தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்–1-4-
வைகல் பூம் கழி –6-1-
பொன் உலகு ஆளீர்—6-8-
எம் கானல் -9-7-
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது —பலகால் ஆள்விட்டு –
வாயும் திரை உகளிலே —2-1– ஆற்றாமை சொல்லி
ஏறாளும் இறையோனில்- 4-8-.. மாறாளன் கவராதவை விட்டு
மாசறு சோதியிலே 5-3–நாடும் இரைக்கவே–மடல் எடுத்து
ஊர் எல்லாம் துஞ்சியிலே-5-4–போக்கற்று
எங்கனே யோவிலே- 5-5–உரு என் நெஞ்சுள் எழ
மானேய் நோக்கிலே – 5-9–கூடும் நாள் தேடி
மின்னிடை மடவாரிலே — 6-2- தாழ்ந்ததுக்கு ஊடி
வெள்ளை சுரி சங்கிலே -7-3–உசாத்துணை அற்று
ஏழையர் ஆவியிலே– 7-7-சூழவும் பகை முகம் செய்ய
நங்கள் வரி வளையிலே 8-2–உங்களோடு இடை இல்லை என்று -தடை நில்லாதே
இன் உயிர் சேவலிலே – 9-5–புயக்கற்று போலி கண்டு நொந்து
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -மாலைப்பூசல்
வேய் மறு தோள் இணையிலே 10-3—காலைப்பூசல்
பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –4-6-
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —6-5-
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட -கரு மாணிக்க மலை-8-9-
தோழிப் பேச்சான இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை ..
ஆடி யாடியிலே -2 -4 –ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
பாலனாய் ஏழ் உலகிலே–4 -2 –கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து
மண்ணை இருந்து துழாவி- யிலே –4–4-அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
கடல் ஞாலத்திலே–5 –6- -ஈசன் வந்து ஏற கொலோ -என்று ஆற்றமையாலேஅனுகரிக்கிரமை அறியாதே – ஏற பேசி —
மாலுக்கு வையத்திலே -6–6-பகவத் அலாப கிலேசத்தாலே ,கட்டடங்க இழந்து .
உண்ணும் சோற்றிலே–6-7-எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
கங்குலும் பகலிலே -7-2-சார்வதே வழித்தமை சாதனமோ என்று அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிறாள்
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி ..
முதல் பத்தில் – மகள் 1-4- ஓன்று மட்டும்
இரண்டாம் பத்தில் –ஒரு மகள் -2-1-/ஒரு தாய் -2-4- ஆக இரண்டும்
மூன்றாம் பத்தில் -ஒன்றுமே இல்லை
நான்காம் பத்தில் -ஒரு மகள் -4-8-/ இரண்டு தாய் -4-2-./-4-4-/ ஒரு தோழி -4-6-ஆக நான்கும்
ஐந்தாம் பத்தில் -5-3 /5-4-/5-5-/5-9-நான்கு மகள் /5–6- ஒரு தாய் -/ ஆக ஐந்தும்
ஆறாம் பத்தில் -6-1/6-2-/6-8-மூன்று-மகள்/6-6-/6-7-/ இரண்டு தாய் / 6-5- ஒரு தோழி /ஆக ஆறும்
ஏழாம் பத்தில் –7-3-/7-7-/இரண்டு மகள் / -7-2-ஒரு தாய் / ஆக மூன்றும்
எட்டாம் பத்தில் –8-2-மகள் /8-9- ஒரு தோழி -ஆக இரண்டும்
ஒன்பதாம் பத்தில் -9-5-/9-7-/9-9-/மகள் மூன்றும்
பத்தாம் பத்தில் -10-3-ஒரு மகள் திருவாய்மொழி-
அடுத்து அடுத்து மணிவல்லி பேச்சு இரண்டு திருவாயமொழிகளில் ஆறாம் பத்திலும் ஏழாம் பத்திலும் உண்டே —
6-1/6-2/- ஆறாம் பத்திலும்
7-2 /7-3/ ஏழாம் பத்திலும்
அடுத்து அடுத்து மணிவல்லி பேச்சு நான்கு திருவாயமொழிகளில் ஐந்தாம் பத்திலும் ஆறாம் பத்திலும் உண்டே
5-3/5-4/5-5-/5-6/–ஐந்தாம் பத்திலும்
6-5/6-6/6-7-/6-8/ ஆறாம் பத்திலும்
——————————————————–
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் – சூரணை -133-
ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் ,
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் ..
சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் ..
அதாவது –
தோழி ஆவாள்
-நாயக நாயகிகளை இணக்கி சேர்க்கும் -அவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈச்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே ,அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
தாயார் ஆவாள்-
பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே
அதி மாத்திர ப்ராவண்யத்தாலே,அவன் இருந்த இடம் ஏற போக வேணும் என்று
பதறும் அளவிலும் ,அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய ,படி கடந்து புறப்படுகை
குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போரும் அவள் ஆகையாலே ,
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே ,
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரை யினுடைய உத்பத்தியாதிகளுக்கு ,பிரதம ஹேதுவாய் ,
அந்த த்வரை பிராப்ய வைலஷண் ய தர்சனத்தாலே ,க்ரம பிராப்தி பற்றாமல்
முறுகி நடக்கும் அளவில் ,இது பிரபன்ன குல மரியாதைக்கு சேராது என்று ,நிசேஷித்து ,
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்க கண்டு இருக்க வேண்டும் என்று ,
இதின் துடிப்பை அடக்க பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்
தலை மகள் ஆவாள் –
இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு ,குல மரியாதைகளையும்
பாராதே ,கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே ,
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்,சரண்யன் ஆனவனுக்கு ,
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை
அனுசந்தித்து ,தத் அனுபவ விலம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும்
அதிகிரமித்து ,கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற
பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை ..
ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக..
பிரஜ்ஞா த்ரைகாலிகி மதா – என்ன கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..
———————————————–
ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம்
என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும்
சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று ..
———————————–
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -134-
இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும்
அபேஷையிலே -தோழி தாய் மகள் பேச்சான திருவாய்மொழிகளிலே
இவை தெரியும் என்னும் அத்தை ஸூக்ரஹமாக வரைந்து அருளி செய்கிறார் மேல்..
சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் ,
வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்
கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு
முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் ,
புத்ரி பலகால் ஆள் விட்டு
ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து ,கண் புதைய போக்கற்று
உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று
சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற
பதினேழில் த்வரை யும் தெரியும் ..
அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் ,
மோகம் கதையாக கிடக்கிற பிராட்டி தசையை கண்டு தாய் மார் கலங்கி ,
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் ,பரிகாரத்தையும் அறியாதே ,
பிரதி பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லை கொண்டு ,
இந்த நோய்க்கு பரிகாரமாக கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் , இவளை இழக்க வரும் என்று பார்த்து ,
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் ,அதுக்கு நிதானத்தையும்
அவர்களுக்கு சொல்லி , தத் உசித பரிகாரங்களையும் விதித்து
அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் ,
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால்
வெறியை விலக்கின பாசுரத்தாலே ,பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக ,
உபாயத்வ அத்யவாசம் கலங்கி-தர்மேன பாப மபநுததி – என்கிறபடியே ,
தர்ம அனுஷ்டானத்திலே ,துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையை கொண்டு ,
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்மகபாலங்களிலே
பிரவர்திக்க தேட – அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ,இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ,
ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக -அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான
பிராவண்யம் கார்யம் ஆகையாலே இதுக்கு அது பரிஹாரம் அன்று .
அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் ..
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –
திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண்பிள்ளையை
மீட்க பார்க்கிற தாய்மாரை குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் ப்ராவண்யத்தை விளைத்தீ கொள் .
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –
அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் ,
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் மதி சங்கையால் , அத்தை நிவர்ப்பிக்க தேட ,
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷவஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது ..
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே ,த்யாஜ்யம் என்று
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —
தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தை
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —
திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க,திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு
கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை ,இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே
அறிந்த உயிர் தோழி யானவள் ,இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று
பேச்சு படில் வாழாத தன்மையளாய் இருக்கிற இவளை கிடையாது —
ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று ,இவள்பந்து ஜனங்களை
குறித்து ,இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம்
ஆயிற்று போலே இரா நின்றது –தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் ..
ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –
அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் ,இவள் அங்கே அநந்யார்ஹை
ஆனமைக்கு அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் ..
ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்
அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே ,
பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை ,உபாயத்வ அவதாய தசையில் நின்று தரிசித்த
அநந்தரம் ,அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே ,அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று , நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ,இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் ,
சேஷியானவனுடைய போக்யதையாலும் , அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும் ,
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட -கரு மாணிக்க மலை-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை ..
ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம்
என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும் ,சம்பந்த ஜ்ஞான தசையில்
பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று ..
——————————————————–
வாடி மெலிந்து இத்யாதி -அதாவது –
ஆடி ஆடி -யிலே– வாடி வாடும் -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
பாலனாய் ஏழ் உலகிலே–கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் ,சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக
நினைத்து கிட்டும் படி பித்தேறி –
கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏற கொலோ -என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே ,கட்டடங்க இழந்து ..
உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று -என்று தன்னை பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே ,எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-என்னும் படி
அவனை கிட்டி அவன் சந்நிதியில் ,முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை ,
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும் க்லானி கார்ச்யாதிகள் போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி , அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள், மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு ,
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே என்று
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை ..
ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் -உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி ..
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்–1-4-
வைகல் பூம் கழி –6-1-
பொன் உலகு ஆளீர்—6-8-
எம் கானல் -9-7-
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது —பலகால் ஆள்விட்டு –
வாயும் திரை உகளிலே —2-1– ஆற்றாமை சொல்லி
ஏறாளும் இறையோனில்- 4-8-.. மாறாளன் கவராதவை விட்டு
மாசறு சோதியிலே 5-3–நாடும் இரைக்கவே–மடல் எடுத்து
ஊர் எல்லாம் துஞ்சியிலே-5-4–போக்கற்று
எங்கனே யோவிலே- 5-5–உரு என் நெஞ்சுள் எழ
மானேய் நோக்கிலே – 5-9–கூடும் நாள் தேடி
மின்னிடை மடவாரிலே — 6-2- தாழ்ந்ததுக்கு ஊடி
வெள்ளை சுரி சங்கிலே -7-3–உசாத்துணை அற்று
ஏழையர் ஆவியிலே– 7-7-சூழவும் பகை முகம் செய்ய
நங்கள் வரி வளையிலே 8-2–உங்களோடு இடை இல்லை என்று -தடை நில்லாதே
இன் உயிர் சேவலிலே – 9-5–புயக்கற்று போலி கண்டு நொந்து
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -மாலைப்பூசல்
வேய் மறு தோள் இணையிலே 10-3—காலைப்பூசல்
பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..
புத்ரி -இத்யாதி -அதாவது –
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்
வைகல் பூம் கழி
பொன் உலகு ஆளீர்
எம் கானல்
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
வாயும் திரை உகளிலே —ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி ,அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது
ஏறாளும் இறையோனில்- .. மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன்
விரும்பாதவற்றை உபேஷித்து
மாசறு சோதியிலே -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி
மடலூர்வன் என்று
ஊர் எல்லாம் துஞ்சியிலே –பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று
,எங்கனே யோவிலே -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க ,
மானேய் நோக்கிலே -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து ,
இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே ,
மின்னிடை மடவாரிலே -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி ,
வெள்ளை சுரி சங்கிலே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார், இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே ,உசாத் துணையும் இன்றி —
ஏழையர் ஆவியிலே –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே ,பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய ,
நங்கள் வரி வளையிலே -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து ,
இன் உயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே , வ்யவசிதையாய்
மல்லிகை கமழ் தென்றலிலே -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு ,
வேய் மறு தோள் இணையிலே -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசி மேய்க்க போனால்
நலிய கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற
பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி ..
——————–
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை சூரணை -135-
ஆனால் தோழி என்றும் தாய் என்றும் சொல்லுகிறது சம்பந்த ஞானத்தையும் ,
உபாயத்வ அவசாயத்தையும் ஆகில் ,தத் விஷயமான பன்மை சொலவுக்கு
தாத்பர்யம் எது என்னும் ஆ காங்ஷையில் அருளி செய்கிறார் மேல் ..
தோழிமார் அன்னையர்
என்கிற பன்மை
ரஷகத்வாதி பந்த வாத்சல்யாதி
வ்யவசாய புத்தி பேதத்தாலே–
அதாவது –
தோழிமார்களும் அன்னையரும் -என்றும் ,
அன்னையரும் தோழியரும் -என்றும் ,
தோழிமார் விளையாட போதுமின் என்ன -என்றும் ,
அன்னையர் நாண -என்றும் ,
ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்
எங்கனயோ அன்னைமீர்காள் -என்று
இப்படி தோழி,தாய் விஷயமாக சொல்லுகிற பன்மை
திரு மந்த்ரத்தில் சொல்லுகிற படியே ,இவ் ஆத்மாவோடு ஈஸ்வரனுக்கு
ரஷகத்வ ,சேஷித்வ ,காரணத்வ ,சரீரி-இத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே ,
அவ்வோ சம்பந்தங்களை விஷயீகரித்த ஞானத்தின் உடைய பேதத்தாலும் ,
உபாய பூதனான அவனுடைய -வாத்சல்ய -ஸ்வாமித்வ –சௌசீல்ய சௌலப்ய
ஞான சக்தி கிருபாதிகளை பற்றி வரும் வ்யவசாய ரூபமான ஞானத்தின் உடைய
பேதத்தாலும் என்கை —
புத்தி சப்தம் ஞான வாசி–
புத்திர் மநீஷா திஷணா தீ பிரஜ்ஞா சேமுஷீ மதி -என்ன கடவதிறே ..
இத்தால் சம்பந்த ஞானத்துக்கும் ,உபாயத்வ அத்யாவசாயத்துக்கும் விஷய
பேதத்தாலே ,வ்யக்தி பேதம் உண்டாகையாலே ,தத் விஷய
பஹுவசன பிரயோகத்துக்கு குறை வில்லை என்றது ஆயிற்று ..
—————————————-
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -136
தலை மகள் என்கிறது -பிராப்ய த்வரை ஆகில் தலை மகளுக்கு சொல்லும்
பருவம் ஏழும் இங்கு கொள்ளும் படி என் என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் ..
அபிலாஷா
சிந்தனா
அனுஸ்மிர்த்தி
இச்சா
ருசி
பர
பரம பக்திகளிலே
பேதை முதலான
பருவம் கொள்ளும் ..
அதாவது
அனுபாவ்ய விசேஷ பிரேம தர்சனத்தில் ,பிறக்கும் ஆசை ஆகிற அபிலாஷையும் .
த்ருஷ்டமான அவ் விஷயத்தில் உண்டாம் ஸ்மரணம் ஆகிற சிந்தைனையும் ,
அந்த ஸ்மரணம் ,அநவரதம் நடக்கை ஆகிற அனு ஸ்ம்ருதியும்
அவ் விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை ஆகிற இச்சையும் ,
அவ் ஆசை தானே ரசாந்தரத்தால் மாற்ற ஒண்ணாத படி முதிருகையாகிற ருசியும் ,
அவ் விஷயத்தில் சம்ச்லேஷ விச்லேஷங்களே சுக துக்கங்களாகிற பரபக்தியும் ,
அவ் விஷயத்தின் விச்லேஷத்தில் சத்தை கிடவாது ஒழிகை யாகிற பரம பக்தியும்
ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேர் இளம் பெண்
என்கிற ஏழு பருவமும் தலைமைகளான பிராப்ய த்வரைக்கு கொள்ளும் என்ற படி ..
இத்தால், பக்தி ரூபையான பிராப்ய த்வரைக்கு ,பக்தியின் உடைய
பிரதம தசை தொடங்கி சரம தச பர்யந்தமான அவஸ்தா விசேஷங்களிலே
பர்வ சப்தகமும் கொள்ளலாம் என்றது ஆயிற்று
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply