ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீதரஸ் சதா

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி திருக்கண்ணமங்கை எம்பெருமான் , திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களைக் கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார். எனவே அருளிச்செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக கலியன் நம்பிள்ளையாகவும், எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.  இவருக்கு வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும் அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு

———–

தத்வ ஞானத்தால் மோக்ஷம் -இல்லையாகில் சம்சாரத்தில் உழன்று கொண்டே இருப்போம் -இங்கு கலக்குவாரும் உண்டு -கலங்குவாரும் உண்டு -முமுஷுக்கு தத்வ த்ரய ஞானம் வேண்டுமே -ஸ்வரூப சித்தி பிறப்பது தத்வ தர்சனத்தாலே-முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம்போது தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

இங்கு தத்வம் என்னப் பார்க்கிறது-உபாய-உபேய தத்வங்களை

உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணவ் -என்கையாலே
இவ்வதிகாரிக்கு உபாய உபேய ரூபமான தத்வ தர்சித்தவம் யுண்டாம் போது
ஞாதவ்யமாய் இருப்பது மூன்றாய் இருக்கும் –

1-தத்வ த்ரய விஷய ஞானமும் —
2-தத்வ த்வய வைராக்கியமும் –
3-தத்வ ஏக விஷய பக்தியும்

இதிலே தத்வ த்ரய விஷய ஞானமாவது –
1-அசித் விஷய ஞானமும் –
2-சித் விஷய ஞானமும் –
3-ஈஸ்வர விஷய ஞானமுமே –

1-அசித்து த்யாஜ்யதயா ஞாதவ்யம் –
2-சித்து த்யாஜ்ய உபாதேய தயா ஞாதவ்யம் –
3-ஈஸ்வரன் உபாதேய தயா ஞாதவ்யன் –

——–

அவதாரிகை –
1–இதர தர்சனங்களில் பதார்த்தங்கள் ஆறு என்பார் -பதினாறு என்பார் -இருப்பத்தஞ்சு என்பார் –
இப்படி பஹு .பிரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்(நையாகிகர் -ஆறு பதார்த்தம் என்பர் -சொல் வேறே பத அர்த்தம் வேறே –வைசேஷிகர் -16 -விஷயங்கள் என்பர்-சாங்க்யர் -25 -என்பர் )
2– நம் தரிசனத்துக்கு தத்வம் மூன்று
3–அவையாவன–சித் என்றும் அசித் என்றும் ஈஸ்வரன் என்றும்

(ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷)

(சைதன்யம் -அறிவுடையவர் சித் -ஞானம் உடையவர் அசித் -எதிர்மறை -ஞான சூன்யம் ஜடப் பொருள்கள் –புலன்களால் அறியப்படும் அனைத்தும் அசித் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறில–ஆத்மாக்களும் அவன் கல்யாண குணங்கள் போல் பல உண்டு
ஈஸ்வரன் -மட்டுமேஒருவன் -ஒப்பில்லா அப்பன் -ஆணை இடுவதை ஸ்வ பாவமாக உடையவன் ஈஸ்வரன்-நாராயணனே நமக்கே பறை தருவான்)

(ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும் புலன்களால் அறிய முடியாது -ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் பண்ணியே உணர முடியும் –
நாம் கண் காண -ஸகல மனுஷ விஷய தாங்கனாக -வந்து தன்னைக் காட்டி அறிய வைக்கிறான் -ஸாஸ்த்ரம் நமக்கு உபதேசிக்கும்-போக்தா போக்யம் ப்ரேரிதா –என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதம் அக்ஷரம் -தேவ தேவன் ஒருவன் -என்றும் ஸ்ருதிகளும் காட்டும் )

(வீடுமின் முற்றவும் -அசித்துக்களை விட்டு -ஈஸ்வரனையே பற்ற வேண்டுமே-வீடு செய்து -உம்முயிர் வீடு செய்வானைப் புல்கு பற்று அற்று-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய –மாம் வ்ரஜ –விட வேண்டியவை பல -பற்ற வேண்டியவன் ஒருவனே )

(தேஹ ஆத்ம அபிமானம் நீங்க -சித்-அசித் -வாசிகள் ப்ரத்யக்ஷமாகவே -காணலாமே
1–நாம் -நான் -என்று ஆத்மாவைச் சொல்லி –இது அது என்று அசித்தைச் சொல்கிறோமே
2-உடையவன் -ஸ்வாமி என்றும் உடைமை -சொத்து என்றும் சொல்கிறோமே
3-அறிபவன் -அறியப்படும் பொருள் என்று வேறே வேறாகச் சொல்கிறோமே
4-நான் -ஏகம் -ஒருமையில் சொல்லி -அநேக பொருள்களை கண்டு கேட்டு இருப்பதால் -பன்மையாக சொல்லி வேறுபாடு
5-நான் -அவயவ ரஹிதம் -துண்டாக்க முடியாமல் -கை கால்கள் -தோல்-சதை இப்படி அவயவ ஸஹிதம்-வாசியும் உண்டே
6-நான் -ஸ்வயம் பிரகாசம் -தன்னையும் காட்டும் பிறருக்கும் காட்டும் -அதுவோ ஜடம் -ஞானத்து விஷயமாகும்
7-ப்ரத்யக் -தனக்குத் தானே தோன்றும் -நான் எங்கு இருக்கிறேன் -என்று தானே சொல்வோம்-அதுவோ பராக் -பிறருக்குத் தோன்றுமவை
8-இதுவோ எப்போதும் அநு கூலம் -அதுவோ நோய் இத்யாதி இல்லாத போது தான் அநு கூலம் -இருக்கும் பொழுது பிரதி கூலம்
9-இதுவோ போக்தா அனுபவிப்பவர் -அவர்களோ போக்யம் -அனுபவிக்கப்படுபவை
10-இது ஸ்வ தந்திரம் -அவர்களோ பர தந்திரம்
11-இவை சேஷி உடையவர் -அவை சேஷம் -உடைமைகள்
12-இவர்கள் கர்த்தாக்கள் -அவை கரணம் -அவற்றைக் கொண்டு கார்யம் செய்கிறோம்
13-அணுத்வ பரிமாணம் -வெட்டவோ கூட்டவோ முடியாது -அவை மத்யம பரிமாணம் கூறாக்கவும் கூட்டவும் முடியுமே

——————-

இந்த வாசியை உணர்ந்த பின்பு சாஸ்திரம் மூலம் ஈஸ்வர தத்வத்துக்கும் ஜீவ தத்வத்துக்கும் உள்ள வாசி அறிவோம்

நவவித சம்பந்தம் –பிதா புத்திர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி -பர்த்ரு பார்ய -ஜ்ஞாத்ரு ஜ்ஞ்ஞேய -ஸ்வ ஸ்வாமி -ஆதார ஆதேய -சரீராத்மா -போக்த்ரு போக்ய-பாவம் –

1–பிதா -காரணம் – புத்திரர் -காரியம்
2–ரக்ஷகர் -ரஷ்யம்
3–சேஷி -சேஷன்
4–பர்த்தா–பார்யை
5–ஜேயன்-அறியப்படுபவன் -ஞாதா -அறிபவன்
6– ஸ்வாமி -ஸ்வம் –
7–ஆதாரம் –ஆதேயன்
8–வியாபி -அந்தர்யாமி -ஆத்மா அனைத்துக்கும் அனைவருக்கும் -நாமோ அவனுக்கு சரீரம் -வியாப்யம்
9–போக்தா -நம்மை அடைந்து அனுபவிப்பவன் -நாமோ போக்யம் -படியாய் கிடந்து பவள வாய் காண்போம்
10–நிரங்குச ஸ்வ தந்த்ரன் -நாம் பரதந்த்ரர் -ஏவிப் பணி கொள்ளப் பிரார்த்திப்போம்

11–ஸ்வா பாவிக அபஹத பாப்மா -இயற்கையாகவே பாபங்களால் தீண்டப்படாமல் -நாம் அப்படி இல்லையே
12–ஸ்வா பாவிக வி ஜரன்-மூப்பு இல்லாத
13–ஸ்வா பாவிக வி ம்ருத்யு -இறப்பு இல்லாத
14–ஸ்வா பாவிக வி சோகன்-சோகம் இல்லாத
15–ஸ்வா பாவிக வி ஜிகஸ்தன் -பசி இல்லாத
16–ஸ்வா பாவிக அபி பாசன் –தாகம் இல்லாத
17–ஸ்வா பாவிக சத்ய காமன்
18–ஸ்வா பாவிக சத்ய ஸங்கல்பன்
19–அனந்தன் -தேச கால வஸ்து த்ரிவித அபரிச்சேதன்
20–அகில காரண அத்புத காரண -நிஷ்காரண காரணன் –

நாம் அவனது அனுக்ரஹத்தாலே அவனை அடைந்து இந்த அஷ்ட வித –
அபஹத பாப்மா -வி ஜர -வி ம்ருத்யு -வி சோக -வி ஜிகிஸ்தா -அபிபாச-சத்யா காம -சத்யா சங்கல்ப -குணங்களில் சாம்யம் பெறுவோம் அன்றோ

(படைப்பையும் பற்றிச் சொல்லி -விசித்ரா தேஹ சம்பந்தி -அவனுக்கு கைங்காயம் செய்யவே -இத்தை உணர வேண்டுமே)

———————

அசித் பிரகரணம் –

4-அசித்தாகிறது –
1-குண த்ரயாத்மகமாய்-(ஸத்யம் ரஜஸ் தமஸ் )
2-நித்தியமாய் -(அவஸ்தை தானே மாறும் -மண் -குடம் -மடக்கு )
3-ஜடமாய் -(ஞான சூன்யம் )
4-விபுவாய்-
5-எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய்-(பிரகாரம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் பூ பரிமளம் போல் )
6-இவனுக்கு லீலா உபகரணமாய்-
7-மஹதாதி சர்வ விகாரங்களுக்கும் ப்ரக்ருதியாய் –
8-தன்னோடே சம்பந்தித்த சேதனனுக்கு பகவத் ஸ்வரூபத்தை மறைத்து –
9-தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கும் தன்மையை யுடைத்தாய்
10-சதத பரிணாமிமாய் இருக்கும் –

5–இதில் ஸூஷ்ம பரிணாமம் அவிசதமாய் இருக்கும் -(ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்று -பிரளய தசை -நாம ரூப விபாகம் இல்லாமல்-வாதம் பித்தம் கபம் -மூடும் சமமாக இருந்தால் வியாதி வராது-பிரளயத்தில் முக்குணங்களும் சம நிலையில் இருக்கும்)

6–ஸூதூல பரிணாமம் விசதமாய் இருக்கும் -அதாகிறது மஹதாதி விகாரங்கள் -(ஸ்ருஷ்டி தசை -பஹுஸ்யாம் ப்ரஜாயேய –த்ரிவித காரணமும் அவனே -வேர் முதல் தனி வித்து -அத்வாரம் சத்வாரகம் -சமஷ்டி ஸ்ருஷ்டி வ்யஷ்டி ஸ்ருஷ்டி-பருத்தி பட்ட பன்னிரண்டு பாடு போல் உடம்பு ஆவதற்கு முன்பு பல நிலைகள் உண்டே )

7–இந்த மூல ப்ரக்ருதி மஹதாதிகளாய்ப் பரிணமிக்கும் படி
எங்கனே என்னில்

8–குண த்ரயங்களினுடைய சாம்யா அவஸ்தையான மூல ப்ரக்ருதியில் நின்றும் மஹான் பிறக்கும்(மகான் வை புத்தி லஷண -என்றுபுத்தி தத்துவமே மஹான் )

9–இதில் நின்றும் அஹங்காரம் பிறக்கும்

10–இது தான்
சாத்விகமாயும் -(வைகாரிகம் )
ராஜஸமாயும் -(தைஜஸம்)
தாமஸமாயும் -(பூதாதி )
மூன்று படியாய் இருக்கும்

11—இதில் சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்கள் பிறக்கும் –

12–இந்திரியங்கள் தான் எவை என்னில்
ஸ்ரோத்ர-த்வக் -சஷூர் -ஜிஹ்வா -க்ராணங்கள்-என்கிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் -பாணி -பாத -பாயூபஸ்தங்கள் -என்கிற கர்ம இந்திரியங்கள் ஐந்தும்
இவற்றுக்கு பிரதானமான மனஸ்ஸூமாக இந்திரியங்கள் பதினொன்று

13–தாமச அஹங்காரத்தில் நின்றும் சப்த தந் மாத்ரை பிறக்கும் -(தன்மாத்ரை ஸூஷ்ம வடிவமாய் இருக்கும் -)

14–இதில் நின்றும் இத்தினுடைய ஸ்தூல அவஸ்தையாய் சப்த குணகமான ஆகாசம் பிறக்கும் –

15–இதில் நின்றும் ஸ்பர்ஸ தந் மாத்ரை பிறக்கும்

16–இதில் நின்றும் ஸ்பர்ஸ குணகமான வாயு பிறக்கும்

17–இதில் நின்றும் ரூப தந் மாத்ரை பிறக்கும் –

18–இதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும் –

19–இதில் நின்றும் ரஸ தந் மாத்ரை பிறக்கும்

20–இதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் –

21–இதில் நின்றும் கந்த தந் மாத்ரை பிறக்கும் –

22–இதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வீ பிறக்கும் –

23 — ராஜஸ அஹங்காரம் -இரண்டிற்கும் அனுக்ரஹகமாய் இருக்கும் –

(கண் -ரூபம் -அக்னி
காது -ஸப்தம் -ஆகாசம் –
மூக்கு -வாசனை- பிருத்வி -கந்தவதி
நாக்கு -சுவை -ரஸம் -நீர்
தோல் -ஸ்பர்சம் -காற்று
பூநிலாய ஐந்துமாய் — பூமியின் ஓசை, தொடுகை, உருவம், சுவை, மணம் என்ற 5 குணங்களாகவும்
புனர்க்கண் நின்ற நான்குமாய் — நீருக்குரிய ஓசை, தொடுகை, உருவம், சுவை என்ற 4 குணங்களாகவும் (பொதுவாக நீருக்கு மணம் கிடையாது)
தீநிலாய மூன்றுமாய் — நெருப்புக்குரிய ஓசை, தொடுகை, உருவம் (சுவை, மணம் இல்லை) என்ற 3 குணங்களாகவும் –இத்யாதி -ஆகாசம் சப்தம் -வாயுவுக்கு ஸ்பர்சமும் சப்தமும் இருக்கும்-நெருப்புக்கு சப்தம் ஸ்பர்ச ரூபம் -)

24–ஆக –
இந்த மஹதாதி சகல பதார்த்தங்களும் கூட அண்டமாய் பரிணமிக்கும் –

25–இவ் வண்டத்தில் பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்

26–இதுக்கு கீழ் ஸ்வ சங்கல்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும் –

இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும் –

27–இவ்வண்டம் தான் பத்தாத்மாக்களுக்கு
போக்ய
போக உபகரண
போக ஸ்தானமாய்க் கொண்டு பரிணமிக்கும் –

28–போக்யங்களாவன -சப்தாதிகள்

29–போக உபகரணங்கள் ஆவன இந்திரியங்கள் –

30–போக ஸ்தானம் ஆவன
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீரங்களும் –
பூமி முதலான மேல் ஏழு லோகங்களும் பாதாளாதி லோகங்கள் எழும்

31–இந்திரியங்களும் இச் சரீரங்களும் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதகமாய் இருக்கும்

32–இது வ்யக்த அவ்யக்த ரூபமான அசித் தத்வம்

(இது ஸூத்த சத்வம் என்றும்
மிஸ்ர சத்வம் என்றும்
சத்வ சூன்யம்-காலதத்வம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –)

இதில் ஸூத்த சத்வமானது ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே கேவலசத்வமாய்
நித்தியமாய் ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் நித்ய முக்தராலும் ஈச்வரனாலும்
பரிச்சேதிக்கஅரிதாய் அதி அத்புதமாய் இருப்பதொன்று –சூர்ணிகை -79-)

(மிஸ்ர சத்வமாவது-சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
1–பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
2–விபரீத ஜ்ஞான ஜநகமாய் 3–நித்தியமாய் 4-ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–பர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும் விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் 6–பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –)

(இது தான் பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி மானாங்கார மனங்கள் –10–7- என்கிறபடியே இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –)

33–காலமாகிறது –
அசித் விசேஷமாய் –
நித்தியமாய் –
ஏக ரூபமாய் –
கீழ்ச் சொன்ன பிரகிருதி பரிணாமாதிகளுக்கு சஹகாரியாய்க் கொண்டு நிமேஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய் –
எம்பெருமானுக்கு ப்ரகாரதயா சேஷமாய்-
லீலா பரிகரமாய் இருப்பது ஓன்று –

(1–இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
2–கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் 3–நித்யமாய்
4–ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் 5–சரீர பூதமாய் இருக்கும் -சூர்ணிகை -120-–)

அசித் பிரகரணம் முற்றிற்று –

——————–

(போக்யம் போக்தா ப்ரேரிதா –தத்வ த்ரய ஸ்ருதி
கீழ் போக்யம் -போகம் போக உபகரணம் போக ஸ்தானம் -பார்த்தோம்
இனி போக்தா சித் பிரகரணம்
ப்ரேரிதா ஈஸ்வர பிரகரணம் பார்ப்போம்)

(கடல் அலை போல் பிரகாரம் பிரகாரி -அப்ருதக் ஸித்த தத்வங்கள் சித்தும் அசித்தும்
மயில் தோகை -சிலந்தி கூடு -த்ருஷ்டாந்தங்கள்
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருச்சந்த வ்ருத்தம்)

(அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –திருவரங்கத்தந்தாதி –-53-)

சித் பிரகரணம் –

34–ஆத்ம தத்வம் மூன்று வர்க்கமாய் –
அஸங்யாதமாய் இருக்கும் –

35–இதில் பகவத் சேஷத்தை ஏக ரசரான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகள் நித்ய வர்க்கம் –

36–சம்சாரிகளாய் ஒரு நாளிலே பகவத் ஞானம் பிறந்து –
அதனாலே பகவத் ப்ராப்தி பண்ணினவர்கள் விமுக்த வர்க்கம் -(கரை கண்டவர் )

37–அநாதியான கர்ம ப்ரபாவத்தாலே சதுர்வித சரீரங்களையும் பிரவேசித்து -(தேவ மனுஷ்ய திரியக் ஸ்தாவரங்கள் ) அதனாலே சப்தாதி விஷய ப்ரவணரான சம்சாரிகள் பத்த வர்க்கம் -(மாறி மாறி பிறந்து ஸம்ஸாரத்தில் -பந்தப்பட்டு இருப்பவர்கள் )

(அசித் -மூன்று வகை ஆத்மாக்கள் -பரமாத்மா
ஐந்து விரல்கள் -கட்டை விரல் போல் பரமாத்மா -ஸமஸ்த இதர வஸ்து விலஷணன்)

38–ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –
நித்தியமாய் –
அசித்தில் காட்டில் ஸூஷ்மமாய்-
ஞான குணகமாய் -(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் -தர்ம பூத ஞானம்ஆத்மாவே ஞானம் ஆத்மாவுக்கு ஞானம்ஸ்வயம் ப்ரகாஸம்)
அணு பரிமாணமாய்-
பகவதாயத்த கர்த்ருத்வகமாய் -(நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-)
ஈஸ்வரனுக்கு பிரகாரதயா-சேஷமாய் இருக்கும் -(அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-அப்ருதக் ஸித்தம் -விட்டுப் பிரியாமல் அவனையே சார்ந்து இருக்கும் –உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ
யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ -சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )

39- பத்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அர்ஹமாய் இருக்கும்

40–நித்ய முக்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அநர்ஹமாய் இருக்கும்(ஸ்வரூப ஆவிர்பாவம் அடைந்து ஸாம்யா பத்தி அங்கு உண்டே-கௌஸ்துப மணி போல் -பிறர் நன் பொருளாய் இருக்குமே – )

(ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக-இந்த்ரிய-மன-பிராண-புத்தி-விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாந ஆஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய் இருக்கும்-சூர்ணிகை -4-)

சித் பிரகரணம் முற்றிற்று –

———————-

ஈஸ்வர பிரகரணம் –

41–ஈஸ்வரன் சேதன அசேதனாத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் –

(ஈஸ்வரன்
1–அகில ஹேய ப்ரத்ய நீக
2–அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
3–ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
4–சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
5–ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற-சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
6–தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
7–விலஷண விக்ரஹ யுக்தனாய் –
8–லஷ்மி பூமி நீளா நாயகனாய் –இருக்கும்-சூர்ணிகை -141-)

42–எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம்
ஹேயபிரத்ய நீகமாய்-(குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா )
கல்யாணைகதாநமாய் –
அதி ஸூஷ்மமாய் -சகல இதர விலக்ஷணமாய் –
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாய் (விபுவாய் )உள்ள ஞான ஆனந்தமாய் இருக்கும்

(ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா, அபஹ தபாப்மா, திவ்யோ தேவ ஏக, நாரயண…)

43–திவ்ய மங்கள விக்ரஹம்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய்-(பரமேஷ்டிபுமான்நிவ்ர்தஹாவிஸ்வஹாசர்வஹா)
எம்பெருமானுக்கு ஸர்வதா அபிமதமாய் –
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் அத்தை ஆஸ்ரயித்து இருக்கும் கல்யாண குணங்களுக்கும் ப்ரகாசகமாய் –
ஏக ரூபமாய் –
சர்வ விஸஜாதீயமாய்-
அப்ராக்ருதமாய் –
அளவிறந்த தேஜஸ்ஸை யுடைத்தாய் –
நித்ய யவ்வன ஸ்வ பாவமாய் –(யுவதிஸ் ச குமார )
சர்வ கந்த ஸ்வ பாவமாய் -(ஸர்வ கந்த ஸர்வ ரஸ )
ஸுந்தர்யாதி கல்யாண குண யுக்தமாய் –
அதி மநோ ஹரமாய்-
நித்யர்க்கும் முக்தர்க்கும் அநு பாவ்யமாய் –
முமுஷுக்களுக்கும் ஸூப ஆஸ்ரயமாய் இருக்கும் –

(விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்-சூர்ணிகை -181-)

44–பரம பதமும் அங்குள்ள பதார்த்தங்களும்
முக்தருடைய விக்ரஹங்களும் –
நித்ய சித்தருடைய விக்ரஹங்களும்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய் இருக்கும் –

45–எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன –
ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் –
அதிலே பிறந்த ஸுசீல்யாதிகளும்-

46–இவை தான் ஒரோ குணங்களுக்கு அவதி இன்றியிலே –
இவற்றுக்குத் தொகை இன்றியிலே இருக்கும்

47–இப்படிப்பட்ட ஸ்வரூபாதிகளை யுடைய ஈஸ்வரன்
பர வ்யூஹாதிகளினாலே
உபய விபூதியையும் நிர்வகித்து அருளும் –

48–எங்கனே என்னில்

(எங்கும் உளன் கண்ணன் -விண் மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல் சேர்ப்பாய்! மண்மீது உழல்வாய் , இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்)

49–கீழ்ச் சொன்ன ஷாட் குண்யாதி ஸமஸ்த கல்யாண குணங்களோடும்
திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
பரம பதத்தில் நித்யரும் முக்தரும் தன்னை அனுபவிக்க
அவர்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பு பர அவஸ்தை –

50–வ்யூஹ அவஸ்தை யாவது –
லீலா விபூதியை நிர்வஹிக்கைக்காக இவ்விரண்டு இரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
சங்கர்ஷண ப்ரத்யும்னாதி ரூபேண வந்து அவதரிக்கை –

51–இந்த வ்யூஹங்கள் தான்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும்
திரு வவதாரங்களுக்கும் அடியாய் இருக்கும் –

52–விபவமாவது-
திவ்ய மங்கள விக்ரஹத்தை
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களோடே சஜாதீயமாக்கிக் கொண்டு –
தன் படிகளை ஒன்றும் விடாதே -அவ்வோ ஜாதிகளில் வந்து அவதரிக்கை -சாஷாத் விபவமாவது –(ஆமையான கேசனே -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்து)

சேதனர் பக்கல் ஸ்வரூபேண ஆவேசித்து அவதரிக்கை -ஸ்வரூப ஆவேச அவதாரம் –

சில சேதனர் பக்கலிலே சக்தியினாலே கார்ய காலத்திலே ஆவேசித்து ரஷிக்கை-சக்தி ஆவேச அவதாரம் –

(பரசுராமன் ஸ்வரூப ஆவேசம் -கார்த்த வீர்ய ராஜன் சக்தி ஆவேசம் -சக்ரவர்த்தி இடம் தோற்றார் பரசுராமன்)

53–அர்ச்சாவதாரமாவது –
ஆஸ்ரிதர் உகந்தது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை அதிஷ்டித்து –
அதிலே திவ்ய மங்கள விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு
ஆஸ்ரித பராதீனனாயக் கோயில்களிலும்
க்ருஹங்களிலும்
கால அவதி இன்றிக்கே திரு வவதரிக்கை-

(1—ருசி ஜனகத்வமும்
2–ஸூபாஸ்ரயமும்
3–அசேஷ லோக சரண்யதவமும்
4–அனுபாவ்யத்வமும் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரி பூர்ணம் –சூர்ணிகை -201-)

(ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும் அசவந்தரைப் போலேயும் இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் –சூர்ணிகை -202-)

(பின்னானார் வணங்கும் சோதி -அடியோர்க்கே அல்லீமோ இந்தளூரீரே -தமர் உகந்த அவ்வுருவம் இத்யாதி -சீரார் திருவேங்கடமே -இத்யாதி-64 சதுர்யுகம் -திருக்கண்ணபுரம் -சரண்ய முகுந்தன் )

54–உபாசிப்பவருடைய ஹ்ருதயங்களிலே விக்ரஹ ஸஹிதனாயக் கொண்டு
அவர்களுக்கு ஸூபாஸ்ரயமாய் இருபத்தொரு பிரகாரம் உண்டு –

ஈஸ்வர பிரகரணம் முற்றிற்று

———————-

55–இப்படி சித் அசித் ஈஸ்வர தத்துவங்களும்
ஸங்க்ரஹேண சொல்லப் பட்டது

56–சகல சேதன அசேதனங்களையும் ஈஸ்வரன் பிரகாரமாக யுடையனாய்
தான் அவற்றுக்கு பிரகாரியாய்
வேறு சேதனர்க்கு பிரகாரி இல்லாமையால்
நம் தர்சனத்துக்குத் தத்வம் ஒன்றே என்னவுமாம் –

(சோழ அரசன் -உனக்கு இரண்டாவதே இல்லை-பரிசுகள் தந்த வ்ருத்தாந்தம் -அத்விதீயம் -ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ
ந ப்ரதிமா அஸ்தி -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ)

—————-

தத்வ த்ரய ஸங்க்ரஹம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading