெளிப்படுத்திய
ப்ரகாசப்படுத்திய திருக் கல்யாண குணங்கள் எல்லாம் இவற்றுக்கு ஏக தேசமானவையே –
ஸ்ரீ ரெங்கேச புரோகிதர்களான ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமாவதாரத்திலேயே ஈடுபட்டு இருப்பர் –
இஷ்வாகு குலத்திலே திருவவதரித்ததே ஸ்ரீ ப்ரணவாகார விமானத்தில் எழுந்து அருளி இருக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் செய்யவே தானே இவர்களுக்கு ஈடுபாடு

குண பரீவாஹம்
ஸ்ரீ பகவத் திரு அவதாரங்களை -குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம் -என்று ஸ்ரீ பராசர பட்டார் அனுபவம்
ஜிலோச்ச் வாசா பரிவாஹா -அமர கோசம்
பூரோத் பீடே தடாகஸ் ச பரீவாஹ ப்ரதிக்ரியா -தடாகாந்தே ப்ரவ்ருத்த ஜல நிர்க்கமாய க்ருத மார்க்க பரீவாஹ–
திருக் கல்யாண குணங்களின் நிற்க மார்க்கமே போக்கு வீடே திரு அவதாரம் -என்றவாறு
அவனோபாதி கல்யாண குணங்களும் நித்யம்
உயர்வற உயர் நலம் உடையவன் -ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்கயேய குண கண -ஸ்ரீ ஆளவந்தார்
தோஷோபதாவதி சமாதிசயாந சங்க்யா நிர்லேப மங்கள குணவ் கதுகா -ஸ்ரீ பராசர பட்டர்
அனந்தன் உடைய கல்யாண குணங்களும் அநந்தம்
நாந்தம் குணாநாம் கச்சந்தி தேநாநந்தோ அயம் உச்யதே -என்றால் போலே
ஈறில வண் புகழ்
உலப்பில் கீர்த்தி
பண்டித பாமர விபாகமர ஈடுபடுத்தும் ஸ்ரீ ராமாவதாரம் -குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
ஸ்ரீ ஜெயதேவ கவி பிரசன்ன ராகவ நாடகத்தில்
நட கதம் புநரமீ கவய சர்வே ராம சந்த்ரமேவ வர்ணயந்தி
ஸூத்ரதார -நாயம் கவீநாம் தோஷ யத ஸ்வ ஸூக்தீ நாம் பாத்ரம் ரகு திலகமேகம்
கலயதாம் கவீநாம் கோ தோஷ சது குண கணா நாம் அவ குண
யதே தை நிஸ்சேஷை அபர குண லுப்தை ரிவ ஜகத்யசா வேகஸ் சக்ரே சதத ஸூக சம்வாச வசதி – என்கிறார்

இவ்வுலகங்கள் இராமன் பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வான்
கீழ் மகன் தலை மகனுக்கு சம சஹாவாய் -தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு
பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் ஸஹ போஜனமும் -85-ஸ்ரீ நாயனார் இவனது ஸுலப்யம் அனுபவிக்கிறார்
ஸ்ரீ ராம அவதார தத்துவமே ஸுசீல்யம் -ஸ்ரீ பராசர பட்டார்
க குணவான் -வசீ வதாந்ய குணவான் -ஸ்ரீ ஆளவந்தார் -மஹதோ மந்தை ஸஹ நீரந்தரேண ஸம்ஸ்லேஷ ஸுசீல்யம்
கங்கா குலத்திலே ஸ்ரீ குகப்பெருமாளுடன் பம்பா தீரத்தில் மஹா ராஜரான ஸூக்ரீவனுடனும்
கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுடன் கலந்து ஸுசீல்யம் காட்டி அருளினார் ஸ்ரீ பெருமாள்
வேடன் குரங்கு இருக்கத்தான் என்று அவர்கள் நைச்யத்தையும்
நித்ய ஸூரி நாதத்வமாகிற தன் மேன்மையையும் பாராதே கலந்தார்
விபீஷணனை ராவணன் குலா பாம்சனான் என்றான்
இஷ்வாகு வம்சயனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார்

பரத்வமும் ஆஸ்ரயமான பகவத் விஷயத்தை விட்டுப் பிரியாதே
தன்னடையே பீறிட்டுப் பிரகாசிக்கும் -பஷிக்கு மோக்ஷம் அளித்ததிலும்-குரங்குகளைக் கொண்டு கடலை அடைத்ததிலும் –
இக்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ஸ்ரீ லங்கா பட்டாபிஷேகம் நடத்தி வைப்பதிலும் காணலாமே –
சத்யேன லோகாஞ்ஜயதி த்விஜாந் தாநேந ராகவ
குரூஞ் சுஸ்ரூஷயா வீரோ தநுஷா யுதி சாத்ரவாந் –அயோத்யா -12-29-நம்பிள்ளை ஜடாயு மோக்ஷ காரண சமாதானம்

மா மாயன் -மாதவன் -வைகுந்தன்
லோக நாத மாதவ பக்த வத்சலா
ஸஹ சீதம் ந்யவேஸத்-

தப ஸ்வாத் யாய நிரதம் தபஸ்வீ வாக் விதாம் வரம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம் –குரு வந்தன பரமான மங்கள ஸ்லோகம்
நாரதருக்கு -மூன்று அடை மொழிகள் –
தப ஸ்வாத் யாய நிரதர் -புலன்களை அடக்கி நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் செய்பவர் –
வேதம் ஓதி ஓதுவித்தல் -இவற்றில் நிஷ்டர்
வாக் விதாம் வரர்-சிறந்த வாக் வைபவத்தை உடையவர்
முனி புங்கவம் -முனி ஸ்ரேஷ்டர்
வால்மீகி-சிஷ்யர் -தபஸ்வீ
இருவரும் பரிப்ரஸ்னம்-விளைவே ஸ்ரீ ராமாயணம்

கோந் வஸ்மிந் சாம்ப்ரதம் லோகே
1-குணவான்
2-கஸ் ச வீர்யவான்
3-தர்மஞ்ஞ ச
4-க்ருதஞ்ஞ ச
5-சத்ய வாக்யோ
6-த்ருட வ்ரத
7-சாரித்ரேண-ச கோ யுக்த
8-சர்வ பூதேஷு -கோ ஹித
9-வித்வான் க
11-க சமர்த்தஸ் ச
12-கஸ் ஸைக ப்ரியதர்சன ஆத்மவான் கோ
13-ஜிதக்ரோதோ
14-த்யுதிமான் கோ
15-ந ஸூயக
16-கஸ்ய பிப்யதி தேவாஸ் ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –

தச வர்ஷா சஹஸ்ராணி தச வர்ஷ சதாநி ச –
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத் மஜம்
ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ ஸீதாயா சரிதம் மஹத்
த்ரை லோக்ய ராஜ்யம் ஸீதாயா சகலம் நாப்நியாத்
கௌசல்யா லோக பர்த்தாரம்
கௌசல்யா ஸூ ப்ரஜா
கௌசல்யா நந்த வர்த்தந
ஜனகாநாம் குலே கீர்த்தி மாஹரிஷ்யதி
சீதா பர்த்தாரமா ஸாத்ய ராமம் தசாரதாத் மஜன் –பால -64-7–

பூர்ண அவதாரம் -பரத்வ ஸுலப்ய ஸுந்தர்ய பரிபூர்ணன்
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாஷவ் சீரக்ருஷ்ணாஜி நாம்ப ரவ் –ஆரண்ய -19-14-
பரத்வ ஸுலப்ய ஸுந்தர்ய பரமாக மூன்று வியாக்கியானங்கள் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
இதே போலவே -கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்டே நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் –பால -23-2-

ஸ்ரீ பரசுராமன் ஷத்ரிய தேஜஸ் -ஸ்ரீ பெருமாளுடைய ப்ரஹ்ம தேஜஸ் -வைத்து ஜெயமோ என்னில் –
மானுஷ்ய அவதாரம் மெய்ப்பாடு தோற்ற இருக்க வேண்டுமே
அப்ரமேயம் ஹீ தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஸ்ரீ பிராட்டியைக் கைப்பிடித்த தேஜஸ் அன்றோ

பஞ்ச பிரகார விசிஷ்டன் என்பதை
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந் ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி
சமநு ப்ரவிஷ்டஸ் பிரஜாபதி சரதி கர்ப்பே அந்த–என்றும்
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ
அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ஸஹோம் –என்றும்
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்து உறைவாய்-என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநம் பததாம் அத பூர்வ ஸ்மாதாபி பூர்வ ஸ்மாத் ஜ்யாயாந் சைவ
உத்தர உத்தரை –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம்

ஸ்ரீ வைகுண்டம்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு –தெளி விசும்பு திரு நாடு -உம்பரால் அறியலாகா ஓளி-
தன்னுடைய சோதி -சேன் உயர் வானம் –
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை மண் மகளும் ஆய் மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணன்

வ்யூஹம்
ஷாட் குண பரிபூர்ணன் ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவன்
சங்கர்ஷணன் -ஜீவ தத்வ அதிஷ்டாதா -ஜகத் சம்ஹார கர்த்தா -ஞான பல பரிபூர்ணன்
ப்ரத்யும்னன் –மனஸ் தத்வ அதிஷ்டாதா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா -ஐஸ்வர்ய வீர்ய பரிபூர்ணன்
அநிருத்தன் -அஹங்கார அதிஷ்டாதா -ரக்ஷண கர்த்தா -சக்தி தேஜஸ் பூர்ணன்

அந்தர்யாமித்வம்
யேஷாம் இந்தீவரயுச்யாமோ ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித –
ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனாய்-விலக்ஷண திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்துள் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
புந்தியில் புகுந்து தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே
திருக் கடித்தானமும் என்னுடையச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான்

விபவம்
அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை அதி வ்ருத்தாமர விக்ரம ப்ரதாபை அதி லிங்கித சர்வ லோகா சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம் –ஸ்ரீ கூரத்தாழ்வான்
அதி யத்புத ஸ்வபாவங்கள் -வியாபாரங்கள் -அலங்காரங்கள் -விக்ரமங்கள் பிரதாபங்கள் -இவற்றால்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயனான புருஷோத்தமனின் விபவ அவதாரங்கள்
மத்ஸ்ய கூர்ம வராஹ வாமன நரஸிம்ஹ ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்கள்

அர்ச்சாவதாரம்-
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -என்கிறபடியே அவர்கள் இட்ட பெயரே பெயராகவும்
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாய்க் கொண்டு சர்வ ஸூலபனாய்-சர்வ ரக்ஷகனாய் –
கோயில்களிலும் க்ருஹங்களிலும் தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் இருப்பு
பஞ்ச பிரகாரங்களில் பகவான் சர்வத்ரைவ த்வ கணித மஹா மங்கள குண -என்கிறபடியே
சகல கல்யாண பூர்ணனாயே இருந்தாலும் இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே
செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குலமுதல் என்று அஞ்சாதபடி ஓளி வரும் இணைவனாம் என்றவை
பரத்வமாம் படி அவனாகும் ஸுலப்ய காஷ்டை–
பின்னானார் வணங்கும் சோதி
சர்வம் பூர்ணம் ஸஹோம்
பெருக்காறு போலே விபவம் -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
பிரத்யா சன்னமாயும் தாத் காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பாஸ்ஸாத்யனாவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே யாய்த்து
மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் தத்கால வர்த்திகளுக்கு ஆசிரயணீயமாய்
பிற்காலத்தில் உளனான இவனுக்குக் கிட்டாத படியான விபவம்
அவை போல் அன்றிக்கே விடாய்த்தவனுக்கு விடாய் கெடப் பருகலாம் படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே யாய்த்து
இவனுக்கு தேச கால கரண விக்ரக்ருஷ்டம் இன்றிக்கே கோயில்களிலும் க்ருஹங்களிலும் என்றும் ஓக்க எல்லார்க்கும்
கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற அர்ச்சாவதார –ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்-

பற்பல திவ்ய தேசங்களிலும் சகல கல்யாண குண பரிபூர்ணனாய் சேவை சாதித்தாலும்
திருவரங்கம் திருப்பதியாம் திருவாளர் திருப்பதியில் அந்த வைபவம் அபரிச்சின்னமாய் இருக்கும்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் அன்றோ
பதின்மர் பாடும் பெருமாள் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்
ஆழ்வார்கள் அடியார்கள் ஆச்சார்யர்கள் அனைவரும் அரங்கன் இடம் மண்டினார்கள்
விபவ அவதாரமான ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனே ஆழங்கால் பட்டு –
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாகமத் -என்னும் படி ஆராவமுதம்
ஆழங்காலில் இழிவார் ஒரு கொம்பைக் கொடியைப் பிடித்து இழியுமாப் போல்
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவிக்கும் பொழுது ஸ்ரீ பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிகிறது

சத்யலோகத்தில் நான்முகன் ஆராதிக்க –
இஷ்வாகு ஸ்ரீ ரெங்க விமானத்தோடே அவன் இடம் பெற்று திரு அயோத்யையில் பிரதிஷ்டை செய்து திருவாராதனம் செய்து –
தன்னைத்தானே ஆராதிக்க அன்றோ ஸ்ரீ பெருமாள் இஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்து அருளினான்
யாம் காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதாரே –ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான்
மநு குல மஹீ பால -ஸ்ரீ பராசர பட்டர்
தன்னிலும் சீரிய ஸ்ரீ கோயில் ஆழ்வாரை எழுந்து அருளிவித்துக் கொடுத்தது -ஸ்ரீ தேசிகன் -ஸ்ரீ அபயப்ரதான சாரம் –

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ . உ . வே . வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading