ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-5–

உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் அபிமதங்கள் -விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணம் -ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
பெரும்புனல் தன்னுள் ஆழ -அழுந்திய பூமி’ என்னுதல்.
அழுந்திய ஞாலம் –
அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப்படாமல் –
தரைப்படாமல்; மங்காமல். என்றது,
உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையும் கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
மஹா பிருத்வியை -பெரிய பூமியைத் தன் எயற்றிலே நீலமணி போலே கொண்ட; –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.-உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
ரஷ்யத்தின் அளவு -அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி
தான் கொண்ட
கரைந்து போன பூமி அர்த்திக்க -வேண்டிக் கொள்ளச் செய்தது -அன்று ஆதலின்-தான் கொண்ட- என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அது தானே
நிறம் பெறும் படியாய்க் காணும் இருப்பது;
மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாம் தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.
தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாய மானை மோந்து பார்த்து ‘ராக்ஷஸ வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?
பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்கு மத்தனை யன்றோ.
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’
கேட்டும் உணர்ந்துமே-
ஸ்ரவண மனன -கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி
சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading