ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் –
உபசார ஆச்சார்ய உத்தார ஆச்சார்ய சம்பந்தம் இரண்டையும் காட்டி அருளிய தனியன்
சரமாவதாரம் -பரமாச்சாரியார் அன்றோ-
யதி வர தத்வ வித் நம நம -எறும்பியப்பா -வித் -அறிபவர் அடைந்தவர் –
எம்பெருமானார் தன்மையையே அடைந்தவர் அன்றோ மா முனிகளும்
உபாய உபேய உண்மை ஆகாரம் அறிந்தவர் என்றுமாம்
வர வர முனி -பரத்வம் தேடிப்போன பிருகு முனியை முன்னமே -இவரது திரு அவதாரம் ஸூசகம்
திருவனந்த ஆழ்வானை-எம்பெருமானாரைப் போலே அனைத்து உலகும் உஜ்ஜீவிப்பார் ஒருவரைக் கொண்டு
பிரபத்தி சம்பிரதாயத்தை நன்றாக நிலை நிறுத்த பெரிய பெருமாள் நியமிக்க –
திருநாவுடைய பிரான் தாசர் அண்ணருடைய தேவிகள் கர்ப்பத்தை அடைந்து அருள -மா முனிகள்
கலியுகத்தில் –4472-சக வருஷம் -1292-சாதாரண வருஷம் -ஐப்பசி மாதம் -26-நாள்
சுக்ல பக்ஷம் -வியாழக்கிழமை -சதுர்த்தி -திரு மூலம்-திரு நகரியிலே -திருவவதாரம்
ஜாத கர்மம் பண்ணி -12-நாள் திரு இலச்சினை சாத்தி -அழகிய மணவாளர் திருநாமம் –
சிக்கில் கடாரத்தில் அம்மான் திருமாளிகையில் வளர்ந்து வந்தார்
இவர் திருவவதரித்த சாதாரண வருஷத்துக்கு மூன்றாவதான -பரீதாபி வருஷம் -வைகாசி மாதம் -17-நாள்
நம்பெருமாள் நாய்ச்சிமாருடன் கோயிலுக்கு எழுந்து அருளினார்
கோபணார்யார் -என்கிற மஹான் -திருமலையில் இருந்து செஞ்சியிலே எழுந்து அருளப் பண்ணுவித்து –
செஞ்சியிலே-சிறிது நாள் ஆராதித்து -துலுக்கரை எல்லாம் அடித்து நம் பெருமாளை எழுந்து அருள பண்ணினார்
திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகளை ஆஸ்ரயித்து –
யதிராஜ விம்சதி-திருநகரியில் சாதித்து அருள -யதீந்த்ர பிரவணர் -திருநாமம் சூடப் பெற்றார் –
திருக்குமாரர் -ராமானுஜ ஐயன் -திரு நாமம் சாத்தினார் –
(பின்பு இவருக்கு இரண்டு திரு குமாரர்கள் -அழகிய மணவாள பெருமாள் நயினார் -பெரியாழ்வார் -என்ற திருநாமங்கள் இருவருக்கும் )
பெரியாழ்வார் திருமொழி வியாக்யானம் சாதித்து அருளினார்
அருளிச் செயலிலே காலஷேபம் -ஸ்ரீ பாஷ்யம் -ஒருமுறை சாதிக்க நியமனம்-
திருவாய் மொழிப் பிள்ளை-திருவவதார ஸ்தலம் -குந்தீ நகரம் –வைகாசி விசாகம்
மற்றைய திரு நாமங்கள் -திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைலேசர் -சடகோப தாசர் -காடு வெட்டி ஐயன்
திருநாட்டுக்கு எழுந்து அருளியது -வைகாசி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி –
பிள்ளை லோகாச்சார்யார் சிஷ்யர் கோடியில் அண்ணர் ஸ்வாமிகள் மா முனிகள் கோயிலுக்கு எழுந்து
அருளும் பொழுது இருந்தவர் -கோயில் அதிபதி -திருமாலை தந்த பெருமாள் என்ற பட்டர் –
பெரிய பெருமாள் -ஈடு -திருச் செவி சாய்த்து -தனியன் சாதித்தது பிரசித்தம் –
ஈடு பெருக்கர் -என்ற திரு நாமம் –
பெருமாள் கோயிலில் கிடாம்பி ஆச்சான் திரு வம்சம் -ஸ்ரீ ப்ரஹ்ம தந்த்ர ஜீயர் சந்நிதியில் ஸ்ரீ பாஷ்யம் அதிகரித்து
அழகிய மணவாள பெருமாள் நாயனார் சிஷ்யரான கிடாம்பி திருமலை நயினார் சந்நிதியில் –
நம் ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம்ம் அதிகரித்து தலைக்கட்டினார்
சொன்ன வண்ணன் செய்த பெருமாள் சந்நிதியில் அடியார்க்கு உபய வேதாந்தம் சாதித்து அருளியதால்
இன்றும் அங்கே ஞான முத்திரை யுடனும் த்ரிதண்டத்துடனும் சேவை சாதிக்கிறார்
கோயிலிலே திருமலை ஆழ்வாருக்கு சிஷ்யரான சடகோப ஜீயர் சந்நிதியில் ஆஸ்ரம ஸ்வீ காரம்
சடகோப ஜீயர் என்ற திரு நாமமும் பெற்றார்
ரஹஸ்யம் விளைந்த மண் -திருமலை ஆழ்வார் -வியாக்கியான மண்டபம் –
பெரிய ஜீயர் என்ற திரு நாமம் –
வாதூல வத்ஸா கௌண்டிண்ந்ய ஹாரீத
ஆத்ரேய கௌசிக பாரத்வாஜஸ் ச சப்ததை தே வாதூலா இதி கீர்த்திதா
ஏழு கோத்திரத்தில் உள்ளவர் இதிலே சம்பந்தம் -அவர்கள் வாதூல கோத்ரம் -முக்கியம் ஆகையால்
அதன் பெயரை கிட்டே வழங்கி கந்தாடையார் -என்றே வழக்கம் –
முதலி யாண்டான் -முடும்பை நம்பி -முடும்பை அம்மாள் -ஆஸூரிப் பெருமாள் -கிடாம்பிப் பெருமாள் –
குமாண்டூர் இளைய வல்லி யாச்சான் -வாங்கிபுரத்து நம்பி -சந்தஸ்த்தர்களே இந்த ஏழு கோத்ரத்திலும் இருப்பது
உத்தம நம்பிக்கு கனவிலும் கொற்றி அம்மையாருக்கு பிரத்யக்ஷமாகவும் இவர் தாமே சேஷ அவதாரம் என்று காட்டி அருளினார்
ருதிரோத்காரி வருஷம் -மாசி மாதம் -கிருஷ்ண பக்ஷம் -சனிக்கிழமை துவாதசி -திருவோணம் நக்ஷத்திரத்தில்
பெரிய ஜீயர் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
-73-திரு நக்ஷத்திரங்கள் இங்கே இருந்து கைங்கர்யம்
வட பொன்னி தென்பாலிலே ஆதிகேசவப்பெருமாள் திருவடிக்கு கீழே திருப்பள்ளிப்படுத்தி
ஸ்ரீ மான் ஸூந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத பாஷ்யம் வ்யாக்ருதே தஸ்ய ஸ்ரோத்ரு
கோடவ் மம அன்வய –கந்தாடை அண்ணன்-சாதித்த தனியன்
ஸ்வாமி நிஜ ரூபத்தில் பால் அமுது செய்த கல் தொட்டியில் பிரசாதம் சேர்த்து சிஷ்யர்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது
——————————
யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவாணரும்
1–வ்யாக்யான -கிரந்த –தாநாத் –வியாக்கியான கிரந்தங்கள் அருளிச் செய்வதிலே பிரதான நோக்கு –
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீப சாரங்கள் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மா முனிகள் வ்யாக்யான கிரந்தங்கள் பிரசித்தம்
கத்ய த்ரயம் வேதாந்த ஸங்க்ரஹம் போலே யதிராஜ சப்ததி -உபதேச ரத்னமாலை இத்யாதிகள்
2–பரிவதன கதா கந்த வைதேசிகத்வாத்–பரிவதனமாவது பரிவாதம் நிந்தை –
பரிகாசமோ நிந்தையோ அணு அளவும் இல்லாமல் பரம பவித்ரமான திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் அன்றோ இவர்களது
3–நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபி –ப்ராஞ்ஞா ஹ்ருத் ரஞ்சகத்வாத் —
தொட்ட தொட்ட இடம் எங்கும் சாஸ்த்ரார்த்த திரள்களே மலிந்த ஸ்ரீ ஸூக்திகள் -பண்டிதர்கள் உள்ளத்தை உகப்பிக்கும்
4–பூர்வாச்சார்ய யுக்தி ராகாத் -ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் தொடங்கும் பொழுதே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபு
தன் மத அநுசாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே-என்று
பூர்வாச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகளில் தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை காட்டி அருளியது போலவே
மா முனிகளும் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்றும்
தம்முடைய வியாக்கியான கிரந்தங்களை பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்தி மயமாகவே அருளிச் செய்கிறார்
5–சடரிபு முநிராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே
6–பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
ஸ்வாமி -74-ஸிம்ஹாஸனாபதிகள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்
லஷ்மீ நாதாக்ய சிந்தவ் சடாரி புஜலத-இத்யாதிகளை உண்டே
மா முனிகளும் –
திறமாக திக் கஜங்கள் இட்டு அருளும் பெருமாள் -அஷ்ட திக் ஆச்சார்யர்கள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்
7–திவ்ய தேச அபிமானாத்
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் –
ஸ்ரீ ரெங்கேச ஜெய த்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி
மா முனிகளும்
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ
அதவா
திவ்ய தேச ஸ்ரேணியில் சேராது இருந்த திரு நாராயணபுரத்துக்கு ஒரு நாயகமாய் -சமர்ப்பித்தும்
மா முனிகள் ராஜ மன்னார் சந்நிதிக்கு -தீர்ப்பாரை யாம் இனி -சமர்ப்பித்தும்
திவ்ய தேசமாக அபிமானித்ததும் உண்டே –
8–பணி ராஜ அவதாரவாத்
ஸ்வாமி சேஷ அவதாரம் என்று பிரசித்தம்
வர வர முனி சதகத்தில் -துக்தோதந்வத் தவள மதுரம் சுத்த சத்வ ஏக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யாம்
பணீந்திர அவதாரம் -என்றும் -பல சரித்திர பிரசித்தங்கள் படியும் ஸூவ்யக்தம்
9–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத் –
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
அரங்க நகர் வாழ இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
10–ஸ்ரேஷ்ட சிஷ்யத்வாத்
அப்பனுக்கு சங்காழி கொடுத்தான் வாழியே
எதிராஜசம்பத் குமாரர்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -தனியன் பெற்றார் மா முனிகள்
ஆக இத் தன்மைகளால் -யதீந்த்ர பிரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்-
—————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply