அருளிச் செயல்களில் திருவடி விசேஷணங்கள்–

ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் —

செம் பொற் கழலடி செல்வா பலதேவா –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –

வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் –

திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே

நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே

மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே
ஓரடியால் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை

தழல் எடுத்த போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே ஓராழி நெஞ்சே யுகந்து –

விடம் காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை அளப்பான் பூவாரடி நிமிர்த்த போது

பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் –

மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து

நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கு இது

தாமரை யுந்தித் தனி பெரு நாயக மூ உலகு அளந்த சேவடியோயே-

மேல் எடுத்த பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய் கடந்து —

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே –

முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே

தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ

திருவேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே-

திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ் சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே –

மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்து

கண்டேன் கமலமலர்ப் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பாலதுவே ஈந்திட வேண்டும் இராமானுச –

ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே அச்சுதன் -நழுவ விடாதவன் -திண் கழல் இறே
எம்பெருமானார் அச்யுத பதத்வய வ்யாமோஹத்தால் இறே -விஷயாந்தர விரக்தராய் திகழ்ந்தார்
அத்திகிரி பச்சை நிற அச்யுதனுடைய பதாம் புஜங்களிலும்
திருவேங்கடத்து அச்யுதனுடைய தாங்கு தாமரை யன்ன பொன்னாரடியிலும்
அரங்கமா நகர் அச்யுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்யுதனுடைய துளங்கு சோதி திருப் பாதத்திலும்
தயரதற்க்கு மகனான அச்யுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்யுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாக கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்யுதன் அனந்தசயனன் செம் பொன் திருவடியிலும்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடியிலும் ஆயிற்று– இவர் மையல் கொண்டு இருப்பது –
பூவார் கழல்கள் -கண்ணன் கழலினை -ககுத்தன் தன்னடி -பாற்கடலுள் பையத் துயன்ற பரமன் அடி –
வைகுண்ட செல்வனார் சேவடி –

https://tidley.com/2013/09/18/—அனைத்து திருவடி பிரஸ்தாபம் உள்ள அருளிச் செயல்கள் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading