நீருக்கும் எம்பெருமானுக்கு சாம்யங்கள் –
1-நீர் பள்ளத்தே ஓடி செல்லும் -விதுரர் திருமாளிகைக்கே சென்று உண்டான்
2-லோகோ பின்ன ருசியாய் இருந்தாலும் அனைவரும் நீரை விரும்புவார் -எம்பெருமானையும் விரும்புவார்கள்
3–நீருக்கு குளிர்ச்சி இயற்கை சூடு வந்தேறி -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே சீற்றம் பிறக்கும் படி அன்றோ அபராதம் செய்கிறோம்
4–நீர் சுட்டாலும் ஆற்ற நீரே வேண்டும் –சீறினாலும் தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
5–இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தாய் இருக்குமே -சூடிக் களைந்த மாலையால் விலங்கிடலாம் -கழுத்திலே ஓலையைக் கட்டி தூது விடலாம்
6–நீரை வைத்தே மற்ற உணவு சமைப்போம் -அவனே உபாயமும் உபேயமும் -ஸ்வயம் புருஷார்த்தமும் -பிரயோஜனாந்தரங்கள் பெறவும்
7–நீருக்கு நீரே வேண்டும் -வேறு ஒன்றால் தாகம் தணித்து கொள்ள முடியாதே -குண அனுசந்தானத்தாலும் போக்க அரியவன் –
ஒரு நாள் காண வாராய் -அடியேன் தொழ வந்து அருளே -கர்மா ஞான பக்தி பிரபத்தி -இவற்றில் எத்தை விட்டு
எத்தைப் பற்றினாலும் எம்பெருமான் ஒரு படியாலும் விட முடியாதே
8–அன்னம் புஜித்தாலும் நீர் வேண்டுமே -நீர் வேறு ஒன்றையும் அபேக்ஷிப்பது அன்று -உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும் –
இவன் இதர நிரபேஷன் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
9–கொள்ளும் பாத்திரம் குறை -தார தம்யம் -அவனும் கொள்ளக் குறைவற்றவன் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
ஐஸ்வர்யமே போதும் கைவல்யம் போதும் என்பாருமாக குறையக் கொள்ளுவது அவர்கள் குற்றமே
10–பஞ்ச பிரகாரம் -பூமிக்குள் நீர் போலே அந்தர்யாமித்வம் / ஆவரண ஜலம் போலே பரத்வம் / விடாய்த்தவனுக்கு கிட்ட அரிதான பாற்கடல் போலே வ்யூஹம்
/பெருக்காறு போலே வைபவம் /தேங்கின மடுக்கள் அர்ச்சை /
11–நீரானது பரிசுத்தமானாலும் ஆஸ்ரய தோஷத்தால் த்யாஜ்யம் ஆவது போலே தேவதாந்தரங்கள் / நல் தீர்த்தம் -கூராழி வெண் சங்கு ஏந்தின எம்பெருமானே
12–தோண்ட தோண்ட சுரக்கும் நீர் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
13–பரார்த்தமாகவே இருக்கும் நீர் – ந தேரூபம் ந ஸாகாரோ பக்தானாம் தவம் பிரகாசஸே
14–வடிம்பிட்டு பெய்விக்க முடியாதே -கேவலம் ஸ்வ இச்சையை வாஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசனா -காட்டவே காணலாம்
15–காளமேகம் மூலமே கடல் நீர் மழை யாகும் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே ஸர்வதா சர்வ உப ஜீவ்யம் ஆமே
16–ஒரே துறையில் சிறியோர் பெரியார் வாசி இல்லாமல் நீராடலாம் -கணமும் வானரமும் வேடும் உடை வேங்கடமே -நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடம்
17–சிறிய துவாரம் கிடைத்தாலும் நீர் உள்ளே புகும் -திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
-என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -இத்யாதி –
18–புஷ்கரம் பிரயோகம் தீர்த்த விசேஷங்கள் மஹாத்ம்யம் -கோயில் திரு மலை பெருமாள் கோயில் -திருப்பதிகளில் சிறப்பு பொலியுமே-
19–விடாய்த்தவர்கள் நீரை முகத்திலே ஏறட்டுவது -முதுகில் கொட்டுவது -படிந்து குடைந்தாடுவது போலே வாக்கினால் கருமம் தன்னால்
மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்க்கை மீதூர வாங்கி விழுங்குவார்கள் திருமங்கை ஆழ்வார் போல்வார் எம்பெருமானையும்
20–தாகம் மிக்கவன் நுனி நாக்கு நனைந்தால் போதும் என்பான் -கூரார் ஆளி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே
21–நீரிலே சிறிய கல்லும் அமிழும் -தெப்ப மரமும் மிதக்கும் –ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுவதும் காண்போமே –
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –எல்லாம் தெய்வ நான்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனுஷர் அமிழ்வதும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்பதுவும் உண்டே
22– துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை–அன்னம் விருத்திக்கும்-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் -இருக்குமா போலே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் -ப்ராபகனாயும் பிராப்யனாயும் இருப்பான் –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply