திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -புள்ளும் சிலம்பின காண்– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி -அவதாரிகை –

உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதவர்களை எழுப்புகிறார்கள் –
இதில் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(1-செய்யாதன செய்யோம் -அனைவரையும் கூட்டியே செல்வோம் –
2-பகவத் அனுபவம் -இனியது தனியாக அனுபவிக்கக் கூடாதே –
3–கூடி இருந்து அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் -ஆனந்தம் பெருகும்
4-நதி ஆழம் -கூட துணை வேணுமே -இவனோ கடல்
5-அடியாருக்கு அடியாராக இருந்தால் மிகவும் விரும்பி -போக்கு காட்டாமல் காட்டியே தீருவான்
6-பாகவதர்கள் ப்ராப்யம் -கடைசி நிலை -இதனாலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
இப்படி பல காரணங்கள் உண்டே –
விஞ்சி பாகவத உத்தமர்களுக்கு திருப்பள்ளி எழுச்சி –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய வேண்டுமே
கீழே ஐந்து பாசுரங்களால் வேதம்
வேதம் வல்லார்கள் -இது முதல் 10 பாசுரங்கள் (6-15)-கடகர்கள் -(வைகல் பூம் கழிவாய் –6-1-)
பத்து ஆச்சார்ய லக்ஷணங்கள் இவற்றால் அருளிச் செய்கிறார் –
விண்ணோர்கள் ஸ்தானம் -அடுத்த ஐந்தும் -(16-20)–அலர் மேல் மங்கை -பற்றி
பின்பே நேராக பற்றுவது -உறை மார்பனைப் பற்றுவது -(21-30 )
கொள் கொம்பு மூலம் பற்றுவது போல் –
புள்ளும் -உம்மைத் தொகைக்கும் வியாக்யானம் உண்டே
பத்து பாசுரங்களில் ஐந்தில் விடிந்தமைக்கு அடையாளம் உண்டு ஐந்தில் இல்லை )

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

பதவுரை

புள்ளும்-பறவைகளும்
சிலம்பின காண்–(இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண்;
புள் அரையன்-பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ–ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
இல்லில்–ஸந்நிதியிலே
வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி-(அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின்–சங்கினுடைய
பேர் அரவம்–பேரொலியையும்
கேட்டிலையோ–செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய்–(பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய்–(சடக்கென) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு–பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு-(அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம்–வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய–கட்டுக் குலையும்படி
கால்–திருவடியை
ஒச்சி–ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவில்–திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த–திருக்கண் வளர்ந்தருளின
வித்தினை-ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும்–மநந சீலரான ரிஷிகளும்
யோகிகளும்–யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு–(தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து-(ஹ்ருதயஸ்தனான அவ் வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற–‘ஹரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்-பேரொலியானது
உள்ளம் புகுந்து-(எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து–குளிர்ந்தது;
ஏல் ஓர் எம் பாவாய்
(இனியாகிலும் எழுந்திரு என்று ஒருத்தியை உணர்த்துகின்ற படி)

புள்ளும் சிலம்பின காண் –
போது விடிந்தது எழுந்திராய் -என்று சிஷ்ட கர்ஹை பண்ணுகிறார்கள் –
நாழிகை வட்டில் நீர் நிரம்பினால் விழுமா போலே இரையறுதியிலே உணரும் புள்ளும் சிலம்பின் காண்-
காலம் உணர்த்துவதாக முன்னே புள்ளும் உணர்ந்தன -என்றுமாம்

மற்றை அடையாளம் சொல்லுங்கோள்-என்ன
புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
திருப் பள்ளி எழுச்சியில் சங்க த்வனியும் கேட்டிலையோ –

திருவாய்ப்பாடியிலே திரு முற்றம் உண்டோ என்னில் -உண்டு
பாலா அபி க்ரீடமாணா (அயோத்யா –6 )-இத்யாதிப்படியே –
ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் பிள்ளைகளும் அகப்படச் செல்லா நிற்க –
சக பதன்யா விசாலாஷ்யா-என்று அவர் தாமும் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே
கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு

புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம்
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச
அகஸ்திய ப்ராதரம்-
நாராயணன் என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -என்னக் கடவது இறே

வெள்ளை விளி சங்கின்-
சங்கு வெளுக்கும் காட்டில் போது விடியுமோ –
அழைக்கும் காட்டில் நமக்குத் புறப்பட வேணுமோ -உங்களுக்கு எப்போதும் பாவனை இது இறே

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன்-(நாச்சியார் -5-2-) -என்றும்
பூம் கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இறே

பேர் அரவம்
உணரும்படிக்கு போரும் த்வனி -என்கிறார்கள்

கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் –
இவள் அது கேட்டு எழுந்து இருக்கைக்கு –

பிள்ளாய் எழுந்திராய்-
உன்னுடைய இளமை இறே -பகவத் விஷயத்துக்கும் பாகவத விஷயத்துக்கும் வாசி அறியாமை -என்ன –
நீங்கள் அன்றோ பிள்ளைகள் –
பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -(பெரிய திருமொழி -7-4)–இத்யாதி வத்

பேய் முலை நஞ்சுண்டு-
போது விடிந்தது ஈண்டென எழுந்து இருக்க வேணும் என்று இவள் துணுக்கு என்று புறப்படுகைக்காக –
புகுந்த அபாயம் கேட்டிலையோ -என்கிறார்கள் –

பேய் முலை நஞ்சுண்டு-
பெற்ற தாயும் கூட உதவாத தனிமையில் பாதிக்க வந்த பூதனையை முடித்து
(உண்டு -உள்ளுக்கு இருந்தவள் வார்த்தை -இது முடிந்ததே என்றவாறு )

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி-
காவலாக வைத்த சகடமும் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக
அது கட்டழிந்து சிதறும்படியாகத் திருவடிகளாலே உதைத்து
(திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான் )

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தான திருப் பாற் கடலிலே திருவனந்த ஆழ்வான் மேலே
யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராமாத்யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –

உள்ளத்துக் கொண்டு –
ஹிருத்யங்களிலே வைத்துக் கொண்டு -பகவத் குணங்களை நினைத்து

முனிவர்களும் –
ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே மனன சீலரான முனிவர்களும்

யோகிகளும்-
நாராயணனை க்ஷண கால விஸ்லேஷத்திலும் சஹியாத யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்-உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–
ஸ்தனந்தய பிரஜையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கின மாதா பிரஜை உணராமல்
க்ரமத்தாலே எழுந்து இருக்குமா போலே அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து –
ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து
கேட்டாரும் வாழும்படி பண்ணின திருநாம சங்கீர்த்தனமானது
படுக்கைக்கு கீழே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள்
நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –

வெள்ளம்
திருமேனியில் சவ்குமார்யத்துக்குச் சேரும் படி குளிர்த்தி யுண்டான படி

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலைக தாமநி- (ஸ்தோத்ர ரத்னம் )
ஞானம் இருவரையும் அறிகை-
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை –
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி –

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ –

உள்ளத்துக் கொண்டு
மது கைடபாதிகள் இல்லாத இடம்
பனிக் கடலிலே நீராடி உண்ட விடாய் தீர -மனக் கடலிலே கொண்டு -(பெரியாழ்வார் 5-4-9)

முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே-(திருவாய் -10-9-9-) குண வித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே
திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்கையாலே அவர்களும் உண்டு

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயேந உத் வஹன் ஹ்ரீம் –
(ஹ்ருதயத்தில் உள்ள ஹரியைப் பிடித்துக் கொண்டு விழுந்த ப்ரகலாதாழ்வான் )

அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது –
ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேர் அரவம்
பஞ்ச லக்ஷம் குடியில் ஒருத்தி த்வனியாய் எழுந்த இத் திரு நாமம் செவி வழியே புக்கு
உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

——————————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –

(1-செய்யாதன செய்யோம் -அனைவரையும் கூட்டியே செல்வோம் –
2-பகவத் அனுபவம் -இனியது தனியாக அனுபவிக்கக் கூடாதே –
3–கூடி இருந்து அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் -ஆனந்தம் பெருகும்
4-நதி ஆழம் -கூட துணை வேணுமே -இவனோ கடல்
5-அடியாருக்கு அடியாராக இருந்தால் மிகவும் விரும்பி -போக்கு காட்டாமல் காட்டியே தீருவான்
6-பாகவதர்கள் ப்ராப்யம் -கடைசி நிலை -இதனாலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
இப்படி பல காரணங்கள் உண்டே –
விஞ்சி பாகவத உத்தமர்களுக்கு திருப்பள்ளி எழுச்சி –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய வேண்டுமே
கீழே ஐந்து பாசுரங்களால் வேதம்
வேதம் வல்லார்கள் -இது முதல் 10 பாசுரங்கள் (6-15)-கடகர்கள் -(வைகல் பூம் கழிவாய் –6-1-)
பத்து ஆச்சார்ய லக்ஷணங்கள் இவற்றால் அருளிச் செய்கிறார் –
விண்ணோர்கள் ஸ்தானம் -அடுத்த ஐந்தும் -(16-20)–அலர் மேல் மங்கை -பற்றி
பின்பே நேராக பற்றுவது -உறை மார்பனைப் (விண்ணோர் பெருமானைப்)பற்றுவது -(21-30 )

வைகல் பூங்கழிவாயில் -தூது விட்டு பின்பு -அலர்மேல் மங்கை உறை மார்பனைப் பற்றிய ஆழ்வாரைப் போலே

விபீஷணனும் முதலிகளைப் பற்றி அவர்கள் மூலம் பெருமாளைப் பற்றினால் போல்
கொள் கொம்பு மூலம் பற்றுவது போல் –

கடமை என்று செய்யாமல் பேறு என்று உகந்து அதுக்கும் மேல் இது நமக்கு பிராப்தி –

சேர்த்து விடாவிடில் தரிக்காமல் கடகர்கள் செய்ய வேண்டுமே

பாகவத வைபவம் கண் சோர வெங்குருதி -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –
குலசேகரப்பெருமாள் தேட்டரும் திறல் -திருமலையில் மேம்பொருளுக்கு மேல் பாசுரங்களில் உண்டே
புள்ளும் -உம்மைத் தொகைக்கும் வியாக்யானம் உண்டே
பத்து பாசுரங்களில் ஐந்தில் விடிந்தமைக்கு அடையாளம் உண்டு ஐந்தில் இல்லை

நாலு ஐந்தும் ஆறு ஐந்தும் நமக்கு உரைத்தான் வாழியே -திருக்குறும் தாண்டகம் திரு நெடும் தாண்டகம்
இங்கு ஐ ஐந்தும் ஐந்தும் -சொன்னது அவை ஒரு தட்டு இவை ஒரு தட்டு
மாலே முதல் வேறு படி -நீராட்டு உத்சவம் தொடக்கம் இது முதல்

1-பிள்ளாய் –
2-பேய்ப் பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)
3-கோது கலமுடைய பாவாய்  –
4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-
6-புன மயிலே –
7-நற் செல்வன் தங்காய் –
8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )-
9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய்
10-இளங்கிளியே )

———-

நாலாயிரப்படி-அவதாரிகை –

ஒரு விடாயாற்றிக்கு வேண்டும் பெண்கள் திரண்டு சிலர் இழக்கச்
சிலர் புசிக்க மாட்டாமையாலும் –
எம்பெருமானிலும் இவர்கள் உத்தேச்யராய் இருக்கையாலும்-
இவ் விஷயம் தனி அனுபவிக்க ஒண்ணாதே திரளாக அனுபவிக்க வேண்டும் விஷயமாகையாலும்
மேல் பத்துப் பட்டாலும் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

இவ் வனுபவம் ஆண்டாள் இங்கே இருந்து அனுபவித்தல் –
பரமபதத்தில் உள்ளார் அங்கே இருந்து அனுபவித்தல் செய்யும் அத்தனை –
சம்சாரிகளுக்கு நிலம் அல்ல –

சம்சாரிகள் உறங்குகைக்கு ஹேதுவும் வேறே –
உணர்ந்தால் அனுபவிக்கைக்கு விஷயமும் வேறே –
தமஸ்ஸூ அபீபவிக்க உறங்கிக் காலம் உணர்த்த உணர்ந்து விஷய ப்ரவணராவர்கள் –

எம்பெருமானுடைய உறக்கமும் உணர்ச்சியும் வேறுபட்டு இருக்கும் எங்கனே என்னில்
ஆஸ்ரித சம்ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகை உறக்கம் –
உணருகையாவது அவர்களுடைய ஆர்த்த நாதம் பொறுக்க மாட்டாமை-
உணர்ந்தால் அவர்கள் விரோதியைப் போக்கி அவர்களோடே கலக்கை போகமாய் இருக்கும்

இவர்களுக்கு
1-உறங்கப் பண்ணுவதும்
2-உணரப் பண்ணுவதும்
3-உணர்ந்தால் மறக்கப் பண்ணுவதும் –
4-போய் அனுபவிக்கப் பண்ணுவதும்
கிருஷ்ண குணங்களே

சின்னம் பின்னம் -இத்யாதிப்படியே
ஜ்ரும்பணாஸ்திரம்-
மோஹனாஸ்திரம்-(விராட பர்வதத்தில் அர்ஜுனன் விட்டது போல் )
சில மோஹிக்கப் பண்ண சில துடிக்கப் பண்ணுமா போலே –

மநோ ரதம் முடிந்து ஓலக்கம் கிளம்பின போதே தொடங்கி-ஒருவரை ஒருவர் எழுப்பத் தொடங்கினார்கள் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்த்தான் –
இவர்கள் ராவண ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்க்குமவர்கள் –
தந்தாம் ஆபத்து பொறுக்க வல்லவர்களோ –

செய்யாதன செய்யோம் -என்று இவர்களுடைய ப்ரதிஜ்ஜை தான்
ததியர் முன்னிலையாக எம்பெருமான் பாடே செல்லுகையும் –
கூட அனுபவிக்கையும் –
இது ஸ்வரூபம் ஆகையாலும் அவஸ்யம் ஒருவரை ஒருவர் எழுப்ப வேணும் –

பர தசைக்கு அகப்பட அனுபவிக்கக் குழாங்கள் வேண்டா நின்றது
திருவாய்ப்பாடி வ்ருத்தாந்தத்தில் தனி இழியப் போமோ –
வர்ஷாயுதைரித்யாதி –
சதுர்முகாயுரித்யாதி -(வராஹ புராண ஸ்லோகம் -சதுர் முக ஆயுஸ் கிடைத்து- கோடி வாயும் இருந்து -புத்தியும் தெளிந்தாலும்- குணம் ஒன்றைக் கூடப் பேசி முடிக்க முடியாதே )

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் எத்திறம் என்னும் அத்தனை –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரும் எத்திறம் என்னும் அத்தனை —
தான் தன்னை அனுசந்தித்தாலும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் என்று எத்திறம் என்னும் அத்தனை –

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே

(மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)

(தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)

ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

புள்ளும் சிலம்பின காண் –
பகவத் விஷயத்தில் புதியவளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
போது விடிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே என்று சிஷ்ட கர்ஹை பண்ணுகிறார்கள்
விடிந்தமைக்கு பிரமாணம் என் என்ன

நாங்கள் உணர்ந்து வந்தது போரோதோ- என்ன
உறங்கினார் அன்றோ உணருவார் -அது வார்த்தையோ என்ன
நாங்களே அல்லோம் –
நோன்பும் உணர்ச்சியும் அறியாதே காலம் உணர்த்த பூ அலருமா போலேயும்
நாழிகை வட்டில் நீர் நிரம்பினால் விழுமா போலேயும்
இரையறுதியிலே உணரும் புள்ளும் சிலம்பிற்றன -என்கிறார்கள்
மின்னலே இடித்தாப் போலே உனக்கு முன்னே உணர்ந்தன கிடாய் -என்றுமாம்

இது திருவாய்ப்பாடி அன்றோ –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -6-7-
மரங்களும் இரங்கும் வகை –
பஷினோபி பிரயாசைந்தே சர்வ பூதாநுகம்பிநம் –
மம த்வஸ்வா நிவ்ருத்தஸ்ய சுமந்திரன் வார்த்தை குதிரைகளும் திரும்பாமல்
விஷய தே மஹாராஜ
ராமோ ராமோ ராம இதி
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை –

மற்றை அடையாளம் சொல்லுங்கோள்-என்ன
புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
திருப் பள்ளி எழுச்சியில் சங்க த்வனியும் கேட்டிலையோ –

திருவாய்ப்பாடியிலே திரு முற்றம் உண்டோ என்னில் -உண்டு
பாலா அபி க்ரீடமாணா (அயோத்யா –6 )-இத்யாதிப்படியே –
ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் பிள்ளைகளும் அகப்படச் செல்லா நிற்க –
சக பதன்யா விசாலாஷ்யா-என்று அவர் தாமும் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே
கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு

(ராமபிரான் இங்கே ஆய்ப்பாடியில் இருந்து நம்பி மூத்த பிரான் மேல் கோட்டையில் ப்ரதிஷ்டை செய்து யாதவ கிரி ஆனதே)

புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம்
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )
அகஸ்திய ப்ராதரம்-
நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ –
சங்கு வெளுக்கும் காட்டில் போது விடியுமோ –
அழைக்கும் காட்டில் நாமாக வேணுமோ -உங்களுக்கு எப்போதும் பாவனை அதுவே இறே

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் -என்றும்
பூம் கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இறே

பேர் அரவம்
நீயும் உணருகைக்கு போரும் சங்கின் த்வனி
மஹா ராஜர் வாசலிலே சென்று இளைய பெருமாள் சிறு நாண் ஏற்றி எறிந்தார் என்ன
அனந்தாழ்வான் -தாரையினுடைய ஸ்தநோஷ் மாவைப் பற்றிக் கிடந்த மஹா ராஜர்
ஆந்த்யமும் (காம மயக்கமும் )தீருகைக்குப் போரும் த்வனி என்றான் –

கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் –
இவள் அது கேட்டு துணுக் என்று எழுந்து இருக்கைக்கு –
போது விடிந்து சங்கு ஊதுகிறார்கள் அல்லர் -பணிக்குக் கடவர்களை அழைக்கிறார்கள் என்ன
தூஷணங்கள் தேடிச் சொல்லிப் போது விடியப் பார்த்து இருப்பதே என்று இவர்கள் சொல்ல
அந்தியம் போதே (ப்ரஹ்ம முஹூர்த்தம் )உணர வேணுமோ -அவர்கள் போது அறியாதே சங்கூதினார் அத்தனை -என்ன

பிள்ளாய் எழுந்திராய் –
இந் நோன்புக்கு புதியையாய் இறே நீ உறங்குகிறது –
உனக்கு இன்னம் இளமை இறே –
அந்தியம் போது தான் இக் கோஷ்டி உத்தேச்யம் அன்றோ
பகவத் சம்ஸ்லேஷத்துக்கும் பாகவத சம்ஸ்லேஷத்துக்கும் வாசி அறியாயீ என்ன

(ஸம்ஸார துக்கம் இருள் -பகல் கண்டேன் -முக்தன் -ப்ரஹ்ம முஹூர்த்தம் முமுஷுவுக்கு உத்தேச்யம்)

நீங்கள் அன்றோ பிள்ளைகள் –
அவன் பாடு கார்யம் கொள்ள இறே புகுகிறது -விடிய வேணும்
நீங்கள் உத்தேஸ்யர்களாகில் உங்கள் பேச்சே அமையும் என்ன

அவளுக்கு இவர்கள் பேச்சே அமையா நின்றது –
இவர்களுக்கு அவள் வடிவு காண வேண்டா நின்றது

இன்பமே நாளும் வாய்க்க –

(அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)

ஒருக்காலும் பிரிகிலேனே என்கிற இது ஆண்டாளுக்கு முதலிலே பிறந்து பிரக்ருதியாய் இருக்கிறது

(தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)

இது காண்கைக்கு மேலே அவனோடே அனுபவிக்க வேண்டாவோ என்ன
மாறி மாறி இரண்டும் உத்தேச்யமாகக் கடவது

பிள்ளாய்
எல்லாரும் -குரவ கிம் கரிஷ்யந்தி என்று போகா நிற்க
சிந்தயந்தி குரு தர்சனம் பண்ண
பிரணயித்வத்தில் புதியவள் என்றால் போலே இங்கும் இவளை பிள்ளை என்கிறது –

நானோ புதியை-நீங்கள் அன்றோ –
காலம் அறியாதே எழுப்பினிகோள்-உங்களை உணர்த்தினார் யார் -என்ன
தங்களை உணர்த்தினவர்களைச் சொல்லுகிறார்கள்

பேய் முலை நஞ்சுண்டு
போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காக
புகுந்த அபாயம் கேட்டிலையோ
பெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தான திருப் பாற் கடலிலே அக்கடல் போலேயாய்-
சர்ப்ப ஜாதிக்கு அசாதாரணமான சைத்திய சவ் காந்திய சவ் குமார்ய பிரசுரமான
திருவனந்த ஆழ்வான் மேலே ஜகத் ரக்ஷண சித்தாத்மகமான யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராம கிருஷ்ணாத் யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –

(வித்தை நீரில் இட்டு வைக்குமா போல் பாற் கடல் -குட மூக்கும் இதே போல் உண்டே)

உள்ளத்துக் கொண்டு -முனிவர்களும் யோகிகளும்-
ச பரிகரமாக (அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து)அடக்கவற்றான ஹ்ருதயங்களிலே கொண்டு –
பகவத் குணங்கள் ஸ்ம்ருதமானால் ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே சிதில அந்த கரணரான முனிவர்களும்
அவனோடு சேர்ந்து கொண்டு அல்லது நிற்க மாட்டாதே க்ஷண மாத்ர விஸ்லேஷத்திலே மாந்துமவரான யோகிகளும் –

மெள்ள எழுந்து-

தங்கள் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானைத் திருப் பள்ளி யுணர்த்துகைக்காக
அவன் அசலாத படி ஸ்தநந்தய பிரஜையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கும் மாதா
அந்த பிரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்கும் போலேயும்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைப் பெரிய கற்களோடே கட்டி மலையிலே நின்றும் கீழே தள்ளுகிற போது –
அவன் தன்னுடைய நோவு பாராதே
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தால் தன் கைகளால் மார்வைப் புதைத்துக் கொண்டு
பார்த்தருளீர் என்றால் போலேயும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து(அரவம்)
கேட்டாராம் வாழும்படி பண்ணின (பேரரவம்)திரு நாம சங்கீர்த்தனம்
உறங்குவாருடைய படுக்கைக்கையிலே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள் நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –

பேய்முலை நஞ்சுண்டு இத்யாதி –
அவர்கள் பயப்படுகைக்கு சொன்னார்கள் -விரோதி போகப் பெற்றதே என்று இவள் பயம் கெடுகைக்கு உடலாய்த்து

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்தது என்கை –
பேயை ஆராய்ந்து கொள்ளலாம் -தாய் ரக்ஷகமாக வைத்த சகடம் கிடீர் என்று அஞ்சுகை

கலக்கழிய காலோச்சி
அவன் அகப்பட்டுக் கொண்டு நின்றான் –
முலை தாழ்த்தது என்று மூரி நிமிர்ந்த திருவடிகள் அத்தை முடித்தது என்கை
அவன் ஆபத்துக்கும் நம் ஆபத்துக்கும் ரக்ஷை அவன் திருவடிகள் -ஆகையால் அன்றோ
நம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் அவற்றையே பற்றுகிறது

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த
கீழே பிறந்த ஆபத்துக்கு தப்பிப் போய் திருவனந்த ஆழ்வான் மேலே சாயப் பெறுவதே என்கிறார்கள் –

வெள்ளம்
திரு மேனியில் சவ்குமார்யத்துக்குச் சேர குளிர்த்தி யுண்டான படி –

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலை கதாமநி
ஞானம் இருவரையும் அறிகை
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
எல்லா அடிமை யாகிறது -சென்றால் குடையாம் இத்யாதி

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி -53-)

ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி
திருமேனிக்கு உறுத்தாமைக்கு படுத்த பரிமளம் படுக்கை –
பாம்புக்கு நாற்றம் குளிர்த்தி மென்மைகள் ஸ்வ பாவம் –
இனி திரு விடையாட்டத்தில் பாம்புக்கு வாசி வைத்துக் கொள்ளும் அத்தனை –
இவன் மூச்சுப் பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே-
இப்படுக்கை யுடையவனுக்கு பயப்பட வேண்டா என்கை –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே இருக்கை-
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ -என்கை
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் போராமை இனி பிறக்கைக்கு அடியிட்டு இருக்கிறபடி-

உள்ளத்துக்கு கொண்டு
மதுகைடபாதிகள் இல்லாத இடம்
(பனிக்கடலில் )விடாய் தீர -மனக் கடலில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே குணவித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே இருப்பார்
உறங்குகிறவர்களையும் உணர்த்துகிறவர்களையும் போலே இருப்பார்

திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்க-பின்பு இடையர் பசு நிரைக் கொட்டில்களிலே கடுகாடு கிடப்பர்கள் –

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயே நோத் வஹன் ஹ்ரீம்

அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது -ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி -என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேர் அரவம்
பேர் அரவமாவது ஒருவர் ஹரி என்ன
பஞ்ச லக்ஷம் குடியிலும் ஒரு த்வநியாய் எழுகை முந்துற —
அத சோ அபயங்க தோ பவதி என்று இத்தலையில் பயம் கெட்டால் பின்னை
அத்தலைக்கு பயப்பட்டுத் திருப் பல்லாண்டு பாடும் அத்தனை இறே

பண்டு இழவு பேறுகள் தன்னளவில் –
இப்போது பேறு இழவுகள் அவனளவிலே

ரிஷிகளும் –முந்துற நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய–என்று தொடங்கி
கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் என்று பயம் கெடுவர்கள்

ஸ்ரீ பரத்வாஜ பகவான் பெருமாள் எழுந்து அருளும் தனையும்– வவந்தே நியதோ முநிம் -என்று
வயிறு எரிந்த படியே இருந்தான்

உள்ளம் புகுந்து குளிர்ந்து-
படுக்கைக்கு கீழே வெள்ளம் புகுந்தால் போலே இத் திரு நாமம்
செவி வழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading