ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகங்கள்–

ஸ்ரீ முமுஷுப்படி

இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –சூரணை -13-

இதுக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது

விஷ்ணு காயத்ரியிலே வியாபக மந்திர த்ரயத்தையும் சொல்லுகிற அளவில்
பிரதமத்தில் நாராயண சப்தத்தை பிரதானயேன பிரதி பாதிக்கையாலும் –

விச்வம் நாராயணம்  -என்று தொடங்கி
நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராதமா நாராயணா பர யச்ச
கிஞ்சிஜ் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்பகிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித –
என்று சகல வேதாந்த சார பூதமான நாராயண அனுவாகத்திலும் –

(விஸ்வம் நாராயணம் -ஸ்வா தீன ஸர்வ தத்வ த்ரயம் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களுக்கும் போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண த்ரிவித
அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து தாரண நியமன ரக்ஷணங்களைப் பண்ணிக்கொண்டு இருக்குமவனாய்)

(பர ப்ரஹ்ம வாஸ்யனும் நாராயணனே -பர தத்துவமும் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே -பரமாத்வாவும் நாராயணனே
இந்த ஜகத்தில் ப்ரத்யக்ஷத்தால் காணப்படும் -ஸ்ருதியால் கேட்கப்பட்டும் இருக்கிறது யாதொரு வஸ்து -அந்த ஸகல பிரமாண
ப்ரதிபின்னமான ஸகல வஸ்துக்கள் எல்லாவற்றிலும் உள்ளோடும் புறம்போடும் வாசியற வியாபித்து அந்தராத்மாவாய்க் கொண்டு நிற்குமவன் நாராயணனே)

ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மோ நேசானோ நேம த்யாவாப்ருதிவி -என்று மகா உபநிஷத்திலும்
(ஒன்றும் தேவும் இத்யாதியால் -நம்மாழ்வார் இத்தை அருளிச் செய்கிறார் )

(நாராயணன் ஒருவனே உளனாவான் -பிரம்மாவும் இல்லை -ருத்ரனும் இல்லை -இந்த்ராதிகளும் இல்லை நக்ஷத்ரங்களும் இல்லை)

சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -என்று தொடங்கி-
திசச்ச பிரதிசச்ச நாராயணா -என்று முடிவாக நடுவு அடைய ஸூபால உபநிஷத்திலும்
(கண்ணும் கருவியும் பார்க்க வேண்டியவையும் நாராயணனே )

யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதுவீ  சரீரம் -என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் -என்கிறது ஈறாக நடுவு உள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூதாந்த்ராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவா ஏகோ நாராயணா -என்று
அந்தர்யாமி ப்ரஹ்மாணத்திலும்

(காண்கின்ற கண்ணும் காணப்படும் பொருள்களும் நாராயணனே -கேட்க்கிற செவியும் கேட்க்கிற பொருள்களும் நாராயணனே
திக்குகளும் விதிக்குகளும் நாராயணனே -யாவன் ஒருவனுக்கு ஜீவாத்மா சரீரமாய் இருக்கிறது –
யாவன் ஒருவனுக்கு பிருத்வி சஈரமாய் இருக்கிறதோ யாவன் ஒருவனுக்கு ம்ருத்யு சரீரமாய் இருக்கிறதோ
அவன் ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவாய் தத்கத தோஷம் தட்டாதபடி -அபஹத பாப்மாவாய் -பரமபத நிலையனாய் திவ்யமாய் இருக்கிற
லீலா விபூதி யோகத்தால் தேவனாய் இப்படி சர்வாதிகனாகையாலே அத்விதீயனான நாராயணன்)

வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து-நாராயண சப்தத்தை இட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும் –
அபௌ ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமாய்
ஸ்வத பிரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றன

எதா சர்வேர்ஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாஷராத் பர-என்றும் நாரதீயம்

(ஸ்வரூபாதிகளை–ஆதி ஸப்தத்தாலே குண சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது
யாதொருபடி ஸர்வ தேவர்களிலும் வைத்துக் கொடு நாராயணனைக் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
அப்படியே ஸர்வ மந்திரங்களில் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை)

பூத்வோர்தவ பாஹூ ரதயாத்ர சர்வ பூர்வம் ப்ரவீமிவ
ஹே புத்திர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ரோஷ்டாஷராத் பர-என்றும்

சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிரஷ்டாஷரோ
ந்ருனாம் அபு நர்ப்பவ காங்க்ஷினாம் ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச-என்றும்

(புத்ர சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபத பூர்வகமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள் -திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
ஸர்வ வேதாந்த ஸாரமான அர்த்தமாய் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்துவதான திரு அஷ்டாக்ஷரம் மோக்ஷ காங்க்ஷி களான புருஷர்களுக்குப் புகலிடம்)

பீதா கோரேஷு சவ்யாதிஷு வர்த்த மாநா சங்கீர்த்தாயா நாராயண  சப்த மாதரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்தி நாரயணோதி சப்தோச்தி வாகச்தி வசவர்த்திநீ-என்றும்

ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்

கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் விரதை
நமோ நாராயண  யேதி மந்திர  சர்வார்த்தாதா   சாதகா -இத்யாதிகளாலே –

வேதார்த்த உப ப்ரஹ்மணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பல இடங்களில்
இத்தை ஸ்லாகித்துக் கொண்டு சொல்லுகையாலே –
வேதார்த்த விசதீ கரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகளும் விரும்பினார்கள்

(நாராயணன் என்கிற ஸப்தம் உண்டு -அதைச் சொல்லுவதற்கு வாக் இந்திரியம் உண்டு
இப்படி இருக்க கோரமான நரகத்தில் எவ்வாறு விழுகின்றார்கள் -இது ஒரு பெரிய ஆச்சார்யமே
திரு மந்திரமானது ஸர்வ அர்த்தத்தையும் சாதித்துக் கொடா நிற்கும் -அது உண்டாய் இருக்க அநேக மந்திரங்களால் என்ன பிரயோஜனம் உண்டு –
வியாஸாதிகள் -ஆதி ஸப்தத்தாலே பராசர வால்மீகி ஸூக ஸுநகாதிகளைச் சொல்லுகிறது)

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8–என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று திரு மழிசைப் பிரானும்
(நான்முகன் திருவந்தாதி முதலிலும் திருச்சந்த விருத்தம் பின்பும் )

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன் நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –

(நம்மாழ்வாரை முந்துற அருளிச் செய்தது அவயவி பூர்வகமாக அருளிச் செய்ய வேணும் என்னும் அபிப்ராயத்தாலே)

இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-

இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில்
இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

—————–

வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-1-2-10-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -1-3-3-

ஓன்று எனப் பல வென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்-1-3-7-

நாரணனைக் கண்டக்கால் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே -1-4-5-

நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே -1-10-8-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –நாரணனாலே -2-7-1-

நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை –வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ – 4-1-1-

நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகமுற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே 4-3-3-

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே -4-3-6-

நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் -4-4-2-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் -4-4-4-

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் -4-4-7-

ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தீ நாராயணா என்று என்று காலம்தோறும் யான் இருந்து கைத்தலை பூசலிட்டால் -4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி -4-9-11-

மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானும் அன்று உய்யக் கிளிண்டது நாராயணன் அருளே –4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை–குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள்-5-8-11-

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்–நம்பெருமான் நாராயணன் நாமங்களே -5-9-10-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மால் அரி கேசவன் நாரணன் சி மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட்டு என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் –திருக் கடித்தானாமே–8-6-10-

ஓராயிரம் உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின காள நன் மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே 9-3-1-

நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே 10-5-1-

நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே -10-5-2-

பாட்டாய பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே 10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி –10-6-3

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே 10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து –எங்கும் தொழுதனர் உலகே -10-9-2-

—————

 நாரண (2)
நாமம் பலவும் உடை நாரண நம்பீ - நாலாயி:1925/1
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ - நாலாயி:3864/3

-----
    நாரணமே (1)
திண்ணம் நாரணமே - நாலாயி:3935/4

-----
    நாரணற்கு (5)
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே - நாலாயி:582/4
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு  ஞான தமிழ் புரிந்த நான் - நாலாயி:2182/3,4
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே - நாலாயி:2831/4
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் - நாலாயி:3015/1
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3606/1

--------
    நாரணன் (37)
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை - நாலாயி:22/2
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் - நாலாயி:290/2
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:381/4
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:382/4
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:383/4
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:384/4
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:385/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:387/4
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:388/4
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:389/4
நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் - நாலாயி:392/3
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே - நாலாயி:442/4
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் - நாலாயி:556/2
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:657/4
நாரணன் நரகாந்தகன் பித்தனே - நாலாயி:670/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே - நாலாயி:718/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:751/4
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1128/2
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி - நாலாயி:2086/1
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா - நாலாயி:2247/3
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர் - நாலாயி:2412/2
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் - நாலாயி:2477/4
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே - நாலாயி:2849/4
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே - நாலாயி:2919/3,4
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே - நாலாயி:2923/4
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை - நாலாயி:2927/2
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் - நாலாயி:3005/1
நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன் - நாலாயி:3076/1
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் - நாலாயி:3265/3
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் - நாலாயி:3267/3
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் - நாலாயி:3270/3
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை - நாலாயி:3417/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று - நாலாயி:3688/1
நாரணன் எம்மான் - நாலாயி:3936/1
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே - நாலாயி:3979/4
நாரணன் தமரை கண்டு உகந்து நல் நீர் முகில் - நாலாயி:3980/1

-----------
    நாரணன்-தன் (3)
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன்-தன் நாமங்கள் - நாலாயி:2183/1
நாரணன்-தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் - நாலாயி:2201/3
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன் வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று - நாலாயி:2940/1,2

------------
    நாரணனாய் (1)
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல் - நாலாயி:1898/1

--------------
    நாரணனே (5)
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் - நாலாயி:1218/1
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி - நாலாயி:1552/3
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும் - நாலாயி:1611/3
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை - நாலாயி:2388/3,4
ஆவனவும் நால் வேத மா தவமும் நாரணனே  ஆவது ஈது அன்று என்பார் ஆர் - நாலாயி:2453/3,4

-----------
    நாரணனை (9)
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே - நாலாயி:1836/4
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் கனவில் - நாலாயி:2262/1
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் - நாலாயி:2445/3
நாரணனை நா_பதியை ஞான பெருமானை - நாலாயி:2448/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை - நாலாயி:2649/3
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன நாரணனை  காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல் - நாலாயி:2844/1,2
நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால் - நாலாயி:2936/2
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை - நாலாயி:3329/1
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே - நாலாயி:3947/4
----------
    நாரணா (9)
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் - நாலாயி:152/4
நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய் - நாலாயி:159/4
வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி - நாலாயி:372/3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் - நாலாயி:435/1
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன் - நாலாயி:435/3
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று - நாலாயி:438/2
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது - நாலாயி:661/3
நல் மாலை கொண்டு நமோ_நாரணா என்னும் - நாலாயி:2138/3
நா வாயில் உண்டே நமோ_நாரணா என்று - நாலாயி:2176/1

——————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading